- மார்ச் 04 (தி) மகா சிவராத்திரி
- மார்ச் 15 (வெ) காரடையான் நோம்பு
- மார்ச் 20 (பு) ஹோலிப் பண்டிகை
- மார்ச் 21 (வி) பங்குனி உத்திரம்
- ஏப்ரல் 01 (தி) புதுக்கணக்கு துவக்கம்
- ஏப்ரல் 06 (ச) தெலுங்கு புத்தாண்டு
Thursday, February 28, 2019
தமிழகத்தில் இன்று முதல் 'ஸ்மார்ட்' லைசென்ஸ்
Added : பிப் 28, 2019 00:54
சென்னை, தமிழகம் முழுவதும் இன்று முதல் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில்வெவ்வேறு விதமான லைசென்ஸ்கள் வழங்கப்படுவதாலும் அவற்றின் விபரங்களை முறையாக இணைய தளத்தில் பதியாததாலும் பல்வேறு குற்றங்கள் நிகழ்கின்றன.அத்துடன் போலி லைசென்ஸ்களும் புழக்கத்தில் உள்ளன.இதை தடுக்க கியூ.ஆர். கோடு வசதியுடன் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளை வழங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்த ஆண்டுக்குள் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்குவதை நாடு முழு வதும் நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் இந்த திட்டத்தை ஜன. 22ல் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் ஸ்மார்ட் கார்டு வடிவில் லைசென்ஸ் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.விடுபட்டிருந்த ஆரணி செய்யூர் ஆர்.டி.ஓ.
அலுவலகங்களில் இன்று இந்த வசதி துவக்கப்படுகிறது. இதனால் நாட்டில் முதல் முறையாக மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் மாநிலமாக தமிழகம் மாற உள்ளது.
Added : பிப் 28, 2019 00:54
சென்னை, தமிழகம் முழுவதும் இன்று முதல் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில்வெவ்வேறு விதமான லைசென்ஸ்கள் வழங்கப்படுவதாலும் அவற்றின் விபரங்களை முறையாக இணைய தளத்தில் பதியாததாலும் பல்வேறு குற்றங்கள் நிகழ்கின்றன.அத்துடன் போலி லைசென்ஸ்களும் புழக்கத்தில் உள்ளன.இதை தடுக்க கியூ.ஆர். கோடு வசதியுடன் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளை வழங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்த ஆண்டுக்குள் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்குவதை நாடு முழு வதும் நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் இந்த திட்டத்தை ஜன. 22ல் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் ஸ்மார்ட் கார்டு வடிவில் லைசென்ஸ் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.விடுபட்டிருந்த ஆரணி செய்யூர் ஆர்.டி.ஓ.
அலுவலகங்களில் இன்று இந்த வசதி துவக்கப்படுகிறது. இதனால் நாட்டில் முதல் முறையாக மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் மாநிலமாக தமிழகம் மாற உள்ளது.
சேலம் - காட்பாடி ரயில் நீட்டிப்பு
Added : பிப் 27, 2019 22:19
சென்னை, சேலத்தில் இருந்து, காட்பாடிக்கு இயக்கப்பட்டு வந்த பயணியர் ரயில், இன்று முதல், அரக்கோணத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில், மாலை, 3:30 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:40 மணிக்கு காட்பாடி சென்றடையும். அங்கிருந்து, இரவு, 8:45 மணிக்கு புறப்பட்டு, இரவு, 10:20 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். அரக்கோணத்தில் இருந்து, அதிகாலை, 4:40 மணிக்கு புறப்பட்டு, காலை, 6:00 மணிக்கு காட்பாடியும், காலை, 11:15 மணிக்கு சேலம் சென்றடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் கிடையாது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு மாற்றம்
சென்னை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, தமிழக அரசு நடத்த முடிவு செய்துள்ளது. எனவே, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி பணியில் இருந்து, துணைவேந்தர், சுரப்பா விலகியுள்ளார்.
dinamalar 28.02.2019

தமிழகத்தில்,பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில்,இன்ஜி.,கல்லுாரிகளில் சேர விரும்புவோருக்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை வழியே, கவுன்சிலிங் நடத்தப்பட்டு வந்தது. இந்த கவுன்சிலிங், நடப்பு கல்வியாண்டில், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டது.
அண்ணா பல்கலை வழியே, 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த கவுன்சிலிங்கை, வரும் கல்வி யாண்டு முதல், தொழில்நுட்ப கல்வி இயக்குன ரகம் வழியே நடத்த, தமிழக உயர்கல்வி துறை முடிவு செய்துள்ளது.
கவுன்சிலிங் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக, அண்ணா பல்கலை துணை வேந்தர், சுரப்பாவும், உறுப்பினர் செயலராக, பல்கலை பேராசிரியர், ரைமண்ட் உத்தரிய ராஜும் நியமிக்கப்பட்டனர்.இதுவரை உறுப்பின ராக இருந்த, தொழில்நுட்ப கல்வி துறை இயக்குனர், விவேகானந்தன், இந்த ஆண்டு துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கமிட்டி ஒருங்கிணைப்பாளராக,உயர் கல்வி செயலர், மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு, பல்கலையில், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுரப்பா விலகல்
இந்நிலையில், கவுன்சிலிங் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து, துணைவேந்தர் சுரப்பா விலகி உள்ளார். தன் விலகல் கடிதத்தை, உயர்கல்வி செயலருக்கு, அவர் அனுப்பியுள்ளார். இது குறித்து,துணைவேந்தர் சுரப்பா கூறியதாவது:இன்ஜி., பாடம் நடத்துவது, பாட திட்டம் தயாரித்தல், ஆராய்ச்சி பணிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு, அண்ணா பல்கலை,அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆராய்ச்சி பணிகளை இன்னும் மேம்படுத்தும் வகையில், பேராசிரியர்களுக்கு அதிக பணிகள் உள்ளன. மேலும், பொது தேர்தல் பணிகளையும், பேராசிரியர்கள் எதிர்கொள்ளலாம்.
எனவே, இன்ஜி., கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மேற்கொள்ள உள்ளது. எங்களை பொறுத்தவரை, தொழில்நுட்ப ரீதியாக கவுன்சிலிங்குக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம். இதில், எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் உறுதி
இதற்கிடையில், கவுன்சிலிங் முறையில் மாற்றம் செய்துள்ளது குறித்து, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் கூறியதாவது:தமிழக உயர்கல்வி துறை கமிட்டி தான், அண்ணா பல்கலை வழியே, கவுன்சி லிங்கை நடத்தி வருகிறது. வரும் கல்வி யாண்டில், அண்ணா பல்கலைக்கு பதில், தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்து, விரிவான ஆலோசனை நடத்தப்படும்.
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஏற்கனவே, கவுன்சிலிங்கை தனியாக நடத்திய அனுபவம் உள்ளது.அதேபோல,அண்ணா பல்கலை வழியே நடத்தப்படும் கவுன்சிலிங்கிலும், தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் முக்கிய பங்கு வகித்தது. அதனால், கவுன்சிலிங் நடத்துவதில் எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பேராசிரியர்கள் வரவேற்பு தமிழக அரசின் இந்த முடிவுக்கு, அண்ணா பல்கலை பேராசிரியர்கள், இன்ஜி., கல்லுாரி நிர்வாகத்தினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். 'தமிழகத்தில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு பணிகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. இதனால், கவுன்சி லிங்கை, தொழில்நுட்ப இயக்குனரகம் நடத்து வது, பல்கலைக்கான சுமையை குறைப்பதாக இருக்கும். பல்கலையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம் பாட்டு பணிகளுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும்' என்றனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில், உயர்கல்வி துறையே, தனியாக கமிட்டி அமைத்து, கவுன்சிலிங் மற்றும் நுழைவு தேர்வுகளை நடத்துகின்றன
பெண் டாக்டருக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து
Added : பிப் 27, 2019 22:16
சென்னை,தமிழக சுகாதாரத் துறையில், முதல் முறையாக, பெண் டாக்டருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.மாநில சுகாதார சங்க இணை இயக்குனர், எஸ்.உமா. இவர், எம்.பி.பி.எஸ்., - எம்.டி., படித்துள்ளார். 1995ல், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 1' தேர்வில் வெற்றி பெற்று, சுகாதார அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.பொது சுகாதாரத் துறை துணை இயக்குனராக, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். நான்கு ஆண்டுகளாக, மாநில சுகாதார சங்கத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், உமாவிற்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறையில், பெண் டாக்டர் ஒருவர், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெறுவது, இதுவே முதல் முறை.
ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் 'ஆன்லைனில்' வெளியிட நடவடிக்கை
Added : பிப் 27, 2019 21:31
புதுடில்லி, ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டதும், அதை, 'ஆன்லைனில்' வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய முதல் பட்டியல், ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன் தயாரிக்கப்படும். இந்த பட்டியலை, பயணியர் பார்க்க முடியாது.ஆர்.ஏ.சி., மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணியர், தங்களுக்கு இருக்கை உறுதி செய்யப்பட்டால், அதுபற்றிய தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ரயில் பெட்டிகளில் ஒட்டப்படுவது வழக்கம். அதில் பயணியர் பற்றிய விபரங்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும்
.இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டவுடனேயே, அதை ஆன்லைனில் வெளியிட, ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இது பற்றி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டதுமே, அதை, http://www.irctc.co.in என்ற இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதல் பட்டியல் மற்றும் இறுதி பட்டியல் இரண்டுமே, தயாரானதுமே, இணையதளத்தில் வெளியிடப்படும்.இதன் மூலம், பயணியர், தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் உறுதியாகிவிட்டதா என்பதையும், ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய விபரங்களையும் உடன் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை, மொபைலில் பார்ப்பதற்கு ஏற்ற வகையிலும், வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வெளிப்படையான நடவடிக்கை மூலம், முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட ரயிலின் பெட்டிகளில் உள்ள இருக்கைகள், எண் வரிசைப்படி, ஆன்லைனில் இடம்பெற்றிருக்கும். அதில், முன் பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் ஒரு நிறத்திலும், காலியாக உள்ள இருக்கைகள், வேறு நிறத்திலும் காட்டப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Added : பிப் 27, 2019 21:31
புதுடில்லி, ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டதும், அதை, 'ஆன்லைனில்' வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய முதல் பட்டியல், ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன் தயாரிக்கப்படும். இந்த பட்டியலை, பயணியர் பார்க்க முடியாது.ஆர்.ஏ.சி., மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணியர், தங்களுக்கு இருக்கை உறுதி செய்யப்பட்டால், அதுபற்றிய தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ரயில் பெட்டிகளில் ஒட்டப்படுவது வழக்கம். அதில் பயணியர் பற்றிய விபரங்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும்
.இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டவுடனேயே, அதை ஆன்லைனில் வெளியிட, ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இது பற்றி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டதுமே, அதை, http://www.irctc.co.in என்ற இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதல் பட்டியல் மற்றும் இறுதி பட்டியல் இரண்டுமே, தயாரானதுமே, இணையதளத்தில் வெளியிடப்படும்.இதன் மூலம், பயணியர், தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் உறுதியாகிவிட்டதா என்பதையும், ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய விபரங்களையும் உடன் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை, மொபைலில் பார்ப்பதற்கு ஏற்ற வகையிலும், வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வெளிப்படையான நடவடிக்கை மூலம், முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட ரயிலின் பெட்டிகளில் உள்ள இருக்கைகள், எண் வரிசைப்படி, ஆன்லைனில் இடம்பெற்றிருக்கும். அதில், முன் பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் ஒரு நிறத்திலும், காலியாக உள்ள இருக்கைகள், வேறு நிறத்திலும் காட்டப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Wednesday, February 27, 2019
பல்கலை துணைவேந்தருக்கு ஆணையம் 'நோட்டீஸ்'
Added : பிப் 27, 2019 03:29
சென்னை: சென்னை பல்கலையின் மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து பதிலளிக்க, துணைவேந்தருக்கு, மனித உரிமைகள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.சென்னை பல்கலையின், மதர் தெரசா பெண்கள் விடுதியில், 250 மாணவியர் தங்கியுள்னர். அங்கு, சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல், மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுகாதாரமற்ற கழிப்பறையால், வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக, விடுதி மாறியுள்ளது.இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:சென்னையில் பல்கலையின், மாணவியர் விடுதியில், தனி மனிதனுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டு இருக்கின்றனவா, அந்த விடுதியில், சுகாதாரமான குடிநீர், உணவு மற்றும் கழிப்பறை வசதிகள் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. இவை குறித்து, பல்கலையின் துணைவேந்தர், உயர்கல்வி துறை செயலர், மதர் தெரசா விடுதி வார்டன் ஆகியோர், நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
-
Biology study must for MBBS admission’ Court says subject should have been taken in Plus 2 21/02/2021 Legal Correspondent NEW DELHI The Sup...
-
14 from VIT chosen for Google programme TIMES NEWS NETWORK Chennai:28.7.2021 As many as 14 students from Vellore Institute of Technology (VI...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...