Thursday, February 28, 2019

வாடகை வீடு - ’டூலெட்’ போர்டு - அனுபவங்கள்!

Published : 27 Feb 2019 15:41 IST

ஜெமினி தனா





மூச்சை முட்டும் நெருக்கடி மிகுந்த நகரங்கள் கூட்டுக் குடும்பத்திலிருந்து தனிக்குடித்தனம் போவது போல் தனி வீடுகள் எல்லாம் கூட்டு வீடுகளாக, அபார்ட்மெண்ட்டுகளாக மாறியிருக்கின்றன. அடுக்கடுக்காக அத்தனை வீடுகள் கண்ணுக்குத் தெரிந்தாலும், ‘டூலெட்’ போர்டும் தெரிவதில்லை. வாடகைக்கு வீடு தேடுவதும் பெரும் கவலை!

ஃப்ளாட்ஃபாரத்தில் வசிப்பவர்களும், விண்ணை முட்டும் உயர்ந்த ப்ளாட்களில் வசிப்பவர்களும், அப்பர் மிடில் கிளாஸ் மக்களும் ’என் வழி தனி வழி’ என்று எவ்வித பிரச்சினையிலும் பொருந்திக்கொள்ளுகிறார்கள். ஆனால் வேலை மாற்றல், குழந்தைகள் கல்வி, கட்டுப்படியாகாத வாடகை என்று சிக்கல்கள் வரிசைகட்டி அடிக்கும் போது, விழிபிதுங்கி, கைபிசைந்து, கால்வலிக்க வீடு தேடுபவர்கள் மிடில் கிளாஸ் என்கிற பாவப்பட்ட மக்கள்தான்.

’வீடு பிரமாதமா, எல்லா வசதிகளோடயும் இருக்கணும்’ என்பது ஒருவகை. ‘வீடு சுமாரா, குறைச்சலான வசதியோட இருந்தாலும் பரவாயில்ல. ஹவுஸ் ஓனர் டார்ச்சர் கொடுக்காதவரா இருந்தாப் போதும். அதுவே நிம்மதி’ என்று அலைபவர்கள் இன்னொருவகை.

இதில், இரண்டாவது வகைக்காரர்கள்தான், எக்கச்சக்கம்.

இருக்கிறவனுக்கு ஒரு வீடு.. இல்லாதவனுக்கு பல வீடு என்கிற பழமொழி, சாதாரண தருணங்களில் இனிக்கலாம். ஆனால், ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர்வதற்காக, வாடகை வீட்டைத் தேடி அலைபவர்களிடம் இதைச் சொன்னால், அவர்கள் பார்வையிலேயே நம்மை எரித்துவிடுவார்கள்.

’வேலை தேடுறது, கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறது, குடியிருக்க வீடு தேடுறதுன்னு மூணு தேடுதல் வாழ்க்கைல பெரிய அவஸ்தை. இதுல வீடு தேடுறது போல கொடுமை எதுவுமே இல்ல’ என்று தத்துவம் பேசுகிறவர்கள், பல வீடுகள் மாறி மாறி, குடியிருந்தவர்கள் என்பதை அந்தப் பேச்சு அனுபவத்திலேயே உணர்ந்துகொள்ளலாம்.

முதலில் ஏரியா பிடிக்கணும். அடுத்து அந்த ஏரியாவுக்கு வந்து செல்ல, பஸ், ரயில் வசதிகள் பார்க்கணும். மழைக்காலத்துல சிக்கலும் தண்ணீரும் வீட்டுக்குள்ளே வருமான்னு கவனிக்கணும். அப்புறம் தெரு. சாக்கடை, கழிவு நீர், குப்பைத்தொட்டின்னு சகலமும் கவனிக்கணும். இதுவும் ஓகேன்னு டிக் அடிச்ச பிறகு, வீடு.

அந்தக் காலத்துல, ‘வீடுன்னா வெளிச்சமா இருக்கணும்’ என்றார்கள். இப்போது ‘24 மணி நேரமும் லைட் போட்டுக்கிட்டே இருக்கணும்ங்கற மாதிரிதான் வீடு இருக்கு’ என்றாகிவிட்டது. ஆக, இருட்டு வெளிச்சம், லைட் என்பதை கணக்கில் சேர்க்கவேண்டாம்.

அதேபோல், காற்றோட்டமான வீடு என்பதையெல்லாம் மறந்து மாமாங்கமாகிவிட்டது. ‘ஜன்னல் திறந்து வைச்சா, லேசா வெளிச்சமும் கொஞ்சமா காத்தும் நிறையவே கொசுவும் உள்ளே வந்துரும்’ என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்.

வாடகைக்கு வீடு தேடுபவர்களின் நிலையை அப்படியே ‘கட்’ செய்துவிட்டு, ஹவுஸ் ஓனர்கள் பக்கம் கொஞ்சம் வருவோம்.

‘எத்தினி பேரு’ என்பது முதல் கேள்வி. ‘எங்கே வேலை’ என்பது அடுத்த கேள்வி. ‘மாசம் பொறந்தா அஞ்சாம்தேதி வாடகை கொடுத்துடணும்’ என்பார்கள்.

‘பசங்க ரெண்டுங்களா? ரொம்ப வாலுத்தனம் போல இருக்கே? இந்த செவுத்துல கிறுக்குறது, பூனை வரையறதுன்னு செய்யக்கூடாது. ஆணி அடிக்கவே கூடாது. தண்ணியை சிக்கனமாத்தான் செலவு செய்யணும்’ என்பார்கள்.

‘முக்கியமா, மச்சினன் வேலைக்கு வந்துருக்கான். தங்கச்சி படிக்க வந்திருக்கு’ன்னு வந்து தங்கற பிஸ்னஸ்லாம் கூடாது. அப்படி தங்கறதா இருந்தா, வாடகையை ஏத்துவோம். அதை இப்பவே சொல்லிப்புட்டேன்’ என்று பிபி ஏற்றுவார்கள்.

அதேபோல, ஊர்லேருந்து அப்பா அம்மா, மாமனார் மாமியார்னு அடிக்கடி வர்றதா இருந்தா, தண்ணி செலவுதான் அதிகமாகும். அதனால, இதையெல்லாம் மைண்ட்ல வைச்சுக்கங்க’ என்று கிறுகிறுக்கவைப்பார்கள். இதில் முக்கியமான விஷயம்... இந்தப் பேச்சின் போதே, நாம் எந்த ஜாதி, என்ன பிரிவு, குலம் என்ன, கோத்திரம் என்ன, சைவமா, அசைவமா என்பதையெல்லாம் ‘மானேதேனே’ கேள்விகளால், கறந்திருப்பார்கள்.

’அட்வான்ஸ் எப்போ தர்றீங்க?’ என்று கேட்டுவிட்டு நம்மை உற்றுப் பார்ப்பார்கள். ‘இன்னும் ரெண்டுநாள்ல தரேன்’, ‘அஷ்டமி, நாளைக்கி நவமி. அது முடிஞ்சு தர்றேன்’ என்று சொன்னால்... ‘ஏற்கெனவே ரெண்டுபேர் பாத்துட்டு ஓகே சொல்லிட்டுப் போயிட்டாங்க. பாத்துக்கங்க’ என்று டிமாண்ட் காட்டுவார்கள்.

அட... இதுமட்டுமா?

ரொம்ப டெர்ரர் ஹவுஸ் ஓனர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் புதிய ஒப்பந்தம் போடற மாதிரி பத்திரத்துல அக்ரிமெண்ட் போடுவாரு. வேறென்ன...வீட்டை காலி பண்ணிட்டுப் போகும்போது, நீங்க அழுக்காக்குனதுக்கு இவ்ளோ கலரடிச்சேன்..குழாயை மாத்தினேன்..இப்படி நீளமான பட்டியலைப் போட்டு, குளிர்ஜூரம் வரவைப்பாங்க.

நமக்கு வீடு வேணுமில்ல. அதனால தகராறு பண்ணாம தலையாட்டிடுவோம்னு மாட்டிக்கிட்டு முழிக்கிறவங்க நிறைய பேரு இருக்காங்க. ஆனா எல்லா வீட்டுக்காரரும் இப்படி இல்லங் கறதையும்சொல்லியே ஆகணும்,

என் தோழி ஒருத்தி, சமீபத்துலதான் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தா. வரும்போது அவங்க ஹவுஸ் ஓனரம்மாவும் இவளும் ஒரே அழுகாச்சிதான். அன்புன்னா அப்படியொரு அன்பு. அவ குழந்தைகளுக்கு அப்பத்தா, அம்மாச்சியோடு, இந்தப் பாட்டியும் சேர்த்து மூணு பாட்டியாம். இப்படி அனுசரணையா ஒருத்தருக்கொருத்தர் தாயா பிள்ளையா பழகுறவங்களும் இருக்காங்க.

விலைவாசி ஏறினாலும் நியாயமான வாடகைக்கு விடற தங்கமான வீட்டுக்காரங்களும் இருக்கத்தான் செய்றாங்க. ஒரு காலத்தில அவங்களும் வாடகை வீட்டில இருந்தவங்களா கூட இருக்கலாம்தானே. ஒரு பொண்ணோட மனசு மட்டும்தான் இன்னொரு பொண்ணுக்குத் தெரியுமா. ஒரு வாடகை வீட்டுக் காரங்களோட மனசு முன்னாள் வாடகை வீட்டுக்காரங்களுக்குத் தெரியலாமே!

20 வருடங்களுக்கு முன்பு, டூலெட் போர்டில் வாடகைக்கு வீடு.. அடைப்புக்குறிக்குள் குடும்பத்தினர் மட்டுமே அணுகவும்னு கொட்டை எழுத்தில் போட்டிருப்பார்கள். பேச்சிலர்களை பேசக் கூட அனுமதிக்க மாட்டாங்க. ஆனா இப்போ நிலைமையே வேற!

ஆனா என்னிக்கு குடும்பத்துல இருந்து வெளியூரு வந்து தனியா தங்கி வேலை பார்க்கிற ஆணும் பெண்ணும் அதிகரிச்சாங்களோ... அப்ப எல்லாமே தலைகீழா மாறிப் போச்சு. இப்பவும் டூலெட் போர்டு வைக்கிறாங்க. ஆனா அதில், ‘பேச்சிலர்ஸ் ஒன்லி’ எனும் வார்த்தை கண்டிப்பாக இருக்கும்.

’ஆமாம்... ஐடி பசங்க வீட்டுக்குள்ளே இருந்தா, அடிச்சுப் போட்டா மாதிரி தூங்கிட்டிருக்காங்கன்னு அர்த்தம். வெளியே பூட்டு போட்டிருந்தா, வேலைக்குப் போயிட்டாங்கன்னு அர்த்தம். கிச்சன்ல கறையாகாது. தண்ணிச் செலவு கம்மியாத்தான் இருக்கும். அப்பா, அம்மாலாம் வந்து ரெண்டுநாலு நாள் தங்கமாட்டாங்க. முக்கியமா, கேக்கற அட்வான்ஸை தந்துருவாங்க. சொல்ற தேதில வாடகையைக் கொடுத்துருவாங்க.

அதனால, பேச்சிலர்ஸ்தான் இப்ப பெஸ்ட் சாய்ஸ்’ என்கிறார்கள் ஹவுஸ் ஓனர்கள் பலரும்!

வருடந்தோறும் வாடகை ஏற்றினாலும் கேள்வியே கேட்காமல் அப்படியே ஆகட்டும் என்று வரமளிப்பது போல் வாடகையை தந்துவிடுவார்கள்.

பட்ஜெட்டுக்குள் அடங்கவில்லையென்றாலும் பரவாயில்லை. கொஞ்சம் கூடக்குறைஞ்சு என்றாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு இன்றைய மிடில்கிளாஸ் மக்கள் வந்துவிட்டார்கள். கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் மனப்பாங்கோடு பல ஹவுஸ் ஓனர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

ஆனாலும் பேச்சிலர்களுக்கான டூலெட் போர்டுகள் ஒருபுறமும்.. பந்தாக்களை அள்ளிவீசும் வீட்டு ஓனர்களும் தமிழகம் முழுக்க இருந்தாலும் எங்களைப் போன்று நீங்களும் கூடிய சீக்கிரம் வீட்டை வாங்கி விடுவீர்கள். அதுவரை இங்கேயே இருக்கலாம் என்னும் புதிய பந்தத்தை தரும் வீட்டு உரிமையாளர்களும் அன்புள்ளம் கொண்டவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

’டூலெட்’... ‘வீடு வாடகைக்கு’ விளம்பரங்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
  • மார்ச் 04 (தி) மகா சிவராத்திரி
  • மார்ச் 15 (வெ) காரடையான் நோம்பு
  • மார்ச் 20 (பு) ஹோலிப் பண்டிகை
  • மார்ச் 21 (வி) பங்குனி உத்திரம்
  • ஏப்ரல் 01 (தி) புதுக்கணக்கு துவக்கம்
  • ஏப்ரல் 06 (ச) தெலுங்கு புத்தாண்டு
தமிழகத்தில் இன்று முதல் 'ஸ்மார்ட்' லைசென்ஸ்

Added : பிப் 28, 2019 00:54

சென்னை, தமிழகம் முழுவதும் இன்று முதல் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில்வெவ்வேறு விதமான லைசென்ஸ்கள் வழங்கப்படுவதாலும் அவற்றின் விபரங்களை முறையாக இணைய தளத்தில் பதியாததாலும் பல்வேறு குற்றங்கள் நிகழ்கின்றன.அத்துடன் போலி லைசென்ஸ்களும் புழக்கத்தில் உள்ளன.இதை தடுக்க கியூ.ஆர். கோடு வசதியுடன் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளை வழங்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்த ஆண்டுக்குள் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்குவதை நாடு முழு வதும் நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர் ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் இந்த திட்டத்தை ஜன. 22ல் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் ஸ்மார்ட் கார்டு வடிவில் லைசென்ஸ் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.விடுபட்டிருந்த ஆரணி செய்யூர் ஆர்.டி.ஓ.
அலுவலகங்களில் இன்று இந்த வசதி துவக்கப்படுகிறது. இதனால் நாட்டில் முதல் முறையாக மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் மாநிலமாக தமிழகம் மாற உள்ளது.

சேலம் - காட்பாடி ரயில் நீட்டிப்பு

Added : பிப் 27, 2019 22:19

சென்னை, சேலத்தில் இருந்து, காட்பாடிக்கு இயக்கப்பட்டு வந்த பயணியர் ரயில், இன்று முதல், அரக்கோணத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில், மாலை, 3:30 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:40 மணிக்கு காட்பாடி சென்றடையும். அங்கிருந்து, இரவு, 8:45 மணிக்கு புறப்பட்டு, இரவு, 10:20 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். அரக்கோணத்தில் இருந்து, அதிகாலை, 4:40 மணிக்கு புறப்பட்டு, காலை, 6:00 மணிக்கு காட்பாடியும், காலை, 11:15 மணிக்கு சேலம் சென்றடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் கிடையாது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு மாற்றம்

சென்னை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, தமிழக அரசு நடத்த முடிவு செய்துள்ளது. எனவே, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி பணியில் இருந்து, துணைவேந்தர், சுரப்பா விலகியுள்ளார்.

dinamalar 28.02.2019



தமிழகத்தில்,பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில்,இன்ஜி.,கல்லுாரிகளில் சேர விரும்புவோருக்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை வழியே, கவுன்சிலிங் நடத்தப்பட்டு வந்தது. இந்த கவுன்சிலிங், நடப்பு கல்வியாண்டில், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டது.

அண்ணா பல்கலை வழியே, 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த கவுன்சிலிங்கை, வரும் கல்வி யாண்டு முதல், தொழில்நுட்ப கல்வி இயக்குன ரகம் வழியே நடத்த, தமிழக உயர்கல்வி துறை முடிவு செய்துள்ளது.

கவுன்சிலிங் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக, அண்ணா பல்கலை துணை வேந்தர், சுரப்பாவும், உறுப்பினர் செயலராக, பல்கலை பேராசிரியர், ரைமண்ட் உத்தரிய ராஜும் நியமிக்கப்பட்டனர்.இதுவரை உறுப்பின ராக இருந்த, தொழில்நுட்ப கல்வி துறை இயக்குனர், விவேகானந்தன், இந்த ஆண்டு துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். கமிட்டி ஒருங்கிணைப்பாளராக,உயர் கல்வி செயலர், மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு, பல்கலையில், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுரப்பா விலகல்

இந்நிலையில், கவுன்சிலிங் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து, துணைவேந்தர் சுரப்பா விலகி உள்ளார். தன் விலகல் கடிதத்தை, உயர்கல்வி செயலருக்கு, அவர் அனுப்பியுள்ளார். இது குறித்து,துணைவேந்தர் சுரப்பா கூறியதாவது:இன்ஜி., பாடம் நடத்துவது, பாட திட்டம் தயாரித்தல், ஆராய்ச்சி பணிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு, அண்ணா பல்கலை,அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆராய்ச்சி பணிகளை இன்னும் மேம்படுத்தும் வகையில், பேராசிரியர்களுக்கு அதிக பணிகள் உள்ளன. மேலும், பொது தேர்தல் பணிகளையும், பேராசிரியர்கள் எதிர்கொள்ளலாம்.

எனவே, இன்ஜி., கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மேற்கொள்ள உள்ளது. எங்களை பொறுத்தவரை, தொழில்நுட்ப ரீதியாக கவுன்சிலிங்குக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம். இதில், எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் உறுதி

இதற்கிடையில், கவுன்சிலிங் முறையில் மாற்றம் செய்துள்ளது குறித்து, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் கூறியதாவது:தமிழக உயர்கல்வி துறை கமிட்டி தான், அண்ணா பல்கலை வழியே, கவுன்சி லிங்கை நடத்தி வருகிறது. வரும் கல்வி யாண்டில், அண்ணா பல்கலைக்கு பதில், தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்து, விரிவான ஆலோசனை நடத்தப்படும்.

தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஏற்கனவே, கவுன்சிலிங்கை தனியாக நடத்திய அனுபவம் உள்ளது.அதேபோல,அண்ணா பல்கலை வழியே நடத்தப்படும் கவுன்சிலிங்கிலும், தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் முக்கிய பங்கு வகித்தது. அதனால், கவுன்சிலிங் நடத்துவதில் எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பேராசிரியர்கள் வரவேற்பு தமிழக அரசின் இந்த முடிவுக்கு, அண்ணா பல்கலை பேராசிரியர்கள், இன்ஜி., கல்லுாரி நிர்வாகத்தினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். 'தமிழகத்தில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு பணிகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. இதனால், கவுன்சி லிங்கை, தொழில்நுட்ப இயக்குனரகம் நடத்து வது, பல்கலைக்கான சுமையை குறைப்பதாக இருக்கும். பல்கலையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம் பாட்டு பணிகளுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும்' என்றனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில், உயர்கல்வி துறையே, தனியாக கமிட்டி அமைத்து, கவுன்சிலிங் மற்றும் நுழைவு தேர்வுகளை நடத்துகின்றன

பெண் டாக்டருக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து

Added : பிப் 27, 2019 22:16

சென்னை,தமிழக சுகாதாரத் துறையில், முதல் முறையாக, பெண் டாக்டருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.மாநில சுகாதார சங்க இணை இயக்குனர், எஸ்.உமா. இவர், எம்.பி.பி.எஸ்., - எம்.டி., படித்துள்ளார். 1995ல், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 1' தேர்வில் வெற்றி பெற்று, சுகாதார அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.பொது சுகாதாரத் துறை துணை இயக்குனராக, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார். நான்கு ஆண்டுகளாக, மாநில சுகாதார சங்கத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், உமாவிற்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சுகாதாரத் துறையில், பெண் டாக்டர் ஒருவர், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெறுவது, இதுவே முதல் முறை.
ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் 'ஆன்லைனில்' வெளியிட நடவடிக்கை

Added : பிப் 27, 2019 21:31


புதுடில்லி, ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டதும், அதை, 'ஆன்லைனில்' வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய முதல் பட்டியல், ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன் தயாரிக்கப்படும். இந்த பட்டியலை, பயணியர் பார்க்க முடியாது.ஆர்.ஏ.சி., மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணியர், தங்களுக்கு இருக்கை உறுதி செய்யப்பட்டால், அதுபற்றிய தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன், இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ரயில் பெட்டிகளில் ஒட்டப்படுவது வழக்கம். அதில் பயணியர் பற்றிய விபரங்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும்

.இந்நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டவுடனேயே, அதை ஆன்லைனில் வெளியிட, ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இது பற்றி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:ரயில் டிக்கெட் முன்பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டதுமே, அதை, http://www.irctc.co.in என்ற இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதல் பட்டியல் மற்றும் இறுதி பட்டியல் இரண்டுமே, தயாரானதுமே, இணையதளத்தில் வெளியிடப்படும்.இதன் மூலம், பயணியர், தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் உறுதியாகிவிட்டதா என்பதையும், ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் பற்றிய விபரங்களையும் உடன் தெரிந்து கொள்ள முடியும். இந்த வசதியை, மொபைலில் பார்ப்பதற்கு ஏற்ற வகையிலும், வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வெளிப்படையான நடவடிக்கை மூலம், முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட ரயிலின் பெட்டிகளில் உள்ள இருக்கைகள், எண் வரிசைப்படி, ஆன்லைனில் இடம்பெற்றிருக்கும். அதில், முன் பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் ஒரு நிறத்திலும், காலியாக உள்ள இருக்கைகள், வேறு நிறத்திலும் காட்டப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...