Tuesday, March 5, 2019

DNB for Foreign PGs

Introducing DNB exam for foreign PG Medical Graduates: MCI Board of Governors mull proposal

March 3, 2019

New Delhi: In order to provide a level playing field to medical practitioners who complete their post-graduation and specialisations from various countries outside India, the Medical Council of India Board of Governors are now mulling over a proposal to consider introducing DNB examination for candidates qualifying PG degree from foreign nations other than five English speaking countries.

PG Medical Degrees from 5 English speaking countries including the  US, the UK, Australia, New Zealand and Canada are considered equivalent to MD/MS degrees in India. However, the same is not true for PG medical qualifications from other countries apart from these 5, with no benchmark on how these degrees are to be considered in India. In absence of regulations, these PG medical degrees from countries apart from those recognised by MCI have no value in India

The issue was recently taken up by the MCI Board of Governors in their December 2018 meeting, where the BOG mulled on the idea of equating these degrees to DNB

The BoG considered the issue relating to shortage of specialist in the Country and decided in-principle that Indian/OCI PG doctors planning to return/wish to render their services to the Country may be allowed to enter in the mainstream by facilitating registration of their PG qualification by equating it to DNB.

The matter was considered in the meeting and BOG has decide to consider introducing DNB examination for candidates qualifying PG degree from foreign nations other than five English speaking countries

In view of the foregoing the BoG decided to nominate Dr Randeep Guleria, Dr Nikhil Tandon and Dr S Venkatesh, BoG Members, who are also NBE members, to workout detailed modalities in consultation with NBE leadership for allowing the Indian OCI Doctors who possess foreign PG qualification to take DNB examination without undergoing three years DNB training at NBE accreditated hospital India.

Monday, March 4, 2019

Medical university dean summoned over certificates
TNN | Updated: Aug 22, 2018, 08:52 IST

CHENNAI: The Tamil Nadu Medical Council has summoned the dean of a deemed universityfor discrepancies in the internship completion certificates the varsity issued to at least three students who passed out in 2017 and 2018.

All MBBS students must complete compulsory rotatory residential internship for a year in hospitals attached to the college or any approved hospital. During the internship, students are given ‘temporary’ registration certificates and will have to show completion certifications to register as doctors.

In April, a student from 
Saveetha Medical College and Hospital approached the council for permanent registration. “In January, the student had applied for six months extension to complete her internship. But he is said to have completed the course by April,” said council president Dr K Senthil. The student produced two certificates that had discrepancies pertaining to the dates on which he attended some wards. The council also found at least two other students whose certificates had similar discrepancies.

On Tuesday, the council’s disciplinary committee summoned hospital dean Dr T Gunasagaran about one of the students. During inquiry, Gunasagaran said the student was irregular and that he approached the council for a six-month extension after completing nine months of internship.

“It was only to ensure that if he further absented himself he did not have to go back for extension. I told them I had no mala fide intentions,” Gunasagaran told TOI. “At our university at least 30% of students are given repeat internships because we give rigorous training.”

The committee, however, asked the college to submit daily log sheets of the student’s work in a week. “It is important to maintain log sheets to prove the student had adequate attendance,” said Senthil.

The council has also decided that it will not register students without checking their names on the registers of medical colleges, universities and Medical Council of India. “This will ensure there are no fake certificates or registrations,” Senthil said.
NEET UG 2019 sees surge in applicants, 15.19 lakh candidates to appear for exams

Kevin Mendonsa | TNN | Updated: Mar 3, 2019, 09:25 IST


NEW DELHI: There has been a surge in registration for NEET-UG-2019 — 15.19 lakh candidates will take the test on May 5. This is almost 2 lakh more than the previous year. 


The enrolment from Karnataka has also witnessed an increase, especially in female candidates. The highest number is from Maharashtra, where 2.19 lakh candidates have applied.

Navin C Joshi, academic head and VP (NEET and JEE), Gradeup, an institution which prepares candidates, said, the medical profession is still considered the noblest profession across all strata of the society and age groups of people. As per the Medical Council of India, there’s been an increase in registrations of 14.4% in 2019.

The National Testing Authority (NTA) permits students above 25 years to appear for the exam provisionally until the final judgement is passed in this regard. Further, the increase in number of registrations is also because NEET has been made mandatory for overseas MBBS students. Overall, the number of seats in various medical colleges is being increased with more AIIMS being set up by the government and many new medical colleges being planned, giving aspirants greater opportunities to pursue their dreams of becoming doctors.

Increase of female enrolment

Over the years, female enrolments has seen a steady increase due to various factors. Rajshekhar Ratrey, VP, educational content head, Toppr, told TOI that the number of female candidates is around 1.5 lakh more than male candidates this year. The reason for this is not clear yet.

Navin C Joshi added that NEET 2018 result figures reveal that the number of female candidates who qualified is higher compared to males when compared to JEE. In 2018, female candidates have been in equal standing with 55.99% aspirants qualifying as compared to 56.25% males. Among top 25 rankers, three were females in NEET 2018 and nine in 2017. With greater female aspirants being part of top rankers, this definitely motivates others to prepare for the exam.

Changes in NEET-19 


As per MHRD, it will be an offline exam (pen and paper test) and conducted by National Testing Authority (NTA). NEET 2019 will offer admission to around 90,000 MBBS and BDS seats in medical and dental colleges of India, except AIIMS and JIPMER.

This year, the Supreme Court has allowed candidates with low vision to pursue the MBBS course. Such aspirants need to appear and qualify in NEET 2019. The order passed on August 25, 2018 will allow MBBS aspirants suffering from various forms of visual impairment to avail the 5% admission reservation for persons with disability through the Right of Persons with Disabilities Act, 2016.
முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளில் புதிய மாற்றம்..! என்னன்னு தெரியுமா?
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தற்போதைய நிலவரப்படி 1,250 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. அதில், அதிகபட்சமாக சென்னை மருத்துவக் கல்லூரியில் 213 இடங்கள் உள்ளன. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 152 இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 134 இடங்களும் உள்ளன. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற முதுநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் தமிழக மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், பின் வரும் கல்வியாண்டில், மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். இச்சூழ்நிலையில், தமிழகத்தில் முதுநிலை படிப்புகளுக்குக் கூடுதலாக 157 இடங்களை ஒதுக்க வேண்டும் என மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் வலியுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்போது 124 இடங்களை அதிகரிக்க மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், பல ஆண்டுகலாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் சமீபத்தில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 14 பிரிவுகளில் உள்ள 384 முதுநிலை பட்டயப் படிப்பிற்கான இடங்களை பட்ட மேற்படிப்புகளாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறியதாவது:-

சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி ஆகிய 6 கல்லூரிகளில் மட்டுமே முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகள் உள்ளன. இக்கல்லூரிகளில் செயல்படும் 14 பிரிவுகளில் உள்ள 384 முதுநிலை பட்டயப் படிப்பு இடங்களும் வரும் கல்வியாண்டில் பட்ட மேற்படிப்புகளாக மாற்றப்பட உள்ளன என்றார்.
வங்கி கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

By DIN | Published on : 03rd March 2019 10:17 PM |





வங்கி கணக்கு மற்றும் செல்போன் இணைப்புக்கு (சிம் கார்டு) ஆதார் எண் கட்டாயம் என்ற அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில், சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாகம் 26 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், தனியார் நிறுவனங்கள் ஆதார் எண் கட்டாயப்படுத்தக் கூடாது என தீர்ப்பளித்து. முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் எண் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது, வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கு, செல் போன் சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் அவசியமில்லை என்றும், கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால், சிபிஎஸ்இ, நீட் தேர்வு மற்றும் பள்ளியில் மாணவர் சேர்க்கைபோன்ற எந்தவொரு செயலுக்கும் ஆதார் கட்டாயமாகக் கூடாது என உத்தரவளித்தது.

மேலும், குழந்தைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் எனவும், ஆதார் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இதனிடையே, வங்கி கணக்கு மற்றும் செல்போன் இணைப்பு (சிம் கார்டு) பெறும்போது ஆதார் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக டெலிகிராப் சட்டத்திலும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கி கணக்கு மற்றும் செல்போன் இணைப்பு (சிம் கார்டு) பெறும்போது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி, சிம்கார்டு பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் கட்டாயம் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக மகளிர் தினம்: கற்பனைகளும் உண்மைகளும்

Published : 03 Mar 2019 08:34 IST

இரா. ஜவஹர்



உண்மை ஒரு முறை சுற்றி வருவதற்கு முன்னால், வதந்தி நூறு முறை சுற்றி வந்துவிடும் என்ற சொல்வழக்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலக மகளிர் தின வரலாற்றுக்கும் இதுதான் நேர்ந்துள்ளது.

உலக மகளிர் தினம் உருவாக உண்மையான காரணம் என்ன?

இந்த நாள் ஆண்டுதோறும் ஏன் மார்ச் 8-ல் கொண்டாடப்படுகிறது?

மார்ச் 8-தான் மகளிர் தினத்துக்கான தேதி என்று முடிவுசெய்தது எந்த அமைப்பு?

இவை பற்றி மிகப் பெரும்பாலான பத்திரிகைகள், இணைய தளங்கள், மற்ற ஊடகங்கள், ஏன் ஐ.நா. சபையின் அதிகாரபூர்வமான சில இணைய தளங்களில்கூடத் தவறான தகவல்களே உள்ளன. இவற்றில் முக்கியமான சில தவறான தகவல்களையும் உண்மையான வரலாற்றுத் தகவல்களையும் பார்ப்போம்.

தவறான தகவல்கள்

1. தமிழ் விக்கிபீடியா இணையதளக் கட்டுரையில், “பிரான்ஸ், பிரஷ்யாவில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயி பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848, மார்ச் 8-ம் நாளாகும்.

அந்த மார்ச் 8-ம் நாள்தான் அனைத்துலகப் பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது” எனக் கூறப்பட்டுள்ளது. இது தவறான தகவல். உண்மையில் நடந்தது என்ன? இன்றைய ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளின் பகுதிகளைக்கொண்ட பிரஷ்ய நாட்டின் மன்னர் பிரெடெரிக் வில்லியம்ஸ், பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை 1848, மார்ச் 19 அன்று அளித்தார். ஆனால், எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை என்பது வேறு விஷயம். எனவே, மார்ச் 8-க்கு இது காரணமில்லை.

2. “அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆடை மற்றும் துணித் தொழிற்சாலைகளின் பெண் தொழிலாளர்கள் 1857 மார்ச் 8 அன்று வேலை நிறுத்தம் செய்து போராடினார்கள். அதை நினைவுகூரும் வகையில்தான் உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது” என்று ஐ.நா. சபையின் ஓர் இணைய தளத்திலும் ஏராளமான கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இது உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்பதை பிரான்ஸ் நாட்டின் பெண் ஆய்வாளர்கள் இருவர் விரிவாக ஆய்வுசெய்து ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்கள்.

3. “நியூயார்க் நகரில் ஆடை ஆலைகளின் பெண் தொழி லாளர்கள் மோசமான வேலை நிலைமைகளை எதிர்த்து 1908 பிப்ரவரி 28 அன்று வேலை நிறுத்தம் செய்தார்கள். இதைக் கவுரவிக்கும் வகையில் இந்த நாளைத் தேசிய மகளிர் தினத்துக்கான நாளாக அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி நிச்சயித்தது” என்ற தகவல் ஐ.நா. சபையின் இணையதளத்தில் உள்ளது.

இப்போதுள்ள ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், 1908 மார்ச் 8 அன்று நியூயார்க் நகரத் தெருக்களில் ஊர்வலம் நடந்ததாகவும் மகளிர் தினத்தின் வரலாறு அதிலிருந்து தொடங்கியது என்றும் உள்ளது.

ஆனால், நியூயார்க் நகரில் 1908 பிப்ரவரி 28 அன்று வேலை நிறுத்தமோ மார்ச் 8 அன்று ஊர்வலமோ நடைபெறவில்லை. 1908 போராட்டம் தொடர்பான எந்தக் கட்டுரையிலும் இதற்கான ஆதாரம் ஏதும் அளிக்கப்படவில்லை.

4. உலக மகளிர் தினத்துக்கான நாள் மார்ச் 8 என்று எப்போது, எவ்வாறு நிச்சயிக்கப்பட்டது?

1977-ல் ஐ.நா. சபை மகளிர் தினத்தைக் கொண் டாட மார்ச் 8 என்ற தேதியை முடிவு செய்ததாக ஆங்கில விக்கிபீடியா கட்டுரை உள்ளிட்ட பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஐ.நா. சபையின் தீர்மானத்தில் ‘ஏதேனும் ஒரு நாளில்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.


கிளாரா ஜெட்கின்

உண்மையான வரலாற்றுத் தகவல்கள்

1. உலக மகளிர் தினம் உருவாக உண்மை யான காரணம் என்ன?

டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகனில் ‘உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு’ 1910-ல் நடந்தது. இந்த மாநாட்டில்தான் வரலாற்றுப் புகழ்மிக்க ‘மகளிர் தின’த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலக மகளிர் தினத்தின் தாய் என்று சொல்லத்தக்க கம்யூனிஸ்ட் தலைவி கிளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) மாநாட்டுக்குத் தலைமை வகித்து, இந்தத் தீர்மானத்தை எழுத்துபூர்வமாக முன்மொழிந்தார்.

“அனைத்துத் தேசிய இனங்களையும் சார்ந்த சோஷலிஸ்ட் பெண்கள் ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் (Women's Day) கடைப்பிடிக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகள் பற்றிய சோஷலிசக் கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்சினை அனைத்துடனும் வாக்குரிமைக் கோரிக்கையை இணைத்து விவாதிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (மகளிர் தினத்துக்கான தேதி ஏதும் இதில் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.) எனவே, 1910-ல்

நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம்தான் உலக மகளிர் தினம் உருவாக உண்மையான காரணம்.

2. உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் ஏன் மார்ச் 8-ம் தேதியில் கொண்டாடப்படுகிறது?

உலகின் முதல் சோஷலிசப் புரட்சி ரஷ்யாவில் 1917 நவம்பர் 7-ல் லெனின் தலைமையில் நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அதற்கு முன்னோடிப் புரட்சியாக மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. இதில் ஆண் தொழிலாளர்களும் கலந்துகொண்டார்கள். இந்தப் புரட்சிதான் ஜார் மன்னரின் ஆட்சியைத் தூக்கி எறிந்தது.

1917 மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் தொடங்கிய இந்தப் புரட்சியே, உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்பட உண்மையான காரணம்.

3. மார்ச் 8-ம் தேதிதான் மகளிர் தினத்துக் கான தேதி என்று முடிவுசெய்தது ஏன், எந்த அமைப்பு?

உலக மகளிர் தினம் 1911-ம் ஆண்டு முதல் பல நாடுகளில் பல தேதிகளில் கொண்டாடப் பட்டுவந்தது. இந்தச் சூழ்நிலையில் ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகில’த்தின் மாநாடு 1921-ல் மாஸ்கோ நகரில் நடந்தது. ரஷ்யாவில் 1917, மார்ச் 8-ல் பெண் தொழிலாளர்கள் நடத்திய புரட்சியை நினைவுகூரும் வகையில், இனிமேல் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் மார்ச் 8-ம் தேதியில் கொண்டாட வேண்டும் என்று இந்த மாநாடுதான் முடிவுசெய்தது. அதன் பிறகுதான் மார்ச் 8-ல் உலக மகளிர் தினம் என்பது நடைமுறைக்கு வந்தது.

எனவே, 1921-ல் நடந்த ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகில’த்தின் மாநாட்டுத் தீர்மானமே, உலக மகளிர் தினத்துக்கு மார்ச் 8-ம் தேதி நிச்சயிக்கப்படவும் நிரந்தரமாக்கப்படவும் உண்மையான காரணம்.

ஆகவே, உலக மகளிர் தினம் என்பது பெண்களின் புரட்சிகரப் பாரம்பரியத்தை நினைவுகூரும் நாள். அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து நடத்தி, அனைத்து ஆதிக்கங்களுக்கும் முடிவுகட்டச் சூளுரைக்கும் நாள் இது!

- கட்டுரையாளர், மார்க்சிய ஆய்வாளர், பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: jawaharpdb@gmail.com

(முழுமையான விவரங்களுக்கு: ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’, ஆசிரியர்: இரா. ஜவஹர் வெளியீடு: பாரதி புத்தகாலயம் தொலைபேசி: 044-24332924)
டிரெண்டாகும் அபிநந்தன் 'கன்ஸ்லிங்கர் மீசை': பெருமை சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்; சலூன்களில் தள்ளுபடி

Published : 03 Mar 2019 17:16 IST

ஏ.என்.ஐ.  பெங்களூரு



விமானப்படை வீரர் அபிநந்தன் : கோப்புப்படம்

பாகிஸ்தானில் ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், இளைஞர்கள் பலர் அபிநந்தன் வைத்திருக்கும் மீசை போல் தங்கள் மீசையையும் வடிவமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி திரும்பியது.

அப்போது, மிக் ரக விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 வகை விமானத்தை சுட்டு வீழ்த்திய பின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதனால், பாராசூட் மூலம் உயிர் தப்பிய அபிநந்தன் பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தார். அவரை ராணுவத்தினர் கைது செய்தனர். இரு நாட்களுக்குப் பின் சர்வதேச அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு வாகா எல்லையில் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

அபிநந்தனின் வீரத்தையும், துணிச்சலையும் நாட்டு மக்கள் அனைவரும் புகழந்தும், வரவேற்றும் வருகின்றனர். உண்மையான ஹீரோவாக மக்கள் மத்தியில் ஜொலித்து வருகிறார் அபிநந்தன். அபிநந்தனுக்குப் புகழாரம் சூட்டும் வகையில் இளைஞர்கள் பலர் அபிநந்தன் வைத்திருக்கும் மீசையைப் போல் தங்கள் மீசையையும் வடிவமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



பெங்களூரு சலூனில் அபிநந்தன் மீசைக்கு ஆரவமாக இருக்கும் இளைஞர்கள் : படம் ஏஎன்ஐ

கடந்த இரு நாட்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அபிநந்தன் வைத்திருக்கும் மீசை குறித்த விவாதம் தீவிரமாக இருந்து வருகிறது. தாடி வைத்திருக்கும் ஏராளமான இளைஞர்கள் சலூன் கடை நோக்கி படையெடுத்து தங்கள் தாடியை மழித்து அபிநந்தன் மீசை வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெங்களூரில் சலூன் கடை வைத்திருக்கும் ஏராளமான சலூன் கடைகளில் அபிநந்தனைப் போல் மீசை வைத்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு 50 சதவீதம் கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதனால், இளைஞர்கள் மத்தியில் இந்த மீசை டிரெண்டாகி வருகிறது.

இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சாந்த் முகமது(வயது 32) கூறுகையில், "அபிநந்தன் துணிச்சல் மிக்க வீரர். அவரின் மீசை எதிரிகளுக்கு அச்சத்தையும், வீரத்தையும் பறைசாற்றுகிறது. சல்மான்கான், அமீர்கான் என்னுடைய ஸ்டைல் குருவாக இருந்தாலும், அபிநந்தன்தான் என்னுடைய குரு. அதனால் அவரைப் போல் மீசை வைத்தேன். செகந்திராபாத்தில் உள்ள என்னுடைய உறவினர் அபிநந்தன் போல் மீசை வைத்து இன்று காலையில் வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பினார். அதைப் பார்த்து நானும் வைத்துக்கொண்டேன்" எனத் தெரிவித்தார்.



பெங்களூரில் சலூன் கடை வைத்திருக்கும் சமீர் கான் கூறுகையில், " இன்று காலையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் என்னிடம் அபிநந்தன் போன்று மீசை வைக்க வேண்டும் என்று விரும்பி அதைப் போன்று மீசை வைத்துச் சென்றுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

தற்போது மெல்லப் பரவி வரும் அபிநந்தன் மீசை ஸ்டைல், அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் அபிநந்தனின் கன்ஸ்லிங்கர் மீசை டிரெண்டாகப் போகிறது.

NEWS TODAY 20.06.2026