Friday, March 15, 2019

No limits on compensation for accident death, rules HC

Families Can Turn To Many Sources To Get Relief

TIMES NEWS NETWORK

Chennai:15.03.2019

The Madras high court has made it clear that utilizing multiple options to get compensation for the death of a person in a motor accident, by their family, particularly when the deceased was the sole breadwinner, cannot be construed as ‘double compensation’ and prohibited.

“Awarding of compensation to the claimants is only for the sake of giving solace to them who lost their breadwinner to the accident. If their tears are not wiped off by the courts of law, there will be little meaning in awarding compensation,” Justice M V Muralidaran said.

The issue pertains to an appeal moved by National Insurance Company challenging the order of the Commissioner of Employees Compensation at Coonoor, awarding compensation to the kin of transport corporation employees who were killed in road accidents.

The primary contention of the insurer was that since the families of the deceased have already obtained compensation from the insurer of the vehicles involved in the accident through motor accident claims tribunal, they cannot claim additional compensation under the Workmen Compensation Act for the same accident.

The claimants submitted that before the motor accidents claims tribunal they claimed compensation against the driver, owner and insurer of the vehicle. And the claim made before the commissioner for employees’ compensation was against the employer and insurer of the vehicle where the deceased worked while they died during the course of employment.

Justice Muralidaran said, “In my considered view, the action of the claimants would not amount to double compensation or double jeopardy to the employer in the light of the observations made in the catena of the decisions discussed.”

Applying the principles of the doctrine of election, the court is in entire agreement that the compensation claimed at accident tribunal against the vehicle which caused the accident and claim under the Workmen Compensation Act against the employer during the employment, would not amount to double compensation, the court said.
Racket promising govt jobs: Ex-IAS officer held

TIMES NEWS NETWORK

Chennai:15.03.2019

Police arrested a retired IAS official on Thursday for cheating people by promising them government jobs in the state.

V Mohanraj, 62, had collected ₹5.5 crore from 106 people. Based on the complaint of Nissar Ahmed, 49, a resident of Nungambakkam, central crime branch sleuths registered a case against him.

Last year, the entrustment document fraud (EDF) wing of the CCB had arrested K Navappan, 28, a resident of Tiruvannamalai, who cheated people in similar fashion. During questioning, Navappan, who posed as an IAS official working at the Secretariat before his victims, told sleuths about the involvement of Mohanraj in the racket. Navappan told police that he had collected money ranging from ₹1lakh to ₹10 lakh according to the jobs his victims wanted.

Before apprehending Mohanraj, the EDF wing personnel collected details and evidence to substantiate the link between Mohanraj and Navappan. Officials said Navappan often visited Mohanraj’s office in the city between 2015 and 2016 when the latter was in service.

“We collected the entry and exit registers from Mohanraj’s office and statements of the people who saw Navappan visiting. Few more proofs to establish the connection between the duo are with us,” said an investigation officer.

Preliminary inquiries revealed that Ahmed had approached Mohanraj through a common friend, Selvakumar, in 2015. He had paid him ₹50 lakh to get medical seat for his daughter. When things did not work out, Ahmed demanded the money back. The cheques Mohanraj gave bounced and Ahmed complained to police who took no action terming it as a civil dispute.

But Ahmed filed a case in the high court which directed police to take action. Police visited Mohanraj’s residence in Anna Nagar extension and brought him to the commissioner’s office. During inquiries, he confessed to have colluded with Navappan and cheated people promising to get them jobs.
TN GO names victim, college in Pollachi case, sparks controversy

TIMES NEWS NETWORK

Chennai:15.03.2019

An order issued by the state government, transferring the Pollachi sexual harassment case to the CBI, is mired in controversy as it had named the victim and her college. The order cited a communication issued by the DGP quoting Coimbatore superintendent of police as saying on February 24 that a complaint was given by a girl student of a college in Pollachi alleging that she was sexually harassed and robbed of her gold chain by a group of men inside a car.

The victim was named again when the DGP, in his communication, said the girl’s brother complained to the Pollachi east police station on February 26 that he had been assaulted and threatened with murder by the accused.

A day after the state government transferred the case in which more than 400 women were suspected to have been affected to the CBI, the CB-CID police requested people who have proof of video, photos or audio to submit them before the deputy commissioner of police, CB-CID office, on Avinashi Road in Coimbatore.

Meanwhile, sporadic protests by students broke out across TN seeking action against the accused.

Case against Stalin son-in-law, journalist

The political slugfest in the Pollachi sexual assault case ratcheted up on Thursday with the Chennai city police registering a case against DMK chief M K Stalin’s son-in-law V Sabarisan and ‘Nakheeran’ editor Gopal and summoning them for questioning in a case filed by deputy speaker Pollachi V Jayaraman and minister S P Velumani over spreading false news linking their names to the grisly crime. DMK hit back with Sabarish’s counsel R Neelankandan issuing a legal notice to Jayaraman for including his client’s name in the complaint. The CB-CID, meanwhile, has requested the general public to share any proof they may have in the case. P11

Govt shielding culprits: Oppn

The government had come under pressure after protests erupted across the state demanding action against the sexual predators until the 19-year-old girl student summoned up the courage to complain against them. The opposition accused the AIADMK government of shielding the culprits.

So far four persons have been detained under the goondas act in the case. Officers privy to the investigation said the four arrested are suspected to be part of a larger gang that preyed on students, working women and housewives in Pollachi since 2012, befriending them on social media and shooting videos of them and blackmailing them for sex and money.

Thursday, March 14, 2019

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: திருநாவுக்கரசுகள் ஏன் உருவாகிறார்கள், ஆபாச வீடியோக்கள் எப்படிப் பரவுகின்றன?- ஓர் உளவியல் அலசல்

Published : 13 Mar 2019 16:47 IST

க.சே.ரமணி பிரபா தேவி

பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார் ஆகியோர் நண்பன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி, அழைத்து வந்து ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டிய சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், பொள்ளாச்சியில் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, தனியார் கல்லூரிப் பேராசிரியை, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள், சில குடும்பப் பெண்கள் என 60-க்கும் மேற்பட்டோர் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள் சில வெளியான நிலையில், பாலியல் வக்கிரங்களை நிகழ்த்தும் திருநாவுக்கரசு போன்றவர்கள் ஏன் உருவாகிறார்கள், ஆபாச வீடியோக்கள் எப்படிப் பரவுகின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் குறித்து மனநல மருத்துவர் அசோகனிடம் விரிவாகப் பேசினோம்.

பொதுவாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் அவற்றில், தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வது ஏன்?

இதற்கு நார்சிஸம் என்னும் உளவியல் பகுப்பாய்வுக் கோட்பாட்டை உதாரணமாக வைக்கிறேன். நம்மை அடுத்தவர்கள் ரசிக்க வேண்டும், பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறோம். அந்த மனநிலை அளவோடு இருக்கும் பட்சத்தில் அது உத்வேகத்தை அளிக்கும். ஆனால் அதிகமாகும்போது பிரச்சினை ஆரம்பிக்கிறது. பொதுவாகவே பெரும்பாலான மனிதர்களுக்கு நிஜ ஆளுமையில் பிரச்சினை இருக்கிறது. அதற்கு ஊடகங்களே பாதுகாப்பான முகமூடிகளாக அமைகின்றன. அவற்றின் மூலம் தங்களுக்குப் பிடித்த வகையில் தற்காலிகமாக தன்னை உருமாற்றிக் கொள்கின்றனர்.

புரொஃபைல் போட்டோக்கள், குடும்ப புகைப்படங்கள், சுற்றுலா படங்கள் சரி.. அந்தரங்க, நிர்வாணப் படங்களைப் பொதுவெளியில் நண்பர்களுக்கு அனுப்புவது என்ன மாதிரியான மனநிலை?

புனிதமாகவும், தூய்மையாகவும் இருவருக்கு மட்டுமே இடையில் இருந்த அந்தரங்கம் இன்று ரசனையாக மாறிவிட்டது. அந்தரங்கத்தை ரசனையாக்கி அடுத்தவர்களுக்கு அனுப்பும் வக்கிர உணர்வு மெல்ல ஏற்பட்டு வருகிறது. எதிர் தரப்பினரின் தொடர்ச்சியான மூளைச்சலவையும் இதற்குக் காரணம்.

பெண்களிடம் பேச்சின் மூலமாகவே ரகசியமாகத் தூண்டுவது முதல் படி. 'நாம்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறோமே, பின் என்ன தயக்கம்?' என்று நெருக்கத்துடன் பேசுவது,' நான் முதலில் என்னுடைய நிர்வாணப் படத்தை அனுப்புகிறேன், அடுத்து நீ அனுப்பு!' என்று கூறி தயக்கத்தை உடைப்பது ஆகியவை இதற்கான உதாரணங்கள். பெண்களின் அசட்டு தைரியமும் அதீத நம்பிக்கையும் இதற்கு அடுத்த காரணம்.

அப்படியென்றால் சமூக வலைதளங்களில் யாரையுமே நம்பக் கூடாது என்றுசொல்கிறீர்களா?

யாரையும் நம்ப வேண்டாம் என்றில்லை. எடுத்தவுடனே நம்பாதீர்கள் என்கிறேன். பார்த்தவுடன் இவர் இப்படித்தான் என்று அபிப்ராயத்தை வளர்க்க வேண்டாம். யாரையும் நேரில் பார்க்காமல் நம்பிக்கை வைக்காதீர்கள். ஆதார் அட்டை, நெட் பேங்கிங் தகவல்கள் ஆகியவற்றைப் பகிரும் முன் யோசிப்பீர்கள் அல்லவா, அதை அந்தரங்கத்தைப் பகிரும் போதும் செய்யுங்கள்.

உதாரணத்துக்கு நண்பரின் பார்ட்டிக்கு அழைப்பு வருகிறதா? முதலில் போக வேண்டுமா என்று யோசியுங்கள், திரும்பி வரும்போது போக்குவரத்து வசதி இருக்குமா, இல்லையென்றால் நண்பர்தான் கொண்டுவந்து விடுவாரா? அங்கேயே தங்கவேண்டி வருமா என்று முன்கூட்டியே யோசித்து முடிவெடுங்கள். பாலியல் உணர்வுகளைக் காதலாக நினைக்காதீர்கள்.

ஏன் தொடர்ந்து பெண்கள் குறித்த ஆபாசங்களே (புகைப்படங்கள், வீடியோக்கள்) அதிகம் பரப்பப்படுகின்றன?

பயாலஜிக்கலாக ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக வலிமை கொண்டவர்கள். இதனால் அவர்களை ஆண்கள் அடக்கி ஆள நினைப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் கருவிதான் ஆபாசங்களைப் பரப்புவது.

இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். இன்று குடும்பங்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசுவதே இல்லை. எல்லோருக்கும் தனித்தனியாக செல்போன்கள், தனித்தனி டிவிகள். உணர்ச்சிகள் நீர்த்து விட்டன. வக்கிர உணர்வு சாதாரணமாகிவிட்டது. அந்தக் காலத்தில் கெட்டவனாக இருக்கக் கஷ்டப்பட்டார்கள். குடும்பம், உறவினர்களுக்குத் தெரியாமல் சிகரெட் பிடிக்க, ஆபாசப் பத்திரிகைகளைப் படிக்க அவ்வளவு சிரமப்பட்டனர். ஆனால் இப்போது நல்லவனாக இருக்கத்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

குழந்தைக்குக் கூட, விரல் நுனியில் கிடைத்துவிடும் இணையம் ஆபாசத்துக்கும் கடைவிரித்து விடுகிறது. இதனால் ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் எளிதில் பார்க்கப்படுகின்றன, அதிகம் பரப்பப்படுகின்றன.

பொதுவாக ஆண்கள் எல்லை மீறிப் பேசும்போது பெண்களின் உள்ளுணர்வே அதைக் காட்டிக் கொடுத்துவிடும் என்று கூறப்படுகிறதே? அவர்கள் ஏன் நோ சொல்ல யோசிக்கிறார்கள்?

இது எல்லோருக்கும் பொருந்தாது. அனுபவங்களும் அறிவுமே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எப்போதும் முன்னெச்சரிக்கையுடனே சில பெண்கள் இருக்கலாம். ஆனால் அனைத்துப் பெண்களுமே அப்படியில்லை. சம்பவங்கள் தொடர்ந்து வரிசையாக நடக்கும்போது அவர்களுக்கு யோசிக்க நேரம் இருக்காது. யோசிக்கவும் தோன்றாது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார், திருநாவுக்கரசு.

இந்தப் பழக்கம் அடுத்தகட்டத்துக்குப் போகும் என்று தெரிந்தே, சில பெண்கள் தவறு செய்கிறார்களே?

தெரிந்தே செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படி ரிஸ்க் எடுப்பவர்கள் அதற்கான விளைவுகளையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும். அழுவதோ, புலம்புவதோ கூடாது என்றார் அசோகன்.

சேலத்தைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அபிராமி இதை வேறொரு கோணத்தில் அணுகுகிறார். அவரிடமும் பேசினோம்.

பெண்கள் குறித்த புரிதல் ஏன் ஆண்களிடத்தில் இல்லை?

''பெண்கள் குறித்த சரியான புரிதல் முதலில் பெண்களிடமே இல்லை. பொள்ளாச்சி சம்பவத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். சில பெண்களே, பாதிக்கப்பட்ட பெண்களின் மீதுதான் குற்றம் சுமத்துகின்றனர். இங்கு பெரும்பாலானவர்களுக்கு தனி மனித ஒழுக்கம் இல்லை. அடுத்தவர் மீது பழிபோடுவதையேக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம்.

பெண்களை இழிவாக நடத்தும் ஆண்கள் அதை எங்கிருந்து கற்கிறார்கள்? சிறு வயதிலிருந்தே பெண்களைப் புரிந்து கொள்வது குறித்து சரியான முறையில் கற்றுக் கொடுக்க என்ன செய்யலாம்?

எல்லோரும் எல்லாவற்றையும் முதலில் குடும்பத்தில் இருந்தே கற்கிறோம். அப்பா, அம்மாவை எப்படி நடத்துகிறார், அண்ணன், தங்கையை எப்படி அழைக்கிறான் என்பது தொடங்கி பள்ளி, கல்லூரி, அலுவலகம் வரை இது நீள்கிறது. குடும்பத்தில் பாலின சமத்துவம் குறித்து நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண்ணியம் மட்டுமே பாலியம் சமத்துவம் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண் என்பவள் பொருள் அல்ல; அவளும் சக மனுஷிதான் என்ற புரிதலை அவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். அடுத்ததாக பள்ளியில் பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' சொல்லிக்கொடுப்பது போல, வளர்ந்தவர்களுக்கு பாலின ஈர்ப்பு, காதல், காமம் குறித்தும் விளக்க வேண்டும்.

பாலியல் உணர்வுகள் எங்கே வன்கொடுமையாக மாறுகின்றன?

பெண்ணின் விருப்பமில்லாமல் அவள் மீது மேற்கொள்ளும் எந்த செயலும் வன்கொடுமையாக மாறுகிறது. பாலியல் தொழிலாளியாக இருந்தாலும்கூட விருப்பமில்லாமல் தொடுவது தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் அபிராமி.

தொடர்ந்து மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம்.

பொள்ளாச்சி சம்பவம் மாதிரியான கொடூரமான பாலியல் வக்கிரங்களை நிகழ்த்துபவர்கள் எப்படி உருவாகிறார்கள்? இவர்கள் என்ன மனநிலையைக் கொண்டவர்கள்?

குடும்பத்தினரிடம் இருந்து உண்மையான அரவணைப்பு, உளவியல் கருத்துப் பரிமாற்றம், பாலியல் குறித்த தொடர்ச்சியான உரையாடல் இல்லாதவர்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். உடனிருக்கும் நண்பர்கள் அளிக்கும் தைரியம் மற்றொரு காரணம். பெண்களை மிரட்டுவதன் மூலம் கிடைக்கும் பணம் அடுத்தடுத்த குற்றங்களுக்கு அடிகோலுகிறது.


மருத்துவர் அசோகன்.

முதல் முறையாகத் தவறு செய்யும்போது அவன் தயக்கத்தோடும் குற்ற உணர்ச்சியோடும் அதை எதிர்கொள்கிறான். அடுத்தடுத்த முறைகளில் அதுவே பழகிவிடுகிறது. தனியாகச் செய்தால் தான் மட்டும் மாட்டிக்கொள்வோமே என்ற எண்ணம், நண்பர்களுடன் குற்றத்தை பங்குபோடச் சொல்கிறது.

அப்பாவிப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களை என்ன செய்யலாம்?

குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை வெட்டவேண்டும், குத்தவேண்டும் என்று கொதிக்காமல், சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். ஏன் இவர்கள் உருவாகிறார்கள், எப்படி இவர்களை மீட்கலாம் என்று ஆராய்வது சரியாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட பெண்களிடம் மற்றவர்கள் (பெற்றோர், உறவினர், சமுதாயம்) எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

சாதாரணமாக இருந்தாலே போதும். நடந்த சம்பவம் குறித்துக் கேட்டு, அவர்களைக் குத்திக் காயப்படுத்தாமல், இயல்பாக நடந்துகொண்டாலே போதும். அடுத்தவர் மீது கல்லெறியும் முன்னால், நம் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படிச் செய்வோமா என்று ஒரு நொடி யோசியுங்கள், போதும் என்றார் அசோகன்.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
குழந்தையை மறந்து விமானநிலையத்தில் விட்டுவிட்டு விமானத்தில் பறந்த பெண்: திரும்பிய விமானம்

Published : 12 Mar 2019 20:53 IST




மூலப்படம் அல்ல. பிரதிநிதித்துவ படம்.

என்ன அவசரமாக இருந்தாலும் லக்கேஜை மறக்கலாம், வேறு எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் பெற்ற குழந்தையையே மறந்து போய் விமானத்தில் பறந்த பெண்மணியைப் பற்றி கேள்விப்பட்டிருப்போமா?

சவுதி அரேபிய விமானம் ஒன்று கடைசி கட்டத்தில் திரும்பி விமான நிலையத்துக்கே வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

சவுதி அரேபியா ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அஜீஜ் விமானநிலையத்திலிருந்து கோலாலம்பூர் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு விட்ட பிறகு அதிலிருந்து பெண் ஒருவர் பதற்றத்தில் என் குழந்தை என் குழந்தை என்று கதறத் தொடங்கினார்.

அதாவது குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டு இவர் மட்டும் விமானத்தில் ஏறியுள்ளார், விமானம் புறப்படும் வரை குழந்தை ஞாபகம் இல்லாமல் இருந்துள்ளார் இந்தத் தாய்!

இதனையடுத்து பைலட் ஏர் டிராபிக் கண்ட்ரோல் ரூமுக்கு தொடர்பு கொண்டு மீண்டும் விமான நிலையம் திரும்பும் அனுமதி கோரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அதில் பைலட், “கடவுள் நம் பக்கம் இருக்கிறார்... நாங்கள் திரும்பி வர முடியுமா என்ன? பயணி ஒருவர் அவர் குழந்தையை மறந்து விட்டுவிட்டு வந்து விட்டார்” என்று கேட்டார்.

உடனே, “உடனே திரும்புங்கள், இது எங்களுக்கு புதிதான ஒன்று” என்று ஆச்சரியமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் கூறியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

விமானம் வானில் எழும்பிய பிறகு தொழில்நுட்ப காரணங்கள் அல்லது பயணியின் ஆரோக்கிய கோளாறு காரணத்திற்காக மட்டுமே மீண்டும் உடனேயே தரையிறங்க அனுமதிக்கப்படும்.

இந்நிலையில் தாயும் சேயும் கடும் பதற்றங்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்ததாக கல்ஃப் நியூஸ் கூறுகிறது.
மாஜி கருவூல அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை லஞ்ச வழக்கில் விழுப்புரம் கோர்ட் அதிரடி

Added : மார் 14, 2019 04:42


விழுப்புரம்:சம்பள பட்டியலுக்கு அனுமதி வழங்க, 2,000 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற உதவி கருவூல அதிகாரி உட்பட இருவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து,

விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளராக, 2004ல் பணிபுரிந்தவர் சுமதி. இவர் தன் துறை சார்ந்த குழந்தைகள் உணவூட்டு செலவின பட்டியல், மாதாந்திர சம்பள பட்டியல், சேமநல நிதி முன்பண பட்டியல் ஆகியவற்றை திண்டிவனம் சார் நிலை கருவூலத்தில், பில்கள் பாஸ் செய்ய வேண்டி சமர்ப்பித்தார். 

அதற்கு லஞ்சம் கேட்டதால், சுமதி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அவர்களது ஆலோசனைப்படி,உதவி கருவூல அலுவலராக பணிபுரிந்த தயாளனிட்ம், 2,000 ரூபாயும், கணக்காளர் தண்டபாணிக்கு, 1,500 ரூபாயும், இளநிலை உதவியாளர் அண்ணாதுரைக்கு, 500 ரூபாயும் வழங்கப்பட்டது.தயாளனின் பணத்தை அங்கிருந்த, வேளாண் பொறியியல் துறை அலுவலக உதவியாளர் ஆறுமுகம் என்பவன் சுமதியிடம் வாங்கினான். அப்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நால்வரையும் கையும், களவுமாக பிடித்து வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை, விழுப்புரம் ஊழல் தடுப்பு வழக்குகள் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கணக்காளர் தண்டபாணி இறந்தார். இவ்வழக்கினை விசாரித்த, நீதிபதி பிரியா நேற்று தீர்ப்பு வழங்கினார்.திண்டிவனம் உதவி கருவூல அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தயாளன், 79; ஓய்வு பெற்ற இளநிலை உதவியாளர் அண்ணா துரை, 62; ஆகிய இருவருக்கும் தலா, ஐந்து ஆண்டுகள் சிறையும், 6000 ரூபாய் அபராதமும் ஆறுமுகத்திற்கு, 49, நான்கு ஆண்டுகள் சிறையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

காதல் திருமணம் செய்தவர்களுக்கு ரேஷன் கார்டு தர புது நிபந்தனை

Added : மார் 14, 2019 03:24

'காதல் திருமணம் செய்தவர்கள், பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து, தங்கள் பெயரை நீக்க, 100 ரூபாய் முத்திரை தாளில், உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும்' என, உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவரின் பெயர், வேறு கார்டில் இருக்கக்கூடாது. காதல் திருமணம் செய்தவர்கள், புதியகார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதற்கு, பெயர் நீக்கல் சான்று அவசியம். அவர்களின் பெயரை கார்டில் இருந்து நீக்க, பெற்றோர் அனுமதிப்பதில்லை.இதனால், பாதிக்கப்படுவோர், சென்னை, உணவு வழங்கல் துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கின்றனர்.
அங்குள்ள அதிகாரிகள், பயனாளியின் பெயரை கார்டில் இருந்து நீக்கும்படி, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புவர். அங்குள்ள அதிகாரி, பதிவேட்டில் பெயரை நீக்கி, தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவார். பின், பெயர் நீக்கல் சான்று வழங்கப்படும்.அதை, புதிய கார்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பித்து, கார்டு பெறலாம். இதற்கு, காலதாமதமாவதால், காதல் திருமணம் செய்வோர், ரேஷன் கார்டு பெற சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருமணத்தின் போது, ஆணுக்கு, 21; பெண்ணுக்கு, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்த தம்பதிக்கு, பெற்றோர் விருப்பத்துடன் அல்லது விருப்பமின்றி, தங்களின் குடும்ப ரேஷன் கார்டில் இருந்து, பெயரை நீக்கிக் கொள்ள உரிமை உள்ளது.காதல் திருமணம் செய்தவர்கள், அவரவர் பெற்றோரின் கார்டில் இருந்து, தங்களது பெயரை நீக்கி கொள்ள, 100 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாளில், 'சட்ட நடவடிக்கைக்கு பொறுப்பாவோம்' என, கையொப்பமிட்ட உறுதி மொழி பத்திரம் அளிக்க வேண்டும்.
இந்த பத்திரம், திருமண பதிவு சான்று ஆகியவற்றை, பெயர் நீக்க கோரும் மனுவுடன், தங்கள் பகுதி உணவு வழங்கல் அதிகாரிகளிடம் தர வேண்டும். இவற்றை செயல்படுத்த, தங்கள் கீழ் பணிபரியும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...