Thursday, March 14, 2019

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: திருநாவுக்கரசுகள் ஏன் உருவாகிறார்கள், ஆபாச வீடியோக்கள் எப்படிப் பரவுகின்றன?- ஓர் உளவியல் அலசல்

Published : 13 Mar 2019 16:47 IST

க.சே.ரமணி பிரபா தேவி

பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார் ஆகியோர் நண்பன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி, அழைத்து வந்து ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டிய சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், பொள்ளாச்சியில் மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, தனியார் கல்லூரிப் பேராசிரியை, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள், சில குடும்பப் பெண்கள் என 60-க்கும் மேற்பட்டோர் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள் சில வெளியான நிலையில், பாலியல் வக்கிரங்களை நிகழ்த்தும் திருநாவுக்கரசு போன்றவர்கள் ஏன் உருவாகிறார்கள், ஆபாச வீடியோக்கள் எப்படிப் பரவுகின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் குறித்து மனநல மருத்துவர் அசோகனிடம் விரிவாகப் பேசினோம்.

பொதுவாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் அவற்றில், தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வது ஏன்?

இதற்கு நார்சிஸம் என்னும் உளவியல் பகுப்பாய்வுக் கோட்பாட்டை உதாரணமாக வைக்கிறேன். நம்மை அடுத்தவர்கள் ரசிக்க வேண்டும், பார்க்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று எல்லோருமே எதிர்பார்க்கிறோம். அந்த மனநிலை அளவோடு இருக்கும் பட்சத்தில் அது உத்வேகத்தை அளிக்கும். ஆனால் அதிகமாகும்போது பிரச்சினை ஆரம்பிக்கிறது. பொதுவாகவே பெரும்பாலான மனிதர்களுக்கு நிஜ ஆளுமையில் பிரச்சினை இருக்கிறது. அதற்கு ஊடகங்களே பாதுகாப்பான முகமூடிகளாக அமைகின்றன. அவற்றின் மூலம் தங்களுக்குப் பிடித்த வகையில் தற்காலிகமாக தன்னை உருமாற்றிக் கொள்கின்றனர்.

புரொஃபைல் போட்டோக்கள், குடும்ப புகைப்படங்கள், சுற்றுலா படங்கள் சரி.. அந்தரங்க, நிர்வாணப் படங்களைப் பொதுவெளியில் நண்பர்களுக்கு அனுப்புவது என்ன மாதிரியான மனநிலை?

புனிதமாகவும், தூய்மையாகவும் இருவருக்கு மட்டுமே இடையில் இருந்த அந்தரங்கம் இன்று ரசனையாக மாறிவிட்டது. அந்தரங்கத்தை ரசனையாக்கி அடுத்தவர்களுக்கு அனுப்பும் வக்கிர உணர்வு மெல்ல ஏற்பட்டு வருகிறது. எதிர் தரப்பினரின் தொடர்ச்சியான மூளைச்சலவையும் இதற்குக் காரணம்.

பெண்களிடம் பேச்சின் மூலமாகவே ரகசியமாகத் தூண்டுவது முதல் படி. 'நாம்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறோமே, பின் என்ன தயக்கம்?' என்று நெருக்கத்துடன் பேசுவது,' நான் முதலில் என்னுடைய நிர்வாணப் படத்தை அனுப்புகிறேன், அடுத்து நீ அனுப்பு!' என்று கூறி தயக்கத்தை உடைப்பது ஆகியவை இதற்கான உதாரணங்கள். பெண்களின் அசட்டு தைரியமும் அதீத நம்பிக்கையும் இதற்கு அடுத்த காரணம்.

அப்படியென்றால் சமூக வலைதளங்களில் யாரையுமே நம்பக் கூடாது என்றுசொல்கிறீர்களா?

யாரையும் நம்ப வேண்டாம் என்றில்லை. எடுத்தவுடனே நம்பாதீர்கள் என்கிறேன். பார்த்தவுடன் இவர் இப்படித்தான் என்று அபிப்ராயத்தை வளர்க்க வேண்டாம். யாரையும் நேரில் பார்க்காமல் நம்பிக்கை வைக்காதீர்கள். ஆதார் அட்டை, நெட் பேங்கிங் தகவல்கள் ஆகியவற்றைப் பகிரும் முன் யோசிப்பீர்கள் அல்லவா, அதை அந்தரங்கத்தைப் பகிரும் போதும் செய்யுங்கள்.

உதாரணத்துக்கு நண்பரின் பார்ட்டிக்கு அழைப்பு வருகிறதா? முதலில் போக வேண்டுமா என்று யோசியுங்கள், திரும்பி வரும்போது போக்குவரத்து வசதி இருக்குமா, இல்லையென்றால் நண்பர்தான் கொண்டுவந்து விடுவாரா? அங்கேயே தங்கவேண்டி வருமா என்று முன்கூட்டியே யோசித்து முடிவெடுங்கள். பாலியல் உணர்வுகளைக் காதலாக நினைக்காதீர்கள்.

ஏன் தொடர்ந்து பெண்கள் குறித்த ஆபாசங்களே (புகைப்படங்கள், வீடியோக்கள்) அதிகம் பரப்பப்படுகின்றன?

பயாலஜிக்கலாக ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக வலிமை கொண்டவர்கள். இதனால் அவர்களை ஆண்கள் அடக்கி ஆள நினைப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் கருவிதான் ஆபாசங்களைப் பரப்புவது.

இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். இன்று குடும்பங்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசுவதே இல்லை. எல்லோருக்கும் தனித்தனியாக செல்போன்கள், தனித்தனி டிவிகள். உணர்ச்சிகள் நீர்த்து விட்டன. வக்கிர உணர்வு சாதாரணமாகிவிட்டது. அந்தக் காலத்தில் கெட்டவனாக இருக்கக் கஷ்டப்பட்டார்கள். குடும்பம், உறவினர்களுக்குத் தெரியாமல் சிகரெட் பிடிக்க, ஆபாசப் பத்திரிகைகளைப் படிக்க அவ்வளவு சிரமப்பட்டனர். ஆனால் இப்போது நல்லவனாக இருக்கத்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

குழந்தைக்குக் கூட, விரல் நுனியில் கிடைத்துவிடும் இணையம் ஆபாசத்துக்கும் கடைவிரித்து விடுகிறது. இதனால் ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் எளிதில் பார்க்கப்படுகின்றன, அதிகம் பரப்பப்படுகின்றன.

பொதுவாக ஆண்கள் எல்லை மீறிப் பேசும்போது பெண்களின் உள்ளுணர்வே அதைக் காட்டிக் கொடுத்துவிடும் என்று கூறப்படுகிறதே? அவர்கள் ஏன் நோ சொல்ல யோசிக்கிறார்கள்?

இது எல்லோருக்கும் பொருந்தாது. அனுபவங்களும் அறிவுமே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எப்போதும் முன்னெச்சரிக்கையுடனே சில பெண்கள் இருக்கலாம். ஆனால் அனைத்துப் பெண்களுமே அப்படியில்லை. சம்பவங்கள் தொடர்ந்து வரிசையாக நடக்கும்போது அவர்களுக்கு யோசிக்க நேரம் இருக்காது. யோசிக்கவும் தோன்றாது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார், திருநாவுக்கரசு.

இந்தப் பழக்கம் அடுத்தகட்டத்துக்குப் போகும் என்று தெரிந்தே, சில பெண்கள் தவறு செய்கிறார்களே?

தெரிந்தே செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படி ரிஸ்க் எடுப்பவர்கள் அதற்கான விளைவுகளையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும். அழுவதோ, புலம்புவதோ கூடாது என்றார் அசோகன்.

சேலத்தைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அபிராமி இதை வேறொரு கோணத்தில் அணுகுகிறார். அவரிடமும் பேசினோம்.

பெண்கள் குறித்த புரிதல் ஏன் ஆண்களிடத்தில் இல்லை?

''பெண்கள் குறித்த சரியான புரிதல் முதலில் பெண்களிடமே இல்லை. பொள்ளாச்சி சம்பவத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். சில பெண்களே, பாதிக்கப்பட்ட பெண்களின் மீதுதான் குற்றம் சுமத்துகின்றனர். இங்கு பெரும்பாலானவர்களுக்கு தனி மனித ஒழுக்கம் இல்லை. அடுத்தவர் மீது பழிபோடுவதையேக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம்.

பெண்களை இழிவாக நடத்தும் ஆண்கள் அதை எங்கிருந்து கற்கிறார்கள்? சிறு வயதிலிருந்தே பெண்களைப் புரிந்து கொள்வது குறித்து சரியான முறையில் கற்றுக் கொடுக்க என்ன செய்யலாம்?

எல்லோரும் எல்லாவற்றையும் முதலில் குடும்பத்தில் இருந்தே கற்கிறோம். அப்பா, அம்மாவை எப்படி நடத்துகிறார், அண்ணன், தங்கையை எப்படி அழைக்கிறான் என்பது தொடங்கி பள்ளி, கல்லூரி, அலுவலகம் வரை இது நீள்கிறது. குடும்பத்தில் பாலின சமத்துவம் குறித்து நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். பெண்ணியம் மட்டுமே பாலியம் சமத்துவம் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண் என்பவள் பொருள் அல்ல; அவளும் சக மனுஷிதான் என்ற புரிதலை அவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். அடுத்ததாக பள்ளியில் பாலியல் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' சொல்லிக்கொடுப்பது போல, வளர்ந்தவர்களுக்கு பாலின ஈர்ப்பு, காதல், காமம் குறித்தும் விளக்க வேண்டும்.

பாலியல் உணர்வுகள் எங்கே வன்கொடுமையாக மாறுகின்றன?

பெண்ணின் விருப்பமில்லாமல் அவள் மீது மேற்கொள்ளும் எந்த செயலும் வன்கொடுமையாக மாறுகிறது. பாலியல் தொழிலாளியாக இருந்தாலும்கூட விருப்பமில்லாமல் தொடுவது தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் அபிராமி.

தொடர்ந்து மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம்.

பொள்ளாச்சி சம்பவம் மாதிரியான கொடூரமான பாலியல் வக்கிரங்களை நிகழ்த்துபவர்கள் எப்படி உருவாகிறார்கள்? இவர்கள் என்ன மனநிலையைக் கொண்டவர்கள்?

குடும்பத்தினரிடம் இருந்து உண்மையான அரவணைப்பு, உளவியல் கருத்துப் பரிமாற்றம், பாலியல் குறித்த தொடர்ச்சியான உரையாடல் இல்லாதவர்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். உடனிருக்கும் நண்பர்கள் அளிக்கும் தைரியம் மற்றொரு காரணம். பெண்களை மிரட்டுவதன் மூலம் கிடைக்கும் பணம் அடுத்தடுத்த குற்றங்களுக்கு அடிகோலுகிறது.


மருத்துவர் அசோகன்.

முதல் முறையாகத் தவறு செய்யும்போது அவன் தயக்கத்தோடும் குற்ற உணர்ச்சியோடும் அதை எதிர்கொள்கிறான். அடுத்தடுத்த முறைகளில் அதுவே பழகிவிடுகிறது. தனியாகச் செய்தால் தான் மட்டும் மாட்டிக்கொள்வோமே என்ற எண்ணம், நண்பர்களுடன் குற்றத்தை பங்குபோடச் சொல்கிறது.

அப்பாவிப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குபவர்களை என்ன செய்யலாம்?

குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை வெட்டவேண்டும், குத்தவேண்டும் என்று கொதிக்காமல், சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். ஏன் இவர்கள் உருவாகிறார்கள், எப்படி இவர்களை மீட்கலாம் என்று ஆராய்வது சரியாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட பெண்களிடம் மற்றவர்கள் (பெற்றோர், உறவினர், சமுதாயம்) எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

சாதாரணமாக இருந்தாலே போதும். நடந்த சம்பவம் குறித்துக் கேட்டு, அவர்களைக் குத்திக் காயப்படுத்தாமல், இயல்பாக நடந்துகொண்டாலே போதும். அடுத்தவர் மீது கல்லெறியும் முன்னால், நம் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படிச் செய்வோமா என்று ஒரு நொடி யோசியுங்கள், போதும் என்றார் அசோகன்.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
குழந்தையை மறந்து விமானநிலையத்தில் விட்டுவிட்டு விமானத்தில் பறந்த பெண்: திரும்பிய விமானம்

Published : 12 Mar 2019 20:53 IST




மூலப்படம் அல்ல. பிரதிநிதித்துவ படம்.

என்ன அவசரமாக இருந்தாலும் லக்கேஜை மறக்கலாம், வேறு எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் பெற்ற குழந்தையையே மறந்து போய் விமானத்தில் பறந்த பெண்மணியைப் பற்றி கேள்விப்பட்டிருப்போமா?

சவுதி அரேபிய விமானம் ஒன்று கடைசி கட்டத்தில் திரும்பி விமான நிலையத்துக்கே வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

சவுதி அரேபியா ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அஜீஜ் விமானநிலையத்திலிருந்து கோலாலம்பூர் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு விட்ட பிறகு அதிலிருந்து பெண் ஒருவர் பதற்றத்தில் என் குழந்தை என் குழந்தை என்று கதறத் தொடங்கினார்.

அதாவது குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டு இவர் மட்டும் விமானத்தில் ஏறியுள்ளார், விமானம் புறப்படும் வரை குழந்தை ஞாபகம் இல்லாமல் இருந்துள்ளார் இந்தத் தாய்!

இதனையடுத்து பைலட் ஏர் டிராபிக் கண்ட்ரோல் ரூமுக்கு தொடர்பு கொண்டு மீண்டும் விமான நிலையம் திரும்பும் அனுமதி கோரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அதில் பைலட், “கடவுள் நம் பக்கம் இருக்கிறார்... நாங்கள் திரும்பி வர முடியுமா என்ன? பயணி ஒருவர் அவர் குழந்தையை மறந்து விட்டுவிட்டு வந்து விட்டார்” என்று கேட்டார்.

உடனே, “உடனே திரும்புங்கள், இது எங்களுக்கு புதிதான ஒன்று” என்று ஆச்சரியமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் கூறியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

விமானம் வானில் எழும்பிய பிறகு தொழில்நுட்ப காரணங்கள் அல்லது பயணியின் ஆரோக்கிய கோளாறு காரணத்திற்காக மட்டுமே மீண்டும் உடனேயே தரையிறங்க அனுமதிக்கப்படும்.

இந்நிலையில் தாயும் சேயும் கடும் பதற்றங்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்ததாக கல்ஃப் நியூஸ் கூறுகிறது.
மாஜி கருவூல அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை லஞ்ச வழக்கில் விழுப்புரம் கோர்ட் அதிரடி

Added : மார் 14, 2019 04:42


விழுப்புரம்:சம்பள பட்டியலுக்கு அனுமதி வழங்க, 2,000 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற உதவி கருவூல அதிகாரி உட்பட இருவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து,

விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காணிப்பாளராக, 2004ல் பணிபுரிந்தவர் சுமதி. இவர் தன் துறை சார்ந்த குழந்தைகள் உணவூட்டு செலவின பட்டியல், மாதாந்திர சம்பள பட்டியல், சேமநல நிதி முன்பண பட்டியல் ஆகியவற்றை திண்டிவனம் சார் நிலை கருவூலத்தில், பில்கள் பாஸ் செய்ய வேண்டி சமர்ப்பித்தார். 

அதற்கு லஞ்சம் கேட்டதால், சுமதி, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அவர்களது ஆலோசனைப்படி,உதவி கருவூல அலுவலராக பணிபுரிந்த தயாளனிட்ம், 2,000 ரூபாயும், கணக்காளர் தண்டபாணிக்கு, 1,500 ரூபாயும், இளநிலை உதவியாளர் அண்ணாதுரைக்கு, 500 ரூபாயும் வழங்கப்பட்டது.தயாளனின் பணத்தை அங்கிருந்த, வேளாண் பொறியியல் துறை அலுவலக உதவியாளர் ஆறுமுகம் என்பவன் சுமதியிடம் வாங்கினான். அப்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நால்வரையும் கையும், களவுமாக பிடித்து வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை, விழுப்புரம் ஊழல் தடுப்பு வழக்குகள் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கணக்காளர் தண்டபாணி இறந்தார். இவ்வழக்கினை விசாரித்த, நீதிபதி பிரியா நேற்று தீர்ப்பு வழங்கினார்.திண்டிவனம் உதவி கருவூல அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தயாளன், 79; ஓய்வு பெற்ற இளநிலை உதவியாளர் அண்ணா துரை, 62; ஆகிய இருவருக்கும் தலா, ஐந்து ஆண்டுகள் சிறையும், 6000 ரூபாய் அபராதமும் ஆறுமுகத்திற்கு, 49, நான்கு ஆண்டுகள் சிறையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

காதல் திருமணம் செய்தவர்களுக்கு ரேஷன் கார்டு தர புது நிபந்தனை

Added : மார் 14, 2019 03:24

'காதல் திருமணம் செய்தவர்கள், பெற்றோரின் ரேஷன் கார்டில் இருந்து, தங்கள் பெயரை நீக்க, 100 ரூபாய் முத்திரை தாளில், உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும்' என, உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவரின் பெயர், வேறு கார்டில் இருக்கக்கூடாது. காதல் திருமணம் செய்தவர்கள், புதியகார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதற்கு, பெயர் நீக்கல் சான்று அவசியம். அவர்களின் பெயரை கார்டில் இருந்து நீக்க, பெற்றோர் அனுமதிப்பதில்லை.இதனால், பாதிக்கப்படுவோர், சென்னை, உணவு வழங்கல் துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கின்றனர்.
அங்குள்ள அதிகாரிகள், பயனாளியின் பெயரை கார்டில் இருந்து நீக்கும்படி, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புவர். அங்குள்ள அதிகாரி, பதிவேட்டில் பெயரை நீக்கி, தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவார். பின், பெயர் நீக்கல் சான்று வழங்கப்படும்.அதை, புதிய கார்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பித்து, கார்டு பெறலாம். இதற்கு, காலதாமதமாவதால், காதல் திருமணம் செய்வோர், ரேஷன் கார்டு பெற சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருமணத்தின் போது, ஆணுக்கு, 21; பெண்ணுக்கு, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்த தம்பதிக்கு, பெற்றோர் விருப்பத்துடன் அல்லது விருப்பமின்றி, தங்களின் குடும்ப ரேஷன் கார்டில் இருந்து, பெயரை நீக்கிக் கொள்ள உரிமை உள்ளது.காதல் திருமணம் செய்தவர்கள், அவரவர் பெற்றோரின் கார்டில் இருந்து, தங்களது பெயரை நீக்கி கொள்ள, 100 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாளில், 'சட்ட நடவடிக்கைக்கு பொறுப்பாவோம்' என, கையொப்பமிட்ட உறுதி மொழி பத்திரம் அளிக்க வேண்டும்.
இந்த பத்திரம், திருமண பதிவு சான்று ஆகியவற்றை, பெயர் நீக்க கோரும் மனுவுடன், தங்கள் பகுதி உணவு வழங்கல் அதிகாரிகளிடம் தர வேண்டும். இவற்றை செயல்படுத்த, தங்கள் கீழ் பணிபரியும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
தலையங்கம்

விசுவரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்



தமிழ்நாடு முழுவதும் இப்போது பொள்ளாச்சியில் ஒரு கல்லூரி மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடிய பாலியல் கொடுமை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது.

மார்ச் 14 2019, 04:00

பொள்ளாச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த 19 வயது மாணவி ஒருவர் பேஸ்புக்கில் சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த் என்ற சிவில் என்ஜினீயருடன் நட்பு கொண்டு இருக்கிறார். ஒருநாள் கல்லூரி மதிய இடைவேளையின்போது அந்த மாணவிக்கு, சபரிராஜன் போன் செய்து அருகில் உள்ள ஊஞ்சலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். தன் பேஸ்புக் நண்பர்தானே அழைக்கிறார் என்று நம்பி, அந்த பெண் ஊஞ்சலாம்பட்டிக்கு சென்றிருக்கிறார். அங்கு காரில் தன் நண்பர்கள் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோருடன் நின்று கொண்டிருந்த சபரிராஜன், அந்த பெண்ணை காருக்குள் இழுத்துப்போட்டு சென்றார். சமூகவலைதளங்களில் வெளிவந்த காட்சிகளைப் பார்த்தால், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்’ என்று பாரதியார் பாடிய பாடலை கோபத்தின் உச்சிக்குச்சென்று கதற வைக்கிறது. ‘டேய் உன்னை நம்பித்தானே வந்தேன் என்று கூறுவதில் இருந்து .... ஒரு பெண் கதறி அழுதுகொண்டு கூறும் வார்த்தைகளெல்லாம் இதயத்தை கசக்கிப்பிழிகிறது.

இதில் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அந்த 4 பேரிடமும் உள்ள செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து பார்த்தபோது, அதில் ஏராளமான பெண்களிடம் இதுபோல மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ள காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 50–க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்களை பேஸ்புக் மூலம் தங்கள் காதல் வலையில் விழவைத்து அச்சுறுத்தி பணமும் பறித்து, கற்பையும் சூறையாடியதாக தெரிகிறது. கல்லூரி மாணவி சம்பவத்தில் 4 பேர் கைதுக்குப்பிறகு, மேலும் 5 பேர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை புகாரை வாபஸ் வாங்கு என்று மிரட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவாக இருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளில் அந்த பகுதியில் இளம் பெண்கள் தற்கொலை செய்த விவகாரங்களை எல்லாம் மீண்டும் மறுவிசாரணைக்கு எடுத்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. குற்றவாளிகள் 4 பேர் மீதும் இப்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. முதலில் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்பு நேற்று முன்தினம் பெண் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. ஒருசில மணி நேரங்களில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இது நல்ல முடிவு. சி.பி.ஐ. உடனடியாக இந்த வழக்கை எடுத்து தன் எல்லையை விரிவாக்கி ஆழமாக விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் இன்னும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். அதையும் விசாரிக்க வேண்டும். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் மட்டும் நடந்துள்ளதா?, தமிழ்நாட்டில் வேறு எங்கேயாவதும் இதுபோல நடந்துள்ளதா? என்று விசாரிக்க வேண்டும். மற்ற சில வழக்குகளைப்போல இல்லாமல், இந்த வேதனையான செயலைத் தொடர்ந்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல், கூடுதல் அதிகாரிகளை சி.பி.ஐ. நியமித்து விரைவில் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக புலன் விசாரணை செய்து கொடூர குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரவேண்டும்.
Chennai: Confusion over engineering counselling remains

DECCAN CHRONICLE.

PublishedMar 14, 2019, 2:18 am IST

The TNEA was fully prepared to hold the online counselling for B.E., B.Tech. courses around this time last year.

CHENNAI: Even though plus-2 students would finish their exams in another week, the work for online engineering counselling is yet to begin as the confusion over annual engineering counselling remains unresolved.

Anna University Vice-Chancellor M.K. Surappa has resigned from Tamil Nadu Engineering Admissions (TNEA) committee as chairman following the differences over reconstitution of the committee by the higher education department.

His resignation put the participation of Anna University in the counselling process under the cloud as sources indicated that the largest technical university may not conduct the counselling this year.

The TNEA was fully prepared to hold the online counselling for B.E., B.Tech. courses around this time last year.

Sources said the DOTE (Directorate of Technical Education) commissioner may head the counselling process this year. But, so far no official announcement has been made in this regard.

Speaking to reporters after the inauguration of annual sports day at Anna University on Wednesday, Vice-Chancellor M.K. Surappa said only higher education department can decide about whether Anna University will conduct engineering counselling this year.

"Last year, the university conducted first ever online counselling without any major technical glitch. But, I resigned from TNEA following the higher education department's interference," he said.

TNEA committee was constituted in November 2017 for a period of three years and it was reconstituted after completing just one year. In the new committee, the DOTE commissioner was appointed as co-chairman of TNEA.

Professors said the state government should resolve the issue for conducting the online counselling smoothly. "If there is any hiccup in the online counselling, thousands of students and their parents will be affected," they warned.

For the past 22 years, Anna University has been conducting engineering admissions through single window counselling in an efficient manner that was appreciated by students, parents and academics.
Serve public after studies: Madras HC to doctors

DECCAN CHRONICLE.

PublishedMar 14, 2019, 2:36 am IST

The situation results in denial of social justice and equal treatment.


Madras high court

Chennai: Madras high court has held that doctors, who acquired specialty degrees and qualifications, at the cost of public and by providing certain undertakings, are bound to serve the public.

Dismissing a petition from Dr. Silamban, which sought a direction to the Madras Medical College to accept his resignation, Justice S.M. Subramaniam gave the above ruling.

The judge said medical profession being commercialized by day, doctors are also neglecting the responsibility to provide quality medical treatment. Medical profession is now commercialized to the larger extent, and privatization is inevitable.

"This court is of an opinion that no one is questioning the decision of a doctor to develop their private practice. However, the doctors have to take a decision before entering into the public services and before undergoing the specialty courses at the cost of the tax payers' money.

When the doctors had undergone the specialty courses or PG courses, at the cost of the taxpayers' money and by providing an undertaking and after gaining experience from GHs they are bound to serve for the public and they have to show devotion to their duty as medical professionals", the judge added.

The judge said contrarily if the doctors were allowed to escape from public duty, then "this court is of an undoubted opinion that, we are not adhering to the constitutional principles and ethos. These doctors must be made to work in the public hospitals in view of the fact that they had not only given undertaking at the time of undergoing the specialty courses and PG courses, at the cost of the public money and gained experience from the government hospitals.

The judge said apart from the corrupt practices in the government hospitals, it was painful to pen down that the doctors themselves were irregular in attending duty, resulting death of patients, who all were not in a position to afford quality treatment from corporate hospitals. The situation results in denial of social justice and equal treatment.

Economic condition of a citizen cannot be a ground for denial of quality treatment.

Thus, the government was duty bound to ensure cleanliness, availability of doctors including special treatment, paramedical staff, supporting staff, which all were imminent and a constitutional mandate, the judge added.

The judge said frequent complaints were noticed across the state that the government doctors were developing their private practice by neglecting the public duty. It was a misconduct both under the government service rules and under the Medical Council of India regulations.

The judge directed the authorities to initiate all appropriate actions against the petitioner under the TN Civil Services (Discipline and appeal) Rules.

Authorities were directed to lodge a complaint with the MCI regarding the misconduct enabling the MCI to institute appropriate proceedings. Health and family welfare secretary was directed to constitute a "monitoring committee" to supervise the attendance and assess the performance of government doctors as well as regarding the maintenance of government medical hospitals as per the prescribed standards.

The authorities were directed to recover adequate compensation from the government doctors, who all were violating the terms of services with reference to the expenditure met out from the public money for acquiring PG degrees and specialty degrees, the judge added.

NEWS TODAY 21.12.2025