Monday, September 16, 2019

Eight dead, 37 missing as boat capsizes in flooded Godavari
As many as 27 rescued from the vessel that had no permission to operate 


16/09/2019 , Rajulapudi Srinivas , Tharun Boda, Rajamahendravaram 



Going all-out: Rescue operation going on in Godavari. Special ArrangementSpecial Arrangement


In a major tragedy in Andhra Pradesh, a private boat carrying tourists to Papikondalu capsized in Godavari River near Katchuluru village of East Godavari district on Sunday, leaving at least eight dead and over 37 missing. As many as 27 were rescued.

The accident occurred post-noon when the boat ‘Vashista’ headed to the tourist destination against an inflow of about five lakh cusecs of floodwater in the Godavari, which has been in spate for the past several days. The boat, which had no permission to operate from the government, began the trip from Singanapalli Revu in Devipatnam mandal.

Alert locals of Katchuluru village rescued about 14 persons. Most of the tourists who survived were wearing life jackets, locals said.

Admitted to hospital

The survivors were initially admitted to the Rampachodavaram Area Hospital and they quickly recovered.

East Godavari Superintendent of Police Adnan Nayeem Asmi said there were 72 persons on board, including about eight boat crew members, at the time of the accident. Eight bodies have been retrieved.

However, the number of persons on board and the number of victims couldn’t be confirmed as different government agencies, including the district administration and the Revenue Department, were giving different figures.

While some of the rescue teams have been withdrawn from the operation, National Disaster Response Force teams will continue the search for survivors through the night.

An Oil and Natural Gas Corporation (ONGC) chopper has also been pressed into service. More rescue teams will be engaged early on Monday.

Navy deploys aircraft

The Navy has deployed a Dornier aircraft to assist the rescue operations.

Two Naval helicopters would also be deployed from INS Dega at daybreak on Monday, according to an official release.

Deep divers team

A specialised deep divers team with ‘Side Scan Sonar’ equipment from Uttarakhand will join the rescue operations on Monday.

A majority of the tourists were from Hyderabad, Warangal and Visakhapatnam cities in Telangana.

The State government has announced an exgratia of ₹10 lakh each to the kin of the deceased.

Boat services suspended

The government ordered the immediate suspension of boat services in the region.

Chief Minister Y.S. Jagan Mohan Reddy, who enquired about the accident, directed the officials to carry out the rescue operations on a war footing.

President Ramnath Kovind tweeted that his prayers were with the bereaved families.

Prime Minister Narendra Modi said in a message on Twitter that he was extremely pained by the tragedy.

Mr. Modi said his thoughts were with the bereaved families and that rescue operations were under way at the site of the tragedy. He also asked available Ministers in the district to visit the spot and supervise the rescue and search operations.

Andhra Pradesh Governor Biswa Bhusan Harichandan offered his condolences to members of the bereaved families.
Airlines may keep Jet slots till March-end
Foreign traffic rights to be retained 


16/09/2019 , Jagriti Chandra, NEW DELHI 



 

Potential buyers of Jet Airways will weigh airport slots and foreign rights.

The Centre is likely to allow domestic carriers to keep Jet Airways’s slots at domestic airports and its foreign traffic rights until the end of March, or during the winter schedule, a senior official of the Civil Aviation Ministry said.

“The airlines said that a temporary allocation of Jet Airways’s slots and traffic rights for three months put them at a disadvantage as they are left with a shorter booking period as compared to foreign carriers and requested that these be given to them until the end of the winter schedule. We will consider their request,” P.S. Kharola, Secretary, Civil Aviation Ministry, told The Hindu.

The airlines raised the issue at a meeting with the Ministry last week.

The winter schedule will be in force from the last Sunday of October to the last Saturday of March. The government’s decision will help the airlines plan their flights for the winter season before they file their schedule with the Director General of Civil Aviation.

The government has not allotted the airport slots and foreign traffic rights of Jet Airways to other airlines permanently as these could be prime assets for a potential buyer of Jet Airways.
Bharathiar University may get V-C by month-end
As many as 147 persons have applied for the post

 
16/09/2019 , Special Correspondent, CHENNAI 




Bharathiar Univeristy in Coimbatore is likely to get a Vice-Chancellor by this month-end.

On Wednesday, the list of applicants was uploaded on the University website. As many as 147 persons have applied for the post of Vice-Chancellor of Bharathiar University.

The list, however, has only the names of the applicants with the name of the city and pincode.

It does not include any details of the candidate’s qualifications, including their educational background.

A former professor, who has been on V-C search panels, said such opacity could lead to complaints of lack of transparency in the selection process.

“Some universities that had uploaded the list of applicants had included their qualifications. Unless the whole process is transparent, allegations that vested interests have crept in will arise,” he said.

Search committe

The university has been functioning without a V-C for over a year. The search committee was constituted only in July and within a few days one of the committee members, the government nominee, K. Ganesan, resigned.

The government then appointed Sheela Priya, former State chief information commissioner, to the committee on August 1.

The other two members of the committee are former V-C of Tamil University C. Subramaniam, and former V-C of the University of Madras S.P. Thyagarajan.

A member of the search panel said the list was only a preliminary one. “This is just an intimation put up on the website as to how many people have applied for the post. There is no evaluation of the candidates. The procedure is required as per the new rules framed by the State some time ago,” he said.

“A new statute mandates that the whole procedure should not exceed a maximum period of three months after the date of advertisement,” the member said.

By this month-end, the committee would submit the recommendations to the Governor / Chancellor after which the V-C would be appointed.

Saturday, September 14, 2019

நவராத்திரியை முன்னிட்டு நவசக்தி ஆலயங்களுக்கு சுற்றுலா

By DIN | Published on : 12th September 2019 03:00 AM |


 நவராத்திரியை முன்னிட்டு நவசக்தி ஆலயங்களுக்கு, ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் உள்ள நவசக்தி ஆலயங்களுக்கு, ஒரு நாள் சிறப்பு சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 


நவராத்திரி ஒன்பது நாள்கள் மற்றும் விசேஷ நாள்களுக்கும் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் ( திருவல்லிக்கேணி, டி1 காவல் நிலையம் அருகில்) இருந்து காலை 6 மணிக்கு தொடங்கும் பயணம், மீண்டும் இரவு 7 மணிக்கு நிறைவடையும். இந்த ஆன்மிக சுற்றுலாவில், காளிகாம்பாள் கோயில் (பிராட்வே), தேவி வடிவுடை அம்மன் கோயில் ( திருவொற்றியூர்) திருவுடையம்மன் கோயில் (மேலூர்), ஆனந்த வல்லியம்மன் கோயில் (பஞ்சேஷ்டி), ஆனந்த வல்லியம்மன் கோயில் (நட்டம்) தேவி செங்கால அம்மன் கோயில் (சொம்புலிவரம்), கொடியிடை அம்மன் மற்றும் வைஷ்ணவ தேவி கோயில் (திருமுல்லைவாயில்), தேவி தையல் நாயகி கோயில் (பூந்தமல்லி), தேவி கருமாரி அம்மன் கோயில் (திருவேற்காடு), காமாட்சி அம்மன்கோயில் (மாங்காடு) அழைத்து
செல்லப்படுவர். இதற்கான கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படுகிறது. இப்பயணத்துக்கு குளிர் சாதனப் பேருந்து இயக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை, சென்னை -2 என்னும் முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரிலோ, 044-2533 3333, 2533 3444, 2533 3857, 2533 3850-54, 180042531111(கட்டணமில்லா தொலைபேசி எண்) என்னும் தொலைபேசி எண்களையோ தொடர்பு கொள்ளலாம். மேலும் www.ttdconline.com, www.mttdonline.com ஆகிய இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எங்கே தொலைந்தது மனிதம்?

By சுரேந்தர் ரவி  |   Published on : 13th September 2019 01:45 AM  

ஓர் அடர்ந்த காடு. அங்கு ஒரு குருவி, பெருமுயற்சியுடன் நீண்ட நாள்களாகக் கட்டிய தனது கூட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது. அந்தக் காட்டில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் தீ பிடிப்பது வழக்கம். அதை அந்தக் குருவி நன்கு அறிந்திருந்தது. ஒருவேளை அது வசிக்கும் இடத்தில் தீ பிடித்தால், அதிலிருந்து தப்பிக்கும் வழிகள் அனைத்தும் அந்தக் குருவிக்குத் தெரிந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுத் தீயினால், அந்தக் குருவிக்கும், அதன் கூட்டுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

ஆனால், இந்த ஆண்டு குருவிக்கு அதிர்ஷ்டக் காற்று வீசவில்லை. வழக்கமான தீ விபத்தாக இல்லாமல், மிகப் பெரிய அளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குருவியின் கூடு சிக்கிக் கொண்டது. எனினும், அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த அந்தக் குருவி தப்பித்துவிட்டது. ஆனால், அஸ்ஸாமில் வாழ்ந்து வந்த 19 லட்சம் குருவிகளால் தப்ப முடியவில்லை.
அமேசானில் பற்றிய தீ, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) என்ற பெயரில் அஸ்ஸாமிலும் பரவியது. இரண்டு இடங்களிலும் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள அரசுகள், கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி அரசியல் செய்து வருவதுதான் கவலையை ஏற்படுத்துகிறது.
இந்தப் பிரச்னையில் அரசியலை விட்டுவிடுவோம். ஏனெனில், பெரும்பாலான பிரச்னைகளுக்கு அரசியல் கண்ணோட்டத்தில் தீர்வு கிடைக்காது என்பது நிதர்சனம். தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான அடிப்படை ஆணிவேரைத் தேடினால், மனிதநேயமும் சகிப்பின்மையும் காணாமல் போன இடத்தில் அது புதைந்து கிடக்கும்.
எங்கே தொலைந்தது நம்முள் இருந்த மனிதநேயம்? 


குடும்பங்களிடையேயும், மக்களிடையேயும் காணப்பட்ட ஒற்றுமை, வரலாற்றின் எந்தப் புள்ளியில் காணாமல் போனது? யாதும் ஊரே யாவரும் கேளிர், உலகமே ஒரு குடும்பம் போன்றவையெல்லாம் ஏடுகளுக்குள்ளேயே சிறைபட்டுவிட்டனவா? அவை மக்களின் மனதில் குடியேறவில்லையா? இரண்டு உலகப் போர்களையும், பாகிஸ்தான் பிரிவினையின்போது எழுதப்பட்ட ரத்த சரித்திரத்தையும் கண்டபிறகும்கூட, மனிதம் இன்னும் உயிர்த்தெழவில்லையா?
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், உள்ளூர் கலாசாரத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள்; இங்குள்ள வளங்களையும், வேலைவாய்ப்புகளையும் பறித்துக் கொள்கிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள். ஆங்கிலத்தால் தமிழ் அழிந்துவிடும் என்று கூறுவதைப் போன்ற அறியாமை அல்லவா இந்தக் குற்றச்சாட்டுகள்? நம் மொழியும், கலாசாரமும் வெளிநாட்டினரிடம் தோற்கும் அளவுக்கு வலிமை குன்றியதா என்ன?


வெளிநாட்டினரும் போற்றிப் புகழ்ந்த கலாசாரம் அல்லவா நம்முடையது? அப்படியிருக்கையில், அவர்களை வாழ வைத்து நாம் வாழ வேண்டாமா? வளங்கள் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்தப் புள்ளிக்குள்தான், சுயநலம் என்னும் ஆணிவேரிலிருந்து முளைத்த சகிப்பின்மை பெருவிருட்சமாகி நிற்கிறது.
1901-ஆம் ஆண்டில் 23.84 கோடி மக்களுக்கும், 1951-ஆம் ஆண்டில் 36.11 கோடி மக்களுக்கும், 2011-இல் 121 கோடி மக்களுக்கும் அடைக்கலம் அளித்து வாழ வைத்தது நம் நாடு. இன்று சுமார் 135 கோடி மக்களை வாழ வைத்து வருகிறது. மேலும், இலங்கையில் இருந்து வந்தவர்களையும், மியான்மரிலிருந்து வங்கதேசம் வழியாக வந்த ரோஹிங்கயா அகதிகளையும்கூட நாம் வாழவைத்துத்தான் வருகிறோம். நாளை நாட்டின் மக்கள்தொகை 150 கோடியாக உயர்ந்தாலும், அவர்களைக் காக்கும் அளவுக்கான வளங்களைக் கொண்டதுதான் நமது நாடு.
ஏற்கெனவே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வரும் கும்பல் கொலைகளும், மதம் சார்ந்த தாக்குதல்களும் மக்களின் சகிப்புத்தன்மை மீது கேள்வி எழுப்பி வருகின்றன.


சிரியாவில் நிகழ்ந்த போர் லட்சக்கணக்கான மனிதர்களை அகதிகளாக்கியது. பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதால், அந்த நாடுகளிலிருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். அவர்களைத் தடுக்க நாட்டு எல்லையில் சுவரெழுப்புவது, அகதிகளை ஆதரிக்கும் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து நீக்குவது போன்ற மனிதத்தன்மையற்ற செயல்கள் இன்னும் அரங்கேறிதான் வருகின்றன.
சிரியாவிலிருந்து கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியேறிய அகதிகள் சென்ற கப்பல் மூழ்கியதில், ஆலன் குர்தி என்ற 3 வயதுக் குழந்தை மத்தியத் தரைக்கடலின் கரையில் சவமாகக் கிடந்ததும், மெக்ஸிகோவிலிருந்து கடந்த ஜூன் மாதத்தில் அகதியாக வெளியேறியவரும், அவரின்மகளும் இறந்து நீரில் மிதந்ததும் இன்னும் நம் கண்களை விட்டு அகலாத காட்சிகளாகவே இருக்கின்றன. என்ஆர்சி பட்டியல் காரணமாக இதுபோன்ற நிலைமை யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். மக்களின் மனிதத்தை மீட்டெடுப்பதே அதற்கு ஒரே வழியாகும்.

 
அதே வேளையில், இன்னொரு முக்கியக் கேள்வியும் எழுகிறது. என்ஆர்சி இறுதிப் பட்டியலில் விடுபட்டுள்ள 19 லட்சம் பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கட்டும். அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என வங்கதேச அரசு அறிவித்து விட்டது. இந்திய அரசும், என்ஆர்சி பணிகள் அனைத்தும் உள்நாட்டு விவகாரம் என்று விளக்கமளித்துவிட்டது.


அப்படியிருக்கையில், மக்களின் வரிப் பணத்தையும், அதிகாரிகளின் நேரத்தையும்  4 ஆண்டுகளாகச் செலவிட்டு, 19 லட்சம் பேரை சட்டவிரோதக் குடியேறிகள் என்று முத்திரை குத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் முயற்சிபோல் அல்லவா இது இருக்கிறது?
அகதிகள் என்று பெயர்சூட்டப்பட்டவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பதும், வாழ்ந்து வரும் நாட்டில் அங்கீகாரமின்றி இருப்பதும், குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால் தாக்கப்படுவதும் மனிதநேயமும், சகிப்புத்தன்மையும் மக்களிடையே இல்லாதவரை என்றைக்கும் குறையப் போவதில்லை. நாடு முழுவதிலும் கூடிய விரைவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான பணிகள் தொடங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

மரணம் கற்பிக்குமா பாடம்?

By வி. குமாரமுருகன்  

பேனர் கலாசாரம் கூடாது என நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும்கூட, அவை காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டன  என்பதை வியாழக்கிழமை நடைபெற்ற விபத்து வெளிப்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் சுபஸ்ரீ(23), பைக்கில் சென்ற போது சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்தது;  அதன் விளைவாக கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி அவர் உயிரிழந்தது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் இல்லத் திருமண விழாவையொட்டி வைக்கப்பட்ட சட்டவிரோத பேனர் சுபஸ்ரீயின் உயிரைப் பறித்துள்ளது.  


இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வின் கவனத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் சட்டவிரோத பேனர் கலாசாரத்தை அதிகாரிகள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர். சட்டவிரோத பேனர் வழக்கு தொடர்பான பதில் மனுவில், தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்; ஆனால், தற்போது ஓர் உயிர் பலியாகிவிட்டது. இதற்கு யார் பொறுப்பேற்பது? குடிமக்களின் உயிர் அவ்வளவு சாதாரணமாகிவிட்டதா, மனித உயிர்களுக்கு அரசு அளிக்கும் மரியாதை இவ்வளவு தானா? திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்துதான் அழைக்க வேண்டுமா, பேனர் வைக்காவிட்டால் அவர்களுக்கு வழி தெரியாதா உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்தனர். சுபஸ்ரீ குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்பெல்லாம், சுவரில் எழுதப்படுவது வழக்கத்தில் இருந்தது. தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்படுவது தொடங்கியது. அதன் பின் தொடங்கிய இத்தகைய பிளக்ஸ், பேனர், கட்-அவுட் கலாசாரம் முடிவதாகத் தெரியவில்லை. சிறு குழந்தைகளுக்கான விழா தொடங்கி அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசு விழாக்கள் குறித்த அறிவிப்புகள், பிறந்த, இறந்த தின நிகழ்வுகள், பள்ளி விளம்பரங்கள், தனியார் நிறுவன போர்டுகள்...இப்படி நீண்டு கொண்டே செல்கிறது பட்டியல்.  அரசியல்வாதிகள் மட்டுமல்ல, விழா நடத்துவோர், மாணவர்கள், மக்கள் என எல்லோரும் விளம்பரங்களை விரும்புவதால்தான் நீதிமன்றங்கள் பலமுறை கூறியும் கூட பேனர் கலாசாரம் தொடருகிறது.


மேலும், போட்டி போட்டுக் கொண்டு பேனர் வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த கட்சித் தலைவர் வரும்போது இந்தப் பகுதியில் 20 பேனர் வைத்திருந்தனர். நாம் 21-ஆவது வைக்க வேண்டாமா?  என்ற தலைவரின் விருப்பத்துக்காக தொண்டர்களும் வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெடுஞ்சாலையில் அந்தக் கட்சியினரைவிட நாம்தான் அதிக தொலைவுக்கு கட்-அவுட்டுகள் வைக்க வேண்டும். பேனர் வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்தக் கலாசாரம் என்னவோ மனித மூளையை ஆக்கிரமித்து விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது, சாலையின் இருபுறமும் குழிகள் தோண்டி வரவேற்பு வளைவுகள் வைப்பதும் நடைபெறுகிறது.இந்த குறுகிய வளைவிற்குள் நுழைந்துதான் வாகனங்கள் செல்ல வேண்டும் என்பதால் எதிரெதிரே வரும் இரண்டு வாகனங்கள் வளைவுக்குள் நுழைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலும் உருவாகிறது.
பெரும்பாலும் தலைவர்கள் வரும் சாலையில் இவை அமைக்கப்படுவதால், ஏற்கெனவே முடங்கும் சாலைப் போக்குவரத்து, இந்த வரவேற்பு வளைவுகளாலும் கூடுதல் நேரம் முடங்குவதும் நாள்தோறும் நடந்தேறி வருகின்றன.


இவை எல்லாம் அதிகாரிகளுக்குத் தெரியும் என்றாலும்கூட ஆளும் கட்சி பேனர் வைக்கும் போது தடுக்க முடியாத அதிகாரிகள், எதிர்க்கட்சியினர் வைக்கும்போது தடுத்தால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்பதற்காக கண்டுகொள்வதில்லை. அதையும் தாண்டி எதிர்க்கட்சியினர் வைக்கும் பேனரை அகற்ற நினைத்தால், ஆளும் கட்சியினர் வைக்கும் பேனர்களுக்கு அனுமதி அளித்தீர்களே என்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய நிலை அதிகாரிகளுக்கு உருவாகும் என்பதால், அதிகாரிகள் பலரும் இது குறித்துக் கவலைப்படுவதில்லை என்று தோன்றுகிறது.


சரி, பூனைக்கு மணி கட்டுவது யார் எனற கேள்விக்கு விடையாக நீதிமன்றம் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதையடுத்து பேனர் வைக்கக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்து விட்டனர். 


பேனர் வைத்திருந்தால் அந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்து விட்டார். பாமக, விசிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் பேனர் கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தி விட்டனர். தலைவர்கள் அறிவுறுத்திவிட்ட நிலையில், கட்சியினர் அதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
உயர்நீதிமன்றம் சொல்வதுபோல், வரிசையாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ள பாதை தலைவர்களுக்கு வழிகாட்டும் பாதை அல்ல.  தொண்டர்களுக்கு வழிகாட்டுபவர்களாக தலைவர்கள் மாறிவிட்டால், பேனர் பா(போ)தை ம(றை)றந்து விடும். நல்ல பாதை நம் கண் முன் நிற்கும். சுபஸ்ரீ மரணம் அனைவருக்கும் பாடம்.
மஹாளயபட்சத்தின் 15 நாட்களும் எப்படி இருக்க வேண்டும்?

By DIN | Published on : 14th September 2019 04:16 PM

இன்று முதல் மஹாளய பக்ஷம் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு தினமும் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும்.


மஹாளயபட்சம் பதினைந்து நாட்களும் எப்படி இருக்கவேண்டும்? என்று தெரிந்துகொள்வோம்.

ஒவ்வொருவரும் நமது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

நாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குச் சுத்தமாக இருக்கிறோமோ, எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குப் பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாட்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைகிறார்கள்.

பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாட்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத் திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள்.

NEWS TODAY 07.07.2026