Wednesday, November 13, 2019

Move to regularise 4,000 guest lecturers sparks debate

Ragu.Raman@timesgroup.com

Chennai:13.11.2019

The state government’s move to regularise guest lecturers in government arts and science colleges has stirred a major debate as aspirants argued that it is against the rules of reservation and UGC regulations.

As many as 2,423 guest lecturers work in shift-1 and 1,661 in shift-2 in 114 government arts and science colleges across the state. They work for just ₹15,000 a month.

The directorate of collegiate education (DCE) asked the regional directorates to gather the details of qualified guest lecturers working in government colleges for more than five years. As per the direction, the guest lecturers with NET/SLET/SET or PhD qualification with five years experience may be regularised.

While the move raised the hope of guest lecturers in government colleges, professors and aspirants criticised it saying the appointment won’t be based on merit.

They pointed out that many colleges appointed guest lecturers without following the roster system or open advertisement. “Regularising them based on their experience would set a wrong precedent,” a professor said, adding it would facilitate corruption in appointment. Along with the guest lecturers in government colleges, lecturers in private colleges too work for a low salary, he added.

V Thangaraj, president of Tamil Nadu All Government Colleges UGC-qualified Guest Lecturers’ Association, said the guest lecturers have contributed immensely in the absence of regular teachers in government colleges. “The state government is not regularising all the guest lecturers. Of 4,000, only around 2,100 may have UGC qualification with five years’ experience,” he said. He also said the guest lecturers should be appointed through advertisements in newspapers.

A functionary from Tamil Nadu Government College Teachers’ Association said all aspirants should get equal opportunity for government jobs. “We are not against guest lecturers. But, they have to come through due process. Their experience in government arts and science colleges alone should not be the criterion,” the functionary said.

Tamil Nadu Government Colleges Guest Lecturers Welfare Association vice-president S Vasanthakumar said the state government is considering regularisation after continuous protests by the guest lecturers. “Some vested interests are opposing the move by the government and planting wrong information,” he alleged.

Officials from higher education department said the government is considering the demand and is yet to make a final decision.

“Many guest lecturers have been working for more than 12, 13 years in the government colleges. On humanitarian grounds, the state government is considering their demand. We will follow reservation and roster system if we regularise them,” officials said.

DVAC yet to act in ₹350cr police scam

Officials Involved In Racket Not Summoned


A.Selvaraj@timesgroup.com

Chennai:13.11.2019

Nearly two months after the state home department ordered a vigilance probe into the ₹350crore police equipment purchase scam, directorate of vigilance and anti-corruption (DVAC) sleuths are yet to summon officials allegedly involved in the scam for inquiry.

Superintendent of police (technical services) M Anbuchezhian, who was named by the home department for criminal misconduct and possibly causing pecuniary loss to the government, continues in his post. His continuation in the office may hinder an impartial inquiry, say senior officials. He transferred the superintendent of ministerial staff, the custodian of key documents in the technical services, to Ramanathapuram last week. Officials who spoke on condition of anonymity said, “How can we give statements against a sitting officer above us in the hierarchy? The transfer of Rajan Singh sends a clear message to us that it could happen to anyone of us. We are being intimidated by the move.”

Officials in the technical services department said the transfer was initiated on administrative grounds. The transfer order was endorsed by ADGP (technical services) Ashok Kumar Das. The department had forwarded some of the documents pertaining to the scam to the DVAC in September last. The probe agency has assigned a deputy superintendent of police to begin investigation by summoning the ministerial staff, who maintained the records, and officials related to the issue. Plans are on to issue formal summons to those awarded contracts by Anbuchezhian as technical services SP.

DVAC officials have visited some of the contractors registered as ‘A’ class vendors with the technical services department and collected documents pertaining to the scam. Anbuchezhian, who has been holding the post of SP (technical wing) since 2013, was a part of tender scrutiny committees that fixed the eligibility norms for companies bidding for equipment such as digital mobile radio systems, CCTVs and other electronic items.

TN sanctions ₹600cr for 6 medical colleges

Land For Colleges Identified

TIMES NEWS NETWORK

Chennai:13.11.2019

The state government has identified locations for setting up six new medical colleges in six districts and released ₹600 crore for kickstarting the construction work.

While this would increase the number of MBBS seats in the state by 900, the government is likely to begin admissions by 2021. Land has been identified and transferred for establishing the new medical colleges in Dindigul, Namakkal, Ramanathapuram, Virudhunagar, the Nilgiris and Tiruppur districts.

In six identical orders issued on Tuesday, health secretary Beela Rajesh said that the government examined the proposal of the director of medical education and sanctioned the release of ₹100 crores for the construction of each medical college. As per estimates, each medical college would require ₹325 crore for construction, of which the state government’s share would be 40%. The remaining 60% funds would be borne by the Centre.

According to the government order, the new medical colleges are being constructed in land parcels of nine acres at Kooraikoondu in Virudhunagar, 11. 28 acre plot in Tiruppur town, Rakkiyapaayam group of Nallur village in Tiruppur district, 25 acres in a village in Udhagamandalam, 8 acres at Adiyanathoo village in Dindigul district, 10 acres in Siluvampatti village in Namakkal district and 9 acres at Pattinamkathan village at Ramanathapuram district.

The land has been transferred to the department of health and family welfare. The state government has also obtained approval of the technical evolution committee of the Centre and issued essentiality certificate for starting the new government medical colleges.

Each medical college will be offering 150 seats that would push the total seats available in the state to 4,150 seats. “The aim is to complete constructions and seek permission from MCI to start admissions for first year MBBS by 2021 in all six colleges,” director of medical education R Narayanababu told TOI.

The new medical colleges are based on the state government's decision on ‘one government medical college’ in each district.

Two doctors barred from practising for ‘negligence’

Chennai:At least two doctors have been barred from practising by the Tamil Nadu Medical Council for a year on charges of ‘misconduct and negligence’. It has also banned six other doctors for six months for advertising their names on online directories to increase footfalls in their clinics. Fines were imposed on six other doctors.
On Tuesday, the council resolved to suspend Tiruchengod-based Dr V A Raghupathy for negligence and inadequate post-surgical care that led to loss of vision in a patient. A disciplinary committee found him guilty during inquiry and recommended action.
Another doctor from Theni, Dr Elango, was also removed from the rolls for a year as he was found aiding a quack practise medicine in the district. Five other doctors who were supporting Dr Elango were asked to pay a penalty. The council has removed the names of both the doctors from the state medical registry.

Tuesday, November 12, 2019


திரை வெளிச்சம்: அவசரம் காட்டாத நவரச நாயகன்!



க.நாகப்பன்

புத்தாயிரத்தின் தமிழ் சினிமா வரலாற்றில் அதிர்ஷ்டசாலி நடிகர் யாரென்று கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு கார்த்தி என்று சொல்லிவிடலாம். பத்து ஆண்டுகள் நடிப்புப் பயணத்தில் அல்லது பத்து படங்களில் ஒரு நடிகருக்குக் கிடைக்கும் அனுபவமும் பெயரும் அவரது அறிமுகமான ‘பருத்திவீரன்’ படத்திலேயே கிடைத்தது என்றால் அது மிகையில்லை.

அறிமுகப் படத்திலேயே மிகப் பெரிய ஓப்பனிங், இமாலய வெற்றி, ரசிகர் மன்றம் என்று கார்த்திக்குக் கிடைத்த வரவேற்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ‘பராசக்தி’ படத்தின் மூலம் சிவாஜிக்குக் கிடைத்த அதே வாழ்த்தும் பாராட்டும் ‘பருத்தி வீரன்’ படம் வழியே கார்த்திக்குக் கிடைத்ததாக சினிமா ஆர்வலர்கள் சிலாகித்திருக்கிறார்கள். கார்த்தியின் சாதனை அவ்வளவு பெரிதா என்று யோசிப்பவர்கள் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

அப்பா, அண்ணன் வழியில்..

மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்த கார்த்தி, அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங்கில் மாஸ்டர் சயின்ஸ் படித்தார். பகுதி நேரமாக அவர் செய்த கிராபிக் டிசைனர் வேலை திருப்தியளிக்கவில்லை. அப்பா, அண்ணன் வழியில் சினிமாதான் தனக்கான பாதை என்று அவர்களின் ராஜபாட்டையில் பயணிக்கத் தீர்மானித்தார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஃபிலிம் மேக்கிங் படித்து முடித்ததும் மணிரத்னத்திடம் உதவி இயக்குநர் ஆனார். ‘ஆய்த எழுத்து’ படத்தில் அண்ணன் சூர்யா நாயகனாக நடிக்க, தம்பி கார்த்தி உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். சித்தார்த்துடன் ஒரு காட்சியிலும் வந்துபோனார்.

இயக்குநராக நினைத்த க்ளீன் ஷேவ் கார்த்திதான், ‘பருத்தி வீர’னில் அடர்ந்த தாடி, தொடைக்கு மேல் டவுசர் தெரிய ஏற்றிக் கட்டிய லுங்கி, கிராமத்து வட்டார வழக்குப் பேச்சு மொழியை அப்படியே பிரதிபலிக்கும் லந்து, உடல் மொழியிலேயே தெனாவட்டைக் காட்டும் லாகவம், போதையில் திரிந்தபடி வாய்ச்சவடால் விட்டே பிறரை மிரட்டும் களியாட்டம், வாழிடத்தின் தன்மை உணர்ந்து அந்த நிலத்துக்கேற்ற மனிதராக உருமாறியது என்று மதுரை மண்ணில் சண்டித்தனம் செய்யும் இளைஞனாகவே ‘பருத்திவீர’னில் தன் கதாபாத்திரத்தை பிரதிபலித்தார்.

நவரச நாயகன்

இத்தனைக்கும் சூர்யாவின் வருகைக்குப் பிறகு பத்து ஆண்டுகள் கழித்தே கார்த்தியின் வருகை தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது. அதற்காக அவர் கவலைப்படவில்லை, எண்ணிக்கை அளவில் படங்களை அதிகப்படுத்துவதில் ஆர்வமோ, அவசரமோ காட்டவில்லை. தரமான படங்களிலேயே கவனம் செலுத்தினார். இதனால் கார்த்தியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகமானது.

இரண்டாம் படம் என்பது இயக்குநருக்கு மட்டுமல்ல; நடிகருக்கும் ஆசிட் டெஸ்ட்தான் என்பதை கார்த்தி நன்கு உணர்ந்திருந்தார். சிவகுமார், சூர்யா என்று நிருபணம் செய்த இரு நடிப்புக் கலைஞர்களைக் கொண்ட குடும்பத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கும் மூன்றாம் நடிகர் என்ற புரிதலும் எச்சரிக்கையும் அவரிடம் ஊறிப்போய் இருந்தது.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘மாலைநேரத்து மயக்கம்’ டிராப் ஆக, அடுத்த படமான ‘ஆயிரத்தில் ஒருவ’னில் கைகோத்தார். கார்த்திக்கு நடிப்பு வரவில்லை. நக்கலும் எகத்தாளமுமாக அந்த ‘பருத்தி வீரன்’ கெத்திலேயே இருக்கிறார் என்ற அவச்சொல் வந்துவிடாக் கூடாதென்ற மெனக்கெடல் ‘ஆயிரத்தில் ஒருவ’னில் அப்பட்டமாகத் தெரிந்தது. கூலியாக, காமெடி ரவுடியாக, தனித்தீவில் உள்ள மனிதர்களைக் கண்டு அலறிய சாமானியனாக, இயலாமையை வெளிப்படுத்தும் நம்மில் ஒருவனாக, சோழர்களின் தூதுவனாக அழுத்தமாகத் தடம் பதித்த கார்த்தி, ‘பையா’வில் நகரத்து இளைஞனாக கலகலப்பான நடிப்பைத் தந்தார். ‘நான் மகான் அல்ல’ படத்தின் மூலம் நம்ம வீட்டுப் பையன் என்ற அடையாளத்துக்குள் வந்தார். 2010-ம் ஆண்டில்தான் இந்த மூன்று படங்களும் வெளியாகி ஹிட் அடித்தன. அந்த வகையில் 2010, கார்த்தி தனது நவரசங்களையும் வெளிப்படுத்திக் காட்டிய படங்களில் தோன்றிய முக்கியமான ஆண்டு.

பாடம் கற்ற கார்த்தி

‘சிறுத்தை’ படத்துக்குக் கிடைத்த வெற்றியால் ‘சகுனி’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்று வணிக சினிமாவுக்கான ரெடிமேட் நடிப்புக்குள் தன்னை ஒப்படைத்தார். கார்த்தி - சந்தானம் கூட்டணி பேசப்பட்டாலும் படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ‘பிரியாணி’ ஓரளவு வெற்றிபெற, கார்த்திக்குள் இருக்கும் இயல்பான, மிகை விரும்பா நடிகனை பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ படம் மீட்டெடுத்தது.

கதைத் தேர்வு மட்டுமே நம்மை மேம்படுத்தும் என்பதை கார்த்தி அனுபவப்பூர்வமாக உணர்ந்தார். அதனால்தான் வேறு வேறு ஜானர்களில் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். காமெடி கலந்த ஆக்‌ஷனில் அசரடித்த ‘சிறுத்தை’, கம்பீரம் கலந்த கற்பனை வரலாற்றுக் கதாபாத்திரம் ஒன்றில் ‘காஷ்மோரா’, மாமன் உறவில் பிடிப்புகொண்ட ‘கொம்பன்’, உடைந்த குடும்பத்தை ஒட்டவைக்கும் கிராமிய இளைஞனாக ‘கடைக்குட்டி சிங்கம்’, இரக்கமற்ற கொலவெறித் திருடர்களை தேசம் முழுவதும் தேடியலைந்து, உயிரைப் பணயம் வைத்துப் பிடிக்கும் காவல் அதிகாரியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’, என நீளும் பட்டியலில், ‘காற்று வெளியிடை’, ‘தேவ்’ ஆகிய படங்கள் சாக்லேட் இளைஞனாகக் காட்ட முற்பட்டதையும், அதற்கு ரசிகர்கள் தந்த எதிர்வினையை கார்த்தி உணர்ந்துகொண்டார்.

போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் ‘சிறுத்தை’ ரத்னவேல் பாண்டியனுக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தீரன் திருமாறனுக்கும் பல வித்தியாசங்களை நுட்பமாகக் காட்டினார். ‘காஷ்மோரா’வில் தளபதி ராஜ்நாயக், அவரது ஆவி, பேயோட்டி காஷ்மோரா என்று இரு கதாபாத்திரங்களில் மூன்று விதத் தோற்றங்களில் மறக்க முடியாத நடிப்பை வழங்கினார். கருந்தாடியைக் கர்வமாகத் தடவிக்கொண்டு படைத் தளபதிக்கான வீரத்தை, நயன்தாரா உள்ளிட்ட பெண்கள் மீதான மோகத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் கார்த்தி வேறு ஒரு பரிமாணத்தில் அதிரவைத்தார்.

சில்லிட வைத்த ‘டெல்லி’

‘கைதி’ படத்தின் கார்த்தி ஏற்ற டெல்லி கதாபாத்திரம் தோற்றத்தால் மட்டுமே கணிக்க முடியாதது. அதில், மனத்தால் மகளின் பாசத்துக்கு ஏங்கும் இயல்பான தகப்பன் என்று நடிப்பின் எல்லைகளைத் தொட்டார். மகளின் பிறப்பைக் காண முடியாமல் சிறைப்பறவையாய் மீண்டு எழும் நேரத்தில், சாகசச் சூழலில் சிக்கி, சக மனிதம் காக்க, ஆபத்தின் எந்த எல்லையிலும் பிரவேசிக்கும் முன்னாள் ‘கைதி’யாக மென்மைக்கும் திண்மைக்கும் நடுவில் நின்று கதாபாத்திரத்தின் எல்லைக்கோட்டை கடந்து செல்லாத நடிப்புக் கலைஞனாக கார்த்தியால் மிளிர முடிந்திருக்கிறது.

மகள் அமுதாவின் ஒளிப்படத்தை வாட்ஸ் அப்பில் பார்த்துக் கலங்கும் கார்த்தியால் அந்த உணர்வை எப்படிக் கொண்டுவர முடிந்தது? சொந்த வாழ்க்கையில் தன் மகளைப் பிரிந்து ஷூட்டிங்கில் இருக்கும் கார்த்தி அவருடன் நேரம் செலவழிக்க முடியாத குற்ற உணர்வைத்தான் படத்தில் அழுகையாகவும் ஏக்கமாகவும் நமக்குள் கடத்தியிருப்பார்.

அதனால்தான் நாம் கார்த்தியின் நடிப்பை மெய் மறந்து சிலாகிக்கிறோம். விஜிக்கும் தனக்குமான காதல் குறித்து எந்த ஃபிளாஷ்பேக் உத்தியையும் பின்பற்றாமல் கார்த்தி குரல்வழி நடிப்பின் மூலம் கச்சிதமாகக் கதையாக வெளிப்படுத்தும்போது கண்ணீர் சிந்துகிறோம். இது கார்த்தி எனும் கலைஞனுக்குக் கிடைத்த வெற்றியே.

மெத்தட் ஆக்டிங் நடிப்புமுறையின் நீட்சியாக இன்றைய புத்தாயிரத்தின் நடிப்புக் கலைஞர்கள் பலர் தங்கள் ஏற்கும் கதாபாத்திரத்தை மிகையின்றி வெளிப்படுத்திச் செல்கிறார்கள். அந்த வகையில் யதார்த்தத்துக்கு மிக அருகில் பயணிக்கும் நடிகர்களில் ஒருவராக கார்த்தியும் இடம் பெறுகிறார்.

கதைக்குள் சென்று கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டு அதன் களத்தைத் தேடிச் சென்று அந்த வாழ்க்கையை அனுபவித்து நடித்ததால்தான், கார்த்தியால் 12 ஆண்டுகளில் 18 படங்களில் மட்டும் நடிக்க முடிந்தது. வணிக சினிமாவில் வாழ்க்கைக்கு ஊக்கம் தரும் கதாபாத்திரங்களை நாடும் ஆசீர்வதிக்கப்பட்ட நடிகராக அவரது பரிமாணமும் பயணமும் தொடரட்டும்.

தொடர்புக்கு:-
nagappan.k@hindutamil.co.in


பாம்பே வெல்வெட் 08: குரலால் ஆளும் இசைச் சகோதரிகள்




எஸ்.எஸ்.லெனின்

ரயில்களின் கூவல், பயணிகளின் கூப்பாடு என இரைச்சல் நிறைந்த ரயில்நிலையத்தில் எங்கிருந்தோ, இனிமையான கீதம் காற்றில் தவழ்ந்து வருகிறது. ‘ஏக் பியார் கா நக்மா ஹை...’ என்று லதா மங்கேஷ்கரை நகலெடுத்து யாரோ பாட, பயணிகளில் பலரும் ரயில்களை தவறவிட்டு, அந்த மதுரக் குரலில் மயங்கி நின்றனர். வயிற்றுப் பாட்டுக்காக நடைமேடையில் இரந்து பாடும் ரேணு என்ற அந்தப் பெண்ணின் குரல், சமூக ஊடகங்களிலும் வலம் வந்தது.

‘ஹேப்பி ஹர்டி அன்ட் ஹீர்’ திரைப்படத்தின் வாயிலாக ரேணு இன்று பாலிவுட்டின் பாடகியர் வரிசையில் இணைந்துவிட்டார். ஆகஸ்ட் இறுதியில் நடந்த உண்மைச் சம்பவம் இது.ரேணு போன்ற நகலுக்கே ரசிக மனம் இத்தனை வயப்படுத்துகிறது என்றால், அசலான லதா மங்கேஷ்கரின் குரலுக்கு இந்தியத் திரையிசை 75 ஆண்டுகளாகக் கட்டுண்டு கிடப்பதில் வியப்பேதும் இல்லை.

முன்னணிக்கு வந்த பின்னணிக் குரல்கள்

இந்திய சினிமாவின் ‘டாக்கீஸ்’ காலத்தை, வசனங்களைவிட பாடல்களே பெரிதும் ஆக்கிரமித்திருந்தன. முதன்மை நடிகர்களுக்குக் குரல்வளமே பிரதானம்; நடிப்பெல்லாம் இரண்டாம் பட்சம்தான். உலகப் போர்களின் உபயத்தில், ஏராளமான மின்னணு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் ஒன்றான ‘மைக்ரோஃபோன்’ திரையிசைக்கு வரப்பிரசாதமானது.

இத்துடன் வெவ்வேறு தடங்களில் ஒலிகளைப் பதிவுசெய்யும் நுட்பங்களும் படிப்படியாக அறிமுகமாகி, திரையிசையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. கதைக்கும், காட்சிக்கும் உவப்பான குரலில் பதிவுசெய்யப்பட்ட இசைப் பாடலுக்கு நடிகர்கள் வாயசைத்தால் போதுமென்ற நிலை வந்தது. திரையில் நிழலாடிய நட்சத்திரங்களுக்கு நிகராகப் பின்னணியில் பாடும் குரல்களை ரசிகர்கள் கண்டுகொள்ளத் தொடங்கினர். இசைக்கும் குரலுக்கும் கட்டுண்ட ரசிக மனம் இங்கே கிளர்ந்தெழுந்தது.

1935-லேயே பின்னணியில் பாடும் உத்தி அறிமுகமானது. இருப்பினும், அப்போதைய பாடக நடிகர்களின் ஆக்கிரமிப்பு அது பரவலாவதைத் தாமதமாக்கியது. இந்திய மொழிகள் ஒலிக்கும் திசையெங்கும் தங்களது குரலால் ஆண்டு வரும் லதா மங்கேஷ்கர் – ஆஷா போஸ்லே இசைச் சகோதரிகள் கூட, சில மராத்தித் திரைப்படங்களின் பாடக நடிகையராகவே தங்களது கலை வாழ்வைத் தொடங்கினர்.

வெட்டப்பட்ட முதல் பாடல்

தீனாநத் மங்கேஷ்கர் என்ற நாடகக் குரலிசைக் கலைஞரின் ஐந்து குழந்தைகளின் தலைமகளாக மத்தியப் பிரதேசம் இந்தூரில் பிறந்தார் லதா. தந்தையுடன் சேர்ந்து நான்கு வயதிலேயே நாடக மேடைகளில் பாடத் தொடங்கிவிட்டார். தந்தையின் அகால இறப்பை அடுத்து, குடும்பச் சுமை, பள்ளிச் சிறுமியான லதாவின் முதுகில் ஏறியது.

பூனாவில் வசித்தபடி நாடக மேடைகளுக்கும், திரை நிறுவனங்களுக்குமாக வாய்ப்புத் தேடி அல்லாடினார். இளையராஜாவின் முதல் நாள் இசைக்கோப்பு மின்தடையின் ஆசிர்வாதத்துடன் தொடங்கியது போலவே, சினிமாவில் லதா மங்கேஷ்கரின் முதல் பாடலும் எடிட்டிங் மேசையில் வெட்டப்பட்ட விநோதம் நிகழ்ந்தது.



குரலுக்கு உலகம் அடிமையாகும்

அப்போதைய பாடகர்களின் பஞ்சாபிய பாவனையிலான குரலைவிட, லதாவின் குரல் மிகவும் மெல்லியதாக இருந்தது. ‘சாஹித்’ திரைப்படத்தின்போது இது குறித்து இசையமைப்பாளர் குலாம் ஹைதரிடம் படத்தின் தயாரிப்பாளர் சஷாதர் முகர்ஜி புலம்பினார். அவருக்குப் பதிலளித்த குலாம் ஹைதர், “ஒரு நாள் லதாவின் குரலுக்காக உலகமே அவரது காலடியில் விழத்தான் போகிறது” என்று அடித்துச் சொன்னார்.

மஜ்பூர் படத்துக்காக ‘தில் மேரா தோடா’ பாடல் ஹைதரின் இசையில் வெளியானபோது பம்பாய் திரையுலகம் அதனை ஒத்துக்கொண்டது. அதே வருடத்தில் வெளியான ‘சந்தா ரே ஜா’, லதா பாடல்களின் ’ஹிட்ஸ்’ வரிசையைத் தொடங்கி வைத்தது. ‘அந்தாஸ்’, ‘பஸ்ராத்’ படங்கள் லதாவின் குரலுக்காகவே பேசப்பட்டன. ஐம்பதுகளின் திரையிசையை லதாவின் கந்தர்வக் குரல் ஆழ உழுதுவந்தபோது, அக்காவுக்குப் போட்டியாக ஆஷா போஸ்லேவும் பிரபலமானார். அடுத்துவந்த எழுபதாண்டுகளின் ஆரோக்கியமான போட்டியில் சுமார் ஐம்பதாயிரம் பாடல்களை இந்தியாவின் 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் இருவரும் பாடிக் குவித்தார்கள்.

சிறகு விரித்த சகோதரக் குயில்

லதா மங்கேஷ்கர் என்ற ஆலமரத்தின் நிழலில் வளர்ந்ததில் ஆஷாவின் சுயமான முயற்சிகள் வெகுவாகத் தடுமாறின. தனது உச்சஸ்தாயிலான குரல் வளத்தைப் போலவே திரை வாய்ப்புகளிலும் லதா உச்சத்திலிருந்தார். அடுத்த இடத்திலிருந்த கீதா தத், சம்சாத்பேகம் போன்றவர்களுக்கு அப்பால்தான் ஆஷாவுக்கான வரிசை கிடைத்தது. முன்னணி நாயகியருக்கு அக்கா லதா பின்னணி பாட, ஏனைய பாடகியராலும் ஒதுக்கப்பட்ட கவர்ச்சி நடனமணிகளுக்கான ஒற்றைப் பாடல்களே தங்கை ஆஷாவுக்கு வாய்த்தன. ஆஷா அதிலும் முத்திரை பதித்தார்.

ஒரே கூட்டின் இரு குயில்களும் வெளியே வெடிக்காத புகைச்சலுடனே வலம் வந்தன. லதா மங்கேஷ்கர் - ஆஷா போஸ்லே சகோதரிகளுக்கு இடையில் அப்படியென்ன பிரச்சினை என்பதற்கு, பாலிவுட்டில் பல கதைகளைச் சொல்வார்கள். அப்படியான கதைகளில் ஒன்று, ஷபனா ஆஸ்மி, அருணா இரானி, ஷாகிர் ஹூசைன் நடிக்க ‘சாஸ்’(1998) என்ற திரைப்படம் வெளியானது.



லதா மங்கேஷ்கரின் தொடக்க கால உதவியாளராக இருந்த கண்பத் ராவ் போஸ்லே என்பவருடன், 16 வயது ஆஷா வீட்டைவிட்டு வெளியேறினார். இல்லறம் கசந்ததில் சில ஆண்டுகள் கழிந்து ஆஷா வீடு திரும்பியபோதும், அக்கா லதாவுக்கு வருத்தம் தீரவில்லை. பிற்பாடு பின்னணிப் பாடகிக்கான முயற்சிகளில் ஆஷா இறங்கியபோது, மூத்த சகோதரியாக லதா உதவவில்லை என்ற வருத்தமும் உறவை மேலும் பதம் பார்த்தது.

எஸ்.டி.பர்மன், ஓ.பி.நய்யார் என லதா மங்கேஷ்கருக்கு எதிர்முகாமாகச் செயல்பட்ட இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக ஆஷா போஷ்லே அமைந்தார். அப்படித்தான் ஆஷாவின் ஹிட் கணக்கு நய்யார் இசையமைத்த ‘நயா தௌர்’ படத்தின் வாயிலாகத் தொடங்கியது. எஸ்.டி.பர்மனைத் தொடர்ந்து அவருடைய மகன் ஆர்.டி.பர்மன் படங்களின் ஆஸ்தான குரலாகவும் ஆஷா மாறினார். ஆர்.டி.பர்மனின் மனைவியானபோது, பாலிவுட் பாடகியரில் லதாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருந்தார் ஆஷா. ‘நயா தௌர்’ வரிசையில் ‘தீஸ்ரி மன்ஸில்’, ‘உமரோவ் ஜான்’ எனப் பத்தாண்டுக்கு ஒரு முறை பாலிவுட்டின் இசை ரசனையைத் தீர்மானிக்கும் படங்கள் ஆஷாவின் பிரதான பங்களிப்புடன் வெளியாயின.




குரலால் ஆளும் சகோதரிகள்

1970-80களுக்கு இடையே இந்த இரு இசைச் சகோதரிகளின் ராஜ்ஜியமே பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தது. 80,90-களில் பின்னணி பாடுவதைவிட அயல் தேசங்களின் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் காட்டினார் லதா மங்கேஷ்கர். அப்படியும் அவரது ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கௌன்’, ‘தில்வாலே துல்ஹனியா லே ஜயங்கே’ போன்ற படங்களின் பாடல்களுக்காக லதா இன்றளவும் கொண்டாடப்படுகிறார். ஆஷாவும் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் 90-களின் மத்தியில் ‘தன்ஹா தன்ஹா’, ‘ரங்கீலா ரே’ என ஒரே படத்தின் மூலம் உச்சம் தொட்டு அடுத்த சுற்றுக்குத் தயாரானார்.

‘பாரத் ரத்னா’ விருது லதா மங்கேஷ்கருக்கு சேர, கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியரானார் ஆஷா போஸ்லே. கின்னஸில் தொடங்கி, பால்கே, பத்ம விருதுகள் எனச் சகோதரிகள் இருவரும் முத்திரை பதித்தனர். பின்னணிப் பாடகியருக்கான தேசிய விருதுகளை ‘புதியவர்களுக்கு கொடுங்கள்’ என்று இருவருமே மறுத்திருக்கின்றனர்.

செப்டம்பரில் 90-ம் பிறந்த நாளைக் கொண்டாடிய லதா மங்கேஷ்கர், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூருக்கும் பாடுகிறார். மேற்கத்திய இசைத் தொகுப்புகளில் உத்வேகத்துடன் வலம் வரும் ஆஷா போஸ்லே தனது 86 வயதில் புத்தாண்டுக்கான புதிய ஆல்பத்தை வெளியிட உள்ளார்.

இசைக் குயில்கள் தமிழில் சிறப்பித்த பாடல்களில் சில.. லதா மங்கேஷ்கர்: ‘வளையோசை கலகலவென’ (சத்யா), ‘ஆராரோ ஆராரோ’ (ஆனந்த்), ‘எங்கிருந்தோ அழைக்கும்’ (என் ஜீவன் பாடுது), ஆஷா போஸ்லே: ‘செண்பகமே செண்பகமே’ (எங்க ஊரு பாட்டுக்காரன்), ‘நீ பார்த்த’ (ஹே ராம்), ‘ஓ பட்டர்ஃபிளை’ (மீரா), ‘எங்கெங்கே’ (நேருக்கு நேர்).
எம்.ஜி.ஆரின் பிம்பமும் ரசிகர் மன்றங்களும்
By வழக்கறிஞர் சி.பி. சரவணன் | Published on : 04th November 2019 05:03 PM 




எம்ஜிஆர் மறைந்து முப்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. எம்ஜிஆரை யார் என்றே தெரியாத ஒரு தலைமுறையும் தோன்றிவிட்டது. ஆனால் தமிழ் பொது சமூகத்தின் நினைவுகளில் எம்ஜிஆர் இன்றும் வாழ்கிறார். இப்போதும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அவர் கடவுள். அவரது பெயரைச் சொல்லியே இப்போதும் அவர் ஆரம்பித்த கட்சி ஆட்சிக்கு வருகிறது. கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்பும் அவரது நினைவு நாளின் போது வீதிக்கு வீதி அவரது படத்தை வைத்து தேங்காய், பழம், ஊதுவத்தி வைத்து வணங்குகிறார்கள். இப்படி ஒரு நினைவு நாளை நான் அறிந்த வரை தமிழகத்தில் வேறு எவருக்கும் அனுஷ்டித்துப் பார்த்ததில்லை.

ஒரு நடிகராகவோ அரசியல்வாதியாகவோ அல்ல; கிட்டத்தட்ட நாட்டுப்புற தெய்வமாகவே எம்.ஜி.ஆர் இங்கு திகழ்ந்தார். அவருக்காகப் பலர் அலகு குத்திக்கொண்டார்கள்; தீக்குளித்து இறந்தார்கள்; அவருடைய 'கட் அவுட்' தாங்கிய தேரின் இரும்புக் கொக்கிகளை ஒருவர் தன் முதுகுச் சதையில் பிணைத்துக்கொண்டு 9 கி.மீ., இழுத்துச் சென்றார். சபரிமலை யாத்திரைக்குப் போவதைப் போல் கடும் விரதமிருந்து பலர் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த சிறிய கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டனர்.

'தன் காதலியின் அருகில் இருக்கும் போது கூட ஏழைகளைப் பற்றியே எங்கள் தலைவர் சிந்தித்துக் கொண்டிருப்பார், தெரியுமா' என்கிறார் ஒரு ரசிகர். 'எப்படிச் சொல்கிறீர்கள்' என்று கேட்கப்பட்ட போது, ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டு, 'அதில் அப்படித்தான் காட்டியிருக்கிறார்கள், பாருங்கள்' என்று பதிலளித்திருக்கிறார். எது நிஜம்?, எது நிழல்? என்று பிரிக்க முடியாத படிக்கு எம்.ஜி.ஆரின் பிம்பம் தமிழக மக்களின் மனதில் குறிப்பாக அவரது ரசிகர்களின் மனதில் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது

எம்ஜிஆரின் கதாநாயக பிம்பத்தை வலுவாக்குவதில் அவரது வில்லன்கள் முக்கியப் பங்கு வகித்தனர். நம்பியாரின் கதாபாத்திரத்தை மிக மோசமானதாக படைப்பதன் மூலம் தனது கதாபாத்திரம் மிக நல்லவனாக, மக்கள் மனதில் தங்கும் என்பதை உணர்ந்து தொடர்ந்து அதைச் செய்து வந்தார். அதேபோல், திரைத்துறையில் சக கலைஞர்கள் அவரை மரியாதையாக அழைக்கும் ‘வாத்தியார்’ போன்ற வார்த்தைகளை தேங்காய் சீனிவாசன், நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள் மூலம் திரைப்படத்திலும் பேசவைத்தார். இதன்மூலம் பொதுமக்களிடையே எம்ஜிஆர் என்ற பிம்பம் எந்த மாதிரியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதை அவர் தனக்குத்தானே வடிவமைத்தார்.

பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்ஜிஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்ஜிஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்... என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.

இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப்பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து கெட்டவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன். இப்படி எத்தனை எத்தனையோ பிம்பங்கள்!

இந்த பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்ஜிஆரின் திரைப்படிமம் வெகு ஜனங்களின் மனவார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு, அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.

எதிரிகளைப் பந்தாடும் எம்ஜிஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்ஜிஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்ஜிஆர் நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். “நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

தனது படங்களில் மது குடிக்காதவராக நடித்த எம்.ஜி.ஆர் தந்தை பெரியாரைப் போலவே இறுதிவரை தன் வாழ்வில் அதை கடைப்பிடித்தார். அது, பெண்கள் மத்தியில் அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சராக இருந்தபோது 1984ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவந்து திரையில் கதாநாயகனாகத் தோன்றிய தனது கதாபாத்திரங்களுக்கும் தமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என நிரூபித்தார்.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த எம்ஜிஆர் இயல்பாகவே தாய்ப்பாசம் மிக்கவராக இருந்தார். தனது திரைப்படங்களிலும் தாய்ப்பாசம் மிக்கவராக தோன்றினார். அது, அவரை தமிழக மக்களின் குடும்பங்களில் ஒருவராக மாற்றியது .

எம்ஜிஆரிடம் அதிசய, மாந்திரிக சக்திகள் இருப்பதாக நம்பியவர்கள் ஏராளம். 'ஐயா, நான் நிஜமாகவே அவரைச் சாட்டையால் அடிக்கவில்லை; இது பாவனைதான்' என்று பலமுறை நம்பியார் விளக்கமளித்த போதும் ரசிகர்கள் ஏற்கவேயில்லை.

காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்ஜிஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம். ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்ஜிஆர் அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.

இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறன் வாய்ந்தவராக எம்ஜிஆர் உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ, வாலியையோ உணர்வோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்ஜிஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்ஜிஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை.

தமிழ் திரை ரசிகர்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிச' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர். அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். இன்றும் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றும் ரஜினி, விஜய் போன்ற ஆக் ஷன் ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும் சிவாஜியின் பாதையில் செல்லும் கமல் போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.

ரசிகர் மன்றம்

முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது.

தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன், அண்ணா நம்பி, திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள். எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்.


சேஷன் அல்ல, விசேஷன்!| மறைந்த டி.என். சேஷன் குறித்த தலையங்கம்

By ஆசிரியர் | Published on : 12th November 2019 01:01 AM


எந்தவோா் ஆயுதமும் அதைப் பயன்படுத்துபவரைப் பொருத்துத்தான் வலிமை பெறுகிறது. அதேபோல, எந்த ஒரு பதவியும் அந்தப் பதவியில் யாா் அமா்கிறாா்கள் என்பதைப் பொருத்துத்தான் மரியாதை பெறுகிறது. தலைமைத் தோ்தல் ஆணையா் என்கிற பதவி திருநெல்லாயி நாராயண ஐயா் சேஷன் என்கிற டி.என். சேஷன் பதவியேற்ற பிறகுதான் அதற்குரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் பெற்றது. இந்தியாவின் 18-ஆவது அமைச்சரவைச் செயலராகவும், இந்தியாவின் 10-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராகவும் பதவி வகித்த டி.என். சேஷனின் மறைவு, அயோத்தி தீா்ப்பின் பின்னணியில் போதிய முக்கியத்துவம் போதிய பெறாமலேயே போய்விட்டது. தலைப்புச் செய்தியாக வேண்டிய ஒரு மறைவு, இணைப்புச் செய்தியாக மாறிவிட்டது. அதனால், டி.என். சேஷன் என்கிற ஆளுமையின் முக்கியத்துவம் எந்தவிதத்திலும் குறைந்துவிடாது.

1955-ஆவது ஆண்டின் தமிழ்நாடு பிரிவு இந்திய குடிமைப் பணி அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவருடைய அரசுப் பணியின் முதல் கால் நூற்றாண்டு காலம் தமிழக அரசு நிா்வாகத்தில்தான் கழிந்தது. பின்னாளில் தேசிய அளவில் அறியப்பட்ட டி.என். சேஷன், தமிழகத்தில் மாவட்ட ஆட்சியராகவும், பல்வேறு அரசுத் துறைகளின் நிா்வாகத்திலும் பணிபுரியும்போதே தனி முத்திரை பதித்தவா் என்பது பலருக்கும் தெரியாது. காமராஜா், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆா் என்று ஐந்து முதல்வா்களிடம் தமிழக நிா்வாகத்தில் பணியாற்றியபோதே டி.என். சேஷன் என்கிற பெயா் நோ்மைக்கும், பாரபட்சமின்மைக்கும் அடையாளமாக இருந்தது.

பல்வேறு முதல்வா்களுடன் பணியாற்றினாா் என்றாலும், எந்த ஒரு முதல்வருடனும் அவருக்கு சுமுகமான உறவு இருந்ததில்லை. சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளைத் தயக்கமில்லாமல் முகத்துக்கு நேரே நிராகரிக்கும் அவருடைய நோ்மை, ஆட்சியாளா்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது! கால் நூற்றாண்டு காலம் தமிழக நிா்வாகத்தில் இருந்த சேஷன், இங்கு தாக்குப்பிடிக்க முடியாமல்தான் மத்திய அரசுப் பணிக்கு மாறினாா்.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைச் செயலராக அவா் இருந்தபோதுதான் வனப் பாதுகாப்பு என்பது கவனத்தை ஈா்த்தது. தனது அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் வனப் பகுதிகளில் எந்தவித வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று அவா் போட்ட உத்தரவு விரைவிலேயே அவரை அந்தத் துறையிலிருந்து இன்னொரு துறைக்கு மாற்ற வழிகோலியது.

பிரதமா் ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மிக முக்கியமான அதிகாரிகளில் டி.என். சேஷனும் ஒருவா். உள்நாட்டு பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும், பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும் பணியாற்றிய டி.என். சேஷனை அமைச்சரவைச் செயலாளராக ஆக்கியவா் பிரதமா் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தியின் பிரதமா் பதவி காலத்தின் இறுதிக் கட்டத்தில் ஒன்பது மாதங்கள் அமைச்சரவைச் செயலாளராக இருந்த டி.என். சேஷனை, அடுத்து வந்த வி.பி. சிங் அரசு ஓரங்கட்டி ஒதுக்கி வைத்தது. சந்திரசேகா் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, ராஜீவ் காந்தியின் பரிந்துரையில்தான் டி.என். சேஷன் தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்டாா். அரசியல் சாசன அங்கீகாரம் பெற்ற தோ்தல் ஆணையத்தின் தலைமைப் பதவியில் டி.என். சேஷன் அமா்ந்த அந்த விநாடியில், சுதந்திர இந்தியாவின் ஜனநாயக வரலாறு புதிய பாதையில் நடைபோடத் தொடங்கியது.

தோ்தல் ஆணையம் என்பது அதுவரை அரசுத் துறையாக இருந்ததுபோய், தனக்கென சுய அதிகாரம் கொண்ட தன்னிச்சையான அமைப்பாக மாறியது. இந்தியத் தோ்தல் வரலாற்றை யாா் எழுதினாலும் ‘சேஷனுக்கு முன், சேஷனுக்குப் பின்’ என்று இரண்டு பிரிவுகளாகத்தான் எழுதியாக வேண்டும் என்கிற அளவில் தன்னுடைய ஆளுமையைப் பதிவு செய்திருப்பவா் டி.என்.சேஷன்.

வாக்காளா்களுக்குப் புகைப்படத்துடன் கூடிய தோ்தல் அடையாள அட்டை வழங்கியது, தோ்தல் செலவுகளுக்கு முறையான கணக்கு தரப்படுவதை உறுதிப்படுத்தியது, சுவரொட்டி விளம்பரங்கள், வாகனங்களில் வாக்காளா்களை அழைத்துச் செல்லுதல் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது, பிரசார நேரத்தை வரையறுத்தது, வேட்பாளா்கள் தாங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்கிற கருத்தை முன்மொழிந்தது என்று டி.என்.சேஷன் இந்தியத் தோ்தல் முறைக்கு அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது.

டி.என்.சேஷன் தலைமைத் தோ்தல் ஆணையரான பிறகுதான், இந்திய குடிமைப் பணியிலுள்ள அதிகாரிகள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் துணிச்சலைப் பெற்றாா்கள். சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும், பயன்படுத்த வேண்டும் என்பதை உணா்த்திய பெருமை டி.என். சேஷனுக்கு உண்டு. அதிகாரிகளின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் அரசியல் சாசனம் தந்திருக்கும் பாதுகாப்பையும் தனது செயல்பாட்டின் மூலம் உணா்த்திய டி.என்.சேஷனுக்கு அவா்கள் கடமைப்பட்டிருக்கிறாா்கள்.

அவரது முரட்டுத்தனமான பிடிவாதமும், துணிச்சலும் அவருக்கு ஆணவக்காரா், அகம்பாவம் பிடித்தவா், அல்சேஷன் என்றெல்லாம் பட்டப் பெயா்களை வாங்கிக் கொடுத்தன. ஆனால், அவா் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. சொத்து சோ்த்து வைக்க அவருக்குக் குழந்தைகள் கிடையாது. கடைசி வரை ஒரு கா்மயோகியாக வாழ்ந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.11) மறைந்த டி.என். சேஷன், இந்திய ஜனநாயகத்துக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்புதான் அவா் இந்தியாவுக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து.

NEWS TODAY 09.07.2026