Sunday, November 17, 2019


68 - ம் ஆண்டில் எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா; ஒரே ஆண்டில் எட்டு படங்கள்



வி.ராம்ஜி

68-ம் ஆண்டில் எம்ஜிஆர் நடித்த எட்டுப் படங்கள் வெளியாகின. இதிலொரு சுவாரஸ்யம்... இந்த எட்டுப் படங்களிலும் எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான் இணைந்து நடிக்கத் தொடங்கினார்கள். பிறகு அடிக்கடி படங்களில், சேர்ந்து நடித்து வந்தார்கள். ஒருபடத்தில் சரோஜாதேவி நடித்திருப்பார். இன்னொரு படத்தில் கே.ஆர்.விஜயா நடித்திருப்பார். இப்படி நடிகைகள் மாறிக்கொண்டே வந்த நிலை, 68-ம் ஆண்டில் மட்டும் ஹீரோயின் ஜெயலலிதா என்றே இருந்தது.

எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த ‘ரகசிய போலீஸ் 115’ திரைப்படம் 1968-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 11-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் கதையும் திரைக்கதையும் வலுவாக இருந்தன. மேலும் பாடல்களும் பிரமாதமாக இருந்தன. படமும் நூறுநாட்களைக் கடந்து ஓடியது.
இதையடுத்து, பிப்ரவரி 23-ம் தேதி, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில், ‘தேர்த்திருவிழா’ வெளியானது. இதிலும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஜோடியாக நடித்தனர். எம்ஜிஆர் நடித்த படங்களில் சுமாரான படம், சுமாரான வசூல், சுமாரான வெற்றி எனும் பெயரைச் சம்பாதித்த படங்களில் ‘தேர்த்திருவிழா’வும் ஒன்று.



அடுத்து மார்ச் மாதத்தில், 15-ம் தேதி அன்று, இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் ‘குடியிருந்த கோயில்’ வெளியானது. இந்தப் படத்திலும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடி. இதில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் எம்ஜிஆர். டபுள் ஆக்‌ஷன் படங்கள் பொதுவாகவே எல்லா நடிகர்களுக்கும் ஹிட் கொடுக்கும் என்பதற்கேற்ப, இந்தப் படமும் எம்ஜிஆருக்கு ரொம்பவே ஹிட் படமாக அமைந்தது. நல்ல எம்ஜிஆர், கெட்ட எம்ஜிஆர் ஃபார்முலா. வில்லனிடம் வளரும் எம்ஜிஆர் , அப்பாவைக் கொன்றவனிடம் வளரும் எம்ஜிஆர். இதுபோதாதா திரைக்கதைக்கு!

பண்டரிபாய் அம்மா கேரக்டரில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நாகேஷின் காமெடி, படத்துக்குப் பலம் சேர்த்தது. பாடல்கள் எல்லாமே செம ஹிட். ‘என்னைத் தெரியுமா?’, ‘நீயேதான் எனக்கு மணவாட்டி’, ‘குங்குமப்பொட்டின் மங்கலம்’, ‘நான் யார் நான்யார்’ என எல்லாப் பாடல்களும் சூப்பர். முக்கியமாக, எம்ஜிஆரும் எல்.விஜயலட்சுமியும் ஆடுகிற ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ சூப்பர்டூப்பர் ஹிட்டானது.

மிகச்சிறந்த நடனக்காரரான விஜயலட்சுமியுடன் ஆடுவதற்கு எம்ஜிஆர் ரொம்பவே தயங்கினார் என்றும் அவருக்காகவே நடன அசைவுகள் கொஞ்சம் இலகுவாக அமைக்கப்பட்டதாகவும் சொல்வார்கள். இன்னொரு ஸ்பெஷல்... இந்தப் படத்தில் முதன்முதலாக, பெண் கவிஞர் ஓர் பாடலை எழுதியிருப்பார். இந்தப் படத்தை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.




அடுத்து, ஏப்ரல் 25ம் தேதி, ப.நீலகண்டன் இயக்கத்தில் ‘கண்ணன் என் காதலன்’ படம் வெளியானது. இதிலும் ஜெயலலிதா ஜோடி. சுமாரான படங்களில் இதுவும் ஒன்று. பாடல்கள் நன்றாக இருக்கும்.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என்று வரிசையாக மாதத்துக்கு ஒரு எம்ஜிஆர் படம். மே மாதம் படம் வரவில்லை. ஜூன் மாதம் 27-ம் தேதி சாணக்யா இயக்கத்தில், ‘புதியபூமி’ வெளியானது. இதிலும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடியே இணைந்தது. ‘சின்னவளை...’, ‘விழியே விழியே...’, ‘நான் உங்கள்வீட்டுப் பிள்ளை’ என்று பாடல்கள் எல்லாமே சூப்பர். நூறுநாள் படம்தான். ஆனால் ‘படம் கொஞ்சம் ஸ்லோவாப் போவுதுப்பா’ என்றார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்.

ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியன்று, இயக்குநர் ப.நீலகண்டன் இயக்கத்தில், ‘கணவன்’ படம் வெளியானது. இந்தப் படத்தின் கதையை எம்ஜிஆர் எழுதியிருந்தார். ஆனால் படம் பெரிதாகப் பேசப்படவில்லை.

968-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ம்-தேதி எம்ஜிஆருக்கும் அவரின் ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத வருடம், மாதம், நாள். எம்ஜிஆரின் 100-வது படமான ‘ஒளிவிளக்கு’ அன்றைக்குத்தான் ரிலீசானது. ஜெமினியின் பிரமாண்டத் தயாரிப்பில், சாணக்யா இயக்கினார். ஜெயலலிதாதான் ஜோடி. செளகார் ஜானகியும் நடித்திருப்பார். இவரின் நடிப்பும் கேரக்டரும் பேசப்பட்டது.

எம்ஜிஆரின் 100வது படமான ‘ஒளிவிளக்கு’ம் சிவாஜியின் 100வது படமான ‘நவராத்திரி’யும் பெரிதாக ஓடவில்லை. இதேபோல் கமலின் ‘ராஜபார்வை’யும் ரஜினியின் ‘ஸ்ரீராகவேந்திரர்’ படமும் ஓடவில்லை.

இந்தப் படம் பின்னாளில், பல வருடங்கள் கழித்து மிகப்பெரிய டிரெண்டானது. படம் வந்த போதும் அதற்கடுத்த கட்டங்களிலும் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’ பாடல் எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடியைச் சொல்வதாகப் பேசப்பட்டது. நரிக்குறவர் இன மக்களிடையே எம்ஜிஆரைக் கொண்டாட வைத்தது. சி செண்டர் மக்களிடம் ஓட்டு வங்கியாக பின்னாளில் மாறியது.

மிக முக்கியமாக, எண்பதுகளில் எம்ஜிஆர் உடல்நலம் குன்றி, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த போது, ‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ என்ற இந்தப் படத்தின் பாடல் எங்கு பார்த்தாலும் ஒலித்தது. தியேட்டர்களில் எந்தப் படம் ஓடிக்கொண்டிருந்தாலும், படம் போடுவதற்கு முன்னதாக, ‘ஒளிவிளக்கு’ படத்தில் உள்ள இந்தப் பாடல் மட்டும் ஒளிபரப்பப்படும். மக்கள் ‘தலைவா’ என்று உணர்ச்சிவசப்பட்டார்கள். இந்தப் பாடலைப் பார்ப்பதற்காகவே, எந்தப் படம் என்பதே தெரியாமல் போனார்கள்.

ஆக, 68-ம் ஆண்டில், எம்ஜிஆர் நடித்த படங்கள் எட்டு. இந்த எட்டுப் படங்களிலும் ஜெயலலிதாதான் ஜோடி.
பயிற்சி மருத்துவர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தையின் கைகளில் எலும்பு முறிவு தலையில் காயம் ஏற்பட்டதாக புகார்

2019-11-17@ 01:13:00


தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை பூச்சம்மாள் தெருவை சேர்ந்தவர் கோதண்டம் (30). இவரது மனைவி ஆரோக்கிய மேரி (26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, நீர்ச்சத்து குறைவு காரணமாக 10 நாட்கள் கழித்து பிரசவம் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதம் 13ம் தேதி ஆரோக்கிய மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் தாய் மற்றும் குழந்தையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், அவரது மாமியாரிடம் கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது. பின்னர், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், கண்ணாடி அறையில் வைத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தையின் தாய் 9 நாட்கள் கழித்து, குழந்தையை பார்த்தபோது, குழந்தையின் இரண்டு கைகளிலும் கட்டுப்போட்டு இருப்பதையும், தலையில் காயம் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, குழந்தை எடை அதிகமாக இருந்தால் பிரசவத்தின்போது, குழந்தையை வெளியே எடுக்கும் போது கைகளில் எலும்பு முறிவு, மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளனர். இதுபற்றி உறவினர்கள் ஆரோக்கிய மேரியிடம் கேட்டபோது, தனக்கு பிரசவம் பார்த்தவர் பயிற்சி மருத்துவர் என்றும், அவர் குழந்தையை கையில் வாங்கும்போது கீழே தவற விட்டார் எனவும், அதன் காரணமாக குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசாரம் செய்த அரசு ஊழியரின் பணி நீக்கம் ரத்து சரியானதே: ஐகோர்ட்

Added : நவ 16, 2019 20:10

சென்னை:தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த, அரசு ஊழியர் பணி நீக்கத்தை ரத்து செய்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

நெடுஞ்சாலை துறையில், திருவண்ணாமலை கோட்டத்தில், விநாயகமூர்த்தி என்பவர் உதவியாளராக பணியாற்றினார்.கடந்த, ௨௦௧௧ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் பிச்சாண்டிக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் செய்ததாக, விநாயகமூர்த்திக்கு எதிராகநடவடிக்கை எடுக்க, தேர்தல் மேற்பார்வையாளர் பரிந்துரைத்தார்.விசாரணை நடத்திய துறை அதிகாரிகள், விநாயகமூர்த்திக்கு, மூன்று ஆண்டுகளுக்கான ஊக்க ஊதியத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இது குறித்த அறிக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு அனுப்பப்பட்டது. வழங்கப்பட்ட தண்டனை போதுமானது அல்ல என, கலெக்டர் தரப்பில் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, விநாயகமூர்த்தியை பணி நீக்கம் செய்து, நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், விநாயகமூர்த்தி மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது. மூன்றாண்டு ஊக்க ஊதியத்தை ரத்து செய்ததே போதுமானது என்றும், உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.மனுவை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, உயர் நீதிமன்ற, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. பின், தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
ராகிங்' தொல்லை 16 டாக்டர்களுக்கு சிக்கல்

Added : நவ 17, 2019 00:04

மும்பை:மஹாராஷ்டிர மாநிலம் பால்ஹரில், மருத்துவக் கல்லுாரி மாணவியை, 'ராகிங்' செய்ததாக, 16 டாக்டர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இங்கு, பால்ஹர் மாவட்டத்தில், எம்.எல்.தவாலே நினைவு ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரி உள்ளது. இங்கு படித்து வரும், 23 வயது மாணவி, டாக்டர்கள் சிலர், தன்னை ராகிங் செய்வதாக போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றி வரும் பயிற்சி டாக்டர்கள் மற்றும் சீனியர் மாணவர்கள், 16 பேர், மாணவியை ராகிங் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Bharatidasan University student attempts to kill self, accuses teacher of harassment ​

The student, who is pursuing MSc Geology at Bharatidasan University was found unconscious in her hostel room Friday night by her roommates and rushed to the government hospital.

Published: 16th November 2019 03:16 PM |

Image used for representational purpose only
By PTI

TIRUCHIRAPALLI: A girl student of a government university here attempted to commit suicide by consuming floor cleaner as she was reportedly upset for being 'humiliated' by her faculty over her academic performance, police said on Saturday.

The student, who is pursuing MSc Geology at Bharatidasan University was found unconscious in her hostel room Friday night by her roommates and rushed to the government hospital, where her condition was said to be stable, they said.

The teacher had frequently 'harassed' the girl over her performance in class, following which 30 students protested against the faculty.

The teacher has been called in for questioning, they added.
Private Universities Act to be amended to include appointment of administrator
17/11/2019, STAFF REPORTER,BENGALURU

The State government plans to amend the Private Universities Act in Karnataka to appoint an administrator in varsities to oversee the dispute of ownership if any as well as administrative issues.

Deputy Chief Minister and Higher Education Minister C.N. Ashwath Narayan on Saturday said while they had tried appointing an administrator in the past, their attempts failed as they needed to amend the legislation.

The move comes after students of Alliance University were affected due to the tussle for ownership between the two brothers in the past. The chancellor, Sudhir Angur, was recently arrested for allegedly hiring to kill former Vice-Chancellor Ayyappa R. Dore.

To fix loopholes in the medical seat counselling process, Mr. Ashwath Narayan said the government would ensure that from the coming year, all medical seats are surrendered before the mop-up round is conducted. This move will curtail instances of seat blocking. “We will have a meeting with private medical college managements and take them into confidence and ensure that we discuss the modalities with them,” he said. The State Medical Education department will coordinate with the Directorate General of Health Services that conducts counselling for all-India quota of medical and dental seats. A scam had come to light during search and seizure operations by the Income Tax department on two medical institutions.
NAAC, NBA accreditation must for engineering colleges: VTU

17/11/2019, STAFF REPORTER ,BENGALURU

The Visvesvaraya Technological University (VTU) has asked all its affiliated colleges to get accreditation by the National Assessment and Accreditation Council (NAAC).

The accreditation process will serve dual purpose, said officials. It will help improve the quality of education imparted in engineering colleges across the State and also enable VTU to identify good engineering colleges. More often than not, a large number of seats go vacant.

Colleges with good infrastructure and teaching faculty will receive good ratings and can attract more students. A senior official of the VTU pointed out while colleges are getting accreditation from the National Board of Accreditation (NBA), which is mandatory, many are not applying for NAAC despite directions from the All India Council of Technical Education (AICTE) and the University Grants Commission (UGC).

A circular in this regard was issued on November 4 directing all its affiliated colleges to apply for NAAC accreditation. “Accreditation from NBA is mandatory for all programmes offered in your institute. Further, the VTU also strongly recommends that institutional level accreditation be obtained from NAAC,” the circular read.

Heads of engineering colleges also pointed out that obtaining accreditation from these two agencies was a positive development and said that based on these ratings, institutions could get autonomy, deemed-to-be-university status and also funding from different sources. “Getting a good NAAC ranking helps us not only attract students, but improves our chances of getting funding for research work. We made a conscious effort to improve our NAAC ratings and worked on hiring more faculty members,” said a principal of a city-based engineering college.

NEWS TODAY 09.07.2026