Friday, November 29, 2019

WHEN RAIN IS A PAIN

Govt built storm drains but they don’t work

Drainage Infra Found Wanting As Parts Of Tambaram, Selaiyur, Madipakkam Go Under Water, Bringing Back Memories Of 2015

Ramesh Shankar & Siddharth Prabhakar TNN

29.11.2019

The spell of rain in Tambaram and nearby suburbs on Thursday laid bare the truth — stormwater drains do not matter when there is a heavy downpour. Areas that had stormwater drains and localities that did not have them were inundated, alike.

In Chitalapakkam, ill-planned construction of drains a few months before the monsoon left residents stranded in their homes. In Tambaram, Selaiyur and beyond, residents woke up to rising water levels on the streets.

People skipped offices not because it rained heavily, but because they could not venture out on the flooded streets. “There was knee-deep water in single-storey houses. Tambaram municipality has not constructed a channel to drain the excess water from Selaiyur lake,” said R Raguraman, a Selaiyur resident.

During the 2015 floods, people in these localities had to take refuge on terraces. “There is no planning, no learning. Only 60% of the water drained by the evening,” Raguraman said.

A few kilometers away on Velachery Main Road, the state highways had built stormwater drains but without any inlets. TOI saw an earthmover breaking a newly laid drain near the Selaiyur police office to let the water pass. “Inlets to the drain were made but they were blocked. Sewage is being let into the drains by nearby commercial establishments that blocked the flow,” said a highways official.

In Chitalapakkam, cut-and-cover drains built by public works department (PWD) and panchayat failed. “Three lakes in the vicinity were not properly desilted. Whenever it rains, the lakes overflow,” said Sunil Jayaram, a local resident.

While these were outside corporation limits, the situation was no different in the city. Rajesh Nagar First Street in Pallikaranai was under water for hours. At Tamaraikulam in Pallikaranai, people were confined to their homes. “There are storm drains nearby, but on our street the corporation has not built any,” said a resident of VJ Enclave in Pallikaranai.

Kuberan Nagar in Madipakkam has drains, but it went under half-a-feet of rainwater that remained stagnant for four hours. “Water has entered our homes,” tweeted Shanmughapriya, a resident of 11th Street.

“Drains have been constructed, but some work is pending at the end where the water has to drain into a canal. Kuberan Nagar is the only locality in Madipakkam where there was water logging,” he said a corporation official.


SAME OLD STORY: A spell of around 150mm rain was enough to throw regular life out of gear in the city’s southern parts. As stormwater drains failed, busy roads and residential areas were flooded. At Selaiyur, an earthmover was used to break open a drain to let water pass

Thursday, November 28, 2019

''ஓ, இதான் பிரியாணியா?''- வாழ்க்கையிலேயே முதல் முறையாக பிரியாணி சாப்பிட்ட குழந்தைகள்- நெகிழ்ச்சி நிகழ்வு!

Published : 27 Nov 2019 17:32 pm



பிரியாணி- நம்மில் சிலரின் தினசரி உணவாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலான பழங்குடியினக் குழந்தைகளுக்கு பிரியாணி என்னும் உணவு இன்னும் கனவாகவே இருக்கிறது. அத்தகைய குழந்தைகளுக்கு சுமார் 70 கிலோ பிரியாணியைச் சமைத்து வழங்கி, மகிழ்ந்திருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன்.

ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிக் குழந்தைகளுக்கு பிரியாணி சமைக்கப்பட்டு, சுடச்சுடப் பரிமாறப்பட்டிருக்கிறது.

பிரியாணி விருந்து

இதற்காக பர்கூரில் உள்ள கொங்காடை, போரதொட்டி, அக்னிபாவி, பேடரலா, சுண்டைப்போடு ஆகிய மலைக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் தாமரைக்கரை என்னும் பகுதிக்கு அனைத்துக் குழந்தைகளும் அழைத்து வரப்பட்டனர். பிரியாணி தயாராகும் வரை மேஜிக் கலைஞர், குழந்தைகளுக்கு சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். அத்துடன் ஏராளமான கதைகள் சொல்லப்பட்டன. படிப்பின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கப்பட்டது.

கோழி வறுவலுடன், ஆவி பறக்க சிக்கன் பிரியாணி தயாரானவுடன் சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.



மலைவாழ் குழந்தைகள் 300 பேருக்கு பிரியாணி பரிமாறும் எண்ணம் எப்படி வந்தது? தொழிலதிபர் கண்ணனிடமே கேட்டோம்.

''சிறு வயதில் இருந்தே பிறருக்கு உதவிகள் செய்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. ஏழ்மை நிலையில் வளர்ந்து, முதல் தலைமுறையாகத் தொழிலை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். இதற்கு என் தந்தை சொல்லித் தந்த நேர்மையும் பிறருக்கு உதவும் மனப்பான்மையுமே முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன்.

டெக்ஸ்டைல் தொழிலில் நேரடியாக 300 பேர் என்னிடம் பணிபுரிகின்றனர். மறைமுகமாக சுமார் 500 பேருக்கு வேலை கொடுக்கிறோம். அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறேன். ஊழியர்களை ஆண்டுக்கு இருமுறை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வோம்.

பண்டிகை உணவான இட்லி, தோசை

ஆரம்பத்தில் சேலத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவினேன். இதற்கிடையே நண்பர் ஒருவர் பர்கூரில் உள்ள மலைவாழ் குழந்தைகளின் நிலை குறித்துப் பேசினார். நானும் நேரடியாகப் போய்ப் பார்த்தேன். அவர்களும் பேசிக் கொண்டிருக்கும்போது சாப்பாட்டைப் பற்றிப் பேச்சு வந்தது. 'இட்லி, தோசை என்பது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை கால உணவு' என்றனர். சிலருக்கு பிரியாணி என்ற பெயர்கூடத் தெரிந்திருக்கவில்லை.

இன்னும் சிலருக்கு பிரியாணி என்ற பெயர் தெரிந்தது, ஆனால் ருசித்திருக்கவில்லை. 'அசைவம் என்பது எட்டாக்கனி' என்று ஏக்கத்தோடு கூறியவர்களை, சாப்பிட வைத்து சந்தோஷப்படுத்த ஆசைப்பட்டேன். தாத்தாவின் நினைவு நாளான நவ.24-ம் தேதி பிரியாணி வழங்க முடிவெடுத்தேன்.




நண்பர்களின் உதவியுடன் பிரியாணி சமைக்கத் தேவையான பொருட்களை ட்ரக்கில் ஏற்றி, தாமரைக்கரைக்குப் பயணமானோம். 70 கிலோ பிரியாணியும் சிக்கன் வறுவலும் அங்கேயே தயாரானது. சுமார் 13 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் 300 பேருக்கு அவற்றை வழங்கினோம். அத்தனை பேரும் ரசித்து, ருசித்து பிரியாணியை உண்டனர். இன்னும் சிலர் தயக்கத்துடன், 'வீட்டுக்கும் இதை எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டனர். அவர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்.

எதுவும் ஈடாகாது

பயத்தை உடைக்க, சுய அறிமுகப் படலம் குழந்தைகளுக்கு இடையே நடத்தப்பட்டது. அசைவ உணவு தயாராகும் வரை குழந்தைகளுக்கு இனிப்பையும் சாக்லேட்டுகளையும் வழங்கினோம். ''தாத்தா- பாட்டி காலத்துல, அவங்க வேட்டையாடி அசைவம் சாப்பிட்டதா சொல்லிக் கேட்டிருக்கோம். ஆனா எங்களுக்கு இன்னிக்கு வரை அது கனவாவே இருந்தது. இன்னிக்கு அது தீர்ந்துருச்சு!'' என்ற சிறுமியின் வார்த்தைகளுக்கு எதுவும் ஈடாகாது.

மலைவாழ் குழந்தைகளுக்கு அளித்த சாப்பாட்டால் மட்டுமே, அவர்களின் குறைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. ஏழ்மை நிலையில் இருந்தாலும் அந்தக் குழந்தைகள் அனைவரும் புத்திக்கூர்மையுடன் துறுதுறுவென இருந்தனர். அவர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். படிப்புக்கான அனைத்து உதவிகளையும் செய்யத் திட்டமிட்டுள்ளேன்'' என்கிறார் கண்ணன்.



வேட்டையாடி, அசைவத்தை மட்டுமே உண்டு வாழ்ந்த பழங்குடிகள் இன்று அசைவமே சுவைக்காமல் வளர்கின்றனர். இயற்கையின் குழந்தைகளான மலைவாழ் மக்களுக்கு போதிய ஊட்டச்சத்தும் தரமான கல்வி, சுகாதார வசதிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
மதுரை காமராசர் பல்கலை பொறுப்பு பதிவாளரின் காலநீட்டிப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு
மதுரை

28.111.2019

காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு வகிக்கும் ஆர்.சுதாவுக்கு கால நீடிப்புக்கு அலுவலர்கள், பேராசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுக்கிறது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளராக பணிபுரிந்த சின்னையா சில மாதத்திற்கு முன்பு, பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பதிலாக நிரந்தர பதிவாளர் நியமிக்கும் வரை அதே பல்கலைக்கழக பிரெஞ்ச் துறை பேராசிரியை ஆர். சுதா என்பவரை பொறுப்பு பதிவாள ராக நிர்வாகம் நியமித்தது.

இதைத் தொடர்ந்து நிரந்தர பதிவாளர் நியமனத்துக்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன், வெளியிடப்பட்டது. தகுதியான நபர்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தகுதிப் பட்டியலும் தயாரித்து, நேர்காணல் நடத்த இரு முறை தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும், சில நிர்வாக காரணத்தால் நேர்காணல் இதுவரை நடக்கவில்லை.

இந்நிலையில் பல்கலை பதிவாளர் பதவிக்கான ஓய்வு பெறும் வயதை எட்டிய நிலையிலும், பேராசிரியை ஆர்.சுதா தொடர்ந்து அந்த பொறுப்பில் நீடிக்கிறார்.

சிண்டிக்கேட் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே நிரந்தரப் பணியில் இருந்த பதிவாளர் சின்னையாவுக்கு 58 வயதில் பணி ஓய்வு அளிக்கப்பட்டது.

அதே போன்று சுதாவுக்கும் ஏன், ஓய்வு அளிக்கவில்லை என பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. இது தொடர்பாக காமராசர் பல்கலைக் கழகநிர்வாக அலுவலர்கள் சங்கம் கடந்த 22-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன், உயர்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

அதில், ‘‘ 58 வயதை கடந்த பொறுப்பு பதிவாளர் சுதாவுக்கு பணி ஓய்வு அளிக்கவேண்டும். அவருக்கு கால நீடிப்பு செய்யக்கூடாது. இது போன்ற நடவடிக்கை பல்கலை நிர்வாக விதிக்கு முரணாகும். நிரந்தர பதிவாளர் பொறுப்பு வகித்த சின்னையா உரிய நேரத்தில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.

அவரை உதாரணம் காட்டி பேராசிரியை சுதாவுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும். சிண்டிக்கேட் உறுப்பினர்கள் முடிவு செய்தாலும் நிர்வாக ரீதியாக துணை வேந்தர் பல்கலை நடைமுறை விதிகளை பின்பற்றவேண்டும், ’’ என குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பல்கலை அலுவலர்கள் சங்கத்தினர் கூறியது:

பல்கலையில் பதிவாளர் பொறுப்பு என்பது முக்கியமானது. பொதுவாக இப்பதவியில் இருப்போருக்கு 58 வயது வரை பணியில் இருக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனாலும், பொறுப்பு வகிக்கும் சுதாவுக்கு நவ., 23ல் முதல் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நிரந்தர பதிவாளரை நியமிக்கும் நடவடிக்கை தொடர்ந்து தாமதமாகிறது. அதற்கான பட்டியல் தயாரித்தும், நேர்காணல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேர்காணல் குழுவில் அரசு சார்பிலான பிரதிநிதி ஒருவர் இடம் பெறவேண்டும் என, அரசு தரப்பில் கூறப்படுகிறது.

ஆனாலும், அதற்கான முயற்சி மேற்கொள்ளவில்லை. இது பற்றி அரசாணை இருக்கிறது என்றால் அதை வெளியிடவேண்டும். சமீபத்தில் நடந்த சிண்டிக்கேட் கூட்டத்தில் பொறுப்பு பதிவாளாரே தொடர்ந்து நீடிக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த விஷயத்தில் ஒருசிலரின் கருத்துக்கு பிறகு சிண்டிக்கேட் உறுப்பினர்களும் ஒத்துழைப்பது தவறான முன்மாதிரியை ஏற்படுத்திவிடும்.

எனவே, நிரந்தரப் பதிவாளரை நியமிக்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். நிரந்தரப் பதிவாளர் இன்றி, பல்கலையில் புதிய நியமனம் அறிவிப்பு உள்ளிட்ட சில பணியில் தொய்வு நிலை ஏற்படும் சூழலும் நிலவுகிறது. துணைவேந்தர், உயர் கல்வித்துறை செயலர் இதில் கவனம் செலுத்தவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கிண்டி காவல் நிலையத்தில் காணாமல் போன காவலரின் பைக்: போதையில் திருடிய தனியார் வங்கி மேலாளர் கைது

28.11.2019 the hindu tamil

கிண்டி காவல் நிலையத்தில் காவலர் ஒருவர் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது. அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது மது போதையில் வாகனம் ஓட்டி சிக்கிய தனியார் வங்கி மேலாளர், தனது மோட்டார் சைக்கிள் என நினைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.

ஆலந்தூரைச் சேர்ந்தவர் அருண்குமார் (28). பரங்கிமலை ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றுகிறார். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த வாரம் கிண்டி காவல் நிலையத்தில் பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட தனது பல்சர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேருந்து ஏறி ஊருக்குச் சென்றுவிட்டார். பைக் நிறுத்திவிட்டுச் செல்லும் விஷயத்தை ஸ்டேஷனில் உள்ளவர்களிடம் சொல்லவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலை வெளியூரிலிருந்து கிண்டிக்கு வந்து இறங்கிய அருண்குமார், தனது பல்சர் மோட்டார் சைக்கிளை எடுக்க கிண்டி காவல் நிலையம் வந்தார். ஆனால் அவர் நிறுத்திய இடத்தில் மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. ஸ்டேஷன் முழுவதும் தேடியும் கிடைக்காததால் அதே ஸ்டேஷனில் குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்ற போலீஸார், ஸ்டேஷனில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது தள்ளாடியபடி வந்த டிப் டாப் உடையணிந்த நபர் ஒருவர் ஸ்டேஷனுக்குள் வருவதும், பின்னர் அருண்குமாரின் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதும் பதிவாகியிருந்தது. அவர் யார் என ஸ்டேஷனில் உள்ளவர்களை விசாரித்தபோது தெரியவில்லை.

பின்னர் அந்த சிசிடிவியை போலீஸார் ஆராய்ந்தபோது, அந்த நபர் கையில் போலீஸ் ரசீது ஒன்றுடன் வருவதைப் பார்த்துள்ளனர். அது போக்குவரத்து போலீஸார் கொடுக்கும் ரசீதுபோல இருக்கவே போக்குவரத்து போலீஸாரை அழைத்து விவரம் கேட்டுள்ளனர்.

அதில் ஒருவர், ''அந்த நபர் நேற்று முன் தினம் இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதில் சிக்கினார். ஏதோ தனியார் வங்கியில் மேனேஜராக இருக்கிறேன் என்று சொன்னார். பல்சர் மோட்டார் சைக்கிள் வாகனத்தையும், லைசென்ஸ் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துவிட்டு அபராதம் கட்டிவிட்டு வந்து வண்டியை வாங்கிக் கொள்ளச்சொல்லி அனுப்பி விட்டோம்'' என்று கூறினார். அப்போதுதான் அந்த நபர் காவலர் அருண்குமாரின் பைக்கை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் அவரின் லைசென்ஸில் உள்ள முகவரியைப் பார்த்தபோது அருண்ராஜ் (27), புது பெருங்களத்தூர் என்று இருந்தது. உடனடியாக போலீஸார் அங்கு விரைந்தனர். வீட்டில் அருண்ராஜ் இருந்துள்ளார்.

போலீஸார் அவரைப் பிடித்து, “மோட்டார் சைக்கிள் எங்கே?” என்று கேட்டபோது ''எந்த வண்டி?” என்று கேட்டுள்ளார். “கிண்டி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திருடிக்கொண்டு வந்தாயே அந்த வண்டி” என்று போலீஸார் சொல்ல, “சார் ஒழுங்கா பேசுங்க. என் வண்டி இன்னும் ஸ்டேஷனில்தான் நிற்குது” என்று கூறியுள்ளார். ”அப்படியா இப்ப இன்னொரு வண்டிய எடுத்துட்டு வந்தாயே. அது எங்க சொல்லு” என்று போலீஸார் சிசிடிவி காட்சியைக் காட்டி கேட்க, அப்போதுதான் அவர் இறங்கி வந்துள்ளார்.

சார் எல்லா விஷயத்தையும் சொல்லி விடுகிறேன் என்று நடந்த அனைத்து விஷயங்களையும் கடகடவென்று தெரிவித்துள்ளார்.

“சார் 25-ம் தேதி இரவு என் பல்சரில் மது போதையில் வீட்டுக்குப் போகும்போது கிண்டி போலீஸார் பிடித்தார்கள். வண்டியைப் பறிமுதல் செய்துவிட்டு கேஸ் போட்டு அபராதம் கட்டிட்டு வண்டிய எடுத்துட்டு போன்னு சொல்லிட்டாங்க.

வண்டி இல்லாமல் போனால் அம்மா திட்டுவாங்க, அதனால் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தேன், அதிகாலையில் ஸ்டேஷன் பக்கம் போனேன். பார்த்தால் என் வண்டி அங்கே தனியாக நின்று கொண்டிருந்தது. போதை தெளிந்தும் தெளியாத நிலையில் வண்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போனேன்.

அப்ப ஒரு பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்துவிட்டேன். மறுபடியும் வண்டியை எடுத்தால் வண்டியின் முன்பக்க போர்க் பெண்டாகி ஓட்ட முடியவில்லை. காலையில் என் நண்பர் மெக்கானிக்கிடம் வண்டியை விட்டேன். அவர் வண்டியைப் பார்த்துவிட்டு, ''இது யார் வண்டி. பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் இருக்கே என்று கேட்டார். அப்பத்தான் வண்டியையே பார்த்தேன். என் வண்டி இல்லை. போதையில் யாருடைய வண்டியையோ எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்'' என்று புரிந்தது.

நண்பர் வண்டி என்று சொல்லி சமாளித்து, வண்டியை ரெடி பண்ணினேன். சரி இதே நம்பருடன் வண்டியை வீட்டுக்குக் கொண்டு சென்றால் அம்மா கண்டுபிடித்து திட்டிவிடுவார் என்று பயந்து என் வண்டியின் எண் கொண்ட நம்பர் பிளேட்டைத் தயார் செய்து மாட்டினேன். பின்னர் இந்த வண்டியைக் கையில் வைத்திருந்தால் சிக்கல் ஆகிவிடும் என்று தாம்பரம் ரயில் நிலைய ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

அருண்ராஜ் சொன்ன கதையைக் கேட்டு சிரித்த போலீஸார் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது தப்பு, வாகனத்தைப் பறிமுதல் செய்த பின்னர் அபராதம் செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்லாமல் ஸ்டேஷனுக்குள் நுழைந்து வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளாய், அதுவும் வேறொருவர் பைக் அது. பின்னர் நம்பர் பிளேட்டையும் மாற்றி ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துள்ளாய்.

எத்தனை குற்றங்கள் செய்துள்ளாய்? தப்பு மேல் தப்பு செய்துள்ளாய் என்று தெரிவித்து மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்து, மேற்கண்ட குற்றங்களுக்காக அருண்ராஜைக் கைது செய்தனர். மெக்கானிக்கை அழைத்து விசாரித்தனர். அவர் மீது தவறில்லை என்றவுடன் விடுவித்தனர்.
நான் என்ன பில்லாவா? ரங்காவா?'; சிதம்பரம் தரப்பு வாதம்

Updated : நவ 28, 2019 06:03 | Added : நவ 28, 2019 05:58

புதுடில்லி: 'ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், கார்த்தியின் தந்தை என்பதற்காக மட்டுமே சிதம்பரத்துக்கு குறி வைக்கப்பட்டுள்ளது. ஜாமின் தராமல் மறுக்க அவர் என்ன பில்லாவா? ரங்காவா?' என அவரது வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்.

பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் டில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரப்பட்டது. அவரது ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் 20ல் நிராகரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று(நவ.,27) விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

கபில் சிபல் வாதாடுகையில் கூறியதாவது: சிறையில் சிதம்பரத்துக்கு இது 99வது நாள். அமலாக்கத்துறை இதுவரை அவரிடம் விசாரணை எதுவும் நடத்தியது கிடையாது. எந்த ஒரு சாட்சியையும் அவர் எதிர்கொள்ளவில்லை. இந்த முறைகேட்டில் தொடர்புடையவனாக காட்டும் எந்த ஆதாரத்தையும் இதுவரை கண்டறியப்படவில்லை. அவர் வெளிநாடு தப்ப மாட்டார்; சாட்சியையும் கலைக்க மாட்டார். ஆனாலும் இவர் ஏதோ பில்லா, ரங்கா போல இவருக்கு ஜாமின் மறுக்கப்படுகிறது.

'முக்கிய நபர்' என அழைப்பதால் மட்டுமே அவர் சிறையில் இருக்கிறார். கார்த்தியின் தந்தை என்பதால் மட்டுமே அவருக்கு குறி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கபில் சிபல் வாதாடினார். ஆனாலும் அவரது வாதத்தை ஏற்காத நீதிபதிகள், சிதம்பரத்தின் காவலை டிச.,11 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
காளஹஸ்தியில் பலி பூஜை தமிழகத்தை சேர்ந்த ஐவர் கைது

Added : நவ 27, 2019 23:58

திருப்பதி, காளஹஸ்தியில் பலி பூஜை நடத்திய தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேரை காளஹஸ்தி போலீசார் கைது செய்தனர்.ஆந்திரமாநிலம் காளஹஸ்தியில் உள்ள பைரவகோண மலையில் காலபைரவர் கோவில் உள்ளது. ஆங்கில புத்தாண்டு மகாசிவராத்திரி உள்ளிட்ட சில விசேஷ தினங்களை தவிர்த்து மக்கள் இங்கு அதிகம் வர மாட்டார்கள்.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சிலர் இங்கு பலி பூஜை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அமாவாசையை முன்னிட்டு இக்கோவிலில் தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி பூஜை நடத்தினர்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் காளஹஸ்தீஸ்வரன் கோவிலில் பணிபுரியும் ஊழியர் ஒருவரையும் கைது செய்தனர்.இதுகுறித்து 24 மணிநேரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என காளஹஸ்தி போலீஸாருக்கு ஆந்திர அறநிலையத்துறை அமைச்சர் சீனிவாஸ் உத்திரவிட்டுள்ளார்.
மருத்துவ இயக்குனருக்கு ஆணையம், 'நோட்டீஸ்'

Added : நவ 27, 2019 22:10

சென்னை: மனநல காப்பகத்தில், பெண் கைதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பதில் அளிக்கும்படி, மருத்துவ கல்வி இயக்குனருக்கு, மாநில மனித உரிமை ஆணையம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள், 65. கொலை வழக்கில், சிறை தண்டனை பெற்று, வேலுார் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.

அவர், மன உளைச்சலில் பாதிக்கப் பட்டிருந்ததால், சென்னையில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், சிகிச்சை பெற்று வந்தார்.அவரை, உறவினர்கள் பார்க்க வராததால், மன அழுத்தம் காரணமாக, இம்மாதம், 21ம் தேதி, மனநல காப்பக குளியல் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுவோரின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.இது குறித்து, மாநில மனித உரிமை ஆணையம், வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன், மருத்துவ கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'மனநல காப்பகத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஐந்து வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.

NEWS TODAY 10.07.2026