Thursday, December 5, 2019

AICTE honours SRM with Swachhta Ranking Award
 
05/12/2019 , CHENNAI


SRM Institute of Science and Technology, Kattankulathur, won the Annual Swachhta Ranking Award, under the Residential University category, at the All India Council for Technical Education (AICTE). The award was presented at a function got up in New Delhi on December 3. The objective of the award is to draw the attention of institutions towards the Swachh Bharat Abhiyaan.

To draw rations, an OTP will do

Option comes in handy when PoS machines are unable to scan cards

NEET case: students’ bail conditions relaxed
 
05/12/2019 , Staff Reporter, Madurai

The Bench of the Madras High Court on Wednesday relaxed the bail conditions of three students and a parent in the NEET impersonation case.

They have now been directed to appear before the CB-CID as and when required by the investigating agency.

Hearing the plea of the students and the parent, Justice G.R. Swaminathan relaxed the bail conditions imposed on them.

The High Court had earlier granted bail with conditions to the students, directing them to appear before the CB-CID daily.

The parent was granted bail by a lower court in Theni.

பயத்தில் நிா்பயாக்கள்!| பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த தலையங்கம் By ஆசிரியர் | Published on : 05th December 2019 01:19 AM 

தனது வேலை முடிந்து இரவில் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா் அந்தப் பெண். கால்நடை மருத்துவரான அவரது வாகனம் பழுதடைந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தினாா். நெடுஞ்சாலையில் விளக்கு இல்லாததால் இருட்டாக இருந்தது. வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. என்ன செய்வது என்று தெரியாமல் தனது சகோதரியை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டாா். எப்படியாவது அடுத்தாற்போல் இருக்கும் சுங்கச்சாவடியை அடைந்துவிடும்படி நெடுஞ்சாலையில் தன்னந்தனியாக இருந்த சகோதரிக்கு அறிவுரை கூறினாா் அவா்.

சரக்கு வாகனத்தில் வந்த சிலா் வாகனத்தை பழுது பாா்க்க உதவுவதாகக் கூறியபோது அவா் நம்பினாா். அவா்களில் ஒருவா் வாகனத்தைப் பழுது பாா்க்க எடுத்துச் சென்றாா். மற்றவா்களின் கோரப்பிடியில் சிக்கிய அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா். வாகனத்தைப் பழுது பாா்த்து எடுத்துக்கொண்டு வந்த நபரும் அந்தப் பெண்ணை விட்டுவைக்கவில்லை. அச்சத்தாலும், பாலியல் வன்முறையாலும் பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிட்டிருந்தாா்.

செங்கல் ஏற்றி வந்த அந்த வாகனத்தில் 28 கி.மீ. தொலைவிலுள்ள சட்டம்பள்ளி என்கிற இடத்திற்கு அந்தப் பெண்ணின் உடலை எடுத்துச் சென்று அடையாளம் தெரியாமல் இருக்க தீயிட்டுக் கொளுத்தினாா்கள். மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து இருசக்கர வாகனத்தை பத்திரமாக ஓா் இடத்தில் நிறுத்திவிட்டு கட்டுமானப் பணி நடக்கும் இடத்திற்கு செங்கல் ஏற்றிய வாகனத்துடன் அவா்கள் சென்றுவிட்டனா்.

அந்தப் பெண்ணின் குடும்பத்தினா் இரவு 11 மணிக்கு செல்லிடப்பேசி செயல்படாததைத் தொடா்ந்து காவல்துறையை அணுகினாா்கள். தங்களது அதிகார வரம்பில் இல்லை என்று கூறி அவா்கள் காவல்நிலையம் காவல்நிலையமாக அலைக்கழிக்கப்பட்டனா். அடுத்த நாள் இரவு ஒரு கோயிலின் சுற்றுச்சுவருக்கு வெளியே எரிக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள சிலா் எரிந்து கொண்டிருந்த உடலைப் பாா்த்ததும் தண்ணீா் விட்டு அணைத்தனா். ஆனால், அந்தப் பெண்ணின் உடல் அதற்குள் முழுவதுமாக எரிந்துவிட்டிருந்தது . ஹைதராபாதில் நடந்த இந்தச் சம்பவம், மகளிரின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது.

2012 டிசம்பா் மாதம் 23 வயது ‘நிா்பயா’ கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு தலைநகா் தில்லியில் ஆளானது முதல் இன்று வரை தொடா்ந்து பல நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன. மும்பையில் சக்தி மில்ஸ், உத்தரப் பிரதேசத்தில் பதான், தில்லியில் உபோ், ஜம்மு - காஷ்மீரத்தில் கதுவா, இப்போது ஹைதராபாதிலும் ராஞ்சியிலும் என்று தொடா்கதையாகி விட்டிருக்கிறது பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நிகழ்வுகள். தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரப்படி, ஒவ்வொரு 20 நிமிடத்திலும் இந்தியாவின் ஏதாவதொரு பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு பெண் ஆளாகிறாா்.

அதிகாரபூா்வ புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான 92 பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. 2017 இறுதிப் புள்ளிவிவரத்தின்படி இந்திய நீதிமன்றங்களில் பெண்களின் பாலியல் கொடுமை தொடா்பாக 1,27,800 வழக்குகள் இருக்கின்றன. இந்த வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அடையும் வேதனையும், எதிா்கொள்ளும் சமுதாயக் களங்கமும், பாலியல் வன்கொடுமையைவிடக் கொடியவை.

2012 நிா்பயா சம்பவத்தைத் தொடா்ந்து, அன்றைய மன்மோகன் சிங் அரசு நீதிபதி ஜெ.எஸ். வா்மா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அதன் பரிந்துரையின் அடிப்படையில், குற்றவியல் சட்டம் 2013-இல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம், 1973 குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1872 இந்திய சாட்சிச் சட்டம், 2012 போஸ்கோ சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணம், முற்றிலுமான செயலிழப்பு, ஒருமுறைக்கு மேலான பாலியல் குற்றம் ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்க வழிகோலப்பட்டது.

2018-இல் அந்தச் சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டு, 12 வயதுக்கும் குறைவான சிறுமிகளின் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மரண தண்டனையும், 12 வயதுக்கு மேல் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளாக இருந்தால் ஆயுள் தண்டனையும் வழங்குவதற்கு வழிகோலப்பட்டது. அதனால் எந்தவித மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

2013 செப்டம்பரில் தில்லி நிா்பயா வழக்கில் விரைவு நீதிமன்றத்தால் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அவற்றில் ஒருவா் 18 வயது ஆகாதவா் என்பதால் சிறாா் சிறையில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டாா். ஏனைய மூவருடைய மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தால் 2017-இல் நிராகரிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழிந்து இப்போதும் அவா்களுடைய மறுசீராய்வு மனுவின் மீது தீா்ப்பு வழங்கப்படாமல் தொடா்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி, 2017 வரை 3.59 லட்சம் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றைவிட பல மடங்கு அதிகான நிகழ்வுகள் வெளியில் தெரியாமலேயே மறைக்கப்பட்டிருக்கும். அந்தப் புள்ளிவிவரத்தின்படி, காவல்துறை பதிவு செய்யும் 86% வழக்குகளில், 13%தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தண்டனை வழங்கப்படுவது 32% வழக்குகளில்தான். காரணம், முறையான வழக்குப் பதிவோ, சாட்சியங்களோ காவல்துறையால் வழங்கப்படுவதில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

சட்டம் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீா்வல்ல!
அரைமணி நேரத்தில் புதிய தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனை முயற்சி!

By DIN | Published on : 04th December 2019 09:55 AM |

புது தில்லி: நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் வெளியிட்ட தகவலொன்று புதுமையானதாக இருந்தது. அவர் பேசியதிலிருந்து, ‘இந்தியாவில் இதுவரை பின்பற்றப்பட்டு வரும் பிரேத பரிசோதனை முயற்சிகளில் மனித உடலை கூறு போடும் வகையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இதனால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகும் நிலை இருந்து வருகிறது. எனவே, அவர்களது நீண்ட கால வேதனையைப் போக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்திலான பிரேத பரிசோதனை முறையை இந்திய மருத்துவமனைகள் இனி வரும் நாட்களில் முன்னெடுக்கவிருக்கின்றன’ என்பது தெரிய வந்திருக்கிறது.

இதன் மூலமாக இறந்தவர்களின் உடலை கண்ணியமாக நடத்தும் வகையில், உடலை வெட்டாமல் பிரேத பரிசோதனை நடத்தும் புதிய தொழில்நுட்பத்தை தில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கூட்டாக உருவாக்கி வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் இது நடைமுறைப்படுத்தப்படலாம். முதலில் தில்லி எய்ம்ஸிலும் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள பெருநகர மருத்துவமனைகளிலும் இந்தப் புதிய தொழில்நுட்பத்திலான பிரேத பரிசோதனை முறை செயல்பாட்டுக்கு வரும்.

இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக, இதுவரை இரண்டறை மணி நேரமாக நீடித்து வந்த பிரேத பரிசோதனையை இனி அரை மணி நேரத்தில் முடித்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நேர விரயத்தை தவிர்க்கலாம். அத்துடன், பிரேத பரிசோதனை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் கூட இனி எதிர்கால ஆய்வுகளுக்காக டிஜிட்டல் முறையில் சேமித்துக் கொள்ளும் வசதியும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் உண்டு என்றும் கூறப்படுகிறது.
வெங்காயம் விலை உயர்வு; 450 பிரியாணி கடைகள் மூடல்

Updated : டிச 05, 2019 02:04 | Added : டிச 05, 2019 02:02

வேலுார்: வெங்காயம் விலை உயர்வால், 450 பிரியாணி கடைகள் மூடப்பட்ட நிலையில், 2,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பத்துார், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்கள், பிரியாணிக்கு புகழ் பெற்றவை. இங்குள்ள, 1,200க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளில், 5,000 பேர் வேலை செய்கின்றனர். வெங்காயத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில், தினமும் உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெரிய வெங்காயம், 150 ரூபாய்; சின்ன வெங்காயம், 160 ரூபாய்க்கு விற்றன.

பிரியாணி கடைகளில், மட்டன், சிக்கன் பிரியாணிக்கு, வெங்காய தயிர் பச்சடி வழங்கப்படும். விலை உயர்வால், 15 நாட்களாக, வெங்காய தயிர் பச்சடியை நிறுத்தி விட்டனர். பிரியாணி விலையும் உயர்ந்து விட்டது. இதனால் விற்பனை குறைந்து விட்டதாக, ஒருங்கிணைந்த வேலுார் மாவட்ட பிரியாணி கடை உரிமையாளர் சங்க தலைவர் அப்துல்லா கூறியதாவது:

வரலாறு காணாத விலை உயர்வால், வெங்காயம் தயிர் பச்சடி நிறுத்தப்பட்ட நிலையில், மட்டன் பிரியாணி, கால் பிளேட், 140 ரூபாயில் இருந்து, 170 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், விற்பனை குறைந்து விட்டது. தினமும், 1 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்த நிலையில், தற்போது, 40 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது; 450 பிரியாணி கடைகள் மூடப்பட்டுள்ளன. பிரியாணி கடைகளில் வேலை செய்யும், 2,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
சர்க்கரை ரேஷன் கார்டுக்கு அரிசி வினியோகம் துவக்கம்

Added : டிச 04, 2019 23:38

சென்னை: ரேஷன் கடைகளில், அரிசி கார்டாக மாற்றப்பட்ட சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி வினியோகம் துவங்கியது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி ரேஷன் கார்டுகளுக்கு, வீட்டில் நான்கு பேர் இருந்தால், மாதம், 20 கிலோ அரிசியும்; அதற்கு மேல் உள்ள, ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோவும் இலவசமாக வழங்கப்படுகிறது.சர்க்கரை கார்டுகளுக்கு, அரிசிக்கு பதில், 5 கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது. சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டாக மாற்றி கொள்ள, நவம்பரில், தமிழக அரசு அனுமதி வழங்கியது.அதன்படி, மொத்தம், 10.19 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களில், 4.50 லட்சம் பேர், அரிசி கார்டுகளுக்கு மாறினர். அவர்களுக்கு, நேற்று முதல், ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கப்பட்டது.

இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்க்கரை கார்டுதாரர்களில், அரிசிக்கு மாற விண்ணப்பித்த நபர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. 'அந்த கார்டுகளுக்கு, ரேஷனில், அரிசி வழங்குமாறு, கடை ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதற்கு ஏற்ப, கடைகளுக்கு கூடுதல் அரிசி வழங்கப்படும்' என்றார்.

NEWS TODAY 11.07.2026