Thursday, February 20, 2020

93 வயதில் முதுகலைப் பட்டம்: அமைச்சர் பாராட்டிய தமிழரின் வெற்றிக் 
கதை!  20.02.2022




மனைவி படுத்த படுக்கையாக இருந்த நிலையில், மகன், மகள்கள், பேரக் குழந்தைகள் உள்ள சூழலில் 87 வயதில் தனது பட்டப் படிப்பைத் தொடங்கிய இளைஞர் சிவசுப்பிரமணியம் தனது 93-வது வயதில் மத்திய அமைச்சர் கையால் முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், 90 வயது இளைஞர் என்று சிவசுப்பிரமணியத்தைப் பாராட்டியுள்ளார்.

யார் இந்த முன்னுதாரண இளைஞர்?

தமிழகத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் 1940களில் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தார். தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டவருக்கு திருச்சி அல்லது சென்னை செல்ல வேண்டிய நிலை. தாய், தந்தையரின் உடல்நிலை மோசமானதால், அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு சிவசுப்பிரமணியத்துக்கு வந்தது. சொந்த ஊரிலேயே வேலைக்குப் போக ஆரம்பித்தவர், அங்கிருந்தே பெற்றோரைக் கவனித்துக் கொண்டார்.

சில வருடங்களில், டெல்லிக்குக் குடிபெயர்ந்தார் சிவசுப்பிரமணியம். மத்திய அரசின் வர்த்தகத் துறையில் குமாஸ்தா பணி கிடைத்தது. அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்தும் பட்டதாரியாக இல்லாததால், போக முடியாத நிலையை வருத்தத்துடன் நினைவுகூர்கிறார் சிவசுப்பிரமணியம்.

தொலைதூரக் கல்வி படிக்க ஒருமுறை வாய்ப்பு கிடைத்தும் பணியிட மாற்றத்தால் அவரால் படிக்க முடியாமல் போனது. தொடர்ந்து துறைத் தேர்வுகளை எழுதிக் கொண்டே வந்த சிவசுப்பிரமணியம் ஓய்வு பெறும்போது துறையின் இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்திருந்தார். என்றாலும் பட்டதாரியாக வேண்டும் என்ற அவரின் ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை.

பணி ஓய்வுக்குப் பிறகும் குடும்பச் சூழல் காரணமாகப் படிக்க முடியவில்லை. சிவசுப்பிரமணியத்தின் 87-வது வயதில், அவரின் மனைவி படுத்த படுக்கையானார். அவரைத் தினசரி பொறுப்பாகக் கவனித்துக் கொண்டார் சிவசுப்பிரமணியம். அவரின் மனைவிக்கு பிஸியோதெரபிஸ்ட் ஒருவர் தினசரி பயிற்சிகள் அளித்து வந்தார். இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு படிப்புக்கு விண்ணப்பிக்க சற்று முன்னதாகக் கிளம்ப வேண்டும் என்றுகூறி பிஸியோதெரபிஸ்ட் அனுமதி கேட்டார். அப்போது தானும் அங்கு படிக்க முடியுமா என்று சிவசுப்பிரமணியம் கேட்டார்.

இக்னோவில் படிக்க வயது ஒரு தடையில்லை என்று தெரிந்தவுடன் பொது நிர்வாகவியல் படிப்புக்காக விண்ணப்பித்தார். படித்து முடிக்கும் வரை உயிருடன் இருப்பேனா என்று தெரியாது என்று தனது குழந்தைகளிடம் சொன்ன சிவசுப்பிரமணியம் வெற்றிகரமாக இளங்கலை முடித்து முதுகலைப் படிப்புக்கும் விண்ணப்பித்தார்.

கடந்த 6 ஆண்டுகளாக தினசரி 5 மணிக்கு எழும் அவர், படிப்பில் ஆழ்ந்துவிடுகிறார். வயது காரணமாக கையெழுத்து மாறிவிட்டதால், அவரின் மகள் அசைன்மென்ட் எழுதிக் கொடுக்கிறார். தேர்வுகளின்போது உடன் சென்று தேர்வையும் எழுதிக் கொடுக்கிறார்.

நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்

சிவசுப்பிரமணியம் இளங்கலைப் பட்டம் பெற்றபோது மனைவி தனது கடைசிக் காலகட்டத்தில் இருந்தார். மனைவியிடம் கொண்டுபோய் பட்டத்தைக் கொடுத்தவர், ''கடைசியாக, உன் கணவன் பட்டதாரி ஆகிவிட்டேன்!'' என்று கூறியுள்ளார். அடுத்த இரண்டு நாட்களில் மனைவி காலமானார்.

தனது வருங்காலத் திட்டங்கள் குறித்து உற்சாகத்துடன் பேசும் அவர், ''எனக்கு எம்.பில். படிக்க ஆசை. ஆனால் என் மகள், நீங்கள் விண்ணப்பித்தால் உடனே இடம் கிடைத்துவிடும். அதனால், இன்னொருவரின் வாய்ப்பைப் பறிக்க வேண்டாமே என்று கேட்டுக்கொண்டார்.

அதனால் வேறு ஏதாவது முதுகலைப் பட்டத்தைப் படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார் இந்த 93 வயது இளைஞர்.

முயற்சிக்கும் வெற்றிக்கும் வயது ஒரு தடையே இல்லை என்று இளைஞர்களுக்கும் சேர்த்து உரக்கச் சொல்கிறார் சிவசுப்பிரமணியம்.


வார்த்தைகள் நம்மை ‘சிவப்பழகு’ ஆக்குவதில்லை



20.02.2020

ஏதேனும் ஒரு இடத்தில் நின்றுகொண்டு, பரபரப்பான சாலையில் சென்றுகொண்டிருப்பவர்களின் முகங்களைப் பார்ப்போம். எத்தனை முகங்கள்! எத்தனை நிறங்கள்! ஒவ்வொரு முகமும் அதற்கெனத் தனித்த அடையாளங்களைக் கொண்டிருக்கிறது. அந்த முகங்களுக்கெல்லாம் ஒரே முகமூடியை அணிவிப்பது என்பது எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கும்? ஆனால், இத்தனை வருடங்களும் கேள்வி கேட்காமல் அதற்கு ஒப்புக்கொள்வதுபோல்தான் இருந்திருக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் ‘சிவப்பழகு’ கிரீம்களைப் பயன்படுத்துமாறு விளம்பரங்கள் சொல்லும்போதெல்லாம் நாம் அதை ஏற்றுக்கொண்டிருந்தோம், பின்பற்றவும் செய்தோம். எல்லோரையும் அவர்களின் சுயமான நிறத்திலிருந்தும் தோற்றத்திலிருந்தும் மாறிவிடுமாறு அறிவுறுத்தும் விளம்பரங்கள் அவை. அந்த விளம்பரங்கள் காட்டியவையும் சொன்னவையும் நம்மை ஈர்த்திருந்தன. அதிலும் குறிப்பிட்ட கிரீம்களைப் பூசியவுடன் அதிலிருந்து கருப்பு நிறம் பொடிப்பொடியாய் உதிர்வதுபோலவும், சிவப்பாக மாறுவதுபோலவும் காட்டியதெல்லாம் எத்தனை பெரிய அராஜகம்?

நிற அரசியல்

தோலின் நிறம் என்பது நம்முடைய அடையாளம். நமது மரபும் மண்ணும் சார்ந்தது. நமது முன்னோர்கள் வழிவந்தது. நம் பெற்றோர் அவர்களின் பெற்றோரைக் கண்டடைவது நமது முகத்தோற்றம் வழியாகவும்தான். இதை மாற்ற வேண்டும் என்று அழகுசாதன கிரீம் விற்பனையாளர்கள் காலம்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கருப்பு என்பது ஒரு நிறம். ஆனால், அது தாழ்வுக்குண்டானது என்பதைப் பல நூற்றாண்டு களாக மனதில் பதிய வைத்தது இன்றும் ‘விளம்பர’மாய்த் தொடர்கிறது. நிறத்தை வைத்து இனம் பிரித்து, அடக்கி வைத்த கொடுமைகளை இந்த உலகம் பார்த்திருக்கிறது. கருப்பாகப் பிறந்த ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டு உயிரை விட்டவர்களும், உரிமையை இழந்தவர்களும் வரலாறு முழுவதும் நமக்குக் கிடைக்கிறார்கள். ‘சிவப்பழகு’ கிரீம் விற்பனையாளர்களும் அதற்கு இரையாகுபவர்களும் இந்த வரலாறு தெரியாதவர்கள் அல்ல. ஆனாலும், ‘சிவப்பழகு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விளம்பரங்களை வெற்றிகரமாகச் செய்ய முடிந்திருக்கிறது. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களையும் எங்கள் வலைகளில் வீழ்த்த முடியும் என்று ஆண்களுக்கான ‘சிவப்பழகு’ கிரீம்களையும் சந்தைக்குக் கொண்டுவந்து அதற்கென விளம்பரங்களும் தந்தார்கள். இப்படி இவர்கள் செய்வதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பகடிசெய்திருக்கிறார்கள்.

விபரீதமான விளம்பரங்கள்

இவற்றையெல்லாம் எதிர்த்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குரல் எழுப்பியதன் விளைவாக, இப்போது இதுபோன்ற விளம்பரங்களுக்கு அரசு தடை கொண்டுவரவிருக்கிறது. இதுபோன்ற அழகு சாதனப் பொருட்கள் மட்டுமல்ல; போலியான வாக்குறுதிகள் தரும் அத்தனை விளம்பரங்களுக்கும் தடை கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது அரசாங்கம். அதன்படி தொடர்ந்து இப்படிப் போலி விளம்பரங்கள் செய்தால் ஐந்து வருட சிறைத் தண்டனையும், ஐம்பது லட்சம் அபராதமும் நிச்சயம் என்கிறது அரசாங்கம். இதைச் சட்டமாக்கும் முயற்சியும் நடந்துவருகிறது.

போலி விளம்பரங்களுக்கான தடையை உலக நாடுகள் பலவும் கொண்டுவந்துள்ளன. ஏனெனில், அந்த நாடுகள் இதனால் கடும் பாதிப்படைந்திருந்தன. ஆப்பிரிக்காவின் நிறம் கருப்பு. அங்கும் சருமத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் விளம்பரங்கள் இறங்கியதன் விளைவு, பலருக்கும் கடுமையான தோல் பாதிப்புகள் ஏற்பட்டன. புற்றுநோய் வரை சென்ற பிறகு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் உடனடி தடையைக் கொண்டுவந்தார்கள்.

புற்றுநோய் போன்ற சரும நோய்களின் அபாயம் காரணமாகவே இதுபோன்ற விளம்பரங்களுக்குத் தடை என்று அரசாங்கக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், அதைவிட மோசமானது இந்த விளம்பரங்கள் ஏற்படுத்தும் உளவியல்ரீதியான தாக்கம். இந்தியா போன்ற நாட்டில் நிறம் சார்ந்த தாழ்வுணர்வு என்பது எல்லா மட்டத்திலும் நிறைந்திருக்கிறது. திருமணம், பிள்ளைப் பேறு என எல்லாவற்றிலும் நிறம் சார்ந்த விமர்சனத்தை ஒரு பெண் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அதனாலேயே இந்தியாவில் அழகு சாதனப் பொருட்களின் விற்பனை லட்சக்கணக்கான கோடிகளில் உயர்ந்திருக்கிறது.

போலி வாக்குறுதிகள்

‘மணமகன் தேவை’ விளம்பரங்களில் ‘பெண் சிவப்பு நிறம்’ என்பதை ஒரு தகுதியாகக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குத்தான் நாம் இருக்கிறோம். 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் ‘எல்’ (Elle) பத்திரிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தைத் தனது அட்டையில் வெளியிட்டது. அப்போது ஐஸ்வர்யா ராய்க்கு வயது 37. உலக அழகிப் பட்டம் வென்றதோடு மட்டுமல்லாமல், நல்ல நடிகையாகவும் இந்தியாவின் முகம் என்றும் அறியப்பட்டவர். ஆனாலும், அட்டைப்படத்தில் தோலின் நிறத்தைப் பளிச்சென வெள்ளை நிறத்தில் அமையுமாறு மாற்றியிருந்தார்கள். இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஏற்கெனவே, அதே பத்திரிகை வேறு சில ஆப்பிரிக்க நடிகைகளின் புகைப்படத்தையும் இப்படி ‘வெள்ளையாய்’ மாற்றி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவும் ஒருவகையில் நிறத்தின் மீதான சமகாலத் தாக்குதல்தான். பெண்களுக்குத் தோல் மீதான தாக்குதல் என்றால், குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தின சில ‘ஆரோக்கிய’ பானங்கள். ‘எங்களுடைய ஆரோக்கிய பானத்தில் நாங்கள் சத்துள்ளவற்றைச் சேர்த்திருக்கிறோம்’ என்று அம்மாக்களுக்குப் போலி வாக்குறுதி தந்தது போக, நேரடியாகக் குழந்தைகளிடம் ஆபத்தான உரையாடலைத் தொடங்கின இந்த விளம்பரங்கள். எங்கள் பானத்தை அருந்தினால் விரைவில் உயரமாக வளர்ந்துவிடலாம் என்கிற உத்தியுடன் வரத் தொடங்கின விளம்பரங்கள். ஒருவரின் உயரம் என்பது இயற்கையானது. நம்முடைய மரபு சார்ந்தது. ஆனால், உயரம் குறைவாக இருப்பதென்பது மிகத் தாழ்வான ஒன்று என்று குழந்தைகள் மனதில் இவர்கள் விதைத்ததெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத தவறான பிரச்சாரம்.

‘எங்களது ஆரோக்கிய பானம் உங்களை ஆக்குமே பலசாலியாகவும் புத்திசாலியாகவும்’ என்று சொல்லும் விளம்பரங்கள் அப்படி எத்தனை பேரை மாற்றியிருக்கின்றன என்பதை நாம் கேள்வி கேட்பதுமில்லை; அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. வெறும் சொற்களுக்கு மட்டுமே மயங்கி, இந்த விற்பனையாளர்களின் வர்த்தகத்தை சமூகம் உயர்த்திக்கொண்டிருக்கிறது. ருசி கண்ட பூனைகளும் தங்களது மாயாஜால வார்த்தைகளை விதவிதமாகச் சொல்லத் தொடங்கின. அதிலும் நடிக, நடிகையர், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சொல்லும்போது நம்புவோம் என்பது விற்பனையாளர்களுக்குத் தெரியும்.

விளம்பரங்கள் உண்மை பேசட்டும்

மக்களின் தாழ்வுணர்வும் பலவீனமும் எதில் என்பதைப் புரிந்துகொண்டு, அது மாதிரியான பொருட்களுக்கே போலியான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம், (இந்த அனுமன் டாலரை அணிந்துகொண்டீர்கள் என்றால், ரயில் மோதினால்கூட பிழைத்துக்கொள்வீர்கள்!) ஆண்மைக் குறைபாடு என மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, எதில் தங்களின் பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருக்க முயல்கிறார்களோ அதை மையப்படுத்தியே விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

அரசாங்கம் இது போன்ற விளம்பரங்களுக்குத் தடை கொண்டுவரும் பட்சத்தில், விற்பனை யாளர்களால் எப்படி உண்மையைச் சொல்லி விளம்பரம் செய்ய முடியும்? விற்பனையாளர்கள் அதற்கும் ஏதாவது ஒரு வழி வைத்திருப்பார்கள். சொல்வதையெல்லாம் சொல்லி ஆசை காட்டிவிட்டு, கண்ணுக்குத் தெரியாத அளவில் சிறு நட்சத்திரக் குறியிட்டுவிடுவார்கள். அந்த நட்சத்திரக் குறிக்குப் பின்னால்தான் அந்தப் பொருளின் ஆபத்து நிறைந்திருக்கும். அப்படியான விஷயங்களுக்கு இடம்தராமல், தடை உத்தரவு இருக்கும்படி அரசாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் தடை கொண்டுவருவது வரவேற்கப்பட வேண்டியது. அதேநேரம், ‘இது என்னுடைய உடல், முகம். இதுதான் என் மரபு’ என்று நாம்தான் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. இது இன்றைய தேவையும்கூட.

- ஜா.தீபா, ‘நீலம் பூக்கும் திருமடம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: deepaj82@gmail.com

முதுமை போற்றுதும்! | முதியோர் நலன் குறித்த தலையங்கம்


By ஆசிரியர் | Published on : 20th February 2020 02:33 AM

தமிழகத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கும் 2020-21-க்கான நிதிநிலை அறிக்கையில் முதியவர் நலனுக்கும் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்புக்குரியது.

தமிழகத்திலுள்ள 37 மாவட்டங்களிலும் தலா 2 வட்டாரங்களில் முதியோர் ஆதரவு மையங்களைத் தொடங்குவதற்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ரூ.37 லட்சம் செலவில் இப்போது அமைக்க இருக்கும் முதியோர் ஆதரவு மையங்கள் ஏற்கெனவே மேற்கொண்டுவரும் முயற்சியின் நீட்சிதான் என்றாலும்கூட, மாவட்ட அளவில் முதியோர் நலன் குறித்து அக்கறை செலுத்தப்படுவது தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடு.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, சராசரி இந்தியரின் ஆயுட்காலம் இப்போது 67 வயது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களைவிடப் பெண்கள் சற்று அதிகமாக உயிர் வாழ்கிறார்கள் என்பதையும் அந்தப் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையிலும் முதியோர் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்படுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் வேறுபல சலுகைகள் வழங்கவும் வழிகோலப்பட்டுள்ளன.
துணை முதல்வர் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுபோல முதியோரை அக்கறையுடன் கவனிப்பது தமிழ்ச் சமுதாயத்தின் மரபு. கல்வி மற்றும் பணிச் சேவையின் காரணமாக அடுத்த தலைமுறையினர் மாநிலத்துக்குள்ளேயும், வெளியேயும், வெளிநாட்டிலும் இடம்பெயர்வது அதிகரித்து வருவதால் தனிக் குடும்பங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் வயது முதிர்ந்த பெற்றோர் தனித்து விடப்படுவது தவிர்க்க முடியாத நிலைமையாக மாறிவிட்டிருப்பதில் வியப்பில்லை.

2007-இல் பெற்றோர், முதியோர் நலச்சட்டம் (மெயின்டனன்ஸ் அண்ட் வெல்ஃபேர் ஆஃப் பேரன்ட்ஸ் அண்ட் சீனியர் சிட்டிஸன்ஸ் ஆக்ட்) தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், சட்டபூர்வ வாரிசுகள் பெற்றோருக்கும், சட்டபூர்வ காப்பாளருக்கும் அவர்களது பராமரிப்புச் செலவுக்கான பணம் வழங்க வேண்டும். சட்டபூர்வ வாரிசுகளால் பெற்றோர் புறக்கணிக்கப்பட்டால் அல்லது தங்களது சொந்த வருமானத்தில் வாழ முடியாத நிலைமை காணப்பட்டால், பராமரிப்புச் செலவை சட்டபூர்வமாகக் கோரிப் பெற அந்தச் சட்டம் வழிகோலுகிறது.

பெற்றோர் கைவிடப்படும்போதோ, புறக்கணிக்கப்படும்போதோ அவர்கள் தங்களது வாரிசுகளால் இழைக்கப்பட்ட அநீதி குறித்துப் புகார் தெரிவித்தால், 2007 சட்டப்படி 90 நாள்களுக்குள் அவர்களது புகார் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும். பெற்றோரை குழந்தைகள் பராமரிக்காமல் கைவிட்டால், அவர்களின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5,000 அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே வழங்கும் அதிகாரம் நீதித் துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

2016-இல் தமிழக அரசு பிறப்பித்த அரசு உத்தரவின் கீழ் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு சத்துணவு வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுபோல பல சட்டங்களும் அரசு உதவிகளும் இருந்தாலும்கூட, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அதிகார வர்க்கத்துக்கு முனைப்பில்லாத நிலை காணப்படுகிறது. முதியோர் தேவையில்லாதவர்கள் என்கிற மனோபாவத்துடன், முதியோர் ஆகப்போகும் தலைமுறையினர் அவர்களை நடத்தும் நகைமுரணை நினைத்தால் சிரிப்பு வருகிறது.

ஆயுள்காலத்தை நீட்டிப்பதில் மருத்துவ அறிவியல் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. கோரமான விபத்திலிருந்தும், கடுமையான பாதிப்புகளிலிருந்தும், உயிர்க்கொல்லி நோய்த்தொற்றுகளிலிருந்தும் நோயாளிகளைக் காப்பாற்றும் திறமையை மனித இனம் வளர்த்துக் கொண்டிருக்கிறது. அதனால், 60 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாகச் செயல்படுபவர்கள், 80 வயதைக் கடந்தும் மருத்துவ உதவியுடன் உயிர் வாழ்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது வரமா, சாபமா என்பது அவரவர் அந்த நிலையை எதிர்கொள்ளும் மனோபாவத்தைப் பொருத்து அமையும்.

சமுதாயம் முதியோரை எப்படி மதிக்கிறது, அவர்களின் அனுபவத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பொருத்துத்தான் அந்த இனத்தின் வருங்காலம் உறுதிப்படுத்தப்படும் என்பதை இன்றைய தலைமுறையினரில் ஒருசிலர் மட்டுமே உணர்ந்திருக்கிறார்கள். முதியோரின் உடல் ரீதியிலான இயலாமையை பலவீனமாகக் கருதிவிடும் போக்கு அதிகரித்து வருவது மிகப் பெரிய சோகம்.

இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை வழங்குகிறது. ஆனால், அந்த மூத்த குடிமக்கள் பெறும் பயணச்சீட்டில் காணப்படும் வாசகம் அதிர்ச்சி அளிக்கிறது. "உங்களது கட்டணத்தில் 43%, இந்திய குடிமக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்கிற வாசகம், மூத்த குடிமக்களின் மனதை எந்த அளவுக்கு புண்படுத்தும் என்பதை அரசும் அதிகாரிகளும் நினைத்துப் பார்த்தார்களா? நாடாளுமன்ற உணவு விடுதியிலும், அரசு அதிகாரிகளின் இலவசப் பயணத்தின்போதும் இதேபோல அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தால் மூத்த குடிமக்களின் பயணச்சீட்டில் காணப்படும் வாசகங்களை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும்.

2050-இல் இந்திய மக்கள்தொகையில் 5-இல் ஒரு பகுதியினர் முதியோராக இருக்கப் போகிறார்கள். முதியோர் ஆதரவு மையங்கள் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகி விடாது. சமுதாயத்தில் முதியோர் குறித்த புரிதலையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.
PAN card, land papers aren’t proof of citizenship: Gauhati High Court

DECCAN CHRONICLE. | MANOJ ANAND

PublishedFeb 20, 2020, 12:17 am IST

Assam woman fails to win case with 15 documents.

The bench of Justice Manojit Bhuyan and Justice Parthivjyoti Saikia dismissed the petition of Jabeda Begum claiming that she “failed to prove her linkage with her projected parents and her projected brother”.

Guwahati: The Gauhati High Court on Wednesday rejected a petition filed by a 50-year-old woman, seeking restoration of her citizenship on the basis of 15 documents, including her PAN Card and voter lists having the names of her parents, produced by her.

The bench of Justice Manojit Bhuyan and Justice Parthivjyoti Saikia dismissed the petition of Jabeda Begum claiming that she “failed to prove her linkage with her projected parents and her projected brother”.

The 15 documents, which the petitioner submitted to the foreign tribunal, include PAN card and ration card, two bank passbooks, the NRC details of her father Jabed Ali, voter lists where the names of her grandparents, parents and her along with her husband were published and several land revenue receipts.

To prove citizenship and for the inclusion in the the National Register of Citizens (NRC) in Assam, applicants are supposed to submit any one of the 14 documents issued before March 1971.

Though Jabeda Begum had submitted some documents of her father dating back to 1966, the foreigners tribunal in 2018 declared the woman to be a foreigner as she failed to prove her linkage with her father. The court too concurred with the tribunal’s ruling on Wednesday.

In the absence of a birth certificate, the woman had submitted a certificate from her village headman that named her parents and place of birth. It was not accepted by the tribunal as well as the High Court.

Woman’s family fails to get listed in NRC
The family had also failed to get their name in the National Register of Citizens which was published in 2019. They could not vote also as both husband and wife were marked “doubtful voters” in the voters list.

The Doubtful Voters (D-voters) are a special category in Assam whose citizenship credentials were questioned during the identification and deportation of foreigners earlier. The D-voters were asked to prove their citizenship before the foreigners tribunal.

Jabeda Begum, disappointed with the Gauhati High Court, said, “I spent whatever money I had. Now I am left with no more resources to continue my legal battle.”

She is the only earning member of her family and her husband Rejak Ali has been ailing for long. The couple had three daughters, one of whom died in an accident and another one went missing. The youngest, Asmina, is a student of Class 5.

The biggest concern of the family now is their daughter. If Jabeda Begum fails to prove her citizenship, she will be sent to a detention centre where process of her deportation will start.

After a five-year long exercise supervised by the Supreme Court to identify foreigners in Assam, the updated NRC of Assam excluded the names of 19 lakh applicants when it was published in August 2019.

Medical care unavailable in the mornings at Karur railway station

Karur is one of the busiest stations in the Salem railway division, but it lacks a medical centre even as several amenities were inaugurated recently.

Published: 19th February 2020 09:29 AM 

Express News Service

KARUR: Karur is one of the busiest stations in the Salem railway division, but it lacks a medical centre even as several amenities were inaugurated recently. The lack of medical care nearly cost the life of a 50-year-old woman who suffered a heart attack inside the station had to be taken to the GH.

Seethalakshmi of Kulithalai was travelling on the Tiruchy-Erode passenger train (No. 56841) on Monday morning. As the train crossed Veerarakiyam railway station, she fainted. Fellow passengers pulled the emergency chain and stopped the train. She was then administered first-aid, after which the train departed.

Officials informed Karur railway station of the incident and asked them to arrange for medical assistance as soon as the train arrived at the station. But the station lacked medical facilities, and an 108 ambulance was called. As soon as the train arrived, she was taken to the GH.

Mahalingam, an activist, said “Though there is a 24x7 medical assistance booth at the entrance of the station, it is always closed. Had there been a doctor or even a nurse at the booth, they could have easily performed CPR and provided first-aid to the patient. Fortunately, the ambulance was quick to arrive at the station and the woman was taken to hospital in the nick of time.What if there was no ambulance available at that moment or some other passenger needed immediate medical attention? Railways management must look into these things first.”

A Railway official said, “The medical assistance booth is owned and operated by a private hospital. Usually staff comes at night to the booth. Most emergency cases appear to happen at night. We have brought the matter to the notice of the management.”

In a similar incident in April 2014, Rajalakshmi, a 60 year-old-woman, died at the station from a heart attack as there was no medical assistance available at the junction. People staged a protest condemning the Railway Board and demanded a medical assistance booth at the station.
Anna University withholds results of private college students

The isssue came to light when the university did not release their results in January.

Published: 20th February 2020 05:40 AM

Express News Service

COIMBATORE: Anna University has withheld the results of second-year students of a private engineering college near Thiruvarur over alleged malpractice in the semester exam held in November, last year. Sources said a complaint was made by second year students of Anjalai Ammal Mahalingam Engineering College in Kovil Venni alleging that the principal SN Ramasamy, had involved in malpractice.

The isssue came to light when the university did not release their results in January. According to sources, second year students of the college alleged that SN Ramasamy, who teaches Fluid Mechanics, opened the question paper half an hour before the exam and shared with a few students. He also allowed them to enter the exam hall late, they added. Sources state the principal did that to ensure students get good results in his subject.

Students said when complained, officials from University College, Pattukottai visited the next day and conducted an inquiry. Due to the alleged malpractice by principal and a few students, those not connected are also affected, they said. Anna University has published results of students who did not opt for fluid mechanics and for those who failed to turn up to write their arrears.When contacted, SN Ramasamy said, “Since it is under investigation, I do not want to comment now.”
Phone inside women’s toilet, IIT Madras professor held

The issue came to light when a 30-year-old PhD student went to rest room. She noticed the mobile placed near the window facing her.

Published: 20th February 2020 06:38 AM

By Express News Service

CHENNAI: In a shocking case, an Assistant Professor at the IIT-Madras was allegedly caught red-handed while trying to place his mobile phone secretly inside the women’s restroom in the campus, on Wednesday evening. Police sources identified the faculty member as Subham Bannerji of aerospace engineering department.

The issue came to light when a 30-year-old PhD student went to restroom. She noticed the mobile placed near the window facing her. “She took the phone and found the camera was on. Immediately, she rushed outside, locked the men’s bathroom from outside and called the security guard,” said a police official.
When the guard opened the bathroom, they found Subham inside. Police registered a case.

NEWS TODAY 25.05.2026