Wednesday, February 26, 2020

Air France to launch Chennai - Paris flights

TNN | Feb 25, 2020, 07.05 PM IST



CHENNAI: Air France will operate direct flights from Chennai to Paris starting June 14.

Flight AF 107 will depart from Chennai international airport at 1.05am and arrive at Charles de Gaulle airport in Paris at 8am.

Flight AF 108 will depart from Paris Charles de Gaulle airport at 10.10am and arrive at Chennai at 11.30pm.

The flights will be on Wednesdays, Fridays and Mondays from Chennai and on Tuesdays, Thursdays and Sundays from Paris.

The B787-9 Dreamliner plane would have 30 seats in business class, 21 in premium economy and 228 in economy class, said a press release.

Jet Airways was operating on the route. The flights were discontinued after the airline was grounded.

Tuesday, February 25, 2020

சென்னை ஸ்டான்லி உட்பட 5 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம்: முதல்வர்களாக 6 பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு

சென்னை 25.02.2020
சென்னை ஸ்டான்லி உட்பட தமிழகத்தில் 5 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 6 பேராசிரியர்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பணியிட மாற்றம் குறித்த விவரம்: (ஏற்கெனவே மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த இடம் அடைப்புக் குறியில்):
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி - ஆர்.சாந்திமலர் (ஸ்டான்லி), ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி- பி.பாலாஜி (செங்கல்பட்டு), கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி -ஆர்.முருகேசன் (கோவை இஎஸ்ஐ), கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி - ஏ.நிர்மலா (திருப்பூர்), அரியலூர் மருத்துவக் கல்லூரி - ஹெச்.முத்துகிருஷ்ணன் (விருதுநகர்).
முதல்வராக பதவி உயர்வு பெற்றுள்ளோர் விவரம்: (ஏற்கெனவே பேராசிரியராகப் பணியாற்றிய இடம் அடைப்புக் குறியில்)
நாமக்கல் மருத்துவக் கல்லூரி - கே.சாந்தா அருள்மொழி (மயக்கவியல் துறை, கோவை), திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி - அரசி வத்சன் (பெண்கள் நலன், மகப்பேறியல் துறை, சென்னை), திருப்பூர் மருத்துவக் கல்லூரி - வள்ளி சத்தியமூர்த்தி (மயக்கவியல் துறை, கீழ்ப்பாக்கம்), கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி - ஆர்.முத்துச்செல்வன் (பொது மருத்துவத் துறை, சென்னை), விருதுநகர் மருத்துவக் கல்லூரி - சி.ரேவதி(நுண் உயிரியல் துறை, திருநெல்வேலி), நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரி - வி.விஸ்வநாதன் (கதிரியக்க சிகிச்சை, சென்னை).
சுகாதாரத்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ்-அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி: இந்தியன் ஆயில் நிறுவனம் தொடக்கம்

சென்னை 25.02.2020
சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயதேவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (தமிழகம் மற்றும் புதுவை) நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 2.38 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 1.36 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 12 பாட்டிலிங் பிளான்ட்கள் மூலம் சுமார் 2.65 கோடி இண்டேன் சிலிண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.
சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், வாட்ஸ்-அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யலாம். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து இந்த சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும்.
மேலும், சிலிண்டர் விநியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிப்பு, சரியான எடை, சீல் மற்றும் கசிவுகள் குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை கிடைக்கப்பட்டதா என வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்யலாம்.
வீட்டு உபயோக சிலிண்டர்கள் சிலவற்றை கடைகளில் பயன்படுத்தி விட்டு மீண்டும் கொண்டு வந்து வீடுகளில் விநியோகிக்கப்படுவதால் அவற்றின் எடை குறைவாக உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை வாங்கும்போது அவற்றின் எடை பரிசோதித்து தருமாறு சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியரிடம் வலியுறுத்த வேண்டும்.
சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் 
வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் சென்னையில் மூன்று இடங்களில் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு ஜெயதேவன் கூறினார்.
கூடி வாழ்ந்தால் கேடில்லை!

By முனைவர் நெல்லை சுப்பையா | Published on : 25th February 2020 02:53 AM

குழந்தைப் பருவத்தை பத்தாகப் பிரித்து, அதில் கடைசி மூன்று பருவத்தை ஆண் பால், பெண் பால் என்று பகுத்து, விளையாட்டைப் பயிற்றுவித்தது தமிழ் மரபு.

ஆனால், இன்றைய குடும்பங்களில் மன இறுக்கத்திற்கும், பல பிரச்னைகளுக்கும் அடிப்படையான காரணம் வீட்டைச் சார்ந்த விளையாட்டுகளை மறந்ததும், தொலைத்ததும்தான். பெற்றோர் சமூகம் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்த, அவர்கள் விருப்பங்களுக்கு தடை உத்தரவு போடும் மன அழுத்தத்தில் பயணிக்கிறார்கள்.

குழந்தைகளின் குறும்புகளைக்கூட ரசிக்க நேரமில்லை. குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஆனந்தம் என்பது போய், அவர்கள் இல்லாத சூழலே சுகம் அளிக்கிறது என்றாகிக் கொண்டிருக்கிறது. பள்ளி முடிந்து வந்தவுடன் பக்கத்து வீடுகளையும், தெருக்களையும் மைதானமாக விளையாடிய நேற்றைய தலைமுறை, தங்கள் வாரிசுகளை வீட்டுத் தரையில்கூட தாராளமாக விளையாட அனுமதிப்பதில்லை.

அடம் பிடித்து வாங்கிய பொருள்கள் வீட்டின் மூலையில் பைகளில் அடைந்தே கிடக்கிறது. மைதானங்களைப் போல மகிழ்ச்சி தர வேண்டிய வீடுகள், வகுப்பறைகளைப் போல மாறிவிட்டன. இதனால், செல்லிடப்பேசிகளின் செயற்கை விளையாட்டுகளில் நம் இயற்கை விளையாட்டுகள் தோற்றுவிட்டன. தரையில் கிடைக்காத மகிழ்ச்சி கணினித் திரையில் கிடைக்கிறது.

புத்துணர்ச்சிக்காக நம்மை ரீசார்ஜ் செய்ய விளையாடியது போய், செல்லிடப்பேசிகளில் சார்ஜ் தீரும் பதற்றத்தில் சுருங்கிவிட்டது. மன அழுத்தத்தாலும் அலுவல் பணிச் சுமையாலும் உடலும் உள்ளமும் சோர்ந்துவரும் பெற்றோர்களைக் குழந்தைகளால் எப்படி புன்சிரிப்புடன் எதிர்கொள்ள முடியும்?

விளையாட்டு பொழுதுபோக்கு அல்ல. விளையாட்டுகள் வழியேதான் வெற்றி - தோல்வி, புதிய தொடர்பு, மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், அனுபவம், கூட்டுமுயற்சி ஆகியவை உளவியல் ரீதியாக உள்ளத்துக்குள் பயணிக்கின்றன. இவை படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய பண்புகள் இல்லை. பழகித் தெரிந்துகொள்ள வேண்டியவை. சொல்லாமல் சொன்ன பாடங்கள்.

ஊரில் உள்ள தாத்தா - பாட்டி வீடுகள்தான் குழந்தை மனதின் வடிகால்கள். உள்மனச் சிதறல்களை சமப்படுத்தும் மட்டப் பலகை. தண்டனை தராமல் காப்பாற்றும் நீதிமன்றங்கள். புத்துணர்ச்சி முகாம்கள். குழந்தைகள் விளையாடும் மிகப் பெரிய பொம்மைகளான தாத்தாவும் பாட்டியும் வாழ வழியின்றி தவணை முறையில் வந்து போகிறார்கள். பெரியவர்கள் திருநீறு பூசுவதும் குழந்தைகள் அவர்கள் காலில் விழுந்து சுருக்குப் பையில் வைத்திருக்கும் காசுகளை வாங்குவதும் மரபு.

குடும்பங்களில் பெரியவர்கள் நீதிமன்றமாக இருந்த காலத்தில், குடும்ப நீதிமன்றங்களின் தேவை இல்லை. நடமாடும் தெய்வங்களாக பெரியவர்களை வீடுகள் கொண்டாடிய காலமது. இன்றோ தெய்வ விக்ரகங்களுக்குக்கூட தனியே பூஜையறை இன்றி ஆணியின் தயவால் தொங்கும் மரப்பெட்டிக்குள் அடைத்துவிட்டோம். இட நெருக்கடியால் குளியலறையும், கழிவறையும் ஒன்றானதுபோல, இனி கட்டப்படும் புதிய வீடுகளில் சமையலறையும் இல்லாமல் "காம்போ பேக்' ஆகிவிடுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது, உணவைச் சூடாக வழங்கும் துரித உணவுச் செயலிகள்.

தாய், தந்தை, சகோதரி, சகோதரர், அத்தை, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என உறவுகள் இருந்தால் அது கூட்டுக் குடும்பம் என்பது போய், தந்தை - தாயுடன் வாழ்ந்தாலே கூட்டுக் குடும்பம் என்றாகிவிட்ட பிறகு இனிவரும் காலத்தில் கணவன் - மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே, கூட்டுக் குடும்பம் என்று ஆகிவிடுமோ என்றும் தோன்றுகிறது. கூவிக் கூவிக் கோடிகளில் விற்பனை செய்யப்படும் அடுக்ககங்கள் வீடுகளை விடுதிகளாக்கி வருகின்றன. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற பழமொழி நகரத்துக் கும்பலான வாழ்க்கையில் தனித் தீவுகளான குடும்பங்களுக்குப் புரிவது எப்போது? 
 
குழந்தைகளுக்கு விளையாடுவது மகிழ்ச்சி என்றால், அதைப் பார்ப்பது பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி. கண்கள் செய்ய வேண்டிய இந்த வேலையை, கருவிகள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. நாயை வாரிசாக பாவிப்பது சரி; ஆனால், வாரிசுகள் நாயாகாமல் பார்க்க வேண்டியது முக்கியம். "கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை' என்றார் ஒளவை. அதைவிடக் கொடுமை மகிழ்ச்சி என்பது என்னவென்றே அறியாமல் இளமையைக் கடப்பது இல்லையா? அதனால்தான் பெற்றவர்கள் பேச்சைக் கேட்டு நடந்த கடைசித் தலைமுறை, இப்போது பிள்ளைகளின் பேச்சை மட்டுமே கேட்கும் முதல் தலைமுறையாக மாறிக் கொண்டிருக்கிறது.
பழைய படங்களை ரீமேக் செய்வதைப் போல பழைய காலத்தைக் கொஞ்சம் நாம் ஏன் கட்டமைத்துக் கொடுக்கக் கூடாது? சுமைகளை சுகங்களாக்க சில உறவுகளையாவது விருந்தோம்பல் பண்பால், ஈர நூலால் இழுத்துக் கட்டி பேணினால்தான், அதன் எதிரொலியை எதிர்காலச் சந்ததிக்கும் கேட்கச் செய்ய முடியும்.

மதிப்பெண்ணை வைத்து மட்டுமே மாணவர்களை மதிப்பீடு செய்துவிட முடியாது. பள்ளித் தேர்வு விடுமுறை நாள்களை "திறன் வளர்ச்சி வகுப்புகள்' என்ற சிறுவர் சந்தைக்கு இரையாகாமல் காக்க வேண்டும். நாம் குழந்தைகளாக இருந்தபோது, நமக்கு நிலாச் சோறு ஊட்டிய மொட்டை மாடிகளில் காத்தாடி விட்டு, கொஞ்சம் காற்று வாங்கி வருவதை வார இறுதி நாள்களிலாவது சாத்தியப்படுத்தலாமே.

படுக்கையில் இருந்துகொண்டே பாரதி பாடல்கள் கேட்டு, அந்தாக்சரி பாடி, இரவை இனிமையாக்கலாமே. குழந்தைகளுக்குச் சொல்வதற்கு கதைகள் தெரியவில்லை என்றாலும் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கேட்டும், நம் அலுவலகக் கதைகளை பகிர்ந்தும் கொள்ளலாமே. அது சில சமயம் பேய்க் கதைகளைவிட சுவாரசியமாகவும் இருக்கக்கூடும்.

வாழ்க்கையை நல்ல எண்ணமும், வாகனத்தை நல்ல எண்ணெயும்தான் உராய்வின்றி நகர்த்தி வருகிறது. ஓட்டாமலேயே துருவேறிய குழந்தையின் மிதி வண்டி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேரோட்டம்போல் வலம் வரட்டுமே! பிரகாரம் சுற்றுவது போல குடும்பத்தை கோயிலாக்கட்டுமே!
தஞ்சை பெரிய கோவிலில் தினமும் குவியும் பக்தர்கள்

Added : பிப் 23, 2020 23:20







தஞ்சாவூர்;விடுமுறை நாளான நேற்று, தஞ்சாவூர் பெரிய கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பின், 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அன்று மட்டுமே, 5 லட்சம் பக்தர்கள் வந்தனர்.கும்பாபிஷேகத்தை காண முடியாத பக்தர்கள், அடுத்து, 48 நாட்கள் நடக்கும் மண்டலாபிஷேகத்தில் தரிசனம் செய்தால் சிறப்பு என்பதால், தினமும் ஆயிரக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. நேற்று விடுமுறை மற்றும்அமாவாசை என்பதால், பெரிய கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவர்கள், இரண்டு மணி நேரம் வெயிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருவுடையார், பெரியநாயகி அம்பாளை தரிசனம் செய்தனர்.
கோவிலின் பிரதான நுழைவு வாயிலில், பக்தர்களையும், அவர்களின் உடமைகளையும், போலீசார் சோதனை செய்த பிறகே, அனுமதித்தனர். கோடை துவங்கி வெயில் கொளுத்தும் நிலையில், போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள்இல்லாததால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நீண்ட நேரம் வெயிலில் நிற்க முடியாமல் பெண்கள், முதியவர்கள் மயக்கம் அடைகின்றனர். 'எனவே, தற்காலிக மேற்கூரை அமைத்து தரவேண்டும்' என பக்தர்கள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Retrieving the dead from train tracks is his job

Kali has been aiding the Government Railway Police in the task for the past 25 years

25/02/2020, , SANJANA GANESH,MADURAI


Kalimuthu

Kalimuthu, or Kali, as he is known to his friends, can be found sleeping outside a closed shop on West Perumal Maistry Street, less than a kilometre away from the Madurai Railway Junction. On days when bodies need to be retrieved from the tracks, personnel of the Government Railway Police come looking for him.

“They say, ‘Dei Kali, seekram vaadaa. Ponam kedaku (Hey Kali, come quickly. There is a corpse lying)’. I accompany them, carry the stretcher from there, and begin my job,” Mr. Kali says.

For the past 25 years, he has been carrying parts of mangled bodies found lying on train tracks on stretchers, zipping them, and taking them on a tricycle to the Government Rajaji Hospital’s mortuary. He is now 67 years old and has poor eyesight and a weak body. But he still waits for the ‘Dei Kali’ call as he is paid handsomely for the job.

Mr. Kali says that before he began picking bodies off the tracks, he was a cycle-rickshaw driver. The advent of motorised transport meant dwindling income, and he was desperately looking for another job to earn some money. “Word spread through a network that exists around the Meenakshi temple, and the police came to me and asked me if I would pick a body up late at night,” he recalls.

On the job, he says he has learnt to always remove his shirt, drink enough alcohol to withstand the stench of the corpse, carry the body on his shoulder and wear slippers. “I have some simple techniques. The bloodstains on my shirt usually do not go away even after washing because I do not have any powerful detergents or a washing stone as I don’t have a home. It is easier to work without a shirt. I also make it a point to wear my slippers because the stones on the tracks can cause us to trip. We ourselves could then become victims of accidents,” he says.

‘Never been afraid’

Mr. Kali says he brings back bodies by himself during the day, but is accompanied by two policemen carrying torches at night.

“They will point to the severed body parts and guide me. I have never been afraid during the job and have largely been truthful. I have never stolen a single piece of jewellery from the dead,” he says.

For 25 years, the price offered for retrieving a body has ranged from ₹200 to ₹500. He has to return from the morgue, clean the stretcher and then get his payment, he says. He adds that members of the police force have been particularly kind to him — by giving him some “extra money” when he is unwell or picking out shirts for festivals.

“The last time he picked up a body was three months ago. But sometimes, he comes to the station for an extra hundred [rupees]. Because of our long association, we do not mind giving him some cash here and there,” says a Government Railway Police staff.

‘Earning enough’

Except for the purpose of survival, Mr. Kali says he is not attracted to the concept of money.

“I do not see myself as a saint or someone who has done a big service. For me, the job has just been about earning enough to buy enough food and alcohol to get through the rest of my days. I have carried bodies of rich mill owners and beggars. One day, someone will carry my body off the street, too. Nothing strange,” he says.

Retired TNSTC official seeks revision of terminal benefits

25/02/2020, STAFF REPORTER,MADURAI

A retired Tamil Nadu State Transport Corporation Superintendent moved the Madurai Bench of the Madras High Court on Monday seeking a direction to the State to re-fix his pay on a par with the Seventh Pay Commission slab from the date of his promotion in 2017 and revise his terminal benefits.

The petitioner, S. Sampath, the retired Superintendent, TNSTC Madurai, said that he was appointed a clerk in the erstwhile Pandian Roadways Corporation in 1980. It was only in 2017 that he was promoted as Superintendent on the verge of his retirement, he said.

There were two types of pay pattern existing in the TNSTC. One was fixation/ revision based on settlement of pay to workers, and other was the government pay pattern fixation in respect of supervisory cadre that included Superintendents, Assistant Engineers, Assistant Managers and Managers.

At the time of promotion, a question arose as to how to fix his pay on a par with the Seventh Pay Commission slab as he had migrated from workers settlement pattern to government pay pattern. In 2017, the government issued an order to fix 2.57 multiplier to those who got promoted on or after January 2016.

However, the benefit was not paid and similarly promoted Superintendents submitted a joint representation to the government in 2018 with a request to implement the multiplier. But their plea had not been looked into, the petitioner said.

Taking up the petition for hearing, Justice M.S. Ramesh ordered notice to the State seeking a counter, and adjourned the case for further hearing.

NEWS TODAY 25.05.2026