Sunday, March 15, 2020

How Singapore, Taiwan and Hong Kong contained the virus

15.03.2020 TOI 

Covid-19 is spreading unabated across Europe and the US, but some of the outbreaks in Asia have either been brought under control or been avoided at larger scales entirely. Singapore, Taiwan and Hong Kong are examples of the latter.

In a New York Times opinion piece, epidemiologist Benjamin J Cowling and graduate student in epidemiology Wey Wen Lim, both from the University of Hong Kong explained how these countries contained the virus.

None of these regions has had to employ particularly drastic or draconian measures, like China did, to control the outbreak but have managed to contain the spread nevertheless. China’s methods, though hailed as effective, were criticised for impinging on individual rights.

Hong Kong, Singapore and Taiwan are more instructive examples for other democracies attempting to control Covid-19.

As of March 14, Hong Kong reported 140 cases and 4 deaths, Singapore 200 cases and no deaths, and Taiwan 53 cases and one death. The containment in these countries is particularly noteworthy as they are popular destinations from mainland China for the Lunar New Year, during which the virus was spread across the Asia Pacific region by travellers.

Since the first cases were identified — all originating in China — local governments sprung into action. A combination of travel restrictions, quarantines, social distancing and heightened hygiene were implemented in each country. All three countries have relatively small populations, the largest being Taiwan at 23.6 million, and are geographically rather isolated — Taiwan and Singapore are islands and Hong Kong shares a narrow border with China. These factors aided in controlling the outbreak.

Singapore was the first country to cancel all flights from Wuhan and begin isolating ill travelers immediately after China announced the outbreak. Three university hostels were converted into quarantine facilities and people were compensated for any workdays lost.

Officials then began aggressively tracing all contacts of known infected people, using data from transport companies, hotels and CCTV footage.

Though large gatherings have been suspended, schools and offices have remained open to limit the outbreak’s social and economic costs. However, all students and employees undergo daily health checks and temperature screenings.

Taiwan employed similar measures but didn’t ban all flights from affected regions. Instead, it screened passengers on the planes after landing. It later halted flights from Wuhan and other parts of China after its first imported case.

Taiwan also used home quarantines more extensively than others despite availability of quarantining at state facilities. Disobeying quarantine orders also drew a penalty of up to Rs 25 lakh. Mass gatherings and religious services were banned and all schools’ Lunar New Year holidays were extended until February 25.

Just over half of Taiwan’s cases came from local transmissions, a much lower figure than many other affected countries, which illustrates the success of Taiwan’s containment measures.

Hong Kong followed a different approach, in part due to its physical border with China — about 3 lakh people cross it daily. Hong Kong’s strategy focused on limiting local transmission rather than preventing infected people from entering.

After the first case was declared in Wuhan, Hong Kong expanded its existing temperature screening facilities at entry points and asked local clinics to report any patient showing symptoms and with a travel history from Wuhan. Travel restrictions were only placed five days after Hong Kong’s first case was reported. After February 5, all those crossing the border from China were placed under mandatory 14-day quarantines.Vacant, newly constructed public housing buildings were converted into quarantine facilities. More than 24,700 are still in quarantine.

Hong Kong’s social distancing measure were extensive — large-scale events were cancelled, schools were closed until April, and civil servants have been asked to work from home for a month.

Though containing the disease in these countries often came with a social and economic cost, their methods proved effective in stemming the spread of the virus without severely curtailing personal freedoms. With no clear end to the outbreak in sight, other democracies should look to these regions as examples.
Picture

FEVER CLINICS HELPED IN CHINA

In an interview with MSNBC, Donald McNeil, an NYT science and health reporter, talked about China’s approach to containing the epidemic.
The focus in China, McNeil said, was to identify all the people displaying symptoms. Despite the lockdown, China did not encourage home quarantines. The objective was to limit spread through family clusters. This was done by checking people’s temperatures at entrances of residential areas or public spaces. If a person was found with a fever, they were sent to fever clinics, which are separate sections of hospitals. Here, people are checked for other symptoms, and are asked to undergo a white blood cell count and a flu test. If these tests don’t clear the person, they undergo an expedited CT scan. A positive result for the scan is followed by a PCR test, which is a nasal swab. People with suspected or mild cases were taken to isolation camps. Only severe cases were hospitalised. This system broke the chain of transmission and prevented overburdening of hospitals.

Saturday, March 14, 2020


பாடல் பயணம் 40: அதுவொரு பொன்மாலைப் பொழுது!



ஆர்.சி.ஜெயந்தன்

பள்ளிக் காலத் தமிழாசிரியர்களை ஆண் தேவதைகள் என்று நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு நாளும் ஒரு வரம் தருவதைப் போல் அன்றைய பாடத்துக்கு வெளியே, அவர்களிடம் ஒரு புதிய செய்தியோ கதையோ கவிதையோ இருக்கும்.


அன்று, “உங்களில் எத்தனை பேர் வானத்தில் மிதந்துசெல்லும் மேகங்களில் உருவங்களைப் பார்த்திருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியோடு தொடங்கினார் சுப்பையா வாத்தியார். எனதருகில் அமரும் நண்பன் கோவிந்தராஜ் முந்திக்கொண்டு ‘ஐய்யனாரப்பன் அரிவாளுடன் குதிரையில் செல்வதைப் பார்த்திருக்கிறேன்’ என்றான்.

பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு சிரிப்பலையில் அதிர்ந்தது. வாத்து, நாய், ஆடு, மாட்டு வண்டி தொடங்கி ஒவ்வொருவரும் மேகங்களில் தங்களது கண்டுபிடிப்புகளைச் சொல்லிக் கொண்டுவந்தார்கள். நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜெயசுதாவின் முறை வந்தபோது ‘நகரும் கடல் அலைகள்’ என்றாள். வகுப்பில் இரண்டு நொடி மௌனம். ‘எல்லோரும் கைதட்டுங்கள்’ என்றார் ஆசிரியர். அந்தப் பாராட்டுதலில் ஜெயசுதாவின் முகம் செங்கொடிபோல் சிவந்துபோனது.

“இதுதான் கற்பனாவாதம். ஆங்கிலத்தில் ரொமாண்டிசிசம் என்று சொல்லுவார்கள். கற்பனாவாதத்தை தூக்கிப்பிடித்த வானம்பாடி புதுக்கவிதை இயக்கம் பற்றி இன்று நாம் பார்ப்போம். உங்களில் எத்தனை பேருக்கு வைரமுத்துவைத் தெரியும்... கையைத் தூக்குங்கள்...” என்றபோது முதல் வரிசையில் அமர்ந்திருந்த நான் உட்பட அந்த அறையிலிருந்த 30 மாணவர்களில் பாதிப் பேர் உற்சாகமாகக் கையைத் தூக்கியிருந்தோம்.

‘உனக்குப் பிடித்த வைரமுத்துவின் பாடல் எது?’ என்று முதலில் என் பக்கம் திரும்பினார். கொஞ்சமும் யோசிக்காமல் ‘எரிமலை எப்படிப் பொறுக்கும் - நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்’ என்றேன். ‘அருமை.. அதை இங்கே வந்து பாடிக் காட்டு’ என்றார். எனக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. ஆசிரியர் அமர்ந்திருக்கும் சிமெண்ட் மேடை மீது ஏறி நின்று உரத்த குரலில் பாடத் தொடங்கினேன்.

‘ரத்தம் இங்கே வேர்வையாகச்

சொட்டிவிட்டது; உயிர் வற்றிவிட்டது

சட்டம் வந்து ஊமைக் கையைக்

கட்டிவிட்டது; கண்ணீர் சுட்டுவிட்டது’ என்று முதல் சரணம் கடந்து...

‘காலம் புரண்டு படுக்கும் - நம்

கண்ணீர் துளியைத் துடைக்கும்’


என்பதுவரை நான் பாடி நிறுத்தியபோது மாணவர்களோடு ஆசிரியரும் இணைந்து கைதட்டினார். கை உயர்த்தாத மாணவர்கள் இப்போது ‘இந்தப் பாடல் எங்களுக்கும் தெரியுமே’ என்றார்கள்.

கீழத்தஞ்சை மாவட்டத்தின் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்கூட்டங்களில் அன்று அதிகம் ஒலித்த பாடல் இதுதான். புனல் வடிவ ஒலிபெருக்கியில் கேட்டுக் கேட்டு மொத்தப் பாடலும் மனப்பாடம் ஆனதற்கு இசையும் டி.எம்.எஸ்ஸின் குரலும் மட்டுமே காரணமல்ல; கண்முன்னால் பார்த்த ஏழை விவசாயத் தொழிலாளர்களின் விளிம்புநிலை வாழ்க்கையை வெளிச்சம்போட்டுக் காட்டிய வைரமுத்துவின் வரிகளுக்கே அதில் அதிகப் பங்கிருந்தது.


கவிஞன் எனும் ஞானி

ஒரு மாணவன் சிறப்பாகப் பாடிவிட்டான் என்று நினைத்தாரோ என்னவோ, அந்த வகுப்பில் எஸ்.பி.பியாகக் குரல் மாறினார் எங்கள் தமிழாசிரியர். ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது’ எனச் சின்னச் சின்ன சங்கதிகளுடன் அவர் பாடப் பாட, அந்தக் கடைசி பாடவேளையில் பக்கத்து வகுப்பில் ‘சந்திரகுப்த மௌரியரின் பொற்காலம்’ குறித்துப் பாடம் எடுத்துக்கொண்டிருந்த நிர்மலா டீச்சர், வகுப்பை அப்படியே பாதியில் விட்டுவிட்டு எங்கள் வகுப்பின் ஜன்னல் அருகில் ஓசைப் படாமல் வந்து நின்று சுப்பையா வாத்தியார் பாடுவதை ரசித்துக்கொண்டிருந்ததைக் கவனித்தேன்.

‘வானம் எனக்கொரு போதிமரம்

நாளும் எனக்கது சேதி தரும்’

என்ற வரிகளுடன் பாடுவதை நிறுத்திய அவர்,

“இயற்கையை ஆழமாக உற்று நோக்குகிறவன் ஞானி மட்டுமல்ல; கவிஞனும்தான். அப்படி நோக்கும்போது, எத்தனை அழகான ஓவியங்களைத் தன் வார்த்தைகளால் வரைந்து காட்டுகிறான் பாருங்கள். நான் உங்களிடம் வானில் நகரும் மேகங்களில் உங்கள் கண்களுக்குத் தெரிந்த உருவங்கள் என்ன என்று கேட்டேன்.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறினீர்கள். ஆனால் எல்லோரும் வைரமுத்து ஆகிவிட முடியாதல்லவா? ‘வானத்தை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திய கவிஞன், அவள் வெட்கப்பட்டதால் பொழுது மாறுகிறது, அவள் மாலை நேரம் எனும் மற்றோர் உடையை அணிந்து கொள்கிறாள்’ என்று எழுத எத்தனை ரசனை தேவை. ரசனைதான் கற்பனை எனும் குதிரைக்குச் சாரதி” என்றவர், ‘வானமகள் நாணுகிறாள்... வேறு உடை பூணுகிறாள்’ என்ற இருவரியை மீண்டும் பாடிக் காட்டிவிட்டுத் தொடர்ந்தார்.

பாடல் வேளை

“வானம்பாடி கவிஞர்களைப் பார்த்து மிகை உணர்ச்சியில் திளைத்து, தன்வயம் பொங்க எழுதுகிறவர்கள் என்று கிண்டலாகக் கூறும் கவிஞர்கள் இன்று வந்துவிட்டார்கள். ஆனால், அதற்கும் அப்பால், கவிதையின் அழகுணர்வை, அதில் எழும் காட்சி வழியான கலை உணர்வை எளிய வரிகளில் எழுதி வரும் வைரமுத்து திரைப் பாடல்களுக்கும் புதுக்கவிதைக்குமான இடைவெளியை இல்லாமல் செய்துவிட்ட மகா கவிஞன்” என்று பேசிக்கொண்டே போனார்.

அப்போது, மன்னார்குடி சாந்தி திரையரங்கில் பாலுமகேந்திராவின் ‘நீங்கள் கேட்டவை’ வெளியாகி 25 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. பாட்டுப் போட்டிகளுக்கு எப்போதும் முதல் ஆளாகப் பெயர் கொடுக்கும் காயத்ரி, “சார் ‘பிள்ளை நிலா’ வைரமுத்து பாட்டுதான் பாடட்டுமா” என்றாள். “என்ன கேள்வி.. ஓடி வா” என்றார். பதின்மமும் பருவமும் சந்தித்துக்கொண்ட புள்ளியிலிருந்து கூவும் ஒரு வசந்தகாலக் குயிலைப் போல...

‘பிள்ளை நிலா.. இரண்டும் வெள்ளை நிலா’ என்று காயத்ரி பாட... மொத்த வகுப்பறையும் ‘லல்லல்லா...’ என்று ஒருமித்து சேர்ந்திசைக் குழுவாக மாறி கோரஸ் பாடியபோது பாட்டு வேளையாக இருந்த அந்த இறுதிப் பாட வேளையின் நேரம் முடிந்து, பள்ளி மணி அடித்ததில் 30 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தப் பொன்மாலைப் பொழுது காயத்ரிக்கான கைதட்டலோடு முடிந்து போனது. ஆனால், மூன்று தலைமுறை இயக்குநர்கள், இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து 7,500 பாடல்களைக் கடந்து எழுதிக்கொண்டிருக்கிறார் வைரமுத்து.

வானம்பாடி எனும் வட்டத்தை மீறி எழுந்த அவருடைய திரைப்பாடல்களில் இல்லாத மொழி நயமோ கற்பனையோ நவீனமோ இல்லை என்று கூறும் அளவுக்கு உணர்வுகளின் தூரிகையாய் அழகியலும் அறிவியலும் பின்னிப் பிணைந்து கிடப்பதில் அவற்றை திரைக் கவிதை இலக்கியமாகத் துணிந்து கௌரவம் செய்துவிடலாம்.

“என்னை விடச் சிறப்பாக வைரமுத்து எழுதுகிறார். வசியப்படுத்தும் வார்த்தைகளால் திரையுலகை அவர் ஆட்டிவைக்கிறார். என்னால் அது இயலாது. அவர் இந்தியில் எழுத வந்தால் என்னவாகும் என்ற கற்பனையே எனக்கு அச்சம் தருகிறது” என்று இந்திக் கவிஞர் குல்சார் மனதாரப் பாராட்டியதும், “வைரமுத்துவின் சிந்தனைகளை இந்தியில் மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான ஒன்று.

அவ்வளவு உயரத்தில் அவர் சிந்திக்கிறார்”என்று இந்திப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மானசீகமாகக் கூறியதும் வைரமுத்து மொழிகளைக் கடந்த பாடலாசிரியர் என்பதற்கான சாட்சியங்கள். ‘நிழல்கள்’ படத்தில் ‘பொன்மாலைப் பொழுதாகப்’ புறப்பட்ட வைரமுத்துவின் பாடல் பயணம் 40 ஆண்டுகளைக் கடந்து திசையெட்டும் விரிந்துகொண்டிருக்கிறது.

தொடர்புக்கு:jesudoss.c@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

இதயம்வரை நனைகிறதே...



எஸ் வி வேணுகோபாலன்

நான் கோவையில் வேதியியல் முதுநிலை மாணவராக இருந்த நாட்கள் அவை. சைக்கிள்தான் உலகம். ஏதோ ஒரு தேநீர்க் கடை ரேடியோவில்தான் அந்தப் பாடலை முதன் முறை கேட்ட நினைவு. அதுவும், ஒரு பொன் மாலைப் பொழுதுதான்...

திரைப்படப் பாடல்தானா இது என்று ஒரு கிறக்கத்தை ஏற்படுத்திய எஸ்.பி.பி.யின் குரல், உள்ளத்தைத் தொடும் மெல்லிய இசையைத் தூவிய இளையராஜா, அப்புறம், அப்புறம் வேறேதோ ஒன்று, அதுதான், அந்தப் பாடல் வரிகளேதான்! ‘வான மகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்’ என்பதில் தொடங்கி, ஆயிரம் நிறங்கள் ஜாலமிட்டதும், ராத்திரி வாசலில் கோலமிட்டதும் மட்டுமல்ல, வேலை தேடிக்கொண்டிருக்கும் வாலிப வயதில், வானம் போதி மரம் ஆவதும், நாளும் ஒரு சேதி தருவதும்... இனிய புல்லாங்குழல் இசையும் வயலின் புறப்பாடும் நடன ஜதி போன்ற தபலாக் கட்டும் பல மாதங்களுக்கு ரசிகர்கள் பாடிக்கொண்டே இருந்ததில் வியப்பென்ன இருக்க முடியும்?

சொற்களின் ஊற்று!

‘ராஜ பார்வை’யில் அந்தி மழை பொழிந்தது... கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது என்ற காதல் பரிதவிப்பு. ‘நினைவெல்லாம் நித்யா’வின், ‘பனி விழும் மலர் வனம்’ என்று ஏதோ யோக நிலையில் இருக்கும் முனிவரைப் போல் தொடங்கும் பாடல், இனி வரும் முனிவரும் தடுமாறும் கனி மரமாயிற்று.

இதழ்களில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலையில், ரோஜாவைத் தாலாட்டும் தென்றலும் சரி, நீ தானே என் பொன் வசந்தமும் சரி .... தோளின் மேலே பாரம் இல்லாது, அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே அவர் எழுதியவைதாம். எளிமையான சொற்களில் இருந்து, தமிழ்த் திரைப்பாடல்கள் கொஞ்சம் கூடுதல் ரசனையை, ‘ஊற்று மலைத் தண்ணீரே என் உள்ளங்கை சர்க்கரையே’ என்று (கண்ணான பூ மகனே - தண்ணீர் தண்ணீர்) தொட்டுக் கொள்ளத் தொடங்கின.

‘அலைகள் ஓய்வதில்லை’யில், ‘இங்கு தேனை ஊற்று, இது தீயின் ஊற்று’ என்று கொதித்த காதல், ‘விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய், விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்’ என்று காதல் ஓவியத்தில் அரற்றியது. ‘பயணங்கள் முடிவதில்லை’யில், ‘இளைய நிலா பொழிந்தால், இதயம் வரை நனைய’ வைத்த சொற்களின் ஊற்றானது.

இரட்டை மேதைகள்

‘முதல் மரியாதை’யும், ‘சிந்து பைரவி’யும் ராஜாவுக்கும் சரி, வைரமுத்துவுக்கும் சரி, ஒரு கதை சொல்லியின் தேடலுக்கு ஏற்ற பாடல்களை வழங்கும் சவாலான வாய்ப்பை வழங்கின. ஒன்று, தெற்கத்திய மண்ணின் பண்பாட்டுச் சுவடுகளில் கிளைத்தெழுந்த வித்தியாசமான ‘வெட்டி வேரு வாசம், விடலைப்பிள்ளை நேசம்’. இரண்டாவது, ‘என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே’ என்ற நாடோடி சிந்துவின் கொந்தளிப்பு.

‘மெத்த வாங்குனேன், தூக்கத்த வாங்கல’ என்கிற மனிதனின் பரிதவிப்புக்கு, ‘இந்த வேதன யாருக்குத்தான் இல்ல...’ என்று எசப்பாட்டுக் குரல் கொடுக்கிறாள் ஒருத்தி. அது மட்டுமா, ‘ராசாவே ஒன்ன நம்பி’ என்ற பிடிமானம் எடுத்து, ‘மந்தையில நின்னாலும் நீ வீர பாண்டித் தேரு’ என்று சோகத்திலும் சொந்தம் கொண்டாடுகிறாள். சுழியிலே படகு போல மனசு கிடந்து அல்லாடிப் படும் வேதனையை அந்தக் கவிதை மொழி வல்லமையோடு வெளிப்பட்டது.

தெலுங்குப் படத்தின் தமிழ் வடிவம்தான் என்றாலும், ‘சலங்கை ஒலி’யில், ‘மௌனமான நேரமும்’, ‘என் கதை எழுதிட மறுக்குது என் பேனாவும்’ ஏற்கெனவே நடித்துவிட்ட கதாபாத்தி ரத்தின் வாயசைவுக்கு வார்த்தைகளைப் பொருத்திய வித்தையை என்னவென்பது!.‘புன்னகை மன்னன்’ படத்தில், 'ஏதேதோ எண்ணம் வளர்க்கவும்', 'என்ன சத்தம் இந்த நேரம்' என்று கேட்கவுமாக, 'கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது நாதம்' என்று கொண்டாடும் பாடல்களின் இசையும் வரிகளும் இன்றைக்கும் நவீனத்தின் அடையாளத்துடன் இருப்பது இளையராஜா - வைரமுத்து எனும் இரட்டை மேதைகளின் கூட்டணியால்தானே!

இசைப் புயலில் கலந்த மண் வாசம்

தொண்ணூறுகளில், ‘ரோஜா’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு, ‘சின்னச் சின்ன ஆசை’ அல்ல, பெரிய பெரிய கனவுகளையும் வளர்த்தெடுத்தது. ‘கிழக்குச் சீமையிலே’ கதைக்களம், கத்தாழம் காட்டு வழியல்லவா, ‘அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகம் தானா’ என்று ஆத்தங்கரை மரத்திலிருந்து கிராமத்து வாழ்க்கையை வரிசைப்படுத்தியது. அவரைக்குப் பூ அழகு, அவருக்கு நான் அழகு (கண்ணுக்கு மையழகு - ‘புதிய முகம்’) என்கிறாள் நாயகி. ‘பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது’ (ஒட்டகத்தை - ‘ஜென்டில்மேன்’) என்கிறான் நாயகன்.

ரஹ்மான் இசையில், சொர்ணலதாவின் அசாத்திய குரலில் உயிருக்குள் இறங்கிய ‘போறாளே பொன்னுத்தாயி’ (‘கருத்தம்மா’), ‘சேமிச்ச காசு செல்லாமப் போச்சு’... ‘கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி ...’ என்ற இடங்களில் எப்போது கேட்டாலும் உலுக்கி எடுக்கும் வரிகளை வைரமுத்துவால் மட்டும்தான் எழுதியிருக்க முடியுமோ! ‘பால் பீய்ச்சும் மாட்ட விட்டுப் பஞ்சாரத்துக் கோழிய விட்டுப்’ போகும் பொட்டப்புள்ள வாழ்க்கையின் கண்ணீர்க் கோடுகளை நவீன இசை மட்டுமே இவரிடமிருந்து வரும் என்ற விமர்சனத்துக்கு முற்றுபுள்ளி வைத்து, இசைப்புயலின் மெட்டுகளில் மண் வாசத்தைக் கலந்த வைரமுத்துவின் கவிதை பேசியது.

‘பம்பா’யில், ‘வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே, அதற்காகத் தான் வாடினேன்’ என்று ‘உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு’ என்ற ஹரிஹரன் குரலில் தழுதழுத்த வரிகள்... ‘கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன், கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்' (ஒருவன் ஒருவன் - ‘முத்து’) என்று தெறித்த இடங்கள்... ஒருநாளும் நினைவைவிட்டு அகலாத எளிய தத்துவங்கள்.

எதைத் தொட, எதை விட?

தங்கத் தாமரை மகளிடம் (‘மின்சாரக் கனவு’), ‘பிரிந்திருக்கும் உயிரை எல்லாம் பிணைத்து வைக்கும் கார் காலம்’ என்று தாபம் மிகுந்து பாலு பாடிய வரிகள். ‘கலகல ரெட்டைக் கிளவி, சலசல ரெட்டைக் கிளவி உண்டல்லோ’ என்று (‘ஜீன்ஸ்’) சந்தம் எடுத்து, ரெண்டல்லோ ரெண்டும் ஒன்றல்லோ என்றும், பின்னர் ‘சூரியன் வந்து வா எனும் போது என்ன செய்யும் பனியின் துளி’ (‘சங்கமம்’) என்றும் நித்ய ஸ்ரீ இழைத்த வரிகள்... எதை எல்லாம் சொல்ல, எதை எல்லாம் மெல்ல! ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தின் ‘எங்கே எனது கவிதை’,‘என்ன சொல்லப் போகிறாய்’, எதை எல்லாம் தொட, எதை விட?

‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தின், கள்ளிக்காட்டில், முள்ளுக்காட்டில் பிறந்த பாடல்கள். ‘சிவாஜி’ படத்தின் ‘சஹானா சாரல் தூவுதோ ....’ எதையெல்லாம் உரைக்க, எதைக் கழிக்க? எத்தனை எத்தனை இசை அமைப்பாளர்கள். எத்தனை எத்தனை குரல்கள். எத்தனை எத்தனை தேசிய, மாநில விருதுகள்...!

‘மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்’ (‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’) என்றும், ‘ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே’ (‘புதுமைப் பெண்’) என்றும் பலவிதங்களில் வெளிப்பட்டதையும் பார்க்க முடியும். திரைக்கதை கேட்கும் உறவுகளை, பிரிவுகளை, காதலை, மோதலை, கனவை, கண்ணீரை வடுகப்பட்டி வாசனையோடும் வாழ்க்கைப்பட்டியின் சுவடுகளோடும் பெருமிதம் பொங்க எழுதிக்கொண்டிருக்கும் வைரமுத்து, தமிழ்த் திரையிசையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சகாப்தம். அவரை கொண்டாட இதுவும் சிறந்த தருணம்.

தொடர்புக்கு: sv.venu@gmail.com
நீண்ட நாட்களாக அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு


சென்னை  14.3.2020


பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை, கல்லூரியில் பயின்று முடித்த, 4 ஆண்டுகளுக்குள் அரியர் தேர்வுகளை எழுதி பட்டம் பெற வாய்ப்பு வழங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000-ம் ஆண்டில் படிப்பை முடித்து பட்டம் பெற முடியாமல் சுமார் 30 ஆயிரம் பேர் அரியர் வைத்துள்ளனர்.

இந்த மாணவர்களின் நலன் கருதி சிறப்புத் தேர்வு நடத்த அண்ணா பல்கலை.யின் ஆட்சி மன்றக் குழு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்தது. அதன்படி, 2019-ம் ஆண்டு நவம்பரில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், வரும் ஏப்ரலில் மீண்டும் சிறப்பு அரியர் தேர்வு நடக்க உள்ளதாக அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலை.வெளியிட்ட அறிவிப்பு:

பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்ததொடர் கோரிக்கையை ஏற்று, ஏற்கெனவே அளிக்கப்பட்ட கால அவகாசங்களைத் தவறவிட்டவர்களுக்கு அரியர்தேர்வு எழுத இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த சிறப்புத் தேர்வில் கடந்த 2000-ம்ஆண்டில் இருந்து அரியர் வைத்திருப்பவர்கள் மார்ச் 23-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்குவரும் ஏப்ரல் / மே மாதங்களில் நடைபெறும் பருவத் தேர்வுகளுடன் தேர்வுநடத்தப்படும். தேர்வுக்கான சிறப்புக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் https:coe1annauniv.edu இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வங்கிகள் இணைப்பு தொடர்பான வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம்: வாடிக்கையாளர்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்

சென்னை 13.3.2020

இணைக்கப்பட உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வங்கிகள் பின்னர் அறிவிக்கும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல்10 பொதுத்துறை வங்கிகள் இணைந்து 4 வங்கிகளாக மாறுகின்றன. இதுதொடர்பான வாட்ஸ்-அப் தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் வரும் 24-க்குள் வருமானவரி பிடித்தம் தொடர்பான 16-ஏ படிவத்தை தங்கள் வங்கிகளில் உடனடியாக வழங்க வேண்டும்.


வங்கிக் கணக்கில் இருந்து மின்னணு வழியில் பணம் செலுத்தும் இசிஎஸ் முறையை மாற்றவேண்டும். ஏற்கெனவே வைத்துள்ள ஏடிஎம் அட்டையை ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பயன்படுத்த முடியுமா என தெரிந்துகொள்ள வேண்டும். இணைக்கப்படும் வங்கிகளில் சம்பளம், ஓய்வூதியக் கணக்கு வைத்திருந்தால் மாற்றுஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்’என கூறப்பட்டுள்ளது. இதுவங்கி வாடிக்கையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி கேட்டபோது வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

பொதுவாக, வங்கிகள் இணைக்கப்பட்டால் அவை ஒருங்கிணைந்து செயல்பட ஓராண்டு வரை ஆகும். எனவே, அந்த வங்கிகளில் கணக்குவைத்துள்ளவர்கள் வங்கி இணைப்புக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி தெரிவிக்கும்.

சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பரவும் வதந்திகளை வாடிக்கையாளர்கள் பொருட்படுத்த வேண்டாம் என்றனர்.
Drunk driver gets Rs 67 lakh compensation!

In a curious case, a man who met with an accident while driving under the influence of alcohol is all set to get a fat compensation of Rs 67.35 lakh from the State.

Published: 14th March 2020 06:30 AM 

By Express News Service

CHENNAI: In a curious case, a man who met with an accident while driving under the influence of alcohol is all set to get a fat compensation of Rs 67.35 lakh from the State. What worked in his favour? The officials failed to conduct proper medical tests to prove that he was, indeed, drunk that night. Earlier, the tribunal had fixed the compensation amount at Rs 30 lakh. 

Manikandan met with the accident way back in 2013. The car he was driving crashed against a truck. While hearing the case, a Motor Accident Claims tribunal ordered a relief of Rs 30 lakh, but deducted a part of the amount on the grounds that Manikandan was driving under the influence of alcohol. It held that his negligence contributed to the accident. 

However, hearing the case on Friday, a division bench comprising justices N Kirubakaran and Abdul Quddhose ordered Rs 67.35 lakh to be paid to the ‘victim’. The bench observed that the tribunal had come to the conclusion that Manikandan was drunk only based on the statement of doctors at the hospital where he was admitted after the accident. 

No proper medical test was conducted. “The police should take drunken drivers to labs to test alcohol content in the blood. Otherwise, they cannot prove it before Court. For non-compliance, this Court is compelled to set aside 50% of contributory negligence fixed on the part of the claimant.” The bench then directed the police department to arrest those involved in drunken driving and also make available sufficient breathalysers and posted the matter for filing compliance report, to April 6. 

No proper medical test conducted

The officials failed to conduct proper medical tests to prove that the man was, indeed, drunk that night. For non-compliance, this Court is compelled to set aside 50% of contributory negligence fixed on the part of the claimant
Vistara puts Kunal Kamra on no-fly list

14/03/2020, SPECIAL CORRESPONDENT,NEW DELHI

Vistara on Friday banned comedian Kunal Kamra from travelling with it. “We have placed you in our no-fly list till April 27, 2020,” said an e-mail sent to Mr. Kamra.

NEWS TODAY 10.06.2026