Sunday, November 22, 2020

Guest lecturers of self financing colleges must ge better salaries


 

Low Pressure will bring Rain says IMD


 

யு.ஜி.சி., வழிமுறைகளை மீறவில்லை 'அரியர்' ரத்து வழக்கில் அரசு விளக்கம்

யு.ஜி.சி., வழிமுறைகளை மீறவில்லை 'அரியர்' ரத்து வழக்கில் அரசு விளக்கம்

Added : நவ 22, 2020 00:35

சென்னை:அரசு நியமித்த குழுவின் பரிந்துரை; பல்கலைகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்பே, தேர்வு ரத்து குறித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், பல்கலை மானிய குழு வழிமுறைகள் மீறப்படவில்லை எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை பதில் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக, பொறியியல் மற்றும் கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு, இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற தேர்வுகளை ரத்து செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிடவும் கோரினர்.

இவ்வழக்கில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும், பல்கலை மானிய குழுவும், 'அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது' என, பதில் அளித்துள்ளன.முதல்வர் அறிவிப்புஉயர் கல்வித்துறை சார்பில், இணைச் செயலர் இளங்கோ ஹென்றி தாஸ் தாக்கல் செய்த பதில் மனு:கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், உடைமைகளை அப்படியே விடுதிகளில் விட்டு விட்டு மாணவர்கள் சென்று விட்டனர்.

அவர்கள் படிப்பதற்கு, பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை. பல்கலை மானிய குழு பிறப்பித்த வழிமுறைகளை தொடர்ந்து, அரசு ஒரு குழுவை நியமித்தது.இந்தக் குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். உயர் கல்வித்துறையும், 2020 ஜூலை, 27ல் அரசாணை வெளியிட்டது. ஆகஸ்ட்டிலும், எதிர்பார்த்த அளவுக்கு நோய் தொற்று குறைய வில்லை.

மாணவர்களின் நலன் கருதி, ரெகுலர் மாணவர்களுக்கும், அரியர் மாணவர்களுக்கும் பாகுபாடு காட்டாமல், ஆகஸ்டில் அரசாணை பிறப்பிக்கப் பட்டது.அரசு உத்தரவால், தகுதியுள்ள மாணவர்கள் யாரும் விரக்தி அடையவில்லை. அரியர் பாடங்களுக்கு, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும்.அதில், மாணவர்கள் திருப்தி அடையவில்லை என்றால், அடுத்த தேர்வை எழுதி, மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ளலாம்.

அசாதாரண சூழ்நிலையை கருதி, இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.ஏப்ரலில், யு.ஜி.சி., பிறப்பித்த வழிமுறைகளுக்கு முரணாக, அரசு உத்தரவு இல்லை.உத்தரவு மீறவில்லைஇந்த வழிமுறைகள், அறிவுரை தன்மை உடையது எனவும், வைரஸ் தொற்று சூழ்நிலையை கருதி, ஒவ்வொருபல்கலையும் திட்ட நடவடிக்கையை வகுத்துக் கொள்ளலாம் எனவும் வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு நடத்துவது; மதிப்பிடுவது என்பது பல்கலைகளின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், பல்கலைகளுடன் அரசு ஆலோசித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவால், மாணவர்கள், பல்கலையின் கல்வித் தரம் குறைந்து விடாது.அரியர் பேப்பர் தொடர்பாக எந்த வழிமுறைகளும் இல்லாததால், அந்த மாணவர்களுக்கும் அரசு விரிவுபடுத்தியது. யு.ஜி.சி., விதிமுறைகள், வழிமுறைகள் எதையும் அரசு உத்தரவு மீறவில்லை.

சூழ்நிலையை கவனமுடன் ஆராய்ந்து, குழுவின் அறிக்கையை பரிசீலித்து, பல்கலைகளுடன் ஆலோசித்த பின்னே, உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுஉள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர் சான்றிதழ்மருத்துவ மாணவிக்கு வழங்க உத்தரவு

பொருளாதாரத்தில் பின்தங்கியவர் சான்றிதழ்மருத்துவ மாணவிக்கு வழங்க உத்தரவு

Added : நவ 22, 2020 01:35 

சென்னை:'ஒடுக்கப்பட்டவர்களின் உயர்வுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது போல பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கக் கூடாது என்பதற்காக ஒதுக்கீடு அறிமுகப் படுத்தப்பட்டது' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த பூர்வி என்பவர் தாக்கல் செய்த மனு:எம்.பி.பி.எஸ். முடித்து முதுநிலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளேன்.பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன்.தந்தைக்கு நிரந்தர வேலை வருமானம் இல்லை. மருத்துவ படிப்பு முடித்த பின் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஆகஸ்ட் வரை பணியாற்றினேன்.

கடந்த ஆண்டு சான்றிதழுக்கு விண்ணப்பித்த போது எழும்பூர் தாசில்தார் வழங்கினார். தாயார் இறந்ததால் நுழைவு தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போது சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை எட்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருப்பதாக கூறி நிராகரித்துள்ளார்.

வருமான வரி கணக்கின்படி 2020 -- 21ம் ஆண்டுக்கான சம்பளம் 6.37 லட்சம் ரூபாய் தான். மொத்த சம்பளமாக கணக்கிட்டாலும் 7.37 லட்சம் ரூபாய் தான். எனவே எனக்கு சான்றிதழ் வழங்க உத்தர விட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுதர்சன சுந்தர் அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் வி.எஸ்.சுந்தர் ஆஜராயினர்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கடினமாக உழைத்து அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் பெற்றுள்ளார். அவரது நிதி நிலைமை சரியில்லை. இவரை போன்றவர்களை உயர்த்தி விடுவது அரசின் கொள்கை என்பதால் தான் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மனுதாரர் முற்பட்ட பிரிவிவை சேர்ந்தவராக இருந்தாலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர். அரசின் கொள்கைப்படி உயர் கல்வியை தொடர அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். உயர் கல்வியில் இடஒதுக்கீடு என்பது தற்போது தீவிர பிரச்னையாக உள்ளது. சமூகத்தில் வெவ்வேறு பிரிவினருக்கு இடையில் வேறுபாடுகளை இது ஏற்படுத்துகிறது.

அறிவுடைய தகுதியான மாணவர்களால் கல்வி வாய்ப்பு பெற முடியவில்லை.'மெரிட்'டில் வர முடியாதவர்கள் இடஒதுக்கீட்டில் கல்வி வாய்ப்பு பெறுகின்றனர். உயர் கல்வி தரத்தில் சமரசம் மேற்கொள்ளாமல் ஒடுக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மேம்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முற்படுத்தப்பட்ட பிரிவிவைச் சேர்ந்தவர்களாக இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களாக இருந்தால் அவர்களுக்கான இடத்தை மறுக்கக் கூடாது என்பதற்காக பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு வந்தது.மனுதாரர் தகுதி படைத்தவர்; அவரது வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவு தான் என்பதை நிரூபித்துள்ளார்.

அவருக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியவருக்கான சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும். எழும்பூர் தாசில்தார் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக சான்றிதழ் வழங்கும்படி தாசில்தாருக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

Added : நவ 22, 2020 00:42

சென்னை:வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால், ஐந்து மாவட்டங்களுக்கு, மிக அதிக கனமழைக்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கைக்கு தெற்கில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், நாளை கன மழை பெய்வதற்கான மஞ்சள் நிற, 'அலர்ட்'டும், வரும், 24, 25ம் தேதிகளில், மிக அதிக கன மழைக்கான, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. சில மாவட்டங்களுக்கு, மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:வங்க கடலின் தெற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிஉள்ளது. இந்த காற்றழுத்த மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும், 25ம் தமிழக கடற்கரைக்குள் வரும். இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், நாளை மிதமான மழை பெய்யும்.

நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.வரும், 24ம் தேதி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், இடியுடன் கூடிய மிக அதிக கனமழை பெய்யும்.கடலுார், மயிலாடுதுறை, சிவகங்கை, துாத்துக்குடி மாவட்டங்களிலும், காரைக்காலிலும், கன முதல் மிக அதிக கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

வரும், 25ம் தேதி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதிக கனமழை பெய்யும்.திருச்சி, அரியலுார், பெரம்பலுார், சிவகங்கை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், கனமுதல் மிக கன மழை பெய்யும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகள்: சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 91 இடங்கள் நிரம்பவில்லை 22.11.2020

மருத்துவப் படிப்புகள்: சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 91 இடங்கள் நிரம்பவில்லை  22.11.2020 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (நவ.21) நடைபெற்றது. அதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின.

மாற்றுத்திறனாளிகள் பிரிவைப் பொருத்தவரை மொத்தமாக 41 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே நிரம்பின. கலந்தாய்வின் முடிவில் 87 எம்பிபிஎஸ் மற்றும் 4 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன. அவை அனைத்தும் பொதுக் கலந்தாய்வில் சோக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நிகழ் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கலந்தாய்வு கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. முதலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, 313 எம்பிபிஎஸ் இடங்கள், 92 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 405 இடங்களுக்கு கடந்த 3 நாள்களாக கலந்தாய்வு நடைபெற்றது. அதில், 6 பிடிஎஸ் இடங்களைத் தவிர அனைத்தும் நிரப்பப்பட்டன.

இந்த நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. அதில், விளையாட்டுப் பிரிவு மாணவா்களுக்கு 7 எம்பிபிஎஸ் இடங்களும், 1 பிடிஎஸ் இடமும் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களுக்கு 20 போ அழைக்கப்பட்டு இருந்தனா். அவா்களில் 8 பேருக்கு இடங்கள் கிடைத்தன. முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு 10 எம்பிபிஎஸ் இடங்களும் 1 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டன. அந்த இடங்களுக்கு ஏராளமானோா் அழைக்கப்பட்டு இருந்தனா். அவா்களில் தகுதியான 11 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.

தேபோன்று, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவா்களுக்கு 128 எம்பிபிஎஸ் இடங்களும், 4 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவா்களில் 41 போ எம்பிபிஎஸ் இடங்களை தோவு செய்து இருக்கின்றனா். இதில் 87 எம்பிபிஎஸ் இடங்களும், 4 பிடிஎஸ் இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்கள் பொதுக் கலந்தாய்வில் அந்தந்த பிரிவினருக்கான இடங்களில் சோக்கப்பட உள்ளன.

இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இடங்களைத் தோவு செய்தவா்களில் 3 அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்கத்தினா் நீட் தோவுக்கான பயிற்சியை வழங்கியுள்ளனா். அவா்கள் அளித்த ஊக்கம்தான் எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்க உறுதுணையாக இருந்ததாக அந்த மாணவா்கள் தெரிவித்துள்ளனா்.

தொடா்ச்சியாக பொதுக் கலந்தாய்வு திங்கள்கிழமை (நவ.23) தொடங்கவுள்ளது. அதற்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாணவா்களை மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani
Secretariat infection count rises to 89

TIMES NEWS NETWORK

Bhopal:22.11.2020

The number of Covid positive cases in the secretariat rose to 89 on Friday. Employees of 25 departments of the secretariat have been infected due to coronavirus so far. The 89 positive cases so far also include senior bureaucrats.

In the fresh cases, employees of a higher education department and an assistant grade II employee have tested Covid positive. The month-wise trend of employees getting positive in the secretariat points the rate of employees getting Covid positive slightly went down in October. But started rising again in November, like in the state.

July witnessed the maximum Covid positive cases in the secretariat with 22 cases in the month. September witnessed second-highest number of Covid positives with 20 people testing positive.

First Covid positive case was reported in May in the secretariat. Only one positive case was found in May. In June, the number of positive cases rose to 8 while it shot to 22 in July. Eight employees were found positive in August and 20 in September. Over 12 employees tested positive in October and over 18 so far this month. If the rate continues, the month would see the highest positive in the secretariat so far.

Almost all the big departments have witnessed Covid positive cases. The departments in which positives have been found in all three Vallabh Bhavan buildings are commercial taxes department, urban administration department, energy department, CM secretariat, health department, finance department, law department, medical education, home department, transport department, forest department, panchayat department, science and technology department, general administration department, technical education, Ayush department, sports, parliamentary work department, planning, economics & Statistics, food and civil supplies, higher education department and mining besides staffers in different ministers’ office in the secretariat and horticulture and food processing department.

Of the total found corona positives in Vallabh Bhavan buildings including I, II and III, two employees have lost lives due to Covid so far. Vallabh Bhavan II building had witnessed more than half of the total positive found employees in the secretariat so far. The same building houses offices of chief minister and chief secretary.

Employees of a higher education department and an assistant grade II employee have tested Covid positive on Saturday

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW  TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...