Friday, November 27, 2020

Fresh cases against former judge CS Karnan

Fresh cases against former judge CS Karnan

A fresh case has been filed against former Calcutta High Court Judge C S Karnan based on a complaint by Tamil Nadu Bar Council Secretary. 

Published: 27th November 2020 03:41 AM 

Former Calcutta High Court judge CS Karnan (File | EPS)

By Express News Service

CHENNAI: A fresh case has been filed against former Calcutta High Court Judge CS Karnan based on a complaint by Tamil Nadu Bar Council Secretary. 

Karnan appeared in front of the Central Crime Branch sleuths on Thursday for an inquiry in connection with his remarks against the retired and serving Supreme Court judges, their wives and women judges, in a video which went viral on social media.

While the CCB had already registered a case against the retired judge under Sections 153 and 295 of the Indian Penal Code, case was booked against him under IPC Sections 228 (intentional insult), 509 (insult modesty of woman), 294 (b) (obscene language), 506 (ii) (criminal intimidation) r/w 120-B IPC and 67-A of Information Technology act, for making obscene remarks against serving and former judges, on Thursday.

    Wait-listed SC Medical aspirant takes up jpn in catering


     

    Nivar brings mere drizzle in a few pockets


     

    Registration of sale agreement no bar to sell property to third party


     

    West Tambaram Mudichur among worst hit areas


     

    லஷ்மி விலாஸ் வங்கி - டி.பி.எஸ்., இணைப்புக்கு தடை விதிக்க மறுப்பு

    லஷ்மி விலாஸ் வங்கி - டி.பி.எஸ்., இணைப்புக்கு தடை விதிக்க மறுப்பு

    Added : நவ 26, 2020 23:09

    மும்பை:லஷ்மி விலாஸ் வங்கியை, ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கியுடன் இணைப்பதற்கு தடை விதிக்க, மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

    கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லஷ்மி விலாஸ் வங்கியை மீட்கும் வகையில், அதை, டி.பி.எஸ்., வங்கியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வழக்கு  இந்த இணைப்புக்கு, மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, இன்று முதல், லஷ்மி விலாஸ் வங்கி கிளைகள், டி.பி.எஸ்., வங்கி கிளைகளாக செயல்படும்.

    இந்நிலையில், இந்த இணைப்பை எதிர்த்து, லஷ்மி விலாஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள சில நிறுவனங்கள், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.'காரோ எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெவலப்மென்ட் லிமிடெட், பிரணவா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' போன்ற நிறுவனங்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளன.

    அபாயம்

    இந்த நிறுவனங்களுக்கு, லஷ்மி விலாஸ் வங்கியில், 6.80 சதவீத பங்குகள் உள்ளன.'வங்கி இணைப்பு தொடர்பான திட்டத்தின்படி, அனைத்து பங்கு மூலதனங்களும் ரத்து செய்யப்படும் என, கூறப்பட்டுள்ளது.'இதனால், பங்கு முதலீடு செய்துள்ளவர்கள், தங்கள் முதலீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது. அதனால், இந்த இணைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்ற அமர்வு, இணைப்புக்கு தடை விதிக்க மறுத்து உள்ளது. வழக்கின் விசாரணை, டிச., 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி, லஷ்மி விலாஸ் வங்கி, ரிசர்வ் வங்கி மற்றும் டி.பி.எஸ்., வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல்., சேவை: புயலால் 18 சதவீதம் பாதிப்பு

    பி.எஸ்.என்.எல்., சேவை: புயலால் 18 சதவீதம் பாதிப்பு

    Added : நவ 26, 2020 23:36

    சென்னை:'நிவர்' புயல் கரையை கடந்த போது, மொபைல் போன் சிக்னல் கோபுரங்களில், 18 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டதாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நிவர் புயல், தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே, நேற்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது, வீசிய பலத்த காற்றால், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சிக்னல் வழங்க கூடிய கருவிகள் பாதிக்கப்பட்டன. இதனால், மாலை வரை, சில இடங்களில் மொபைல் சேவை பாதிக்கப்பட்டது.

    சிக்னல்

    இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:புயல் கரையை கடந்த போது வீசிய காற்றால், அம்பத்துார், நத்தமேடு, நெமிலிச்சேரி, பழவந்தாங்கல் உட்பட, பல்வேறு பகுதிகளில், மொபைல் போன் சிக்னல் வழங்கக் கூடிய, பி.டி.எஸ்., நிலையங்கள், 18 சதவீதம் பாதிக்கப் பட்டன.இவை அனைத்தும், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு சொந்தமில்லாத நிலையங்கள். இவை, மாலைக்குள் சரி செய்யப்பட்டு, சேவைகள் வழங்கப்பட்டன.

    ரூ.5 கோடி

    இதேபோல, பாலவாக்கம், இடையம்பாக்கம், சோமங்கலம் உட்பட, 15 பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களில், சேவை பாதிக்கப்பட்டது. இந்த அலுவலகங்களிலும் ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டு, மாலைக்குள் சேவை வழங்கப்பட்டது. பலத்த சேதம் இல்லாததால், தொலை தொடர்பு சேவை வழங்குவதில், அதிக சிரமம் ஏற்படவில்லை. மேலும், புயல் முன்னெச்சரிக்கை மற்றும் சேதங்களை சரி செய்ய, 5 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...