Saturday, November 28, 2020

Get ready for heavy rains in December

Get ready for heavy rains in December

The rainfall activity in the State will intensify again this weekend as a new low pressure area is likely to form over southeast Bay of Bengal. 

Published: 28th November 2020 05:36 AM 

By Express News Service

CHENNAI: The rainfall activity in the State will intensify again this weekend as a new low pressure area is likely to form over southeast Bay of Bengal. 

Deputy director general of meteorology at Regional Meteorological Centre S Balachandran said the low pressure area will form by Sunday and would concentrate into a depression in the subsequent 24 hours. 

“It is likely to further intensify and move towards Tamil Nadu coast. Under its influence, enhanced rainfall is likely to occur over TN and Puducherry between December 1 and 3,” he added.

Weather blogger Pradeep John said the new system will bring heavy rains to Delta region and southern TN. Met officials have forecast partly cloudy sky condition for Chennai till the new system forms.

Poor patronage pushes Chennai’s taxis off the road

Poor patronage pushes Chennai’s taxis off the road

Over 20,000 taxis may get phased out soon due to low ridership

Published: 28th November 2020 05:38 AM 


Express News Service

CHENNAI: “I am yet to get much travel requests from the airport, railway station, star hotels and malls. If IT companies continue to encourage work-from-home for another year, the number of call taxis on roads will come down by half, in another three months,” says K Kannan, owner and driver of a call taxi.

It has been two months since the government allowed resumption of taxi services, post the lockdown. Yet, the demand for cab services continue to remain around 30 to 40 per cent, putting several thousands of drivers and their families in distress.

Kannan says there was a small surge in the bookings in the first week of November thanks to the Deepavali season. “However, it has now gone back to what it used to be during September. Apart from the fear of virus transmission, the travel pattern itself seems to have changed drastically,” he adds.

The poor patronage is being attributed to the closure of IT companies that had earlier contributed nearly 40 per cent to the business. Also sharing the blame are the restrictions imposed on hotels, beaches, theatres, etc. Around 45,000 call taxis ply in the city, of which about 32,000 are operated through cab aggregators such as Ola and Uber. The remaining run for other companies like NTL, Fast track or Friends.

The lockdown relaxations brought in some relief to these drivers, but they did not last long. “A driver now earns around Rs 1,000 to 1,200 a day, as against the Rs 3,000 to 3,500 before the lockdown. The average demand too has come down to 35 per cent,” says J Ramanujam, president of Thozhargal Car Ottunargal Amaippu Sara Thozhirsangam, adding that over 20,000 taxis may get phased out soon from the city, if the situation persists.

This was too much to bear for many of them, who had their monthly dues piling up, sometimes forcing them to leave the profession altogether. A week ago, about 10 call taxis were confiscated at Porur by a non-banking financial institution, citing that the drivers had failed pay to two installments.

“Although EMIs during the months of lockdown were not collected, the drivers weren’t able to save up to pay for the months that followed,” says P Anbazhagan, president of Tamil Nadu Call Taxi Drivers and Owners Association. 

    லட்சுமி விலாஸ் - டி.பி.எஸ்., இணைப்பில் குறுக்கிட மறுப்பு

    லட்சுமி விலாஸ் - டி.பி.எஸ்., இணைப்பில் குறுக்கிட மறுப்பு

    Added : நவ 27, 2020 23:11

    சென்னை:லட்சுமி விலாஸ் வங்கியை, டி.பி.எஸ்., வங்கியுடன் இணைக்கும் நடவடிக்கையில் குறுக்கிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ்., வங்கியுடன், லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்கும் திட்டத்தை, ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏ.யு.எம்., மார்க்கெட்டிங் நிறுவனம் வழக்கு தொடுத்தது.

    மனுவில், 'வங்கி ஒழுங்குமுறை விதிகளின்படி, இணைப்பு நடக்கவில்லை; இதனால், வங்கியின் பங்குதாரர்களுக்கு பாதிப்பு ஏற்படும்; இணைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.

    மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவில் குறுக்கிட, நீதிபதிகள் மறுத்து விட்டனர். லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்களின் நலனை, டி.பி.எஸ்., வங்கி பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை, ஜனவரி, 21க்கு தள்ளி வைத்தனர்.

    மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு உத்தரவு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு

    மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு உத்தரவு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு

    Added : நவ 27, 2020 23:23

    சென்னை:மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, 15 சதவீத இடங்கள்; முதுநிலை படிப்புகளுக்கு, 50 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடுக்காக ஒப்படைக்கப்படுகின்றன.இந்த இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீடு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மனுக்கள் தாக்கல் செய்தன.

    மனுக்களை விசாரித்த, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டு சலுகையை நீட்டிப்பதில், சட்டப்பூர்வ தடை ஏதும் இல்லை. இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்த பிரச்னைக்கு தீர்வு காண, குழுவுக்கு அனுப்பப்படுகிறது. தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் செயலர்கள் அடங்கிய கூட்டத்தை, மத்திய அரசு கூட்ட வேண்டும்.

    அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சலுகை வழங்கும் முறையை, கூட்டத்தில் இறுதி செய்ய வேண்டும்.எத்தனை சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது என்பதை மூன்று மாதங்களில், மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தி.மு.க., செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தாக்கல் செய்துள்ளார்.

    மனுவில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு நியமித்த குழுவில், தமிழக சுகாதாரத்துறை செயலர், சுகாதாரப்பணிகள் இயக்குனர் ஜெனரல் ஆகியோர் இடம் பெறவில்லை.தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு பதில், மருத்துவச் சேவை கழகத்தின் உறுப்பினரை, குழுவில் நியமித்துள்ளனர்.

    உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்ததன்படி, 69 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்துவதன் அடிப்படையில், குழுவின் விசாரணை வரம்பு இருக்க வேண்டும். ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீடு பற்றி மட்டுமே, குழுவின் விசாரணை வரம்பில் உள்ளது. இது, நீதிமன்ற அவமதிப்பு.மூன்று மாதங்களில் குழு முடிவெடுக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி, அக்., 27 க்குள் முடிவெடுத்திருக்க வேண்டும். அதுவும் மீறப்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசு அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

    உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கீடு ரத்து

    உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கீடு ரத்து

    Added : நவ 27, 2020 23:49

    புதுடில்லி:'அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில், நடப்பு கல்வியாண்டில், 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    தமிழகத்தில், உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.இந்திய மருத்துவ கவுன்சிலின், மருத்துவப் பட்ட மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி, அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீட்டை, மத்திய அரசு ரத்து செய்தது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அனுமதியளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசு மற்றும் சில மருத்துவ சங்கங்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரத்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது.இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பு:உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் வழங்காமல், மாணவர் சேர்க்கையை, இந்திய மருத்துவ கவுன்சில் நடத்த வேண்டும்.வழக்கு விசாரணை, வரும், பிப்., மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    தேஜஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்


    தேஜஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

    Added : நவ 28, 2020 01:18

    மதுரை:மதுரை- சென்னை தேஜஸ் சிறப்பு ரயில்கள் புறப்படும் நேரம் டிச., 4 முதல் மாற்றியமைக்கப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் தற்போது காலை 6:30 மணிக்கு பதிலாக காலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில் (02613) திருச்சியில் காலை 10:00 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் காலை 11:20 மணிக்கும் புறப்பட்டு மதியம் 12:20 மணிக்கு மதுரை வரும்.

    மறுமார்க்கத்தில் மதுரையில் தற்போது மதியம் 3:15 மணிக்கு பதிலாக மதியம் 3:00 மணிக்கு புறப்படும் ரயில் (02614) கொடைக்கானல்ரோட்டில் மதியம் 3:30 மணிக்கும், திருச்சியில் மாலை 5:05 மணிக்கும் புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும். இந்த ரயில்கள் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

    மருத்துவ கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்குமா?திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டது!


    மருத்துவ கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்குமா?திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டது!

    Added : நவ 27, 2020 22:51

    சென்னை:எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கின், திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து ஒரு புயல் அறிவிப்பு வெளியாகி உள்ளதால், திட்டமிட்டப்படி மாணவர் சேர்க்கை நடைபெறுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், இம்மாதம், 18ம் தேதி துவங்கியது.அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று நாட்கள்; சிறப்பு பிரிவினர் மற்றும் பொது பிரிவினருக்கு தலா, ஒரு நாட்கள் என, மொத்தம், ஐந்து நாட்கள் கவுன்சிலிங் நடந்தது.

    மாணவர் சேர்க்கை

    'நிவர்' புயலை தொடர்ந்து, மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும், 30ம் தேதி முதல், டிசம்பர், 10 வரை, பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் வரும், 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களை, https://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

    கோரிக்கை

    இதற்கிடையே, வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது புயலாக மாறி, தமிழகத்தில் பாதிப்பை உண்டாக்கினால், மீண்டும், மருத்துவ சேர்க்கை கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது.இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை, ஆன்லைனில் நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துஉள்ளது.

    இதற்கான பணிகள், 2017 --18ம் ஆண்டிலேயே முன்னெடுக்கப்பட்ட நிலையில், செயல்படுத்தாதது ஏன் என்ற, கேள்வியும் எழுந்துள்ளது.இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ படிப்பில் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 'தமிழகத்தில், புயல் தாக்கம் ஏற்பட்டால், அட்டவணையில் மாற்றம் ஏற்படலாம். தற்போது வரை, திட்டமிட்டப்படி மாணவர் சேர்க்கையை நடத்த முடிவெடுத்துள்ளோம்' என்றனர்.

    நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...