Wednesday, May 12, 2021

தன்னாட்சி அந்தஸ்து விண்ணப்பம் யு.ஜி.சி.,க்கு அதிகாரம்: ஐகோர்ட்


தன்னாட்சி அந்தஸ்து விண்ணப்பம் யு.ஜி.சி.,க்கு அதிகாரம்: ஐகோர்ட்

Added : மே 11, 2021 23:04

சென்னை:'தன்னாட்சி அந்தஸ்து கோரும் கல்லுாரிகளின் விண்ணப்பங்கள் மீது, தகுதி அடிப்படையில் பல்கலை மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில்உள்ள அன்னபூரணா பொறியியல் கல்லுாரி, தன்னாட்சி அந்தஸ்து கோரி, அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பம், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,க்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால், மாணவர்கள் சேர்க்கை குறைவு, தேர்ச்சி விகிதம் குறைவு என காரணங்களை காட்டி, அண்ணா பல்கலை நிராகரித்தது.

இதையடுத்து, தன்னாட்சி அந்தஸ்து அளிக்கக்கோரி, நேரடியாக யு.ஜி.சி.,க்கு, அன்னபூரணா கல்லுாரி விண்ணப்பித்தது. அதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலை நிராகரித்ததை எதிர்த்தும், விண்ணப்பத்தை பரிசீலிக்க, யு.ஜி.சி.,க்கு உத்தரவிடக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கந்தன் துரைசாமி, அண்ணா பல்கலை சார்பில், வழக்கறிஞர் விஜயகுமார், யு.ஜி.சி., சார்பில், வழக்கறிஞர் ரபு மனோகர் ஆஜராகினர்.மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

தன்னாட்சி அந்தஸ்து கோரும் விண்ணப்பங்களை, சுதந்திரமாக யு.ஜி.சி., பரிசீலிக்க எந்த தடையும் இல்லை. விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட பல்கலை வழியாக விண்ணப்பங்கள் வர வேண்டும். அந்த விண்ணப்பங்களை, பரிந்துரைகளுடன் யு.ஜி.சி.,க்கு அனுப்பலாம் அல்லது காரணங்களை குறிப்பிட்டு பல்கலை நிராகரிக்கலாம்.

அவ்வாறு பல்கலை நிராகரித்தாலும், மேல் நடவடிக்கைக்காக, அதை யு.ஜி.சி.,க்கு தான் அனுப்ப வேண்டும். அது தான் விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம். இரண்டு காரணங்களை குறிப்பிட்டு, விண்ணப்பத்தை அண்ணா பல்கலை நிராகரித்துள்ளது.இந்த இரண்டு காரணங்களும், விண்ணப்பத்தை சுதந்திரமாக பரிசீலிப்பதற்கு குறுக்கே நிற்குமா என்பதை, யு.ஜி.சி., தான் முடிவெடுக்க வேண்டும்; பல்கலை அல்ல.

மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை, சட்டப்படி தகுதி அடிப்படையில், சுதந்திரமாக யு.ஜி.சி., பரிசீலிக்க முடியும்.எனவே, தன்னாட்சி அந்தஸ்து கோரி, மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை, யு.ஜி.சி., பரிசீலிக்க வேண்டும். அவ்வாறு பரிசீலிக்கும் போது, அண்ணா பல்கலை தெரிவித்து உள்ள கருத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.இரண்டு மாதங்களில் முடிவெடுத்து, இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு ஊழியர்களுக்கு ரூ.2,000 வழங்க தடை கோரி வழக்கு

அரசு ஊழியர்களுக்கு ரூ.2,000 வழங்க தடை கோரி வழக்கு

Added : மே 12, 2021 00:54

மதுரை:மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணம் 2,000 ரூபாய் வழங்க தடை கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணம், முதல் தவணையாக, மே 15 முதல், 2,000 ரூபாய் வழங்க அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் நோக்கம், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்வது.

தமிழகத்தில் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி ரேஷன் கார்டு தார்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.இவ்வகை கார்டுதாரர்களில் மத்திய மாநில அரசு ஊழியர்களும் அடங்குவர். இவர்களுக்கு, ஊரடங்கு காலத்தில் சம்பள குறைப்பு இன்றி மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது.

இவர்களுக்குரிய நிவார ணத் தொகையை, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும்; தனியார் மருத்துவமனைகளில் கட்டணமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்தவும் பயன்படுத்தலாம். பல்வேறு தொழில், வணிகப் பிரிவினர், தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித் தொழிலாளிகள், கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதித்துள்ளனர். இவர்களுக்கு பொருளாதார உதவி தேவை.

மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்க கோரிக்கை

சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்க கோரிக்கை

Added : மே 11, 2021 20:36

சென்னை:கொரோனா பாதிப்பு நிவாரணமாக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படுவதை போன்று, சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சர்க்கரை கார்டுதாரர்கள் கூறியதாவது:சர்க்கரை கார்டுகளை வைத்திருப்போர் எல்லாம் வசதியானவர்கள் அல்ல; அரிசி கார்டுக்கு விண்ணப்பித்த போது, அதை ரத்து செய்த அதிகாரிகள், சர்க்கரை கார்டு வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். அதற்காகவே, பலரும் சர்க்கரை கார்டு பெற்றனர். எனவே, சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கார்டு வழங்குவது நிறுத்தமா?

இதற்கிடையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு, சமீப நாட்களாக பலர் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு புதிய கார்டுக்கு ஒப்புதல் அளிக்கும் பணி, நேற்று முன்தினம் முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: ஏற்கனவே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோம். 'தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது; நடத்தை விதிகள் ரத்தானதும் கார்டு வழங்க பரிந்துரைக்கப்படும்' என, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறினர். தேர்தல் முடிந்தும் கார்டு வழங்கவில்லை.

மீண்டும் அதிகாரிகளிடம் கேட்டால், 'இம்மாதம், 10ம் தேதி முதல், புது கார்டுக்கு, உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. 'நிவாரண தொகை வழங்கும் பணி முடிந்ததும், கார்டுக்கு ஒப்புதல் தரப்படும்' என்கின்றனர்.

குறித்த காலத்தில் ஆய்வு செய்து,ரேஷன் கார்டு வழங்காதது, அதிகாரிகளின் தவறு. தற்போது, கார்டுக்கு ஒப்புதல் தருவது நிறுத்தப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம். எனவே, புதிய கார்டுக்கு ஒப்புதல் அளிக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

உணவுத்துறை அதிகாரிஒருவர் கூறுகையில், 'தகுதியான அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர்' என்றனர்.

என் நுால்களை யாரும் வினியோகிக்க வேண்டாம் அரசு அலுவலர்களுக்கு இறையன்பு வேண்டுகோள்

என் நுால்களை யாரும் வினியோகிக்க வேண்டாம் அரசு அலுவலர்களுக்கு இறையன்பு வேண்டுகோள்

Added : மே 11, 2021 20:35

சென்னை:'அரசு விழாக்களில், அரசு அலுவலர்கள் யாரும், என் நுால்களை, அரசு செலவிலோ, சொந்த செலவிலோ, பூங்கொத்துகளுக்கு பதில் வினியோகிக்க வேண்டாம்' என, தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு, வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அவரது அறிக்கை:நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும், எனக்கு தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களை தொகுத்தும், சில நுால்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே, முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை.

இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளி கல்வித்துறைக்கு, ஒரு மடல் எழுதி உள்ளேன். அதில், 'நான் எழுதியுள்ள நுால்களை, எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமை செயலராகப் பணியாற்றும் வரை, எந்த திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது' என, தெரிவித்துள்ளேன்.

பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக, அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி, களங்கம் விளைவிக்கும் என்பதால் தான், இத்தகைய கடிதத்தை எழுதி உள்ளேன். எந்த வகையிலும், என் பெயரோ, பதவியோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.அரசு விழாக்களில் பூங்கொத்துக்கு பதிலாக,புத்தகம் வழங்கினால் நன்று என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது, 2006ல் பிறப்பிக்கப்பட்டது.

அரசு விழாக்களில், அரசு அலுவலர்கள் யாரும், என்னை மகிழ்விப்பதாகஎண்ணி, என் நுால்களை, அரசு செலவிலோ, சொந்த செலவிலோ, பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் வினியோகிக்க வேண்டாம் என்று, அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்.இவ்வேண்டுகோள் மீறப்பட்டால், அரசு செலவாக இருந்தால், தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு, அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது.

எனவே, இத்தகைய சூழலை, எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம்.இவ்வாறு இறையன்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா ஆர்வம்


இந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா ஆர்வம்

Updated : மே 12, 2021 08:07 | Added : மே 12, 2021 08:05

புதுடில்லி: இந்தியாவுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க, அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க துாதரகத்தின் உயர் அதிகாரி டேனியல் ஸ்மித் கூறியதாவது:கொரோனா இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் நிலையை பார்த்து, அமெரிக்கா கவலை அடைந்துள்ளது. இந்த நெருக்கடியில் இந்தியாவுக்கு துணை நிற்க, அமெரிக்க அரசு உறுதி எடுத்துள்ளது.

இ ந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பது போல், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பதற்கான வழிகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

IT companies use biz uptick to reward staff


IT companies use biz uptick to reward staff

Shilpa.Phadnis@timesgroup.com

Bengaluru:12.05.2021 

Many IT companies are giving a second round of salary increases and promotions within months of the previous one. Last year’s salary increment had initially been deferred on account of the pandemic and business downturn. But as business picked up in the second half of the year, increments were given with effect from late last calendar year or early this year. Now, with intense competition for talent, companies are rewarding employees again.

Accenture India, which has over 2 lakh employees, had its annual December increments, bonuses and promotions, and an added round of promotions in February this year. “In April, all our people up through associate director level received a one-time ‘thank you bonus’ equal to one week of base pay for their contributions during this difficult year. Additionally, we have expanded our annual mid-year promotions this coming June to include managing directors — a first in our company’s history — as one more way we continue to create new opportunities for our people,” Accenture India told TOI. In December last year, Accenture globally promoted 605 people to MD, and 63 people to senior MD, including a record percentage of women.

Infosys EVP & HR head Richard Lobo said its second compensation review cycle for the year is under way. It had given increments effective January, after having put them on hold for most of the last fiscal. It is doing another review based on last year’s performance, and the salary hike based on this will be effective July. Both compensation reviews are applicable to employees across levels. The quantum of hike is a factor of role and performance. The two increments together will be 10-14%, in an otherwise languid pay market.

Infosys’s move follows that of TCS, which too gave hikes within a six-month gap. TCS has given increments to all associates across geographies effective April. Sources told TOI that many senior employees received hikes in the range of 6-8%, higher than normal.

Wipro CEO Thierry Delaporte said in the latest earnings call that measures are in place to ensure the supply chain does not slow its pace of growth and it includes the rollout of “much-deserved” salary increases for his senior colleagues in June. The quantum of the hikes is yet to be decided. Salary hikes for employees in band C1 (managers and above) that was due in June last year had been deferred. But the company paid out 100% variable pay to all employees in each of the past three quarters because of business pick-up.

HCL, which normally gives salary increments effective July, had deferred it by one quarter last year. But this year it expects to return to the regular cycle. “On average, we rolled out 7-8% hikes last year, but those were higher at the bottom of the pyramid,” chief HR officer Apparao V V said.

Harshvendra Soin, global chief people officer in Tech Mahindra, said it recently completed the appraisal cycle and has announced salary hikes, in line with the industry, with effect from April 1. “The letters are being rolled out. We have also introduced retention bonus for key talent and have announced skill-based allowances for associates with niche skills and projectbased bonuses,” he said.

With competition for talent increasing, companies are rewarding employees again

From 1.2L a day, Tirumala footfall drops to 2.4k


From 1.2L a day, Tirumala footfall drops to 2.4k

Tirupati:12.05.2021 

Pilgrim footfall at Lord Venkateswara temple in Tirumala on Monday reported an all-time low of 2,400. This is perhaps the lowest ever in the history of the temple.

With the surging Covid-19 cases leading to full and partial lockdowns in many parts of the country, including in Andhra Pradesh and Telangana, the flow of devotees to the hill temple has dried up considerably over the last few weeks. While the temple was closed during the lockdown in the first wave of Covid-19 during March-June 2020, soon after its reopening the temple recorded an average footfall of 8,000 pilgrims.

Tirumala temple is famous for its large turnout of pilgrims round the year, the numbers often touching 1.25 lakh on weekends and festivals. Never in its history the temple had witnessed a pilgrim turnout less than 8,000 a day.

Now, though the TTD is allowing devotees with darshan tickets to enter Tirumala even after 12 noon, when the 18-hour partial curfew announced by the state government comes into force, people have been reluctant to visit the temple during these pandemic times.

While just 2,400 devotees visited the temple on Monday, about 1,375 devotees got their heads tonsured as part of fulfilment of their vows. The low pilgrim footfall also saw the temple’s hundi collections dip to an all-time low of 24 lakh. The hundi collection on normal days hovers between Rs 3 crore to Rs 5 crore daily. Even during the first wave Covid-19 restrictions the hundi collection never dropped below Rs 1 crore a day.

Officials expect a further dip in the pilgrim footfall as Telangana government on Tuesday announced near-lockdown restricting public movement. TNN

NEWS TODAY 06.06.2026