Saturday, July 31, 2021

குடியரசுத் தலைவர் வருகையால் ஆக.2-ம் தேதி தலைமைச் செயலக ஊழியர்கள் 1 மணிக்கு பணியை முடிக்க உத்தரவு

குடியரசுத் தலைவர் வருகையால் ஆக.2-ம் தேதி தலைமைச் செயலக ஊழியர்கள் 1 மணிக்கு பணியை முடிக்க உத்தரவு

secretariat-staff

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டுவிழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2-ம் தேதி வருவதால், அன்றைய தினம் தலைமைச் செயலக ஊழியர்கள் பகல் 1 மணிக்கு பணி முடித்து வீட்டுக்குசெல்லுமாறு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

ஆகஸ்ட் 2-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகவளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளன.

இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர்மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்பங்கேற்கின்றனர். குடியரசுத் தலைவர் வருகை தருவதால் தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் பகல் ஒரு மணிக்கு பணிமுடித்து வீட்டுக்கு திரும்புமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

டாக்டர்கள் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு


டாக்டர்கள் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு

Added : ஜூலை 31, 2021 01:00

சென்னை:அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

சந்திப்பு குறித்து, அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தந்த, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். ''அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச் செயலர் ரவீந்திரநாத் கூறுகையில், ''அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை கல்வியில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். ''தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு, தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, முதல்வரிடம் வலியுறுத்தினோம்,'' என்றார்.

67 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்ததடைந்தது


67 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்ததடைந்தது

Updated : ஜூலை 31, 2021 03:49 | Added : ஜூலை 31, 2021 03:47

சென்னை : தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த 53 லட்சம் தடுப்பூசியை விட 14 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக கிடைத்துள்ளன.

மத்திய அரசு கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து நேற்று 2.70 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. தமிழக அரசிற்கு ஜூலையில் மத்திய தொகுப்பில் 53 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன.

அந்த ஒதுக்கீட்டை விட கூடுதலாக 14 லட்சம் தடுப்பூசிகள் சேர்த்து மொத்தமாக 67 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை விட கூடுதலான தடுப்பூசிகள் வரும் என மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Issue income, community certificates to students without delay: Minister

Issue income, community certificates to students without delay: Minister

According to a press statement, Ramachandran has instructed the Tahsildar and Deputy Tahsildar to take steps to issue the certificates without any delay after scrutinising their applications.

Published: 30th July 2021 03:14 AM 

By Express News Service

CHENNAI: Minister For Revenue and Disaster Management KKSSR Ramachandran has instructed authorities to issue income and community certificates to students at the earliest to enable them to apply for admission in educational institutions.

According to a press statement, Ramachandran has instructed the Tahsildar and Deputy Tahsildar to take steps to issue the certificates without any delay after scrutinising their applications. “Besides, separate dates should be allocated at e-Service Centres for issuing students certificates, and this way crowds can be avoided,” the Minister said.

Stipend for house surgeons and non-service PG doctors hiked


Stipend for house surgeons and non-service PG doctors hiked

Heeding the long-pending demand of doctors, the Health Department has hiked the stipend for house surgeons and non-service post graduate and higher specialty courses doctors.


Published: 31st July 2021 07:08 AM 

By Express News Service

CHENNAI: Heeding the long-pending demand of doctors, the Health Department has hiked the stipend for house surgeons and non-service post graduate and higher specialty courses doctors. Health Secretary J Radhakrishnan issued the G.O. after representatives of the Residential Doctors Association and other associations petitioned Health Minister Ma Subramanian recently.



The Association had said that non-service post graduate students of government medical colleges in Tamil Nadu were being paid lower wages as stipend when compared to medical colleges in certain other States, and Central government medical colleges.

Along with the stipend hike, the government has also ordered for an annual increase of Rs 600 in stipend for house surgeons and Rs 1,000 in stipend for non-service PG degree, diploma and high specialty doctors. An automatic annual increase of 3 per cent to the previous year stipend shall also be allowed. The order has already come into effect.

Appreciating the government for this hike, Dr M Keerthy Varma, board member of Residential Doctors Association, said, “We are happy that the hike was allowed even at a time when the State is in an economical crisis induced by the pandemic. We had just met the Health Minister and given our representation. We didn’t expect action to be taken this quickly. However, the increased amount is still lower than stipends provided in certain other States. Some States even pay around Rs 80,000 for first-year PG degree students. But we are satisfied with this hike and it gives us confidence that the government will fulfil all our valid demands in the future too.”

Friday, July 30, 2021

தமிழகத்தில் அரசு ஊழியர் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைப்பு?- பணப் பயன்களுக்கு பதிலாக பத்திரம் தருவதற்கு எதிர்ப்பு


Published : 30 Jul 2021 03:14 am

Updated : 30 Jul 2021 07:03 am

தமிழகத்தில் அரசு ஊழியர் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைப்பு?- பணப் பயன்களுக்கு பதிலாக பத்திரம் தருவதற்கு எதிர்ப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக குறைப்பது, பணப்பயன்களை பத்திரமாக தற்போதுவழங்குவது என அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசில் 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால் நிதிச் சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், அப்போதைய முதல்வர் பழனிசாமி, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி அறிவித்தார். இதுகுறித்த அரசாணையில், 2020 மே 31-ம் தேதி பணி ஓய்வு பெறும் அனைவருக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் 2020-ல் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக்கால பணப் பயன்களை வழங்குவதை தவிர்த்தது.

கடந்த பிப்ரவரியில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது. அப்போது, முதல்வராக இருந்தபழனிசாமி, அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும். 2021 மே 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

தற்போது திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த மனு அடிப்படையில், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதைமீண்டும் 58 ஆக குறைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு முதல்வர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதன்மூலம், உடனடியாக 40 ஆயிரம் பேருக்குமேல் ஓய்வு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் ஓய்வு பெறுவோருக்கு உடனடியாக பணப்பயன்கள் வழங்கப்படாது என்றும் அதற்கு பதில் ‘அரசு பத்திரம்’ வழங்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதை செலுத்தி பணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தலாம் என அரசு முடிவுஎடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இத்துறையினர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் மு.அன்பரசு: கடந்த ஆட்சியில் ஓய்வு வயதை உயர்த்தியபோதே எதிர்த்தோம். தற்போதுஓய்வு வயதை குறைப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், ஓய்வூதிய பணப் பயன்களை அரசுபத்திரமாக தருவது ஏற்கக்கூடியதுஅல்ல. பல ஆண்டுகளாக இந்தபணப் பயன்களை நம்பி குழந்தைகளின் படிப்பு, திருமணம்போன்றவற்றை நடத்த காத்திருப்போருக்கு அதிர்ச்சியாக உள்ளது.

தலைமைச் செயலக சங்கமுன்னாள் செயலாளர் கு.வெங்கடேசன்: ஜாக்டோ ஜியோ சார்பில்,ஓய்வு வயது உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். தற்போது ஓய்வு பெறும் வயதுகுறைப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், பணப் பயன்களை பத்திரமாக வழங்குவதை ஏற்க முடியாது.

அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.சண்முக ராஜ்: ஓய்வு வயதைக் குறைப்பதற்குத் அரசுக்கு திட்டம் எதுவுமிருந்தால், அதை கைவிட வேண்டும். இதனால், பணி நீட்டிப்பு பெற்ற ஏராளமான அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசுஊழியர்களுக்கு சலுகை வழங்கப்படும் என்று 1989-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அவரின் வழி வந்த ஆட்சி அரசு ஊழியர்களை வஞ்சிக்காது என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய பல்கலைக்கு தடை விதிக்க மறுப்பு Added : ஜூலை 29, 2021 23:04 சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, 10, 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள், அதற்காக நடத்தப்படும் தேர்வுகளை எழுதவும் அனுமதிக்கப்பட்டது. எனவே, இந்த தேர்வு முடிவுகளை பரிசீலிக்காமல், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய, பல்கலைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.மதிப்பீடு செய்த மதிப்பெண் மற்றும் கூடுதல் மதிப்பெண் பெற எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண், இதில் இறுதி மதிப்பெண் எது என்பதையும் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் யாரும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனரா என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், யூகம், அனுமானத்தின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது என்றனர்.இதையடுத்து, இந்தப்பிரச்னையை எழுப்ப தகுதி இல்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாதிக்கப்படும் மாணவர்கள், நீதிமன்றத்தை அணுக தடையில்லை என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய பல்கலைக்கு தடை விதிக்க மறுப்பு

Added : ஜூலை 29, 2021 23:04

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, 10, 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.

கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள், அதற்காக நடத்தப்படும் தேர்வுகளை எழுதவும் அனுமதிக்கப்பட்டது. எனவே, இந்த தேர்வு முடிவுகளை பரிசீலிக்காமல், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய, பல்கலைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.மதிப்பீடு செய்த மதிப்பெண் மற்றும் கூடுதல் மதிப்பெண் பெற எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண், இதில் இறுதி மதிப்பெண் எது என்பதையும் அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் யாரும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனரா என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், யூகம், அனுமானத்தின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது என்றனர்.இதையடுத்து, இந்தப்பிரச்னையை எழுப்ப தகுதி இல்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். பாதிக்கப்படும் மாணவர்கள், நீதிமன்றத்தை அணுக தடையில்லை என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

NEWS TODAY 03.07.2026