Saturday, July 31, 2021

TN cluster infections up, a cause for worry


TN cluster infections up, a cause for worry

TIMES NEWS NETWORK

Chennai:31.07.2021 

Fresh cases that were declining across Tamil Nadu for more than two months have started to rise marginally over the last two days. They rose by 100 cases to 1,859 on Thursday. On Friday, the state reported 1,947 new cases. Coimbatore, where industries are back to working at full strength, and Chennai are seeing small clusters that are contributing to the rise in cases.

This has not come as a surprise to the state health department, which expected the decline in cases to slow two weeks after lockdown relaxations. A week after every phase of unlocking, the rate of fall declined. “Any spike in cases is a cause of concern, particularly with neighbouring Kerala reporting high numbers,” said health minister Ma Subramanian. In February 2021, when the epidemic wave was receding, similar clusters — hostels, hotels, and family reunions — marked the beginning of the deadly wave.

On Friday, Coimbatore crossed the 200-mark. “We have now identified two areas — Sulur and Karamadai — which are beginning to see an increase in cases,” Coimbatore deputy director of public health Dr Senthil Kumar said. The challenge now is to ensure the curve does not go up again.

Union Health Minister, Shri Mansukh Mandaviya chairs a review meeting with National Medical Commission (NMC)

Union Health Minister, Shri Mansukh Mandaviya chairs a review meeting with National Medical Commission (NMC): New Delhi: The Union Minister of Health and Family Welfare, Shri Mansukh Mandaviya chaired a revi

15 நாட்களுக்குப் பிறகு 10,500 டோஸ் வரத்து; கோவாக்சின் தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள்: 6 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க நேரிட்டதால் பாதிப்பு


15 நாட்களுக்குப் பிறகு 10,500 டோஸ் வரத்து; கோவாக்சின் தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள்: 6 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க நேரிட்டதால் பாதிப்பு

30.07.2021 


திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு 15 நாட்களுக்குப் பின் நேற்று கோவாக்சின் தடுப்பூசி 10,500 டோஸ் வந்தது. மக்கள் போட்டிபோட்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 3.68 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3.10 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 46 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி வரத்து இல்லை. இதனால் 2-வது தவணை செலுத்த வேண்டிய தேதி கடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் ஏராளமானோருக்கு தடுப்பூசி போடப்படவில்லை. நாள்தோறும் தடுப்பூசி மையங்களுக்கு அவர்கள் அலைந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் 15 நாட்களுக்குப்பின் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 3,360 கோவாக்சின் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 1,500 தடுப்பூசிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மீதமுள்ள தடுப்பூசிகள் முக்கூடல், ரெட்டியார்பட்டி, திருக்குறுங்குடி, பத்தமடை, முனைஞ்சிப்பட்டி உள்ளிட்ட 13 மையங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டிருந்தது.

கோவாக்சின் தடுப்பூசி வரத்து குறித்து அறிந்ததும் தடுப்பூசி மையங்களுக்கு ஏராளமானோர் திரண்டனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை 6 மணி முதலே மக்கள் குவியத் தொடங்கினர். பெரும்பாலானோர் காலை உணவு கூட சாப்பிடாமல் சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருந்த நிலையில் 11 மணியை தாண்டிய பின்னரும் தடுப்பூசி வந்து சேரவில்லை.

இதையடுத்து அனைவருக்கும் பெயர் பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்டு விட்டு வரிசையில் நிற்குமாறு தெரிவிக்கப்பட்டது.

ஒருவழியாக நண்பகல் 12 மணிக்கு மேல் தடுப்பூசி வந்து சேர்ந்ததை தொடர்ந்து அனைவருக்கும் செலுத்தப்பட்டது. 2-வது தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு மட்டுமே போடப்பட்டது.

திருநெல்வேலியில் 76 மையங்களில் நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. தென்காசி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் பல்வேறு மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு நேற்று போடப்பட்டது.

குடியரசுத் தலைவர் வருகையால் ஆக.2-ம் தேதி தலைமைச் செயலக ஊழியர்கள் 1 மணிக்கு பணியை முடிக்க உத்தரவு

குடியரசுத் தலைவர் வருகையால் ஆக.2-ம் தேதி தலைமைச் செயலக ஊழியர்கள் 1 மணிக்கு பணியை முடிக்க உத்தரவு

secretariat-staff

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டுவிழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2-ம் தேதி வருவதால், அன்றைய தினம் தலைமைச் செயலக ஊழியர்கள் பகல் 1 மணிக்கு பணி முடித்து வீட்டுக்குசெல்லுமாறு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

ஆகஸ்ட் 2-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகவளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளன.

இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர்மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்பங்கேற்கின்றனர். குடியரசுத் தலைவர் வருகை தருவதால் தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் பகல் ஒரு மணிக்கு பணிமுடித்து வீட்டுக்கு திரும்புமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

டாக்டர்கள் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு


டாக்டர்கள் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு

Added : ஜூலை 31, 2021 01:00

சென்னை:அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

சந்திப்பு குறித்து, அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தந்த, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம். ''அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் பொதுச் செயலர் ரவீந்திரநாத் கூறுகையில், ''அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை கல்வியில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். ''தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு, தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, முதல்வரிடம் வலியுறுத்தினோம்,'' என்றார்.

67 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்ததடைந்தது


67 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்ததடைந்தது

Updated : ஜூலை 31, 2021 03:49 | Added : ஜூலை 31, 2021 03:47

சென்னை : தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த 53 லட்சம் தடுப்பூசியை விட 14 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக கிடைத்துள்ளன.

மத்திய அரசு கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருந்து நேற்று 2.70 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. தமிழக அரசிற்கு ஜூலையில் மத்திய தொகுப்பில் 53 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன.

அந்த ஒதுக்கீட்டை விட கூடுதலாக 14 லட்சம் தடுப்பூசிகள் சேர்த்து மொத்தமாக 67 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை விட கூடுதலான தடுப்பூசிகள் வரும் என மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Issue income, community certificates to students without delay: Minister

Issue income, community certificates to students without delay: Minister

According to a press statement, Ramachandran has instructed the Tahsildar and Deputy Tahsildar to take steps to issue the certificates without any delay after scrutinising their applications.

Published: 30th July 2021 03:14 AM 

By Express News Service

CHENNAI: Minister For Revenue and Disaster Management KKSSR Ramachandran has instructed authorities to issue income and community certificates to students at the earliest to enable them to apply for admission in educational institutions.

According to a press statement, Ramachandran has instructed the Tahsildar and Deputy Tahsildar to take steps to issue the certificates without any delay after scrutinising their applications. “Besides, separate dates should be allocated at e-Service Centres for issuing students certificates, and this way crowds can be avoided,” the Minister said.

NEWS TODAY 10.07.2026