Friday, November 5, 2021

'பாஸ்டேக்' இருந்தும் நெரிசல்: சுங்கச் சாவடிகளில் அணிவகுப்பு



தமிழ்நாடு

'பாஸ்டேக்' இருந்தும் நெரிசல்: சுங்கச் சாவடிகளில் அணிவகுப்பு

Added : நவ 03, 2021 21:01

சென்னை:'பாஸ்டேக்' நடைமுறை இருந்தும் முன்னேற்பாடுகள் இல்லாததால், சுங்கச் சாவடிகளில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்களின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 48 இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன. சுங்கச் சாவடிகளில் ரொக்க கட்டணம் செலுத்த வாகனங்கள் காத்திருப்பதால், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜன., முதல் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் 'பாஸ்டேக்' நடைமுறை நாடு முழுதும் அமலுக்கு வந்தது.

இந்த பாஸ்டேக் அட்டைகள், வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சுங்கச் சாவடிகளில் காத்திருப்பு குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னையில் அலுவல் காரணமாக வசிக்கும் பலரும், சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால், அண்ணாசாலை, ஜி.என்.டி., சாலை, ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பாஸ்டேக் அட்டைகள் இருந்தும், சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. சென்னை பைபாஸ் சாலையில் உள்ள வானகரம், சூரப்பட்டு; சென்னை - கோல்கட்டா சாலையில் உள்ள நல்லுார்; சென்னை - பெங்களூரு சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதுார்; சென்னை - திருச்சி சாலையில் உள்ள பரனுார் சுங்கச் சாவடிகளில், வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போதிய பாஸ்டேக் கட்டண வசூலிப்பு கருவிகள், ஊழியர்கள் இல்லாதது இதற்கு காரணம். இதனால், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல், பலரும் அவதிக்குள்ளாகினர்.

குறித்த நேரத்திற்கு மேல் காத்திருந்தால், கட்டணம் வசூலிக்க கூடாது என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.இதற்காக, சுங்க கட்டணம் செலுத்தும் கவுன்டரில் இருந்து குறிப்பிட்ட துாரம் வரை, மஞ்சள் கோடு வரைய வேண்டும். இந்த கோட்டிற்கு வெளியே காத்திருக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது. ஆனால், மஞ்சள் கோடு வரைவதற்கு சுங்கச் சாவடி கட்டண வசூலிப்பு நிறுவனங்கள், ஆர்வம் காட்டாமல் உள்ளன.

இதை, ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இது வாகன ஓட்டிகள், பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இலவச பயணம் செய்யும் பெண்களை நாயாய் விரட்டும் கண்டக்டர்கள்



தமிழ்நாடு

இலவச பயணம் செய்யும் பெண்களை நாயாய் விரட்டும் கண்டக்டர்கள்

Updated : நவ 05, 2021 01:19 | Added : நவ 04, 2021 23:53

பெரம்பலுார் :டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை, அரசு பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் நாயாய் விரட்டுவதால், தமிழக அரசு மீது பெண்களுக்கு அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குறுதிப்படி, அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இலவசம் என்பதால், அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. டவுன் பஸ்களில் ஆண்கள் எண்ணிக்கையை விட, பெண்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இலவச பயணத்தால் தி.மு.க., அரசு மீது பெண்கள் மத்தியில் ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பு தற்போது குறையத் துவங்கி உள்ளது.

இதற்கு, அரசு டவுன் பஸ்களில் இலவமாக பயணிக்கும் பெண்களை, அந்த பஸ்களில் பணியாற்றும் பெரும்பாலான கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள், இலவசமுன்னு சொன்னதும் போதும், ஆட்டோவுலேயே போகாம எல்லாரும் டவுன் பஸ்சுலேயே வாறீங்க. ஓசியில வர்றவங்களாம் டிக்கெட்டை கேட்டு வாங்குங்க. காசு கொடுத்து வர்றவங்க நின்னுட்டு வர்றாங்க, நீங்க பக்கத்துல இறங்குற ஊருக்கு உர்கார்ந்துட்டீங்களோ. அந்த ஸ்டாப்புல நிக்காது. இந்த பஸ்சுல ஏறாதீங்க, அடுத்த பஸ்சுல வாங்க. வீட்டுல, காட்டுல வேலை ஏதும் இல்லையா, எல்லாம் கிளம்பி வந்துடுறீங்க என்று, இஷ்டத்துக்கு பெண்களை அவர்கள் வசை பாடுவதே காரணமாக உள்ளது.

அரசாங்கம் உத்தரவால் தான் இலவசமாக நாங்க போறாம். நீங்க ஏன் இப்படி பேசுறீங்க என பெண்களுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே தினமும் தகராறு நடக்கிறது. இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு, தங்களுக்கு படிக்காசு கிடைக்காது என்ற கோபமே காரணம்.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றும் நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே, தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்தி, இலவச பயணம் செய்பவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்க, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதல் மருத்துவ கல்லுாரிகள் தமிழக மாணவர்களுக்கு பயன்

DINAMALAR

கூடுதல் மருத்துவ கல்லுாரிகள் தமிழக மாணவர்களுக்கு பயன்

Added : நவ 04, 2021 23:10

கோவை:கூடுதல் மருத்துவக் கல்லுாரிகளால் 'கட் ஆப்' மதிப்பெண் குறையும் என்பதால் தமிழக மாணவர்களுக்கு பயன் கிடைக்க உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப் பட்டன. மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் விரைவில் துவங்க உள்ளது. தமிழகத்தில் கூடுதலாக 11 மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 700 - 720 மதிப்பெண்களை 85 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்தனர். ஆனால் இந்தாண்டு 197 பேர் பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான 'கட் ஆப்' குறைந்து வருகிறது. இதற்கு காரணம் கூடுதலாக மருத்துவ கல்லுாரிகள்துவங்கப்படுவதே.

கடந்தாண்டு தமிழகத்தில் 2747 மருத்துவ இடங்கள் இருந்தன. நடப்பாண்டு புதிதாக மருத்துவக் கல்லுாரிகள் துவங்கப்பட்டதால் மொத்தம் 4100 மருத்துவ இடங்கள் இருக்கும். இதனால் தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய பயன் கிடைக்கும். மருத்துவ இடங்களுக்கான 'கட் ஆப்' மூன்று முதல் ஐந்து மதிப்பெண் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

திரைவானில் மின்னும் ராமநாதபுரம் தந்த நட்சத்திரங்கள்





திரைவானில் மின்னும் ராமநாதபுரம் தந்த நட்சத்திரங்கள்

Added : நவ 04, 2021 22:02

வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தை 'தண்ணி இல்லா காடு' என்றுதான் பல திரைப்பட வசனங்களில் கேட்டிருக்கிறோம். ஆனால் அந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அதே சினிமாவில் நட்சத்திர நாயகர்களாக வென்றவர்கள் ஏராளம்.

கமல்

கமல் பிறந்தது ராமநாதபுரம் அரண்மனையில் தான். இவரது சொந்தஊர் பரமக்குடி. தந்தை சீனிவாசன் வழக்கறிஞர். பின் இவர்களின் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளது. அங்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தயாரிப்பில் வெளியான களத்துார் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவக்கி உலகநாயகனாக உயர்ந்து நிற்கிறார்.

சாருஹாசன்

கமலின் மூத்த அண்ணனான சாருஹாசன் தளபதி, வேதம் புதிது, தற்போது வெளியான தாதா 87என்ற படங்கள் வரை அசத்துகிறார்.வில்லனாகவும் கலக்கியவர்.

சந்திரஹாசன்

கமல் அண்ணன் சந்திரஹாசன். படங்களில் அதிகம் நடிக்கவில்லை. அதே நேரம் 'அப்பத்தாவ ஆட்டைய போட்டாங்க' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்துள்ளார்.அவர் மறைவுக்கு பின் வெளிவந்த படம் இது.

ராஜ்கிரண்

கீழக்கரை முஸ்லிம். ஆனால், அரண்மனைக்கிளி படத்தில் 'அம்மன் கோவில் கும்பம் இங்கே' பாடலில் கிராமத்து அம்மன் கோயில் சடங்குகளை முறையாக செய்வார். வினியோகஸ்தராக வாழ்க்கையை துவங்கி தயாரிப்பாளரானார். பின்ராமராஜன் ஹீரோவாக நடித்த ராசாவே உன்னை நம்பி என்ற படத்தில் 'சீதைக்கொரு ராவணன் தான்' என்ற பாடலில் முதலில் நடித்தார். என்ராசாவின் மனசிலே படத்தில் ஹீரோவாகி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

விக்ரம்

சொந்த ஊர் பரமக்குடி. சிறுவயதிலே சென்னையில் குடியேறிவிட்டார். தந்துவிட்டேன் என்னை, மீரா, புதிய மன்னர்கள் படங்களில் நடித்து கதாநாயகன் ஆக போராடினார். சேது படத்தின் மூலம் புகழ்பெற்றார். தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, 6 முறை பிலிம்பேர் விருதுகளை குவித்தவர்.

கே.எஸ்.அதியமான்

ராமநாதபுரம் அருகே சத்திரக்குடியை அடுத்த காமன்கோட்டை இவரது சொந்த ஊர். 'தொட்டாச்சிணுங்கி' படம் மூலம் இயக்குனரானார். ஹிந்திதிரையுலகிலும் வேகமாக கால் பதித்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்

இவர் பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம். சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை, நான் சிகப்புமனிதன், நீதியின் மறுபக்கம், சுக்ரன் என பல படங்களை தந்தார்.

செந்தில்

முதுகுளத்துார் அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் பிறந்தவர். பொய்சாட்சி, துாறல் நின்னு போச்சு என நடிக்க பாக்கியராஜ் வாய்ப்பளித்தார். கரகாட்டக்காரன்படத்தில் இவர் காமெடி உச்சம் தொட்டது.

லதா

1953ல் ராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதிமற்றும் லீலாராணிக்கு பிறந்தவர். 1973ல் எம்.ஜி.ஆர்., நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். எம்.ஜி.ஆருடன் இவர் நடித்த உரிமைக்குரல் படம்சக்கை போடு போட்டது. இவரது சகோதரர் ராஜ்குமார் சேதுபதி சூலம், உச்சகட்டம் உள்ளிட்ட படங்கள் நடித்தவர். கமல் நடித்த பாபநாசம் படத்தின் இணை தயாரிப்பாளர்.

காஜா ஷெரீப்

கீழக்கரையில் பிறந்தவர். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில்அறிமுகமாகி மகேந்திரனின் உதிரிபூக்கள், பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். 1980களில் அனைத்து முன்னணிநடிகர்களுடன், இயக்குனர்களுடன் பணிபுரிந்தவர். அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்தார்.

ஆர்.சி.சக்தி

ரஜினியை வைத்து தர்மயுத்தம், கமலைவைத்து மனிதரில் இத்தனை நிறங்களா, சிறை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். கமலின் நெருங்கிய நண்பர். பரமக்குடி அருகே புழுதிக்குளம் கிராமத்தைசேர்ந்தவர். உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்.

வேலா ராமமூர்த்தி

பெருநாழியை சேர்ந்தவர். எழுத்தாளர். அதன்பிறகே நடிகர். வரலாற்று நிகழ்வுகளை கண்முன் வடித்து இவர் எழுதிய புதினங்கள்,கட்டுரைகள் பெயர் பெற்றவை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த குற்றப்பரம்பரைசட்டம் குறித்து விளக்கமான புத்தகத்தை எழுதியவர். மதயானைக்கூட்டம், புலிக்குத்திபாண்டி,கொம்பன், கிடாரி என தொடர்ந்து வில்லனாக, குணச்சித்திரநடிகராக நடித்து வருகிறார்.

நட்ராஜ்

சொந்த ஊர் பரமக்குடி. சதுரங்க வேட்டை படம் மூலம் புகழ் பெற்றவர். அதற்கு முன் மிளகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்றும் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிப்பதற்கு முன் பல புகழ்பெற்ற ஹிந்தி படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரித்தீஷ்

சொந்த ஊர் ராமநாதபுரம். சின்னி ஜெயந்த் இயக்கிய கானல் நீர் படத்தில் அறிமுகமானார். 2008 ல் நாயகன்படத்தில் நடித்தார். பின் பெண் சிங்கம், எல்.கே.ஜி., படங்களில் நாயகனாக நடித்தார்.2009ல் தி.மு.க.,வில் போட்டியிட்டு ராமநாதபுரம் தொகுதி எம்.பி.,யானார். இவரது மறைவுக்கு பின்குடும்பத்தினர் சென்னையில் வசிக்கின்றனர்.

ஹலோ கந்தசாமி

பெருநாழியை சேர்ந்த இவர் தற்போது அருப்புகோட்டை அருகே வசிக்கிறார்.சாட்டை, ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் கலக்கியவர். ரஜினி முருகன்படத்தில் இவரின் ஜோதிடர் காமெடியை மறக்க முடியாது. இவர்களைத் தவிர குறும்பட இயக்குனர் சக்திமோகன், வாலி படத்தில் நடித்தவரும், சின்னத்திரை நடிகையுமான தேவிப்பிரியா, ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையை சேர்ந்த விருமாண்டி பட வில்லன் சண்முக ராஜேஸ்வரன், மண்டபம் ஆர்.கே.சுரேஷ், சின்னத்திரை நடிகைகள் ரஞ்சனா, திவ்யா, தமிழ், ஹேமந்த்குமார், இளங்கோ, சண்டை பயிற்சியாளர் சகோதரர்கள் அன்பு, அறிவு,சுப்பிரமணி, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, இயக்குனர்கள் ராஜசேகர்,அண்ணாதுரை, விக்ரம் சுகுமாறன், அரு.அபிராம் என ராமநாதபுரம் மண்ணின் பெருமையை திரையுலகில் நிரூபித்து வருபவர்கள் பட்டியல் தொடர்ந்து நீள்கிறது

'நீட்' தேர்வு முடிவில் குளறுபடி; மாணவர்கள் குற்றச்சாட்டு



'நீட்' தேர்வு முடிவில் குளறுபடி; மாணவர்கள் குற்றச்சாட்டு

Added : நவ 05, 2021 05:26

புதுடில்லி : 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு முடிவுகளில் தவறுகள் உள்ளன' என மாணவர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு, செப்., 12ல் நடந்தது. நாடு முழுதும் 16 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதினர்.

இதற்கிடையே, நீட் தேர்வு முடிவுகள் கடந்த 1ம் தேதி வெளியாகின. மாணவர்களின் 'இ - மெயில்' முகவரிக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்திலும் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளதாக, மாணவர்கள் புகார் செய்துள்ளனர்.

தேர்வில் தாங்கள் எழுதிய பதில்களை, விடைகளுடன் ஒப்பிட்டு பார்த்த போது அதிக மதிப்பெண் வந்ததாகவும், ஆனால், தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் வந்துள்ளதாகவும், மாணவர்கள் பலர் தெரிவித்துள்ளனர். தேர்வை நன்றாக எழுதிய பல ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பதாகவும், சரியாக தேர்வு எழுதாதவர்கள், தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், மாணவர்கள் சிலர், 'டுவிட்டரில்' குற்றம் சாட்டியுள்ளனர்.

Thursday, November 4, 2021

IRCTC air package


IRCTC air package

04/11/2021

Staff Reporter Coimbatore

Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) announced an air tour package from Coimbatore to Hyderabad that begins on December 17 from the Coimbatore International Airport.

A release said that the tour package would cover major tourism spots of Hyderabad including Charminar, Golconda Fort, Salar Jung Museum and Lumbini Garden.

The package cost starts from ₹ 15,595 and would cover air fare, travel and accommodation expenses. Those interested shall contact IRCTC, Coimbatore, at 82879 31965 and 90031 40655 for bookings and for further details.

Gang hacks govt portals to issue fake birth, death certs

Gang hacks govt portals to issue fake birth, death certs

Chandigarh:04.11.2021

Haryana Police on Wednesday said it has arrested two people from Bihar who allegedly issued around 800 fake birth and death certificates by hacking into government websites of several states. The arrested have been identified as Santosh and Mantosh, residents of a village in Bihar's Samastipur. A team from the Cyber Crime police station, Karnal Range, arrested them from their village, Haryana Police said in a statement. Two laptops, two mobile phones and a CPU among other articles were recovered from their possession, police said.

“During interrogation, it was revealed that around 800 fake birth and death certificates have been issued by the accused by hacking into government websites in Haryana, Bihar, Madhya Pradesh, Rajasthan, Uttar Pradesh and many other states,” the statement read. The scam came to light after the principal medical officer at the Karnal Civil Hospital filed a complaint with the Haryana Police that login credentials of the hospital’s birth and death certificate registration unit had been compromised.

“Investigation also revealed that for the purpose of issuing fake certificates, the accused, along with their associates, had formed a WhatsApp group. As soon as a person came in contact with them for birth and death certificates, they would send an alert in the WhatsApp group and their accomplice in MP would hack the relevant website and post its link in the group,” the statement read.

The two arrested accused would then login to the website and issue a fake certificate in the client's name and forward the same to the client via WhatsApp, albeit with a fake signature. They charged a hefty sum, which clients would transfer into their bank accounts digitally. PTI

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...