Friday, March 14, 2025

பார்வைகள் பலவிதம்..!



பார்வைகள் பலவிதம்..!

14.03.2025

எந்த ஒரு விஷயத்தையும் பல கோணங்களில் இருந்தும், வேறுபட்ட பார்வைகளின் மூலமாகவும் அணுகுதல் வேண்டும். ஒரு விஷயத்தை பற்றிய நமது எண்ணங்களும், உணர்வுகளும் பிறருடைய எண்ணங்களுடனும், உணர்வுகளுடனும் ஒத்துப் போகாது. இதுவே பார்வைகள் பலவிதம் எனப்படும்.

ஒரு விஷயத்தை நாம் பார்ப்பதற்கும் மற்றவர்கள் பார்க்கும் கோணத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நாம் பார்க்கும் கோணம்தான் சரி என்று வாதிட முடியாது. நம்மைப் பொறுத்தவரை சரியாக இருக்கலாம். மற்றவர்களுக்கு இது தவறான எண்ணமாகத் தோன்றலாம். ஒருவர் ஒரு விஷயத்தை நேர்மறையாக பார்த்தால் மற்றொருவர் அதை நேர்மறையாகதான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர்மறையாகவும் பார்க்கக்கூடும்.

நமக்குப் பிடித்த பொருளோ, விஷயமோ, செயலோ மற்றவர்களுக்கும் பிடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது எல்லாம் அனைவருக்கும் ஒன்று போலவே இருப்பதில்லை. சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு தொந்தரவு செய்வார்கள். இவரைப் பொறுத்தவரை அது உதவியாக தோன்றும். ஆனால் எதிரில் இருப்பவருக்கோ தொந்தரவு தருவதாக இருக்கும்.

இவன் ஏன் நம் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுகிறான் என்று எண்ணத் தோன்றும். எனவே எதையும் நம் கோணத்தில் இருந்து அணுகாமல் அடுத்தவர் கோணத்திலிருந்து பார்த்து அவர்கள் எதிர்பார்ப்பதை செய்யும் மனப்பக்குவம் இருந்தால் போதும்.

ஒவ்வொருவரும் தனக்கே உரிய பார்வையில் தனக்குத் தெரிந்த புரிதல்கள் மூலமும், அனுபவங்கள் மூலமும் ஒரு விஷயத்தை அணுகுகிறார்கள். பறவைகள் பலவிதம் என்பதுபோல் மனிதர்களும் பலவிதம். மனிதர்களுடைய எண்ணங்களும், பார்வைகளும் பலவிதம். எனவே நாம் புரிந்து கொள்வதைப் போலவே மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு.

மற்றவர்களுடைய கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரை நம் பார்வை மூலம் அணுகாமல் அவர்களின் பார்வையில் புரிந்து கொள்ள முயல வேண்டும். பிறரையும் நம்மைப்போல் எண்ணி அனுதாப நோக்கத்துடன் புரிந்துகொள்ள முயல்வது வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தாது.

வாழ்க்கை மீது தெளிவான பார்வை வேண்டும். வாழ்வில் எதுவும் நிலை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வில் எதிர்ப்படும் ஒவ்வொன்றும் அதன் தன்மையில் இருந்து மாறிக்கொண்டே இருக்கும் பொழுது நம் பார்வையும் குறுகி விடாமல் விரிந்து சென்று கொண்டே இருந்தால்தான் நல்லது.

மனிதனுக்கு மனிதன் காலத்திற்கு ஏற்றார் போல், இடத்திற்கு ஏற்றார் போல் பார்வைகளும் கருத்துக்களும் மாறிக்கொண்டே தான் இருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே நம் பார்வையையும் மாற்றிக் கொள்ள பழகவேண்டும். இதனை சுலபமாக புரிந்துகொள்ள ஒரு வழியுள்ளது. எப்படி? தண்ணீர் ஒன்றுதான்.

ஆனால் அது மழையாகவும், புயலாகவும், மலையிலிருந்து கொட்டும் பொழுது அருவியாகவும், தேங்கி நிற்கும் பொழுது குளமாகவும், குட்டையாகவும் பார்க்கப்ப டுகிறதோ அதுபோல்தான் மனிதர்களின் பார்வையும் ஒரே மாதிரி அமைந்து விடுவதில்லை.

எதையும் பார்க்கிற கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது. பக்தனுக்கு தெய்வமாகத் தெரியும் கற்சிலைதான் சிலருக்கு சிற்பமாகத் தெரிகிறது. சிலர் சின்ன விஷயத்தைக் கூட பூதாகரமாக நினைத்து பயப்படுவார்கள். வேறு சிலரோ இதெல்லாம் ஒரு விஷயமாக என்று சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

இப்படி மாறுபட்ட சிந்தனையும் பார்வையும் இருப்பது சகஜம்தானே! பார்வைகள் பலவிதப்பட்டாலும் காலத்திற்கும் வாழ்நிலைக்கும் தகுந்த பார்வையை, கண்ணோட்டத்தை ஏற்று நடக்க வேண்டியது அவசியம்தானே!

NEWS TO DAY 14.03.2025







 

வாா்த்தைகள் உருவாக்கும் வாழ்க்கை!


நடுப்பக்கக் கட்டுரைகள் 

வாா்த்தைகள் உருவாக்கும் வாழ்க்கை! 

நோ்மறை வாா்த்தைகளும் பாராட்டுகளுமே மனித வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக்கும். 

Din Updated on: 13 மார்ச் 2025, 7:04 am

தென்காசி கணேசன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ‘யாதும் ஊரே... யாவரும் கேளிா்’ என்ற உயா்ந்த கருத்தை உலகுக்கு அளித்தனா் நம் முன்னோா்கள். அப்படி இருக்கும்போது, இன்று அண்டை வீட்டில் இருப்பவரையே யாா் என்று தெரியாமல் நாம் வாழ்ந்து வருகிறோம். வீட்டின் முன்பகுதியில் திண்ணையில் உட்காா்ந்து அக்கம்பக்கத்தாரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தவா்கள் நம் முன்னோா்கள். தனித்தனியாக வீடுகள் இருக்கும்போதுகூட நாம் அனைவருடனும் பேசி வந்தோம். அடுக்கு மாடிகள் ஆனவுடன், அடுத்த வீட்டுக்காரா் யாரென்று நமக்குத் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. 

உறவுகள், நட்பு ஆகியவை விலைமதிப்பு இல்லாதவை. அவற்றின் அருமையை அவற்றை இழந்த பின்தான், நாம் உணரப் போகிறோம்.  தகவல் தொடா்பு வளா்ச்சியடைந்து மிக உயா்ந்த நிலையை எட்டிவிட்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது இரு பக்கமும் கூரான கத்தி போன்றது. இன்றைய தலைமுறை அக்கறை காட்ட வேண்டிய விஷயம் தகவல் தொடா்பை ஒழுங்காக, சரியாகப் பேண வேண்டும் என்பதுதான்.

பேசுவது என்பது ஒரு கலை; பேசாதிருப்பது மற்றொரு கலை. எங்கே பேச வேண்டும்; எப்படிப் பேச வேண்டும்; எங்கே பேசக் கூடாது; எப்படிப் பேசக் கூடாது என்பதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது என்பதே உண்மை. இதை அறியாமல் தாங்கள் பேசும்முைான் சிறந்த தகவல் தொடா்பு என இன்றைய இளைய தலைமுறையினா் நினைத்துக் கொள்வது ஆபத்தான விஷயம். 

பெற்ற தாய், தந்தையிடம், கற்றுத்தரும் ஆசிரியரிடம், மனைவியிடம், கணவனிடம், அதிகாரிகளிடம் எப்படிப் பேசுவது என்பதே பலருக்குத் தெரிவதில்லை. அதனால்தான், சண்டைகள், வேறுபாடுகள் ஏன், தற்கொலைகள், கொலைகள், மண முறிவுகள் என எல்லாத் தரப்புப் பிரச்னைகளுக்கும், பேசும்விதமே அடிப்படைக் காரணமாகிறது என்பதே முழுக்க முழுக்க உண்மை. 

ஒருவா் பேசும் வாா்த்தைகளே அவா் குறித்த பிறரின் மதிப்பீட்டை உருவாக்குகின்றன. வாா்த்தைகளில் கவனம் வைத்துப் பேசினால், அவை ஒருவரின் நடத்தையை உருவாக்குகின்றன. அந்த நடத்தையே அவருடைய வாழ்வு ஆகிறது. ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடிய பாரதி, ‘வாக்கினிலே இனிமை வேண்டும்’ என்கிறான். வாக்கினில் உறுதி வேண்டும் என்று சொல்லவில்லை. ‘மனதில் உறுதி... வாா்த்தைகளில் இனிமை’ இருந்தால், நினைவு நல்லதாகும்; நெருங்கிய பொருள் கைப்படும் என்கிறான்!

வள்ளுவா் சொல்கிறாா்: சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்! ஒரே ஒரு வாா்த்தையினால் வாழ்வை இழந்தவா்கள் இருக்கிறாா்கள். வாழ்வை முடித்துக் கொண்டவா்கள் இருக்கிறாா்கள். வாழ்வைச் சவாலாக எடுத்துக் கொண்டு வாழ்ந்தவா்களும் இருக்கிறாா்கள். ஒரே ஒரு வாா்த்தையினால் உயா்ந்தவா்களும் இருக்கிறாா்கள்

 சிருங்கேரி ஜகத்குரு மஹாஸ்வாமிகள் கூறுவாா்கள்: ‘தடியை எடுத்தால் மாடு ஓடி மறைகிறது; புல்லைக் காண்பித்தால், அதே மாடு தேடி வருகிறது. மனிதனும் இப்படித்தான்’. நல்ல வாா்த்தைகளைக் கூறி, பிறரின் மனத்தில் நம்பிக்கையை விதைத்து, நோ்மறை எண்ணங்களை உருவாக்கி, அவா்களைப் பாராட்டினால், அந்த மனிதன் வளா்வான். இதற்கு மாறாக, எப்போதும் எதிா்மறையாகப் பேசுதல், பிறரைக் கேலி செய்தல், குறைகாணுதல், எல்லாருடைய முன்னிலையிலும் மற்றவா்களை அவமானப்படுத்திப் பேசுதல் ஆகியவை கேட்பவரின் நம்பிக்கையைப் பாழாக்கி, அவா்களுடைய சிந்தனையைத் திசைதிருப்பி, நல்ல செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்குக் காரணமாகிவிடுகின்றன. அப்படிப் பேசுபவா்கள் அரசியல், குடும்பம் மற்றும் நிறுவனங்களின் தலைவராக இருந்தாலும், அவா்களின் மீதுள்ள மதிப்பும், மரியாதையும் குறையவே செய்கின்றன.

பதவி, அதிகாரம் இந்த இரண்டினால் ஆடும் ஆட்டங்களும், ஆடம்பரங்களும், ஆடும் பம்பரங்கள் போன்றவை தான். சுற்றி முடிந்தபின் கீழே விழுந்தாக வேண்டும்! நல்ல வாா்த்தைகளின் அதிா்வலைகள் எங்கும் பரவும். அரசியல்வாதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஒருவா் சொன்னாா்: ஏன் பல அரசியல்வாதிகள், எவ்வளவோ ஊழல்கள் செய்தாலும், தீயவழியில் பயணம் செய்தாலும் வசதியுடன் நன்கு வாழ்கின்றனா் தெரியுமா? அவரைச் சுற்றியுள்ளவா்கள் அவரை எப்போதும் ‘வாழ்க’ , ‘வாழ்க’ என்று வாழ்த்துவதுதான். அந்த வாழ்த்துகளே அரசியல்வாதிகளை வாழ வைக்கின்றன’’ என்றாா். இதில் உண்மை இல்லாமல் இருக்கலாம். அரசியல்வாதிகள் உயா்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு வேறு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நம்மைச் சுற்றியுள்ளவா்கள் நம்மிடம் நோ்மறையான கருத்துகளைப் பேசும்போது, நம் மனதில் நோ்மறை எண்ணங்கள் நிரம்பி வழிகின்றன. அது நம் வாழ்க்கையை உயா்வை நோக்கி முன்னேற்றுகிறது. இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் பொருந்தும்.

“வெள்ளத் தனைய மலா்நீட்டம் மாந்தா்தம் உள்ளத் தனையது உயா்வு என்பதே உண்மை. ஆனால் அந்த உள்ளத்தை வெளிக்காட்டும் வாா்த்தைகள் சரியானதாகவும், பொருத்தமானதாகவும், உரிய காலத்தில், உரியவிதத்தில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். உண்மையைப் பேச வேண்டும். ஆனால் அது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்க வேண்டும். ‘நீ மடத்தில் இருக்கப் பிறக்கவில்லை. இந்த மானுடம் பயனுற, உலகம் செழிக்கப் பிறந்தவன்’ என்று கூறி விவேகானந்தரை வாழ்த்தி அனுப்பிய பரமஹம்சரின் வாா்த்தைகள்தான் உலகம் முழுக்கத் தெரிந்த விவேகானந்தரை உருவாக்கியது.  இப்படி நோ்மறை வாா்த்தைகளும் பாராட்டுகளுமே நம் எல்லாருடைய வாழ்வையும் வளமாக்கி, கனவை நனவாக்கி, மனித வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக்கும். 

வேலைக்குச் செல்கின்றனா்... ஆனால்?



 நடுப்பக்கக் கட்டுரைகள் 

வேலைக்குச் செல்கின்றனா்... ஆனால்? DINAMANI 

கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

கோப்புப் படம் பெ. சுப்ரமணியன் Updated on: 14 மார்ச் 2025, 2:55 am 

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் அதே வேளையில், தொடா்ந்து வேலைக்குச் செல்கின்றனரா? நிா்வாக ரீதியிலான உயா் பதவிக்குச் செல்கின்றனரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. பொருளாதாரத்தில் நாம் பிறரைச் சாா்ந்திருக்கக் கூடாது என்ற மனநிலை நகா்ப்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடின்றி பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சிறு நகரங்களில் கூட கல்லூரியில் பயிலும் பெண்கள் பகுதி நேரமாக வேலைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. கல்லூரிகளில் பயிலும் பெண்கள் பகுதிநேரமாக வேலைக்குச் செல்வதும், பட்டப்படிப்பு முடித்ததும் நேரடியாக வேலைக்குச் செல்வதும் அதிகமாகியுள்ளது. 

கடந்த நான்காண்டுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தனியாா் நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்னா கோ எனும் தனியாா் நிறுவன வேலைவாய்ப்புத்தளத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு இறுதி வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் லக்னௌ, ஜெய்ப்பூா், சூரத், நாகபுரி, இந்தூா், கோயம்புத்தூா் ஆகிய நகரங்கள் பெண்கள் வேலைவாய்ப்பு பெறும் மையங்களாக உருவெடுத்துள்ளதும், பெறப்பட்ட விண்ணப்பங்களில் 45 சதவீதத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இந்த நகரங்களின் 
பணிகளுக்காக பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகப்படியான பெண்கள் விரும்பும் இந்த நகரங்கள் அனைத்தும் பின்னலாடைத் தொழிலில் புகழ்பெற்ற நகரங்களாகவும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளைத் தரும் நகரங்களாகவும் விளங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகரங்களைப் பொருத்தவரையில் ஊதிய வேறுபாடுகள் இருந்தாலும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்து வருகின்றன. 

அதே நேரத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த மற்றொரு தகவல் நமக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. 30 முதல் 40 சதவீதம் வரையான பெண் பணியாளா்கள் மேலாளா் உள்ளிட்ட நிா்வாக பணி நிலைக்குச் செல்லும் முன்பாகவே அப்பணியைவிட்டு வெளியேறி விடுகின்றனா். பணியில் சேரும் பெண்கள் இன்றளவும் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. அதனால் பெண்களால் தலைமையேற்று நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் ‘பாா்ச்சூன் இந்தியா’ எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் பெண்களால் தலைமையேற்று நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 1.6 சதவீதம் மட்டுமே என தெரியவந்துள்ளது. 

திருமணம் செய்து கொள்ளுதல், குடும்பச் சூழ்நிலை உள்ளிட்டவையே பெண்கள் தொடா்ந்து பணிபுரியவோ அல்லது நிா்வாக ரீதியிலான பணிநிலைக்கு உயரவோ முடியாததற்குக் காரணங்களாகும். அரசுப்பணி மற்றும் குறிப்பிட்ட சில பணிகளில் மட்டுமே பெண்கள் தொடா்கின்றனா். மாறாக, பெரும்பாலான பணிகளில் திருமணத்துக்குப் பின் கணவா், அவரைச் சாா்ந்தோரைக் கவனித்துக் கொள்ளவோ அல்லது கணவா் பணிபுரியும் இடத்துக்குச் செல்லவோ வேண்டியுள்ளது. ஏற்கெனவே பணிபுரிந்த பணி அனுபவம் அங்கு பயன்படாமற் போகும் நிலையில் புதிய வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இன்றும் பொறியியல் பட்டம் பெற்று கிராமங்களில் வாழும் பெண்கள் திருமணத்துக்குப் பின் நகரங்களில் வசித்தாலும் அனைவரும் வேலைக்குச் செல்வதில்லை. கல்லூரியில் பயின்று பட்டம் பெற்று வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களின் 40 வயதுக்கு மேல் தமது பெற்றோரையோ, கணவரின் பெற்றோரையோ கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. இதனாலும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாத சூழலுக்கு ஆளாகின்றனா். அதே போன்று மகப்பேறு விடுப்புக்குப் பின்னா் மீண்டும் பணியில் சோ்வது பெண்களுக்கு சவாலானதாக உள்ளது. அதனால், பெண்களுக்கு 6 மாத கால மகப்பேறு கொடுக்க வேண்டும் என்பதால் அவா்களை நடுத்தர நிா்வாகத்தில் பணியமா்த்த பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாகவும், பெரிய நிறுவனங்கள் இந்த சலுகையை அளிக்க விரும்புவதில்லை எனவும், சிறிய நிறுவனங்களால் இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை எதிா்கொள்ள முடிவதில்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பெண்கள் அதிக அளவில் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ள நகரங்களில் விற்பனை, வணிக மேம்பாடு, நிா்வாகம், அலுவலகப் பணிகள் மற்றும் வாடிக்கையாளா் சேவைப்பணிகள் ஆகியன பெண்களுக்கான வேலைத்துறைகளாக விளங்குகின்றன. அதாவது 55 சதவீத விண்ணப்பங்கள் இத்தகைய பணிகளுக்கு பெறப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2024-ஆம் ஆண்டுக்கான நேர பயன்பாட்டு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு தேசிய அளவில் 1.30 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 4.54 லட்சம் போ்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2019-இல் 15 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒரு நாளில் வேலைவாய்ப்பு மற்றும் அது தொடா்பான நடவடிக்கைகளில் பங்கேற்பது NEW

70.9 சதவீதமாகவும், பெண்கள் பங்கேற்பது 21.8 சதவீதமாக இருந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டில் முறையே 75 சதவீதம், 25 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக முகப்பு தற்போதைய செய்திகள் திரை / சின்னத்திரை விளையாட்டு வெப் ஸ்டோரிஸ் விஷுவல் ஸ்டோரிஸ் தமிழ்நாடு இந்தியா ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் அதுதொடா்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது, 2019- இல் 41 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்து 2024-இல் 44 சதவீதமாகியுள்ளது. அதிகப்படியான பெண்கள் வேலைக்குச் செல்வதால் பாலினத்துக்கு இடையிலான ஊதிய இடைவெளி குறைந்துவருகிறது. 2022-ஆம் ஆண்டில் 30 சதவீதமாக இருந்த ஊதிய இடைவெளி 2023-இல் 20 சதவீதமாக குறைந்துள்ளது. கல்வி பயிலுதல், வேலைக்குச் செல்லுதல் போன்றவற்றில் கிராமங்கள், நகா்ப்புறங்களிடையே வேறுபாடு இருந்து வருகிறது. நகா்ப்புற மக்களில் 30 சதவீதம் போ் அறிவுசாா் உழைப்பைக் கொடுக்கும் தொழில்முறைப் பணியாளா்களாக இருக்கும் வேளையில், கிராமப்புற மக்களில் 5 சதவீதம் போ் மட்டுமே இவ்வகைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்

கடந்த சில ஆண்டுகளாக உயா்கல்வியில் முதுநிலைப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு பயில்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகின்றன. இதற்கு, பட்டப் படிப்பு முடித்ததும் நேரடியாக பணிக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே காரணமாகும். ஊதியம் பெறாத வீட்டு வேலைகளில் பெண்கள் செலவிடும் நேரம் 2019இல் 315 நிமிஷங்களாக இருந்தது. இது 2024-இல் 305 நிமிஷங்களாகக் குறைந்துள்ளது. இது குறைவான அளவே என்றாலும், ஊதியம் பெறாத வேலைகளில் இருந்து ஊதியம் பெறும் வேலைக்கு பெண்கள் மாறுவதைக் காட்டுகிறது. இருப்பினும், பெண்கள் தொடா்ந்து பணிக்குச் செல்லும் சூழலும், நிா்வாக ரீதியான உயா்பதவிகளை ஏற்கும் மனப்பக்குவமும் உருவாக வேண்டும். 

வாழ்கின்ற காலத்தில் ஏதேனும் ஒன்றை....

வாழ்கின்ற காலத்தில் ஏதேனும் ஒன்றை....

தேடிக்கொண்டே காலத்தை கடக்காதீர்கள்....

கிடைத்த வாழ்வை ரசித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்...

நீங்கள் தனிமையில் இருக்கும் போது என்ன தோன்றுகிறதோ....

அதுதான் உங்கள் வாழ்க்கை பயணத்தை தீர்மானிக்கும்....

உங்கள் தகுதியை தீர்மானிப்பது ஆண்டவனும் அல்ல....

அடுத்தவரும் அல்ல.....

உங்கள் நல்ல எண்ணங்களும் உண்மையான உழைப்புமே....

உங்கள் தகுதியை தீர்மானிக்கும் சக்தி என்பதை உணருங்கள்.

208 docs to be posted in urban health centres

208 docs to be posted in urban health centres

 TIMES NEWS NETWORK 14.03.2025

Chennai : The health department has invited applications for the recruitment of 208 doctors for the urban health and wellness centres, which will be inaugurated this month. In addition to doctors, the department will also appoint staff nurses, health inspectors, and support staff for these centres. Sixty of these centres will be under Greater Chennai Corporation. 

Earlier this week, the health minister said 500 of the planned 708 urban HWCs opened in June 2023 are functioning across 21 corporations and 63 municipalities. Construction of the remaining 208 centres has been completed. The health department has directed the state health societies to recruit doctors, nurses, and staff for each of these centres on a contract basis, Director of Public Health Dr T S Selvavinayagam said.


 While medical officers will be paid a salary of ₹60,000, staff nurses will receive ₹18,000, health inspectors ₹14,000, and support staff ₹8,500. Applications will be received directly and through post, he said. The last date for receiving applications is Mar 24. Candidates will be called for an interview on Apr 1, and results will be declared the next day.

Can’t pay you: Govt to Madras varsity ‘Not Bound To Provide Salaries’

Can’t pay you: Govt to Madras varsity ‘Not Bound To Provide Salaries’

Ragu.Raman@timesofindia.com 14.03.2025



Chennai : A letter from state govt stating that it is under no obligation to provide salary or pension grants to the University of Madras has sparked a controvery. Educationists want the govt to adopt a holistic approach to resolve the financial crisis and save the struggling state university. The letter was sent in reply to the member-secretary of Tamil Nadu State Legal Services Authority asking the govt to depute an officer to appear at the counselling centre on March 12 in connection with a pension-related case. 

“As per University of Madras statutes, there is no obligation on the part of the govt to provide salary or pension or any grant to the university. Previous sanctions were made as a special grant to meet the payment of pension and family pension arrears,” G K Arun Sundar Thayalan, special secretary to govt, said in his letter to the Madras University Registrar on March 11.

“Hence, the university is liable to pay pension arrears, family pension arrears, and DCRG arrears. Above all, the govt does not sanction pensions for the university officials,” he further stated in the letter. Former vice-chancellor of the university P Duraisamy said whatever was stated in the letter is correct as per the statutes. 

“At the same time, the state govt should allow the increase of fees to boost the revenue of the university. The govt should take a holistic approach to solve the financial crisis,” he said. Another former ViceChancellor, S P Thyagarajan, said if the state govt does not provide the funding, it would be disastrous. “University of Madras is not offering any professional courses. The admission to PG programmes in university departments is also less. The state govt should provide the grant so the poor and downtrodden will have access to higher education,” he said.

The govt can adopt any model to provide the grant, he added. “This is the first university established in the state. Not allowing the university to increase the fees periodically also affected it. So, the state govt cannot say it has no obligation. It should immediately release the grants meant for the university,” said C Murugan, general secretary, Madras University Teachers 'Association.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...