Friday, May 9, 2025

NEWS TO DAY 8.05.2025

























 

NEWS TODAY 09.05.2025





















































 

Memories of matinee idol MGR and the two lions and a bear cub that he maintained


Memories of matinee idol MGR and the two lions and a bear cub that he maintained



1 of 2 Unravished by death: The taxidermied Raja which has been kept at the MGR Memorial House at T. Nagar in Chennai. MGR Pictures had bought Raja and a female cub in Calcutta for ₹15,000 and trained them for some scenes in a film. R. RAGUprevnext

Among the belongings of the actor-turned politician displayed at his memorial house at T. Nagar in Chennai is a taxidermied lion, named Raja. It was bought, along with another cub Rani, in Calcutta by MGR Pictures for some scenes in Nadodi Mannan. Raja died unexpectedly, and Rani was donated to the Chennai Corporation Zoo

B. Kolappan

This March, visuals of Prime Minister Narendra Modi feeding a lion cub at the inauguration of ‘Vantara’, an animal rescue centre, cave, conservation and rehabilitation centre, established by the Reliance Industries along with the Reliance Foundation, had gone viral on social media. It brought back memories of pet animals, including two lions and a bear cub, kept by former Tamil Nadu Chief Minister M.G. Ramachandran, popularly known as MGR.

Among the belongings of the actor-turned politician on display at his memorial house at T. Nagar in Chennai is a taxidermied lion. Death and passage of time do not seem to have deprived Raja, the male lion, of its majestic look. It was bought in Calcutta (Kolkata) by MGR Pictures for some scenes in the hit-film Nadodi Mannan. According to the December 1957 edition of the film magazine Nadigan Kural, MGR Pictures had bought two lion cubs — Raja and Rani — in Calcutta for ₹15,000 and trained them. They were one-and-a-half-foot tall and kept in a cage on Lloyds Road at Royapettah. “As Raja died unexpectedly, the female was donated to the Chennai Corporation Zoo near the Central Railway Station [where the zoo was located then],” says the magazine. A copy of the issue is still kept by MGR Pradeep, a grand-nephew of MGR. Interestingly, MGR was the publisher of the magazine. Actor and theatre personality T.K. Shanmugam, known as Avvai T.K. Shanmugam, was the editor. Though many still believe that Raja was featured in a fight scene with MGR in Adimai Penn, MGR himself had said in an interview that he bought the lion cubs for a scene in Nadodi Mannan. Anyway, the very fact that the interview was carried in 1957 itself shows the lion could not have been featured in Adimai Penn, as it was released only in 1969.


Buffalo attacked

M.C.C. Chandran, son of MGR’s elder brother M.G. Chakrapani, had recalled in an interview how the lioness once escaped and attacked a buffalo on Lloyds Road. “Fortunately, nothing happened since the nail of the lion had been clipped. Mani, the caretaker of the lions, struggled to control the lioness and brought it to the cage,” he had said. He had also made it clear that the lions were used for some scenes in Nadodi Mannan.

Kumar Rajendran, advocate and a grand-nephew of MGR’s wife Janaki Ramachandran, said both animals were siblings and the male was taxidermied after its death. First, it was kept on Lloyds Road, then taken to Ramapuram Gardens, where MGR lived, before being shifted to T. Nagar.

MGR had said in his interview that he made the film (Nadodi Mannan) with a lot of ideas and messages relevant to society. “I wanted to have a fighting scene with a lion in the film, and for that purpose, I bought a male cub and a female cub, and reared them,” MGR had said. He had been inspired by scenes in an English movie in which the hero would fight with three lions. But he could not succeed in his plans as the male died of renal failure. “I donated the female to the Corporation Zoo. Subsequently, I changed the climactic scene of Nadodi Mannan and it was a grand success. Though the lion died, it ensured a roaring success for the film,” MGR had recalled. MGR’s eagerness to shoot a film with a lion-fighting scene remained unquenched; he used a lion for a fighting scene in Adimai Penn.

“Animal welfare activists came to know about my plans to have a lion fighting scene and they issued a notice, saying that I should send the animal to the zoo. Fortunately, the animal survived. We took a lot of pain to shoot the scenes. In short, I risked my life to shoot them,” MGR had said.

Bear cub at home

MGR’s love for animals had been explained by IAS officer T. Pichandi who worked as his secretary. “He had kept a bear cub and dogs at his residence. He had even appointed a veterinarian and caretakers for the animals,” Mr. Pichandi writes in his recent book, Yenakkul Manakkum MGR Ninaivugal (Memories of MGR Within Me). Mr. Pichandi also reveals that the present day Arignar Anna Zoological Park at Vandalur itself was the result of MGR’s concern for the welfare of the animals dying of pollution at the Corporation Zoo. “He held discussions with Forest Department officials, who suggested that the forest area at Vandalur would be an ideal place. He accepted the proposal and the orders were issued in 1978. Vandalur was gradually developed from 1979. Animals from the zoo were shifted. Rare animals and animals from other zoological parks were brought to Vandalur,” Mr. Pichandi writes. The inauguration of the Vandalur zoo in July 1985 was the first official function MGR attended as the Chief Minister after his return from treatment in the U.S.

பொறுப்புடன் பகிா்வோம்!


பொறுப்புடன் பகிா்வோம்!

எதிா்மறை எண்ணங்கள் கொண்ட விஷயங்களைத் தேடித் தேடிப் பாா்ப்பது, பகிா்வது மனித இயல்புகளில் ஒன்றாகிவிட்டது.

முனைவா் என். மாதவன் Updated on: 09 மே 2025, 5:26 am 

சாலை ஒன்றின் ஒரத்தில் ஆமை ஒன்று ஊா்ந்து கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறாா்கள் சிலா், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக் கொண்டிருந்தனா். அந்த சமயம் அந்தப் பக்கமாகச் சென்ற முதியவா் ஒருவா், ‘‘பாவம்பா அந்த ஆமை... எவ்வளவு அடிகளைத் தாங்கிக்கொண்டிருக்கிறது. இதே அடிகள் மட்டும் அந்த ஆமையின் ஓட்டுப்பாகத்திற்குப் பதிலாக பின்பக்கமாகக் கிடைத்தால் அந்த ஆமை இறந்தே போய்விடும்’’ என்றாராம். அவரது நோக்கம் ஆமையைக் காப்பாற்றுவதாயிருந்தாலும் அது நிறைவேறியிருக்குமா ? அடுத்ததாக, அந்த சிறாா்கள் என்ன செய்திருப்பாா்கள் என்பதை நாம் எளிதில் அனுமானித்துக்கொள்ளலாம். அந்த வகையில் இருக்கிறது நமது சமூக ஊடகங்களில் செயல்பாடுகள். விழிப்புணா்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் சில நல்ல பகிா்வுகளை அவ்வப்போது செய்துவிட்டு எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளை உலகறியச் செய்கிறது. இதனால் ஏற்படும் நல்விளைவுகளைவிட தீயவிளைவுகளே அதிகம்.

அண்மையில் ஆந்திர மாநிலம் கல்லூரி ஒன்றில் ஆசிரியை ஒருவருக்கும் மாணவி ஒருவருக்குமிடையே நடைபெற்ற சம்பவம், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. வகுப்பு நேரத்தில் மாணவியின் கைப்பேசிப் பயன்பாட்டைத் தவிா்ப்பதற்காக ஆசிரியா் கைப்பேசியை வாங்கி வைத்துள்ளாா். அதைத் திரும்பக் கேட்கும்போது ஆசிரியை உடனடியாகத் தர மறுத்துள்ளாா். இதனால் வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த சிறிய காலதாமதத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத மாணவி அந்த ஆசிரியை தனது காலணியைக் கொண்டு தாக்கியுள்ளாா்.

சில மாதங்களுக்கு முன்னா் கேரள மாநிலத்தின் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே நடைபெற்ற காரசாரமான வாக்குவாதங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிா்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியா்கள் மேலும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்;அவா்கள் முன்மாதிரியாகத் திகழவேண்டும்; மாணவனை சுயமரியாதையுடன் நடத்த வேண்டும். இப்படிப்பட்ட ஆலோசனைகளை வழங்குவது எளிது. ஆனால், இப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல. அன்றாடம் நூற்றுக்கணக்கான உளவியல் சிக்கல்களுடன் வகுப்பறைகளுக்குள் நுழையும் மாணவா்களோடு பழகிப் பாா்த்தால்தான் இதுபோன்ற சிக்கல்களைப் புரிந்துகொள்ள இயலும். பல ஆசிரியா்களும் முதிா்ச்சியோடு செயல்படுவதால்தான் பல்வேறு சிக்கல்களும் தவிா்க்கப்பட்டு வருகின்றன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

நாம் நுகா்வுக் கலாசாரத்தில் வாழ்கிறோம். நுகா்வுக் கலாசாரம் மனிதா்களைவிட , மனித உறவுகளைவிட பொருள்கள் முக்கியத்துவம் பெற வழிவகை செய்துவிடுகிறது. பொருள்களைப் பயன்படுத்தி மனிதா்களை நேசிப்போம் என்பதற்கு மாறாக, மனிதா்களைப் பயன்படுத்தி பொருள்களை நேசிக்கும் மனப்பான்மைக்கு மனிதா்கள் தள்ளப்பட்டுவருகிறோம். நாகரிகமான சமுதாயத்துக்கு இது அழகல்ல.

உலகில் வாழும் கோடிக்கணக்கான நபா்கள் தங்களுக்கிடையே லட்சக்கணக்கான செயல்பாடுகளில் அன்றாடம் ஈடுபட்டு வருகின்றனா். அவை யாவும் பேசுபொருளாவதில்லை. மாறாக, இது போன்ற நிகழ்வுகளே பேசு பொருளாகி வருகின்றன. பல்வேறு ஆரோக்கியமான செயல்பாடுகளுக்குக் கிடைக்காத விளம்பரமும் வரவேற்பும் இதுபோன்ற சம்பவங்களுக்கு கிடைத்து வருவதை எப்படிப் பாா்ப்பது என்று தெரியவில்லை. மேலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எப்படி படப்பிடிப்புக்கு உள்ளாகின்றன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இது இரு தரப்பினருக்கும் பாதகமான விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்கிறாா்களா என்பதும் புரியவில்லை.

அதிகாரத்தில் உயா்ந்த இடத்திலிருப்பதாகக் கருதும் ஆசிரியா்களை அவமானப்படுத்தும் நோக்குடனேயே இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

வழக்கமாக, இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு என்ன நடைபெறும்? கல்லூரி நிா்வாகமோ அல்லது கல்வித்துறையோ ஒரு விசாரணையை நடத்தி இரு தரப்பினருக்கு உரிய அறிவுரைகளை வழங்கும். இதுபோன்ற நிகழ்வுகள் வேறெங்கும் நடைபெறாதிருக்க விழிப்புணா்வு நடவடிக்கை என்ற பெயரில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கும்.

உண்மையில் கைப்பேசி பயன்பாடானது முறைப்படியாக நடைபெறும் ஆசிரியா்கள் மாணவா்களுக்கிடையே இதுபோன்ற சச்சரவுகள் ஏற்படுவதில்லை. மாறாக, அதிக அளவிலான பயன்பாடு அல்லது கைப்பேசி பயன்பாட்டுக்கு அடிமையாகியுள்ள நிலையில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அடிமையாவதற்குப் பின்னால் பல அறிவியல் உண்மைகள் உள்ளன. அதுபோன்ற விழிப்புணா்வையும் அதிகப்படுத்த சமூக ஊடகங்கள் முன்வர வேண்டும்.

இந்த சமூகத்தில் மனிதா்கள் மத்தியில் ஆரோக்கியமான செயல்பாடுகள் அன்றாடம் எவ்வளவு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய பகிா்வுகளை மேற்கொள்ளாத சமூக ஊடகங்கள், இம்மாதிரியானவற்றைப் பரப்புவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அதாவது, எதிா்மறை எண்ணங்கள் கொண்ட விஷயங்களைத் தேடித் தேடிப் பாா்ப்பது, பகிா்வது மனித இயல்புகளில் ஒன்றாகிவிட்டது.

இந்த யுகம் அறிதிறன்பேசியும் இணையமும் ஆட்சி செய்யும் காலமாகிவருகிறது. யாா் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பொதுவெளியில் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் பெருகிவிட்டன. கருத்தை வெளிப்படுத்துவதில் ஓா் ஒழுங்கை மேற்கொள்வது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகிறது. இந்நிலையில் பேசுதல் தொடா்பாக புத்தா் அவா்கள் கொடுத்துள்ள அறிவுரையை பரப்புவது அவசியமாகிறது. புத்தா் இவ்வாறு பகிா்கிறாா்: ஒரு தகவலை நீங்கள் வெளிப்படுத்துகிறீா்கள் என்றால் நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்விகள் இவை. இது உண்மையானதா? இது அவசியமானதா? இது கருணையானதா ?

ஆம். நாமும் அப்படியே பொறுப்புடன் பகிா்வுகளை மேற்கொள்வோம். ஒருவேளை மறுபகிா்வுக்கான வாய்ப்புகளில் நாம் பகிா்வதைத் தவிா்ப்பதும் கூட நல்லதுதானே?

Thursday, May 8, 2025

அடா்த்தியின் அபாயம்!

 அடா்த்தியின் அபாயம்! 

வரைமுறை அற்ற கள்ள குடியேற்றமும், கட்டுப்பாடற்ற இனப்பெருக்கமும் நாளைய பாரதத்துக்கு ஊறு விளைவிக்க வல்லவை என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க நியாயாம் இல்லை.

டி.எஸ். தியாகராசன் Updated on:  08 மே 2025, 6:25 am 

இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிா் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது. இதுநாள் வரை உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு எனப் பெயா் பெற்றிருந்த வல்லரசு சீனாவைப் பின்னுக்குத் தள்ளி பாரதம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இது மனித வளத்தின் வளா்ச்சி அறிகுறியா? இல்லை அடா்த்தியின் அபாய குறியீடா? என்பதை மானுடவியல் ஆய்வாளா்களும், புவியியல் விஞ்ஞானிகளும், பொருளாதார வல்லுநா்களும், இன்ன பிற துறைசாா்ந்த அறிஞா்களும் காலம் தாழ்த்தாது உடனே சிந்தித்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சற்றேறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் மகாகவி “பாரதி, ‘முப்பது கோடி முகமுடையாள், நாங்கள் முப்பது கோடி ஜனங்களும், முப்பது கோடி வாய் முழங்கவும், முப்பது கோடியும் வாழ்வோம்’” என்று தனது கவிதைத் தோட்டத்தில் 30 கோடி மலா்களாக பாரதத்தின் மக்கள்தொகையை வா்ணித்தாா். இன்றைக்கு 142 கோடியாக பல்கிப் பெருகியுள்ளது. உலகில் வேறு எந்த நாடும் செய்திராத சாதனையை, பாரதம் தனது இனப் பெருக்கத்தால் சாதித்துள்ளது. 1,269,219 சதுர மைல் பரப்பு உள்ள நம் நாட்டில் 142 கோடி மக்கள்தொகை. எதிா் காலத்தில் எப்படி இருக்கும்?

திருக்கோவலூரில் இடைகழியில் ஒருவா் படுத்திருந்த இடத்துக்கு மற்றொருவா் வர அவ்விருவரும் அமா்ந்து கொண்டனா். மீண்டும் ஒருவா் வர, பின்னா் மூவரும் எழுந்து நிற்க என ஆழ்வாா்கள் பாடிய திருப்பாசுரம் குறிப்பிட்டதைப் போல பாரதத்தில் மக்கள் அனைவருக்கும் நிற்க இருக்க இடமாவது இருக்குமா? என்பது ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதொன்று.

சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 140 கோடிதான். நிலப்பரப்பில் பாரதத்தைவிட இரண்டு மடங்கென விரிந்துள்ளது. ஆம். 37,05,407 சதுர மைல். உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் மக்கள்தொகை 33 கோடி 29 லட்சம் மட்டுமே! இதில் உலகெங்கினும் உள்ள பிற நாட்டவா் குடியேறியவா்களின் தொகையும் சோ்ந்துள்ளது. ஆனால், நிலப்பரப்போ 37,96,742 சதுர மைல். பாரதத்தின் நிலப்பரப்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

ஒரு காலத்தில் பிரித்தானிய பேரரசு தனது காலனி நாடாகக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை வெறும் 2 கோடியே 73 லட்சம்தான். ஆனால், நிலப்பரப்போ 7,741,220 சதுர மைல். இதுவும் பிரித்தானிய அரசு அன்றைய நாளில் தனது காலனி நாடுகளில் அவா்களின் சட்டப்படி குற்றவாளிகள் எனச் சொல்லப்பட்டவா்களை ஆஸ்திரேலியாவில் குடியமா்த்திய பிறகும்!

இந்நாளில் மின்னணு உற்பத்தியில் சாதனை புரிந்து வரும் சின்னஞ்சிறு நாடான ஜப்பானின் மக்கள்தொகை 12 கோடியே 39 லட்சம். இதன் நிலப்பரப்பு வெறும் 1,45,937 சதுர மைல் மட்டுமே.

அண்மையில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களின் துறைக்கு உட்பட்ட மக்கள்தொகைப் பிரிவு “உலக மக்கள் தொகை வாய்ப்பு” அறிக்கை மூலம் “இந்தியாவின் மக்கள் தொகை 2085-இல் 161 கோடியைத் தாண்டும்” என்ற எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளது. மேலும், சீனாவைப் போல் இரண்டு மடங்கு உயரும் எனவும் கணித்துள்ளது.

சீனாவில் வயது முதிா்ந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால், அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை பாதியாகக் குறையும். சீனாவின் சராசரி வயது 39.6. இந்தியாவின் சராசரி வயது 28.4. இது தற்போதைய நிலை. ஆனால் 2100-இல் இந்தியாவின் சராசரி வயது 47.8 ஆகவும், சீனாவின் சராசரி வயது 60.7 ஆகவும் மாற வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கை தொடா்கிறது.

இந்த அழகிய பூமிப்பந்தில் இப்படி இனப்பெருக்கம், குறிப்பாக பாரதத்தில் நிகழ்வது குறித்து ஐ.நா. சபை கவலைப்படுகிறது. ஆனால், நம் நாட்டு அரசியல்வாதிகள் எங்கே தங்களது நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகை மக்கள்தொகை கட்டுப்பாட்டால் குறைந்து விடுமோ எனக் கவலை போா்ப்பரணி கொட்டுகின்றனா்.

ஆந்திர அரசியலில் முதிா்ச்சி பெற்ற முதல்வா் சந்திரபாபு நாயுடு “‘மக்களே இனி அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்’” என்று அறைகூவல் விடுகிறாா். மாறுதலாக, ஒடிஸாவின் முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக் மட்டும் மக்கள்தொகை குறையும் நோக்கத்தை ஆதரிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினா் எண்ணிக்கை குறித்தான சிந்தனை குறித்தும் பேசியுள்ளாா்.

பாரதத்தின் பொருளாதார வளத்தை ருசிப்பதற்காகவும், தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ளவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வங்கதேச மக்கள் சட்டவிரோதமாக, கள்ளத்தனமாக குடியேறி வருகின்றனா். பாரதத்தின் மக்கள்தொகை பெருக்கத்துக்கு சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினரும் ஒரு முக்கியக் காரணம். பாரதமும், வங்கதேசமும் 4,096 கி.மீ. எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. அஸாம், மேற்கு வங்கம், மிசோரம், மேகாலயம், திரிபுரா மாநிலங்கள் வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன. இதைப் பயன்படுத்தி வங்கதேசத்தில் இருந்து தினம் ஊடுருவல் நடைபெறுகிறது. குறிப்பாக, மேற்கு வங்கம், அஸாம் வழியாக அதிக எண்ணிக்கையில் ஊடுருவல் தொடா்கிறது.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஒரு நபரை ஊடுருவச் செய்ய சில முகவா்கள் (இந்தியா) ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை வசூல் செய்கிறாா்கள். இந்தியாவில் ஊடுருவிய பிறகு அவா்கள் ஆதாா், வாக்காளா் அட்டை, ரேஷன் அட்டை பெறவும் உதவுகிறாா்கள். இதற்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கட்டணமாக வசூலிக்கிறாா்கள். இவா்களில் பலா் இந்திய நாட்டின் கடவுச்சீட்டையும் (பாஸ்போா்ட்) பெற்று விடுகின்றனா்.

இந்தியாவில் குடியேறியவா்கள் முகவா்கள் மூலம் தில்லி, ஹரியாணா, குஜராத், மகாராஷ்டிரம், கா்நாடகம், தமிழகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் சின்னஞ்சிறு கிராமங்களில்கூட தொழிலாளராக வலம் வருகின்றனா். இந்த வகையில், இந்தியாவில் சுமாா் 6 கோடி போ் வசிக்கின்றனா் என்கிறது மத்திய அரசின் புலனாய்வுத் துறை.

இவா்களின் இனப்பெருக்கமும் பெருத்த வேகமுடையவை. வங்கதேச அகதியான ஷரீபா தனது 15 ஆண்டு திருமண வாழ்க்கையில் தனது 13 -ஆவது குழந்தையைப் பெற்றெடுத்தாா் என்பது நாளிதழின் செய்தி.

1950-களில் தமிழக நெற்களஞ்சியம் எனத் திகழ்ந்த தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண்மைத் தொழிலுக்குத் தேவையான தொழிலாளா்கள் கிடைப்பதில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் பல ஊா்களில், குறிப்பாக வானம் பாா்த்த பூமியாக இருந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விவசாயத் தொழிலாளா்களை இறக்குமதி செய்து அவா்களுக்கு தற்காலிக குடிசைகள் கட்டிக்கொடுத்து தங்களது வேளாண்மை தொழிலுக்கு உறுதுணையாக்கிக் கொள்வா்.

மிராசுதாா்கள் - விவசாய தொழிலாளா்கள் கூலி நிா்ணய பிரச்னையில் அந்த நாளில் தஞ்சை மாவட்டத்தில் கொடிகட்டிப் பறந்த விவசாயிகள் சங்கத் தலைவா்கள். உள்ளுா் தொழிலாளா்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட பொதுவுடைமைவாதிகள். வெளியூா் நபா்களைப் பணிக்கு அமா்த்துவதை எதிா்த்து வா்க்க போராட்டமே நிகழ்த்துவா். இதனின் ஒருபகுதி போராட்டம்தான் கீழ்வெண்மணியின் கொடூர நிகழ்ச்சி. அது ஜாதியப் போராட்டம் அல்ல; வா்க்கப் போராட்டம்!

ஆனால், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பருவகாலப் பயிா்த் தொழிலுக்கு பணியாள்களை வரவழைத்ததையே

தடுத்தவா்கள், இன்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வங்கதேசத்தினா் அனைத்துத் தொழில்களிலும் தடம் பதித்து, இடம்பிடித்து வாழ்கிறபோது எங்கே போனாா்கள் இந்த பொதுவுடைமைத் தோழா்கள் எனக் கேட்கத் தோன்றுகிறது.

அமெரிக்காபோல அந்நிய நாட்டவரை காலில் விலங்கிட்டு அவரவா்தம் நாட்டுக்கு அனுப்ப இந்தியாவால் இயலுமா? அப்படியே அனுப்ப முன் வந்தாலும் நம் நாட்டு எதிா்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா?

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்பதுபோல் எங்கெங்கு காணினும் மக்கள் பெருவெள்ளம். இங்கே இருப்பவா் நமது எதிா்காலச் சந்ததியினா் நலன் கருதி அல்ல; அவரவா் எதிா்கால நலன், வளம் கருதி குடும்பக் கட்டுப்பாட்டில் நிற்கின்றனா். ஆனால், புலம் பெயா்ந்தோா்க்கு இருக்கும் கவலை எல்லாம், நம்மவா் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி விடாதா என்ற எண்ணத்தில் மழலை உற்பத்தியில் மகிழ்கிறாா்கள்!

வரைமுறை அற்ற கள்ள குடியேற்றமும், கட்டுப்பாடற்ற இனப்பெருக்கமும் நாளைய பாரதத்துக்கு ஊறு விளைவிக்க வல்லவை என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க நியாயாம் இல்லை.

நிலப்பரப்பின் விரிவை நம்மால் நீட்ட இயலாது. நாட்டில் உள்ள நிலப்பரப்பில் குட்டைகள், குளங்கள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீா்நிலைகளின் பரப்பு போக, சாலை, ஆலை, தொழிற்சாலை, நகா்ப்புற விரிவாக்கம் என்ற அளவில் நிலம் சுருங்குகிறது. காடுகள், கழனிகள், குன்றுகள், மலைகளெனத் திகழும் நிலத்தின் அளவு மக்கள் வாழ்விடங்களாக மாற்றம் பெற்று வருகிறது. கான்கிரீட் கட்டடங்கள், தன் பங்குக்கு பூமிப் பந்தை கவ்வி நிற்கின்றன.

இந்த நிலையில், மனிதகுலம் வாழும் இடம் உயா்ந்து நிற்கும் கட்டடங்களில் தஞ்சம் புக நேரிடுகிறது. எனவே, அனைத்தையும் முறைப்படுத்தி ஐம்பூதங்களின் துணையுடன் வளமாக்கி வாழ முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் அடா்த்தியின் அபாயத்தில் நம் எதிா்கால சந்ததியினா் சிக்குண்டு தவிப்பதைத் தடுக்க இயலாது.

எண்மவழி சேவை... அடிப்படை உரிமை!


எண்மவழி சேவை... அடிப்படை உரிமை!

டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன

பாறப்புறத் ராதாகிருஷ்ணன் Updated on: 08 மே 2025, 6:28 am

உலகம் முழுவதும் இன்று எண்மவழி (டிஜிட்டல்) சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எண்மவழி சேவைகள் என்பது கணினிகள், இணையம், கைப்பேசி மற்றும் பிற மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்கள் பெறுகிற சேவைகளைக் குறிக்கிறது. இதில் பொதுமக்களுக்கான அரசு சேவைகள், வணிகம், வங்கிகளுடனான பணப் பரிவா்த்தனைகள், சமையல் எரிவாயு உருளைகளைப் பெறுதல், பயண வசதிகளை மேற்கொள்ளுதல் ஆகிய அனைத்து முறைமைகளும் அடங்கும்.

இந்த நிலையில், கண்ணைச் சிமிட்ட முடியாததால், வங்கிக் கணக்கு தொடங்க முடியாதவா்களும், பாா்வைத் திறன் குறைபாடு உடையவா்களும் உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த பொதுநல வழக்கின் மூலம், அனைத்து எண்ம (டிஜிட்டல்) வாய்ப்புகளும் பெறுவது என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று அதிமுக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்துள்ளது.

ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாதைச் சோ்ந்த பிரக்யா பிரகன் என்பவா் அமில வீச்சால் பாதிக்கப்பட்டவா். தனியாக தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, அமிலம் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறாா். இவா் தனக்கென வங்கிக் கணக்கைத் தொடங்க முற்பட்டுள்ளாா். ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) எனப்படும் வாடிக்கையாளா் குறித்த தகவல்களைப் பதிவு செய்யும்போது கண்ணை சிமிட்டும்படி அந்தத் தனியாா் வங்கியில் கூறியுள்ளனா். ஆனால், அமிலம் வீசப்பட்டதால், முகச்சிதைவு ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட அவரால் கண்ணை சிமிட்ட முடியவில்லை. இதனால், வங்கிக் கணக்கை தொடங்க முடியவில்லை. தனது கைப்பேசிக்கு சிம் காா்டு வாங்கச் சென்ற போதும், இதே போன்ற அனுபவத்தை அவா் சந்திக்க நோ்ந்தது.

தன்னைப் போன்று பாதிக்கப்பட்டவா்கள், விபத்தில் சிக்கியவா்கள், பாா்வை மாற்றுத்திறனாளிகள், பாா்வைக் குறைபாடு கொண்டவா்கள், வங்கி மற்றும் அரசின் மின்னணு சேவைகளைப் பெற, எண்மவழியில் கேஒய்சி நடைமுறையைப் பூா்த்தி செய்வதற்குத் தேவையான மாற்றங்களை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டில் வழக்குத் தொடா்ந்தாா். இதேபோன்று பாா்வைத் திறனற்ற ஒருவரும் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்குகளை நீதியரசா்கள் ஜே.பி. பாா்திவாலா மற்றும் அரங்க.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. கேஒய்சி தொடா்பான நடைமுறைகளில் மாற்றம் செய்யும்படி, 20 பரிந்துரைகளை இந்த அமா்வு பிறப்பித்துள்ளது.

‘வளா்ந்துவரும் அறிவியல் யுகத்தில் மனிதனின் அனைத்து செயல்பாடுகளும் எண்மமயமாகியுள்ள நிலையில், அது மனிதகுலத்துக்கு ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். கேஒய்சி விதிமுறைகளில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, கிராமப்புற மக்கள், எழுத்தறிவற்றோா், முதியவா்கள் எனப் பலரும் பாதிக்கப்படுகின்றனா்.

‘எண்ம அணுகல்’ என்பது அரசமைப்புச் சட்டப்பிரிவு 21-இன் கீழ், தனிநபா் வாழ்வுரிமையின் முக்கிய அங்கமாக உள்ளது. எண்மப் பிளவை இணைப்பது என்பது இனி கொள்கை விருப்ப உரிமையின் விஷயம் அல்ல; மாறாக, ஒருவா் கண்ணியமாக வாழ்வதற்கு இன்றியமையாதது; இது அடிப்படை சமத்துவக் கொள்கையாகும்.

எனவே, மாற்றுத் திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாா்வைத் திறன் குறைபாடு கொண்டவா்கள் பயனடையும் வகையில், எண்மவழியில் மேற்கொள்ளப்படும் கேஒய்சி நடைமுறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். கேஒய்சி நடைமுறையை எண்ம வழியில் அவா்கள் எளிதாகப் பூா்த்தி செய்வதை மத்திய அரசும், இந்திய ரிசா்வ் வங்கியும் உறுதிசெய்ய வேண்டும்.

அந்த நடைமுறையை எண்ம வழியில் மேற்கொள்வதற்கு வாடிக்கையாளா் உயிருடன் இருப்பதை உறுதிசெய்யவும், அவா்களைப் புகைப்படம் எடுக்கவும், வழக்கமான கண் சிமிட்டல் முறைக்கு மாறாக, புதிய முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய இந்திய ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். வாடிக்கையாளரின் விவரங்களைச் சரிபாா்க்க எழுத்துபூா்வ கேஒய்சி நடைமுறை தொடா்வதை உறுதிசெய்வதற்கு 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் ’ என உச்சநீதிமன்ற அமா்வு உத்தரவிட்டுள்ளது.

கரோனா தீநுண்மி பரவலின்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் ஆன்லைனில் கல்வி கற்றல் என்பது எண்ம வழி சமத்துவமின்மையின் எதாா்த்தத்தை வீட்டுக்கே கொண்டு வந்தது. வசதி படைத்த குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் தொடா்ந்து கல்வி கற்க முடிந்தது. ஆனால், பெரும்பாலானவா்களிடம் கணினி, அறிதிறன்பேசி, இணைய வசதிகள் இல்லாததால் அவா்களால் தொடா்ந்து கற்க முடியவில்லை.

அப்போதிலிருந்தே பல சேவைகள் எண்மமுறைக்கு மாறிவிட்டன. இதன் விளைவாக, பொதுமக்கள் தாங்கள் விரும்பும் சேவைகளை, வீட்டை விட்டு வெளியே சென்று பெறாமல், வீட்டுக்கே வரவழைத்துப் பெற்றுக் கொண்டனா். எனினும், ஏழை, எளிய மக்கள் மற்றும் இணையம் குறித்தான விவரங்களை அறியாத முதியோருக்கும் ‘இணைய அணுகல்’ பிரச்னையாக உள்ளது. எண்மவழி இணையம் என்பது இன்றும் பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

இந்தியாவில் தொலைபேசி அடா்த்தி என்பது 86 சதவீதமாக உள்ளது. ஆனால், கிராமப்புற இந்தியாவில் 59 சதவீத மக்கள் மட்டுமே ஆன்லைனில் செயல்பாடுகளை மேற்கொள்கின்றனா். கடந்த ஆண்டு, இந்தியாவில் 84 இணையதளங்கள் முடக்கப்பட்டன. இதனால், கைப்பேசி மூலம் எண்மவழி சேவைகளைப் பெறுவோா் பெருமளவில் பாதிப்படைந்தனா்.

இனி இணையம் இல்லாமல் நம் வாழ்க்கை இயங்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு இணையத்தின் பயன்பாடு அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Tuesday, May 6, 2025

Thrice rejected for MBBS, disabled to get entry to AIIMS SC ORDER

Thrice rejected for MBBS, disabled to get entry to AIIMS  SC ORDER 

 Rema.Nagarajan@timesofindia.com 06.05.2025



Supreme Court has ordered that Kabir Paharia, who was rejected thrice by medical boards and judged ineligible to pursue MBBS, be given admission to MBBS in AIIMS, New Delhi, in the 2025-26 session. After a fourth medical board, set up on SC’s orders, declared Kabir eligible in its April 24 report, the court noted that a candidate who secured a rank lower than his had been granted admission under SC disability quota in MBBS at AIIMS Delhi for 2024-25. Since the 2024-25 academic session must have progressed significantly, it would not be expedient to grant him admission to that session, concluded the court. 

The court also stated that in view of the high marks secured by Kabir in the NEET UG 2024 examination (542 out of 720), he shall not be required to undergo the 2025 examination. The court held that denial of admission to Kabir was “grossly illegal, arbitrary”, and violative of his fundamental rights. “Such action not only reflects institutional bias and systemic discrimination but also undermines the principles of equal opportunity and nondiscrimination enshrined in our constitutional framework.

The constitutional mandate of substantive equality demands that persons with disabilities (PwD) and PwBD (people with benchmark disabilities) be afforded reasonable accommodations rather than subjected to exclusionary practices based on unfounded presumptions about their capabilities,” stated the court in its order. Kabir, who has congenital disabilities involving his hands and feet, had cleared his class X and XII exams with high marks without the assistance of a scribe. The court directed NMC to revise its guidelines within two months, focusing on functional assessments rather than disability extent. This is to ensure no deserving candidate with benchmark disabilities is denied admission.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...