Saturday, August 2, 2025

NEWS TODAY 02.08.2025





















 

பகைமை வேண்டாம்! போர் முறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகின்றன.



பகைமை வேண்டாம்! போர் முறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகின்றன.

நாடுகளுக்கு இடையிலான போர் குறித்து...

முனைவர் பவித்ரா நந்தகுமார் 

Published on: 02 ஆகஸ்ட் 2025, 3:20 am 

DINAMANI 

நான் பத்தாம் வகுப்பு படித்த போது, ஒரு நாள் சமூக அறிவியல் ஆசிரியர் முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். 1914 முதல் 1918 வரை முதல் உலகப் போர், 1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றன என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, இப்படி நான்கு, ஆறு ஆண்டுகள் வரை ஒரு போர் தொடருமா என நாங்கள் ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஒரு மாணவி மட்டும் எழுந்து, அதற்குப் பிறகு ஏன் மூன்றாம் உலகப் போர் ஏற்படவில்லை? என்று ஆசிரியரை நோக்கி கேள்வி எழுப்பினாள். இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய அழிவுக்குப் பிறகு போரே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை நாடுகள் எடுக்கத் தொடங்கின. மேலும், நாடுகளிடையே ஏற்படும் பிணக்கைப் போக்க ஐ.நா. போன்ற அமைப்புகள் கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றன.

அதனால், இனி மூன்றாம் உலகப் போர் ஏற்படாது என்று 1990-இல் எங்களுக்கு பாடம் எடுத்த சமூக அறிவியல் ஆசிரியர் சொன்னார். அவர் அன்று சொன்ன சொற்களை, போர் மேகங்களோடு சுழலும் இன்றைய உலகோடு பொருத்திப் பார்க்கும் போது கவலை தோன்றுகிறது.

போர் முறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகின்றன. இன்றைய போர்க்களங்களை நம் முன் கொண்டு வரும் காணொலிகள் எல்லாம் நெஞ்சைப் பதற வைக்கின்றன. நிவாரண உதவிகள் வழங்கும் வண்டிகளை மக்கள் சூழ்ந்து கொண்டு முட்டி மோதுவதைக் காணும் போது உள்ளம் பதை பதைக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை உணவுக்காக அடித்துக் கொள்வதைக் காண முடியவில்லை.

சில நாள்களுக்கு முன்பு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தியில், சிறுவன் ஒருவன் உணவுக்காக தாங்கள் படும் அவல நிலையை எடுத்துச் சொல்ல கீழே கிடந்த மண்ணை எடுத்து வாயில் போட்டு, எங்களுக்கு போதுமான அளவு உணவு இல்லை; இனி மண்ணை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சாக வேண்டியதுதான் என்று அழுது கொண்டே கூறினான்.

உணவுக்கே அடிதடி எனும் போது, கல்வியைப் பற்றி அவர்கள் எவ்வாறு சிந்திக்க இயலும்? போரில் ஏற்பட்ட மனித இழப்புகளையும் அழிவுகளையும் கண்டு இனி போர் புரிவதில்லை என்ற முடிவுக்கு வந்த அசோக சக்கரவர்த்தியைப் பற்றி நாம் வாசித்து இருக்கிறோம். தற்போது, அதுபோன்ற போர்ப் புறக்கணிப்பை தலைவர்கள் அல்லது நாட்டின் அதிபர்கள் ஏற்படுத்துவார்களா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

உலக நாடுகளிடையே நடைபெறும் போர்களில் பல நாடுகள் அவ்விரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்து வைக்க முயற்சிக்கின்றன. ஆனால், அதிலும்கூட தங்களுக்கு என்ன ஆதாயம் என்பதை முன்னிறுத்திய குறுகியப் பார்வைத் தெரிகிறது. நம் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

வடக்கே எங்கோ ஒரு மூலையில் நடைபெற்ற தாக்குதலாக இருந்தாலும், ஒவ்வொரு குடிமகனுக்குள்ளும் அந்த அழுத்தம் தென்பட்டது. நல்ல வேலையாக சில நாட்களிலேயே போர் முடிவுக்கு வந்து விட்டது. அட! அதற்குள் முடிந்து விட்டதே! இன்னும் கொஞ்ச நாள்கள் நீடித்திருந்தால், அந்த நாட்டுக்கு தக்க பாடம் புகட்டி இருக்கலாம் என பலரும் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதனால் ஏற்படும் எண்ணற்ற அபாயங்களை பற்றி ஏனோ அவர்கள் சிந்திக்கவில்லை.

முன்னெப்போதும் இல்லாத அளவில், பயணங்கள் தற்போது பெருகியிருக்கின்றன. ஊர் விட்டு ஊர் சென்று பணிபுரிந்த காலங்கள் போய் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பறந்தெல்லாம் பணி செய்கின்றனர். கல்வி, பணி, சுற்றுலா, கூடுகை, கருத்தரங்கு போன்ற பலகட்ட வேலைகளுக்காக பயணம் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நாடுகளிடையே போர் என்பது அந்த இரு நாடுகளை மட்டும் பாதிப்பதில்லை. பல நாடுகளைச் சேர்ந்த மக்களையும் பாதிக்கிறது. அந்த நாட்டின் வான் போக்கு

வரத்து வரை எல்லாம் கேள்விக்குறியாக நிற்கிறது. வடகிழக்கு நாடுகளிடையே நிலவும் போர்ப் பதற்றங்களால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் கிடைப்பதில் தொடங்கி அதன் விலையேற்றம் வரை பல்வேறு பிரச்சனைகள் எதிரொலிக்கின்றன.

அதுமட்டுமா?! ராணுவ வீரர்களின் குடும்பங்கள் எவ்வளவு மன பாரத்துக்கு ஆட்படுகிறார்கள்! பல ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு நீண்ட காலம் பிரிந்து இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

போர் என்னும் சொல்லின் நீண்ட நெடிய வரலாற்றை நோக்கும்போது தனிமனித அழிப்பிலிருந்து மாறி, நாட்டில் வசிக்கக்கூடிய அப்பாவி மக்களையும் சேர்த்து கொன்று குவிப்பது தற்போதைய நடைமுறையாக உலகில் காண முடிகிறது. உலகின் வல்லரசுகள் தம்மிடம் ஆயுதங்களைக் குவித்து வைத்திருந்தாலும், அவை நேரடியாக அணுகுண்டுகளை வீசுவதில்லை; மாறாக, நாடுகளைப் பணிய வைக்க வெவ்வேறு ராஜதந்திர உத்திகளை கையாளுகின்றன.

ஏனெனில் போர் என்பது பேரழிவு மற்றும் பொருளாதார நாசத்தைத் தரும் என்பது எல்லா நாட்டுத் தலைவர்களுக்கும் தெரியும். இது போருக்கான யுகம் அல்ல; பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண ஒவ்வொரு தலைவரும் முயல வேண்டும் என்று நமது பிரதமரும் உலகத்தை நோக்கி வலியுறுத்தியுள்ளார்.

அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் இடையே சங்க காலத்தில் நடைபெற இருந்த போரை ஒüவையார் தூது சென்று சாதுரியமாக தவிர்த்தார் என்று படித்திருக்கிறோம். ஒரே ஒரு புகைப்படம் ஒரு போரை நிறுத்தி இருக்கிறது என்பதையும் சென்ற நூற்றாண்டில் நாம் வரலாறு மூலம் தெரிந்து வைத்திருக்கிறோம்.

1972 -இல் தெற்கு வியத்நாம் போட்ட நாபாம் குண்டால் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி ஓடிவரும் படம் உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்துப் பார்த்தது.

உடல் முழுவதும் ஆங்காங்கே தீக்காயங்களுடன் தனது இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுவதும் பீதியுடன் செய்வதறியாது நிர்வாணமாக ஒரு சிறுமி ஓடி வரும் அந்தப் படம், பார்ப்பவர்கள் அனைவரையும் கதி கலங்கச் செய்தது.

சுமார் 19 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த வியத்நாம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர இந்தப் படம் மிகப் பெரிய காரணமாக அமைந்தது. உலக நாடுகளின் கடுமையான கண்டனத்தினாலும் உள்நாட்டு மக்களின் எதிர்ப்பினாலும் 1973-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வியத்நாமை விட்டு வெளியேறியது. ஒரு ஒற்றை புகைப்படம் ஏற்படுத்திய மிகப் பெரிய மாற்றம் இது. ஆனால், இன்று குடிமக்களின் நிலையிலிருந்து பார்க்கும் பார்வை சில தலைவர்களிடம் இல்லையோ என்று தோன்றுகிறது.

கலிங்கத்துப்பரணியில் கலிங்க மன்னன் அனந்தவர்மன், சோழப் படையிடம் தோற்றான். இந்தப் போரில் ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டன என்ற செய்தி விவரிக்கப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் யானைகளைக் கொல்வது மன்னர்களின் வீரமாக கருதப்பட்டது. ஆனால், இன்று மக்களை இப்படி கொத்துக் கொத்தாக கொன்றுக் குவிப்பதை ஏற்கவே முடியவில்லை. எந்த ஓர் இனமும் தனது இனத்தை தானே இப்படி அழிப்பதில்லை; ஆனால், மனிதன் இதற்கு விதிவிலக்காக இருக்கிறான்.

ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை

என்கிறது புறநானூற்றுப் பாடல். அதாவது, உலகில் இயற்கையாகவே ஒருவனோடு ஒருவன் போரிடுவதும் ஒருவனை ஒருவன் கொல்லுதலும் நடைபெற்று வருகிறது என்று புறநானூறு விவரித்துள்ளது.

ஆங்கில இலக்கியத்தில் ஆரோன் ஷெப்பர்ட் எழுதிய "தி கிறிஸ்துமஸ் ட்ரூஸ்' எனும் சிறுகதை நினைவுக்கு வருகிறது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் எதிரணியாக இருந்த ஆங்கிலேய மற்றும் ஜெர்மானிய வீரர்கள் எதிர் எதிராக நின்று போர் புரிந்து கொண்டிருந்தார்கள். மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை; அந்த நிலையில் ஆங்கிலேய மற்றும் ஜெர்மானிய வீரர்கள் தங்கள் பகைமையை மறந்து, அந்த ஒரு நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையை எவ்வாறு கொண்டாடினார் என்பதுதான் கதை.

பதுங்குக் குழிக்குள் இருக்கும் இரு அணியினரும் கிறிஸ்துமஸ் அன்று மட்டும் ஒரு நாள் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு ஒன்றாக ஆடிப் பாடி, கொண்டாடிய பிறகு, மீண்டும் நாளை போர்க்களத்தில் சந்திப்போம் எனப் பிரிந்து அவரவர் இடம் சேர்கின்றனர். நம் தலைவர்கள் எச்சரிக்கைகள் கொடுக்கும் இடங்களில் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டால் என்ன? பழிக்குப் பழி என்பதற்குப் பதிலாக வெகுமதிகள் வழங்கினால் என்ன? அத்தனை போர்களும் முடிவுக்கு வந்து விடாதா? போன்ற கேள்விகளுடன் அக்கதை முடியும். ஒரு ஆங்கிலேய வீரர் அவனது சகோதரிக்கு எழுதிய கடிதமாக இந்தக் கதை முடிவுறும்.

ஒவ்வொரு நாடும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது.

கட்டுரையாளர்:



எழுத்தாளர்.

NMC rethinks ban; new colleges, more seats likely

NMC rethinks ban; new colleges, more seats likely 

TIMES NEWS NETWORK 02.08.2025



Ahmedabad : In a significant reversal, the National Medical Commission (NMC) indicated that it will consider granting approvals to new medical colleges and increasing seats for current academic year, despite its earlier stand. Just two weeks ago, on July 14, the NMC issued a circular stating that no new medical colleges would be approved this year, nor would any applications for additional seats be accepted. According to initial estimates, this new stance could result in the addition of approximately 350 medical seats in the state. Two existing colleges have applied for seat increases, while one proposal for a new medical college is also under active consideration. If these are approved, they will not only compensate for the earlier seat losses but also add fresh capacity. NMC move followed CBI raids across several medical colleges in India, which exposed serious irregularities in infrastructure, staffing, and admissions processes. In Gujarat alone, over three medical colleges were found involved in such violations. As a consequence, the NMC cancelled seat expansions and even slashed seat counts: two colleges had 50 seats each reduced, while one college had all 250 seats withdrawn due to non-compliance. However, in a surprising turnaround, the NMC now clarifies that new approvals and seat expansions will indeed be considered.

Passenger slapped on IndiGo flight, goes missing in Kolkata


Passenger slapped on IndiGo flight, goes missing in Kolkata 

TIMES NEWS NETWORK

02.08.2025

Silchar/New Delhi/Kolkata: 

A youth from Assam’s Cachar district slapped by a co-passenger on a Mumbai-Kolkata IndiGo flight on Friday, while apparently experiencing a panic attack, missed his connecting flight to Silchar and remained untraceable late into the night. 


The victim’s family, waiting for him at Silchar airport, are distressed as his phone was unreachable. The assaulter was handed over to security agencies in Kolkata by the airline. There was no word on whether the victim was taken into protective custody by airline or Kolkata airport authorities for medical attention or investigation purposes. The youth works at a gym in Mumbai and was returning home to Katigorah, in Assam’s Cachar district, when the incident occurred. “When we didn’t find him on the Silchar flight we contacted the local authorities and even went to Udharband police station, near Silchar airport. But we received no concrete information about his whereabouts,” said a relative. The victim’s father, who is battling cancer, was very worried. “He was working hard in Mumbai to support us and was returning home. I saw the video this morning and now I don’t know where my son is,” he said.

Ghost staff: Anna Univ ex-VC suspended DVAC Filed Charges Against 11 Officials



Ghost staff: Anna Univ ex-VC suspended DVAC Filed Charges Against 11 Officials

TIMES NEWS NETWORK 02.08.2025.

Chennai : Anna University’s former vice-chancellor, R Velraj, was suspended on Thursday, the day of his retirement, for granting affiliation to engineering colleges with ghost faculty members during his tenure in 2023-24. He had continued working as a professor in the mechanical engineering department at College of Engineering, Guindy, after completing his tenure as vice-chancellor in  Aug 2024. The action was taken based on Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) charges against 11 officials, including Velraj, regarding the ghost faculty row. 

Sources said that while Governor R N Ravi, denied permission for a probe against Velraj a day before his retirement, state govt urgently convened a special syndicate meeting to take departmental action against him. “It was decided to take action against Velraj as there are pending charges against him. He was heading the university when the irregularities of fake faculty members took place,” said a syndicate member. 

Anti-corruption NGO Arappor Iyakkam, in July last year, exposed that 353 people were working in multiple engineering colleges during 2023-24. Following this, state govt formed a three-member committee headed by the then directorate of technical education commissioner, T Abraham, to look into the case. 

Anna University’s internal probe also found that colleges’ appointments to around 2,000 faculty positions for 2024-25 were fake. Govt, however, did not initiate action against these colleges. Anna University professors alleged that the action against Velrajwas a vindictive one, as he was known to be close to Governor Ravi. 

Ravi hosted a farewell party for Velraj at Raj Bhavan when he completed his tenure as vice-chancellor last year. “More than 200 colleges and 600 faculty members were involved in the fake faculty racket. Several colleges owned by politicians were involved in the irregularities. Despite suggesting various actions, such as fines and suspension of affiliation to these colleges, state govt has not initiated any action. 


However, it took action only against the vice-chancellor, and that too on the day of his retirement,” a professor from the university said. Another professor said Arappor Iyakkam was able to find the duplication of faculty members only because these details were published online by Anna University. Meanwhile, Arappor Iyakkam demanded the release of the full list of colleges involved in the racket to prevent students from joining them during counselling. The NGO is also planning to protest the inaction of govt on Saturday.

MBBS Internship: 'You Make Them Work For 18-19 Hours & Pay No Stipend?' : Supreme Court Asks Army College To Clear Arrears Of 2022 Batch


MBBS Internship: 'You Make Them Work For 18-19 Hours & Pay No Stipend?' : Supreme Court Asks Army College To Clear Arrears Of 2022 Batch 

Gursimran Kaur Bakshi 1 Aug 2025 2:40 PM


Listen to this Article The Supreme Court today(August 1) directed the Army Medical College Sciences to pay stipend arrears, calculated at Rs.25,000 per month, to the MBBS interns of 2022.

There was an order passed in September 2023 to pay a monthly stipend of Rs. 25,000 to medical students from the batches from October 2023.

At the outset, a bench comprising Justice Sudhanshu Dhulia and Aravind Kumar questioned Senior Advocate R Balasubramanian, for the Army College, why they failed to disburse the stipend even after three years had passed.

 Advocate Tanvi Dubey, for the petitioners, informed the Court that three subsequent batches have received a stipend of Rs. 25,000. Another advocate appearing for petitioner Abhishek Yadav said, "They have already given their services in the mandatory internship program. This order says that the present batch commencing from today should get stipend of Rs. 25,000. We are the ones that approached the Court. We have already interned and given our services and we have not been given any sought of arrears.

Balasubramanian responded that the College is run by a society and it's not government-funded. Justice Dhulia however said that since these students worked for the College, they must be paid the stipend.

The Court passed an order: "Advocate R Balasubramanian, who appears for Army Medical College Sciences has made a very fair statement that Army College will give the same stipdent of Rs. 25,000 to all the interns. A three-judge bench of this Court on the same matter had passed the following orders giving stipend to the interns who are similarly situated as the petitioners batch commencing from 1 October 2023, for whom a stipend of Rs. 25,000 was fixed. 

We are informed that this stipend has been given. As regarding previous batch, it was said as follows. We are of the opinion that the same benefit ought to be given to the previous batch as well. Since nothing has come from the Respondent as to the amount, consequently we direct that interns of 2022, who had done their internship with Army Medical College, that also be paid an amount of Rs. 25,000. Let the same be calculated and paid within eight weeks."

Counsel for Petitioners: Mr. Somdev Tiwari, Ms. Kokila Kumar, Ms. Shefali Munde, Vansh Shrivastav.

Counsel for College: Col. R. Balasubramian

Friday, August 1, 2025

அறிதிறன்பேசிக்கு அடிமை ஆகலாமா?



அறிதிறன்பேசிக்கு அடிமை ஆகலாமா? உங்களைவிட அதிகமாக மடிக்கணினி, அறிதிறன்பேசி இவற்றில் அதிக நேரம் செலவிடுகிறாரா உங்கள் கணவர்...பெண்களே உஷார்!

தினமணி செய்திச் சேவை Published on: 31 ஜூலை 2025, 4:21 am

மருத்துவர் பாலசாண்டில்யன்

உங்களைவிட அதிகமாக மடிக்கணினி, அறிதிறன்பேசி இவற்றில் அதிக நேரம் செலவிடுகிறாரா உங்கள் கணவர்...பெண்களே உஷார்!

இன்றைய காலகட்டத்தில் சில நேரம் உங்கள் கணவரின் கவனத்தைத் திருப்புவது சற்று சிரமம்தான். வீட்டில், வெளியில், உணவகங்களில், தொலைக்காட்சி பார்க்கும்போது, நாம் பேசும்போது, மணியோசை கேட்டு கைப்பேசியை கையில் எடுக்கும் கணவர் அந்த அழைப்பை அல்லது ஒரு குறுஞ்செய்தியை மட்டும் பார்த்துவிட்டு மறுபடியும் உங்களுடன் மனதளவில் இருக்கிறாரா என்றால் இல்லை என்பதுதான் பதில். ஏனெனில், கைப்பேசியைக் கையில் எடுத்தவுடன் அடுத்தடுத்து அவர்கள் அதில் லயித்து தன்னிலை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

உள்ளங்கை அளவில் ஓர் எதிரி என்றால் அது அறிதிறன்பேசிதான். நம்மை அவர் கவனிக்கவில்லை என்பதைவிட, நம்மை அவர் ஒதுக்கிவைத்து விட்டார் என்ற உணர்வு சில நேரம் தலைதூக்குகிறது.

சில நேரம் சில பெண்கள் கேட்கிறார்கள்? "நமக்கு திருமணமாகி சிறுகாலங்கள்தான் ஆகி உள்ளன. இப்போதுதான் நமக்கு ஒரு குழந்தை பிறந்து உள்ளது. எப்படி சிரிக்கிறது பாருங்கள்? அப்படி என்னதான் இந்த போனில் உள்ளது?' ஆரம்பிக்கிறது ஓர் உரையாடல்.

பட்டென்று வருகிறது பதில்; "இவ்வளவு நேரம் எனது பாஸ் உயிர் எடுத்தான். இப்போதுதான் உலகத்தில் என்ன நடக்கிறது; எனது நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்; செய்கிறார்கள் என்றுகூடப் பார்க்க எனக்கு உரிமை இல்லையா? நேற்று நமது திருமண நாள் புகைப்படத்தை முகநூலில் போட்டிருந்தேன். யார் என்ன சொல்லி வாழ்த்தி இருக்கிறார்கள் எனப் பார்க்கிறேன்... உனக்கு அதில் விருப்பம் இல்லையா?'

சில கணவர்கள் காதில் இப்படி விழுகிறது; "நீங்கள் பேசாமல் என்னைத் திருமணம் செய்து கொண்டதற்குப் பதில், இந்த போனை கட்டிக்கொண்டு இருக்கலாமே? என் உயிரை ஏன் எடுக்கிறீர்கள்?'

எல்லோருக்கும் துணை நிற்பது இந்த அறிதிறன்பேசிதான். அதில் தானே வந்து விழுகிறது பல புகைப்படங்கள், மீம்ஸ்கள், விடியோக்கள், செய்திகள், பல தகவல்கள், அரசியல் மற்றும் திரைப்பட கிசுகிசுக்கள், பற்பல வதந்திகள்; இப்படி இருக்கும்போது யார்தான் அறிதிறன்பேசியை கீழே வைப்பார்கள்.

பாதி பேருக்கு என்ன கேட்கிறோம்; என்ன சாப்பிடுகிறோம்; என்ன செய்கிறோம் என்ற சுய சிந்தனையே இல்லை என்பதே மிகவும் வருத்தமான செய்தி.

மனநல ஆலோசகர்களிடம் பெரும்பாலும் பெண்கள் சொல்லும் புகார் என்ன தெரியுமா? "என் கணவர் முன்புபோல இல்லை. என்னிடம் இப்போது அதிகம் பேசுவது இல்லை; சாப்பாடு, உறக்கம், கைப்பேசி, அலுவலகம்-இதுதான் அவர் உலகம் என்றால், நான் எதற்கு இடையில்?'

ஆனால், பெண்களும் இப்படி ஆகி வருவதையும் பார்க்க முடிகிறது. ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டால் வேறு எங்காவது மகிழ்ச்சி கிடைக்குமா என்று தேடவும் நேரிடுகிறது. இது ஆபத்தானது. அவர்களும் வீட்டில் எது நடந்தாலும் உடனே உடன் வேலை பார்க்கும் தோழன் அல்லது தோழிக்கு அனுப்பி ஆறுதல் தேட நினைக்கிறார்கள். கூடவே சில கேம்ஸ் விளையாடுவதும் உண்டு.

மனக்கிலேசங்கள் வரும்போதே உரையாடல் மூலம் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். மனதில் போட்டு புதைத்து வைத்தால், பிறகு சிக்கல் அதிகமாகும். இருவருமே வேலை பார்க்கும் இன்றைய நாள்களில் உணவு, காய்கறி, வீட்டுச் சாமான், கேஸ் புக்கிங், பணப் பரிவர்த்தனை இவற்றுக்காக கையில் எடுக்கும் அறிதிறன்பேசி கீழே வைக்கப்படுவதில்லை. ஏனெனில், அதில்தான் நேரம் பார்ப்பது, பாட்டு கேட்பது, புகைப்படம் எடுப்பது, டிவி ரிமோட், விடியோ பார்ப்பது, மின்னஞ்சலை பார்ப்பது என எல்லாம் நடக்கிறது. யாரை இங்கே குற்றம் சொல்வது? தொழில்நுட்பம் இயல்பு வாழ்வை சாகடித்து விட்டது.

பெண்களே! நானும் முக்கியம், கையில் இருக்கும் அந்தக் கைப்பேசியும் முக்கியம் என்று மெதுவாக அன்பாக அழகாக பேசிப் புரிய வையுங்கள். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்; இழந்த நேரத்தை, இளமையை வாழ்க்கை இன்பங்களை திரும்பப் பெற முடியாது.

இன்று வேலை; வாழ்க்கை; அறிதிறன்பேசி இவை மூன்றையும் மிகச் சரியாக சமநிலை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு புத்தி சாதுரியம் மட்டும் போதாது. இழந்த தருணத்தை கரணம் போட்டாலும் திரும்பப் பெற முடியாது. இருக்கும் நமது நேரத்தில் உண்பது, உறங்குவது, வேலை பார்ப்பது, பயணிப்பது, பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி பார்ப்பது, நண்பர்களோடு பேசுவது, உறவினர் இல்லம் செல்வது, பிரார்த்தனை, உடற்பயிற்சி, தியானம், பாட்டு கேட்பது, குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது, குடும்பத்தோடு வெளியே செல்வது, திட்டமிடுவது, பெற்றோரோடு பேசுவது, அழகு ஆரோக்கியத்தைக் காப்பது, சமூகப் பொறுப்புகளை ஏற்பது, தொழிலை மேம்படுத்துவது, என எல்லாமேதான் அவசியம். அதற்கு அந்தந்த செயல் அந்தந்த தருணத்தில் என்பதுபோல சரியான நேரம் ஒதுக்கி நேர மேலாண்மையோடு செயல்படுதல் அவசியம்.

எப்போதும் கையில் அறிதிறன்பேசி எனும்போது, வீட்டில் உரையாடல்களே நிகழ்வதில்லை. உறவுகள் அதனால் மிகவும் பலவீனம் அடைகின்றன. அலுவலக நிமித்தம்தான் கையில் அறிதிறன்பேசி உள்ளதா ? அல்லது வேறு ஏதாவது நடக்கிறதா ? எப்படி கேட்பது ? எப்படிக் கண்டறிவது ? ஒருவருக்கொருவர் சந்தேகம் வந்தாலும் தவறுதானே.

இப்போது பிள்ளைகளும் இணையவழி வகுப்புகள் என்று கையில் கைப்பேசி அல்லது மடிக் கணினியை எடுத்துக் கொண்டு ஒரு மூலையில் சென்று விடுகிறார்கள். பல வீடுகளில் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் மயான அமைதிதான். கைப்பேசி செய்யும் அநியாயம்; வேண்டாத ஒரு மாயம்.

இதனால், "காட்ஜெட் டிசீஸ்' என்று சொல்லக்கூடிய சில புதிய மூட்டு அல்லது நரம்பு தொடர்பான நோய்கள், கழுத்து மற்றும் முதுகு வலி, சீக்கிரமே கண்ணாடி என்று இதர சிக்கல்கள் வேறு. இந்தத் தொழில்நுட்பக் கருவிகள் தரும் மிகவும் சக்தி வாய்ந்த கதிர்வீச்சு எனும் சில எதிர்மறை கிரணங்கள் உடல் உறுப்புகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. அது குழந்தைப் பிறப்பைக்கூட பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சில குழந்தையை "ஏடிஹெச்டி' எனும் கவனக் கோளாறு குறித்த நோய் ஆட்கொள்கிறது.

இன்றைய எண்ம வாழ்க்கையில் காதல், காமம், அன்பு, கருணை எல்லாவற்றுக்கும் சற்று நேரம் ஒதுக்க வேண்டும்; இல்லையேல், மன முறிவு மற்றும் மண முறிவு இரண்டுமே தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். கவனம் தேவை மக்களே; உங்கள் அறிதிறன்பேசி உங்கள் கையில்; அதேபோல, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

NEWS TODAY 13.12.2025