Tuesday, August 12, 2025

Man consults ChatGPT for diet advice, three months later diagnosed with bromide intoxication: Know what it is and how serious it can get


Man consults ChatGPT for diet advice, three months later diagnosed with bromide intoxication: Know what it is and how serious it can get

etimes.in | Aug 12, 2025, 07.51 AM IST


A man decides to overhaul his diet, he’s concerned about table salt (sodium chloride) and wants to eliminate chloride altogether. In comes ChatGPT, the AI advisor, suggesting a replacement… which ends up being sodium bromide. He takes the advice, skips normal salt, and starts adding sodium bromide to his meals. Fast forward three months, and things go off the rails. He’s in the emergency department (ED), experiencing full-blown psychiatric symptoms, paranoia, hallucinations, and all that.

The case has been published in the journal Annals of Internal Medicine Clinical Cases.

Diagnostics? His lab results are weird, his blood shows what looks like high chloride levels, but it’s actually a false flag thanks to bromide messing with the measurements. Doctors look into it, hit up Poison Control, and land on bromism as the likely cause.
In the hospital, he’s thirsty and paranoid about drinking water, then starts hallucinating and tries to bolt out of the ward. That lands him in an involuntary psych hold, and he gets an antipsychotic along with fluids and electrolyte corrections. Slowly, things stabilize—his mental state clears, and he eventually admits he’d been following ChatGPT’s recommendation. He also mentions other symptoms: acne, weird red skin bumps (maybe a hypersensitivity reaction), muscle coordination issues, fatigue, insomnia, and an unrelenting thirst—all pointing toward bromide toxicity.

"This case also highlights how the use of artificial intelligence (AI) can potentially contribute to the development of preventable adverse health outcomes. Based on the timeline of this case, it appears that the patient either consulted ChatGPT 3.5 or 4.0 when considering how he might remove chloride from this diet. Unfortunately, we do not have access to his ChatGPT conversation log and we will never be able to know with certainty what exactly the output he received was, since individual responses are unique and build from previous inputs," the researchers have said.

"Thus, it is important to consider that ChatGPT and other AI systems can generate scientific inaccuracies, lack the ability to critically discuss results, and ultimately fuel the spread of misinformation. While it is a tool with much potential to provide a bridge between scientists and the nonacademic population, AI also carries the risk for promulgating decontextualized information, as it is highly unlikely that a medical expert would have mentioned sodium bromide when faced with a patient looking for a viable substitute for sodium chloride," they have warned.

What is bromide intoxication?

Bromide intoxication happens when too much bromide — a chemical element related to chlorine — builds up in your body. Bromide itself isn’t something you’ll normally find in your everyday food in high amounts. Bromide can still sneak into your system from certain medications, supplements, or imported products. The problem is, your body doesn’t get rid of bromide super quickly. It competes with chloride (yes, like in table salt) for space in your cells. When bromide sticks around, it starts messing with your nervous system.

Common symptoms? They can be sneaky and wide-ranging — headaches, confusion, memory problems, dizziness, slurred speech, tremors, and in severe cases, hallucinations or psychosis. Because the symptoms are vague, people sometimes go months without realizing bromide is the culprit.


How do people get it today?

Old or imported sedatives that still contain bromide compounds

Certain dietary supplements or “detox” products that use bromide salts without clear labeling

Brominated vegetable oil (BVO) in some soft drinks (less common now in the US, phased out in the UK and Canada)

Very rarely, exposure from industrial chemicals or contaminated water

If you keep taking in bromide faster than your body can flush it out, it accumulates — that’s when intoxication kicks in.

Diagnosis usually involves blood or urine tests to measure bromide levels. But here’s the catch: because bromide interferes with certain lab readings, it can look like you have a severe electrolyte imbalance when you don’t. That can lead to misdiagnosis unless the doctor specifically thinks to check for bromide.

Monday, August 11, 2025

Shortfall In Service, Excess Pension Paid Due To Factual Errors; Madras HC Upholds Recovery After Retirement



Shortfall In Service, Excess Pension Paid Due To Factual Errors; Madras HC Upholds Recovery After Retirement

Namdev Singh 23 July 2025 11:18 AM

The Madras High Court bench comprising Justice A.D. Maria Clete held that excess pension paid due to a clerical or mechanical mistake in pay fixation to the factually ineligible employee can be recovered post-retirement. Further the protection against recovery laid down in Rafiq Masih case does not apply when eligibility itself is lacking.

Background Facts

The petitioner was employed as a Lecturer (Selection Grade) at Arulmigu Palaniandavar College of Arts and Culture, Palani. It was an aided private institution governed by the Hindu Religious and Charitable Endowments Department. After his retirement, he was granted pension based on the UGC scale applicable to Lecturers in Selection Grade with three years of service.

However, upon audit it was found that the petitioner had rendered only 2 years and 7 months of service in the Selection Grade. He was falling short of the required 3 years. It was held that he had been wrongly granted a higher pension. Therefore, recovery proceedings were initiated by the Assistant Treasury Officer through proceedings dated 19.07.2016.

Aggrieved by the same, the petitioner filed the writ petition.

It was submitted by the petitioner that the recovery proceedings were initiated without affording any prior notice or opportunity of hearing. The petitioner contended that neither at the stage of audit nor at the time of revising the pensionary benefits was any communication issued to the petitioner, nor was a copy of the audit objection furnished, depriving him of the chance to offer an explanation or clarification regarding the alleged excess payment.

The petitioner further relied upon the judgments of the Supreme Court in State of Punjab v. Rafiq Masih and Thomas Daniel v. State of Kerala, to submit that recovery of excess amounts from retired employees, particularly when no fraud or misrepresentation is attributed to them, would be arbitrary and unsustainable in law. It was also submitted that G.O.(Ms.) No.286 Finance (Pension) Department, dated 28.08.2018 issued by the State Government discourages recovery in cases of bona fide mistake after retirement.

On the other hand, it was submitted by the respondents that the petitioner was not entitled to receive the higher pension granted under the UGC scales, as he had not completed the minimum required service of three years in the Selection Grade. It was submitted that the petitioner had served only 2 years and 7 months in that post. It was contended that the pension was wrongly calculated as if the petitioner belonged to the category of “Lecturer Selection Grade with three years and above”, which was factually incorrect. It was submitted that this was not a matter of interpretation but a question of eligibility, and that the recovery initiated upon audit was legally sound and justified.

Findings of the Court

It was observed by the Court that the mistake in pay fixation was purely mechanical. The Court held that the petitioner had served only 2 years and 7 months in the Selection Grade and thus was factually ineligible for the pension. The error was not interpretational but an objectively verifiable shortfall in qualifying service, therefore, there was no need for subjective assessment. It was further observed that the absence of prior notice amounted to procedural irregularity but it did not cause any real prejudice to the petitioner. It was observed by the court that since the pension was erroneously fixed based on inapplicable criteria, the petitioner was not entitled to the higher benefits granted to him.

The case was distinguished by the court from decisions in State of Punjab vs Rafiq Masih and State of Kerala vs Thomas Daniel, where the Supreme Court had restrained recovery on the ground of injustice or hardship to retired employees. It restrained particularly in cases which involved long-standing payments and no fault of the employee. However, in this case the core issue was of eligibility, and not hardship or equitable considerations.

Further the case of Chandi Prasad Uniyal v. State of Uttarakhand was relied upon wherein the Supreme Court held that public funds wrongly paid due to bona fide mistake and without fraud must be recovered. Further allowing the recipient to retain such funds from government exchequer would amount to unjust enrichment. It was held that any amount paid without authority of law is recoverable, unless exceptional hardship is there.

It was held by the Court that the petitioner was not legally entitled to the higher pension, therefore the recovery initiated by the department was justified.

With the aforesaid observations, the writ petition was dismissed.

Case Name: P. Ganga Parameshwaran vs. The Government of Tamil Nadu & Others

Citation: 2025 LiveLaw (Mad) 251

Case No.: W.P.(MD) No.14857 of 2016

Counsel for the Petitioner: M. Saravanan

Counsel for the Respondents: T. Amjad Khan, Government Advocate, K. Govindarajan, P. Aathimoola Pandian

காக்க உதவுமா காப்பீடுகள்? விபத்துக் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீடு திட்டங்களின் பலன்களைப் பற்றி...



காக்க உதவுமா காப்பீடுகள்? விபத்துக் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீடு திட்டங்களின் பலன்களைப் பற்றி...

எஸ். நாராயணன் Published on: 11 ஆகஸ்ட் 2025, 3:30 am

பொதுவாக ஆயுள் காப்பீடு என்பது ஓர் உச்சபட்ச தொகையை இலக்காக கொண்டு அதற்கான கால ஆண்டைக் கணக்கிட்டு, தவணை முறையில் சிறுதொகையாக செலுத்துவது ஆகும். குறிப்பிட்ட கால ஆண்டில் இந்தத் தொகை முதிர்ச்சியடைந்ததும் பெருந்தொகையாக வழங்கப்படுகிறது.

ஒருவேளை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த நபர் உயிரிழக்க நேரிட்டால் அந்த உச்சபட்ச தொகையை அவரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கும் என்பது நடைமுறை. இந்த வகை காப்பீடுகள் சேமிப்பு வகையைச் சேர்ந்தவை.

மற்றொரு வகையிலான காப்பீடு என்பது பாதிப்புகள் ஏற்பட்டால் மட்டுமே அதற்கான காப்பீட்டுத் தொகையைப் பெற இயலும். விபத்துகளால் ஏற்படும் ஊனம் அல்லது உயிரிழப்புக்கு விபத்துக் காப்பீடு, எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்கு மருத்துவக் காப்பீடு, நீண்ட பயணங்கள் மேற்கொள்ள பயணக் காப்பீடு, விலையுயர்ந்த மின்னணுப் பொருள்களுக்கு காப்பீடு, வாகனக் காப்பீடு, குழந்தைகளுக்கான எதிர்காலத் தேவைக்கான காப்பீடு போன்றவை.

இதுபோலவே கால ஆயுள் காப்பீடு (டெர்ம் இன்சூரன்ஸ்) திட்டமும் செயல்படுகிறது. இது சேமிப்பு அம்சங்கள் இன்றி வாரிசுகளுக்கு மட்டுமே பணப்பலன் கிடைக்கும் வகையிலானது. இந்த வகை காப்பீடுகளில் செலுத்தும் பிரீமியம் தொகை குறைவாக இருந்தாலும் காப்பீடுதாரர் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் பணப்பலன் மிக உயர்வாக இருக்கும்.

வாழ்வின் ஓர் அங்கமாக காப்பீட்டுத் திட்டங்கள் அவசியமாகியுள்ளன. இதைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு 1956-இல் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்ஐசி) தேசியமயமாக்கியது. 1991-இல் இந்தியாவில் தாராளமய கொள்கை அமல்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர், தனியார் காப்பீடு நிறுவனங்கள் பெருகியுள்ளன. அதற்கேற்ப காப்பீட்டுத் திட்டங்களில் இணைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.

தனியார் நிறுவனங்களில், தங்களுக்குத் தேவையான மேற்படி காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்தவர்கள் காப்பீட்டுத் தொகையை கோர முழுத் தகுதி இருந்தும், அவற்றைப் பெறுவதில் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தனியார் ஆயுள் காப்பீடுகளில், கால ஆண்டு நிறைவடைந்த பின்னரும் காப்பீட்டுத் தொகையை கோராதவர்களின் குடும்பத்தினரை காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்பு கொள்வது அரிதாகவே உள்ளது. சில நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்புவதோடு சரி.

காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்தவர்கள், அதுகுறித்த தகவல்களை தங்கள் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தாமல் இருந்திருக்கலாம்; அப்படியே தெரியப்படுத்தியிருந்தாலும் குடும்பத் தலைவரையோ, குடும்பத்தில் முக்கிய உறுப்பினர்களை இழந்தவர்களால் சோகத்திலிருந்து விடுபட காலதாமதம் ஏற்படலாம். அல்லது காப்பீடு கோருவது குறித்த வழிமுறைகள், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். மேலும், காப்பீடு கோரும்போது அந்த நிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் அலைக்கழிப்புகளை சகிக்க முடியாமல் காப்பீட்டுத் தொகையை கோர பலர் முன்வருவதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனவே, காப்பீட்டு நிறுவன செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில் 1999-ஆம் ஆண்டு, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) உருவாக்கப்பட்டது. நிறுவனங்களிலிருந்து காப்பீட்டுத் தொகையைப் பெற இயலாத நுகர்வோர் தங்கள் புகார்களை இந்த ஆணையத்தில் பதிவு செய்யலாம். மார்ச் 2024 நிலவரப்படி ஆயுள் காப்பீட்டுத் துறை மொத்தம் ரூ.20,062 கோடி கோரப்படாத தொகைகளைப் பதிவு செய்துள்ளதாக ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.

இதுதவிர நிறுவனங்களின் குறைதீர் அதிகாரிகளிடமும் முறையிடலாம். இதிலும் தீர்வு கிடைக்காவிட்டால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களிலும், மாநில, தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையங்களிலும் புகார் செய்து, வழக்குரைஞரின்றி தங்கள் புகாரை தலைவர், அங்கத்தினர், எதிர்த்தரப்பினர் முன்னிலையில் வாதாடலாம்.

இவ்வாறு காப்பீடு மறுக்கப்பட்டவர்கள், நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள், வாகன விபத்துகள் கோருரிமை தீர்ப்பாயம், நீதிமன்றங்கள் மூலமே காப்பீட்டுத் தொகையை பெறுவது தொடர்கதையாக உள்ளது.

நாள்தோறும் இதுகுறித்த தகவல்கள் நாளிதழ்களில் இடம்பெறத் தவறுவதே இல்லை என்ற நிலையாகிவிட்டது. இது காப்பீட்டு நிறுவனங்களின் சேவைக் குறைபாடுகளையே காட்டுகிறது.

இருப்பினும், காப்பீட்டுத் தொகையை கோருவதற்கான வழிமுறைகளை தொடங்கவும், தொடரவும் மற்றொருவரின் உதவி உறுதியாக தேவைப்படுகிறது. அந்த உதவிகள் எந்த வகையிலும் கிடைக்காத பட்சத்தில் காப்பீட்டுத் தொகையைப் போராடிப் பெறுவதற்கு சாமானியருக்கு சாமர்த்தியம் இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

எனவே, காப்பீட்டுத் திட்டங்களில் சேரும்முன் அந்த நிறுவனங்கள் அதற்கான ஆவணங்கள், வாரிசுதாரர்கள் உள்ளிட்ட நிபந்தனைகளை கடுமையாக பின்பற்றுவதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதேநேரத்தில், திட்டங்களில் சேர்ந்த பின்னர் ஆயுள் காப்பீடு, கால ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள் அவர்களின் வாரிசுகளுக்கு எளிதாகக் கிடைத்திட வேண்டும்.

அதுபோல ஒருமுறை தொகை செலுத்தும் வகையிலான விபத்துக் காப்பீடு, வாகன காப்பீடு, மின்னணுப் பொருள்களுக்கான காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீடு திட்டங்களின் பலன்கள், அதற்கான தகுதியுள்ளவர்களுக்கு எவ்வித ஆட்சேபணையுமின்றி உடனடியாக கிடைக்க வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்காத நிலையில் காப்பீட்டுத் திட்டங்கள் காக்க உதவுமா என்ற கேள்விக்கான விடையை தேடத்தான் வேண்டியுள்ளது.

NEWS TODAY 11.08.2025














Friday, August 8, 2025

NEWS TODAY 08.08.2025

 

































வழிகாட்டும் ஆஸ்திரேலியா! குழந்தை பருவத்தை ஆக்கப்பூர்வமாக்கும் வகையில் ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து

வழிகாட்டும் ஆஸ்திரேலியா! குழந்தை பருவத்தை ஆக்கப்பூர்வமாக்கும் வகையில் ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து..

முனைவா் எஸ். பாலசுப்ரமணியன் Published on:  08 ஆகஸ்ட் 2025, 4:02 am

ஒருகாலத்தில் குழந்தைப் பருவம் என்பது மண்சோறு சமைப்பதிலும், நண்பர்களுடன் ஓடிப்பிடித்து விளையாடுவதிலும், மரம் ஏறி குதிப்பதிலும்தான் உயிர்ப்புடன் இருந்தது. ஆனால் இன்று, குழந்தைகளின் உலகம் நான்கு அங்குலத் திரைக்குள் சுருங்கிவிட்டது.

பெற்றோர் அருகிலேயே அமர்ந்திருக்கும்போதுகூட, குழந்தைகளின் கண்கள் கைப்பேசியைவிட்டு அகலுவதில்லை. இந்த மெளனமான எண்மப் பழக்கம், குடும்பங்களுக்குள் கண்ணுக்குத் தெரியாத திரையை உருவாக்கி, உறவுகளின் நெருக்கத்தைக் குறைத்து வருகிறது.

"என் குழந்தை கடைசியாக எப்போது என்னிடம் மனம்விட்டுப் பேசியது?' என்ற ஏக்கம்கூட பல பெற்றோரின் மனதை வாட்டுகிறது. இதன் விளைவாக, குழந்தைகள் மனதளவில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

"என் பெற்றோர் அன்பானவர்கள்தான்; ஆனால், என்னைக் கவனிப்பதில்லை' என்ற உணர்வு அவர்களுக்குள் ஆழமாக வேரூன்றுகிறது. இந்த உணர்ச்சிப் போராட்டங்கள் ஆரம்பத்தில் வெளிக்காட்டப்படாமல் இருப்பதால், காலப்போக்கில் மன அழுத்தமாக வெளிப்படாமல் பாதுகாக்க வேண்டும்.

இந்தச் சூழலில் இருந்து குழந்தைகளைக் காக்க, ஆஸ்திரேலியா எடுத்துள்ள முடிவு, இன்று உலகிற்கே ஒரு முக்கியமான பாடமாக அமைந்துள்ளது.

அண்மையில், "16 வயதுக்குள்பட்டவர்கள் வருவாய் ஈட்டும் நோக்கில் யூடியூப் போன்ற தளங்களில் சொந்தமாக சேனல் நடத்தத் தடை' என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்தது.

இது வெறும் சட்டம் அல்ல; குழந்தைகளின் மனநலப் பாதுகாப்புக்கான முக்கிய நடவடிக்கை என்றே சொல்லலாம்.

இந்த முடிவின் பின்னணியில் வலுவான காரணங்கள் இருக்கின்றன. இணையப் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில், 10 முதல் 15 வயது வரையிலான சிறார்களில் 37 % பேர், சமூக ஊடகங்களில் ஆபத்தான உள்ளடக்கங்களைப் பார்ப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தடையின் நோக்கம், குழந்தைகள் இணையத்தில் இருந்து அறிவைப் பெறுவதைத் தடுப்பதல்ல.

மாறாக, "பிரபலமாக வேண்டும்' என்ற ஆசையில், பலரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து, அதன் மூலம் ஏற்படும் இணையவழி மிரட்டல்கள், மோசமான விமர்சனங்கள் மற்றும் மனஉளைச்சல் ஆகியவற்றுக்கு உள்ளாகின்றனர்.

ஒரு சேனலை நடத்தும் குழந்தை, புகழுக்கு ஆசைப்பட்டு வணிக ரீதியான சுரண்டல்களுக்கும், மனரீதியான அழுத்தங்களுக்கும் உள்ளாகும் ஆபத்து அதிகம். இந்தத் தடை, அத்தகைய அபாயங்களிலிருந்து அவர்களைக் காக்கும் ஒரு கவசமாக இருக்கிறது.

இளையோர் அதிகளவில் உள்ள நமது நாட்டில், இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் தேவைப்படுகின்றன. இங்கும் குழந்தைகள் அறிதிறன் பேசிகளுக்கு அடிமையாகி, நிஜ உலகத் தொடர்புகளை இழந்து வருவதுகண்கூடு.

பல வீடுகளில், "நான் என் வேலையை முடிக்க வேண்டும்; அதுவரை குழந்தை கைப்பேசியைப் பார்க்கட்டும்' என்று பெற்றோரே தரும் சுதந்திரம், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நன்மை தருமா எனச் சிந்திக்க வேண்டும்.

சீனா போன்ற நாடுகள் இணையப் பயன்பாட்டை மிகக் கடுமையாக கட்டுப்படுத்துகின்றன. இது மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், படைப்பாற்றலையும் பாதிக்கிறது. ஆனால், உலக மகிழ்ச்சி அறிக்கையில் முதலிடம் பிடிக்கும் பின்லாந்து போன்ற நாடுகளில் சமூக ஊடகங்களுக்குத் தடையில்லை. அங்கே இந்தச் சிக்கல் ஏன் பெரிதாக எழவில்லை? காரணம், அங்குள்ள கல்வி முறை, சமூகப் பாதுகாப்பு மற்றும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை ஆகியவை குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன.

குழந்தைகள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதும், விளையாடுவதும் அவர்களை மன ஆரோக்கியத்துடன் வளர்க்கிறது.

மகிழ்ச்சி என்பது திரைகளிலோ, சமூக ஊடகங்களின் விருப்பக்குறிகளிலோ இல்லை; உண்மையான மனித உறவுகளில்தான் இருக்கிறது. திரையில் நாம் காண்பது, மற்றவர்களின் வாழ்க்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணங்கள் மட்டுமே; அது ஒரு மாயை.

உண்மையான மகிழ்ச்சி என்பது நம்முள்ளே இருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள அன்பு, உறவுகள், இயற்கையுடன் இணைந்திருத்தல், புதிய ஒன்றைக் கற்றுக் கொள்வது, பிறருக்கு உதவுவது, நமக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாடுவது போன்ற நிஜ உலக அனுபவங்களில்தான் உண்மையான மகிழ்ச்சி ஒளிந்துள்ளது.

உதாரணமாக, ஒரு குழந்தை மரம் ஏறி விளையாடும்போது அடையும் உற்சாகம், நண்பர்களுடன் சிரித்துப் பேசும்போது கிடைக்கும் நிம்மதி, குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடும்போது ஏற்படும் அரவணைப்பு, இவையெல்லாம் திரையில் கிடைக்கும் விருப்பக்குறிகளை (லைக்ஸ்) விட பல மடங்கு சக்தி வாய்ந்தவை.

சமூக ஊடகங்களும், இணையமும் நமக்குத் தகவல்களையும், பொழுதுபோக்கையும் அளிக்கலாம். ஆனால், அவை ஒருபோதும் உண்மையான மகிழ்ச்சியைப்பதிலீடு செய்ய முடியாது. திரையை ஒதுக்கிவிட்டு, நிஜ உலகை அணைத்துக் கொண்டால், உண்மையான மகிழ்ச்சியின் கதவுகள் திறக்கும்.

எனவே, சமூக வலைதளங்களின் பயன்பாட்டிற்கு வயதுக்கேற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது காலத்தின் கட்டாயம். அத்துடன், நமது கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம். இணையப் பாதுகாப்பு, போலியான செய்திகளைக் கண்டறிவது போன்ற பாடங்களைக் கற்றுத் தர வேண்டும். தொழில்நுட்பத்தைக் கையாளும் திறனுடன், அதை நல்ல முறையில் பயன்படுத்தும் பொறுப்புணர்வையும் குழந்தைகளுக்குக் கற்பிப்பது முக்கியம். ஆஸ்திரேலியா எடுத்துள்ள துணிச்சலான முடிவு, ஒரு சமநிலையான அணுகுமுறையின் அவசியத்தைக் காட்டுகிறது. நமது நோக்கம், குழந்தைகளை தொழில்நுட்பத்திலிருந்து விலக்குவதல்ல; தொழில்நுட்பத்தால் அவர்களுக்கு ஏற்படும் தீங்குகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதே.

சட்டங்கள், கல்வி, பெற்றோர் வழிகாட்டுதல் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, அறிதிறன்பேசித் திரைக்குள் தொலைந்து போகும் நம் இளைய தலைமுறையை மீட்டு, அவர்களை மன ஆரோக்கியமும் பொறுப்புணர்வும் மிக்க குடிமக்களாக உருவாக்க முடியும்!

காத்திருத்தல் என்னும் கலை! பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய அவசியம் குறித்து..


காத்திருத்தல் என்னும் கலை! பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய அவசியம் குறித்து..

Kunal Patil

கிருங்கை சேதுபதி Published on: 08 ஆகஸ்ட் 2025, 3:55 am

பரபரப்பு ஒரு தொற்றுநோய்போல் பற்றிக் கொண்டு, பதற்றம் என்கிற துணை நோயையும் கொண்டுவந்து சேர்த்து மக்களைப் படுத்தும்பாடு பெரும்பாடாய் இருக்கிறது. இதற்கு மறுதலையாய், மருந்தாய் இருப்பது பொறுமை.

"பொறுமை கடலினும் பெரிது' என்று சொல்லப்படுகிறது. உண்மையில் பொறுக்கமாட்டாத கடல்தான் அலைமேல் அலையாய் வந்து நிலம் மீது மோதிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும், ஆழ்கடல் அமைதி மேல் கடலின் அலையை அவ்வப்போது கட்டுப்படுத்திக் கொண்டு வருகிறது.

தம்மை அகழ்வாரையும் நிலம் தாங்கிக் கொண்டு இருப்பதைப்போல், நாமும் நம்மை இகழ்வாரைப் பொறுத்துக் கொண்டு இருப்பது தலையாய பண்பு என்கிறது திருக்குறள். இதனை அடியொற்றியே, "பொறுத்தார் பூமி ஆள்வார்' என்ற பழமொழியும் வந்திருக்க வேண்டும். நிலத்தின் இயல்பு நிலத்தை ஆள்பவர்க்கும் வேண்டுமே.

இது நாடாள்வோருக்கு மட்டுமன்றி, வீடாள்பவர்க்கும் பொருந்தும். ஆக, ஆளுமைப் பண்புக்கு அடிப்படைப் பண்பாக இருப்பது பொறுமை. அதற்கு எதிர்நிலையாக, "பொறாதார் காடாள்வார்' என்றும் அந்தப் பழமொழி விளக்கம் தருகிறது. பொறுத்துக் கொள்கிற வரைக்கும் வலியானது வலிமையாகிறது. பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், உடலைக் காட்டுக்கு அனுப்பி, உயிர் விடைபெற்றுக் கொள்கிறது.

எடுத்த பிறவி நிலைக்கவும், தொடரவும் பொறுமை மிகவும் அவசியம். விதைத்தவுடனே முளைத்து மரமாகிக் கனி வரவேண்டும் என்று நினைப்பது இயற்கைக்கு முரண் அல்லவா? "மந்திரத்தில் மாங்காய் காய்க்குமா' என்ற கேள்வி, இதன்வழி பிறந்தது. இயந்திரங்களைக் கொண்டு இயற்கையின் பொறுமைக்கு மாறாக, விரைந்து ஆற்றிவரும் பணிகள் அவ்வப்போது வெற்றியைத் தந்தாலும் அவை தொடர் வெற்றியாக அமையுமா என்பது ஐயமே.

"நாளும் ஒரு பொன்முட்டை இடும் வாத்தை வளர்த்தவனுக்குப் பேராசை; ஒட்டுமொத்தமாய் அத்தனை முட்டைகளையும் பெற்றுவிட வேண்டும் என்று அதன் வயிற்றைக் கீறிப் பார்த்தபோது, ஒற்றை முட்டை மட்டுமே உள் இருந்தது' என்று சொல்லப்படுகிற கதை வெறும் கதையா? உயிர் இழந்த வாத்து ஒருபோதும் முட்டை இடாது; உயர்குணங்கள் பல இருந்தும் உரிய காலம், சூழல் வரும் வரை காத்து இருக்கப் பழகாதவனுக்கு எதுவும் வாய்க்காது.

பொங்கி வடித்து, உண்கலத்தில் இட்ட சோற்றினைத் தாங்க முடியாத பசியுடையவன் அள்ளிப் புசிக்க நினைத்துச் சூடுபட்ட வேகத்தில் பிறந்த சொலவடை, "ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை'. ஆக்கப் பொறுத்தல் என்றால், நெல்லாக்க, அரிசியாக்க, அதைப் பின் சோறாக்கப் படுகிற பாடு அனைத்தையும் பொறுத்தல் என்பது உள்ளொடுங்கும். அதைவிடவும், கொதிக்கும் உலையில் அரிசியிடும்போதும், வெந்த சோற்றை வடித்திடும்போதும் "சட்டி சுட்டதடா, கை விட்டதடா' என்று விட்டுவிடாமல், அந்தச் சூட்டையும் தாங்கி ஆக்கிய சோற்றை, அள்ளிப் புசிக்க அவசரப்படும்போது, பட்ட சூட்டின் பதிவாகச் சொல்லிய அனுபவ வாக்கு அச் சொலவடை. இது சுடச் சுட அள்ளிய சோற்றுக்கு மட்டுமல்ல, சுறுசுறுப்புக்கும் அப்பால் விரைவுபடுத்தும் வேகத்துக்கும் வைக்கப்படும் முட்டுக்கட்டை.

முட்டுக்கட்டை என்பது முன்னேற்றத்தைத் தடுப்பதாகப் பலரும் நினைப்பதுண்டு. உண்மையில் அது முறையற்ற வேகத்தைக் கட்டுப்படுத்தும் கருவி. ஊர் கூடி இழுக்கும் தேருக்கு முன்னோர் கண்ட தடைக்கட்டை ("பிரேக்')தான் இந்த முட்டுக்கட்டை., ஊருக்கும் தேருக்கும் ஊறு நேராமல், தனக்கு நேரும் வலியைப் பொறுத்துக் கொண்டு, தலைக்கொடுப்பது இது. இதைக் கையாளுபவர்களின் கவனம் நிகர்த்தது, கடமையாற்றும் பெரியவர்களின் நிலைப்பாடு. பயமறியாது பாயும் இளங்கன்றுகளாம் இளைஞர்களைப் பெரியவர்கள் தடுத்து ஆட்கொள்வது இவ்வகைப்பட்டது.

ஊருக்கோ, உலகுக்கோ தலைவனாய் இருக்கும் யாருக்கும் தலைவியாய் இருப்பவள் வாழ்க்கைத் துணைநலம். அதற்கு இலக்கணம் வகுத்த திருவள்ளுவர், தற்காப்பைத்தான் முதலில் சொல்லிக் கொடுக்கிறார்.

"தற்காத்து' தன்னைக் காத்துக் கொள்வதுதான் தலைவியின் முதற்பணி. இது தன்னலம் இல்லை. தற்கொண்டானாகிய கணவனையும் தம்மை நம்பிப் பிறந்த பிள்ளைகளையும் தாங்கிப் பேணக் கற்கும் குடும்பக் கல்வி. பேணுதல் என்பது பெண்மையின் இயல்பு. தற்காத்தல் முதல்நிலை என்றால், "தகை சான்ற சொற்காத்தல்' வளர்நிலை. அது அவ்வளவு எளிதானது இல்லை.

மனதில் உதித்ததை வாயால் வெளிப்படுத்தக்கூடாது என்ற நிலையில், சொல்ல நினைத்ததைக்கூடச் சொல்லாமல் இருந்துவிடலாம். ஆனால், தன்முன் பிறர் சொல்லிய சொல்லினை, - அது புகழ்ச் சொல்லானாலும் சரி, பழிச் சொல்லாயினும் சரி. அதன் நிலைபொறுத்துத் தன்வயமாக்கிப் பிறரிடம் - குறிப்பாக அச்சொல்லுக்கு உரியவரிடம் சொல்லியோ, சொல்லாமலோ, அதனால் இன்னல் வாராமல் காக்கும் பண்பு இருக்கிறதே, அது தலைமைப் பண்புக்கெல்லாம் தாய்.

ஒருமுறை பொறுத்துக் கொள்ளலாம். சில முறை பொறுத்துக் கொள்ளலாம். அதற்கும் மேல்? தேவை எனில் வாழ்நாள் முழுவதும் "சோர்விலாது' பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது திருக்குறள். இது மனைவிக்கு மட்டுமல்ல; மன்னனுக்கும் வேண்டிய மகத்தான பண்பு.

செவிக்கு இனிமையான புகழ் மொழிகளையே கேட்டுப் பழகிய மன்னனும், கசக்கும் வசைச் சொற்களையும் அவ்வாறே ஏற்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அத்தகைய வேந்தனின் ஆட்சிக் குடைக் கீழ் இவ்வுலகமே தங்கும் என்கிறார்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்

கவிகைக்கீழ்த் தங்கும் உலகு (389)

என்று, அகழ்வாரைத் தாங்கும் நிலத்தையும் தாங்கிப் பிடித்துக் காக்கும் வேந்தனுக்குப் பொறுமையை மிகவும் பொறுமையாய் வலியுறுத்துகிறார்.

பழிக்குப் பழி வாங்கும் செயலைவிடச் சொல்லுக்குச் சொல் கொடுக்கும் இன்னாச் செயல் மிகவும் துயர் தரும். "நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம். சொல்லைக் கொட்டினால் அள்ள முடியாது' என அனுபவம் நிறைத்துக் கூறிய பழமொழி, எப்போதும் "நா காக்க'ச் சொல்லிக் கொடுக்கிறது.

செயலானது செய்கிறபோது மட்டுமே துன்புறுத்தும். சொல்லானது எப்போதும் நின்று உள்ளறுக்கும். துப்பாக்கியால் சுடுபட்ட புண்கூட ஆறிவிடும். ஆற்றிவிட மருந்து உண்டு. தப்பாமல் சொல்லிய சொல்லின் சூடும் புண்ணும் ஆறவே ஆறாது. மாற்று மருந்தும் கிடையாது.

எனவே, சொல்லாலோ, செயலாலோ, அறிந்தோ, அறியாமலோ துன்புறும் வண்ணம் தமக்கு இன்னல் செய்வார்க்கும் இனியவே செய்வது சான்றோர்களின் இயல்பு. இதற்குப் பொறுமை மிகவும் இன்றியமையாதது. அச் செயலை, சொல்லை, அப்போதே மறத்தல் அதனினும் சிறப்புடையது. நன்றல்லதை அன்றே அக்கணமே மறப்பதுதானே நற்பண்பு. இது அடக்கம் என்கிற உயர் பண்பையும் உடன் கொடுக்கக் கூடியது. நாவடக்கம் தொடங்கி, புலனடக்கத்தில் வளரும் இவ்வொழுக்கம் உயிர் காக்கும் மருந்தாக உயர்கிறது. உயிர்போன பிறகும் புகழாக மலர்கிறது.இதற்கு, பக்தியை ஒரு பயிற்சி முறையாக வகுத்துத் தந்திருக்கின்றனர் நம் பெரியோர். அதனைப் பகை வளர்ப்பதாக இல்லாமல் பண்பு காப்பதாக வகைப்படுத்தித் தந்த மகாகவி பாரதி,

பக்தி உடையார் காரியத்தில் பதறார்

மிகுந்த பொறுமையுடன்

வித்து முளைக்கும் தன்மைபோல்

மெல்லச் செய்து பயன் அடைவார்'

என்கிறார்.

வித்திட்டவர்கள் விளைச்சல் வரும் வரை காத்திருத்தல் அவசியம். காத்திருத்தல் என்பதற்கு, கடமையைச் செய்யாது வாளாவிருத்தல் (சும்மா இருத்தல்) என்று பொருள் கொண்டுவிடுதல் கூடாது. அது பயன்தரும்படி காத்து இருத்தல் வேண்டும். நீர் பாய்ச்சி, உரம் இட்டு, களை பறித்து, வேலி இட்டுக் காத்து இருந்தால்தான் கட்டாயப் பலன் கிடைக்கும். அதற்குக் காலம் காத்து, பருவம் காத்து, பொறுமை காத்து, எப்போதும் பாதுகாத்து இருக்கப் பழக வேண்டும். நேற்று பெய்த மழையில் காளான்கள் முளைக்கலாம். ஆலவித்து அதுபோல் முளைத்து வருமா?

பயன் நுகரப் பழம் தரும் தாவரத்தின் செயல், அதனோடு முடிவதில்லை. கூடவே மீள முளைக்கும் வித்தினையும் தருகிறது. அதுபோல் பயன்தரும் வினையை வித்தினைப்போல் தரப் பயிலுதல் வேண்டும். விதை விதைத்துப் பயிர் அறுவடை செய்வதுபோல, வினை விதைத்துப் பயன்களை அறுவடை செய்யப் பழகுதல் வேண்டும். அதற்குப் பரபரப்போ, பதற்றமோ ஒரு போதும் உதவாது. "பதறாத காரியம் சிதறாது' என்பதைப் பணிவோடு சொல்லும் பெரியவர்கள் நடைமுறையில் கடைப்பிடித்து நன்மை உணர்ந்தவர்கள்.

எனவே, எல்லா நிலைகளிலும் காத்தலும், காத்து இருத்தலுமாகிய "காத்திருத்தல்' என்ற கலையினைக் கற்று, காலம் முழுவதும் கடைப்பிடித்து ஒழுகினால், காலம் கடந்தும் நிலைபெறலாம் என்பது உறுதி.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished On 15 Feb 2026 11:00 AM  |  Updated On 15 Feb 2026 11:00 AM New Delhi: The Union Ministry of Health and Family Welfare has informed the Lok Sabha that India currently has a total of 818 medical colleges, including AIIMS and Institutes of National Importance (INIS) across India. The details were shared in response to an Unstarred Question on February 6, 2026. Replying to queries raised by Shri Jagannath Sarkar regarding districts without government medical colleges and plans for prioritising high-population districts, Minister of State for Health and Family Welfare Shri Prataprao Jadhav said that the National Medical Commission (NMC) has reported a total of 818 medical colleges nationwide. Also Read: 18 AIIMS Functional, 4 Under Construction: Health Minister tells Parliament As per the list shared in this regard, Uttar Pradesh has the highest number of medical colleges at 88 (51 government and 37 private), followed by Maharashtra with 85 (43 government and 42 private), and Tamil Nadu with 78 colleges (38 government, 40 private). Karnataka has 72 (24 government and 48 private), Telangana has 66 (37 government, 29 private), and Rajasthan has 49 (34 government, 15 private). However, several smaller States and UTs, such as Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Chandigarh, Goa, Mizoram, Nagaland and Sikkim have only one medical college each.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished O...