Tuesday, August 19, 2025

Admission season upon us, but director of medical edu post vacant



Admission season upon us, but director of medical edu post vacant 

TIMES NEWS NETWORK 19.08.2025



Chennai : T he post of director of medical education (DME) remains vacant amidst a busy admission season. After former DME Dr J Sangumani retired on June 30, Dr E Theranirajan, who managed medical education, hospitals, and dispensaries, was asked to hold additional charge as DME. He was also asked to hold the position of selection committee secretary to oversee medical, dental, nursing, and other paramedical admissions until the govt appointed Dr Lokanayaki, who was previously the special officer at the Govt Medical College and Hospital in Krishnagiri, as the selection committee secretary on Aug 6. Doctors’ associations argue that a person responsible for overseeing the administration of all staterun medical colleges cannot be burdened with other portfolios. “The panel is ready. There are no court cases either. So, why is there a delay,” asked Service and Post Graduate Doctors’ Association organizing secretary Dr A Ramalingam. A source within the health department said the panel for promotion to DME is ready, but the decision is still pending. The posts of director of public health and preventive medicine (DPH) and, director of medical and rural health services (DMS), which became vacant after a month, were filled by the govt on Aug 6, along with postings for deans to various govt-run medical colleges. The Tamil Nadu Govt Doctors’ Association stated that the state’s failure to conduct counselling for transfers and promotions has led to the ‘collapse’ of the healthcare system and widespread vacancies in govt medical colleges and hospitals. Promotions and transfers for 2023 were completed by March this year, and lists for two more years are still pending, the association said.

Monday, August 18, 2025

அன்பின் வெளிப்பாடு சமையல்! அன்னதானம் முதல் உணவகங்கள் வரை... உணவின் சமூகப் பயணம்!


அன்பின் வெளிப்பாடு சமையல்! அன்னதானம் முதல் உணவகங்கள் வரை... உணவின் சமூகப் பயணம்!

 எஸ். ஸ்ரீதுரை Published on: 18 ஆகஸ்ட் 2025, 4:00 am

நண்பர் ஒருவர் தமது பெண்ணுக்காக வரன் பார்த்துக்கொண்டிருந்தார். வரப்போகும் மாப்பிள்ளை சுயதொழில் செய்து கௌரவமான வருமானம் ஈட்டக்கூடிய இளைஞராக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர் அந்த நண்பர்.

நண்பரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற இளைஞர் ஒருவர் அவரிடம் பெண் கேட்டு வந்தார். சுயதொழில் செய்பவராகிய அந்த இளைஞர் உணவகங்களில் பல்வேறு உணவுவகைகளை பொட்டலம் போட்டு வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் "பேக்கிங் மெட்டீரியல்' எனப்படும் கட்டுப்பொருள்களை விற்று வருமானம் ஈட்டுபவராம்.

நகரிலுள்ள பிரபல உணவகங்களுக்கு அந்தப் பொருள்களை விநியோகம் செய்வதன் மூலமே மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரையில் லாபம் ஈட்டுவதாகக் கூறினார்.

இந்தத் தொழிலில் நிலையான வருமானத்துக்கு வாய்ப்புண்டா என்று கேட்டதற்கு, உணவகங்களிலிருந்து உணவுப் பொருள்களைப் பெற்று வாடிக்கையாளர்களின் இருப்பிடத்துக்கே கொண்டு வந்து தருகிற தனியார் உணவு விநியோக சேவை நிறுவனங்கள் இருக்கும் வரை எனது வருமானம் குறித்து பயப்படவே தேவையில்லை என்று உறுதியாகச் சொன்ன அந்த இளைஞருக்கே தம்முடைய மகளைத் திருமணம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார் என்னுடைய நண்பர்.

நண்பரின் இல்லத்தில் விரைவில் கெட்டிமேளச் சப்தம் கேட்க வாழ்த்துகிற அதே வேளையில், தனியார் உணவு விநியோக நிறுவனங்களின் வருகை நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை எனது மனம் அலசத் தொடங்கியது.

பசித்தவர்களுக்கும், நடைப்பயணமாக பயணிப்பவர்களுக்கும் பயன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதும் தருமசத்திரங்கள் எனப்படும் அன்னசத்திரங்களும் தண்ணீர்ப் பந்தல்களும் பல நூற்றாண்டுகளாக இயங்கிவந்த தேசம் நம்முடையது.

அப்பூதியடிகள் தம்முடைய மதிப்பிற்குரிய திருநாவுக்கரசரின் பெயரில் தண்ணீர்ப் பந்தலை அமைத்து தருமம் செய்ததாகச் சரித்திரம் கூறுகிறது. நாகப்பட்டினத்தில் இயங்கிய அன்னசத்திரம் ஒன்றில் ஓரிரவு தங்கிய காளமேகப்புலவர், அங்கே உணவு கிடைக்கத் தாமதமானதை விமர்சித்துத் தமக்கே உரிய நகைச்சுவையுடன் கூடிய வெண்பா பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவருட்பிரகாச வள்ளலாரால் வடலூரில் நிறுவப்பட்ட சத்திய ஞானசபை பசிப்பிணி போக்கும் அருந்தொண்டை புரிந்து வருகிறது.

பசிப்பிணியைப் போக்குகின்ற உணவினைக் காசுக்கு விற்காமல், இலவசமாகவே வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் நமது பாரத தேசத்தினரின் வாழ்வோடு காலம்காலமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. அவரவர் இல்லத்து விழாக்களானாலும் சரி, திருக்கோயில் உற்சவங்களானாலும் சரி, அவற்றின் ஓர் அங்கமாக அன்னதானம், அன்னம் பாலித்தல், விருந்து, ததீயாராதனை, சமாராதனை என்று பல பெயர்களில் ஊரார்க்கு உணவு வழங்குதலை ஒரு கடமையாக நமது சமூகம் செய்துவந்துள்ளது.

மாறிவரும் சமூகச் சூழல் காரணமாக காசுக்கு உணவுப் பண்டங்களை விற்கும் உணவகங்கள் கஃபே, கிளப், பவன், விலாஸ், ஹோட்டல் ஆகிய ஒட்டுப்பெயர்களுடன் கூடிய உணவகங்கள் கடந்த நூற்றாண்டில் ஆங்காங்கே தொடங்கப்பட்டு நாளடைவில் பல்கிப் பெருகத் தொடங்கின.

தத்தமது குடும்பத்துடன் வசிக்காமல் தனியாக வசிப்பவர்கள், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தத்தமது இல்லங்களில் சமையல் செய்து சாப்பிட இயலாதவர்கள், வெளியூர் பயணிகள் ஆகியோரின் பயன்பாட்டுக்கென தொடங்கப்பட்ட உணவகங்கள் நாளடைவில் நமது அன்றாட வாழ்வுடன் பின்னிப்பிணையத் தொடங்கிவிட்டன.

தற்போது தனியார் உணவு விநியோக நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு அவரவர் இருப்பிடத்தில் இருந்தபடியே அவரவருக்கு விருப்பமான உணவுப் பண்டங்களை உள்ளூர் உணவகங்களிலிருந்து வரவழைத்து உண்பது பலருடைய வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறியிருக்கிறது.

இதே நிலை மேலும் தொடர்ந்தால், அவரவர் வீடுகளில் சமைத்து உண்ணுவது என்பதே வழக்கொழிந்து போகும் என்றால் அது மிகையாகாது. தாயொடு அறுசுவை போம்! என்ற ஔவையாரின் கூற்று மிகவும் பொருள்வாய்ந்த சொற்றொடராகும்.

குடும்பத் தலைவிகள் சமையல் செய்ய, குடும்ப உறுப்பினர்கள் உண்டு பசியாறுதல் என்பது இவ்வுலகம் முழுவதும் காலம் காலமாக உள்ள மரபாகும். தாயாரின் கைப்பக்குவத்தில் அமைந்த உணவின் சுவையை அனுபவித்த எவர் ஒருவரும் வேறொருவரின் சமையலை விரும்ப மாட்டார்.

தாயாருடைய கைப்பக்குவம் மட்டுமின்றி அவரது அகத்தில் பொங்கித் ததும்புகின்ற தாய்ப்பாசமும் கலந்து பரிமாறப்படுகிற காரணத்தால் அந்த உணவே அமிர்தமாகிறது. அத்தகைய உணவு நமது உடலை மட்டும் வளர்க்காமல், உறவுகளிடையிலான பாசப்பிணைப்பையும் சேர்த்தே வளர்த்தது. கூட்டுக் குடும்பங்கள் செழித்தன.

உணவகங்களிலிருந்து உணவுப் பண்டங்களை வாங்கி, அவற்றை நமது வீட்டின் வாசலுக்கே கொண்டுவந்து கொடுக்கும் நிறுவனங்களின் சேவை உன்னதமானதுதான். அந்த நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுடைய வாழ்வாதாரமும் முக்கியமானதுதான். ஆனால், சமைத்து உண்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் அந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்.

அதே சமயம், அவரவர் வீடுகளிலேயே சமைத்துச் சாப்பிட முடியும் என்ற நிலையிலிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது உணவகங்களிலிருந்து வரவழைத்து உண்பது என்பது தேவையற்ற செலவுக்கு வழிவகுப்பதுடன், காலப்போக்கில் நம்முடைய குடும்ப உறவுகளிடையிலான பாசத்துக்கும் பிணைப்புக்கும் சேதாரத்தை உண்டாக்கக்கூடியது என்பதை நாம் அனைவரும் அவசியம் உணர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

Over 180 passengers travelling from Dubai to Kochi, stranded at Coimbatore airport



Over 180 passengers travelling from Dubai to Kochi, stranded at Coimbatore airport

The flight was scheduled to land in Kochi at 8:30 pm on Friday night, but weather conditions forced it to divert to Coimbatore airport, where it landed around 9:30 pm.


SpiceJet flight image used for representational purposes only.(File Photo | PTI)


Updated on:
17 Aug 2025, 7:46 am

COIMBATORE: Tension gripped Coimbatore airport late on Friday night after more than 180 passengers of a private airline, traveling from Dubai to Kochi, were stranded without proper arrangements for food, accommodation, and onward travel.

A SpiceJet flight from Dubai to Kochi, carrying 184 passengers, including children, women, and heart patients, departed from Dubai at 2:20 pm on Friday after a 55-minute delay. The flight was scheduled to land in Kochi at 8:30 pm on Friday night, but weather conditions forced it to divert to Coimbatore airport, where it landed around 9:30 pm.

The stranded passengers immediately sought help from airline staff, demanding basic amenities such as water, food, and transportation to Kochi. After a significant delay, the private airline arranged bus facilities only at 2:30 am on Saturday morning. However, many distressed passengers, according to sources, had already left for Kerala by hiring private vehicles.

"All 184 of us reached Dubai airport around 9 am on Friday, as our boarding time was 12:25 pm. The flight, which was supposed to depart at 1:25 pm, was delayed by an hour and was expected to reach Kochi by 8:30 pm. However, the cabin crew informed us that we were landing at Coimbatore due to adverse weather conditions, and we arrived around 9:30 pm. We were kept in the aircraft for about an hour, hoping the flight would immediately return to Kochi. An hour later, the crew informed us that they could not fly to Kochi as the weather had worsened and said they would arrange bus facilities for us to reach Kerala by road. However, they failed to make any such arrangements," said Resmi Printo, a freelance journalist from Kerala who works in the UAE.

"Upset with their response, the passengers began to question them, but the staff did not know what to do. After a heated argument, someone finally arranged two buses at 3 am. on Saturday, and about 50 people boarded them to get to Kerala. I reached my hometown, Athani in Thrissur, at 6.30 am. on Saturday, and those going to Kochi took even longer. The journey was incredibly difficult, as it took about 20 hours without proper food or a place to stay. Women, children, and heart patients had an even harder time. Only about one-third of the passengers used the buses. The rest left for Kerala by hiring private vehicles," Resmi added.

When questioned, a senior official stated the private airline had closed its office after it withdrew its services from Coimbatore and did not have staff there. The airline is currently establishing a new unit, hoping to resume service in a couple of months. The official explained that the lack of staff and proper links with hotels and other necessary services caused their failure to handle the passengers appropriately.

"We consistently insist that all flight operators arrange basic facilities for their passengers. In this case, they failed to do so," the officer said.

The flight departed for Kochi at 3pm on Saturday, a senior official at Coimbatore airport said.

NEWS TODAY 18.08.2025

 





























Sunday, August 17, 2025

NEWS TODAY 17.08.2025

 



















சொல்லப் போனால்... நாய் படும் பாடு! கடிக்குப் பயந்து தெரு நாய்கள் பராமரிப்பு திட்டமும் வயிற்றுக்கு உணவில்லா மக்களும்...



சொல்லப் போனால்... நாய் படும் பாடு! கடிக்குப் பயந்து தெரு நாய்கள் பராமரிப்பு திட்டமும் வயிற்றுக்கு உணவில்லா மக்களும்...

வரமா, சாபமா?

சித்திரிப்பு / விஜய்

எம். பாண்டியராஜன் Published on: 17 ஆகஸ்ட் 2025, 8:15 am 

நாடு விடுதலை பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைய நான்கு நாள்கள் இருக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவொன்று, நம் நாட்டிலுள்ள தெரு நாய்களின் மீதான வன்மத்தை ஒருபுறமும் வாஞ்சையை இன்னொருபுறமுமாகக் கொப்புளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தில்லியிலும் சுற்றியுள்ள புறநகர்களிலும் திரியும் தெருநாய்களை எட்டு வாரங்களுக்குள் பிடித்து நிரந்தரமாகப் பட்டியில் அடைக்க வேண்டும்; இதற்குத் தேவையான இடவசதிகளைச் செய்ய வேண்டும்; நிர்வாகம் எனக்கென்ன என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது என்றும் தில்லி அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உச்ச நீதிமன்றம் கறாராகக் குறிப்பிட்டிருக்கிறது.

தெருநாய்க் கடிக்குச் சிறார்களும் குழந்தைகளும் ஆளாவதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நீதிமன்றத்தின் முடிவை அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் வழிமொழிந்துள்ளார். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையிலும் ‘சென்டிமென்ட்’களுக்கு வேலையில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாய்களால் கடிபடுகின்றனர். நாட்டின் தலைநகர் தில்லியில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் நாய்களால் கடிபடுகின்றனர்.

வெறிநாய்க் கடியால் நேரிடும் ரேபிஸ் பாதிப்பு காரணமாக எண்ணற்றோர் மரணத்தையும் எதிர்கொள்கின்றனர். ஆனால், இவற்றுக்கெல்லாம் துல்லியமான கணக்கு வழக்கு எங்கேயும் இல்லை.

நம் அரசின் கணக்கின்படி 2022-ல் நாடு முழுவதும் நாய்க் கடியால் ரேபிஸ் தொற்றி நேரிட்ட மரணங்களின் எண்ணிக்கை 21 மட்டுமே. ஆனால், இந்த எண்ணிக்கை சரியானதாக இருக்க முடியாதென சின்னக் குழந்தைக்குக்கூடத் தெரியும். அரசுத் தரவுகளையும் பிற வட்டாரத் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, இதே 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ரேபிஸால் 305 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உள்ளபடியே இந்தியாவில் 2022-ல் ரேபிஸ் காரணமாக, 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் அதே அமைப்பு மதிப்பிடுகிறது.

நமக்குக் கிடைக்கிற கால்நடைகள் துறை அமைச்சகத் தகவல்களின்படி, 2022, 2023, 2024 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிரத்தில் 13.5 லட்சம் பேர் நாய்க்கடி பட்டிருக்கின்றனர். இரண்டாமிடம் தமிழ்நாட்டுக்கு – 12.9 லட்சம்! நாடு முழுவதுமாக இந்த மூன்றாண்டுகளில் 89.5 லட்சம் பேர் நாய்களால் கடிபட்டிருக்கின்றனர் (ஆனால், ரேபிஸ் பலி – 125!).

தெருநாய்களின் எண்ணிக்கை (2019 ஆம் ஆண்டுக் கணக்கு) உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகம் – 20.6 லட்சம். ஒடிசா – 17.3 லட்சம், மகாராஷ்டிரம் – 12.8 லட்சம். நல்லவேளையாக இந்தப் பட்டியலில் முதல் ஐந்து இடத்துக்குள் தமிழ்நாடு இடம் பெறவில்லை.

ஆனால், உண்மையான எண்ணிக்கை என்பது நிச்சயமாக இதைவிட எவ்வளவோ, எத்தனையோ மடங்கு அதிகமாகத்தான் இருக்கும்!

கடைசியாக 2019-ல்தான் நாடு தழுவிய அளவில் விலங்குகள் கணக்கெடுப்பு நடந்திருக்கிறது. இப்போது 2025. ஆறு ஆண்டுகள் தாண்டிவிட்டன. தெருநாய்களின் எண்ணிக்கை எவ்வளவு பெருகியிருக்கும்?

2019 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை 4.4 லட்சம்தான். ஆனால், அதே ஆண்டு மாநிலத்தில் 8.3 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆக, ஒவ்வொரு நாயும் குறைந்தபட்சம் இரண்டு பேரைக் கடித்திருக்க வேண்டும்! இப்படித்தான் இருக்கிறது நம் வசமுள்ள புள்ளிவிவரங்கள் யாவும்!

[தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டின் கடந்த ஏழரை மாதங்களில் மட்டுமே 3.67 லட்சம் பேர் நாய்க்கடி பட்டிருக்கின்றனர்; 20 பேர் பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்று அரசு மக்கள் நல்வாழ்வுத் துறையே அறிவித்திருக்கிறது. இதை ஒரு மாதிரியாகக் கொண்டால் பிற தரவுகளையும் மேம்படுத்திக் கொள்ளலாம்]

இப்படியாகப்பட்ட நிலையில், ஒரு கணக்கிற்காக எடுத்துக்கொண்டால் வேர்ல்ட்அட்லஸ் மற்றும் அரசுத் தகவல்களின்படி, இந்தியாவில் 1.53 கோடி தெருநாய்கள் இருக்கின்றன. அதாவது, மக்கள்தொகையில் நூறு பேருக்கு ஒரு நாய் என்பதைவிட சற்று அதிக எண்ணிக்கையில்!

உச்ச நீதிமன்றம் சொன்னபடியே, தெருநாய்களை எல்லாம் பிடித்துப் பட்டியில் அடைப்பது, பராமரிப்பது என்று முடிவு செய்து செயற்படுத்தினால், நல்லது, தில்லிக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்? அனைத்து மாநகரங்களிலும் ஏன், மாநிலங்களிலும் அதே திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்தானே? நாட்டின் எல்லா பகுதிகளிலும் வசிப்பவர்கள் மக்கள்தானே? எல்லாருடைய உயிர்களும் காக்கப்பட வேண்டியவைதானே?

ஆனால், இந்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் 2023 ஆம் ஆண்டு விலங்குகள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகள், 1960 ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் போன்றவை காட்டும் வழிமுறைகளுக்கும் நிறைய முரண்கள் இருக்கின்றன. இவை தொடர்பான எதையும் அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில், உலகில் வாழும் உரிமை, மனிதர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுவிடவில்லை; எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது. மனிதர்கள் என்பதால் மற்ற உயிர்களையெல்லாம் அழித்தொழித்துவிட முடியாது; அவ்வாறு அழித்தொழிக்கவும் கூடாது.

நாய்களா, மக்களா என்று வந்தால் சந்தேகமே இல்லாமல் பெரும்பாலான மக்கள் எல்லாருமே மக்கள் பக்கம்தான் இருப்பார்கள். ஆனால், அதேவேளையில் நாய்களைக் கொன்றுதான் மக்களா என்றால் நிச்சயம் யோசிக்கத்தான் செய்வார்கள்.

ஆக, தீவிரமாகச் சிந்தித்து, எல்லாருமாக விவாதித்து, இந்தத் தெருநாய்கள் விஷயத்தில் எல்லாரும் ஒப்புக்கொள்ளக் கூடிய முடிவுகளை எட்ட இதையொரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் (அதென்ன, தெருநாய்கள்? சென்னையில் பல நேரங்களில் வளர்க்கிற நாய்கள் கடித்தும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே!).

தெருநாய்களை அப்புறப்படுத்துவதைப் பலரும் ஒப்புக்கொண்டாலும்கூட, எப்படி, என்ன செய்யப் போகிறார்கள் என்பதில் தொடங்கி, என்ன செய்ய முடியும் என்பது வரை ஒருகணம் சிந்தித்துப் பார்த்தால் தலைசுற்றிவிடும் என்பதில் வியப்பில்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தில்லியிலிருந்து நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தும்பட்சத்தில், நீதிமன்றம் சொல்கிறபடி, நாட்டிலுள்ள ஒன்றரை கோடி (உத்தேசமாகத்தான்) நாய்களை எங்கே கொண்டுசென்று அடைத்து வைப்பார்கள்? உணவுக்காக அவற்றுக்கு எவ்வளவு செலவழிப்பார்கள்? யார் செலவழிப்பார்கள்? எங்கிருந்து செலவழிப்பார்கள்? இவற்றுக்கெல்லாம் நாடு முழுவதும் எவ்வளவு பணியாளர்கள் இருப்பார்கள்? இந்த நாய்களுக்கு நலக் குறைவு ஏற்பட்டால்? இவற்றுக்குள்ளேயே ரேபிஸ் பரவினால்... (ஒருவேளை நல வாரியம் போல ஏதேனும் அமைப்பார்களோ?).

இப்படியே இந்த நாய்கள் விஷயத்தை மட்டுமே ஆழ ஆழ, மூழ்கி மூழ்கிப் போய் யோசித்துக்கொண்டே சென்றால், அடடா, என்னவாகக் கற்பனை வளம் ஊற்றெடுத்து பொங்கி அருவியெனப் பிரவகிக்கிறது? என்னென்ன அற்புதமான யோசனைகள் எல்லாம் வெளிப்படுகின்றன?

பிகாரில் சிறப்பு முனைப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், தேர்தல் ஆணையத்தின் மீதான வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகள், எத்தனால் கலப்பட பெட்ரோல், டிரம்ப்பின் அதிரடி வரியும் அரசின் அடக்கிவாசிப்பும், ராணுவ விமான வீழ்ச்சி எண்களும், பயங்கரவாதமும் ஆபரேஷன் சிந்தூரும்... என எத்தனையோ பேசப்பட வேண்டிய பிரச்சினைகள் வரிசைகட்டிக் கொண்டிருக்க, கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கெழவியைத் தூக்கி மனையில் வை என்கிற மாதிரி, இப்போது தெருநாய்களைப் பற்றி நாடே இரண்டுபட்டு விலாவாரியாக விவாதித்துக் கொண்டிருக்கிறது.

நாய்க் கடியிலிருந்து மக்களைக் காக்க நாய்களைப் பிடித்துப் பட்டியில் அடைப்பதும் உணவளிப்பதும் தங்குமிடங்கள் உருவாக்குவதும் பராமரிப்பதும் என எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது; என்ன, அப்படியே கொஞ்சம் புதுமைப்பித்தன் சொன்ன மாதிரி இந்த அரிசி உணவு தின்னும் பிராணிகளைப் பற்றியும் விசேஷ அக்கறை எடுத்துக்கொண்டு தானாக முன்வந்து ஏதாவது விசாரணை நடத்தி, உண்ண உணவுக்கும் இருக்க இடத்துக்கும் நல்ல விமோசனத்தை ஏற்படுத்தித் தாருங்கள் யுவர் ஹானர்.


NEWS TODAY 17.08.2025










 

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished On 15 Feb 2026 11:00 AM  |  Updated On 15 Feb 2026 11:00 AM New Delhi: The Union Ministry of Health and Family Welfare has informed the Lok Sabha that India currently has a total of 818 medical colleges, including AIIMS and Institutes of National Importance (INIS) across India. The details were shared in response to an Unstarred Question on February 6, 2026. Replying to queries raised by Shri Jagannath Sarkar regarding districts without government medical colleges and plans for prioritising high-population districts, Minister of State for Health and Family Welfare Shri Prataprao Jadhav said that the National Medical Commission (NMC) has reported a total of 818 medical colleges nationwide. Also Read: 18 AIIMS Functional, 4 Under Construction: Health Minister tells Parliament As per the list shared in this regard, Uttar Pradesh has the highest number of medical colleges at 88 (51 government and 37 private), followed by Maharashtra with 85 (43 government and 42 private), and Tamil Nadu with 78 colleges (38 government, 40 private). Karnataka has 72 (24 government and 48 private), Telangana has 66 (37 government, 29 private), and Rajasthan has 49 (34 government, 15 private). However, several smaller States and UTs, such as Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Chandigarh, Goa, Mizoram, Nagaland and Sikkim have only one medical college each.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished O...