Monday, September 1, 2025

NEWS TODAY 01.09.2025

 











Guidewire in patient’s chest: Doc booked for med negligence


Guidewire in patient’s chest: Doc booked for med negligence

Aug 31, 2025, 0:12 AM

Thiruvananthapuram: Cantonment police on Saturday registered a case against Dr Rajeev Kumar attached to the General Hospital on charges of medical negligence over the incident in which a guidewire was left in the chest of a woman following surgery. The case was registered on the complaint given by Sumaya, 26, of Rasiya Manzil at Tholikkottukonam near Kulathummal. The doctor was booked under sections of IPC 336 for an act that endangers human life or personal safety of others and 338 for a negligent act that endangers human life or causes grievous hurt to any person.

However, Cantonment police said that the probe team has only a limited role in cases of medical negligence and the expert opinion of a medical board is a must to proceed further. "A request will be given to the district medical officer to form a panel of experts to study the case and to submit a report. We may ask for clarifications and a final medical report will be submitted before the court. Meanwhile, the probe team will collect maximum evidence such as the details of the treatment, fee paid, CCTV visuals, call and chat details, etc.," police said. In the FIR, the doctor is accused of medical negligence in the surgery which was done on March 22, 2023. 

Sumaya went to the doctor in Feb 2023 with throat pain and the doctor recommended surgery. The FIR blames the imprudence and negligence of the doctor for the post-surgery complications as the woman was unable to talk and faced breathing difficulty. In the X-ray, a guidewire was spotted inside her chest. A year after the surgery, Sumaya began experiencing physical difficulties and it was during the examination at other hospitals that the guidewire was spotted. The health department formed an expert committee to probe the incident. 

Initially, Dr Rajeev was not ready to accept the error and pointed out that those who inserted the medication tube were responsible. However, he later admitted to the error in a telephonic conversation with a relative of Sumaya. He had also provided her financial assistance for specialized treatment. The voice clip of the doctor and details of the money given by him to the patient for specialized treatment were released by the patient's relatives.

முடியும் என்றால் முடியும்!


முடியும் என்றால் முடியும்!

சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்.

சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும். ஏனெனில், சென்னையின் கட்டமைப்பு, சுற்றுப்புற சுகாதாரம், மாநகர நிர்வாக ஆளுமையை வைத்துத்தான் தமிழகத்தை எடை போடுவார்கள்.

சிங்கப்பூர் தூய்மையான நாடு என்று போற்றப்படுவதற்குக் காரணம் சுற்றுப்புற சுகாதார விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுவதால்தான். சிங்கப்பூரில் விதிகளைக் கடைப்பிடித்து சென்னை வந்தவுடன் ஆசை தீர துப்பவும், குப்பைகளைப் போடவும் செய்வான் சென்னைவாசி என்று வேடிக்கையாக சொல்வார்கள். இது வேதனையான நிலை. சிங்கார சென்னை என்ற இலக்கு வைத்தாலும், சுற்றுச் சூழலைப் பேணுவதில் தொடர்ச்சியாக பின்தங்கிய நகரமாகவே இருக்கிறது.

இந்தியாவின் நகர்ப்புற நிலப்பரப்பு கழிவு மேலாண்மை நடைமுறைகளில் ஒரு கூர்மையான இருவேறுபாடுகளைக் காணமுடிகிறது. சில நகரங்கள் தூய்மை, செயல்திறனின் மாதிரிகளாக மாறிவிட்டாலும், மற்றவை தொடர்ந்து அதிகரித்துவரும் கழிவு மேலாண்மை சவால்களை எதிர்கொள்கின்றன.

இந்தியா ஆண்டுதோறும் தோராயமாக 62 மில்லியன் டன் நகராட்சி திடக்கழிவுகளை உருவாக்குகிறது. இந்த கழிவுச் சுமையில் நகர்ப்புறங்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. சேகரிப்பு மற்றும் சுத்தி

கரிப்பு புள்ளிவிவரங்கள் நாட்டின் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க இடைவெளிகளை வெளிப்படுத்துகின்றன. சமீபத்திய தரவுகளின்படி, உருவாக்கப்படும் மொத்தக் கழிவுகளில் சுமார் 4.3 கோடி டன் (70%) மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 1.2 கோடி டன் மட்டுமே சுத்திகரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் 3.1 கோடி டன் முறையான செயலாக்கம் இல்லாமல் குப்பைக் கிடங்குகளில் முடிகின்றன. இது சுகாதார சீர்கேட்டுக்கு ஒரு முக்கியக் காரணி.

இந்திய நகரங்களில் உள்ள கழிவுகளின் கலவை பொதுவாக 40-60% கரிமக் கழிவுகளையும், 10}30% காகிதம், பிளாஸ்டிக் மற்றும் உலோகங்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களையும், மீதமுள்ளவை கட்டுமானக் குப்பைகள் மற்றும் அபாயகரமான பொருள்களையும் உள்ளடக்கியது. பயனுள்ள கழிவு மேலாண்மை உத்திகளைச் செயல்படுத்தினால் நகரம் தூய்மையாகும். இதுதான் மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரம் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக "தூய்மையான நகரம்' என்று தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணம். இந்தூர் நகராட்சி 2016-ஆம் ஆண்டு தொடங்கி அதன் கழிவு மேலாண்மை முறையை முழுமையாக மாற்றியமைத்தது. இந்த மாற்றம் 100% வீடுவீடாகச் சென்று கழிவு சேகரிப்பை நிறுவுவதன் மூலம் தொடங்கியது. இந்த அடிப்படை நடவடிக்கை குடியிருப்பாளர்கள் திறந்தவெளிகள் அல்லது நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டும் நடைமுறையை நீக்கியது.

மேலும், இந்தூர் நகர நிர்வாகம் கழிவு பதப்படுத்தும் உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்தது. பல கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டன. வீடுகளிலிருந்து குப்பைகளை ஈரமான மற்றும் உலர்ந்த கழிவுகளைப் பிரித்து அகற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் மக்கும் குப்பைகளைப் பதப்படுத்தி எருவாக்கலாம். எஞ்சியவற்றை மறு சுழற்சிக்கும் மறு பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம்.

இந்தச் செயலாக்க செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் உத்தியை இந்தூர் நகராட்சி திறமையாகக் கையாண்டது.ஜிபிஎஸ்-இயக்கப்பட்ட கழிவு சேகரிப்பு வாகனங்கள், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் குடிமக்கள் புகார் தீர்வு தளங்கள் மூலம் கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தூர் முன்னோடியாக உள்ளது. கழிவுகளிலிருந்து எரிசக்தி ஆலைகள் மற்றும் உரம் தயாரிக்கும் வசதிகள் போன்ற புதுமையான தீர்வுகளையும் அறிமுகப்படுத்தியது.

இந்தூர் வெற்றியின் முக்கியமான அம்சம் சமூக ஈடுபாடு. நகர நிர்வாகம் விரிவான விழிப்புணர்வு பிரசாரங்களைத் தொடங்கியது. குடியிருப்பாளர்களுக்கு பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், கழிவு மேலாண்மை நடவடிக்கைகளைக் கண்காணித்து ஆதரிக்க வார்டு அளவிலான குழுக்கள் நிறுவப்பட்டன.

ஊக்கத்தொகைகள் மற்றும் அபராதங்கள் முறையைச் செயல்படுத்தியும், அதே வேளையில் இணக்கமான குடிமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வெகுமதி அளித்தது. கழிவு மேலாண்மையை அரசாங்கப் பொறுப்பாக இல்லாமல் சமூக முன்னுரிமையாக மாற்றியது.

சமீபத்திய "ஸ்வச் சர்வேக்ஷன் 2024}25' தரவரிசைப்படி, தமிழ்நாட்டின் நகர்ப்புற மையங்கள் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன. 10 லட்சத்துக்கும்

அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மதுரை மிகவும் அழுக்கான நகரமாகவும், அதே பிரிவில் சென்னை மூன்றாவது இடத்திலும் உள்ளது.

சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன் கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80}100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளைப் பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.

வீடுகளில் 79% மூலப் பிரிப்பு இருந்தாலும், சேகரிப்பு புள்ளிவிவரங்களுக்கும் உண்மையான தூய்மை விளைவுகளுக்கும் இடையிலான இடைவெளி, கழிவு பதப்படுத்துதல், சுத்திகரிப்பு மற்றும் இறுதி அகற்றலில் உள்ளசிக்கல்களைக் குறிக்கிறது.

சென்னையுடன் ஒப்பிடும்போது மதுரை சிறிய நகரமாக இருந்தாலும், ஒரு முக்கிய யாத்திரை மற்றும் சுற்றுலாத் தலமாக தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது.

இரண்டு நகரங்களிலும் பல நிறுவனங்கள் பெரும்பாலும் கழிவு மேலாண்மையின் பல்வேறு அம்சங்களுக்கு பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றன. இவை ஒருங்கிணைப்பு சவால்கள் மற்றும் பொறுப்புக்கூறல் இடைவெளிகளை உருவாக்குகின்றன.

தமிழ்நாட்டில் முற்போக்கான கழிவு மேலாண்மைக் கொள்கைகள் காகிதத்தில் இருந்தாலும், போதுமான கண்காணிப்பு, போதுமான வளங்கள் இல்லாதது மற்றும் பலவீனமான அமலாக்க வழிமுறைகள் காரணமாக தரைமட்ட செயல்படுத்துதல் பெரும்பாலும் சவாலாக உள்ளது. கழிவுப் பொருள் மேலாண்மையில் மறு சுழற்சி மக்கும் மறு பயன்பாடு முக்கியமான அங்கமாகும். நெகிழி எங்கும் வியாபித்திருக்கிறது; கழிவுப் பொருளாக தேங்குகிறது.

சாலைகளைச் செப்பனிடுகையில் "பிடுமென்' கலவையோடு நெகிழியைச் சேர்த்து ஒரு வெப்பநிலை அடையும் வகையில் காய்ச்சி நிரவினால் சாலை கெட்டியாக இருக்கும்; நெகிழிச் சேர்க்கையால் தண்ணீர் இறங்காது; சாலை பாதுகாக்கப்படும் என்று தியாகராஜா பொறியியல் கல்லூரியின் விஞ்ஞானி வாசுதேவன் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததை வெளியிட்டார். அதற்கு அவருக்கு பத்மஸ்ரீ விருது 2018}இல் கிடைத்தது. அந்தக்கண்டுபிடிப்பின் அடிப்படையில்

சென்னையில் சாலைகள் சீரமைக்கப்பட்டன. கழிவாகப் பெருகும் நெகிழிப் பிரச்னைக்கு இது ஒரு தீர்வு. ஆனால், தொடர்ந்து இந்த முயற்சி எடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி!

புணே நகரில் ஜே.எம். சாலை1972-இல் ரெகாண்டோ ஒப்பந்த நிறுவனத்தால் போடப்பட்டு 50 ஆண்டுகளாகியும் உறுதியாக உள்ளது. அவர்களும் அதிக வெப்பக் கலவை தொழில்நுட்பத்தை பிரயோகித்து வெற்றி கண்டார்கள். ஆனால், அவர்களுக்கு அதற்குப் பிறகு சாலை செப்பனிட ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. நெகிழி சேர்ந்த கலவையோடு சாலை செப்பனிடும் தொழில்நுட்பமும் மறைந்து விட்டது.

போதுமான கழிவு பதப்படுத்தும் உள்கட்டமைப்பு இரு நகரங்களுக்கும் ஒரு முக்கியமான தடையாக உள்ளது. போதுமான சுத்திகரிப்பு வசதிகள், உரம் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் கழிவுகளில் இருந்து எரிசக்தி நிறுவல்கள் இல்லாததால், சேகரிக்கப்பட்ட கழிவுகளில் பெரும்பாலானவை திறந்தவெளிக் குப்பைகள் அல்லது மோசமாக நிர்வகிக்கப்படும் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில் முடிவடைகின்றன.

சென்னை மந்தைவெளி பகுதியில் ஒரு குடியிருப்பின் பெயர் குப்பைமேடு! திறந்தவெளி குப்பைக் காடாக இருந்ததால் இந்த பெயர் நிலைத்துவிட்டது. இது சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பொது சுகாதார அபாயங்களுக்கு வித்திடுகிறது. சென்னை ஹாரிங்டன் சாலை, அண்ணாமலைபுரம் குடியிருப்பு சங்கம், அதே பகுதியில் திருவீதியம்மன் குடியிருப்புகளில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இணைந்து குப்பையில்லா சூழலை உருவாக்கி மாநகராட்சியின் விருதும் பெற்றுள்ளனர். இந்த முயற்சி மற்ற பகுதிகளிலும் சமூக ஈடுபாட்டை வலியுறுத்தும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த இரு நகரங்களிலும் தெருவோர சிற்றுண்டிக் கடைகள் புற்றீசல்போல் பெருகி விட்டன. அந்தக் கடைகளிலிருந்து வரும் கழிவுகள் தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் குவிகின்றன. இஷ்டப்படி சிறுநீர், மலம் கழிப்பது

லஜ்ஜையே இல்லாத ஒரு கலாசாரமாகவே வளர்ந்துவிட்டது. பொதுக் கழிப்பிடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை. இவையெல்லாம் நகரின் கழிவு மேலாண்மையைப் பாதிக்கிறது.

சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கு விரிவான சீர்திருத்தங்கள் தேவை. இதில் தெளிவான பொறுப்புக்கூறல்

வழிமுறைகளை நிறுவுதல், போதுமான உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல்மற்றும் வலுவான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அமைப்புகளைச் செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும். தமிழ்நாட்டின் நிர்வாக கட்டமைப்பு வலுவானது. திறமையான அதிகாரிகள் அரசுப் பணியாளர்கள் உள்ளனர்.

அவர்கள் முனைப்பாகச் செயல்பட்டால் தூய்மையான, பசுமையான மாசற்ற மாநகரை உருவாக்க முடியும். குப்பைகளுக்கு முடிவு கட்ட வேண்டியது நமது பொறுப்பும்; முடியும் என்றால் நிச்சயமாக முடியும்.

கட்டுரையாளர்:

முன்னாள் காவல் துறைத் தலைவர்.

உறவுகளைப் போற்றுவோம்!

உறவுகளைப் போற்றுவோம்!

முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்

இன்றைய சமூகத்தில் மிகவும் முக்கியமான விவாதங்களில் ஒன்று, திருமணம் எனும் அமைப்பின் தற்காலப் பொருத்தப்பாடு குறித்ததாகும். பாரம்பரிய மதிப்பீடுகளுக்கும் நவீன சிந்தனைகளுக்கும் இடையே நிகழும் இந்த உரையாடலின் மையத்தில், இல்லறம் என்பது தனிமனித வாழ்வின் ஓர் அங்கமாக மட்டுமின்றி, சமூகத்தின் ஆணிவேராகவும் திகழ்கிறது என்ற பேருண்மை அடங்கியுள்ளது.

அண்மையில் ஒரு புதுமணத் தம்பதியருக்கான நிகழ்வில், இந்தச் சிந்தனைகளுக்கு ஒரு மிகச் சிறந்த தொடக்கத்தை வழங்கியது. அங்கே, கணவர் தன் மனைவிக்கு ஒரு மலரை வழங்கி, "இந்த மலரின் மென்மை குணம் கொண்டவளே, நீ என் வாழ்வில் இணைந்தது நான் பெற்ற பேறு. உன்னை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன்' என்றார். அவரது வார்த்தைகளில் அப்பட்டமான நேர்மையும், ஆழ்ந்த அன்பும் வெளிப்பட்டன.

அதற்குப் பதிலாக, அந்தப் பெண்மணி தன் கணவருக்கு ஒரு கனியை அளித்து, "கனியைப் போன்ற கனிவான மனம் கொண்டவரே, என்னை இந்தக் குடும்பத்தில் ஏற்று, என் தனித்துவத்தை மலரச் செய்து, சுவைமிக்க ஒரு வாழ்க்கையை வழங்கியிருக்கிறீர்கள். இந்தக் கனியின் வித்து, செடியாகி, பூத்து, காய்த்து, மீண்டும் கனிவதுபோல், நம் உறவும் தழைக்கட்டும்" என்று நன்றியுரைத்தார். வெறும் சடங்காக அல்லாமல், ஓர் ஆழமான மன இணைப்பின் தொடக்கமாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.

இத்தகைய நிகழ்வுகள், தம்பதியரிடையே பிணைப்பை வலுப்படுத்துவதோடு, குடும்பம் எனும் அமைப்பின் சமூகப் பங்களிப்பையும் நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த அன்பும், உறுதியும் பல்லாயிரம் ஆண்டுகளாகவே தமிழர்களின் வாழ்வியலில் ஊறிப்போயிருக்கிறது.

இந்தியாவின் பன்முகப் பண்பாட்டில், திருமணங்கள் இரு குடும்பங்களையும் சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பெருவிழாவாகவே கொண்டாடப்படுகின்றன. 2024-ஆம் ஆண்டின் "ஸ்டாடிஸ்டா' ஆய்வு முடிவுகளின்படி, 85 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியர்கள் திருமணத்தை வாழ்வின் முக்கிய நிகழ்வாகக் கருதினாலும், அதன் அணுகுமுறைகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

இன்றைய தலைமுறை சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையே ஓர் உறவில் அதிகம் எதிர்பார்க்கிறது.

ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் தரவுகளின்படி, 2011-2021-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை 13.5%-லிருந்து 19.9%-ஆக உயர்ந்திருப்பது, இந்தச் சிந்தனை மாற்றத்தின் தெளிவான பிரதிபலிப்பு. இந்த மாற்றம், துணை என்ற கருத்துக்கோ, அன்புக்கோ எதிரானது அல்ல; மாறாக சமத்துவமும், மன இணைவும் கொண்ட ஓர் உறவை நோக்கிய தேடலின் வெளிப்பாடே ஆகும்.

இந்த மாற்றத்தின் மையத்தில் இருப்பது "தன்முனைப்பு' (ஈகோ) அல்ல; "தன்னிலை உணர்தல்' (செல்ப் ரியலை சேஷன்) என்ற ஆழமான தேடல்தான். "கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும்', "மனைவி இப்படித்தான் நடக்க வேண்டும்' என்று சமூகம் நமக்குள் விதைத்திருக்கும் சுயபிம்பங்களை ("நான்' என்ற எண்ணத்தை) நாம் பரந்த பார்வையுடன் கேள்விக்குட்படுத்தும்போது, அங்கே "நான்' என்பது விலகி 'நாம்' என்பது விடையாகக் கிடைக்கிறது. ஆனால், தனது அடையாளத்தையே

இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், மனம் இந்த மாற்றத்தை ஏற்கத் தயங்குகிறது.

உலக சராசரியுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விவாகரத்து விகிதம் குறைவாக இருப்பினும், அண்மைக்காலங்களில் நீதிமன்றங்களில் பதியப்படும் குடும்பநல வழக்குகள் அதிகரித்துள்ளன. இது, உறவுகளில் நிலவும் எதிர்பார்ப்புகளுக்கும் எதார்த்தத்துக்கும் இடையேயான இடைவெளியைச் சுட்டுகிறது. வரனின் சொத்து மதிப்புக்கும், வருமானத்துக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம், திருமணத்தை ஒரு வணிக ஒப்பந்தமாகச் சுருக்கும் அபாயமும் உள்ளது.

மேலும், பொருளாதார அழுத்தங்கள், விண்ணை முட்டும் வாடகை, விலைவாசி உயர்வு போன்றவை இளையோர்களின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக, சிலர் திருமணத்துக்கு மாற்றாக இணைந்து வாழும் உறவுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இத்தகைய உறவுகளில் பரஸ்பர நேர்மையும், தெளிவான நோக்கங்களும் இருக்குமா என்று கேள்வி எழுகிறது. ஒருவரின் உணர்வும் மற்றவரின் தேவையும் வேறுபடும்போது, அது ஏமாற்றத்தில் முடிய வாய்ப்புள்ளது.

ஒரு செம்மையான இல்லறத்தைக் கட்டமைக்க, "நான்' என்ற சுயபிம்பத்தைக் கடந்து, "நாம்' என்ற புரிதலுக்கு இரு துணைகளும் வரவேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையில் இல்லறத்தைக் கட்டமைக்கும்போது, பல அம்சங்கள் இயல்பாகவே மலரும். எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும், வலுவான குடும்ப அமைப்பேசமூகத்தின் உயிர்நாடியாகத் திகழ்கிறது.

எனவே, பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் எதிரெதிர் துருவங்களாகப் பார்க்காமல், இரண்டின் சிறந்த கூறுகளையும் இணைக்கும் ஒரு புதிய பாலத்தையே நாம் உருவாக்க வேண்டும். இந்தப் புரிதலுக்குச் சிறந்த வழிகாட்டியாக, வேதாத்ரி மகரிஷியின் தத்துவம் அமைகிறது. அவர், இல்லறத்தை வெறும் உறவாகப் பார்க்காமல், "இரு உயிர்கள் இணைந்து செய்யும் தவ வாழ்வு' என்று குறிப்பிடுகிறார். இது, கணவன்-மனைவி இருவரும் தனித்தனியான விருப்பு-வெறுப்புகளைக் கடந்து, ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, தங்கள் வாழ்வில் மட்டுமல்லாமல், சமூகத்தின் உயர்வுக்கும் பாடுபட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

திருமண பந்தத்தின் உண்மையான வெற்றி, தனிநபர் சாதனைகளில் இல்லை; அது ஓர் உன்னதமான கூட்டுப் பயணத்தின் அழகியலில் இருக்கிறது என்பதை உணர்வதே இன்றைய காலத்தின் தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

Tamil Nadu government prohibits suspension of staff on retirement day


Tamil Nadu government prohibits suspension of staff on retirement day

A recent instance for this happened on the last day of service of former Anna University vice chancellor R Velraj on July 31.





Updated on:

31 Aug 2025, 9:46 am

CHENNAI: The state Human Resource Management department has issued fresh directives prohibiting suspension of government employees on the day of their retirement, while introducing a structured and transparent framework to deal with pending disciplinary and judicial proceedings.

CM M K Stalin had announced in the Assembly on September 7, 2021, that “government employees will not be suspended on the day of their retirement”. The order, which was issued on Friday to bring the announcement to effect, amended the rules, which earlier did not permit the employees to retire, if they were under suspension on allegations of misconduct, or for facing a complaint of criminal offence that is under investigation or trial.

Consequently, many employees facing such charges were suspended on their last day of service to prevent them from retiring, which came under criticism, even from the Madras HC on many occasions.

A recent instance for this happened on the last day of service of former Anna University vice chancellor R Velraj on July 31.

The order makes clear that staff who were under suspension and retained in service on their superannuation date will now be deemed retired, with proceedings continuing under relevant rules.

Sunday, August 31, 2025

NEWS TODAY 31.08.2025

 




















Photocopying docs in this MP village? Pay ₹2,000 per page

Photocopying docs in this MP village? Pay ₹2,000 per page 

TIMES NEWS NETWORK 31.08.2025

Bhopal : What could be the cost of photocopying one page -Rs 5 ? And, cost of a single brick – Rs 5 ? If you were in Shahdol, a backward tribal district in MP, you might have to shell out Rs 2,000 for every page to get photocopied and pay Rs 50 for every brick you buy. 

While a village panchayat in Shahdol district has claimed to be have paid Rs 4,000 as photocopy charges for two pages, another panchayat paid Rs 1,25,000 for just 2,500 bricks. In Madhya Pradesh, funds for village panchayats come from both the Centre and state govt. These allocations move from the state treasury to district panchayats, then to “janpad panchayats” (headquarter of a clutch of villages), and finally reach gram panchayats. 

Apart from this, gram panchayats receive money under the Centre-sponsored schemes like MGNREGA and PMAY, along with small revenues from local taxes and fees, said sources, adding that after all, it is all taxpayers’ money. When photocopy bills, incurred by the Kudri gram panchayat in Shahdol district – copies of which are with TOI – surfaced on social media, the amount spent sparked an outrage.

The bills were signed by the sarpanch and panchayat secretary.A probe by Shivani Jain, CEO of Jaisinghnagar janpad panchayat – under which Kudri gram panchayat falls, however, concluded that the bills look “inflated” as a result of negligence in filling up the amount and number of pages photocopied. “While the actual number of pages photocopied was 2,000 – at the rate of Rs 2 per page – the person filling the form wrote two pages at the rate of Rs 2,000 per page,” the report said.

 “It is a case of negligence on the secretary’s part — he should have checked the bills before uploading. I will be recommending action against him in my report,” Jain told TOI. Similarly, in Bhatia village panchayat under Budhar janpad panchayat, a bill went viral showing Rs 1.25 lakh approved for procuring 2,500 bricks, a rate 10 times higher than the market price. The cost of each brick varies from Rs 5 to Rs 15 depending on the quality. The controversy deepened as images of the documents circulated online. But the probe ordered by the district collector and conducted by SDM Amrita Garg pointed to an error in documentation. “It is a case of clerical error. If the bill is studied carefullt, the rate is mentioned as Rs 5 per piece and quantity as 2,500, whereas the total is shown as Rs 1.25 lakh. 



Actually, instead of 25,000 bricks, 2,500 got written. The bricks were purchased for construction of an anganwadi, and physical verification with engineers confirmed 25,000 bricks at Rs 5 each. “Cash book entries also reflect the same. Thus, it was a clerical error that went viral,” Garg told TOI . These cases follow a series of irregularities that repeatedly put Shahdol in the limelight. In May, bills worth nearly Rs 85,000 for dry fruits, milk and snacks were passed for a choupal under the Jal Ganga Samvardhan Mission in Bhadwahi village. The event, attended by about two dozen people including senior officials, showed purchases of six kg cashew, three kg each of raisins and almonds, nine kg of fruit and 30 kg of snacks for a meeting that lasted barely an hour. 

Earlier, a school whitewashing exercise was billed as employing 168 labourers and 68 masons despite using only four litres of paint. In another case, 20 litres of paint was shown to require 275 workers and 150 masons.

NEWS TODAY 18.12.2025