Tuesday, October 7, 2025

NEWS TODAY 07.10.2025

 





























Honest public servants should be protected from ‘unwarranted frivolous prosecution’, says court

Honest public servants should be protected from ‘unwarranted frivolous prosecution’, says court

COURTS STRESS ON SHIELD FOR THE HONEST, CENSURE FLAWED  PROBES

 Vineet.Upadhyay@timesofindia.com 07.10.2025

New Delhi : Observing that courts must protect honest public servants from “unwarranted frivolous prosecution”, a court acquitted one Ashutosh Vasant, a former director of a PSU, in a corruption case. There are officers who give their life and soul to build the institutions they work for, and therefore, such a lopsided approach needs to be discouraged, Special Judge Sunena Sharma stated on Sept 25. 

The court said it appeared that CBI wanted us to see a ghost where there was none and Vasant, when he was at the peak of his career, fell prey to unfulfilled ambitions of some of his disgruntled colleagues who started considering him as a stumbling block to their career ambitions. “Though the case is ending up in acquittal, the damage suffered by the accused on account of the allegations raised in this case is enormous, and unfortunately, in this entire process, the career of the accused got stalled, jeopardised and ruined,” said the court. In 2019, CBI booked Railtel director Vasant and two firms for alleged misconduct in officials’ travel to the United States in 2012. Railtel, a public sector company, runs a nationwide broadband, telecom, and multimedia network to modernise train control operation and safety systems of Indian Railways. According to the prosecution, Vasant travelled by economy class and raised a bill for business class. He allegedly did not produce any journey documents to hide the cheating committed by him in the purchase of tickets. 

The prosecution alleged that on the recommendation of Vasant and two other officials, Railtel selected the consortium of two companies—United Telecom Limited and Infinera — which were alleged to be non-compliant vendors, for the tender of dense wave division multiplexing technology. The judge did not find any cogent or credible evidence on record to support the prosecution case that the accused received Rs 2,06,500 in cash as wrongful gain or pecuniary advantage from a travel agency as a refund of the residual amount of his business class ticket and caused a corresponding loss to the govt exchequer. 

The court said a mere suspicion or an erroneous administrative decision (act or omission) taken in good faith cannot be transformed into a corruption charge in the absence of clear evidence of any pecuniary advantage. Highlighting that undoubtedly, a “zero tolerance” policy against corruption is the need of the hour to uphold ethical governance, the court said any investigation or trial should not start with a preconceived notion that all public servants are corrupt or dishonest

Huge influx of devotees raises risk of stampede on Tiruvannamalai girivalam path in TN


Huge influx of devotees raises risk of stampede on Tiruvannamalai girivalam path in TN

Temple visitors recall multiple near-stampede incidents during holidays over past 3 years.


Thousands of devotees from across the country take part in ‘girivalam’ ritual held at the Arunachaleswarar temple in Tiruvannamalai.(File photo)

B Anbuselvan

Updated on:

06 Oct 2025, 8:03 am

CHENNAI: Once a quiet town in northern Tamil Nadu, Tiruvannamalai has now become a potential hotspot for stampedes owing to the steady influx of devotees, particularly from Andhra Pradesh and Telangana. With every inch of space occupied with devotees, the girivalam (pilgrimage walk) path, the Arunachaleswarar temple and Tiruvannamalai railway station are showing signs of becoming potential disaster zones. The temple which witnessed large gatherings only during Karthigai Deepam and the girivalam days until 2021, is now receiving massive crowds on weekends and extended holidays as well.

Regular visitors who spoke to TNIE recalled witnessing multiple minor stampedes on the girivalam path over the past three years, frequently leading to people fainting from dehydration and prolonged walking, particularly when Pournami falls on weekends or public holidays. Also, with the shortage of bus and train services to Tirupati and Chennai, Tiruvannamalai railway station becomes completely packed, and passengers encounter near-stampede situations every Pournami.

“It took nearly 11 hours to complete the 14-km girivalam in April 2024 when the crowd was estimated at around 25 lakh people. In at least four stretches, I found myself trapped in stampede-like situations as ambulances tried to make their way through the dense crowd to reach people who had fainted,” recalled Siva Bharathi, 43, a resident of Chennai. “After that, I no longer took my kids to Tiruvannamalai,” added Bharathi.

Officials from the district administration have remained tight-lipped about it, noting that it is up to the state government to take a policy decision on implementing crowd management measures at temple sites. “The chief minister announced that a standard operating procedure (SOP) would be framed for public events. It remains to be seen if the temple events during festival or non-festival days also will be covered,” said an official.

A temple official said, “Devotees can now offer worship in front of the Annamalaiyar sanctum from three rows at a time, instead of the previous two. This has significantly helped to reduce congestion. Drinking water facilities have also been increased,” said an official.

Tiruvannamalai town is accessible by nine major roads, with vehicles arriving primarily from Chennai, Vellore, Chengam, Bengaluru, Tiruchy, and other regions. In view of the growing crowds, the district administration has established temporary bus shelters at 25 locations on the outskirts of the town. Additionally, police have erected watchtowers along the girivalam path to monitor the movement of devotees and ensure safety.

The girivalam route narrows drastically — from 40 feet to about 20 feet soon after the temple — posing a stampede risk, said locals. “When devotees from three directions converge in front of the main Rajagopuram of the temple, a massive crowd builds up at the temple entrance. As they begin the girivalam, the stretch that narrows to 20 feet for nearly 300 metres becomes a potential disaster zone,” recalled S Sridhar, a devotee and resident of Tiruvannamalai.

According to MV Narasimman, a resident and activist from Tiruvannamalai, the influx of devotees is partly attributed to the influence of well-known Telugu spiritual orator Chaganti Koteswara Rao and YouTube channels emphasising that Arunachaleswarar serves as the Kuladeivam (family deity) for numerous Telugu families. “For Telugu devotees, Tiruvannamalai has become a must-visit pilgrimage spot, often combined with a visit to Tirupati,” Narasimman explained.

He further alleged that the recent gang rape of a woman by two police constables who intercepted a vehicle at a check-post serves as a stark reminder that the administration lacks a clear plan for crowd management.

S Naresh from Sannadhi street said, “Approximately, during the pournami girivalam, around 40% of the participants are devotees from Tamil Nadu, while nearly 60% are Telugu-speaking pilgrims. On regular weekends, Telugu-speaking visitors make up almost 95% of the crowd.”

A railway official acknowledged the overcrowding of trains and said the issue will be looked into.

தடம் புரளும் தலைமைப் பண்பு!

DINAMANI 

தடம் புரளும் தலைமைப் பண்பு! 

திரையில் தோன்றும் நட்சத்திரங்களுக்கு ரசிகர்களாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு அடிமைகளாக ஏன் இருக்க வேண்டும்? என்பதைப் பற்றி...

கோதை ஜோதிலெட்சுமி Published on: 06 அக்டோபர் 2025, 3:00 am 

இளைஞர்களின் ஆற்றல் தேசத்தின் சொத்து. அவர்களின் செயல்பாடுகள் அவரவர் குடும்பம் மட்டுமல்ல இந்த தேசத்தின் நிலையைத் தீர்மானிக்கும் சக்தி கொண்டவை. இளைஞர்கள் ஆர்வமும் உற்சாகமும் கொண்டு உழைக்க வேண்டிய பருவத்தில் இருப்பவர்கள். இன்றைய செயல்பாடுகள் நாளைய வாழ்க்கைக்கான அடித்தளமாக அமையும்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மக்கள் தாங்கள் விரும்பும் திரை நட்சத்திரத்தை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் கூடினர். கட்டுக்கடங்காத கூட்டம். விஜய் வருவதில் தாமதம், குடிநீர், உணவு, கழிப்பறை என அடிப்படைத் தேவைகள் ஏதுமற்ற இடத்தில் காலை முதல் மாலை வரை நகரவும் இடம் இல்லாமல் மக்கள் காத்திருந்திருக்கின்றனர்.

சுவாசக் குறைபாடு, காற்றோட்டமின்மை, கடுமையான வெயில் காரணமாக பலர் மயங்கி விழுந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் காரணமாக மட்டும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் பெண்களும் உண்டு. ஏறத்தாழ அனைவருமே இளைஞர்கள். ஓர் அரசியல் கட்சிக் கூட்டத்துக்கு குழந்தைகள் அவசியமற்றவர்கள். வாக்குரிமை பெறும் வயதைக்கூட எட்டாதவர்களுக்கு அரசியல் கட்சிக் கூட்டத்தில் என்ன வேலை? ஆக, கூடிய கூட்டம் அரசியல் தலைவரின் உரையைக் கேட்க வந்தவர்கள் என்பதைவிட நடிகரைக் காண வந்தவர்கள் என்பது உறுதி. இந்தக் கருத்தை நீதிமன்றத்தில் நீதியரசரும் கூறியிருக்கிறார்.

பல்லாயிரம் கோடி பணமும் வசதியும் படைத்தவர்கள் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் தங்கள் வசதிக்கேற்ப வருகிறார்கள். ஆனால், அவரைக் காண நாளெல்லாம் கொளுத்தும் வெயில், மழை என்று பாராமல் காத்திருக்கும் இளைஞர்கள் இதனால் அடையப் போவது யாது? உயிரிழந்த குழந்தைகள் இளைஞர்களின் குடும்பத்தினருக்குப் பணம் தருவதால் இழந்ததைப் பெற முடியுமா? உயிர் மீண்டு வருமா?

திரையில் தோன்றும் நட்சத்திரங்களுக்கு ரசிகர்களாக நாம் இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு அடிமைகளாக ஏன் இருக்க வேண்டும்? போதைப் பழக்கம்போல் இதுவும் என்று தோன்றுகிறது. உச்சபட்ச நட்சத்திரமாக ஜொலித்து பல நூறு கோடிகளை சம்பாதிப்பவர்கள் தங்கள் ரசிகர்களால்தான் நட்சத்திர அந்தஸ்து பெறுகிறார்கள்.

அப்படி உயர்நிலை அடைந்தவர்கள் தங்கள் ரசிகர்களின் குடும்பங்களுக்கு இதுவரை செய்திருப்பது என்ன?

ரசிகர்கள் ஒழுக்கம், குடும்பம் என்று பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டு பெற்றோரை உடன்பிறந்தவர்களை அன்போடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் முயற்சித்திருக்கிறார்களா? அவர்களைப் பொருத்தவரை
ரசிகர் பட்டாளம் என்பது அவர்களின் ஊதியத்தை உயர்த்திக் கொள்வதற்கான காரணம். இளைஞர்கள் இப்படி திரைப்பட மோகத்தில் திரையில் காண்பதை உண்மை என்று எண்ணி உணர்ச்சிவயப்படும் நிலைக்கு யார் காரணம்?

பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் திரைப்படம் பார்க்க வேண்டுமானால்கூட பெற்றோரின் தயவு தேவைப்படும் எனில், பெற்றோர் ஏன் இப்படி திரைப்பட நடிகர்களைக் கண்டு பிள்ளைகள் தடுமாறுவதற்கு இடம் கொடுக்கிறார்கள்?

தமிழ்நாட்டில், தொட்டதற்கெல்லாம் தமிழ், தமிழர், தமிழர்கள் சிறப்பான பாரம்பரியம் கொண்டவர்கள் என்றெல்லாம் பெருமை பேசுகிறோம்; உணர்ச்சிவயப்படுகிறோம். திரைப்பட நடிகரைப் பார்ப்பதற்கு இவ்வளவு ஆர்வம் காட்டும் நாம் என்றேனும் பெருமைமிகு தமிழர்களாக நம் தமிழ் அறிஞர்களைக் காண இப்படிக் கூடியிருக்கிறோமா? அவர்களைக் கொண்டாடியிருக்கிறோமா?

குளிரூட்டப்பட்ட வாகனத்தை விட்டு இறங்காத, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு காணொலிகளை வெளியிட்டுப் பேசிக்கொண்டிருப்பவரை, ஊடகங்களை- பத்திரிகைகளைச் சந்திக்க மறுக்கும் ஒருவரைத் தலைவர் என்று ஏற்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். தொண்டர்களாய் இருப்பதில் தவறில்லை. எத்தகைய தலைவர்களுக்கு நாம் தொண்டர்களாய் இருக்கிறோம் என்பதுதான் கேள்வி. ரசிகர்களின் கண்மூடித்தனங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு கடப்பவர் தலைவருமல்ல; தான்தோன்றித்தனமாக அடங்காமல் ஆடுவோர் தொண்டர்களுமல்ல.

அரசியல் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும்; மக்கள் நலன் சார்ந்து தன்னிடம் இருப்பதையும் மக்களுக்கு அர்ப்பணிப்பவராக தலைவர்கள் இருக்க வேண்டும். தன் பாதுகாப்பைக் காட்டிலும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்பவரே தலைவர்.

சென்னையில் ஹிந்தி பிரசார சபையில் மகாத்மா காந்தி தங்கி இருந்தார். அரங்கிற்கு வெளியே நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுவதாக ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்துக்கு 10,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஏறத்தாழ 30,000 பேர் கூடியிருந்தனர்.

மேடைக்கு காந்தி வந்தவுடன், காந்திக்கு ஜே! காந்திக்கு ஜே! என்று பெரும் முழக்கங்களும், ஆரவாரங்களும் எழுந்தன. வரவேற்புரை நிகழ்த்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் காத்துக் கொண்டிருந்தார்.

ஆரவாரத்தைக் கண்ட மகாத்மா எழுந்து மக்களைப் பார்த்துக் கைகூப்பினார். தனது சுட்டுவிரலை உதடுகளில் வைத்து "அமைதி அமைதி அமைதி' என்று மூன்று முறை கூறினார். மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதைப்போல் கூடியிருந்த மக்கள் அனைவரும் தரையில் அமர்ந்தார்கள். அமைதி நிலவியது. கூட்டம் நிறைவாக அமைந்தது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தெய்வமாகவே மக்கள் கருதினர். முதுகுளத்தூரில் மூண்ட கலவரம் காரணமாக இமானுவேல் சேகரன் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முதல் குற்றவாளியாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சேர்க்கப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அரசுத் தரப்பு வழக்குரைஞராக கிருஷ்ணசாமி ரெட்டியார் நியமிக்கப்பட்டிருந்தார்.

வழக்கு விசாரணை தொடங்கும் நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்கூடிவிட்டனர். "பசும்பொன் தேவரை விடுதலை செய்' என்று பலத்த முழக்கம் அந்த இடத்தை கிடுகிடுக்க வைத்தது. தகவல் அறிந்த தேவர் வெளியே வந்து கூடியிருந்த மக்களைப் பார்த்துப் பேசினார்.

"நான் வணங்கும் மனித தெய்வங்களே! நீதிமன்ற வளாகத்தின் முன் எவரும் நிற்கக் கூடாது. அனைவரும் அவரவர் வீடு செல்ல வேண்டும்; நான் இங்கு தனியாக இருக்கவில்லை; என்னோடு இறைவன் முருகன் இருக்கிறான்- கவலைப்படாதீர்கள்.

அரசு வழக்குரைஞர் கிருஷ்ணசாமி ரெட்டியார் தன் கடமையைச் செய்யவே வந்திருக்கிறார். அவர் சட்டப்படி வாதிடுவார். அவரைத் தவறாக நினைத்து அவருக்கு எதிராக ஏதாவது ஊறு ஏற்பட்டால் அது அடியேனுக்கு இழைக்கப்பட்ட தீங்காகக் கருதுவேன். இது என் எச்சரிக்கை. அனைவரும் அமைதியாகக் கலைந்து செல்லுங்கள்' என்றார். கூட்டம் அமைதியாகக் கலைந்து சென்றது.

கர்மவீரர் காமராஜர் மக்களின் மனம் கவர்ந்த தலைவர். மதுரை தமுக்கம் மைதானத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் காமராஜர் தலைமையில் ஏற்பாடாகியிருந்தது. அப்போதைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் பேச இருக்கிறார். கட்டுக்கடங்காத பெருங்கூட்டம்.

மக்கள் ஆரவாரம், "நேருஜிக்கு ஜே! காமராஜருக்கு ஜே!' என முழக்கங்கள். பிரதமர் நேரு பேசக் காத்திருந்தார். பெருந்தலைவர் எழுந்து, "சகோதரர்களே! சகோதரிகளே! நமது தலைவர், நமது பிரதமர் நேருஜி பேசப்போகிறார். எல்லோரும் உட்காருங்கள் ! உட்காருங்கள்' என்கிறார். எல்லோரும் உட்கார்ந்து விட்டார்கள். அமைதியாக இருங்கள் என்றார். அமைதியாக மக்கள் நேருவின் பேச்சைக் கேட்டார்கள். தலைவர்களும் தொண்டர்களும் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

மகாத்மா காந்தி "அஹிம்சை' என்ற உன்னத நோக்கத்தோடு தேசத்துக்காக வாழ்ந்தார். காமராஜர் கர்மவீரர்; தனக்கென வாழாது மக்களுக்காக வாழ்ந்த மக்கள் தலைவர். முத்துராமலிங்கத் தேவர் தெய்வத் திருமகனாக இந்த மண்ணில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் பற்றியிருந்தார்.

இவர்கள் மக்கள் மத்தியில் இருந்து உருவானவர்கள். மக்களுக்கான மகத்தான தலைவர்கள். உண்மையான தலைவர் மக்கள் திரளைக் கூட்டும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டும்; அந்த மக்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவராகவும் இருக்க வேண்டும்; மக்களுக்காக எவ்விதத் தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இருப்பவரே தலைவர்.

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


கடன் வலையில் சிக்காதீா்! 07.10.2025

DINAMANI

கடன் வலையில் சிக்காதீா்! 07.10.2025

பெண்களின் கடன் அவா்களின் கண்களில் மட்டும் கண்ணீரை வரவழைப்பதில்லை. அவா்களைச் சாா்ந்த அனைவரின் கண்களிலுமே கண்ணீரை வரவழைக்கிறது என்பதுதான் எதாா்த்தமான உண்மை.

முனைவர் என். பத்ரி Updated on: 07 அக்டோபர் 2025, 4:31 am 

கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு உலகெங்கும் மக்களின் பொருளாதார வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தனிநபா்களும், தொழில் நிறுவனங்களும் கடன் வாங்காமல் அன்றாடப் பிழைப்பை கடத்த முடிவதில்லை. பெரும்பாலான நிதி நிறுவனங்களும் அதிக கெடுபிடி எதுவுமின்றி அனைவருக்கும் கடனை வாரி வழங்க முன்வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வட்டி அவற்றுக்கு அதிக லாபத்தைப் பெற்றுத் தருகின்றன.

சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, இந்தியாவில் கடன் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை 2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையே 22% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் கடன் வாங்கிய பெண்களில் வணிக நோக்கங்களுக்கு 3 சதவீதமும், தனிநபா் கடன்கள், நுகா்வோா் கடன்கள், வீட்டுக் கடன்கள் ஆகியவற்றுக்காக 42 சதவீதமும், தங்கத்தை வாங்குவதற்காக 38 சதவீதமும் அடங்குவா்.

மேலும், 2019-ஆம் ஆண்டு முதல் வணிகக் கடன்களுக்காக பல்வேறு வங்கிகளில் திறக்கப்பட்டுள்ள புதிய கணக்குகளின் எண்ணிக்கையும் 4.6 மடங்கு அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாத நிலவரப்படி, கடன் வாங்கியுள்ள சுமாா் 2.7 கோடி பேரில் 60% போ் பெண்கள் எனவும் கூறப்படுகிறது.

பெண்களில் பலா் மகளிா் சுய உதவிக் குழுக்களின் மூலமும் பல்வேறு நிதி நிறுவனங்களின் மூலமும் எளிதில் கடனைப் பெறுகின்றனா். இவை பெரும்பாலும் அதிக வட்டி விகிதங்களில்தான் கிடைக்கின்றன. போதிய வருமானம் இல்லாத நிலையில் இவற்றைத் திரும்பச் செலுத்துவதில் அவா்களுக்கு சவால்கள் பல தொடா்ந்து இருந்து வருகின்றன. கணவருக்குத் தெரியாமல் தெரிந்தவா்களிடம் அதிக அளவு கடன் வாங்கும் மனைவிகளும் எண்ணிக்கையில் பெருகி வருகின்றனா். கடன் கொடுத்தவா்கள் கடனைத் திரும்பப் பெற இவா்களுக்கு அழுத்தம் கொடுக்கும்போது, அவா்களால் சில சமயங்களில் தர முடிவதில்லை.

அதிகக் கடன் சுமை காரணமாக பெண்களின் வாழ்வில் அதிக அளவிலான மன அழுத்தம், மனப்பதற்றம், மனச்சோா்வு, கிரெடிட் ஸ்கோரில் சரிவு, உறவுகளில் விரிசல்கள், அவமான உணா்வு, தனிமைப்படுத்தப்படுதல், கடனுக்காக சொத்துகள் பறிக்கப்படுதல், கடனைத் திரும்ப அளிக்க அவா்கள் திருட முயலுதல் போன்ற நிகழ்வுகளும் நிகழ்கின்றன. அண்மையில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த பெண் ஒருவா் நகைக் கடை ஒன்றில் திருட முயன்ற சம்பவம் நமக்கு அதிா்ச்சியைத் தருகிறது.

திருவொற்றியூரில் வசிக்கும் 54 வயதாகும் ஒருவா் அந்தப் பகுதியில் தங்க நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறாா். அண்மையில் ஒரு மதிய நேரத்தில் பெண் ஒருவா் தங்க நகைகளை வாங்க அவா் கடைக்கு வந்திருக்கிறாா்.

நகைகள் சிலவற்றைத் தோ்வு செய்த அவா், தனது கணவா் பணத்தை எடுத்து வருவதாகவும், அவா் வந்தவுடன் நகைகளை வாங்கிக் கொள்வதாகவும் கூறியிருக்கிறாா். அதை உண்மையென கடைக்காரரும் நம்பியிருக்கிறாா்.

வெகு நேரமாகியும் அந்தப் பெண்ணின் கணவா் வராத நிலையில் திடீரென அந்தப் பெண், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கடைக்காரரை மிரட்டத் தொடங்கினாா். மேலும், அவா் வைத்திருந்த மிளகாய் பொடியை அவா் மீது வீசி நகைகளை திருட முயன்றாா். அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் நகைக்கடைக்காரா் அவரை மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில், அந்தப் பெண் தனது கணவருக்கு தெரியாமல் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே நகைக் கடையில் திருட முயன்ாகத் தெரியவந்தது. கைதான பிறகே அந்தப் பெண் கணவருக்குத் தெரியாமல் கடன் வாங்கியிருக்கும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கடன் பெறுவது தவறில்லை. ஆனால், அது குடும்பத் தலைவா்களுக்குத் தெரியாமலும், அதிக வட்டிக்கும், தகுதிக்கு மீறி வாங்குவதும் தவறான செயல்களாகவே கருதப்படுகின்றன. இவ்வாறான நிலையில் நிதி ஆலோசகா் ஒருவருடன் வாங்க இருக்கும் கடன் தொடா்பான சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து, பின்னா் அவசியத்துக்கு மட்டுமே கடன் பெறுவது நல்லது. பணிக்குச் செல்லும் நிதிச் சுதந்திரம் பெற்றுள்ள பெண்களுக்கும் இது பொருந்தும்.

மாதாந்திர கடன் தவணையில் பொருள்களை வாங்குவதை நாம் அனைவரும் குறைத்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை அவற்றைத் தவிா்க்க வேண்டும். தற்போது நடந்து வரும் பண்டிகைக்கால தள்ளுபடி விலை விற்பனை கவா்ச்சி மிக்கது. இவ்வாறான விளம்பரங்களின் வலையில் வீழ்ந்து விடாமல் கவனத்துடன் நாம் செயல்பட வேண்டும்.

ஒவ்வோா் குடும்பத்தின் முதுகெலும்பும் குடும்பத் தலைவிகளே ஆவா். தேவையற்ற கடன்களால் அவா்களுடைய உடல் நலனும் மனநலனும் பாதிக்கப்படலாம். வீட்டில் கணவருக்குத் தெரியாமல் அவா்கள் வாங்கும் கடன் அவா்களது வாழ்க்கையில் அவா்களை விவாகரத்து வரைகூட கொண்டு செல்லலாம்.

எனவே, பெண்கள் குடும்ப உறுப்பினா்களின் சரியான புரிதலுடன் மட்டுமே தேவையான நோக்கங்களுக்கு குறைவான வட்டி விகிதத்திலும் குறைந்த அளவிலும் கடனை வாங்க முற்படுவது நல்லது.

பெண்களின் கடன் அவா்களின் கண்களில் மட்டும் கண்ணீரை வரவழைப்பதில்லை. அவா்களைச் சாா்ந்த அனைவரின் கண்களிலுமே கண்ணீரை வரவழைக்கிறது என்பதுதான் எதாா்த்தமான உண்மை. இதை உணா்ந்து அவா்கள் எதிா்காலத்தில் செயல்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் தற்போதைய எதிா்பாா்ப்பாக இருக்கிறது. எனவே, கடன் சாா்ந்த விவகாரங்களில் இனியாவது சிந்தித்துச் செயல்படுவோம்.

NEWS TODAY 01.05.2026