Friday, December 19, 2025

NEWS TODAY 19.12.2025

 




















வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல்

DINAMANI

நடுப்பக்கக் கட்டுரைகள் 

வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல் 

மார்கழிக் கோலங்கள் என்பவை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கலைச் செல்வம். ஆனால், அவை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் மாறிவிடக்கூடாது என்பதைப் பற்றி...

. ப. ஈஸ்வரி Updated on: 15 டிசம்பர் 2025, 3:20 am 

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கும் அகத் தூய்மைக்கும் உரிய உன்னதக் காலமாகக் கருதப்படுகிறது. பனியும் குளிரும் சூழ்ந்த அதிகாலைப் பொழுதுகளில், உறக்கத்தைத் துறந்து விடியலுக்கு முன்பே விழித்தெழும் தமிழ் வீதிகள், இந்த மாதத்தின் தனித்துவமான அடையாளம்.

உத்தராயணக் கால தொடக்கத்தைக் குறிக்கும் இந்த மாற்றத்தின்போது, வீட்டு வாசல்களில் வரையப்படும் கோலங்கள் வெறும் அரிசி மாவுச் சித்திரங்கள் மட்டுமல்ல; பக்தியையும் தாண்டி, கணிதமும், சூழலியலும், சமூக அறிவியலும் சங்கமிக்கும் வாழ்வியல் சூத்திரங்களாகக் கோலங்கள் திகழ்கின்றன.

மேலைநாட்டினர் இன்று வியந்து பேசும் "காலை ஐந்து மணி மன்றம்' என்ற சுய முன்னேற்றக் கோட்பாட்டை, நம் தமிழ்ச் சமூகம் பல நூற்றாண்டுகளாகவே ஒரு வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடித்து வருகிறது. "பிரம்ம முகூர்த்தம்' எனப் போற்றப்படும் அந்த அதிகாலைப் பொழுதில் விழித்தெழுவதன் அவசியத்தை அறிவியல் ரீதியாகப் பார்த்தால், அந்நேரத்தில் வளிமண்டல மாசு குறைந்தும், ஆக்சிஜன் மற்றும் உயிர் அயனிகள் செறிந்து காணப்படுவதும் உடலுக்கும் மனதுக்கும் பெரும் புத்துணர்வை அளிக்கின்றன.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் துயிலெழுந்து, கோலமிடுதல் போன்ற கடமையைச் செய்யத் துணியும் அந்த மனத்திண்மை, வாழ்வில் விடாமுயற்சியைக் கற்பதற்கான முதல் படியாகும். அந்த வகையில், அதிகாலையில் கோலமிடுதல் என்பது ஒரு நாளின் தொடக்கத்தை ஒழுக்கத்துடனும், நேர்மறை ஆற்றலுடனும் கட்டமைக்கும் ஒரு சிறந்த உளவியல் கருவியாகத் திகழ்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் கோலங்கள் வெறும் புள்ளிகளும் கோடுகளும்தான். ஆனால், கணித நுட்பத்துடன் அணுகினால், அவை "வரைபடக் கோட்பாட்டின்' நடைமுறை வடிவங்கள் என்பது புலப்படும். குறிப்பாக, ஒரு புள்ளியில் தொடங்கி, கையை எடுக்காமல், மீண்டும் அதே புள்ளியில் வந்து முடிக்கும் "சிக்கல் கோலங்கள்' அல்லது "இழைக் கோலங்கள்', யூலரியன் பாதைகள் மற்றும் முடிவிலி (இன்பினிட்டி) தத்துவத்தை நமக்கு நினைவூட்டுகின்றன.

மையப் புள்ளியை ஆதாரமாகக் கொண்டு விரியும் கோலங்களின் சமச்சீர்மை, மூளையின் இரு அரைக்கோளங்களையும் ஒருங்கிணைக்கும் சிறந்த பயிற்சியாகும். இன்றைய மென்பொருள் பொறியாளர்களைப் போலவே, நம் முன்னோர்களும் எந்தப் பாடப்புத்தகமும் இன்றி, இடைவெளி மேலாண்மை மற்றும் வடிவவியல் அறிவை தரையில் வடிவமைத்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஜீவகாருண்யத் தத்துவம், பச்சரிசி மாவில் இடும் கோலங்களில் உயிர்பெறுகிறது. விடியற்காலையில் உணவைத் தேடி வரும் எறும்புகளுக்கும், சிறு உயிரினங்களுக்கும் உணவளிக்கும் இந்த உன்னத அறத்தை, இன்றைய நவீன செயற்கை வண்ணங்களும், ஒட்டுவில்லைகளும் சிதைத்து விடாமல் காக்க வேண்டும்.

"விருந்தினர் உண்ட பின்னரே தான் உண்ண வேண்டும்' என்ற தமிழரின் விருந்தோம்பல் பண்பு, வீட்டு வாசலிலேயே தொடங்கிவிடுகிறது. ஒரு கைப்பிடி அரிசி மாவில், "பல்லுயிர் ஓம்பல்' என்ற உயரிய சூழலியல் அறிவை நம் முன்னோர் பொதிந்துவைத்துள்ளனர் என்பது போற்றத்தக்கது.

"மாதங்களில் நான் மார்கழி' என்று பகவத் கீதையில் (அத்தியாயம் 10, ஸ்லோகம் 35) கண்ணன் உரைத்ததற்கேற்ப, இது இறைவழிபாட்டுக்கு உகந்த மாதமாகும். ஆனால், இயற்கையின் சுழற்சிப்படி இது கடும் பனிக்காலம்.

பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால், கிருமிகளின் தாக்கமும் இயல்பாகவே கூடுகிறது. புனிதமான இந்த மாதத்தில் நோய்த் தொற்றுகளை எதிர்கொள்ளவே, கோலத்தின் மையத்தில் பசுஞ்சாண உருண்டையை வைத்து, அதில் பூசணிப் பூவைச் செருகி வைக்கும் மரபு தோன்றியது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், பசுஞ்சாணத்தில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்புச் சக்தி கிருமிகள் வீட்டினுள் நுழைவதைத் தடுக்கும் ஒரு இயற்கை உயிர்வேலியாகச் செயல்படுகிறது.

இன்றைய நவீன உடற்பயிற்சிக் கூடங்களில் நாம் செய்யும் பயிற்சிகளுக்கு இணையாக, கோலமிடுவதன் மூலம் நமது உடல் நலத்தைப் பேண முடியும். குனிந்து நிமிர்ந்து, இடுப்பை வளைத்து, கைகளை லாவகமாகச் சுழற்றிப் பெரிய கோலங்களை இடுவது, "சூரிய நமஸ்காரம்' போன்ற யோகாசன நிலைகளை ஒத்த ஒரு சிறந்த பயிற்சியாகும். இது முதுகெலும்பை வலுப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அதிகாலைக் காற்றை ஆழமாகச் சுவாசிப்பதன் மூலம் நுரையீரலுக்கும் வலுசேர்க்கிறது.

உடல் நலத்தைத் தாண்டி, சமூகப் பார்வையில் அன்றைய திண்ணைகளும் வாசல்களுமே இன்றைய சமூக ஊடகங்களுக்கு முன்னோடிகள். பெண்கள் வாசலில் கூடி உரையாடுவது சமூகப் பிணைப்பை வலுப்படுத்தியது. இன்றைய தனிமைப்படுத்தப்பட்ட அடுக்குமாடிக் கலாசாரத்தில், வாசலில் கோலமிடும் அந்தச் சிறு கால அவகாசமே, அண்டை வீட்டாருடன் ஒரு புன்னகையையோ, வாழ்த்தையோ பரிமாறிக் கொள்ளும் அரிய வாய்ப்பை வழங்குகிறது.

மார்கழிக் கோலங்கள் என்பவை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கலைச் செல்வம். ஆனால், அவை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் மாறிவிடக்கூடாது. ரசாயனக் கற்களையும், செயற்கை வண்ணங்களையும் தவிர்த்து, மீண்டும் அரிசி மாவுப் பயன்பாட்டுக்குத் திரும்புவதன் நோக்கத்தை நாம் உணர வேண்டும். இயற்கையிடமிருந்து நாம் எடுத்துக்கொண்ட வளங்களுக்குச் செய்யும் சிறிய கைம்மாறாக, எறும்புகள் போன்ற உயிரினங்களுக்கு உணவளிப்பது மன நிறைவைத் தருகிறது.

நகரமயமாக்கலின் நெரிசலில், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் குறுகிய வராந்தாக்களில் இந்தக் கலை சுருங்கிவிட்டாலும், அதன் தத்துவத்தைச் சுருங்கிவிடாமல் காப்பது நம் கடமை. வெறும் கோலப் போட்டிகள் நடத்துவது மட்டும் போதாது; அதன் பின்னால் உள்ள கணிதத்தையும், அறிவியலையும், ஈகையையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க இந்த மார்கழி மாதத்தைப் பயன்படுத்த வேண்டும். வாசலில் இடப்படும் ஒவ்வொரு புள்ளியும், நம்மைப் பிரபஞ்சத்தோடு இணைக்கும் ஒரு குறியீடு. அந்தப் புள்ளிகளை இணைக்கும் கோடுகள், மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவின் சாட்சிகளாகத் தொடரட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

Thursday, December 18, 2025

NEWS TODAY 18.12.2025

 










திசைமாறும் சிறார்கள்

 திசைமாறும் சிறார்கள் 

நம் நாட்டு பள்ளிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகளவில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பெ.கண்ணப்பன் Updated on:  18 டிசம்பர் 2025, 2:56 am 

புதுதில்லியில் அமைந்துள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள கள ஆய்வு அறிக்கையில், நம் நாட்டு பள்ளிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளிடையே போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகளவில் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக 10 மாநிலங்களில் நகர், புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு, தனியார் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுக்காக விவரங்கள் திரட்டப்பட்டவர்களில் 53% பேர் மாணவர்கள்; 47% பேர் மாணவிகள். இவர்கள் 11 முதல் 15 வயதுடையவர்கள். ஓராண்டு காலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பள்ளி செல்லும் மாணவர்களில் 16.3% பேரும், மாணவிகளில் 13.8% பேரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பதும், கடந்த ஓராண்டுக்குள் போதைப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் 10% என்பதும் தெரியவந்தது.

போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறார்களில் 95% பேர் போதைப் பொருள்களின் பயன்பாடு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதைத் தெரிந்தே பயன்படுத்துகின்றனர் என்றும், 40% சிறார்களின் குடும்பத்தில் மது அருந்தும் பழக்கமுடைய உறுப்பினர் உள்ளனர் என்றும், 8% பேர் குடும்பத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கமுடைய உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகையிலையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் போதையூட்டும் பொருள்கள், மதுபானங்கள், கஞ்சா, ஓபியம், ஹெராயின், மருத்துவப் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும் போதை ஏற்படுத்தும் மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதாக பள்ளிச் சிறார்கள் ஆய்வின்போது தெரிவித்துள்ளனர். போதைப் பொருள்கள் தங்களுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகின்றன எனவும் ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட பள்ளிச் சிறார்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 10 முதல் 17 வயதுடைய 1.48 கோடி சிறார்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்ற புள்ளிவிவரத்தை இந்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவிக்கிறது. இந்திய சிறார்கள் 11-12 வயதில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தப் பழகிக் கொள்கின்றனர் என புதுதில்லியில் அமைந்துள்ள தேசிய போதைப் பொருள் சிகிச்சை மையத்தின் ஆய்வு வெளிப்படுத்துகிறது.

சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஒன்றில், சீருடை அணிந்த மாணவிகள் சிலர் வகுப்பறையில் ஒன்றுகூடி மது அருந்தும் காணொலிக் காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது தவறான செயல் அல்ல என்ற உணர்வு சமுதாயத்தில் பரவிவருவதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

கல்வி கற்க பள்ளிக்குச் செல்லும் சிறார்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்த பழகிக் கொள்வதால், கல்வி கற்பதில் நாட்டம் அவர்களிடம் குறையத் தொடங்குகிறது. ஒழுக்கக்கேடான செயல்கள் அவர்களிடம் வெளிப்படுகிறது. மேலும், குற்றவியல் சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபடுகிற சூழலும் ஏற்படுகிறது.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்களை கூர்நோக்கு இல்லங்களில் விசாரணை முடியும்வரை தங்க வைக்கப்படுகின்ற நடைமுறை நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது. இந்தியப் பெருநகர் ஒன்றில் அமைந்துள்ள கூர்நோக்கு இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறார்களில் 86% பேர் மது, கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிற பழக்கம் உடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கொலை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்ட சிறார்கள் பெரும்பாலும் குற்றம் புரியும்போது போதைப் பொருள்களைப் பயன்படுத்தி இருந்ததாகவும் தெரியவருகிறது.

கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்படும் சிறார்களில் சிலர் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்டு, கூர்நோக்கு இல்லங்களில் தங்கிச் சென்றவர்கள் என்பதும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகிற சிறார்களில் பலர் மது மற்றும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பதும் கள ஆய்வில் தெரியவருகிறது.

போதைப் பொருள்களைப் பயன்படுத்துகிற சிறார்களில் ஒரு சிலர் மட்டுமே வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான சிறார்கள் தங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான போதைப் பொருள்களை வாங்க பணம் இல்லாதவர்கள். அவர்களில் சிலர் போதை பொருள்கள் விற்பனை செய்யும் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தங்களின் பயன்பாட்டுக்குத் தேவையான போதைப் பொருள்களை வாங்குகிற சிறார்களும் உண்டு.

கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்படும் சிறார்களில் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் சிறார்களை அடையாளம் கண்டறிந்து, அவர்களை போதை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைத்து, நல்வழிப்படுத்தும் முயற்சியை சிறார் நீதிக் குழுமம் மேற்கொள்கிறது.

கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்படும் போதைப் பழக்கம் உடைய சிறார்கள் அனைவரையும் போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்து, போதைப் பொருள்கள் பயன்படுத்துவதில் இருந்து மீட்கப்படுவதும், மீண்டும் போதைப் பொருள்களை நாடி அவர்கள் செல்லாமல் கண்காணிப்பதும் முக்கியத்துவம் பெறாத நிலை நம் நாட்டில் நிலவுகிறது.

சிறார் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகிற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதும், இந்திய பெருநகரங்களில் அதிக எண்ணிக்கையிலான சிறார் குற்றங்கள் நிகழும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளதும் திசைமாறிச் செல்லும் சிறார்களை நல்வழிப்படுத்தும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் முன்னுரிமை பெறப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

சிறார்களிடம் சமூக ஊடகத்தின் தாக்கம் மிகுந்து காணப்படுகின்ற தற்போதைய சூழலில், நண்பர்கள் ஏற்படுத்தும் அழுத்தம், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு காரணமாக ஏற்படும் மன அழுத்தம், தனிமை மற்றும் தாழ்வு மனப்பான்மையால் ஏற்படும் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடுதல், உடைந்த குடும்பம், பெற்றோர்களின் குறைவான கண்காணிப்பு, மலிவாகவும், எளிதாகவும் சிறார்களுக்கு போதைப் பொருள்கள் கிடைக்கிற சூழல் போன்ற சமூக காரணங்களால் போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை சிறார்கள் எளிதில் கற்றுக் கொள்கின்றனர்.

சிறார்களிடையே போதைப் பொருள் பழக்கம் தொற்றிக்கொள்ளாமல் தடுப்பதில் குடும்பம், பள்ளிக்கூடம், சமூகம் மற்றும் காவல் துறை ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றன. பெற்றோர்-குழந்தைகள் இடையே மனம் திறந்த உரையாடல், குழந்தைகளின் நட்பு வட்டம், இணையப் பயன்பாடு போன்றவற்றைப் பெற்றோர் கண்காணித்தல், மதிப்பெண்கள் பெறுவதை மட்டுமே மையமாகக் கொண்ட கல்விக்குப் பதிலாக வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் கல்வியை ஊக்கப்படுத்துதல், சிறார்களை இலக்காகக் கொண்டு செயல்படும் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுத்தல் போன்றவை போதைப் பொருள்கள் மீதான சிறார்களின் ஆர்வத்தைத் தடுக்க துணைபுரியும்.

சிறார் குற்றங்களும், சிறார்களின் போதைப் பொருள் பழக்கமும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் முக்கியமான சமூகப் பிரச்னையாக கடந்த காலத்தில் உருவெடுத்தன. இதை எதிர்கொள்ள சிறார் நீதி அமைப்பும், சிறார் நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன.

தண்டனைக்குப் பதிலாக சீர்திருத்தத்தையே குறிக்கோளாகக் கொண்டு அவை செயல்பட்டன. பள்ளிக்கூடங்களில் போதைப் பொருள்கள் பழக்கம் உள்ள சிறார்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நம் நாட்டிலும் சிறார் நீதிச் சட்டம், சிறார் நீதிக் குழுக்கள், சிறார் சிறப்பு இல்லங்கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், சிறார் குற்றங்களும், போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் சிறார்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சட்டத்துக்கு முரணாகச் செயல்படும் சிறார்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதை இது உணர்த்துகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் ஆய்வும், உரிய தொடர் நடவடிக்கையும் சிறார்களின் நலனை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர்:

காவல் உயர் அதிகாரி (ஓய்வு).

Tuesday, December 16, 2025

BHOPAL NEWS

 


IIM Bangalore placement panel resigns amid recruitment clause row


IIM Bangalore placement panel resigns amid recruitment clause row

The 20-member placement committee stepped down on December 10 and in a letter addressed to the Institute's Career Development Services and students

By: PTI

New Delhi | Updated: December 14, 2025 09:32 AM IST


Career Development Services are handled by 20 student representatives from postgraduate programmes under the supervision of faculty members. (File Photo)

After the placement committee at IIM Bangalore resigned over allegations that a recruitment clause was revoked in a way that selectively benefited the committee members, the institute on Friday said the matter was “under internal review”.

The 20-member placement committee stepped down on December 10 and in a letter addressed to the Institute’s Career Development Services and students, it said the decision was taken collectively.

“As a result, support for all activities related to the Lateral and Final Placements Process 2026 from the Placement Committee stands suspended until further notice,” the letter said. Career Development Services are handled by 20 student representatives from postgraduate programmes under the supervision of faculty members.

In a statement, IIMB said the matter was currently under internal review in accordance with the Institute’s process framework. “Student well-being is paramount and central to the values which IIM Bangalore upholds,” it added, without divulging further details.

The pre-placement process for lateral and final placements usually begins from December with interviews for final placements scheduled for February every year.

New study reveals surprising effects for those who took the Covid-19 vaccine


New study reveals surprising effects for those who took the Covid-19 vaccine

etimes.in | Dec 14, 2025, 10.57 PM IST


There is a wave of vaccine scepticism among people in general. The sentiment is furthered by few officials sitting at top positions capable of making laws and manufacturing narrative. It is in this context that the recent study on the effectiveness of Covid-19 vaccine should be read carefully.

A large population study published recently has produced results that may surprise both supporters and skeptics of the vaccine alike, not by uncovering hidden harms, but by measuring its impact on overall survival.

Covid-19 was first detected in Wuhan, China, in December 2019 and went on to reshape daily life across the globe. According to the BBC, more than 7.1 million deaths worldwide have been attributed to the virus, with around 227,000 deaths in the UK listing Covid-19 as the cause.

Mass vaccination campaigns followed at unprecedented speed. By December 2023, an estimated 67 percent of the world’s population had received at least one dose of a Covid-19 vaccine, according to the World Health Organization (WHO). While the rollout significantly reduced severe disease and hospitalisation, it also became a target for misinformation and public distrust, particularly around safety.

What the new study examined

The study, published in JAMA Network Open, analysed health outcomes among adults in France aged 18 to 59, comparing those who were vaccinated against Covid-19 with those who were not.

Researchers examined data from 22.7 million vaccinated individuals and 5.9 million unvaccinated individuals, representing roughly 40 percent of France’s total population. To be included in the vaccinated group, participants needed to have received at least one vaccine dose by 1 October 2021, with most having received two doses of either Pfizer-BioNTech or Moderna. Unvaccinated participants had not received any Covid-19 vaccine by 1 November 2021.

The results showed that vaccinated adults had a 25 percent lower risk of all-cause mortality compared with unvaccinated adults during the study period. This means vaccinated participants were less likely to die from any cause, not only Covid-19.

The difference was even more pronounced when researchers looked specifically at Covid-related outcomes. Vaccinated individuals had a 74 percent lower risk of dying in hospital from Covid-19 complications compared with those who were unvaccinated.

These findings suggest that vaccination provided protection extending beyond immediate infection prevention, particularly during periods when Covid-19 was still circulating widely.

Important limitations noted by researchers

The authors were careful to highlight limitations in their analysis. Vaccinated participants were more likely to belong to higher socioeconomic groups, which often correlates with better access to healthcare, healthier living conditions, and preventative medical care. These factors can independently reduce mortality risk, regardless of vaccination status.

Because of this, the researchers noted that not all of the observed benefit can be attributed solely to the vaccine itself.

Addressing concerns about rare side effects

Public concern has persisted around rare heart-related side effects such as myocarditis and pericarditis, conditions involving inflammation of the heart muscle or lining. These events are considered uncommon, affecting up to 1 in 10,000 vaccinated individuals, according to existing safety monitoring data.

Multiple studies have examined these risks and consistently found that the likelihood of developing myocarditis or pericarditis is higher after a Covid-19 infection itself than after vaccination. This has been reported across several peer-reviewed analyses and reinforced by public health agencies internationally.

Six years after Covid-19 first emerged, the virus continues to circulate, though it generally causes less severe illness due to widespread immunity and viral evolution. This large-scale French study adds to the growing body of evidence suggesting that Covid-19 vaccination not only reduced severe disease during the pandemic but was also associated with lower overall mortality among working-age adults.

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...