Tuesday, July 14, 2026

NMC plans ban on medical seat hike if buildings not yet complete

NMC plans ban on medical seat hike if buildings not yet complete

Anuja.Jaiswal@timesofindia.com   14.07.2026

REGULATORY TIGHTENING

New Delhi : Medical colleges will no longer be allowed to seek regulatory approval — for increasing MBBS seats — while their hospitals or academic buildings are still under construction, under amendments proposed by National Medical Commission (NMC). 

The draft regulations — to tighten norms for new medical colleges and MBBS seats —require institutions to have all prescribed infrastructure and statutory approvals in place before applying. Temporary arrangements for hospital and college buildings will no longer be permitted, and institutions with projects still under construction (“work-inprogress”) will not be considered for further processing. 




NMC has also proposed rejecting incomplete applications without giving institutions an opportunity to rectify deficiencies. Those applications lacking mandatory documents or other records specified by Medical Assessment and Rating Board (MARB) will not be treated as valid proposals and may be rejected at the initial stage. 

Under the proposed amendments, applicants must submit a valid ‘consent of affiliation’ from a recognised university at the time of application. Solvency certificate based on the previous financial year, issued by a chartered accountant within 90 days before the application deadline, will also be mandatory.

In another significant change, new medical colleges, as well as those already functioning, will have to maintain a dedicated corpus fund for the operation of the institution. The amount will be decided by MARB and may be revised periodically, with colleges required to furnish documentary proof whenever asked. 

REGULATORY TIGHTENING

Sunday, July 12, 2026

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை



அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

Published On: 10 Jul 2026, 7:05 AM

| By Santhosh Raj Saravanan

தமிழ்நாட்டில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி Bonafide Certificate (போனஃபைட் சான்றிதழ்) பெறுவதற்காக பள்ளிகளுக்குச் சென்று அலைவதற்கான அவசியம் பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்காது. மாணவர்களின் பள்ளிக் கல்வி விவரங்கள் EMIS (Educational Management Information System) தரவுத்தளத்தின் மூலம் சரிபார்க்கப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மூலம் அரசு பள்ளி மாணவர்களின் விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்துவதுடன், தேவையற்ற ஆவணச் சுமையையும் குறைப்பதே நோக்கமாகும். குறிப்பாக, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இது பெரிய நிவாரணமாகக் கருதப்படுகிறது.

யாருக்கு இந்தச் சலுகை? 2022–23 கல்வியாண்டு அல்லது அதற்குப் பிறகு அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களின் கல்வி விவரங்கள் ஏற்கனவே EMIS தரவுத்தளத்தில் இருப்பதால், அவர்கள் தனியாக Bonafide Certificate சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அந்த விவரங்கள் மின்னணு முறையில் சரிபார்க்கப்படும்.

ஆனால், 2022–23-க்கு முன்பு மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், 7.5 சதவீத அரசு பள்ளி இடஒதுக்கீட்டின் பலனைப் பெற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் (CEO) இருந்து பெறப்படும் Bonafide Certificate-ஐ சமர்ப்பிக்க வேண்டும் என வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7.5% இடஒதுக்கீடு யாருக்கெல்லாம்? தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை முழுமையாகப் படித்து, NEET-UG தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத சிறப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் அதிகளவில் சேர்வதை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவச் சேர்க்கைக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் மாணவர்கள் NEET மதிப்பெண் அட்டை, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் (TC), சமூகச் சான்றிதழ், தேவையான இடங்களில் இருப்பிடச் சான்று (Nativity Certificate) உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். அரசு பள்ளி 7.5% ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு EMIS சரிபார்ப்பு நடைமுறையின்படி Bonafide Certificate தேவையா என்பதை வழிகாட்டுதலின் அடிப்படையில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள் கவனிக்க வேண்டியது மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், தங்களது பள்ளிக் கல்வி விவரங்கள் EMIS பதிவுகளுடன் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் தகவல் பிழை இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது கல்வி அலுவலகத்தை அணுகி திருத்தம் மேற்கொள்வது நல்லது. மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும் தமிழ்நாடு மருத்துவ மாணவர் தேர்வுக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடர்ந்து கவனிப்பது அவசியம்.


இந்த புதிய நடைமுறை, அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ மாணவர் சேர்க்கை செயல்முறையை மேலும் எளிமையாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தேவையற்ற ஆவணங்களை பெற பல அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய சிரமம் குறைவதுடன், ஆன்லைன் தரவு சரிபார்ப்பு மூலம் விண்ணப்ப செயல்முறை வேகமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறும் என கல்வி வட்டாரங்கள் கருதுகின்றன.

NEWS TODAY 12.07.2026









































NEWS TO DAY 16.07.2026