Sunday, January 24, 2016

10 மாதங்களுக்குப் பின் திருப்பதி உண்டியல் துணி தைக்கும் பணி தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் (கோப்பு படம்).

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் துணி தைக்கும் பணி 10 மாதங்களுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின், அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். தினமும் சுமார் ரூ. 2 கோடியை தாண்டும் இந்த காணிக்கை மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

உண்டியல் மீது பித்தளை கொப்பரை வைத்து, திருநாமம் வரைந்த வெள்ளை நிற துணியால் கொப்பரையும் உண்டியலும் மூடப்பட்டு, சுற்றிலும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் அது கட்டப்பட்டிருக்கும். இந்த உண்டியல் துணியை தைப்பவரை ‘தர்ஜி’ என்று அழைக்கின்றனர்.

பல ஆண்டுகளாக கே.தேவ தாஸ் என்பவர்தான் இந்த உண்டியல் துணியை தைத்து வந்தார். இவருக்கு மாதம் ரூ. 6,400 ஊதியமும், தினமும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு சென்று வர பஸ் பாஸும் வழங்கப்பட்டு வந்தது. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆயினும் இவருக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவரை தேவஸ் தானம் பணியில் இருந்து நிறுத்தி யது. அப்போது முதல் பழைய உண்டியல் துணிகளையே துவைத்து தினமும் 3 வேளை மாற்றப்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து பக்தர் களிடையே விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் கே.தேவதாஸை மீண்டும் பணி நியமனம் செய்ய தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தீர்மா னித்து, அதற்கான உத்தரவையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் அவர் மீண்டும் தனது பணியை தொடங்கினார்.

இதுகுறித்து தேவதாஸ் கூறும்போது, “நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் காணிக்கை செலுத்தும் அட்சய பாத்திரமாக இந்த உண்டியல் உள்ளது. இதன் துணியை தைக்கும் பணியை ஏழுமலையான் எனக்கு மீண்டும் வழங்கி இருப்பதை புண்ணியமாக கருதுகிறேன்” என்றார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...