Tuesday, August 14, 2018

பக்தர்கள் வெள்ளத்தில் ஆண்டாள் தேரோட்டம்

Added : ஆக 14, 2018 06:05

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.ஆக.5ல் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி இரவு 2:00 மணியளவில் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, 3:30 மணிக்கு திருத்தேருக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு பாலாஜிபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார்.காலை 7:20 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டது. கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு ரதவீதிகளையும் சுற்றி, காலை 9:46 மணியளவில் தேர் நிலை வந்தடைந்தது.விழாவில் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, டி.ஐ.ஜி. பிரதீப்குமார், தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை அதிகாரிகள் ஜெகநாதன், ஹரிஹரன், நாகராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். எஸ்.பி., ராஜராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழாத்துளிகள்* ஆண்டாள் தேரோட்ட வரலாற்றில் முதல்முறையாக புறப்பட்ட 2 மணி நேரத்தில் தேர்நிலை வந்தடைந்தது.* கருணாநிதியின் மறைவிற்கு 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததால், அரசு பிரமுகர்கள் துவக்கி வைக்காத தேரோட்டமாக நேற்று அமைந்தது.* காலை 7:20 க்கு தேரோட்டம் அறிவிக்கபட்ட நிலையில் அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து தேர் இழுத்தனர்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...