Thursday, January 17, 2019

தஞ்சை பெரியகோவிலில் மகரசங்காரந்தி விழா : நந்திக்கு ஒரு டன் காய்,பழங்களால் அலங்காரம்

Added : ஜன 16, 2019 22:28



தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 1,000 கிலோ அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்புகளால், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் உள்ள, நந்தியம் பெருமானுக்கு பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு பால், தயிர் மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.தொடர்ந்து மாட்டு பொங்கலான நேற்று அதிகாலை லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின், 9:15 மணிக்கு உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு, ஒரு டன் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.மேலும், நந்திபெருமான் சிலை முன், 108 பசுக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, பசுக்கள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடந்தது. பின்னர் நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில், ஆயிரக்கணக்கான பக்தகர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...