Tuesday, January 1, 2019


நிதியின்றி தவிக்கும் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம்

Added : ஜன 01, 2019 04:39 |

போதிய நிதி இல்லாததால், 'லேண்ட் லைன்' இணைப்பை, திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஆறு மாதங்களாக, 'டிபாசிட்' தொகையை வழங்க முடியாமல், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர், வி.சத்தியபாலன் கூறியதாவது:என் வீட்டிற்கு, பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் இணைப்பு பெற்றிருந்தேன். நீண்ட காலமாக பயன்பாடின்றி இருந்ததால், அதை, ஜூனில், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தேன். இதற்கான டிபாசிட் தொகையை, விதிமுறைப்படி, 90 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும்; இதுவரை, டிபாசிட் தொகை தரப்படவில்லை. தாமதமானால் வட்டியுடன் தர வேண்டும். என்னைப் போன்று, ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:இணைப்பை திருப்பித் தரும் வாடிக்கையாளர்களுக்கு, டிபாசிட் தொகையை வழங்க, நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லை. இதனால், 90 நாட்களுக்குள், டிபாசிட் தொகையை வழங்க முடியவில்லை.ஆறு மாதங்களாக, யாருக்கும் டிபாசிட் தொகை கொடுக்கப்படவில்லை. நெருக்கடி தரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும், டிபாசிட் தொகை வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...