Tuesday, February 5, 2019

மெட்ராச சுத்திப்பாக்க போறோம்' : குதூகலத்துடன் முதியோர் பயணம்

Added : பிப் 03, 2019 01:02 |




அவிநாசி: அவிநாசி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த, 115 முதியோர்கள், இரு விமானங்களில், நேற்று சென்னை சுற்றுலா சென்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள, தேவராயம் பாளையத்தைச் சேர்ந்த நண்பர்கள் இணைந்து, இப்பகுதி முதியோர்களை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலுார் உள்ளிட்ட இடங்களுக்கு, சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்தனர்.பட்டியல் தயாரிக்கப்பட்டு, 60 - 100 வயதுள்ள முதியோர்கள் நேற்று புறப்பட்டனர். மதியம், 12:00 மணிக்கு, 30 பேரும், பிற்பகல், 3:00 மணிக்கு, 85 பேரும், கோவை விமான நிலையத்தில் இருந்து, சென்னை புறப்பட்டனர். பாதுகாப்புக்காக, இளைஞர்களும் உடன் சென்றனர்.

முதியோர் சிலர் கூறுகையில், 'விமானத்தில் செல்வோம் என, நினைத்து பார்க்கவே இல்லை; இன்று நிஜமாகியுள்ளது. ஊரை தாண்டி சென்று வர முடியாத எங்களை, செலவில்லாமல், விமானத்தில் அழைத்துச் சென்று, பல ஊர்களையும், கோவில்களையும் சுற்றிக் காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றனர்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...