Monday, August 5, 2019

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு; மருத்துவ மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: மருத்துவ சேவை பாதிக்கும் அபாயம் 



சென்னை  05.08.2019

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக் கும் மருத்துவ மாணவ, மாணவி கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளி களுக்கான மருத்துவச் சேவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கு நாடுமுழுவதும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதவிர டாக்டர்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாண வர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 2-ம் தேதி சென்னை, மதுரை, கோவையில் உள்ள அரசு மருத் துவக் கல்லூரி மாணவ, மாணவி கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

23 கல்லூரிகள் புறக்கணிப்பு

இதன்தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர் கள் இன்று வகுப்புகளை புறக்கணிக்கின்றனர். எம்பிபிஎஸ் இறுதியாண்டு படிக்கும் பயிற்சி டாக்டர்களும் வகுப்புகளை புறக்கணிக்க இருப்பதால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான மருத்துவ சேவை பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக போராட்டத் துக்கு அழைப்புவிடுத்துள்ள தமிழ் நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ஹரி கணேஷ் கூறியதாவது:

தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனால், மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கக் கூடாது. இந்திய மருத்துவக் கவுன்சிலை அழிக்கக் கூடாது. எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்கள் மீது நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக் கூடாது. மருத்துவக் கல்வியில் மாநில உரிமையை பறிக்கக் கூடாது.

தர்ணா, ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கல்வியை கார்ப் பரேட்மயமாக்கும், முழுமை யாக வணிகமயமாக்கும் வரைவு தேசிய கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளனர். கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house?

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house? Check daily menu at Antilia Mukesh Ambani’s home prepares around 4,000 rotis eve...