Monday, August 5, 2019

அரசு டாக்டர்கள் விடுமுறைக்கு புதிய விதி

Added : ஆக 05, 2019 00:45

கோவை : அரசு டாக்டர்கள் விடுப்பு எடுப்பதை தடுக்கும் விதத்தில் சுகாதார துறை பல்வேறு விதிகளை வகுத்துள்ளது.தமிழகத்தில், 23 அரசு மருத்துவக் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இம்மருத்துவக் கல்லுாரிகளுடன், 50 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை குறித்த நேரத்தில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து விடுப்பு எடுப்பதற்கான பல்வேறு புதிய நடைமுறைகளை சுகாதார துறை வகுத்துள்ளது.சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது :டாக்டர்கள் பலர் தங்களது வார விடுமுறையன்று பணிக்கு வருகின்றனர். அதற்கு ஈடாக வார நாட்களில் விடுப்பு எடுக்கின்றனர்.

இவ்வாறு விடுமுறை எடுப்பதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.மேலும், மருத்துவக் கல்லுாரிகளில், துறை தலைவர் அனைவருக்கும் ஒரே நேரத்தில் இதுபோன்று விடுப்பு வழங்கி விடுவதால் நிர்வாக செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்படுவது தெரிந்தது. இதையடுத்தே அவசர பணிக்காக வார விடுமுறையன்று பணிக்கு வரும் டாக்டர்கள் வார நாட்களில் விடுமுறை எடுக்க கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house?

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house? Check daily menu at Antilia Mukesh Ambani’s home prepares around 4,000 rotis eve...