Thursday, April 2, 2020

இன்று முதல், 'கொரோனா' நிவாரணம் ரேஷனில் 15ம் தேதி வரை கிடைக்கும்

Added : ஏப் 02, 2020 00:38

சென்னை : ரேஷன் கடைகளில், 'கொரோனா' நிவாரண தொகை, இன்று முதல் வழங்கப்பட உள்ளதால், எந்த புகாரும் ஏற்படாதபடி, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மார்ச், 25 முதல், இம்மாதம், 14ம் தேதி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும், வேலைக்கு செல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளனர்.அவர்களுக்கு உதவும் வகையில், கொரோனா வைரஸ் தடுப்பு கால நிவாரணமாக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், ஏப்., மாதத்திற்கு உரிய அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, இலவசமாக வழங்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது.

அவை, ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், இன்று முதல், ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளன. ஒரு கடையில், 1,300 -- 1,500 கார்டுதாரர்கள் உள்ளன. நிவாரணம் வழங்கும்போது, கடைகளில், கூட்டம் சேரக் கூடாது என்பதற்காக, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற, 'டோக்கன்'களை, கார்டுதாரர்களின் வீடுகளுக்கு, ரேஷன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.ஒவ்வொரு கடையிலும், தினமும், தலா, 100 கார்டுதாரர்கள் என, வரும், 15ம் தேதி வரை, 35 ஆயிரத்து, 244 கடைகள் வாயிலாக, 2.01 கோடி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

கொரோனா தொற்றை தடுக்க, ரேஷன் கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், குறிப்பிட்ட துாரத்திற்குள், கார்டுதாரர்களை நிற்க வைப்பதற்காக, அடையாள குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், கோவிந்தராஜ், மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ரேஷன் கடைகளில், பெரும் அளவில், ரொக்கம் பட்டுவாடா மேற்கொள்ளப்பட உள்ளதால், புகார் ஏதும் ஏற்படாமல், கண்காணிப்பது அவசியம். எனவே, நகரங்களில், 20 கடைகளுக்கும்; கிராமங்களில், 10 கடைகளுக்கும், ஒரு அலுவலரை நியமித்து, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...