Saturday, April 25, 2020

மே 4ல் பணிக்கு வர அரசு பஸ் ஊழியர்களுக்கு அழைப்பு

Added : ஏப் 25, 2020 02:52

தேவதானப்பட்டி:மே 4 ல் பணிக்கு வரவேண்டும் என தொழிலாளர்களிடம் அரசு   போக்குவரத்துகழக அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அரசு   பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு மே 3 வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. மே 4ல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என அதிகாரிகள் அலைபேசி மூலம் தகவல் கூறி வருகின்றனர். சானிடைசர் மூலம் கை கழுவி , முகக்கவசம் அணிந்து பஸ்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இதற்காக ஏப். 27முதல்  பணிமனைகளில் பஸ்கள் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...