Wednesday, April 1, 2020

எஸ்.பி.ஐ., ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி நிதி

Added : மார் 31, 2020 21:06

சென்னை :கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, எஸ்.பி.ஐ., வங்கி ஊழியர்களின், இரண்டு நாள் சம்பளமான, 100 கோடி ரூபாய், பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படுவதாக, அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 2.56 லட்சம் ஊழியர்களின், இரண்டு நாள் சம்பளமான, 100 கோடி ரூபாய், பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.'வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தாமாக முன்வந்து, பிரதமர் பொது நிவாரண நிதிக்கு, தங்களது இரண்டு நாள் சம்பளத்தை வழங்கி உள்ளனர்.

எஸ்.பி.ஐ., தன் ஆதரவை, அரசுக்கு தொடர்ந்து வழங்கும்' என, வங்கி தலைவர், ராஜ்னிஷ்குமார் தெரிவித்துள்ளார். வங்கியின் ஆண்டு லாபத்தில், 0.25 சதவீதம், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் என, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...