Wednesday, August 26, 2020

பத்தாவது முறையாக கொரோனா நிவாரணம்

Added : ஆக 26, 2020 06:06





மதுரை:மதுரையில் யாசகம் பெற்று பூல்பாண்டி என்பவர் கலெக்டர் வினய்யிடம் 10வது முறையாக கொரோனா நிதி வழங்கினார்.

பொதுச்சேவையில் ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.துாத்துக்குடியை சேர்ந்த இவர் மார்ச்சில் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. மதுரையில் பல்வேறு பகுதிகளில் யாசகம் பெற்று முதல்முறையாக ரூ. 10ஆயிரத்தை மே யில் வழங்கினார்.

அதையடுத்து இதுவரை 10 முறை தலா ரூ.10ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1லட்சம் யாசகம் பெற்று நிவாரணமாக வழங்கியுள்ளார். இவருக்கு சுதந்திர தின விழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

அவர் கூறியதாவது: என்னை போல யாரும் யாசகம் கேட்டு பிழைக்கக்கூடாது. உழைத்து வாழ வேண்டும். பணம் மீது எனக்கு ஆசை இல்லாத காரணத்தால் தான் அதை யாசகம் பெற்று சேவைக்காக பயன்படுத்துகிறேன், என்றார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...