Tuesday, December 1, 2020
திருச்செந்தூா், காரைக்கால் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்க ஒப்புதல் முன்பதிவு இன்று தொடங்குகிறது
திருச்செந்தூா், காரைக்கால் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்க ஒப்புதல் முன்பதிவு இன்று தொடங்குகிறது
01.12.2020
சென்னை: சென்னை-திருச்செந்தூா், சென்னை-காரைக்கால் சிறப்பு ரயில் உள்பட 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (டிச.1) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை எழும்பூா்-திருச்செந்தூா், சென்னை எழும்பூா்-காரைக்கால், மதுரை-புனலூா் மெயில், மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் ஆகிய 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த ரயில்களை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன.
சென்னை-திருச்செந்தூா்: சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.05 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து தினசரி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
சென்னை-காரைக்கால்: சென்னை எழும்பூரில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் (06175) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு காரைக்காலை சென்றடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 4-ஆம்தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, காரைக்காலில் இருந்து இரவு 9.20 மணிக்கு சிறப்பு ரயில்(06176) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதிமுதல் தொடங்குகிறது.
மதுரை-புனலூா் மெயில்: மதுரையில் இருந்து தினசரி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் (06729) புறப்பட்டு, மறுநாள் காலை 10.20 மணிக்கு புனலூரை சென்றடையும் . இந்த ரயில் சேவை டிசம்பா் 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, புனலூரில் இருந்து தினசரி மாலை 5.20 மணிக்கு சிறப்பு ரயில் (06730) புறப்பட்டு மதுரையை காலை 6.20 மணிக்கு அடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுதவிர, மங்களூா் சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. முழுவதும் முன்பதிவு பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (டிச.1) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani
Subscribe to:
Post Comments (Atom)
-
விவேக் குவித்த சொத்துகள்; மலைத்துப்போன வருமான வரித்துறை..! MUTHUKRISHNAN S சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் குவித்துள்ள சொத்துகள்;...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
Too much frisking at PG NEET centres irks candidates By Express News Service | Published: 08th January 2018 02:23 AM | CHENNAI: Can...
No comments:
Post a Comment