Tuesday, April 20, 2021

மதுரையில் இருந்து வெளியூர் செல்ல கடைசி பஸ்கள் நேரம் அறிவிப்பு


மதுரையில் இருந்து வெளியூர் செல்ல கடைசி பஸ்கள் நேரம் அறிவிப்பு

Added : ஏப் 20, 2021 02:00

மதுரை : தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு (இரவு 10:00 - காலை 4:00 மணி) அமல்படுத்தப்படுவதால் மதுரையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கடைசியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரப்பாளையம்  மற்றும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து கடைசியாக இயக்கப்படும் பஸ்கள் நேரம் விவரம்:ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், கோவை, ஈரோடு - மாலை 5:00 மணி. கொடைக்கானல் -மாலை 5:45 மணி. திருப்பூர், பொள்ளாச்சி- மாலை 6:00 மணி. கரூர், கம்பம், பழநி - இரவு 7:00 மணி. தேனி, பெரியகுளம், திண்டுக்கல்- இரவு 8:00 மணி. நிலக்கோட்டை (வழி சோழவந்தான்) - இரவு 8:30 மணி.

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்செந்துார், நாகர்கோவில் - மாலை 5:00 மணி. ராமேஸ்வரம், தென்காசி - மாலை 6:00 மணி. திருச்சி, ராமநாதபுரம், நெல்லை - இரவு 7:00 மணி. ராஜபாளையம் - இரவு 7:30 மணி. சிவகங்கை, கோவில்பட்டி, சிவகாசி - இரவு 8:00 மணி. அருப்புக்கோட்டை, நத்தம் - இரவு 8:30 மணி.மாவட்ட பகுதி மற்றும் மாநகராட்சி எல்லைக்குள் இரவு 10:00 மணிக்குள் பஸ்கள் போய் சேரும் வகையில் இயக்கப்படும்.

ஞாயிறு முழு ஊரடங்கில் இயக்கப்படாது என பொது மேலாளர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களும் பகல் 12:00 மணிக்கு மேல் இயக்கப்படாது என பொது மேலாளர் (எஸ்.இ.டி.சி.,) அபிமன்யூ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...