Monday, July 24, 2023

அதிகாரிகளுக்கு ரூ.1.3 லட்சத்தில் லேப்-டாப்!


அதிகாரிகளுக்கு ரூ.1.3 லட்சத்தில் லேப்-டாப்!

மத்திய அரசு அதிகாரிகளுக்கு பணி நிமித்தமாக ரூ.1.3 லட்சம் வரையில் கைப்பேசி, மடிகணினி (லேப்டாப்) அல்லது அதுபோன்ற மின் சாதனங்கள் வழங்கலாம் எனவும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனங்களைத் சொந்த தேவைக்காக தக்க வைத்துக் கொண்டு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் அமைச்சகம் மற்றும் துறைகளில் பணிபுரியும் தகுதியுள்ள அதிகாரிகளுக்கு அதிகாரபூா்வ பணிக்காக கைப்பேசி, லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களை வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல்களில், 'மத்திய அரசின் பணியில் துணைச் செயலா் அல்லது அதற்கு மேல் பொறுப்பில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், மற்ற நிலை அதிகாரிகளில் 50 சதவீதம் பேருக்கும் அதிகாரபூா்வ பணிக்காக மின்னணு சாதனங்கள் வழங்கலாம். அந்த சாதனத்தின் விலையானது வரிகள் நீங்கலாக ரூ.1 லட்சம் இருக்க வேண்டும். 40 சதவீதத்துக்கும் மேலாக இந்திய தயாரிப்பில் உருவான சாதனங்களை வரிகள் நீங்கலாக ரூ.1.30 லட்சம் வரை விலை கொடுத்து வாங்கலாம். ஏற்கெனவே ஒரு சாதனம் ஒதுக்கப்பட்ட அதிகாரிக்கு 4 ஆண்டுகள் வரை புதிய சாதனம் வழங்கப்படக் கூடாது.

4 ஆண்டுகள் பயன்பாட்டுக்குப் பிறகு, அந்த மின்-சாதனத்தை சொந்த தேவைக்காக அதிகாரிகள் தக்க வைத்துக் கொள்ளலாம். அத்தகைய சூழலில், அதிகாரியிடம் சாதனம் ஒப்படைக்கப்படுவதற்கு முன், அதிலுள்ள அரசுத் தரவுகள் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட அமைச்சகம் /துறை உறுதிப்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 21-ஆம் தேதியிட்ட அறிவிக்கையில் இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய 2020-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்கள்படி, அதிகாரிகளுக்கு வழங்கும் சாதனங்களின் அதிகப்பட்ச விலை ரூ.80,000 ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக சாதனங்களைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.
Dailyhunt

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...