Wednesday, February 28, 2024

வருவாய் துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்: பணியை புறக்கணித்து 10,300 பேர் பங்கேற்பு


வருவாய் துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்: பணியை புறக்கணித்து 10,300 பேர் பங்கேற்பு



Last Updated : 28 Feb, 2024 05:04 AM


சென்னை: தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

பட்டதாரி அல்லாத பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.27-ம் தேதி முதல்காலவரையற்ற வேலைநிறுத்தத் தில் ஈடுபடுவது என பெரம்பலூரில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலர்கள் நேற்று வேலைநிறுத்தத்தை தொடங்கினர். அவர்கள் பணியை புறக்கணித்து, மாவட்ட, வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு புள்ளிவிவரத்தின்படி, தமிழகம் முழுவதும் நேற்று 10,327 பேர் பணிக்கு வரவில்லை.

இதுதொடர்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கபொதுச்செயலாளர் சு.சங்கரலிங் கம் கூறியதாவது:

வருவாய்த்துறையில் பதவி உயர்வு பட்டியல்கள் திருத்தத்தின் காரணமாக பணியிறக்கம் பெற்ற அலுவலர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பட்டதாரி அல்லாதபணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்து விதி திருத்த அரசாணை வெளியிடவில்லை.

மேலும், வருவாய்த்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களை முறையே இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் எனபெயர் மாற்றம் செய்ய வேண்டும்என கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. 8 ஆண்டுகள் ஆகியும் விதித்திருத்தம் செய்யப்படவில்லை. அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும் பயனில்லை. இதனால் வேறுவழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். கடந்த சில நாட்களாக முன்னெடுத்தபோராட்டங்களால் மக்களவைத்தேர்தல் பணிகள், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் அரசின்முக்கியத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் தேர்தல்பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

எனவே, கோரிக்கையை நிறைவேற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் வலியுறுத்தல்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி யுள்ளனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 13-ம் தேதிமுதல் தற்செயல் விடுப்பு, உண்ணாவிரதம், பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இதையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு நிர்வாகத்திலும், மக்கள்நலத்திட்டங்களை செயல்படுத்து வதிலும் முக்கியப் பங்கு வகிக்கும்வருவாய்த்துறையின் அலுவலர் களின் வேலைநிறுத்தத்தால், அரசின் திட்டங்களை பெற விண்ணப் பிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேசி அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...