Sunday, July 2, 2017

ஜிஎஸ்டி : எதன் விலை குறைகிறது? எதன் விலை உயர்கிறது?
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
16:19



புதுடில்லி : இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி.,யால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது, எந்தெந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்பது பற்றிய தெளிவான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவற்றின் விபரம் இதோ...

விலை குறையும் பொருட்கள் : கார்ன் பிளக்ஸ், டூத்பேஸ்ட், சோப், ஹேர் ஆயில், ஐஸ் க்ரீம், பாலாடை, பேக் செய்யப்பட்ட டீ மற்றும் காபி, பேக் செய்யப்பட்ட பிராண்டெட் ஆட்டா, பேக் செய்யப்பட்ட பன்னீர், மசாலா, ஸ்வீட்ஸ், பேக் செய்யப்பட்ட தயிர், எக்னாமிக் அளவிலான விமான பயண கட்டணம்.
விலை மாற்றமில்லா பொருட்கள் : பால், காய்கறிகள் மற்றும் பழங்கள், பிரெட், பாஸ்மதி அரிசி, ஆட்டா, ஷூஸ் வகைகள், மின்சாரம்.

விலை உயரும் பொருட்கள் : கூல் டிரிங்ஸ், சூயிங்கம், சாக்லேட், ஷாம்பூ, பேஸ் க்ரீம், டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மிஷின், நாற்காலிகள், வாட்ச்கள், வங்கி சேவைகள், வாடகை கார்கள், தொழில்துறை சேவைகள், விளம்பர சேவைகள், தொலைத் தொடர்பு சேவைகள், தூய்மை சேவைகள், அழகுநிலைய சேவைகள், ட்ரை க்ளீனிங் சேவைகள், பாதுகாப்பு சேவைகள், பராமரிப்பு சேவைகள், சட்டரீதியிலான சேவைகள், கொரியர் சேவைகள், சமையல் எண்ணெய், மெல்லிய அலுமினிய தகடு, பேக் செய்யப்பட்ட சிக்கன், வெண்ணெய், புஜியா, பேக் செய்யப்பட்ட பருப்பு வகைகள், தங்கம், ரெஸ்டாரென்ட் சேவைகள், ஒரு இரவுக்கு ரூ.1000 க்கு மேல் கட்டணம் கொண்ட ஓட்டல் கட்டணங்கள் .
பிற மாநிலத்தவருக்கு இன்ஜி., பதிவு துவக்கம்
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
22:52

சென்னை, பிற மாநில மாணவர்களுக்கான, இன்ஜி., மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, ௫௮௦க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிக்க, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில், தமிழகத்தை
வசிப்பிடமாக கொண்ட மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். பிற மாநிலத்தை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கு, தனி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. பிற மாநில மாணவர்கள், www.annauniv.edu என்ற இணையதளத்தில், ஜூலை, ௧௨ வரை விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலையின் பிரிவு மற்றும் வளாக கல்லுாரிகளான, கிண்டி இன்ஜி., கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழிற்நுட்பக் கல்லுாரி, ஆர்க்கிடெக்சர் கல்லுாரியான, 'சேப்' மற்றும் குரோம்பேட்டையிலுள்ள, எம்.ஐ.டி., கல்லுாரி போன்றவற்றில்,
௫௦ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.பி.ஆர்க்., படிப்புக்கு, இரு இடங்கள் 

மட்டும் ஒதுக்கப்படும். காஷ்மீரில் இருந்து இடம்
பெயர்ந்தவருக்கு, ஒரு இடம் உள் ஒதுக்கீடு உண்டு. தென் மண்டல மாநிலங்களுக்கு, ௧௬, மற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல மாநிலங்களுக்கு, மண்டலத்திற்கு தலா, ௧௧ இடம் ஒதுக்கப்படும்
என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை குழு கவர்னருடன் சந்திப்பு

பதிவு செய்த நாள்01ஜூலை
2017
22:34

சென்னை, அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, தகுதியான நபரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, தேடுதல் குழு உறுப்பினர்கள், நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, தகுதியான நபரை பரிந்துரை செய்ய, தேடுதல் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரை செய்த நபர்களை, கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து, தேடுதல் குழு கலைக்கப்பட்டது.

தற்போது, புதிதாக தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா, ஓய்வுபெற்ற அரசு கூடுதல் தலைமை செயலர் சுந்தரதேவன், கான்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர் அனந்தபத்மநாபன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு, துணை வேந்தர் பதவிக்கு, தகுதியான மூன்று நபர்களை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும். குழுவில் இடம் பெற்றுள்ள மூன்று பேரும், நேற்று சென்னை ராஜ்பவனில், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர்.

மருத்துவ படிப்பு சேர்க்கையில் சிக்கல்

பதிவு செய்த நாள்01ஜூலை
2017
19:06

'மருத்துவ படிப்புகளின் சேர்க்கைக்கு, பிளஸ் ௨வில், முதல் முறையில் தேர்ச்சி பெற வேண்டும்' என்ற கட்டுப்பாட்டால், தகுதியான மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மருத்துவ படிப்புகளான, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி கட்டாயமாகி உள்ளது. 

இம்ப்ரூவ்மென்ட்தமிழகத்தில், மருத்துவ
கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர, பிளஸ் ௨வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, விதிகளில் கூறப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன், பிளஸ் ௨வில் குறைந்த, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றவர்கள், 'இம்ப்ரூவ்மென்ட்' எனப்படும், மதிப்பெண் உயர்த்தும் தேர்வை எழுதி, அதில் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்பில் சேர்ந்தனர்.
அதனால், கல்வித்தரம் குறைவதாக கூறி, இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டன. சில ஆண்டுகளாக, அரசு தேர்வுத்துறை மூலம், இம்ப்ரூவ்மென்ட் தேர்வே நடத்தப்படுவதில்லை.
பிளஸ் ௨ தேர்வுக்கு விண்ணப்பித்து, எழுத முடியாதோர், தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதோருக்கு மட்டுமே, சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.

பாரபட்சமானதுபெற்றோர் கூறியதாவது:பிளஸ் ௨ தேர்வு நடக்கும் காலம், கோடை காலம் என்பதால், அந்த நேரத்தில், சின்னம்மை நோய் தாக்கம் ஏற்படுகிறது. அதனாலும், விபத்து, குடும்பத்தில் விரும்பத்தகாத சம்பங்களால், தேர்வில் பங்கேற்க முடிவில்லை. இத்தகைய மாணவர்கள், மீண்டும் தேர்வில் பங்கேற்று, அந்த முதல் முயற்சி யிலேயே தேர்ச்சி பெறுவது உண்டு. அப்படிப்பட்ட மாணவர்கள் கூட, மருத்துவ சேர்க்கைக்கு தகுதி இல்லை என்பது, பாரபட்சமானது.அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை பறிப்பது போல் உள்ளது. எனவே, முதல் முயற்சியில் தேர்ச்சி என்ற விதிகளில் தெளிவான திருத்தங்கள் கொண்டு வந்து, அனைத்து தகுதியான மாணவர்களுக்கும், மருத்துவ படிப்பில் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -




Advertisement
ஆகஸ்ட் வரை மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது

புதுடில்லி : நோயாளிகள் அத்தியாவசிய மருந்துகளை ஜிஎஸ்டி.,யை அமல்படுத்துவதற்கு முன்பு இருந்த விலையிலேயே வாங்கிக் கொள்ளலாம். அவற்றின் விலை உடனடியாக உயர்த்தப்படாது.ஆகஸ்ட் மாதம் வரை, ஜிஎஸ்டி கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்த விலையிலேயே மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என மருந்து விற்பனை துறையினர் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி.,யில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 12 சதவீதம் வரியும், இன்சுலின் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருந்துவ உபகரணங்களுக்கு 5 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.சில்லறை மருந்து விற்பனையாளர்கள் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள அத்தியாவசிய மருந்துகளை பழைய விலையிலேயே விற்கலாம். அந்த சரக்குகள் விற்று தீர்ந்த உடன், வாங்கும் புதிய சரக்குகளை ஜிஎஸ்டி., யுடன் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்திற்கு ஆளான பெண் சாதனை

பதிவு செய்த நாள்
ஜூலை 01,2017 22:16



ஜெய்ப்பூர், :குழந்தை திருமணத்திற்கு ஆளாகி, எட்டு வயதில் குடும்ப பொறுப்பேற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண், தன் இடைவிடாத முயற்சியால், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று, சாதனை
படைத்துள்ளார்.ராஜஸ்தானில், பா.ஜ.,வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இங்குள்ள ஜெய்ப்பூர் மாவட்டம் கரேரி கிராமத்தைச் சேர்ந்த ரூபா யாதவுக்கு, எட்டு வயதில், 12 வயது சிறுவனுடன் திருமணம் நடந்தது. அவரின் மூத்த சகோதரிக்கும், மற்றொரு சிறுவனுடன் குழந்தை திருமணம்
நடந்தது.

திருமணத்தின் போது, மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரூபா யாதவ், கல்வி மீதான தாக்கத்தால், தொடர்ந்து படிக்க விரும்புவதாக தெரிவித்தார். அவரின் புகுந்த வீட்டாரும், இதற்கு சம்மதம் தெரிவித்தனர். கல்வியில் சிறந்து விளங்கிய ரூபா, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 84 சதவீத மதிப்பெண் பெற்றார்.
குடும்ப பொறுப்பை கவனித்துக் கொண்டே, தேர்வில் சாதனை படைத்த ரூபாவை கண்டு, அவரின் கணவர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். தொடர்ந்து தன் மனைவியை படிக்க வைக்கவும் முடிவு செய்தார். தினமும், ஆட்டோ ஓட்டி அதில் கிடைக்கும் வருமானத்தில், மனைவி ரூபாவை, பிளஸ் 2 படிக்க வைத்தார். அவரின் முயற்சிக்கு, ரூபாவின் அக்காள் கணவரும் துணை நின்றார்.
பத்தாம் வகுப்பை போலவே, பிளஸ் 2 தேர்விலும், 84 சதவீத மதிப்பெண் பெற்ற ரூபா, அந்த ஆண்டு நடந்த அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்விலும் வெற்றி பெற்றார். எனினும், அகில இந்திய அளவில், 23 ஆயிரமாவது இடம் பிடித்ததால், அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்கவில்லை.
எனினும், சோர்வடையாமல், கல்லுாரியில், பி.எஸ்சி., படிப்பில் சேர்ந்து படித்தார். ரூபாவை, டாக்டர் ஆக்கியே தீர வேண்டும் என முடிவெடுத்த அவரின் கணவர், நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்க வைத்தார். 

கடந்த ஆண்டு, நீட் தேர்வில் தோல்வி அடைந்த போதும், அவரது அயராத முயற்சியை கண்டு வியந்த, தனியார் பயிற்சி மையம், ரூபாவுக்கு உதவித் தொகை வழங்கி, பயிற்சியும் அளித்தது.ஏழை குடும்பத்தில் மகளாக பிறந்து, எட்டு வயதில் குழந்தை திருமணத்திற்கு ஆளாகி, குடும்ப பொறுப்பையும் கவனித்து வந்த ரூபா, இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில், அகில இந்திய அளவில், 2,612ம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், ரூபாவுக்கு, சிறந்த அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
"இ-சேவை' மையங்களில்... "ஸ்மார்ட் கார்டு' இனி, எளிதாக பெறலாம்

பதிவு செய்த நாள்02ஜூலை
2017
07:13




திருப்பூர் : மாவட்டம் முழுவதும் உள்ள, பொது "இ-சேவை' மையங்களில், புதிய "ஸ்மார்ட்' கார்டுக்கும், ஸ்மார்ட் கார்டு திருத்தம் கோரியும் விண்ணப்பிக்கலாம்; தாலுகா அலுவலக "இ-சேவை'மையத்தில், திருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு "பிரின்ட்' செய்து கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 6.70 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றில், 3.55 லட்சம் "ஸ்மார்ட்' கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. மீதியுள்ள கார்டுதாரர்களின் விவரம் சரிபார்த்து, கார்டு அச்சிடப்பட்டு வருகிறது."ஸ்மார்ட்' கார்டு தயாரிப்பு புதிய திட்டம் என்பதால், எதிர்பாராத குழப்பங்கள் அதிகம் உள்ளன. அவற்றை திருத்துவதற்கு, "இ-சேவை' மையம் மட்டுமல்ல, மற்ற கம்ப்யூட்டர் சென்டர்களிலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஸ்மார்ட்' கார்டில் உள்ள தவறான தகவல்களை திருத்தம் செய்ய, "இ-சேவை' மையங்களில், தகுந்த ஆதாரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.பெயர் தவறாக இருந்தால், அதற்கான ஆதாரத்தையும்; முகவரி மாறியிருந்தால், அதற்குரிய ஆதாரத்தையும் கொடுத்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, கார்டில் உள்ள தவறுகள் திருத்தப்பட்டதும், தாலுகா அலுவலக "இ-சேவை' மையத்துக்கு சென்று, புதிய கார்டுகளை "பிரின்ட்' செய்து கொள்ளலாம். அதற்காக, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களை செலுத்தி, சேவைகளை பெறலாம்.புதிய கார்டு தேவைப்படும் குடும்பத்தினர், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டை, வீட்டுவரி ரசீது அல்லது வாடகை ஒப்பந்தம், குடும்ப தலைவரின் போட்டோ, வங்கி பாஸ்புக் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, காஸ் இணைப்பு புத்தகம் ஆகிய ஏதேனும், முகவரி மற்றும் அடையாள ஆவண அசலுடன் சென்று, "இ-சேவை' மையங்களில் விண்ணப்பிக்கலாம். ஆதார் விவரம் பதிவு செய்யப்படுவதால், முன்பு பெயர் இருந்த கார்டில் இருந்து, பெயரை நீக்கியதற்கான சான்று எதுவும் தேவையில்லை.குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:பொது "இ-சேவை'மையங்களில்,"ஸ்மார்ட்' கார்டு தொடர்பான சேவைகளை பெறலாம். புதிய கார்டு கேட்டும், திருத்தம் கோரியும் விண்ணப்பிக்கலாம். சரியான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தால், விரைவில் "ஸ்மார்ட்' கார்டு கிடைக்கும். "போட்டோ' மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களையும் எளிதாக மேற்கொண்டு, உடனுக்குடன் திருத்திய அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மருத்துவ மாணவர் சேர்க்கை வழக்கு: சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள்02ஜூலை
2017
04:07



புதுடில்லி: தமிழகத்தில், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையை, 'நீட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுக்கு பதிலாக, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும், பதிலளிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள், ஏ.எம்.சாப்ரே மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.தமிழக அரசுஅப்போது, மனுதாரர் சார்பில் கூறப்பட்டதாவது:மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட, 'நீட்' எனப்படும், தேசிய நுழைவுத் தேர்வுக்கு, கடந்த கல்வியாண்டில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது; இந்த ஆண்டும் விலக்கு பெறுவதாக தமிழக அரசு கூறி வந்தது.

இதனால், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என, மாணவர்களும், பெற்றோரும்எண்ணி இருந்தனர்.ஆனால் தற்போது, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும் என, தமிழக அரசுஅறிவித்துள்ளது.இதனால், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை, பிளஸ் 2 தேர்வு அடிப்படையில் நடத்த வேண்டும்.

இவ்வாறு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஒத்திவைப்புஇதையடுத்து, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதனிடையே, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழிற்நுட்ப நிறுவன மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு, ஜே.இ.இ., மற்றும் ஐ.ஐ.டி., இயக்குனருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

Saturday, July 1, 2017

Doctor News

3–ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாயமான டாக்டர் குடிநீர் தொட்டியில் பிணமாக கிடந்தார்

மாயமான டாக்டர் குடிநீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். 3–ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜூலை 01, 2017, 04:45 AM

செங்குன்றம்,

சென்னையை அடுத்த கொளத்தூர், பூம்புகார் நகர் 2–வது பிரதான சாலையில் வசித்து வருபவர் நாகராஜன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களது மகன் ராஜேஷ்குமார் (வயது 26), மகள் ஸ்ரீலேகா. இவர்களுடைய சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்.

டாக்டரான ராஜேஷ்குமார் முகப்பேர் மேற்கு பகுதியில் கிளினிக் மற்றும் மருந்து கடை நடத்திவந்தார். மருந்து கடையை அவருடைய தந்தை நாகராஜன் கவனித்து வந்தார்.

டாக்டர் ராஜேஷ்குமாருக்கும், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் 3–ந் தேதி காரைக்குடியில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நாகராஜன்–சாந்தி இருவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சொந்த ஊரான திருப்பத்தூர் சென்றுவிட்டனர்.

வீட்டில் ராஜேஷ்குமாரும், அவருடைய தங்கை ஸ்ரீலேகாவும் மட்டும் இருந்தனர். கடந்த 28–ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜேஷ்குமார் அதன் பிறகு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீலேகா, தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அவர்கள் சென்னைக்கு விரைந்து வந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதுபற்றி கொளத்தூர் போலீசில் நாகராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் ராஜேஷ்குமாரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கொளத்தூர் பூம்புகார் நகர் அருகே உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகர், வில்லிவாக்கம் உதவி கமி‌ஷனர் ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் முனிசேகர் (கொளத்தூர்), கோபிநாத் (ராஜமங்கலம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குடிநீர் தொட்டியின் மூடியை பொக்லைன் எந்திரம் மூலம் திறந்து பார்த்தனர்.

அப்போது குடிநீர் தொட்டியின் உள்ளே டாக்டர் ராஜேஷ்குமார், அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் ராஜேஷ்குமாரை யாராவது கொலை செய்து, உடலை குடிநீர் தொட்டியில் வீசிச் சென்றார்களா? அல்லது அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரித்து வருகின்றனர்.

3–ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் டாக்டர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

________________________________

NEET UG 2017


‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 4–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஜூலை 01, 2017, 05:15 AM

புதுடெல்லி,

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 4–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

சென்னையைச் சேர்ந்த முருகவேல் என்பவர் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கடந்த 2015–16–ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப்பள்ளியில் படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் தாங்கள் பிளஸ்–2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் 2017–18–ம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு யாரும் எதிர்பாராத விதமாக நீட் தேர்வு (தேசிய தகுதி நுழைவுத்தேர்வு) அமல்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சென்ற ஆண்டு மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது பிளஸ்–2 வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அதுபோன்ற விதிவிலக்கு அளிக்காதது பாரபட்சமானதாகும்.

எனவே, 2016–17–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–2 வகுப்பு தேறிய மாணவர்களுக்கும் முன்பு அளித்தது போல் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏம்.எம்.சப்ரே, சஞ்சய் கி‌ஷண் கவுல் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு மனுதாரர் சார்பில் வக்கீல் சபரீஷ் நேற்று ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருகிற 4–ந் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

டாஸ்மாக்கை நொறுக்கிய பொதுமக்கள்


திருவாரூரில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

2017-07-01@ 05:23:32

திருவாரூர்: திருவாரூர் அருகே  டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். திருவாரூர் அடுத்த கண்கொடுத்தவணிதம் கடைத்தெருவில் இயங்கி வந்த மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை அங்கிருந்து அகற்றி நத்தம் கிராமத்தில் புதிதாக அமைப்பதற்காக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அப்போது அந்த இடத்தில் மளிகை கடைக்காக கட்டிடம் கட்டப்படுவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 26ம் தேதி திடீரென அந்த கட்டிடத்தின் பக்கவாட்டில் தகர சீட் ஷெட் அமைக்கப்பட்டு மதுக்கடையை தொடங்கி விற்பனை நடந்தது. இதையடுத்து 27ம் தேதி சம்பவ இடத்துக்கு சென்று கடையை அகற்றுமாறு பொதுமக்கள் தெரிவித்தனர். கடந்த 4 நாட்களாக டாஸ்மாக் கடை திறக்கவில்லை. இதைதொடர்ந்து நேற்று அந்த ஷெட்டை பிரித்து எரிந்து அங்கிருந்த நாற்காலிகளை பொதுமக்கள் அடித்து உடைத்தனர். கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின், போராட்டம் கைவிடப்பட்டது.

சொத்து முடக்கம்


மருத்துவ கல்லூரி சீட்டு மூலம் 91 கோடி பணம் பரிமாற்றம் வேந்தர் மூவிஸ் மதனின் 6.35 கோடி சொத்து முடக்கம்

2017-07-01@ 01:54:54

சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ சீட்டு மூலம் 91 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வேந்தர் மூவிஸ் மதனின் 6.35 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன் கடந்த ஆண்டு மே 27ம் தேதி மாயமானார். 179 நாட்களுக்கு பிறகு கடந்த நவம்பர் 21ம் தேதி திருப்பூரில் அவரது காதலி வர்ஷா வீட்டில் பதுங்கியிருந்தபோது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனை கைது செய்தனர். பின்னர் போலீசார் மதனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து மதனுடன் நெருக்கமாக இருந்த இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மற்றும் சினிமா தயாரிப்பாளர்களான அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பாலகுரு, பைனான்சியர் ராம் மற்றும் ராம் குமார், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவின் மகன்கள் ரவி பச்சமுத்து, சத்தியநாராயணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மதன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 10 கோடி சொந்த ஜாமீனில் மதன் சில நாட்களுக்கு முன் வெளியே வந்தார்.எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவ சீட்டு விவகாரத்தில் 91 கோடி பணம் வருமான வரித்துறையிடம் எந்தவித கணக்கும் காட்டாமல் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் 91 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து ஏராளமான ஆவணங்களை சேகரித்தனர். பின்னர், பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.  அதன்படி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதன் அனைத்து ஆவணங்களுடன் கடந்த மே 22,  23ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது மருத்துவ சீட்டு விவகாரத்தில் ஒவ்வொரு மாணவர்களிடமும் 50 லட்சம் முதல் 1.5 கோடி வரை பணம் வசூலித்தது தெரியவந்தது. 

இதுபோல் 133 மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ₹91 கோடி பணம் மதன் வங்கி கணக்கு மற்றும் சட்டவிரோதமாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மற்றும் பல்கலைக்கழக வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.  இந்த பணத்திற்கான முறையான வருமான வரி செலுத்தப்படவில்லை. இதன் மூலம் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மே 23ம் தேதி விசாரணை முடிவில் வேந்தர் மூவிஸ் மதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது ெசய்தனர். இந்நிலையில் 91 கோடி பணத்தை சட்ட விரோதமான பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனுக்கு சொந்தமான சென்னை வடபழனி கானாப்பா நாயுடு தெருவில் உள்ள அடுக்குமாடி வீடு, சாலிகிராமம் என்.எஸ்.கே. சாலையில் உள்ள நிலம் மற்றும் கேரளாவில் உள்ள இரண்டு அசையா சொத்துக்கள் என மொத்தம் 6.35 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது.

ஆகாயம் ஆளும் இண்டிகோ

விகடன்

ஆகாயம் ஆளும் இண்டிகோ... அதை அண்ணாந்து பார்க்கும் ஏர் இந்தியா!

 எம்.குமரேசன்

நேற்று பிறந்தவனெல்லாம் இன்றைக்கு `என்னை மிரட்டுறியா?' எனக் கேட்பதுபோல் இருக்கிறது ஏர் இந்தியா - இண்டிகோ கதை!

இந்தியாவின் முதல் விமான நிறுவனம் Air India. `டாடா ஏர்லைன்ஸ்' என்ற பெயரில் 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பிறகு 1953-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. 1994-ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத் தாராளமயமாக்கத்தால் தனியார் விமான நிறுவனங்களும் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தன. தனியார் நிறுவனங்கள் தந்த போட்டியை Air India நிறுவனத்தால் சமாளிக்க முடியவில்லை. தற்போது வரை ஏர் இந்தியாவுக்கு 60 ஆயிரம் கோடி  ரூபாய் கடன் இருக்கிறது. இதில், வங்கிக்கடன் 52 ஆயிரம் கோடி ரூபாய். பெட்ரோல் வாங்கிய வகையில் விமானக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கிறது. 

அரசு வழங்கும் 30 ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தில்தான் Air India நிறுவனம் இயங்கிவருகிறது. இரு நாள்களுக்கு முன், ஏர் இந்தியாவை தனியார்வசம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்தது. அதன்படி, அந்த விமான நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட மத்திய அரசின் பங்குகள் திரும்பப்பெறப்பட உள்ளன. இந்த நிறுவனத்துக்கு உள்ள சொத்துகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கப்படவிருக்கிறது.

ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனமும் இண்டிகோ நிறுவனமும் ஆர்வம்காட்டியுள்ளன. இண்டிகோ நிறுவனத் தலைவர் ஆதித்யா கோஷ் நிதியமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், `ஏர் இந்தியாவின் சர்வதேச மார்க்கங்களையும், குறைந்த கட்டணச் சேவையான `ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' மார்க்கங்களையும் வாங்க ஆர்வம்' எனத் தெரிவித்துள்ளார். ஒருவேளை இது சாத்தியமற்றதாக இருந்தால், Air India நிறுவனத்தையே வாங்கிக்கொள்ள இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

சரி... Air India நிறுவனத்தையே வாங்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் இண்டிகோ நிறுவனத்தின் பின்னணி என்னவென்று ஆராய்ந்தால், கடந்த 2006-ம் ஆண்டுதான் இந்த நிறுவனமே தொடங்கப்பட்டுள்ளது. `இன்டர்குளோப் என்டர்பிரைசஸ்' தலைவர் ராகுல் பாட்டியா, அமெரிக்கத் தொழிலதிபர்  Caelum Investments ரகேஷ் கங்வால் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். 

2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லியிலிருந்து இம்பாலுக்கு இண்டிகோவின் முதல் விமானம் கவுஹாத்தி வழியாகப் பறந்தது. இரு பெரிய நகரங்களுக்கு இடையே உள்ள குட்டி நகரங்களை இணைத்தே இண்டிகோ இந்தியச் சந்தையை வசப்படுத்தத் தொடங்கியது. கட்டணமும் குறைவு.  உள்நாட்டில் சேவை வழங்கி ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் இண்டிகோவுக்கு சர்வதேச மார்கத்தில் விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு ஏர் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உள்நாட்டுச் சந்தையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இண்டிகோவின் உள்நாட்டுச் சந்தை அப்போது 17.3 சதவிகிதமாக இருந்தது. முதல் இடத்தில் விஜய்மல்லையாவின் கிங் ஃபிஷர், அடுத்த இடத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் இருந்தன.

2012-ம் ஆண்டு 50 விமானங்களுடன் உள்நாட்டுச் சந்தையில் முதல் இடத்தில் இருந்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது இண்டிகோ. தற்போது உள்நாட்டுச் சந்தையில் 41.2 சதவிகிதத்தை இண்டிகோ தக்கவைத்திருக்கிறது. இரண்டாவது இடத்திலுள்ள ஜெட் ஏர்வேஸ் உள்நாட்டுச் சந்தை மதிப்பு வெறும் 17 சதவிகிதம்தான். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இது. ஒரு மாதத்தில் இண்டிகோ விமானங்களில் 35 லட்சம் பேர் பறந்தால், ஜெட் ஏர்வேஸில் 13 லட்சம் பேர்தான் பறக்கின்றனர்.

பணமதிப்பு அறிந்து நடப்பது, குறித்த நேரம், வாடிக்கையாளர்கள் மனம் கோணாமல் நடப்பது இண்டிகோவின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள். குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை அளிக்கும் நிறுவனமாக இதை வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். இண்டிகோவைப் பொறுத்தவரை, 180 இருக்கைகள்கொண்ட விமானங்களைத்தான் இயக்குகிறது. முதல் வகுப்பு, பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுகள் எல்லாம் கிடையாது. பெரும்பாலான சேவைகளில் உணவும் வழங்கப்படாது. தற்போது இந்தியாவின் 48 நகரங்களுக்கும் 7 சர்வதேச மார்க்கங்களிலும் இண்டிகோ விமான சேவை வழங்குகிறது. 

தொடங்கிய பத்து ஆண்டுகளில் வாடிக்கையாளர் சேவை, நற்மதிப்பு போன்றவற்றால் உள்நாட்டு விமானச் சந்தையில் இண்டிகோ `மோனோபொலி ' ஆகியிருக்கிறது. ஏர் இந்தியாவோ நிர்வாகக் குளறுபடிகளால் பாரம்பர்யத்தை இழந்து விற்பனைக்கு வந்து நிற்கிறது.

அலுவலக இடமாற்றம்

ஓய்வூதிய அலுவலக முகவரி மாற்றம்

2017-07-01@ 04:50:38

சென்னை: சென்னையில் உள்ள கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கருவூலக் கணக்கு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தற்போதுள்ள ஈ.வெ.கி. சம்பத் மாளிகை, டிபிஜ வளாகம், கல்லூரி சாலை, சென்னை-06 என்ற முகவரியில் இருந்து ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டிடம் (தரைத்தளம்), 571, அண்ணா சாலை, நந்தனம், கால்நடை மருத்துவமனை வளாகம், சென்னை-35 என்ற புதிய முகவரியில் நாளை மறுதினம் (3ம் தேதி) முதல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தக்காளி விலை கிடு கிடு உயர்வு

தக்காளி விலை ரூ.100 : டில்லியில் 'கிடுகிடு' உயர்வு

பதிவு செய்த நாள்

30ஜூன்
2017 
23:46

புதுடில்லி: வட மாநிலங்களில், கடும் கோடைக்குப் பின் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக, வரத்து குறைவு காரணமாக, டில்லியில் ஒரு கிலோ தக்காளி, 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இவ்வார துவக்கத்தில், டில்லியில் சில்லரை விற்பனை கடைகளில், ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வரத்து குறைந்ததால், தக்காளியின் விலை, 80 ரூபாய் வரை உயர்ந்தது. இரு தினங்களில், 100 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆசாத்பூர் காய்கறி மண்டி வியாபாரிகள் கூறியதாவது: தக்காளி விளையும் ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில், கடும் கோடைக்குப் பின், தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. டில்லியில் விற்பனை செய்யப்படும் தக்காளி ஹரியானா மாநிலத்தில் இருந்து வருகிறது. தினமும், 100 லாரிகள் வருவதற்கு பதில், 60 லாரிகளே வருவதால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சித்தா ஆயுர்வேத படிப்பு விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்பம் எப்போது?

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
00:41

'அரசு அனுமதி கிடைத்ததும், சித்தா, ஆயுர்வேத படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என, மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது. ஆனால், சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இந்தாண்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 'நீட்' தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், தேர்வு எழுதாதவர்கள், இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், இதற்கான விண்ணப்ப வினியோகம் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு, மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து, மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் கூறியதாவது: இந்திய மருத்துவ முறை படிப்புகள் உள்ள கல்லுாரிகளுக்கு, ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்குகிறது. இதுவரை, அனுமதி பெற்ற கல்லுாரிகள் பட்டியலை வெளியிடவில்லை. இருப்பினும், விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிக்கை, தயார் நிலையில் உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும், 
வினியோகம் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போதைய சூழலில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிந்த பிறகே, இந்திய மருத்துவ முறை படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என்றார்.

- நமது நிருபர் -

NEWS TODAY 23.12.2025