Sunday, July 2, 2017

ஆகஸ்ட் வரை மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது

புதுடில்லி : நோயாளிகள் அத்தியாவசிய மருந்துகளை ஜிஎஸ்டி.,யை அமல்படுத்துவதற்கு முன்பு இருந்த விலையிலேயே வாங்கிக் கொள்ளலாம். அவற்றின் விலை உடனடியாக உயர்த்தப்படாது.ஆகஸ்ட் மாதம் வரை, ஜிஎஸ்டி கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்த விலையிலேயே மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என மருந்து விற்பனை துறையினர் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி.,யில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 12 சதவீதம் வரியும், இன்சுலின் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருந்துவ உபகரணங்களுக்கு 5 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.சில்லறை மருந்து விற்பனையாளர்கள் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள அத்தியாவசிய மருந்துகளை பழைய விலையிலேயே விற்கலாம். அந்த சரக்குகள் விற்று தீர்ந்த உடன், வாங்கும் புதிய சரக்குகளை ஜிஎஸ்டி., யுடன் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...