Friday, July 7, 2017

சிவகங்கையில் வருவாய்த்துறையினர் மோதல் : 22 பேர் மீது வழக்கு: 2 தாசில்தார்கள் 'சஸ்பெண்ட்'

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
00:33

சிவகங்கை: சிவகங்கையில் வருவாய்த்துறையினர் இடையே ஏற்பட்ட மோதலில் 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இரண்டு தாசில்தார்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முன்தினம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழியிடம் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வெளியே வந்தபோது அவர்களிடம் வருவாய்த்துறை அலுவலர் சங்க விடியல் டீமைச் சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கினர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன், மாவட்டச் செயலாளர் தமிழரசன், துணைத் தலைவர் அசோக்குமார் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழரசன் புகாரில் விடியல் டீமைச் சேர்ந்த மகேந்திரன், பாலாஜி, பாலகுரு, ஆனந்தபூபாலன் உட்பட 8 பேர் மீதும், மகேந்திரன் புகாரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த குமரேசன், பார்த்தீபன், கண்ணன், மூக்கையன், அசோக்குமார், தமிழரசன் உட்பட 14 பேர் மீதும் சிவகங்கை டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். இதுதொடர்பாக விடியல் டீமைச் சேர்ந்த பறக்கும் படை தாசில்தார் பாலகுரு, வனத்திட்ட தாசில்தார் பாலாஜி ஆகியோரை நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்தது.

மேலும் வருவாய் அலுவலர்துறை அலுவலர் சங்க நிர்வாகிகளை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்றுமுன்தினம் இரவில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு வரவில்லை. ஊழியர்கள் போராட்டத்தால் பணிகள் ஸ்தம்பித்தன.
அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது: கலெக்டர் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதலுக்கு சாட்சியே கலெக்டர் தான். தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்காமல், காயமடைந்த தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலெக்டர் அறைமுன் இருந்த 'சி.சி.டி.வி.,' கேமராவில் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. அதனை அழித்துள்ளனர். இதற்கு போலீசாரும் உடந்தை. உரிய நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.,யை கண்டிக்கிறோம். தாக்கியோரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும். கலெக்டரை மாறுதல் செய்ய வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

புதிய பிரச்னையைகிளப்பும் போலீசார்

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல போலீசார் தடை விதித்தனர். '144 தடை' உத்தரவு போன்று நிருபர், அதிகாரிகளை கூட அனுமதிக்கவில்லை. அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அனுமதித்தனர். ஆனால் கடைசி வரை மக்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலிடத்து உத்தரவால் தடை போட்டதாக போலீசார் கூறினர். இதனால் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இறந்த டாக்டர் உயிரோடு இருப்பதாக சான்று : டாக்டர் மீது வழக்கு

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
00:18

மதுரை: மதுரையில் இறந்த டாக்டர் முரளி உயிரோடு இருப்பதாக கூறி சான்று அளித்து இடவிற்பனைக்கு உதவியதாக, டாக்டர் கணேசன் மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ஒத்தக்கடை ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் முரளி. நரசிங்கத்தில் வீட்டு மனை விற்பனைக்காக திருவாதவூர் திராவிடமணிக்கு,67, ஜெனரல் பவர் பத்திரம் கொடுத்தார். இந்நிலையில் அவர் கடந்த ஏப்.,28 ல் இறந்தார். இதைதொடர்ந்து வீட்டு மனைகளை விற்க திட்டமிட்ட திராவிட மணி, மேலுார் டாக்டர் கணேசனிடம் முரளி உயிரோடு இருப்பதாக 'ஆயுள் சான்று' பெற்றார். இதைதொடர்ந்து, திருவாதவூர் செழியன், பார்த்தசாரதி மனைவி ஜீவாவுக்கு திராவிட மணி கிரைய பத்திரம் செய்து கொடுத்தார். இதுகுறித்து ஒத்தக்கடை சார்பு பதிவாளர் நாகசுப்பிரமணியன் புகாரில் பத்திர எழுத்தர் ராஜமாணிக்கம்,49, டாக்டர் கணேசன் உட்பட 5 பேர் மீது ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார். திராவிடமணி, ராஜமாணிக்கம் கைது செய்யப்பட்டனர்.
பிரச்னைகளை சமாளிக்கும் திறனுள்ளவரை தனி அலுவலராக நியமிக்க அரசு உத்தரவு

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
00:49

'பிரச்னைகளை எளிதாக கையாளுபவர்களையும், அனுபவம் வாய்ந்தவர்களையும், தனி அலுவலர் பொறுப்புடன் கூடிய, வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2016 அக்., 24ல் நிறைவடைந்தது. அதன்பின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய அளவிலான அனைத்து ஊராட்சிகளுக்கான, தனி அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வறட்சி பாதிப்பு : மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தனி அலுவலர்களுக்கு, 'செக் பவர்' வழங்கப்பட்டு உள்ளது. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், அந்தந்த செயல் அலுவலர் மற்றும் கமிஷனர்கள், தனி அலுவலர்களாக பணியாற்றுகின்றனர்.

ஒன்றிய அளவிலான பிரச்னைகளையும், நிர்வாகப் பணிகளையும், ஒன்றிய கமிஷனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இருப்பினும், ஊராட்சி தலைவர்கள் கவனித்து வந்த பொறுப்புகளை சுமப்பது, பெரும் சிரமமாக உள்ளது. வறட்சி பாதிப்பு, குடிநீர், தெரு விளக்கு, திடக்கழிவு மேலாண்மை, ஊரக வேலை உறுதித் திட்டம் என, ஊராட்சி தலைவர் கவனித்த பொறுப்புகளை, திறன் வாய்ந்த தனி அலுவலர்கள் மட்டுமே, பிரச்னையின்றி கவனிக்க முடிகிறது.

சுற்றறிக்கை : நிதியாண்டு துவங்கிய பின், வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் நடந்தது. அவர்களில், நீண்ட அனுபவம் வாய்ந்தவர்கள், பணிகளுக்கு திரும்பினர்.அனுபவம் இல்லாதவர்கள், தனி அலுவலர் பொறுப்புடன் கூடிய, வட்டார வளர்ச்சி அலுவலராக செயல்பட்ட போது, பலரால், மக்கள் பிரச்னைகளை சமாளிக்க முடியவில்லை.இதையடுத்து, அனுபவம் வாய்ந்தவர்களை மட்டுமே, தனி அலுவலர் பொறுப்புடன் கூடிய, வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்க வேண்டும் என, தமிழக அரசு, கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியது. இதன்படி, மீண்டும் பணியிட மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே, மக்கள் பிரச்னைகளை எளிதாக கையாண்ட, அனுபவம் வாய்ந்தவர்கள், தனி அலுவலர் பொறுப்புடன் கூடிய, வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளதாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 அசல் சான்றிதழ் 10ம் தேதி வினியோகம்

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
00:47

சென்னை: 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, 1௦ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி, மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்தனர்.இந்நிலையில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 10ம் தேதி காலை, 10மணி முதல், பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தனித்தேர்வர்கள், தேர்வு எழுதிய பள்ளிகளில், சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது
நாக்' தர மதிப்பீடு பெறாவிட்டால் கல்லூரி அங்கீகாரம் ரத்து

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
00:04

ஆசிரியர் பயிற்சி படிப்பு நடத்தும், பி.எட்., கல்லுாரிகள், 'நாக்' தர மதீப்பீடு பெறாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு, ஆசிரியர் பணிக்கான, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை, கல்வியியல் கல்லுாரிகள் நடத்துகின்றன. இந்த கல்லுாரிகளுக்கு, தேசிய கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், பி.எட்., கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை மூலம் இணைப்பு தரப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கான விதிகளில், என்.சி.டி.இ., மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, அங்கீகாரம் பெற்ற அனைத்து பி.எட்., கல்லுாரிகளும், அங்கீகாரம் பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள், தேசிய தர மதிப்பீட்டு நிறுவனமான, 'நாக்' அமைப்பின் தர மதிப்பீடு பெற வேண்டும். அவ்வாறு பெறாத கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், தமிழகத்திலுள்ள, ௭௫௦க்கும் மேற்பட்ட பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நர்சிங் மாணவி மர்ம சாவு 'ராகிங்' கொடுமையா?

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
02:17

வேலுார்: மாணவி மர்மமான முறையில் துாக்கில் பிணமாக தொங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.

வேலுார், பாகாயத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 56; தொழிலதிபர். இவரது மகள் நளினி, 18, சி.எம்.சி., நர்சிங் கல்லுாரி விடுதியில் தங்கி, முதலாமாண்டு நர்சிங் படித்து வந்தார். நேற்று காலை, நளினி கல்லுாரிக்கு செல்லவில்லை. காலை, 9:00 மணிக்கு, சக மாணவியர், அவரது அறைக்கு சென்று பார்த்த போது, நளினி துாக்கில் பிணமாக தொங்கினார். மாணவியின் குடும்பத்தினர், நளினி சாவில் மர்மம் இருப்பதாகவும், 'ராகிங்' கொடுமையால், தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் புகார் அளித்தனர்.

தகவல் அறியும் சட்டத்தில் கவர்னர்

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
05:54




புதுடில்லி: 'மாநில கவர்னர்கள் போன்ற, அரசியல் சட்டத்தை செயல்படுத்தும் உயர் பொறுப்பில் உள்ளவர்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மாநில கவர்னர்களின் அறிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரி தாக்கலான வழக்கு விசாரணையின் போது, இந்த கேள்வியை, சுப்ரீம்கோர்ட் எழுப்பியது.
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை

பதிவு செய்த நாள்
ஜூலை 06,2017 23:34




ஆமதாபாத்: நாட்டிலேயே முதல் முறையாக, 'கிரையிங் கிளப்' எனப்படும், அழுவதற்கான கிளப், குஜராத் மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உடல்நலத்தை பேணும் வகையில், ஹெல்த் கிளப், புன்னகையாளர் கிளப் என, பல கிளப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில், முதல் முறையாக, ஹெல்த்தி கிரையிங் கிளப்' என்ற கிளப்பை, கமலேஷ் என்பவர் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

'ஹியூமர் மற்றும் லாப்டர்' கிளப்புகள் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில், உறுப்பினர்கள் பங்கேற்று, நகைச்சுவையாக பேசுவதன் மூலமும், வாய்விட்டு சிரிப்பதாலும், அவர்களது மன இறுக்கங்கள் குறைந்து, நோயும் குணமாகிறது. அதேபோல், பிரச்னைகளின் போதும், துக்கத்தை மனதில் அடைத்து வைத்திருந்தாலும், உடல்நிலை பாதிக்கப்படும். அதுபோன்ற நேரத்தில், இந்த கிளப்பிற்கு வந்து, மனதில் உள்ள பாரம் நீங்கும் வரை, வாய்விட்டு அழலாம்.
குழந்தை பருவத்தில் அழுகை என்பது, அவர்களின் தேவை அல்லது உடல் உபாதையை குறிப்பிடும். பெரியவர்களான பின், அழுகையை கட்டுப்படுத்துவது, பல நோய்களுக்கு காரணமாகிறது. இதன் காரணமாகவே, இந்த கிளப் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி லட்டு, தரிசன டிக்கெட் விலை உயரும்?
தேவஸ்தானத்திற்கு ரூ.420 கோடி இழப்பாம்!

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், 420 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், லட்டு பிரசாதம் மற்றும் தரிசன டிக்கெட் விலை உயர வாய்ப்புஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு பட்ஜெட், 2,500 கோடி ரூபாய்க்கும் மேல். ஒவ்வொரு ஆண்டும் வருவாய் உயர் வுக்கு தக்கபடி, தேவஸ்தானத்தின் பட்ஜெட் தொகையும் உயர்வடையும்.
உண்டியல்

அதனால், தேவஸ்தானத்திற்கு இதுவரை எந்த நிலையிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டது இல்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு, மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு இழப்பு திட்டம் அமலான நாள் முதல், தேவஸ்தானத்திற்கு, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால், முதல் முறையாக, தேவஸ்தான பட்ஜெட் பற்றாக்குறை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

உண்டியல் மூலம் தேவஸ்தானத்திற்கு மாதம், 100 கோடி ரூபாய் வசூலாகி வந்தது. தற்போது, 60 முதல், 70 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆறு மாதத்தில், உண்டியல் வருமானம் மூலம், 108 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால், இந்தாண்டு உண்டியல் வருமானம், 1,000 கோடி ரூபாயை தாண்டாது என, அதிகாரிகள் கணித்துஉள்ளனர்.

ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை, தேவஸ்தானம், இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது. அதன் மூலம், 2015ல், 200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது; ஆனால் கடந்தாண்டு அது, 150 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

விரைவு தரிசனம்:

தேவஸ்தானம் இணையதள முன்பதிவில், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டை வெளியிட துவங்கியதிலிருந்து மாதந் தோறும், 23 ஆயிரம் பக்தர் கள், அந்த வசதியை பயன்படுத்தி, ஏழுமலை யானை தரிசித்து வந்தனர்.தற்போது, அந்த வசதி மூலம், தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை, 15 ஆயிரமாக குறைந்து உள்ளது.

கோடை விடுமுறையின் போது, பரிந்துரை கடிதங் களுக்கு வழங்கும், 'பிரேக்' தரிசனத்தை, தேவஸ் தானம் வார இறுதி நாட்களில் ரத்து செய்ததால், 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

லட்டு

மானிய விலையில் லட்டு விற்பனை செய்வதால், ஆண்டிற்கு, 250 கோடி ரூபாய், தேவஸ்தானம் கூடுதலாக செலவிட்டு வருகிறது. ஒரு லட்டு தயாரிக்க, 35 ரூபாய் செலவாகிறது. ஆனால், 2005 முதல், லட்டு பிரசாதம் விலை, 25 ரூபாயாகவே உள்ளது.
பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, இலவச லட்டு, தர்ம தரிசன பக்தர்களுக்கு, 10 ரூபாய் மானிய விலையில் இரண்டு லட்டு, தேவஸ்தான ஊழியர்களுக்கு தலா, ஐந்து ரூபாய் விலையில் மாதத்திற்கு, 10 லட்டு என, தேவஸ்தானம் அளித்து வருகிறது. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு ஆண்டிற்கு, 250 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

விலை ஏற்றம்

இவை அனைத்தையும் கணக்கிட்டால், தேவஸ்தானத்திற்கு, 420 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது பண மதிப்பு இழப்புடன், ஜி.எஸ்.டி., வரி விதிப் பும் இணைந்துள்ள தால், இந்தாண்டு தேவஸ் தானத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.
அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு கட்ட, லட்டு பிரசாதம் மற்றும் தரிசன டிக்கெட், அறை வாடகை உள்ளிட்ட வற்றின் கட்டணத்தை உயர்த்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர அரசிற்கு கடிதம் எழுதி உள்ளனர்.

வருவாய் இழப்பை சரிக்கட்ட எத்தனையோ வழிகள் இருக்கு!

திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு, தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற அறிவிப்பிற்கு, அதிருப்தி தெரிவித்துள்ள பக்தர்கள் கூறியதாவது:

திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. பல ஆயிரம் கோடிக்கு, நகைகள் இருப்பு உள்ளன. வங்கியில், 'டிபாசிட்' செய்யப்பட்ட தொகைக்கு வட்டி கிடைக்கிறது. எந்த காரணத்தை கருதி யும், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு விலையை ஏற்றக்கூடாது; தரிசன கட்ட ணத்தை யும் உயர்த்தக் கூடாது.

திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக செலுத் தப்பட்ட பழைய, 1,000 - 500 நோட்டுகளை, மத்திய அரசின் சிறப்பு அனுமதி மூலம், புதிய ரூபாயாக மாற்றி கொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

ஜி.எஸ்.டி., தொடர்பான எந்த வரி யையும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு விதிக் கக் கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால், திருப்பதிக்கு ஏற்படும் வருவாய் இழப்பை நிச்சயம் சரி கட்ட முடியும்.
மேலும், திருப்பதி தேவஸ்தானம், இந்த விவகாரத்தை வருவாய் ஈட்டும் தொழிலாக பார்க்காமல், ஆன்மிக சேவையாகவே கருத வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
06:19




சென்னை: தமிழகம் முழுவதும் 22 மருத்துவக் கல்லூரிகளில் எம்,பி,பி,எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் பெற இன்று(ஜூலை 7) கடைசி நாளாகும். ஜூன் 27ம் தேதி துவங்கிய விண்ணப்ப விநியோகத்தில், அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு என தனித்தனியே விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க நாளை(ஜூலை 8) கடைசி நாள்.
ரூ.120 டிக்கெட் கட்டணம் 153 ரூபாயாக உயர்வு; தியேட்டர்களில் புதிய கட்டண விவரம்




சினிமா டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்து உள்ளது.

ஜூலை 07, 2017, 03:19 AM சென்னை,

100 ரூபாய்க்கு குறைவான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் 100 ரூபாய்க்கு அதிகமான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த வரி விதிப்பு முறை அமுலுக்கு வந்துவிட்டது.

ஆனாலும் உள்ளாட்சி கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி வரி என்று இரட்டை வரிகளை செலுத்த முடியாது என்று தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் 3-ந்தேதியில் இருந்து தியேட்டர்களை மூடி போராட்டத்தில் குதித்ததாலும் புதிய சினிமா டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட இருந்த கேளிக்கை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், இன்று முதல் பழைய டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியை மட்டும் சேர்த்து புதிய டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஏற்கனவே ரூ.120, ரூ.100, ரூ.10 கட்டணத்தில் டிக்கெட் விலைகள் இருந்தன. இன்று முதல் ரூ.120 டிக்கெட் கட்டணம் 153 ரூபாய் 60 காசு என்றும் ரூ.100 டிக்கெட் கட்டணம் ரூ.128 என்றும் ரூ.10 டிக்கெட் கட்டணம் 11 ரூபாய் 80 காசு என்றும் உயர்த்தப்பட்டு உள்ளது.

சாதாரண குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.50 டிக்கெட் கட்டணம் ரூ.59 என்றும் ரூ.10 டிக்கெட் கட்டணம் ரூ.11.80 என்றும் உயர்த்தப்பட்டு உள்ளது.

குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.30 டிக்கெட் கட்டணம் 35 ரூபாய் 40 காசு என்றும் ரூ.5 டிக்கெட் கட்டணம் 5 ரூபாய் 90 காசு என்றும் மாற்றி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்கள் கட்டண சலுகையில் புதிய முறை





ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையில் புதிய முறையை அறிமுகப்படுத்த ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

ஜூலை 07, 2017, 05:16 AM
புதுடெல்லி,


தற்போது, ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ஆணாக இருந்தால், 40 சதவீத சலுகையும், பெண்ணாக இருந்தால் 50 சதவீத சலுகையும் அளிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் கட்டண சலுகையால், ரெயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி இழப்பு ஏற்படுகிறது.

புதிய முறை

எனவே, இதை குறைக்க ரெயில்வே துறை புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ‘உங்களுக்கு கட்டணத்தில் பாதி சலுகை வேண்டுமா? அல்லது முழு சலுகை வேண்டுமா?’ என்ற கேள்வி கேட்கப்படும்.

இதற்கு மூத்த குடிமக்கள் அளிக்கும் பதிலை பொறுத்து, கட்டண சலுகை அளிக்கப்படும். பாதி சலுகை போதும் என்று கூறினால், அதற்கேற்ப ரெயில்வேயின் இழப்பு குறையும்.

Thursday, July 6, 2017

சபாஷ்.. நரிக்குறவ குழந்தைகள் கல்விக்கு உதவிய போலீசார்!




சென்னை: அம்பத்தூரில் சாலை ஓரங்களில் வாழும் நரிக்குறவர் இன மக்களின் குழந்தைகளை போலீசார் பள்ளி கூடத்தில் சேர்த்துள்ளனர். போலீசாரின் இந்த செயல்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ் அருகே உள்ள பிளாட் பாரத்தில் சுமார் 15 க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து அதில் வரும் வருவாயை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயராகவன் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் தங்கி இருந்த நரிக்குறவர்களின் குழந்தைகள் சாலை ஓரங்களில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

இதைப்பார்த்த காவல் ஆய்வாளர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதது குறித்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் விசாரித்தார். அதற்கு பதிலளித்த அவர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்ததாகவும், ஆனால் போக்குவரத்து மற்றும் துணிகள் என செலவிட பணம் இல்லாததால் இடையிலேயே நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆய்வாளர் விஜயராகவன் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆணையாளரின் உத்தரவின் பேரில் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பேசி, 7 குழந்தைகளை புதிதாகவும், இடையில் நிறுத்தப்பட்ட 3 குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.

மேலும் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர போக்குவரத்து வசதியும் காவல்துறை சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த செயல்பாடு மக்களிடையே மதிப்பை உயர்த்தும் என கூறப்படுகிறது.

source: oneindia.com

Dailyhunt
' பென்ஸ் கார்' வேணாம்பா; சாதாரண கார் போதும்'.சிக்கனத்தை கடைபிடிக்கும் முதல்வர் ஆதித்யநாத்.


‘ பென்ஸ் கார்’ வேணாம்பா; சாதாரண கார் போதும்’…சிக்கனத்தை கடைபிடிக்கும் முதல்வர் ஆதித்யநாத்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்கும் விதமான, ரூ. 3.5 கோடியில் வாங்கப்பட இருந்த ‘பென்ஸ்சொகுசு கார்’ தேவையில்லை சாதரண கார் போதும் என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். மாநிலத்தில் அரசு அதிகாரிகள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத்அறிவறுத்தி வருகிறார். இந்நிலையில், அரசு சார்பில் ரூ. 3.5 கோடி செலவில் முதல்வர் பயன்பாட்டுக்காக இரு பென்ஸ் ரக சொகுசு கார்கள் வாங்கப்பட இருந்தன. இந்நிலையில், அந்த கார்கள் தமக்கு தேவையில்லை தற்போது இருக்கும் கார்களே போதுமானது என முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து முதன்மைச் செயலாளர் அவிநீஷ் அவஸ்தி கூறுகையில், “ முதல்வர் பயன்பாட்டுக்காக ரூ. 3.5 கோடி செலவில் இரு மெர்சடீஸ் பென்ஸ் ரக கார்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், மாநிலத்தில் சிக்கின நடவடிக்கையை காரணம் காட்டி, அதை வாங்கவேண்டாம் என முதல்வர் ஆதித்யநாத்தெரிவித்துள்ளார். இப்போது புதிய வாகனங்கள் தேவையில்லை, சமாஜ்வாதி அரசில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையே தானும் பயன்படுத்திக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துவிட்டார்.

சமாஜ்வாதி அரசில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.1.5 கோடி செலவில், 2 பென்ஸ் கார்கள் வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
"செல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகளை இனி மாற்ற முடியாது" - NEWSFAST EXCLUSIVE

E

செல்லாத ரூபாய் 500, 1,000 நோட்டுகளை மாற்ற 2-வது வாய்ப்பு வழங்கப்பட்டால், ரூபாய் நோட்டு தடை எதர்காக கொண்டு வரப்பட்டதோ அதற்கான முழுமையான அர்த்தத்தை இழந்துவிடும், ஆதலால் ரூபாய் நோட்டுகளை மாற்ற 2-வது வாய்ப்பு வழங்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கருப்புபணம், ஊழல்,கள்ளநோட்டுகளை ஒழிக்க கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.அதைத் தொடர்ந்து மக்கள் டிசம்பர் 30-ந்தேதி வரை தபால் நிலையங்கள், வங்கிகளில் செல்லாத நோட்டுகளை கொடுத்து, புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும், ரூபாய் நோட்டு தடை காலத்தில் வெளிநாட்டில் தங்கி இருந்தோர், என்.ஆர்.ஐ. ஆகியோர் மார்ச் 31-ந்தேதி வரை ரிசர்வ் வங்கி கிளைகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், மற்றவர்கள் ரிசர்வ் வங்கியில் உரிய காரணங்களைக் கூறி மாற்றலாம் என அறிவித்தது. ஆனால், இந்த உத்தரவை திடீரென திருமப் பெற்று மக்களை டெபாசிட்செய்ய அனுமதிக்கவி்ல்லை.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கடந்த 3 நாட்களுக்கு முன் பிற்பித்த உத்தரவில், “ நியாயமான காரணங்களால், பணத்தை டெபாசிட்செய்ய முடியாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும். அது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பது அவசியம்.இது குறித்து 2 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கனிவுடன் அரசு அலோசிக்கும் என்ற போதிலும், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வழங்கப்படும் 2-வது வாய்ப்பு நிச்சயம் பல்வேறு விதமான தவறுகள் நடக்க வழியை ஏற்படுத்திவிடும்.

இதை அனுமதித்தால், இப்போது நாட்டுக்கு வெளியே இருக்கும், அதாவது, நேபாளம், வங்காளதேசம், பூடான் ஆகிய நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டு இருக்கும் நோட்டுகள் மீண்டும் உள்ளே வரக்கூடும், இதனால், மேலும் சட்டவிரோதமாக பணம் புழங்க வாய்ப்பு உருவாகிவிடும். இது ரூபாய் நோட்டு தடை எதற்காக கொண்டுவரப்பட்டதோ அதற்கான ஒட்டுமொத்த அர்த்தத்தையும் இது வீணடித்துவிடும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க இருக்கிறோம்.

நக்சலைட்டுகளை ஒடுக்கியதிலும், தீவிரவாதிகளின் செயல்களை கட்டுப்படுத்தியதிலும், ரூபாய் நோட்டு தடை முடிவு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அவர்களுக்கு நிதி செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டது.

அதலால், உச்சநீதிமன்றத்தில், தெரிவிப்பது என்னவாக இருக்கும் என்றால், ரூபாய் நோட்டு தடை காலத்தில் செல்லாத நோட்டுகளை மாற்ற அரசு முடிந்த அளவு வசதிகளை மக்களுக்கு செய்துவி்ட்டது, மற்றொருவாய்ப்பு கொடுத்தால், அது இந்த திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டதோ அதை நீர்த்துப்போகச் செய்துவிடும் எனத் தெரிவிப்போம்” எனத் தெரிவித்தார்.
Dailyhunt

"என் மரணத்துக்கு HOD தான் காரணம்" - கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை!


தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனு விநாயகர் நகரை சேர்ந்தவர் பாலு. டெய்லர். இவரது மனைவி ஷீலா. இவர்களது மகன் ஹேமச்சந்திரன் (21). தாம்பரம் அருகே வேங்கைவாசலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை ஷீலா, கடைக்கு செல்வதாக கூறி சென்றார். ஹேமச்சந்திரன் வீட்டில் தனியாக இருந்தார். இரவு 7 மணிக்கு அவர் வீடு திரும்பியபோது, முன்கதவு தழ்ப்பாள் போடாமல் மூடப்பட்டு இருந்தது. உள்ளே சென்றபோது, ஹேமச்சந்திரன் அறையில் இருந்தார்.

கதவை நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஹேமச்சந்திரன், தூக்கில் தொங்கியபடி துடித்து கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

புகாரின்படி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், ஹேமச்சந்திரன் எழுதி வைத்த பரபரப்பு கடிதம், பெற்றோரிடம் சிக்கியது. இதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதில், என்னுடைய மரணத்துக்கு எனது கல்லூரியின் துறை தலைவர்தான் காரணம். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால், முடியவில்லை. எனது வருகை பதிவை குறைத்து, என்னை பட்டம் பெறாமல் செய்வேன் என கல்லூரி துறை தலைவர் என்னை மிரட்டினார்.

அதேபோல் எனது வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களையும் அவர் மிரட்டினார். ஆனால், என்னை மட்டும் பழி வாங்கிவிட்டார். என்னை தேர்வு எழுத விடமாட்டேன் என கூறினார். அதேபோல் பழி வாங்கிவிட்டார்.

எனக்கு கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், இந்த கல்லூரியில் என்னால் படிக்க முடியவில்லை. துறை தலைவர் ஏற்கனவே கூறியதுபோன்றே, தன்னை படிக்கவிடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்து, தேர்வு எழுத விடாமல் தடுத்து விட்டார்.

மேலும் கல்லூரிக்கு சரியாக வராத மாணவர்கள் என்னுடைய வகுப்பிலும் நிறைய பேர் இருக்கும் போது என்னை மட்டும் வருகை நாட்கள் குறைவு என கணக்கு காட்டி துறை தலைவர் பழிவாங்கி விட்டார். துறை தலைவரின் தொடர் தொல்லையால் தான் இந்த சோக முடிவை தேடிக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை தலைவர் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாணவன் ஹேமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், நேற்றும் இன்றும் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Dailyhunt
மக்கள் கியாஸ் மானியத்தை விட்டுகொடுப்பதைப்போல் ரயில் டிக்கெட் சலுகையையும் கைவிட வேண்டுமாம்..!




பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் பெயரில் நாட்டில் வசதியுள்ளவர்கள் லட்சக்கணக்கானோர், சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை தாமாக முன் வந்து விட்டுக் கொடுத்தனர். அதேபோல, ரெயில்வேயிலும் டிக்கெட் முன்பதிவில் அளிக்கப்படும் மானியத்தை விட்டுக்கொடுக்க பயணிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட உள்ளதாம்.

இந்த திட்டத்தை அடுத்தமாதம் ரெயில்வேதுறை முறைப்படி அறிவிக்க இருக்கிறது. அதாவது, இப்போது நாம் டிக்கெட் முன்பதிவின் போது செலுத்தும் தொகை என்பது ரெயில்வே துறையைப் பொருத்தவரை 57 சதவீதம் தான். ஏறக்குறைய 43 சதவீதம் கட்டணத்தை ரெயில்வே பயணிகளுக்கு மானியமாக அளித்து வருகிறது.

இந்த 43 சதவீத மானியத்தில்தான் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்போர் பயணித்து வருகின்றனர். இதுபோல, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தினர் உள்ளிட்ட பலர் 43 சதவீதத்துக்கு அதிகமாக மானியத்தை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த 43 சதவீத மானியத்தை கைவிட்டு உண்மையான டிக்கெட் விலையில், பயணிகள் பயணிக்க வேண்டும் என ரெயில்வே துறை வேண்டுகோள் விடுக்க உள்ளது. இதற்காக அடுத்த மாதம் தொடங்க உள்ள இந்ததிட்டத்தில், 50சதவீத மானியத்தை விட்டுக்கொடுத்தல், 100சதவீத மானியத்தை விட்டுக்கொடுத்தல் என்ற பிரிவில் இரு திட்டங்களை ரெயில்வே துறை செயல்படுத்த உள்ளது.

ஆன்-லைன் முன்பதிவின்போதும், இந்த இரு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும்,அதில் ஏதாவது ஒரு வாய்ப்பை நமது விருப்பத்தின் பெயரில் தேர்வு செய்யலாம், அதாவது நமது விருப்பத்தின் அடிப்படையில், மானியத்தை விட்டுக்கொடுக்கலாம். அவ்வாறு விட்டுக்கொடுக்கும் போது, கூடுதலாக டிக்கெட் கட்டணத்தை நாம் செலுத்த வேண்டியது இருக்கும்.

50 சதவீத மானியத்தை விட்டுக்கொடுத்தால், 22 சதவீத கட்டணம் கூடுதலாவும், 100சதவீத மானியத்தை விட்டுகொடுத்தால் 43 சதவீதம் கூடுதலாகவும் செலுத்த வேண்டியது இருக்கும்.

சமையல் கியாஸ் சிலிண்டரில் மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் சந்தை விலையில் சிலிண்டர்களை விலை கொடுத்து வாங்குவதைப்போல், ரெயில் டிக்கெட்டையும் உண்மையான விலையில் வாங்க வேண்டியது இருக்கும்.

தற்போது பயணிகளுக்கு 43 சவீதம் டிக்கெட்டில் மானியம் அளிப்பதால், ரெயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதை ஈடுகட்ட இந்தமுறையை பின்பற்ற உள்ளது.

மேலும், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “ ரெயில் டிக்கெட்டின் பின்புறம், நீங்கள் பயணிக்கும் தொலைவுக்கு 57 சதவீதம் மட்டுமே கட்டணமாக செலுத்துகிறீர்கள், 43 சதவீதத்தை ரெயில்வே மானியமாக அளிக்கிறது” என்று அச்சடித்து வழங்க உள்ளது. இதைப் பார்க்கும் போதாவது, மக்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க முன்வருவார்கள் என்று ரெயில்வே நம்புகிறது.

Dailyhunt
HRD to consult Health Min on medical college fees

The Central government is trying to bring the exorbitant fee charged by private medical colleges under check. This comes after a Madras High court ruling prompted University Grants Commission (UGC) and Human Resource Development Ministry (HRD) to form a committee for fee regulation.
However, there are many technicalities involved in getting all colleges under the same fee regulation. The UGC has written to the HRD Ministry asking them to consult the Ministry of Health and Medical Council of India in this regard since these institutions are responsible for medical education in the country.
There are over 34 deemed private institutions in the country that offer medical courses. Earlier they would conduct their own entrance examinations. But after NEET all institutions take admission through a single test. However, some students were unable to get admission in Puducherry-based private institutions after the institution allegedly charged exorbitant fee from them. The students went ahead and filed a petition in the Madras High Court. The court in its order on June 16 has asked UGC to form a committee to look into the matter of fee regulation.
A meeting in this regard was held in the HRD ministry, last week. According to sources in the ministry no consensus could be formed on in the issue as a section of officials feel that it is difficult to bind all private institutions by a single rule. “By fixing a fee cap, we will allow an institution not doing so well and charging lesser to charge a higher amount in the name of the rule. Hence we will have to work out the technicalities in detail before we can come up with a fee regulation rule,” said a source.
Even though the Medical Council of India keeps issuing letters to private institutions at regular intervals, to adhere to fee guidelines set up by the government, many institutions charge more in the name of capitation fee and other things.
UGC asks varsities to install sanitary napkin incinerators
The University Grants Commission (UGC) has asked varsities and higher educational institutions to install sanitary napkin incinerators in women's hostels to ensure proper disposal of menstrual waste.
Asserting that improper disposal of sanitary napkins causes problems for the environment and public health, the commission has asked the varsities to issue necessary instructions in this regard.
"In an effort to promote proposal disposal of menstrual waste and promote the Swachh Bharat Mission, it is imperative that we take the initiative to promote menstrual sanitation and proper disposal of menstrual waste by creating awareness, encouraging every woman to use eco-friendly incinerators and promoting research for a biodegradable alternative," a communication sent to varsities read.
"You are requested to consider the installation of these machines within the premises of women's hostels," it added.
The UGC communication further said that HLL Lifecare Limited, a PSU under health ministry has introduced sanitary napkin-vending machines and incinerators.
"The expenditure incurred can be directly booked under the solid waste management component of the Swachh Bharat Mission. The estimated cost for one set of machinery is Rs 49,646," UGC said.
(This article has not been edited by DNA's editorial team and is auto-generated from an agency feed.)

NEET success: Once a child bride, 21-yr-old Rupa Yadav to soon be a doctor

NEET success: Once a child bride, 21-yr-old Rupa Yadav to soon be a doctor

NEET success: Once a child bride, 21-yr-old Rupa Yadav to soon be a doctor: NEET result: Rupa's in-laws also supported her all along to meet the education expenses

She was married off at the tender age of eight, but that never deterred from pursuing her dream of becoming a doctor.

Now 21, Rupa has secured an all-India rank of 2,612 -- scoring 603 marks in this year's National Eligibility and Entrance Test (NEET).

Her husband and brother-in-law, both farmers, also supported her all along, even driving an auto to meet the education expenses, disregarding villagers' disparaging remarks.

Born into a poverty-ridden farmer's home in Kareri village of Jaipur district, Rupa, then a student of class III, and her elder sister Rukma, were wedded to Shankarlal, who was then 12, and his elder brother Babulal, respectively.

After her class X exams, in which she scored 84 per cent marks, her husband and brother-in-law helped her continue her studies.

Rupa continued to excel, again scoring 84 per cent in class XII exam, even as she managed household chores at the same time.

The same year, she enrolled herself for a B.Sc course and also appeared for the AIPMT examination, securing an all India rank of 23,000.

"Though I did not qualify for a good government medical college, the AIPMT marks encouraged my husband and brother- in-law to send me to Kota for preparing for MBBS entrance test," Rupa said.

Last year she appeared for NEET but fell short of achieving her goal. The following year, with a scholarship from her coaching institute, she finally cleared the hurdle.

Banks Not Liable For Theft In Lockers, Reveals RBI In RTI Query | Live Law

Banks Not Liable For Theft In Lockers, Reveals RBI In RTI Query | Live Law: An RTI response by the RBI and 19 PSU banks has disclosed that locker hiring agreement between the public sector banks and the customers absolves the banks of any liability for theft or burglary in the lockers. The banks stated in the response that the relationship between the locker hirer and the bank is that …

Breaking: SC Releases Its Judgment Dated May 9 Convicting And Sentencing Justice Karnan To Imprisonment [Read Judgment] | Live Law

Breaking: SC Releases Its Judgment Dated May 9 Convicting And Sentencing Justice Karnan To Imprisonment [Read Judgment] | Live Law: In a detailed unanimous judgment released today, the Supreme Court bench of seven Judges including Justice Pinaki Chandra Ghose who retired on May 27, has given detailed sequence of events and the reasons why it  found Justice Karnan of Calcutta High Court guilty of contempt of court, and sentenced him to six months imprisonment.  The …
Rajinikanth daughter’s divorce over, without much ado

A Subramani| Updated: Jul 5, 2017, 03.04 PM IST


File photo of Soundarya Rajinikanth and Ashwin RamKumar.

CHENNAI: The seven-year marriage of superstar Rajinikanth's daughter Soundarya came to an end on Tuesday, when a family court in Chennai passed an order judicial separation.

The principal family court judge Maria Clatta formalised the separation, after Soundarya and her estranged businessman-husband Ashwin stood firm on their resolve to end the marriage. For about seven months now, the divorce proceedings had been happening before the court without any show of adversity. It was smooth, as the decision was mutual. The terms of settlement, however, is not known.

The couple, married on September 3, 2010, has a four year old boy, and nothing has been revealed about either the custody or visiting rights of the parents on the child.

Lawyers privy to the divorce proceedings said the couple had been living separately for about seven months now, and their misunderstanding over various issues reached a point of no return earlier than that. Though initially the news of marital discord was being denied by both Soundarya and Ashwin, the fact that Soundarya kept saying that she always felt proud to identify herself as 'Soundarya Rajinikanth', triggered debate over the status of their marriage.

They later came out in the open about the ongoing case, and appeared in court together. The separate proceedings were smooth and without much ado.
விமான கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை - புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது

பதிவு: ஜூலை 06, 2017 11:59

இந்தியாவில் விமான கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.





புது டெல்லி:

இந்தியாவில் விமான கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் விமான கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள 1982-விண்டேஜ் சட்டம் மிகவும் வலுவிழந்து இருப்பதால் அதற்கு பதிலாக இந்த சட்டம் இயற்றபட்டது. அச்சட்டத்தில் புதிய திருத்தங்கள் 2016 ஆண்டே கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் அதற்கான விதிமுறைகளை அரசு வகுக்காததால் இது வரை அச்சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில் இச்சட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விமான கடத்தலின் போது, விமானத்தில் வைத்து அல்லது கீழே வைத்து யாருக்காவது உயிரிழப்பு ஏற்பட்டால் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும்.

மேலும் விமானம் புறப்பட்டதிலிருந்து தரையிறங்கியதற்கு பின் 24 மணி நேரத்திற்குள் ஏதேனும் தாக்குதல் நடந்தாலும் அதுவும் இச்சட்டத்தின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரி ஆயுதங்களை வைத்து அமைதி தாக்குதலில் ஈடுபடுபவர்களும் இதில் அடங்குவர்.

இந்த புதிய சட்டத்தின் மூலம் விமான கடத்தல் குற்றத்தை குறைக்கலாம். இச்சட்டமானது ஐ.நா சபையின் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு வகுத்துள்ள பெய்ஜிங் நெறிமுறைக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


போலி சாதிச்சான்றிதழ் மூலம் வேலைக்குச் சேர்ந்தவர்களின் பதவி, பட்டங்களை பறிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி



தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: ஐகோர்ட் தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்


மருத்துவக்கல்லூரியில் கவுன்சிலிங் முறையில் இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் பதிலளிக்க உத்தரவு


இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி கட்டணம் ரூ 10 ஆயிரம் உயருகிறது: சட்டசபையில் அமைச்சர் தகவல்

  தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்ததை விட இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி கட்டணம் ரூ. 10 ஆயிரம் உயரும் என கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ரூ.1.12 கோடியில் சூப்பர்பைக் வாங்கிய ஒரே இந்தியர்



 Only qualified docs can sign lab reports: MCI

A pathology report can only be signed by a qualified doctor registered with the Medical Council of India (MCI). The MCI in it’s latest order has specified that “All reports/letters have to be signed/countersigned by persons registered with MCI/State Councils”. MCI issued the statement in response to a three-year-old query from the National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL), which is a constituent board of Quality Council of India.

It wanted to know if M.Sc-PhD candidates not registered with the MCI can sign lab reports. This would include experts with PhD degrees in medical microbiology, medical biochemistry, life sciences, applied biology, cytogenetics and biotechnology.

“The ethics committee considered the matter during its meetings on February 6 and 7, and their decision was placed before Executive Committee for approval on April 11,” said Dr Parul Goel, Deputy Secretary, MCI. The order impacts pathological laboratories across India.

Following their decision, from June 14, 2017, labs report can only be signed by qualified doctors and not by M.Sc-PhD fellows. “This means reports signed by non-doctors after the said date will be illegal in the eyes of law,” said Pune-based advocate Rohit Erande. Meanwhile, opinion of the health ministry is being sought on the matter. Malpractices involving lab technicians signing pathology reports are rife in India.

“In many cases, approving signatures on a wrong analysis result in false positives of dengue or malaria and have led to wrong treatment,” said Dr Rajesh Mane of Maharashtra Association of Practicing Pathologists and Microbiologists (MAPPM), an umbrella body of qualified pathologists.

Fix fee for medical courses of deemed varsities

Chennai: BE student commits suicide, blames HoD in suicide note

DECCAN CHRONICLE.
Published Jul 6, 2017, 2:19 am IST

Boy denied hall ticket for upcoming semester exams.
 
Hemant Chandran
 Hemant Chandran
Chennai: A final year engineering student committed suicide at his residence in Madambakkam on Tuesday night allegedly over harassment by his head of department (HoD) for the last six months. A suicide note has been recovered from his house in which the boy accused his college staff for abetting his suicide.

B. Hemant Chandran (21) was found hanging by his mother Sheela when she returned home after work around 7. 30 pm. He was pursuing a degree in mechanical engineering at New Prince Shri Bhavani College of Engineering at Vengaivasal near Medavakkam.

Preliminary investigations revealed that the boy had pointed out a mistake by one of the professors during class about six months ago, which triggered the beginning of the harassment.

The professor, head of a department, allegedly began targeting the student selectively so much so that the latter told his parents that he would discontinue from college. The boy's mother even met with college management and sought to solve the issue.

Meanwhile, the student learnt on Tuesday that he has been denied hall ticket for the upcoming semester exams following which he took the extreme step. The deceased is the only son of the couple, Babu-Sheela. Babu works as a tailor while his wife works as a stenographer at a private firm.
On Tuesday, when his parents were away at work, Hemant Kumar hanged himself to death using a nylon rope. Selayur Police rushed to the scene and moved his body to Chromepet government general hospital for post-mortem. In a single page suicide note addressed to his parents, the boy accused his HoD of targeting him with spite. "I wished to study and complete college. But, I couldn't bring myself to continue in this college. As challenged by the HoD, he is making my life difficult in college. Forgive me, mother!" read an excerpt from the suicide note.

Meanwhile, the college declared holiday on Wednesday fearing backlash from students and heavy police security was deployed outside the college. Selayur police have registered a case and are investigating.

அடுத்த புரட்சிக்குத் தயாராகிவிட்டது ரிலையன்ஸ் ஜியோ: ரூ.500க்கு 4ஜி போன்!

By DIN  |   Published on : 05th July 2017 02:52 PM  |  
Jio

புது தில்லி: தனக்கு ஏற்பட்ட தடைக்கல்லை தானே உடைத்தெறியும் வகையில் அடுத்த புரட்சிக்குத் தயாராகியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
கடந்த ஆண்டு இலவச அழைப்பு மற்றும் அளவில்லா டேட்டாவுடன் அறிமுகமான ஜியோ சிம், தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்தது. 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் கணக்குப்படி, 11 கோடியே 20 லட்சம் ஜியோ வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது.

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளுக்கு ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டுமே இருந்தது. அதுதான் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களில் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும். தற்பொழுது அந்த தடைக்கல்லையும் உடைத்தெறியும் வகையில் ரூ.500க்கு 4ஜி வசதி கொண்ட செல்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் ரூ.999 முதல் ரூ.1,500 என்ற அளவில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த செல்போனை, ரூ.500க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில் மட்டுமே இருக்கும் 4ஜி வசதி, இனி ரூ.500 விலை கொண்ட செல்போனில் கிடைக்கும் என்றால் நிச்சயம் இது அடுத்த புரட்சிதான். 

கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட ஜியோ சிம்கார்டினால், தொலைத்தொடர்பில் புரட்சி ஏற்பட்டது போல, தற்போது செல்போன் உற்பத்தியில் அடுத்த புரட்சி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் இந்த செல்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் மீது தீவிர கண்காணிப்பு: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை

By DIN  |   Published on : 06th July 2017 12:52 AM  

அரசு ஊழியர்களின் சந்தேகப்படும்படியான வங்கிப் பரிவர்த்தனைகள் மீது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தில்லியில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர் டி.எம். பாசின், பிடிஐ செய்தியாளருக்கு புதன்கிழமை அளித்த பேட்டி வருமாறு:
மத்திய நிதியமைச்சர் தலைமையின்கீழ் செயல்படும் பொருளாதார புலனாய்வு கவுன்சிலிடம் நேரிடையாக புகார் தெரிவிக்கும் அமைப்பாக நிதிப் புலனாய்வு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பானது, கருப்புப் பணம், குற்றச் செயல் மூலம் ஈட்டப்பட்ட பணம் என்று சந்தேகப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த தகவலை சேகரித்தல், ஆராய்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது.

அப்போது, அரசு ஊழியர்கள் தொடர்புடைய சந்தேகப்படும்படியான வங்கிப் பரிவர்த்தனைகள் இருக்கும்பட்சத்தில், அதுகுறித்த அறிக்கைகளை (எஸ்டிஆர்) மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு நிதி புலனாய்வு அமைப்பு அனுப்பி வைக்கும்.

அதாவது, சந்தேகப்படும்படி ரூ.10 லட்சம் அல்லது அதற்கு அதிக மதிப்புடைய தொகைகள் அரசு ஊழியர்களால் பரிவர்த்தனைகள் செய்யப்படும்போது, அதுதொடர்பான அறிக்கைகளை அனுப்பி வைக்கும்.

இதுபோல், அமலாக்கத் துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி, செபி அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு போன்ற அமைப்புகளுக்கும், மாநில தலைமைச் செயலர்களுக்கும் நிதி புலனாய்வு அமைப்பு எஸ்டிஆர் அறிக்கைகளை அனுப்பும். உச்ச நீதிமன்றத்தால் கருப்புப் பண விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவும், நிதி புலனாய்வு அமைப்பிடம் இருந்து சந்தேகப்படும்படியான வங்கிப் பரிவர்த்தனை குறித்த விவரத்தை கேட்டுப் பெறும்.

ஊழல் செயல்களில் அரசு ஊழியர்களுக்கும், தனியாருக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்கிதா? என்பதை தெரிந்து கொள்வதற்கு, இந்த அறிக்கைகளை ஆய்வு செய்வது மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனால், அரசுத் துறைகளில் ஊழல்களை தடுக்க முடியும்.

இதுபோல், மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அரசு ஊழியர்களின் சந்தேகப்படும்படியான வங்கி பரிவர்த்தனைகள் குறித்து முக்கிய தகவல்களை நிதி புலனாய்வு அமைப்பு அனுப்பி வைத்துள்ளது. அதன்மீது தேவைப்படும் நடவடிக்கைகளை மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் எடுக்கும் என்று பாசின் கூறினார்.

தொப்பை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இல்லை

By DIN  |   Published on : 06th July 2017 05:02 AM  | 
POLICE1

தொப்பை வயிறுடன் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று அளிக்கப்பட்ட பரிந்துரையின் மீது மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கும் விவகாரத்தில் தற்போது எந்த விதிகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்படும் ஒருவர், குறிப்பிட்ட காலம் சேவையாற்றிய பிறகு, பதவி உயர்வு அளிக்கப்பட்டு பல்வேறு உயர்பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டுமெனில், அவர்கள் நிச்சயம் தகுந்த உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. அதாவது, தொப்பையுடன் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

இந்தப் பரிந்துரைகளையும் சேர்த்து, ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பின்பற்ற வேண்டிய வரைவு விதிகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை இறுதி செய்துள்ளது. அந்த வரைவு விதிகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி, அதன்மீது கருத்துகளை தெரிவிக்கும்படி மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கேட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நிபுணத்துவம் பயிற்சித் திட்டம் அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. இதனால், ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்று, டிஐஜி, ஐஜி, ஏடிஜி ஆகிய பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு, அவர்கள் 3 கட்ட நிபுணத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்திருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதற்காக 20 கள பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் எந்நேரமும் போதிய தகுதியுடன் (உடல்தகுதி உள்ளிட்ட தகுதி) இருப்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரயில் டிக்கெட்: செப்டம்பர் வரை சேவை வரி ரத்து!!!


 ரயில் பயணிகளிடம் மின்னனு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில்
ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரயி்ல் டிக்கெட்களுக்கான சேவை வரியை ஜுன் 30ம் தேதி வரை ஐ.ஆர்.சி.டி.சி., ரத்து செய்திருந்தது.

இந்நிலையில் சேவை வரி ரத்து உத்தரவை வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சேவை வரி தளர்வால் ஆண்டிற்கு ரூ 500 கோடி வரை வருமானம் பாதிக்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது

NEWS TODAY 23.12.2025