Wednesday, September 6, 2017

ஐகோர்ட்டு உத்தரவின்படி பல்லாவரத்தில் புராதன பகுதி குறித்து அதிகாரிகள் ஆய்வு


ஐகோர்ட்டு உத்தரவின்படி பல்லாவரத்தில் உள்ள புராதன பகுதி குறித்து தொல்லியல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

செப்டம்பர் 06, 2017, 03:00 AM

சென்னை,

சென்னை ஜமீன் பல்லாவரம், சுபம் நகரை சேர்ந்த ஆர்.எம்.பாவேந்தன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் ஜமீன் பல்லாவரம், பல்லாவரத்தில் சில பகுதிகள் உள்ளன. இதன் அருகே 100 மீட்டர் தூரத்துக்கு புதிய கட்டிடங்களை கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களை பழுது பார்க்கவும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. 101-வது மீட்டரில் இருந்து 200-வது மீட்டர் வரையிலான பகுதிகளில், தொல்லியல் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்ற பின்னரே கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

என்னுடைய வீட்டுமனை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை. எனினும் வீடு கட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க மறுக்கிறது. எனவே, வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கும்படி பல்லாவரம் நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதேபோல மேலும் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகளை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பல்லாவரம், ஜமீன் பல்லாவரத்தில் எந்த பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் என்பது தொடர்பாக தொல்லியல் துறை, வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி இந்த ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட 57 ஏக்கரில், வெறும் 94 மீட்டர் அளவுக்கு மட்டுமே ஆய்வு செய்துள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய முடியவில்லை என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வு என்பது அங்கு வசிக்கும் மக்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்படவில்லை. அவர்களது வீடுகள் இடிக்கப்படாது. அவர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற போவதில்லை.

பாதுகாப்பு

எனவே, இனி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை. எனவே பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் 8-ந் தேதி வரை தொல்லியல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் புராதன பகுதி குறித்து கூட்டாக ஆய்வு மேற்கொண்டு, உண்மை நிலவரத்தை கண்டறிய வேண்டும். இதற்கு வடக்கு மண்டல சரக ஐ.ஜி., காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு, பரங்கிமலை துணை போலீஸ் கமிஷனர் ஆகியோர் தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும். ஆய்வு அறிக்கையை 14-ந் தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் பகுதிகளில் போலீசாரின் உதவியுடன், வருவாய் துறை அதிகாரிகள் துண்டுபிரசுரங்களை நேற்று வினியோகம் செய்தனர். அதில், யாரையும் அச்சுறுத்துவதற்காக ஆய்வு நடைபெறவில்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு ஆய்வு நடத்துவதற்காக அப்பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இன்று முதல் கட்டாயம் ஆகிறது 6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள்



6 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போக்குவரத்து போலீசார் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்பார்கள் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா தெரிவித்தார்.

செப்டம்பர் 06, 2017, 04:30 AM
சென்னை,

தமிழகத்தில் இன்று (புதன் கிழமை) முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இதற்காக போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி, அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்கமாட்டார்கள். வழக்கம்போல போக்குவரத்து விதி முறைகளை மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கையை மட்டுமே போலீசார் எடுப்பார்கள்.

ஹெல்மட் அணியாமல் செல்பவர்களிடமும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச்செல் பவர்களிடமும் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்கமாட்டார்கள். இதுபோன்ற குற்றங் களை செய்பவர்களிடம், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். பின்னர் அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும்.

6 வகையான போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளிடம் மட்டும் அசல் ஓட்டுனர் உரிமங்களை போலீசார் கேட்பார்கள். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல் போன்ற 6 விதி மீறல்கள் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்படும்.

இந்த குற்றங்களை செய்பவர்களிடம் போக்குவரத்து போலீசார் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்பார்கள். இந்த 6 விதிமீறல்களில் ஈடுபடுவோரின் அசல் ஓட்டுனர் உரிமங்கள் முதல்கட்டமாக 3 மாதம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும். 2-வது முறை தவறு செய்தால் 6 மாதங்கள் ஓட்டுனர் உரிமங்கள் ரத்தாகும். தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும்.

பொதுவாக அசல் ஓட்டுனர் உரிமங்களை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது நல்லது. விபத்துகளை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவின் அறிவுரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ‘ராக்கிங்’ கொடுமைகளை தடுக்க கல்லூரிகளில் புகார் பெட்டி கலெக்டர் உத்தரவு



காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ‘ராக்கிங்’ கொடுமைகளை தடுக்க, பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளிக்கும் வகையில் புகார் மனு பெட்டி வைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

செப்டம்பர் 06, 2017, 04:49 AM
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் பெரும்பாலானோர் ‘ராக்கிங்’ கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
இதை தடுக்க அந்தந்த கல்லூரி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ‘ராக்கிங்’ கொடுமைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ராக்கிங்’கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், புகார் அளிக்க தயங்குவதால் அந்த மாணவர்கள் புகார் அளிக்க ஏதுவாக கல்லூரிகளில் புகார் மனு பெட்டிகள் வைக்க வேண்டும்.

மாணவர்கள் தங்கள் புகார்களை ‘ஆன்-லைன்’ மூலமும் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்களையும் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் இடையே ‘ராக்கிங்’ கொடுமையால் ஏற்படும் பாதிப்புகள், விபரீத நிகழ்வுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

அனைத்து மாணவர்களிடமும் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன், சகோதர மனப்பான்மையுடன், அன்புடன் பழக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ‘ராக்கிங்’ நடைபெறாமல் தடுப்பதற்கு உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து தவறு செய்யும் மாணவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலீசாருக்கு தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரிகளிடம், ஆசிரியர்கள் கூட்டம் நடத்தும் போது போலீஸ் அதிகாரிகளையும் அழைக்க வேண்டும். விடுதிகளிலும், கல்வி நிறுவன பஸ்களிலும் கண்காணிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, மதுராந்தகம் சப்-கலெக்டர் கில்லி சந்திரசேகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரமணி, தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முகிலன்(காஞ்சீபுரம்), அண்ணாதுரை(வண்டலூர்) மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி ஆகியவற்றின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
சென்னையில் பயிற்சி டாக்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அனிதாவுக்கு அஞ்சலி


எம்.பி.பி.எஸ். ‘சீட்’ கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

செப்டம்பர் 06, 2017, 04:45 AM
சென்னை,

சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் பட்ட மேற்படிப்பு மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் பங்கேற்றனர்.

மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து அனிதாவின் உருவப்படத்துடன் ஊர்வலமாக வந்த பயிற்சி டாக்டர்கள், மருத்துவ கல்லூரி நுழைவுவாயில் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகே வைக்கப்பட்டிருந்த அனிதாவின் உருவப்படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் அருள், நன்மாறன், கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில், “மாணவி அனிதாவின் உயிரிழப்பு மருத்துவத்துறையை சேர்ந்த அனைவருக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது இந்த அரசு திருந்தவேண்டும். ‘நீட்’ தேர்வில் முழுமையான விலக்கு பெறுவதே, அனிதாவின் மரணத்துக்கு கிடைக்கும் உரிய நீதியாகும்”, என்று குறிப்பிட்டனர்.
தமிழிசைக்கு கொலை மிரட்டல்

பதிவு செய்த நாள்06செப்
2017
02:27




சென்னை : தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மொபைல் போனில் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள லோகையா காலனியில், தமிழக, பா.ஜ., தலைவர்தமிழிசை சவுந்தராஜன் வசிக்கிறார். சில நாட்களாக, அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் சிலர், அநாகரிகமாகபேசுவதோடு, கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.

இது குறித்து, தமிழிசையின் வழக்கறிஞர் தங்க மணி, நேற்று விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார்,புகாரில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண்கள் அடிப்படையில், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பண்டிகை நேரத்தில் தேங்காய் விலை அதிகரிப்பு:நத்தம் மார்க்கெட்டில் ஒரு காய் ரூ.13
பதிவு செய்த நாள்06செப்
2017
01:32

நத்தம்;நத்தம் மார்க்கெட்டில் பண்டிகை நாட்கள் நெருங்குவதால் தேங்காய் விலை ஏற்றமடைந்துள்ளது. தமிழக அளவில் நத்தம் தேங்காய் மார்க்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது. நத்தம் பகுதியில் கோபால்பட்டி, கொரசினம்பட்டி, ஒத்தக்கடை, உலுப்பகுடி, புண்ணப்பட்டி, ஊராளிபட்டி, வத்திபட்டி, லிங்காவடி, மூங்கில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, சிறுகுடி ஆவிச்சிபட்டி பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் போதிய மழையின்றி விளைச்சல் குறைந்ததால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதே நேரம் வட மாநிங்களில் நல்ல மழை பெய்ததால் அப்பகுதியில் விளைச்சல் அதிகரித்தது. 

பண்டிகை காலம்: வட மாநில வியாபாரிகள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொள்முதல் செய்து வந்தனர். இதனால் நத்தம், அய்யம்பாளையம் பகுதிகளில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்தது. இம்மாத இறுதியில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை அடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால் வட மாநிலங்களில் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் நத்தம் தேங்காய் மார்க்கெட்டில் விலை ஏற்றமடைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.7 க்கு விற்ற உரித்த தேங்காய் விலை தற்போது ரூ.13 வரை அதிகரித்துள்ளது. விலை ஏற்றம் அடைந்த போதும் நத்தம் பகுதியில் கடந்த காலத்தில் நிலவிய வறட்சியால் விளைச்சல் இன்றி விவசாயிகள் ஏமாற்றத்தில்தான் உள்ளனர்.








:
ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம்: அலுவலர் ஒன்றியம் அறிவிப்பு

பதிவு செய்த நாள்06செப்
2017
00:42

சிவகங்கை: ''ஜாக்டோ- ஜியோ சார்பில் நடக்கும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்,'' என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.

அவர் சிவகங்கையில் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து; ஊதிய முரண்பாடுகளை களைந்து, புதிய ஊதியக்குழு மாற்றத்தை செயல்படுத்துவது; தொகுப்பூதியம் ரத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மே 14 ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தோம். இதையடுத்து ஜூலை 28ல் முதல்வர் எங்களை அழைத்து பேசினார்.செப்.30க்குள் ஊதியக்குழு மாற்ற பரிந்துரை செயல்படுத்தப்படும்; வல்லுனர் குழு பரிந்துரை அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் முடிவெடுக்கப்படும் என, உறுதியளித்தார். செப்., 30 வரை எந்த போராட்டத்திலும் பங்கேற்பதில்லை என, முடிவு செய்துள்ளோம்.இதனால் ஜாக்டோ ஜியோ சார்பில் செப்., 7 முதல் நடக்கும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம். எங்களிடம் உறுதியளித்தபடி கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அக்.2ல் கன்னியாகுமரியில் இருந்து எழுச்சிப் பயணம் மேற்கொள்வோம். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஊர்வலம் நடக்கும். தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் ரமேஷ்கண்ணன் உடனிருந்தனர்.
ஓ.எம்.ஆர்., அப்பார்ட்மென்ட் வாசிகளுக்கு பாதுகாப்பு..இல்லை! சுத்தமான காற்று, சுகாதாரத்திற்கும் வாய்ப்பு குறைவு

பதிவு செய்த நாள்06செப்
2017
00:39

நாவலுார்:நாவலுார், படூர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லையென, புகார் எழுந்துள்ளது.திருப்போரூர் ஒன்றியம், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நாவலுார், படூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவைகளில், லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்து, பல ஆயிரக்கணக்கான குடும் பங்கள் வசிக்கின்றன.

இக்குடியிருப்புகள் உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன.இப்பகுதியில், சிறுசேரி, 'சிப்காட்' முதல் கேளம்பாக்கம் வரையில் போதிய சாலையோர விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரங்களில் இப்பகுதிகளில் போதிய வெளிச்சமின்மை காரணமாக, அசம்பாவிதங்கள் நடந்திடுமோ என்ற அச்சத்தில், குடியிருப்பு வாசிகள் வெளியே வருவதே இல்லை.

இச்சாலைகளில், பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிவேகத்தில் செல்லும் தண்ணீர் லாரிகளால், இப்பகுதியினர், சுதந்திரமாக வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது.மேலும், மண் மற்றும் ஜல்லிக்கற்கள் மூடப்படாமல் கொண்டு செல்லும் லாரிகள், எவ்வித பாதுகாப்புமின்றி அசுரவேகத்தில் செல்வதாலும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வாகனங்களை சாலைகளில் ஓட்டிச் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

இப்பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், சில நேரங்களில் பிரதான சாலைகளிலேயே விடப்படுவதால், அதன் மீது தான் பகுதிவாசிகள் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால், சுத்தமான காற்று, சுகாதாரமான வசதிகளுக்காக, நகரை விட்டு வெகுதுாரம் வந்தவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதுமட்டுமல்லாமல், இப்பகுதிகளில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீர் சாலைகளிலேயே விடுகின்றனர்.

நகர்ப்புறத்தில் சேரும் கழிவுகள், நகருக்கு வெளியே உள்ள இப்பகுதிகளில் விடப்படுவதால், நாற்றமெடுக்கிறது.மேலும், இப்பகுதிகளில் உள்ள தனியார் உணவு விடுதிகளில் உள்ள நாள்பட்ட உணவுப்பொருட்கள், தொழிற்சாலைகளிலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள், ரசாயன கழிவுகளும் சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன.அவை, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் இருப்பதால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பகுதிவாசிகளுக்கு நோய்தொற்றும் அபாயமும் ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இப்பகுதிகளில் ஆய்வு செய்து, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான முறையில் இப்பகுதிகளில் வாழ்க்கை நடத்துவதற்கான ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு இல்லை!
ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவோர் இரவில் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் வீடு திரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு இப்பகுதிகளில் அறவே இல்லை. மேலும், தனியார் உணவு விடுதிகளும், மருத்துவமனைகளும் இப்பகுதிகளில் செய்கின்ற அக்கிரமத்திற்கு அளவே இல்லை. எப்பகுதிகளிலெல்லாம் இடம் கிடைக்கிறதோ அப்பகுதிகளிலெல்லாம் கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசடையச் செய்கின்றனர்.

- எம்.ஜெயக்குமார், நாவலுார்
தண்ணீர் பிரச்னை!நகரில், நெருக்கடியான இடங்களில், மூச்சடைக்கும் நிலையில் வசித்தவர்கள், சற்று விஸ்தாரமாக இருக்கட்டுமே என, புறநகர் பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை நாடி வந்துள்ளனர்.ஆனால், இவர்களுக்கு, தண்ணீர், மின்சாரம், மொபைல் போன் வசதி கிடைப்பதில் பாதிப்பு உள்ளது.

திட்டமிடப்படாத, அங்கொன்றும், இங்கொன்றுமான அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு தேவைப்படும், தண்ணீருக்கு முறையான வசதிகள் இல்லை. எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னையிலிருந்து தப்பிக்கவும், திட்டங்கள் இல்லை.அதுபோல, போதிய மின்சாரம் இல்லாதது, மொபைல் போன் டவர் சிக்னல் சரிவர கிடைக்காதது போன்ற பிரச்னைகளால், பெரும்பாலான அடுக்கு மாடி குடியிருப்புவாசிகள் அல்லல் படுகின்றனர்.
முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் : அரசு ஊழியர் சங்கம் ஆதங்கம்
பதிவு செய்த நாள்06செப்
2017
00:39

மதுரை: ''புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே அரசு ஊழியர், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் நாளை (செப்., 7) துவங்குகிறது,'' என அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவரும், ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ குழுவினருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 'புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து முதல்வரிடம் பேசித்தான் உறுதியளிக்க இயலும்' என தெரிவிக்கப்பட்டது. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து சாதகமான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.'இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெற்று, அதன்பிறகு ரத்து செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், சம்பளக்குழு அறிக்கை தாமதமாகும் பட்சத்தில், இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தும் அறிவிப்பு இல்லை. எனவே, நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்குகிறது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் 10 லட்சம் பேர் இதில் பங்கேற்கின்றனர், என்றார்.
பல்கலையில் விதிமீறல்: டாக்டர் உட்பட 5 பேர் பணி நீக்கம்
பதிவு செய்த நாள்06செப்
2017
00:01

சென்னை: சென்னை பல்கலை துணைவேந்தராக, முன், தாண்டவன் பதவி வகித்த போது, 2014அக்டோபரில் மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டது. அதில், ஒரு டாக்டர், இரண்டு செவிலியர்கள், இரண்டு மனநல ஆலோசகர்கள், நிரந்தர பதவியில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில், விதிகள் பின்பற்றப்படவில்லை என்ற, புகார் எழுந்தது.

இதுபற்றி, ஒரு மாதத்திற்கு முன், பல்கலையில் நடந்த, சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, ஐந்து நியமனங்களையும், சிண்டிகேட் ஏற்று கொள்ளாத நிலையில், அவற்றை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, ஐந்து பேரையும் பணி நீக்கும் உத்தரவை, துணைவேந்தர் துரைசாமி பிறப்பித்துள்ளார்.



ஒரிஜினல் லைசென்ஸ் இன்று முதல் கட்டாயம்
பதிவு செய்த நாள்05செப்
2017
23:57


'சட்டைப்பையில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பது போல, அசல் ஓட்டுனர் உரிமத்தையும் வைத்திருந்தால், மூன்று மாத சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'வாகன ஓட்டுனர்கள், செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்துடன் செல்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது' என, மாநில போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி உள்ளிட்டோர், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தள்ளி வைப்பு : வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, 'அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதில், என்ன பிரச்னை உள்ளது; அதை வைத்திருக்க வேண்டும்' எனக்கூறி, 8ம் தேதிக்கு, விசாரணையை தள்ளி வைத்தது.

நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடு முடிந்ததால், இன்று முதல், வாகன ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்துடன் செல்வது கட்டாயமாகி உள்ளது. அதனால், அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர், மூன்று மாத சிறை தண்டனை மற்றும், 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தப்பலாம்

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'சட்டைப்பையில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பது போல, அசல் ஓட்டுனர் உரிமத்தையும் வைத்திருந்தால், மூன்று மாத சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்' என்றனர்.

- நமது நிருபர் -

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் : மகாளய பட்சம் இன்று துவக்கம்

பதிவு செய்த நாள்05செப்
2017
23:49




முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான, மகாளய பட்சம் இன்று துவங்குகிறது. மகாளய பட்சம் என்பது, முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம், அமாவாசை திதி கொடுக்க மறந்தவர்கள், மகாளய பட்சத்தில் திதி கொடுப்பதால், 12 மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதுகுறித்து, காஞ்சி சங்கரமட ஆஸ்தான வித்வான், சுந்தரராம வாஜ்பாய் கூறியதாவது:புரட்டாசி மாதத்தில் வரும், மகாளய அமாவாசை, முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய, 15 நாட்களும் மகாளய பட்ச காலம். இந்த புண்ணிய தினங்களில், பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்தது. 

மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில், தர்ப்பணம் செய்வதும் அவசியம்.மற்ற அமாவாசையில், நம் உறவினர்கள், 12 பேருக்கு மட்டுமே தர்ப்பணம் செய்கிறோம். இந்த மகாளய பட்சத்தில்தான் அனைத்து உறவினருக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம், மஹாபரணி என்றும், அஷ்டமி திதி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் அழைக்கப்படுகிறது.

கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற, தெய்வீக நுால்களில், மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில், நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே, பிதுர் லோகத்தில் இருந்து, அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகம் வருவதாக நம்பப்படுகிறது.மகாளய பட்சம் இன்று துவங்குகிறது. இதில், வரும், 10ம் தேதி மகா பரணி; ௧3ம் தேதி, மத்தியாஷ்டமி; 19ம் தேதி மகாளய அமாவாசையும் தர்ப்பணம் செய்ய விசேஷ நாட்கள். மகாளய பட்சம் துவங்கும் நாள், யசூர்வேதிகளுக்கு ஆவணி அவிட்டம் வருகிறது. எனவே, முதலில் ஆவணி அவிட்டத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
'ப்ளு வேல்' பற்றி எஸ்.எம்.எஸ்., : தமிழக அரசு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்05செப்
2017
23:41

சென்னை: 'ப்ளு வேல் விளையாட்டு குறித்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவோர், சட்டப்படி தண்டிக்கப்படுவர்' என, அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 'நீலத் திமிங்கல சவால்' என, அழைக்கப்படும், ஆன் - லைன் விளையாட்டு, 'ப்ளு வேல்' என்ற பெயரில், இணையதளத்தில் பரவி வருகிறது. இதை விளையாடுவோர், சவால்கள் என்ற பெயரில் துாண்டி விடப்பட்டு, தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 'ஓர் அமைதியான இல்லம்; ஒரு திமிங்கலக்கடல்; அதிகாலை, 4:20 மணிக்கு என்னை எழுப்பு' என, பல்வேறு பெயர்களில், இவ்விளையாட்டு புழக்கத்தில் உள்ளது. இவற்றை பெரும்பாலும், 'ஸ்மார்ட் போன்' அல்லது அதுபோன்ற சாதனங்களை பயன்படுத்தியே விளையாட முடியும். 'இவற்றால், 12 வயது முதல், 19 வயதிற்குட்பட்டோர் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். 'இதை விளையாடுவோர் தனிமையை விரும்புவர்; குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதை நிறுத்துவர்; வீட்டில் இருந்து வெளியே ஓடிவிடுவது குறித்தும், மரணம் குறித்தும் அதிகம் விவாதிப்பவர்களாக இருப்பர்' என, மனோ தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

உணவு சாப்பிடும் முறையிலும், துாங்கும் பழக்கத்திலும், மாறுபாடுகள் தென்படும். எனவே, பெற்றோரும், ஆசிரியர்களும், சிறுவர்கள் நடத்தையை கூர்ந்து கவனிக்க வேண்டும். இவ்விளையாட்டுக்களை சிறுவர்கள் விளையாடுவது தெரிந்தால், அவர்கள், இணையதளம் மற்றும் மொபைல் போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல், தடுக்க வேண்டும்.உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனை அல்லது அலுவல் சாரா அமைப்புகள் மூலம், உளவியல் ரீதியாக அறிவுரைகள் வழங்க வேண்டும். 'ப்ளூ வேல்' விளையாட்டு தொடர்பான, நேரடி இணைப்புகளை, வேறு பிற நேரலை இணைப்புகளுக்கு, அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

இந்திய சட்டப்படி, இவ்விளையாட்டு வழியே பிறரை தற்கொலைக்கு துாண்டுவது, சட்டத்திற்கு புறம்பான செயல். தண்டனைக்குரிய குற்றம். நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாமல், இவ்விளையாட்டு குறித்து கலந்தாலோசிக்கும் வகையில், எஸ்.எம்.எஸ்., எதையும் பிறருக்கு அனுப்பினால், சட்டப்படி தண்டிக்கப்படுவர்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர், ஊழியர்கள் நாளை முதல், 'ஸ்டிரைக்' : பள்ளிகள், அலுவலகங்கள் முடங்கும் அபாயம்

பதிவு செய்த நாள்05செப்
2017
22:48

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது. இதனால், ௩௦ ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், ௭௩ சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை உருவாக்கி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. 

நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிடக்கோரி, தமிழக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், அறிவித்தபடி போராட்டம் துவங்குவது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து, ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலருமான, பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்ற, தமிழகத்திற்கு மட்டும் சாதகமான நிலை உள்ளது. ஏனென்றால், தமிழகம் மட்டுமே, இந்த திட்டத்தில் வசூலித்த பங்களிப்பு நிதியை, இன்னும் மத்திய அரசிடம் செலுத்தவில்லை. அதனால், எப்போது வேண்டுமானாலும், தமிழக அரசு சுதந்திரமான முடிவு எடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம்.

இதற்காக, இரண்டு முறை நிபுணர் குழு அமைத்தும், இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் கருத்து கேட்ட பிறகும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்யாமல், நிபுணர் குழு தாமதம் செய்கிறது. 

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வை அறிவிப்பதில் தாமதம் செய்யக்கூடாது. ஊதிய உயர்வு அமலாகும் தேதியை, அரசு அறிவிக்க வேண்டும். அதுவரை, போராட்டத்தை வாபஸ் பெற வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஆசிரியர்களின் போராட்டத்தால், நாளை முதல், 30 ஆயிரம் அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்தாமல், ௭௫ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதிப்பதால், வருவாய் துறை உட்பட அரசுத்துறை அலுவலகங்களில், நிர்வாக பணிகள் மொத்தமாக முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி இன்று பேச்சு : அரசியல் ரீதியாக, தமிழக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ள நிலையில், ஜாக்டோ - ஜியோ போராட்டம் மேலும், நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை சமாளிக்கும் வகையில், கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த, முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார்.இதற்காக, ஈரோட்டில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவினரை சந்தித்து பேச, அழைப்பு விடுத்துள்ளார். கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர், ஈரோடு சென்று இன்று காலை, 10 மணிக்கு, முதல்வரை சந்தித்து பேசுகின்றனர். இதில், உடன்பாடு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

9ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளா


பதிவு செய்த நாள்05செப்
2017
22:01

சென்னை: வேலுார் மக்களுக்காக, சிறப்பு பாஸ்போர்ட் மேளா, வரும், 9ம் தேதி நடத்தப்படுகிறது.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலுாரில் உள்ள, அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா, வரும், 9ல், சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்த உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர், www.passportindia.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண் பெற வேண்டும். ஆன் - லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, சந்திப்பு முன்பதிவு நேரத்தை பெற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராகிங்' புகார் பெட்டி: கல்லூரிகளில் கட்டாயம்
பதிவு செய்த நாள்06செப்
2017
03:40




'ராகிங்கை தடுக்க, அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், புகார் பெட்டி வைக்க வேண்டும்' என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம், ஆர்க்கிடெக்ட் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முழுமையாக முடிந்துள்ளது. நேற்று முதல், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கி உள்ளன.

இந்நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், 'ராகிங்' பிரச்னைகள் ஏற்படும் என்பதால், மாணவர்களுக்குள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

'ராகிங்' தடுப்பு நடவடிக்கையில், முக்கிய அம்சமாக, அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், புகார் பெட்டியும், முதல்வர் மற்றும் துணைவேந்தர் அலுவலகம் முன், 'ராகிங்' புகார் புத்தகமும் கட்டாயம் வைக்க வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது. இதற்காக, கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கூட்டத்தை, மாவட்ட கலெக்டர்களும், போலீசாரும் நடத்தி, உரிய மேல் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

விண்ணப்பிக்காதவர்களும் பி.டி.எஸ்., படிக்க வாய்ப்பு

பதிவு செய்த நாள்06செப்
2017
01:54




சென்னை: சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இன்று நேரடியாக கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு: சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 681 இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து, இடம் கிடைக்காத, 'நீட்' தேர்வில் தகுதி பெற்றுள்ள மாணவர்கள், இன்று நடைபெறும் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

மேலும், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்காதவர்களும் பங்கேற்கலாம். அவர்கள், இன்று பிற்பகல், 2:00 மணிக்குள், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் நடைபெறும் கவுன்சிலிங் வளாகத்துக்கு, அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியால் பஞ்சாப் முதல்வரின் சம்பளம் நிறுத்தம்

பதிவு செய்த நாள்06செப்
2017
04:16




சண்டிகர்: கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இம்மாத சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.

கஜானா காலி :

பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர், அமரிந்தர் சிங் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலம் முழுவதும், அரசு அலுவலகங்களில், 4.50 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, இம்மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை நிறுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

சம்பளம் ‛கட்':

மாநில நிதி அமைச்சர், மன்பிரீத் பாதல் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும், ஜி.எஸ்.டி., அமலாக்கத்திற்குப் பின், வசூலான வரிப் பணம், மாநில கஜானாவுக்கு இன்னும் வந்து சேரவில்லை. இதனால், மாநிலத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், இம்மாதம், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் இன்னும் ஒரு வாரத்தில், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும். பின், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பரவலாக மழை

பதிவு செய்த நாள்
செப் 05,2017 19:38



தேனி: தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது.தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்துவரும் நாட்களில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் அல்லிநகரம், பெரியகுளம், லட்சுமிபுரம் , வடுகபட்டி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சுற்றி உள்ள கள்ளிமந்தையம், சத்திரப்பட்டி பகுதிகளில் மழை பெய்தது.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம் மோகனுாரில், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.

துாத்துக்குடி மாவட்டம்

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், பேச்சிப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி , நடுகுப்பம் தெளச்ளார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, கனகமாசத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது.

Tuesday, September 5, 2017

வளர்த்த பாட்டி மீது கொள்ளை பாசம்


Published : 03 Sep 2017 09:18 IST

அரியலூர்

பாட்டி பெரியம்மா

அனிதா 3 வயதாக இருக்கும்போதே அவரது தாயார் இறந்து விட்டார். அதன்பின், தாத்தா தங்கவேலு (95), பாட்டி பெரியம்மா (90) ஆகியோரது வீட்டில்தான் வளர்ந்து வந்தார். சில ஆண்டுகள் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த அனிதா, வீட்டுக்கு வரும்போது தனது பாட்டிக்கு ஏதேனும் வாங்கி வருவாராம். அதை வாஞ்சையோடு நினைவு கூர்ந்த பாட்டி பெரியம்மா, “நான் வளர்த்த பெண் எனது சேலையாலேயே தூக்குப்போட்டு இறந்து விட்டாரே” என்று விம்மினார்.


தாத்தா தங்கவேலுபோலீஸார் மிரட்டி கையொப்பம்

வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது.

அங்கு பிரேதப் பரிசோதனை செய்யவும், உடலை பெற்றுக் கொள்ளவும் சம்மதிக்கிறேன் என அனிதாவின் தந்தை சண்முகத்திடம் போலீஸார் கையொப்பம் வாங்கியுள்ளனர். தன்னை போலீஸார் மிரட்டி கையொப்பம் பெற்றதாக சண்முகம் தெரிவித்தார்.

இறந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் நீட் தேர்வைக் கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ப்ளூவேல்’ விளையாட்டு விபரீதம்: ம.பி.யில் பிளஸ் 1 மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Published : 05 Sep 2017 09:09 IST

போபால்

(




மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் தமோ அருகில் உள்ளது நவ்ஜாகிரதி பள்ளி. இங்கு பிளஸ் 1 படித்து வந்த மாணவன் சாத்விக் பாண்டே, கடந்த சனிக்கிழமை இரவு திடீரென காணாமல் போனான். இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு ரயில் தண்டவாளத்தில் சாத்விக் இறந்து கிடந்ததை போலீஸார் உறுதி செய்தனர்.

சாத்விக்கின் தந்தை அரசு அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிகிறார். வீட்டுக்கு ஒரே மகன்.


சாத்விக் கடந்த சில நாட்களாக ப்ளூவேல் விளையாட்டு விளையாடி வந்ததாக அவனது பள்ளி நண்பர்கள் அடிப் கான், ரோகித் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால், சாத்விக்கின் செல்போன் மற்றும் கம்ப்யூட்டரை ஆய்வு செய்யாமல் எதுவும் சொல்ல இயலாது என்று போலீஸார் கூறினர்.

ஆனால், தண்டவாளம் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் சாத்விக் தற்கொலை செய்து கொள்ளும் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு தண்டவாளத்தில் ரயில் வரும் வரை காத்திருக்கிறான். வேகமாக ரயில் வருவதைப் பார்த்ததும் சாத்விக் முட்டிப் போட்டு அமர்கிறான். அவன் மீது ரயில் மோதி செல்கிறது. இந்த காட்சிகளையும் போலீஸார் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் ப்ளூவேல் விளையாட்டால் ஏற்பட்ட முதல் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு குவியும் படங்கள்: திணறும் விநியோகஸ்தர்கள்

Published : 04 Sep 2017 19:48 IST

ஸ்கிரீனன்




கோப்புப் படம்

சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு 8 படங்கள் வெளியீட்டை உறுதிப்படுத்தியிருப்பதால், விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விடுமுறையை கணக்கில் கொண்டு பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்திருக்கிறார்கள். இதனால் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.


இந்த தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'வேலைக்காரன்' வெளியாகவிருந்தது. ஆனால், இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் டிசம்பரில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

மேலும், மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் 'ஸ்பைடர்', நயன்தாரா நடித்திருக்கும் 'அறம்', விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'கருப்பன்', சந்தானம் நடித்திருக்கும் 'சர்வர் சுந்தரம்', சுசி கணேசனின் 'திருட்டுப்பயலே - 2', ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'செம', ஜெய் நடித்திருக்கும் 'பலூன்' மற்றும் கவுதம் கார்த்திக் நடித்திருக்கும் 'ஹர ஹர மஹாதேவகி' ஆகியவை செப்டம்பர் 29-ம் தேதி வெளியீடு என அறிவித்திருக்கிறார்கள்.

இவ்வளவு படங்களுக்கு எங்கே திரையரங்குகள் உள்ளது என்று விநியோகஸ்தர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இவற்றில் குறைந்தது 4 படங்களாவது பின்வாங்கிவிடும் என தெரிகிறது.
வன்சொற்களைத் தவிருங்கள்: 'விவேகம்' விமர்சன சர்ச்சை குறித்து வைரமுத்து

Published : 04 Sep 2017 16:06 IST

ஸ்கிரீனன்




‘விவேகம்’ படத்தில் அஜித் மற்றும் வைரமுத்து | கோப்புப் படம்

விமர்சகர்கள் உணர்ந்ததை எழுதுங்கள்; ஆனால் வன்சொற்களைத் தவிருங்கள் என்று 'விவேகம்' படத்தைப் பார்த்துவிட்டு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. மேலும், திரையுலகினர் பலரின் மத்தியில் மாறன் என்பவரது விமர்சனம் கடும் அதிருப்தியை உண்டாக்கியது.


இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தில் பணிபுரிந்திருக்கிறார் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து. இதனால் வைரமுத்துவின் குடும்பத்தினருக்கு தனியாக பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது.

'விவேகம்' பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து கூயிறுப்பதாவது:

அஜித் ரசிகர்களின் பாலாபிஷேகத்திற்கும், சில விமர்சனங்களின் குருதியாடலுக்கும் மத்தியில் இருக்கிறது 'விவேகம்'. ஓர் எதிர்காலத் தொழில்நுட்பத்தைக் கதையாடலுக்கு முன்னெடுத்துச் சென்ற முதல் முயற்சிக்காக இயக்குநர் சிவாவைப் பாராட்டலாம். காட்சி ஊடகத்தின் சகல சாத்தியங்களும் இதில் முயலப்பட்டுள்ளன.

அஜித்தின் உழைப்பு எனக்கு உடம்பு வலியை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு இயக்குநர் வெற்றி – கலை இயக்குநர் மிலன் இருவரின் திறமைகளும் என் கண்களை இமைக்கவிடவில்லை. அனிருத்தின் பின்னணி இசை படத்தை இடைவெளியில்லாமல் நிரப்புகிறது. கதை இல்லை என்கிறார்கள். இதில் பாகப்பிரிவினையையும், பாசமலரையுமா சொல்ல முடியும்? இதற்கு இது போதும். ஏதோ ஓர் அந்நியத் தன்மை பட்டாம்பூச்சியின் இறகளவுக்குச் சுவர்கட்டி நிற்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

கபிலன் வைரமுத்துவின் சில வசன வரிகளை என் மகன் என்பதற்காக நான் மறைக்க விரும்பவில்லை. 'நீ சமவெளியில் ஓடுகிறாய்; ஓடத்தான் முடியும்; ஒளிய முடியாது', 'ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதைவிட, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வதே வாழ்க்கை' போன்ற நல்ல வரிகளைக் காதுகள் மனப்பாடம் செய்துகொள்கின்றன.

பயம் கலந்த வீரம் தொனிக்கும் காஜல் அகர்வாலின் கண்கள், உறங்கிய பின்னும் முகத்துக்கு மேலே சில மில்லி மீட்டர் உயரத்தில் மிதக்கின்றன. படம் சரியில்லை என்று சொல்கிறார்களே என்ற சலிப்போடுதான் போனேன். குறைகளைவிட நிறைகள் அதிகம் என்று கண்டு திரும்பினேன்.

விமர்சகர்கள் உணர்ந்ததை எழுதுங்கள்; ஆனால் வன்சொற்களைத் தவிருங்கள். ஒரு தோல்விப் படம்கூட 20 மாதப் பிரசவம் என்பதை மறந்துவிடாதீர்கள்

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன்சிலிங்'

Sep 5, 2017

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

அரசு, சுயநிதி கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நேற்று துவங்கி விட்டன. அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.டி.எஸ்., இடங்களுக்கு, நேற்று நடந்த கவுன்சிலிங்கில், 15 இடங்கள் நிரம்பின. இதனால், மொத்தமுள்ள, 1,045 பி.டி.எஸ்., இடங்களில், 604 இடங்கள் நிரம்பி உள்ளன; 441 இடங்கள் காலியாக உள்ளன.

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 715 பி.டி.எஸ்., இடங்களில், 34 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; 681 இடங்கள் காலியாக உள்ளன. இதையும் சேர்த்தால், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், 1,122 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இன்று, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நாளை, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.

ஆசிரியர் தின வரலாறு




ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆசிரியர் தின வரலாறு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.

ஆசிரியர் பணி என்றால் என்ன?

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

ஆசிரியர் தினம்

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.

1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.

ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

Amid chaos, classes begin and counselling wraps up

TNN | Updated: Sep 5, 2017, 00:55 IST


Chennai: Monday saw the last round NEET (National Eligibility Entrance Test) counselling for filling the leftover seats in BDS programmes across the state. A total of 601 seats under management quota in self-financing colleges and 8 seats from two government colleges in the state fell vacant as on date.

In total, about 31 students were allotted seats on Monday's counselling which continued without a hitch at the Tamil Nadu Government Multi-Super-Speciality Hospital at Omandurar, for admission into dental colleges; which followed the counselling for MBBS seats which originally kicked off August 24 and concluded its first and second phase of counselling last week.


This continued even in the backdrop of state-wide protests erupting over the recent suicide of medical aspirant Anitha. Despite student unions raging against the examination and parents expressing worry over the inflamed situation in the state, the counselling process wrapped up without any incident. Monday also saw the commencement of first day of classes for the undergraduate MBBS students in the state. "We have been worried that it may not be ideal for the children to start classes around the time of all these protests," says Banumathy Giridhar, whose daughter is set to begin BDS course at a college in the city.

LATEST COMMENT

Party cader of thug party who have been supplied Biryani/Quater will only attend this meeting and is unsafe for students to go. Only boy students of
class 9, 10,11,12 can also be given quatr, ca... Read More
Gopalarathnam Krishna Prasad

The status quo remains the same with social media too continuing to explode with debate from students and protesters alike on the situation for poorer medical aspirants in the state, and carrying on with counselling even while NEET is being questioned with yet another appeal made to the SC for exempting the state from the exam permanently.


Opposing statements too, took to Twitter. "Please don't oppose NEET. Just demand for improvement in our State board curriculum," tweeted Adithya, a student on Monday.

Carry your original driving licence - HC thumbs up to Govt decision

TNN | Updated: Sep 5, 2017, 01:16 IST

Chennai: Be prepared to get impounded or pay fine if you do not carry your original of driving licence from Wednesday, for Madras high court has refused to interfere with the state government's decision making mandatory for motorists to carry original driving documents.

Declining to pass any order restraining the authorities from insisting on original licence from drivers, the first bench of Chief Justice Indira Banerjee and Justice M Sundar adjourned to Friday the pleas moved by Tamil Nadu lorry owners association and social activist Traffic KR Ramaswamy assailing the decision of the state government.

On September 1, when the petition moved by the lorry owners association came up for hearing before a single judge, the state government gave an undertaking to defer its decision till September 5.

After recording the undertaking, the judge had directed the registry to tag the writ petition along with the plea moved by Ramaswamy pending in the file of first bench of the court and passed an interim order directing the authorities not to ask for original licences from the motorists till September 5.

Since the pleas were not taken up for hearing on Monday, petitioners requested the first bench to take up the case on Friday and to extend the single judge's interim order till then.

LATEST COMMENTThis TN state government order is another harresment of Traffic police . What the government could have done in this digital world asked drivers to Register their licence with RTOs of issuing RTO al... Read More  Gopalarathnam Krishna Prasad

According to the state, it decided to insist on production of original licences only because of the fact that the state had recorded the second highest number of road accidents in the country.

It also relied on an observation made by a Supreme Court appointed committee on road safety that many motorists were driving vehicles merrily with photocopies of either suspended or cancelled driving licences, to justify its decision.
Tamil Nadu: Woman's three-minute selfie-video before suicide goes viral

Rajasekaran RK| TNN | Updated: Sep 4, 2017, 19:36 IST



TIRUPUR: A 27-year-old woman took a selfie video on her mobile phone before committing suicide on the wedding day of her former boyfriend in Uthukuli in Tirupur district. In a short while, the three-minute video went viral on social media. In the video, the woman is said to have expressed her anguish over the break up with her boyfriend before committing suicide by hanging, police said.

While the young woman's family members were reluctant to lodge a police complaint, the rural police arrested her boyfriend a day after his marriage, allegedly for abetting the woman's suicide.

A few years ago, N Revathy, a resident of Morattupalayam in Uthukuli and a school dropout, worked in a photocopy shop in Gobichettipalayam in Erode district. She had a relationship with Kumar, 27, (name changed), of Vaniputhur in Erode, pursuing MBA in a private college. The relationship continued even after they began to work in Tirupur and it lasted for seven long years. Recently, they broke up following differences, said a police officer.

Kumar later decided to marry another woman who was a relative and an MPhil graduate. A distraught Revathy warned him against marrying another woman. Police said she frequently picked up fights with Kumar over the issue and a week before the wedding she demanded that he cancel it. But, Kumar refused to do so.

Due to certain superstitions, Revathy lived with her mother Pappathi in a rented house though they had their own house in Morattupalayam. On August 30, when Kumar's marriage was scheduled, Revathy went to her own house after informing her mother. When she failed to return, Pappathi went to the house only to find her hanging from the ceiling of a room, police said.

She had talked for three minutes, expressing her deep disappointment over the break up with Kumar. The video was doing the rounds in WhatsApp, and was seized by Uthukuli police. They arrested Kumar, now working as an executive of IFFCO Tokio general insurance company. He has been booked under section 306 of the IPC. He was arrested the day after his marriage and lodged in Coimbatore central jail.
'நீட்' தேர்வு விவகாரம் : தமிழிசை 3 கேள்வி
பதிவு செய்த நாள்05செப்
2017
00:15

சென்னை: 'நீட்' நுழைவுத் தேர்வு தொடர்பாக, காங்கிரசுக்கு, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை, மூன்று கேள்விகள் எழுப்பி உள்ளார்.'நீட்' தேர்வுக்கு, சில தரப்பில் எதிர்ப்பு உருவானதை தொடர்ந்து, 'அதற்கு விலக்களிக்க வேண்டும்' என, காங்., தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களிடம், மூன்று கேள்விகளை, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், தமிழிசை கேட்டுள்ளார்.

அதன் விபரம்:

l நாடு முழுவதும், 'நீட்' தேர்வு என்ற கொள்கை முடிவை, முதன்முதலில் கொண்டு வந்தது யார்?

l 'நீட்' தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது, காங்., மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவி நளினி தானே?

l கல்வியை, மாநில பட்டியலில் இருந்து பிரித்து, பொது பட்டியலில் சேர்த்தது யார்; காங்., தானே?

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
'ப்ளூ வேல்' விளையாட்டை பரப்பினால் கடும் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு
பதிவு செய்த நாள்05செப்
2017
01:09


மதுரை: 'ப்ளூ வேல் விளையாட்டை, பிறருக்கு பகிர்வோர் மற்றும் உதவி செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், தமிழக உள்துறை முதன்மை செயலர் அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில், 'ப்ளூ வேல்' விளையாட்டால், கல்லுாரி மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்தார். 

இது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு:

மதுரையில் மாணவர் விக்னேஷ், அலைபேசியில், ப்ளூ வேல் விளையாடியதால் தற்கொலை செய்ததாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

கண்காணிப்பு அவசியம்

ரஷ்யாவில் துவங்கிய இந்த விளையாட்டில், 50 ஆபத்தான கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். இறுதியாக தற்கொலை செய்ய வேண்டும் என்பதில் முடிகிறது.

ப்ளூ வேல் நிர்வாகி, அந்த விளையாட்டை விளையாடுபவர்களை மன ரீதியாக கட்டுப்படுத்துவதால், தற்கொலையில் முடிவடைகிறது.
புற்றுநோய் போல் வளரும் இத்தகைய விளையாட்டை தடுக்க, சரியான நேரம் வந்துவிட்டது. பெற்றோர், போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு பதிவாளர் மனு செய்திருந்தார்.

பொது நலன் கருதி நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு தானாக முன்வந்து நேற்று விசாரணைக்கு ஏற்றது.
மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல ஆஜராகி, 'ப்ளூ வேல் விளையாட்டை இனி யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்ததை, பிறருக்கு பகிர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

மதுரை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செந்தில் இளந்திரையன் ஆஜராகி, 'விக்னேஷ் மரணம் தொடர்பாக தனிப்படை விசாரணை நடக்கிறது' என்றார்.
இதன் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
சென்னை, ஐ.ஐ.டி., இயக்குனர், மாநில மனநல பாதுகாப்பு அமைப்பு, தற்கொலை தடுப்பிற்கான சென்னை, 'சினேகா' தொண்டு நிறுவன இயக்குனரை இவ்வழக்கில் எதிர் மனுதாரர்களாக நீதிமன்றம் தானாக முன்வந்து இணைத்துக் கொள்கிறது.

அவர்களும், டி.ஜி.பி., மற்றும் சென்னை, சி.பி.சி.ஐ.டி., - சைபர் கிரைம் போலீஸ் கமிஷனர் தகுந்த ஆலோசனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

கடும் நடவடிக்கை
இவ்வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவும் வகையில், நடுநிலை அறிவுரையாளராக வழக்கறிஞர் பழனிவேல்ராஜனை, நீதிமன்றம் நியமிக்கிறது. அவருடன் மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன், வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், திருப்பதி செல்லசாமி கருத்துக்களை வழங்கலாம்.
மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பது பற்றி, பள்ளிக்கல்வித் துறை மற்றும் கல்லுாரிக் கல்வி இயக்குனர்கள், ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
ப்ளூ வேல் விளையாட்டுக்கு, 'லிங்க்' கொடுப்போர், பிறருக்கு பகிர்வோர் மற்றும் அதற்கு உதவி செய்வோருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், தமிழக உள்துறை முதன்மைச் செயலர் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இணையதள சேவை வழங்கும் சமூக வலைத் தளங்களிலிருந்து, ப்ளூ வேல் விளையாட்டை நீக்குவதற்குரிய தொழில் நுட்ப வழிமுறைகளை, மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னை, சி.ஐ.டி., சிறப்பு பிரிவு, எஸ்.பி., - அரவிந்தன், சி.பி.சி.ஐ.டி.,- ஏ.டி.எஸ்.பி., - லாவண்யா செப்., 7ல், நீதிமன்றத்தில் ஆஜராகி, தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறினர்.
நவோதயா பள்ளிகளில் படித்த 11,875 பேர், 'நீட்' தேர்வில் தகுதி
பதிவு செய்த நாள்04செப்
2017
23:51

மதுரை: 'நவோதயா பள்ளிகளில் படித்தவர்களில், 11 ஆயிரத்து 875 பேர், 'நீட்' தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்' என, மத்திய அரசுத் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.

குமரி மகாசபா செயலர் ஜெயகுமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனு: 

கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன. ஜவஹர் நவோதயா வித்யாலயா என்பது உண்டு, உறைவிடப் பள்ளி. 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில், மாவட்டந்தோறும் ஜவஹர் நவோதயா பள்ளிகளை துவக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ஜெயகுமார் தாமஸ் மனு செய்திருந்தார்.

தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 'தமிழ்நாடு தமிழ்வழி கற்பித்தல் - 2006 சட்டத்தின்படி, தமிழ், ஆங்கிலம் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.

'நவோதயா பள்ளியானது பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்தி மும்மொழிக் கொள்கையுடையது. தமிழுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்' என குறிப்பிட்டு இருந்தது.

மத்திய அரசின் பதில் மனுவில், 'நவோதயாவில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் கட்டாயப் பாடம். ஆங்கிலம், கணிதம் உட்பட இதர பாடங்கள் உள்ளன.

'பிளஸ் 1 முதல், பிளஸ் 2 வரை, தமிழ் கூடுதல் மொழி. நவோதயாவில் தங்குமிடம், உணவு, கட்டணம் இலவசம். கிராமப்புற மாணவர்களுக்கு, 75 சதவீதம் முன்னுரிமை உண்டு. தமிழக அரசு அனுமதித்தால், நவோதயா பள்ளி துவக்கத் தயார்' என, குறிப்பிட்டு இருந்தது.

நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்கையில், 'இது மிக முக்கியமான, உணர்வுப்பூர்வ விவகாரம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அரசிடம் விபரங்கள் பெற மேலும் அவகாசம் தேவை' என்றார். புதுச்சேரி ஜவஹர் நவோதயா வித்யாலயா முதல்வர், வெங்கடேஸ்வரன் ஆஜராகி, 'இந்தியா முழுவதும், 598 நவோதாயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் படித்தவர்களில், 14 ஆயிரத்து 183 பேர் மருத்துவப் படிப்பிற்கான, 'நீட்' தேர்வில் பங்கேற்றனர். 'இதில், 11 ஆயிரத்து 875 பேர், தகுதி பெற்றனர். 7,000 பேர் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து விட்டனர்' என்றார். விவாதத்துக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'இதை நவோதயா சமிதி சார்பில் எழுத்துப்பூர்வமாக, செப்., 11ல் தாக்கல் செய்ய வேண்டும்; தமிழக அரசுத் தரப்பில் விபரம் பெற்றுத் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.
நாளை முதல் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் : தடையை நீட்டிக்க ஐகோர்ட் மறுப்பு
பதிவு செய்த நாள்04செப்
2017
23:37

சென்னை: 'வாகன ஓட்டுனர்கள், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதை, ௫ம் தேதி வரை கட்டாயமாக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை நீட்டிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அதனால், வாகன ஓட்டிகள், நாளை முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

'தமிழகத்தில், வாகன ஓட்டுனர்கள், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்து இருப்பது, செப்., ௧ முதல் கட்டாயமாகிறது' என, மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டது.

உத்தரவாதம் : 'அசல் உரிமம் வைத்திருக்கும்படி, ஓட்டுனர்களை வற்புறுத்தக் கூடாது' என, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், சுகுமார் தாக்கல் செய்த மனு, நீதிபதி துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு, டிவிஷன் பெஞ்ச் முன் உள்ளதாகவும், இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதாகவும், அட்வகேட் ஜெனரல் கூறினார். அத்துடன், 'செப்., 4 வரை, அசல் உரிமம் உத்தரவை அமல்படுத்த மாட்டோம்' என்றும், நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து, 'செப்., 5 வரை, அசல் உரிமம் உத்தரவை அமல்படுத்தக் கூடாது' என, நீதிபதி துரைசாமி உத்தரவிட்டார். இதற்கிடையே, அரசின் உத்தரவை எதிர்த்து, 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த பொது நல வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது.
வழக்கு குறித்து, ராமசாமியின் வழக்கறிஞர் முறையிடவே, பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், வாதாடினார். 

அப்போது, லாரி உரிமை யாளர்கள் சம்மேளனம் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் கோவிந்தராமன், ''நாங்கள் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை; ஏற்கனவே, அசல் உரிமம் தொடர்பாக, அட்வகேட் ஜெனரல், உத்தரவாதம் அளித்துள்ளார்,'' என்றார்.

என்ன பிரச்னை : தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ''அசல் உரிமம் வைத்திருப்பதில், உங்களுக்கு என்ன பிரச்னை உள்ளது; அதை வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க கோரியதை, 'முதல் பெஞ்ச்' ஏற்கவில்லை. மேலும், வழக்கை, ௮ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தது. இதனால், வாகன ஓட்டிகள், நாளை முதல், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

'ஸ்டிரைக்' அறிவிப்பு : தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர், முனிரத்னம் கூறியதாவது:ஓட்டுனர்கள், எந்நேரமும் அசல் உரிமம் வைத்திருப்பது சாத்தியமற்றது. இதனால், விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுனர்கள், தப்பி விடுவர். இந்த உத்தரவு, போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, லஞ்சம் வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
வரும், 14ல், மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில், சேலத்தில், இந்த உத்தரவு குறித்து விவாதிக்கப்படுகிறது. அதன்பின், மாநிலம் முழுவதும், 'ஸ்டிரைக்' நடத்த உள்ளோம்; ஸ்டிரைக் தேதி, 14ல் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ கல்லூரி பூமி பூஜை கலெக்டர் பங்கேற்காமல் தவிர்ப்பு
பதிவு செய்த நாள்05செப்
2017
01:02

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி பூமி பூஜையில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்காமல் தவிர்த்தனர்.

நீண்ட இழுபறிக்கு பின், கரூர், சணப்பிரட்டியில் மருத்துவ கல்லுாரி அமைக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று சணப்பிரட்டியில், பூமி பூஜை நடந்து. இதில், கலெக்டர் கோவிந்தராஜ் உட்பட, அரசு அதிகாரிகள் பங்கேற்கவில்லை. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று கரூரில் இருந்த போதும், அவரும் பூஜையில் பங்கேற்றவில்லை.

கரூர், எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையிடம் கேட்டபோது, “நகரின் மையப் பகுதியாக இருக்க வேண்டும் என்பதால், சணப்பிரட்டிக்கு இடம் மாற்றப்பட்டது. இதற்கு அரசு ஆணை வெளியிட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. அவசர வேலை காரண மாக, அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று விட்டார். ஒப்பந்ததாரர் மற்றும் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி என்பதால், அதிகாரிகள் பங்கேற்கவில்லை,” என்றார்.
'ப்ளூ வேல்' கேள்விகளால் அதிர்ச்சி : 104 சேவை மைய அதிகாரிகள் திணறல்
பதிவு செய்த நாள்05செப்
2017
00:50

விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், 'ப்ளூவேல் கேம்' குறித்த ஆலோசனை வழங்கும், 104 இலவச சேவை மையத்துக்கு, தினமும் ஏராளமான கேள்விகளுடன் போன் அழைப்புகள் வருகின்றன. 'நான் ஏன் ப்ளூவேல் விளையாடக்கூடாது' என்பது போன்ற கேள்விகள், அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

ஆலோசனை : உயிரை குடிக்கும், 'ப்ளூவேல் வீடியோ கேம்' தொடர்பாக, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத் துறை, '104' என்ற இலவச போன் எண் மூலம் பயன்பெறும் வகையில், ஆலோசனை வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளது. 'ப்ளூவேல்' தொடர்பான சேவை துவங்கியதும், தினமும் ஏராளமான கேள்விகள், சேவை மையத்துக்கு வருகின்றன. குறிப்பாக, 'இந்த விளையாட்டை ஏன் விளையாடக்கூடாது; இதனால் என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது' என்ற ரீதியில், பலரும் கேள்விகளை துளைத்தெடுக்க, மனநல ஆலோசனை வழங்கும் அதிகாரிகள், திணறிப் போயுள்ளனர்.

ஆர்வம் மிகுதி : இது குறித்து, 104 சேவை மையத்தின் நிர்வாக மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:

எதிர்முனையில் பேசுபவரின் மனநிலையை கண்டறிய, அழைப்புகளை, மூன்று விதமாக பிரிந்து வைக்கிறோம். ஏற்கனவே, ப்ளூவேல் விளையாடி, மீண்டு, வெளியே வர நினைப்பவர்; 'ப்ளூவேல்' விளையாடுபவர், அல்லது அவரது கையில் உள்ள குறியீட்டை பார்த்து, ஆலோசனை மையத்துக்கு தகவல் தெரிவிப்பவர். இதுமட்டுமின்றி, 'நான் ஏன் ப்ளூவேல் விளையாடக்கூடாது' என,ஆர்வ மிகுதியில் கேள்வி கேட்பவர் என, வகைப்படுத்தி வைக்கிறோம்.

இதில், 70 சதவீத அழைப்புகள், 'ப்ளூவேல் விளையாடினால் என்ன தவறு' என்ற ரீதியில் கேட்கப்படுகின்றன. இவ்வாறு கேட்பவர்களிடம், 'ப்ளூவேல்' விளையாட்டால் ஏற்படும் விபரீதங்களை விளக்கி, அந்த விளையாட்டு மீதான அவர்களின் ஆர்வத்தை திசை திருப்பி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
நாளைக்குள் முடிவு; இல்லையேல், 'ஸ்டிரைக்'

பதிவு செய்த நாள்05செப்
2017
00:03

'நாளைக்குள் அரசிடமிருந்து சாதகமான பதில் வராவிட்டால், வரும், ௭ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, எட்டாவது ஊதிய மாற்றத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ, பல கட்ட போராட்டங்களை அறிவித்தது. ஜூலை, 18ல், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆக., 5ல், சென்னையில், கோட்டையை நோக்கி பேரணி, 22ல், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக, வரும், 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்று பகல், 12:30 மணிக்கு, சென்னை, தலைமை செயலகத்தில், ஜாக்டோ - ஜியோ அமைப்புடன், அரசு தரப்பில், பேச்சு நடத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், உதயகுமார், நிதித்துறை செயலர் சண்முகம் பங்கேற்றனர். ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், இளங்கோ தலைமையில், கூட்டமைப்பு நிர்வாகிகள், 35 பேர் பங்கேற்றனர். மாலை, 3:30 மணிக்கு, பேச்சு நிறைவடைந்தது. பேச்சு விபரத்தை, முதல்வரிடம் தெரிவிக்க உள்ளதாக, அமைச்சர்கள் கூறினர். ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளோ, 'நாளைக்குள் சாதகமான முடிவு வராவிட்டால், வரும், 7ம் தேதி முதல், திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கும்' என, அறிவித்துள்ளனர்.

போராட்டத்தை கைவிட முதல்வர் வேண்டுகோள்

முதல்வர் பழனிசாமி, நேற்று விடுத்த அறிக்கை: ஜாக்டோ - ஜியோ பிரதிநிதிகளோடு, அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை, நவம்பர், இறுதிக்குள் கிடைக்கும். அதன்படி, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ஊதிய விகிதத்தை திருத்தி அமைத்தல், இடைக்கால நிவாரணம் வழங்குதல், முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை, இதற்கென அமைக்கப்பட்ட, ஊதியக்குழு பரிசீலித்து வருகிறது. அந்தக் குழு, இம்மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்பிக்கும். அதன் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அவசியம் ஏற்பட்டால், இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பு, உரிய நேரத்தில் வெளியிடப்படும். பொதுமக்கள் நலன் கருதி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு, காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
பெற்றோருக்கு புளூவேல் விழிப்புணர்வு: போலீசார் முடிவு

பதிவு செய்த நாள்05செப்
2017
01:26

திண்டுக்கல்: மதுரை, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த இளைஞர் 'புளூவேல்' இணைய விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள பெற்றோர்-, ஆசிரியர் கழகம் மூலம் பெற்றோரை போலீசார் வரவழைப்பர். பின்னர் குழந்தைகளை கணினி, அலைபேசி விளையாட்டுகளில் ஈடுபட அனுமதிக்க கூடாது. அவர்களை தனிமையில் அமர வைக்காமல், முடிந்தவரை நண்பர்களுடன் தெருக்களில் விளையாட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை பெற்றோருக்கு போலீசார் வழங்குவர். திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் கூறியதாவது: 'புளூவேல்' விளையாட்டின் விபரீதம் குறித்து மாணவர்களை விட, அவர்களின் பெற்றோரிடம் கூறினால்தான் தீர்வு காண முடியும். போலீசாரின் தற்போதைய நடவடிக்கையால், புரோசிங் மையங்களில் இருந்து இந்த விளையாட்டை டவுன்லோடு செய்ய முடியாது என்றார்.
மருத்துவ பல்கலையில் நாளை பட்டமளிப்பு விழா
பதிவு செய்த நாள்04செப்
2017
23:52

சென்னை: தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 29வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில், நாளை நடைபெற உள்ளது. காலை, 11:00 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ் தலைமை தாங்குகிறார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர், சவுமியா சாமிநாதன் உட்பட, பலர் பங்கேற்கின்றனர். விழாவில், 2,925 மாணவ மாணவியருக்கு, நேரடியாக பட்டம் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள, 16 ஆயிரத்து, 270 மாணவ மாணவியருக்கு, கல்லுாரிகள் வாயிலாக பட்டம் தரப்படும். அதிக மதிப்பெண்கள் பெற்ற, 139 மாணவ மாணவியருக்கு, 166 தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை, கவர்னர் வழங்கி சிறப்பிக்க உள்ளார். துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் பல்கலை நிர்வாகிகள், விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.



எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின : புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
பதிவு செய்த நாள்04செப்
2017
23:46




தமிழகம் முழுவதும், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேற்று வகுப்புகள் துவங்கின. 'நீட்' தேர்வு அடிப்படையில், இடம் பெற்ற மாணவர்கள், உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர். 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெறும், மாநில அரசின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடந்தது. கவுன்சிலிங் முடிந்த நிலையில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. சென்னையில், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பூங்கொத்து கொடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் வரவேற்றனர். பல இடங்களில், மரக்கன்றுகள் நட்டும், வரவேற்பு அளித்தனர். 'ராகிங் செய்ய மாட்டோம்' என, சீனியர் மாணவர்கள் வாக்குறுதி அளித்தனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், டீன் வசந்தா மணி பேசியதாவது: சேவை சார்ந்த துறை மருத்துவம். உங்கள் உணர்வுகளை தியாகம் செய்ய வேண்டி இருக்கும்.குறிக்கோளுடன் பயில வேண்டும்; நல்லொழுக்கத்துடன், மற்ற துறையினருக்கு, முன்மாதிரியாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில், டீன் பொன்னம்பல நமச்சிவாயம் பேசுகையில், ''இந்த பருவத்தில், மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படும். அதில், சிக்கி விடாமல், கவனத்துடன் படிக்க வேண்டும். அவ்வப்போது, பிள்ளைகளை பெற்றோர் சந்தித்து அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.

தமிழகம் முழுவதும் உள்ள, பெரும்பாலான அரசு மருத்துவ கல்லுாரிகளில், நேற்று வகுப்புகள் துவங்கின. அரசு ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரியில் இன்றும், சென்னை மருத்துவ கல்லுாரியில், 7ம் தேதியும், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

உடை கட்டுப்பாடு : மாணவர்கள், ஜீன்ஸ், டி - சர்ட் அணியக்கூடாது; பேன்ட், முழுக்கை சட்டை, ஷூ அணிய வேண்டும்

மாணவியர் சேலை, சுரிதார் என, இரண்டு விதமான உடைகள் அணியலாம்; மேற்கத்திய உடைகளுக்கு அனுமதி இல்லை. தலை முடியை விரித்து போடக்கூடாது இதை, பின்பற்றாத மாணவர்கள், வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது உட்பட, பல கட்டுப்பாடுகளை, மருத்துவ கல்வி இயக்ககம் விதித்துள்ளது.
இதே நாளில் அன்று

பதிவு செய்த நாள்04செப்
2017
18:53




1888 செப்டம்பர் 5

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், திருத்தணியில், சர்வபள்ளி வீராசாமி - சீதம்மா தம்பதிக்கு மகனாக, 1888 செப்., 5ல் பிறந்தார். சென்னை பல்கலையில், முதுகலை பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில், பயிற்சி பெற்றார்.சென்னை மாநில கல்லுாரியில் துவங்கி, மைசூரு, கோல்கட்டா, வாரணாசி மற்றும் ஆக்ஸ்போர்டில், தத்துவ பேராசிரியராக பணியாற்றினார். முழுமையாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும், மனமார ஆதரித்தவர்களுள் ஒருவராக விளங்கினார்.கடந்த, 1938ல், அவருக்கு, 'சர்' பட்டம் கொடுத்து, பிரிட்டிஷ் அரசு கவுரவித்தது. சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, உயர்நிலைப் பள்ளிகளில், ஹிந்தி மொழிப்பாடம் கட்டாயம் என, அறிவித்தார். அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த, சென்னை மாகாண காங்., தலைவர்களில் ஒருவராக, ராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் பணியாற்றினார். நாட்டின் உயரிய, 'பாரத ரத்னா' விருது பெற்றவர்.இவர் பிறந்த தினமான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர், பிறந்த தினம் இன்று.
தலையங்கம்
உயிர்களை காவு வாங்கும் ‘நீல திமிங்கலம்’




செப்டம்பர் 02 2017, 03:00 AM

சமீபகாலமாக யாராவது சிறு குழந்தையோ, இளமை பருவத்தில் உள்ள ஆணோ, பெண்ணோ கையில் செல்போனை வைத்துக்கொண்டு அதிலேயே மூழ்கி இருந்தால் நெஞ்சம் துடிதுடிக்கிறது. எங்கே ‘புளூவேல்’ என்று கூறப்படும் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டை விளையாடுகிறார்களோ? என்ற அச்சம் பெற்றோருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே இருக்கிறது. தன் கொடிய கரங்களை ஒவ்வொரு மாநிலமாக நீட்டிக்கொண்டு, இளைஞர்களின் உயிரை பறித்துக்கொண்டிருக்கும் இந்த விளையாட்டு, இப்போது தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் நுழைந்துவிட்டது.

இந்த விளையாட்டின் காரணமாக சென்னையில் ஒரு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் நல்லவேளையாக உயிர் பிழைத்துக்கொண்டார். இப்போது மதுரையில் வீட்டின் கஷ்டம் தெரிந்து பொறுப்புள்ள இளைஞராக வாழ்ந்து கொண்டிருந்த விக்னேஷ் என்ற 19 வயது கல்லூரி மாணவர் இந்த ‘நீல திமிங்கலம்’ விளையாட்டின் வலையில் சிக்கி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ‘நீல திமிங்கலம்’ விளையாட்டினால் தன் உயிரை இழந்ததை அவரே தன் கையில் ‘புளூ வேல்’ என்று எழுதி, ‘நீல திமிங்கலம்’ படத்தையும் வரைந்து உலகுக்கு காட்டிவிட்டார். 

அவர் வீட்டில் உள்ள ஒரு நோட்டில் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டு அல்ல, விபரீதம், ‘ஒருமுறை உள்ளே போனால் வெளியே வரமுடியாது’ என்று எழுதி மற்ற இளைஞர்களுக்கு எல்லாம் ஒரு எச்சரிக்கை விடுத்துவிட்டு, தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டார். நேற்று புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழக முதுகலை பட்டப்படிப்பு மாணவரான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த போரா என்ற மாணவர் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டு வலையில் சிக்கி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்டம், பத்தமடையை சேர்ந்த ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நீல திமிங்கல விளையாட்டால் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

ரஷியாவில் உள்ள 22 வயது பிலிப் பூடிக் என்ற மாணவர்தான் இந்த ‘நீல திமிங்கலம்’ விளையாட்டை உருவாக்கியவர். இதில் சேர்ந்துவிட்டால், ‘‘50 நாள், 50 சவால்’’ என்ற அடிப்படையில் தினமும் ஒரு சவாலை அனுப்புவார்கள். இந்த விளையாட்டில் சேர்ந்தவுடன் முதலில் சாதாரண சவால்களையே அனுப்புவார்கள். இதில் தீராத ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக மனரீதியாக தங்களுக்கு அடிமையாக்கிவிட்டு, கடைசியில் தற்கொலை செய்துகொள் என்பதுவரை கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். இந்த கொடிய விளையாட்டு குறித்த விழிப்புணர்வை பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ஏற்படுத்த நடவடிக்கை தொடங்கிவிட்டது. கல்லூரிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். 

வீட்டில் உள்ள பெற்றோர்களும், பெரியவர்களும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இதுதொடர்பான ‘லிங்க்’ சமூகவலைதளங்களில் வந்தால் அதை ‘டவுன்லோடு’ செய்யவேண்டாம், வேறு யாருக்கும் அனுப்பவும் வேண்டாம் என்பதை இளைஞர் சமுதாயத்துக்கு அறிவுறுத்தவேண்டும். ஏற்கனவே இந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருப்பவர்களும் உடனே அதை விட்டுவிட்டு வெளியே வரவேண்டும். விளையாட்டு நிர்வாகிகளிடமிருந்து எந்தவித அச்சுறுத்தல் வந்தாலும் பயப்படவேண்டாம். அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. இதுகுறித்து மனோதத்துவ நிபுணரான டாக்டர் விதுபாலா கூறும்போது, ‘தற்கொலை செய்யவேண்டும் என்ற பலவீனமான உணர்வுள்ளவர்கள்தான் இந்த கோர விளையாட்டுக்கு பலியாகிவிடுகிறார்கள் என்று சொல்லமுடியாது. தெரிந்தோ, தெரியாமலோ இந்த விளையாட்டுக்குள் போய்விடுபவர்கள் அதில் அடிமையாகி, அங்கு ஆட்டுவிப்பதற்கேற்ப செயல்பட்டு, இறுதியில் தற்கொலை முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஆன் லைனில் இந்த விபரீத விளையாட்டை தடை செய்யவேண்டும்’ என்று தெரிவித்தார். மொத்தத்தில், நீல திமிங்கலம் என்ற கொடிய அரக்கனை இளைஞர்கள் பக்கம் பார்க்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ?, அதை உடனடியாக அரசாங்கமும், சமுதாயமும் எடுக்கவேண்டும்.










ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...