Saturday, September 16, 2017


ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு

By DIN  |   Published on : 16th September 2017 03:44 AM  |    
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.
முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும்,
பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலகங்களில் நடத்தப்படும்.
முதல்வர் வழங்குவார்: கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை வியாழக்கிழமையன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

    துணை மருத்துவப் படிப்புகளுக்கு செப்.19 முதல் கலந்தாய்வு: தகுதிப் பட்டியல் வெளியீடு


    By DIN  |   Published on : 16th September 2017 03:59 AM  | 
    தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் (செப்.19) கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தகுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
    தமிழகத்தில் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிஓடி (இயன்முறை மருத்துவம்), பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பர்ஃபியூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியா மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி, இளநிலை ஆக்குபேஷனல் தெரபி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி நோய்க்குறியியல் படிப்பு) ஆகிய 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 7}ஆம் தேதி முதல் 23}ஆம் தேதி வரை நடைபெற்றது.
    இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 484 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 5,479 இடங்களும் உள்ளன. மொத்தம் 26,460 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 25,293 பேருக்கான தகுதிப் பட்டியல் www.tnhealth.org, www.tnmedicalselcetion.org ஆகிய இணையதங்களில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
    தகுதிப் பட்டியலின் அடிப்படையில் முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 19}ஆம் நாள் தொடங்குகிறது. முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவு கலந்தாய்வு 20}ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 21 முதல் 23, 25 முதல் 27, அக்டோபர் 4 முதல் 7 என மொத்தம் 12 நாள்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெற்றோரைப் பராமரிக்காத அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியம் கிடையாது


    By DIN  |   Published on : 16th September 2017 02:17 AM  |    
    oldage
    Ads by Kiosked
    வயதான பெற்றோர்களைப் பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்ய வகை செய்யும் மசோதா அஸ்ஸாம் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
    நாட்டிலேயே முதன்முறையாக இதுபோன்றதொரு மசோதா கொண்டுவரப்பட்டது அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக வரவேற்பு கிடைத்தாலும், எதிர்க்கட்சிகள் அதை விமர்சித்துள்ளன. இதனிடையே, இதுபோன்று எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வது தொடர்பான புதிய மசோதாவும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அஸ்ஸாம் அரசு தெரிவித்துள்ளது.
    சமூகத்தில் பொருளாதாரரீதியாக வசதியாக இருப்பவர்கள்கூட, தங்களது வயதான பெற்றோர்களையும், மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் சகோதர, சகோதரிகளையும் கவனிக்காமல் ஆதரவற்றோர் இல்லங்களில் விட்டுவிடும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
    இந்நிலையில், அத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முதல் முயற்சியை அஸ்ஸாம் மாநில அரசு மேற்கொண்டிருக்கிறது. அதுவும், அந்த மாநில அரசு ஊழியர்களிடத்தில் இருந்து அதைத் தொடங்கியிருக்கிறது.
    அதன்படி, புதிய சட்ட மசோதா ஒன்று அஸ்ஸாம் பேரவையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோர்களையும், மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் உடன்பிறந்தவர்களையும் கைவிட்டுவிட்டால் அவர்களது ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்ய அதில் வகை செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகையானது சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும், உடன்பிறந்தவர்களுக்கும் வழங்கப்படும்.
    மசோதாவை அறிமுகப்படுத்திய மாநில அமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மா இதுதொடர்பாக பேரவையில் பேசியதாவது:
    இந்த சட்டத்தின் வாயிலாக அரசு ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மாறாக ஆதரவற்று இருக்கும் சில பெற்றோர்களுக்கு உரிய உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதே நோக்கம்.இதேபோன்று எம்எல்ஏ, எம்.பி.க்கள், பொதுத் துறை ஊழியர்கள் ஆகியோரது ஊதியங்களைப் பிடித்தம் செய்வது தொடர்பான மசோதாவும் விரைவில் கொண்டுவரப்படும் என்றார் அவர்.
    இதைத்தொடர்ந்து மாநில முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான தருண் கோகோய், பேசுகையில் "இத்தகைய மசோதாக்களைக் கொண்டுவந்து மாநிலத்தில் உள்ள மக்களை தவறாகச் சித்திரிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடுகிறது' என்றார். விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
    Man boards Goa flight with knife; CISF orders probe

    Saurabh Sinha| TNN | Updated: Sep 15, 2017, 22:58 IST



    NEW DELHI: The Central Industrial Security Force (CISF) has launched a probe into the lapse in hand baggage checking at IGI Airport on Thursday which saw a man board a Goa-bound flight with a kitchen knife.

    Once inside the SpiceJetaircraft, this person took the knife from his bag and showed it to co-passengers — including minister of state in PMO Jitendra Singh — and said he did this to show the chinks in armour at one of India's most sensitive airports.

    "We have ordered an inquiry and action will be taken against the personnel found responsible," a CISF spokesman said.

    This lapse is being taken very seriously as the union home ministry had earlier this month asked airport security agencies to be extra vigilant in view of increased threat perception, including chemical attacks in modes of transport.

    The MHA wrote on September 1 to all states, aviation ministry and other agencies saying: "Central security agencies have intimated that terrorists are planning a range of attacks against commercial aviation targets." Based on this MHA alert, the Bureau of Civil Aviation Security had written to the top brass of CISF, Airports Authority of India and JV metro airports to step up security arrangements.

    According to the home ministry, intelligence inputs indicate explosives concealed inside personal electronics, small appliances and personal items could be taken on a plane or even shipped by airmail. "Further inputs indicate that terrorists remain interested in small arms attack and physical assaults on airports and other transportation hubs... it is advised that security at airports and transportation hubs (railway stations, bus terminals, metro stations etc) be stepped up to ensure stricter screening of items mentioned above and frisking of passengers properly in order to avoid any untoward incident," the MHA advisory had said.

    TOP COMMENTthis man should be rewarded for identifying the security lapses.Parmod Kumar

    But within a fortnight of this alert, the lapse at Delhi Airport happened on Thursday. Describing this, a SpiceJet spokesman had said: "A passenger on board SpiceJet flight SG 144 from Delhi to Goa on Thursday reported to the cabin crew that he had a kitchen knife in his hand baggage. The aircraft was at that point still on ground. The SpiceJet staff immediately brought the matter to the attention of the CISF. The passenger was offloaded and handed over to the airport police. The flight was released after all necessary checks as per regulatory guidelines."

    Passenger frisking and hang bag checking is done by CISF.
    Tamil Nadu strike: HC tells employees to resume work from now

    TIMESOFINDIA.COM | Updated: Sep 15, 2017, 12:50 IST

    HIGHLIGHTS

    The associations told the bench that they have decided to withdraw their strike temporarily and would resume work from Monday

    However, the court directed them to go to work by 2pm today

    Tamil Nadu chief secretary has been asked to to appear before the court on Sept 21



    CHENNAI: The striking Tamil Nadu government employees have agreed to resume work after the Madurai bench of the Madras high court directed the teachers and government employees' organizations to withdraw their strike.

    Adhering to the court direction, the associations told the high court bench that they have decided to withdraw their strike temporarily and would resume work from Monday. But, the court directed them to go to work by 2pm today.

    It also directed the Tamil Nadu chief secretary to appear before it on September 21.

    33,487 teachers are on strike: TN govt tells Madras HC

    The Tamil Nadu government had on Thursday informed the Madras high court that a total of 33,487 government teachers, affiliated to six unions, were abstaining from work across the state.

    Additional Advocate General Venkatramani representing the state government informed this to the court in an affidavit containing replies to various other queries raised on Wednesday by Justice N Kirubakaran with regard to a section of government teachers who are on strike pressing for their demands.

    In its affidavit, the state government further said that retired teachers were also working as office-bearers in the unions.

    The High Court had on Wednesday pulled up a section of Tamil Nadu government school teachers who are on strike, saying it affected students.

    Justice Kirubakaran made the observations on a petition by advocate A P Suryaprakasam, seeking a direction to the state government to form an expert committee to prepare students who scored low marks in NEET (National Eligibility- cum-Entrance Test) and provide them moral support.

    The court had also sought information from the authorities concerned on the number of teachers unions striking without attending classes, among others.

    The Joint Action Council of Teachers Organisations and Government Employees Organisations (JACTO-GEO) had given a call for the strike from September 7 to press for their demands, including restoration of the old pension scheme.

    (With inputs from PTI)
    Madras HC judge trolled for remarks against teachers boycotting classes

    A Subramani| TNN | Updated: Sep 15, 2017, 19:59 IST

    HIGHLIGHTS

    Justice asked striking teachers were not ashamed that only five students from government schools made it to MBBS course.

    More than 43,000 government school teachers were boycotting classes.

    Teachers are demanding implementation of the Seventh Pay Commission recommendations.


    The judge recorded their offer to file the copies of the offending messages before the court so that the court... Read More

    CHENNAI: Trolled and abused online for his caustic remarks against Tamil Nadu government school teachers boycotting classes, a judge of the Madras high courthas called for details of the offensive materials circulated online by unknown people.

    Justice N Kirubakaran on Wednesday asked whether the striking government school teachers were not ashamed of the fact that only five students from government schools made it to the MBBS course in any of 22 government medical colleges in Tamil Nadu this year.

    More than 43,000 government school teachers were boycotting classes participating in joint agitation by various employees associations demanding implementation of the Seventh Pay Commission recommendations and scrapping of contributory pension scheme.

    On Friday, when the court assembled for the day, advocates Senthil Kumar, Suryaprakasam, Gnanasekaran and G Sankaran mentioned trolling of the judge and sought action against those indulging in such indecent activities under the cover of anonymity.

    Justice Kirubakaran said, "Abusive, malicious, defamatory, false and obscene messages are spreading virally in social media, accusing and degrading the judiciary in general, and this court in particular. Advocates and others would complain before this court that these messages are uploaded in social media by persons who are aggrieved over some of the observations made in the orders passed regarding the teachers and other government servants, who are protesting against the government by boycotting the schools and offices."

    The advocates said such action not only amounted to contempt of court but also interference with justice delivery system.

    "If it is not checked and nipped in the bud, then any person who comes to court and fails to get a favourable order would definitely follow the same path, and there will be no end to it. Consequently, the majesty and dignity of the court will be damaged and degraded," they said.

    The judge recorded their offer to file the copies of the offending messages before the court so that the court could pass appropriate orders.

    India vs Australia ODI in Chennai: Southern Railway to run additional MRTS services

    Siddharth Prabhakar| TNN | Sep 15, 2017, 19:20 IST



    CHENNAI: Southern Railwaywill run additional MRTS services in view of the India vs Australia one day cricket match at Chepauk stadium in Chennai on Sunday.

    Special trains will depart from Chennai Beach at 12:30pm, 12:40pm and 12:49pm. They will go up to Thirumailai station.

    In the return direction, there will be specials at 1pm, 1:10pm and 1:20pm.

    Later, there will be four specials from Chennai Beach to Velachery -- at 10:30pm, 10:40pm, 10:49pm and 11:15pm.

    In the return direction, the specials will start from Velachery at 11:20pm, 11:40pm, 11:50pm and 12:05am.
    12 out of 25 institutions in TN get swachhta awards

    TNN | Sep 16, 2017, 00:13 IST

    Chennai: As many as 12 of the 25 higher educational institutions which received awards for swachhta rankings from the HRD Ministry are from the state. The awards were given across four categories: Technical institutions, Government institutions, Universities and Colleges.

    Five of the seven institutions chosen under the technical institutions category and five of the six institutions chosen under colleges category across the country, were from the state.

    Sri Ramachandra Medical College and Research Institute was one of the institutions that bagged the third rank under technical institutions category. SRU dean (research) S P Thyagarajan said the fact that so many institutions in the state were recognised was a positive indication of the awareness levels across campuses to maintain the hygiene. He said it was important that the awareness trickled down to campuses in the state's rural areas.

    "Higher educational institutions should focus on improving student facilities which not only promote a good ambience but also their overall health. We have adopted 8 villages near Vayalanallur to make it defaecation-free and plan to expand cleanliness campaigns to other villages too," said Thyagarajan.

    Expert committees of All India Council for Technical Education (AICTE) and University Grants Commission (UGC) visited campuses for verification. Status of maintenance of toilets, student-toilet ratio in hostels, availability of running water, novel methods of purification, garbage clearance, garbage disposal, hygiene in hostels, greenery in campus, overall cleanliness, number of buildings, students and staff, and extension work done in villages/nearby areas for cleanliness were the major parameters considered by the committees. Colleges also said 15% weightage was given for village adoption scheme to make them open defaecation-free.

    AICTE officials who carried out inspections said a large number of the applications came in from Tamil Nadu. The officials said when it came to kitchens, toilets and drinking water facility, the award-winning campuses were very well maintained. "The fact that so many colleges willingly came forward to put their names up for swacchta rankings indicated the confidence of these institutions in their campus maintenance," said AICTE regional officer, R Balmurugan.

    AICTE has decided to give out the AICTE 'Clean Campus Awards 2017' on October 2, under the regional and national categories. Officials said most of the entries for these awards too were from the state, so, they said, were mulling over hosting the award ceremony in Tamil Nadu. The criteria for the awards are solid waste management, water conservation and management including waste water management and reuse, rain water harvesting, energy conservation and electronic waste management
    வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறாவிட்டால், எப்படி நிறுத்த வேண்டும் என்பது தெரியும்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

    Published : 15 Sep 2017 11:36 IST

    கி.மகாராஜன்மதுரை




    வேலை நிறுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் எப்படி நிறுத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இருப்பினும் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதனால் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் இன்று ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இவர்கள் சார்பில் ஆஜரான வக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிடுகையில், ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசுடன் கடந்த ஒரு ஆண்டாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு உரிமை உள்ளது'' என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''வேலை நிறுத்தத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன் பிறகும் போராட்டத்தை தொடர்வது தவறு. வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்று ஏன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என ஒருவர் கூறியுள்ளார். அவர் என்ன அரசியலமைப்பு சட்டத்தில் நிபுணரா?

    காலாண்டுத் தேர்வு தொடங்கியுள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அம்மாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் மாணவர்களை பாதிப்படைய வைத்து விட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா?

    வேலை நிறுத்தத்தை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அப்படி வந்தால் திங்கள்கிழமை தலைமை செயலரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, பேச்சுவார்த்தைக்கு உத்தரவிடப்படும். இல்லாவிட்டால் நீதிமன்ற உத்தரவை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்'' என்றனர்.

    தொடர்ந்து வழக்கறிஞர் பிரசாத் வாதிடும்போது, ''வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற முடியாது'' என்றார்.

    அதற்கு நீதிபதிகள், ''வேலை நிறுத்தம் கூடாது என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்த தீர்ப்பை யாரும் மீற முடியாது. சம்பளம் உயர்வு பெறுவது அடிப்படை உரிமை. அந்த உரிமை அரசால் மறுக்கப்படும் போது நீதிமன்றத்தை நாட வேண்டியது தானோ. அதைவிடுத்து போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது'' என்றனர்.

    மேலும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒவ்வொரு நாளும் போராட்டத்தின் போதும் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் எப்படி விளையாட்டு பொருட்களாக சித்தரிக்கின்றனர் என்பதை ஊடகங்களில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து வழக்கை சிறிது நேரம் ஒத்திவைக்கிறோம். அதற்குள் நிர்வாகிகளுடன் பேசி, வேலை நிறுத்தப் போராட்டத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒத்திவைக்க முடிவு செய்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    சமூக வலைதளங்களில் நீதிமன்றத்தை விமர்சிப்பவர்கள் பற்றி ஆதாரம் கொடுங்கள்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவு

    Published : 15 Sep 2017 15:51 IST

    சென்னை




    ஆசிரியர் போராட்டங்கள் குறித்த நீதிமன்ற கேள்விகளுக்கும் உத்தரவுகளுக்கும் எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் குறித்து ஆதாரத்துடன் ஆவணங்களாக தாக்கல் செய்ய வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    நீதிமன்றத்தை, நீதிபதியின் கருத்துகளை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் என்.செந்தில்குமார், ஜி.சங்கரன், ஏ.பி.சூர்யபிரகாசம் ஆகியோர் முறையீடு செய்தனர்.

    அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது: நீதிமன்ற உத்தரவுகளுக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக கருத்துகளை தெரிவிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட நபர் மீது குற்றம் சுமத்தினால் அவர் காவல் நிலையத்திலோ, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலோ புகார் அளிப்பார்கள்.

    ஆனால் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி யாரிடமும் புகார் அளிப்பதில்லை என்பதால் கட்டுப்பாடில்லாமல் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து பதிவேற்றம் செய்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய சென்னை காவல் ஆணையர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அவரை நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.

    இது குறித்து பதிலளித்த அரசு சிறப்பு வழக்கறிஞர் ராஜகோபாலன், முறையீடு செய்பவர்கள் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். உரிய ஆதாரங்களை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்தார்.

    இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: எந்த உத்தரவு போட்டாலும் விமர்சிக்கவே சிலர் இருக்கின்றனர். குழு விவாதங்களில் பங்கேற்பவர்கள் கூட நீதிமன்ற உத்தரவு என்ன? என்று அதனைப் புரிந்து கொள்ளாமல் பேசுவதால் சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என தெரியாமல் பேசுகிறார்கள். ஒரு பெண் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவை விமர்சிக்கும் ஒருவர், அந்தப் பெண்ணும் நீதிபதியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என விமர்சிக்கிறார்.

    ஹெல்மெட் கட்டாயம் என்று நான் உத்தரவு போட்ட போது, அதை விமர்சித்தும் கடிதங்கள் வந்தது. அவற்றில் 80% எதிர்மறை 20% ஆதரவு. முக்கியமாக விமர்சன கடிதங்களில், நான் இதுவரை தாய், தந்தை, ஆசிரியரிடம் திட்டு வாங்காத சொற்களில் வசை பாடப்பட்டேன்.

    உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா? குண்டுங்குழியுமான சாலையில் மனைவியிடன் இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறாயா? என கடிதம் வந்தது. தற்போதைய விமர்சனங்கள் குறித்து ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள்.செப்டம்பர் 18 அன்று விசாரிக்கிறேன். அதற்குள் இன்னும் நிறைய கருத்துகள் கிடைக்குமே என்று தெரிவித்து நீதிபதி கிருபாகரன் வழக்கை செப்.18-க்கு ஒத்திவைத்தார்.
    ஒரு நல்ல நாளில் அரசியல் பிரகடனத்தை அறிவிப்பேன்: கமல் பதில்

    Published : 15 Sep 2017 22:13 IST

    சென்னை




    ஒரு நல்ல நாளில் அரசியல் பிரகடனத்தை அறிவிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    'தி இந்து' தமிழ் நாளிதழ் நடத்தும் 'யாதும் தமிழே' விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஒரு நிகழ்வாக கலந்துரையாடலில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல் பதிலளித்துப் பேசினார்.

    கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆக்டிவா செயல்பட்டபோது ஏன் அமைதியாக இருந்தீர்கள்?

    இதுக்கு கிட்டத்தட்ட பதில் சொல்லி விட்டேன். அவர் கேட்ட கேள்விக்கு நான் சொல்வதை விட நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும். அது தீர்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல நடிகன் தான். இது நடிப்பாக இருக்கக் கூடும் என்று பல நடிகர்கள் நடித்ததால் இந்த எண்ணம் வந்திருக்கும். இதைப்பார்த்து தான் நானும் ஒதுங்கி இருந்தேன். நிஜமாகவே நடிப்பவர்கள் அதிகமாகி விட்டதால்தான் நானும் நடிக்கிறேன் என்று நினைக்கிறார்கள்

    இந்த உலகத்தில் கடவுள் இருப்பதை நிரூபிக்க ஒரு விஷயம் கூட இல்லையா கமலுக்கு?

    கடவுள் என்பதற்கான சொல் விளக்கம் நீ உனக்குள் கடந்து செல் என்பது தான். அனைத்து ஸ்லோகங்களும் என்னைக் குறிப்பிடுகிறது. இதை இல்லை என்று சொல்லும் பல பண்டிதர்கள் இருக்கின்றனர். மதம் ஒரு கார்ப்பரேட் ஸ்ட்ரக்சர் அது ஒரு பிசினஸ். ஆனால் கடவுளை நம்பும் மனிதர்களை நான் கும்பிடுகிறேன். உங்கள் பக்தியின் மேல் எனக்கு கோபம் இல்லை. இந்த பக்தியை பயன்படுத்தி விளையாடுகிறார்களே அவர்கள் மீதுதான் கோபம். எந்த மதத்தையும் நீங்கள் பகுத்தறிந்து உணரலாமே. மொழி போன்றது உங்கள் பக்தி. எனக்கு பேச வராது. ஆனால் வேறு மொழி இருக்கிறது அது அன்பெனும் மொழி. அன்பை சொல்லாதே, உடனே இணைவேன். வேறு வித்தை காட்டாதே.

    எனக்கு இஸ்லாத்தில் வைணவத்தில் சைவத்தில் சமணத்தில் தென்படுகிறது, மேற்கத்திய நாடுகளில் உள்ள ஒரு பிரிவு அசகாய சக்தி என்று பிரிக்கிறார்கள், இதையெல்லாம் பார்க்கிறேன். ஒவ்வொரு மதத்திலும் நல்லதும் இருக்கிறது கெட்டதும் உள்ளது.

    பேஸ்புக்கால் உதவியா உபத்திரவமா?

    நமது சொசைட்டிக்கு எல்லாம் உதவும் ஃபேஸ்புக்கும் உதவும் ட்விட்டரும் உதவும். அதை நாம் பயன்படுத்த வேண்டும்

    பொது மேடைக்கு ஏன் வர மாட்டேங்கிறீங்க?

    தங்கைக்கான பதிலிதோ இந்த மேடை இன்னும் பல உண்டு

    அஹிம்சை முறையில் போராடி நம்மால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியுமா? ஒரு பிரச்சினைக்காக ஏன் எல்லோரும் ஒன்று கூட மாட்டேங்கிறாங்க?

    இது என்னை கேட்கிற கேள்வி இல்லை உங்களை கேட்கும் கேள்வி. அஹிம்சை வீரத்தின் உச்சகட்டம். அதனால் தான் என்னவோ மாபெரும் முனிவர்களை மஹாவீரர் என்று அழைக்கிறார்கள். அஹிம்சையின் உச்சகட்டம் மஹாவீரம். மஹாவீரம் வராவிட்டாலும் ஆரம்ப வீரமாவது வரவேண்டாமா? துப்பாக்கி தோட்டாவில் இருந்து வந்தது போல் துடித்து வந்ததாக நினைக்கிறேன்

    அடுத்த குல்லா என்னவாக இருக்கும்?

    முடிதான் என் குல்லா. இதுவும் உதிர்ந்துவிடும். குல்லாவுக்கு வேலை எல்லாம் இல்லைங்க, குளிருக்கு வேண்டுமானால் போட்டுக்கலாம்.சென்னையில் எதுக்குங்க

    கேரளாவிற்கு சென்றீர்களே. முதல்வரைப் போய் சந்தித்தீர்களே ஏன்?

    இங்கேயும் சந்திக்க ஆசைதான் போறதுக்குள்ள மாறிடுமோன்னு பயம் தான். அங்கு குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தெரு சுத்தமாக இருக்கு. ஸ்வச் பாரத் அங்குதான் நன்றாக உள்ளது. எல்லோரும் மெடிக்கல் டூரிசம் சென்றார்கள், நான் அங்கு பொலிட்டிக்கல் டூரிசம் போனேன். யார் சொன்னாலும் கேட்டுக்குவேன் ஆனால் முடிவை நான் தான் எடுப்பேன். இதோ 'தி இந்து'வுக்கு தெரியுமே அந்த சிஸ்டம் எப்படி வெற்றி அடைகிறது என்று நீங்கள் சொன்னது தான் என்கிறார்களே. அதைத்தான் நானும் சொல்கிறேன் நீங்கள் சொல்லுங்கள்.

    கோபத்தை வேறு பக்கம் காட்டுங்கள். ஒரு சின்ன பொட்டி,லேசா அழுத்தினால் போதும். ஊழலை எப்படி ஒழித்துக்கட்டுவது ஊழல் மட்டும்தான் இவரது தாரக மந்திரமா என்று நினைக்காதீர்கள். அது அவர்களின் தாரக மந்திரம். ஊழலை ஒழிக்க வேண்டுமானால் நீங்கள் ஊழல் இல்லாமல் இருங்கள். ஐந்தாயிரம் வாங்கி ஓட்டு போடாதீர்கள். நீங்கள் நல்ல அரசுக்கு வாக்களித்தால் அதை மூன்றே மாதத்தில் சம்பாதிக்கலாம். உங்களுக்கு அளிக்கும் ஐந்தாயிரம் உங்களுக்கு வர உள்ள மூன்று லட்சத்திற்கு சமம்.

    நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தால் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்?

    ஆண்டி கூடி மடம் கட்டிய கதை. கற்பனையின் எல்லைக்கு போய்விட்டார். எனக்கு மக்களிடம் இருந்து சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும் பேசலாம். உங்களோடு இணைபவன் அவருடன் இணைய மாட்டேனா? அவருடன் பேசவில்லை என்று நினைக்கிறீர்களா, அல்லது அவரிடம் பேசுவதை உங்களிடம் தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?

    சொந்த வாழ்க்கையை விமர்சிப்பதை எப்படி சந்திக்கப் போகிறீர்கள்?

    இதற்கு பதில் என் வாழ்க்கை. என் சொந்த வாழ்க்கை என் முடிவு என்பேன். அதே தைரியம் இதற்கும் உண்டு. என் சொந்த வாழ்க்கை அதற்கு பதில்.

    பணத்திற்கு ஏன் அப்படி பலம் வந்தது?

    பெரிய கோடீஸ்வரர்கள் உருவானது ஏழைகளால்தான். கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    அரசியலுக்கு வந்தால் உங்கள் கொள்கை எவ்வழி?

    பெரியார் எங்கிருந்து கற்றார் அரசியலை, அவர் கற்றது காந்திய வழி அங்கிருந்து அரசியலை கற்று பின்னர் தனக்கான பாதையை மார்க்சியம் வழியில் கற்றார். மார்க்சியம் என்பது லெனின் இவர்கள் வகுத்த பாதை, இவர்கள் தோளில் ஏறிப் பார்க்கும்போது எனக்கு தூரத்தில் ஒளி தெரிகிறது அதில் பாடுபடுகிறேன் 

    லோக்கல் கவர்னன்ஸ் குறித்து உங்கள் கருத்து?

    பர்சனல் கவர்னன்ஸ் நீங்கள் உங்கள் நிலை பற்றி யோசியுங்கள் சரி இல்லை சரி இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். 

    பன்முகத்தன்மைக்கு எதிராக , மூட நம்பிக்கைக்கு எதிராக போராடிய பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

    வன்முறை பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் முக்கியம்.வன்முறை அதற்கு தனியாக அறிவு கிடையாது. அது எப்போது வேண்டுமானால் மதம் மாறும். இப்போது நான் உங்களுக்கு திருப்தியான பதில் சொல்லவில்லை என்று நினைக்காதீர்கள். வன்முறைக்கு எதிராக என்ன சொல்ல இன்று போய் நாளை வா தோல்வி நிச்சயம். நாளை நானில்லாவிட்டால் யாராவது இருப்பார்கள். மாறி மாறி நடந்ததால் தான் நாடு இரண்டாக ஆனது.

    நீங்க அரசியலுக்கு வருவீர்களா வரமாட்டீர்களா என்று கேட்காதீர்கள். இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தோம். பேசிக்கிட்டே இருக்கிறீர்களே என்று சொல்லாதீர்கள். நாம் யாரை விட்டு வைத்தோம். 

    அரசியல் பிரகடனம் முறையாக எப்போது அறிவிப்பீர்கள்?

    அவசரமில்லாமல் பல மேடைகள் உள்ளது , நீங்களும் ஒத்துழைக்கணும். பல விஷயங்கள் உள்ளது. பிறந்த நாளில் அரசியல் அறிவிப்பு எல்லாம் எதற்கு. அது நான் வந்த நாள். நல்ல நாள் ஒன்று புரட்சி நடந்த நாளில் அதுவும் ரஷ்யப் புரட்சி தான் அவசியம்னு இல்ல ஏதாவது ஒரு நாளில் அறிவிப்பேன்.

    செப்டம்பர் 17 அன்று அறிவியுங்கள் ?

    கண்டிப்பாக எந்த வருடம் என்பது நான் முடிவு செய்வேன்.

    இவ்வாறு கமல் பதிலளித்தார்.
    ரிசார்ட்டில் தங்கியிருப்பது ஏன்
    தினகரன் அணி எம்.எல்.ஏ., விளக்கம்

    குடகு: ''ஆசிரியர் பணியையும், எம்.எல்.ஏ.,க்கள் பணியையும் ஒப்பிடமுடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்;நாங்கள், மக்கள் ஊழியர்கள். நாங்கள் போராடவில்லை. ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காககூடியுள்ளோம்,'' என, தினகரன் அணி,எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.




    கர்நாடகாவின் குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை, 'பேடிங்டன்' ரிசார்ட்டில் உள்ள தினகரன் அணி, எம்.எல்.ஏ.,

    தங்க தமிழ்ச்செல்வன் நேற்று அளித்த பேட்டி: நாங்கள், 19 எம்.எல்.ஏ.,க்களும், ஒற்றுமையாக இருக்கிறோம். அரசு நினைத்தால்,என்ன செய்யும். அதிகாரம் வைத்துள்ளஅரசு, எங்கள் ஒற்றுமையை குலைக்கநினைக்கும்; ஆனால், அது முடியாது.

    பன்னீர்செல்வம் உட்பட, 12 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவசர கோலத்தில், எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.எங்கள் உறவினர்கள், ஜாதி அமைப்பினர் மூலம், சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.ஒரு சிலருக்கு மிரட்டல்கடிதமும் வந்துள்ளது. 20ம் தேதிக்குள், கட்சி பொதுக்குழு நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    'வேலை செய்யாமல் சம்பளம் இல்லை என்பது, அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா?ரிசார்ட்டில் முடங்கிக் கிடக்கும் குதிரை பேர அரசியல்வாதிகளுக்கு கிடையாதா?' என,நடிகர் கமல் கூறியிருப்பது குறித்து, நிருபர்கள் கேள்வி

    எழுப்பினர்.அதற்கு, ''ஆசிரியர் பணி, எம்.எல்.ஏ.,க்கள் பணிகளுடன் ஒப்பிட முடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். நாங்கள், மக்கள் ஊழியர்கள். நாங்கள் போராட வில்லை. 

    ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு கூடியுள்ளோம்,'' என்றார்.தினகரன் இன்று, 'பேடிங்டன்' ரிசார்ட்வருவதாக கூறப்படுகிறது.
    'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில் நடிகை படம் : குறும்பு செய்வோருக்கு அரசு எச்சரிக்கை

    பதிவு செய்த நாள்15செப்
    2017
    23:57

    'ஸ்மார்ட் ரேஷன் கார்டில், குடும்ப தலைவர் படம் சரியாக இருக்கிறதா என்பதை, ஆய்வு செய்யாமல் வழங்கும் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, உணவுத்துறை எச்சரித்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலுார் அருகில், பெண் ஒருவருக்கு வழங்கிய, 'ஸ்மார்ட்' கார்டில், நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றது. இதையடுத்து, ஆய்வு செய்யாமல் கார்டுகளை வழங்கும் ஊழியர்கள் மீது, உணவு துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.

    இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டுக்காக வாங்கிய, 30 லட்சத்திற்கும் அதிகமான, 'ஆதார்' கார்டுகளில், குடும்ப தலைவர் புகைப்படம் தெளிவாக இல்லை. சரியான புகைப்படத்தை, இணையதளம், 'மொபைல் ஆப்' வழியாக தரும்படி அறிவுறுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி, விபரம் தெரியாதவர்களுக்கு உதவுவதாக கூறி, சில குறும்புக்காரர்கள், வேண்டுமென்றே சினிமா பிரபலங்கள், கடவுளின் படங்களை குடும்ப தலைவராக, 'அப்லோடு' செய்கின்றனர். அவை, இணையதளம் வாயிலாக, அச்சுக்கு அனுப்பப்படுகிறது. ஒரே சமயத்தில், லட்சக்கணக்கில் கார்டுகள் அச்சிடுவதால், யாருடைய படம் என்பது கவனிப்பது சிரமம். இதனால், கடைக்கு அனுப்பும் கார்டில் குடும்ப தலைவர் படம், உறுப்பினர்கள் விபரம் சரியாக இருக்கிறதா என்பதை, ஆய்வு செய்த பின், பழைய கார்டில் கார்டில் முத்திரை இட்டு வழங்கும்படி, ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், அவர்கள் கார்டுகளை, ஊர் தலைவர், அரசியல்வாதிகளிடம் வழங்கி, அவர்கள் வாயிலாக, மக்களுக்கு தருவதாகவும் புகார்கள் வருகின்றன. அவ்வாறு செய்வோர் மீதும், ஸ்மார்ட் கார்டை ஆய்வு செய்யாமல் வழங்கும் ஊழியர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    தவறான படம் எங்கிருந்து, 'அப்லோடு' செய்யப்படுகிறது என்பதை கண்டறிவது சுலபம். எனவே, அவ்வாறு செய்வோர் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
    'எம்.எல்.ஏ.,க்களை நீதிமன்றம் எச்சரிக்காதா?' : கமல்

    பதிவு செய்த நாள்16செப்
    2017
    00:50




    'வேலை செய்யாமல், சொகுசு விடுதியில் ஓய்வு எடுக்கும், எம்.எல்.ஏ.,க்களை, நீதிமன்றம் எச்சரிக்காதா' என, நடிகர் கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.

    'டுவிட்டரில்' கமல் கூறியுள்ளதாவது: வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு, சம்பளம் கிடையாது என்பது, எம்.எல்.ஏ.,க்களுக்கு பொருந்தாதா? வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை எச்சரிக்கும் நீதிமன்றம், குதிரை பேரத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ.,வுக்கான பணியை செய்யாமல், சொகுசு விடுதியில் ஓய்வு எடுக்கும் அரசியல்வாதிகளையும் கண்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    - நமது நிருபர்- -
    வரவிருக்கும் விசேஷங்கள்

    செப்டம்பர் 19 (செ) மகாளய அமாவாசை

    செப்டம்பர் 21 (வி) நவராத்திரி ஆரம்பம்

    செப்டம்பர் 29 (வெ) சரஸ்வதி பூஜை

    செப்டம்பர் 30 (ச) விஜயதசமி

    அக்டோபர் 01 (ஞா) மொகரம்

    அக்டோபர் 02 (தி) காந்தி ஜெயந்தி
    Power shutdown areas in Chennai on 16-09-17
    Posted on : 15/Sep/2017 15:50:52


     
    Power supply will be suspended in the following areas on 16-09-17 between 9.00 A.M. to 2.00 P.M. for maintenance work. Supply will be resumed before 2.00 P.M. if the works are completed. 

    GUINDY AREA: Tiny sector & Mini Tiny sector (Developed plots and Adjacent areas), Guindy Industrial Estate,  Tiny Sector,  Labour colony, Guindy, Arulayampet, Reddy st, Parthasarathy koil st, Ambal nagar, North phase, Poonamallee road, Electronic complex, Inner ring road, Ekkattuthangal.

    SEMBIUM AREA: M.H.road entire area, Chinna Kulanthai streets entire, Raja st, Kabilar st, S.S.V. koil streets (part), Doctor court, Maduma nagar, Kollan thottam, Chokkalingam st.

    SAIDAPET WEST AREA: Kattabomman block, Muthurangan block, Anjuham nagar, Parry nagar, School st, RR colony all st, VSM garden, Bharathi block, Errikarai st, Entire Saidapet west areas, 7 & 11th avenue, LIC colony, Nagathamman koil st, Annamalai Chetty nagar, Ethiraj nagar, KV colony I to V st, Postal Colony I to IV st, Kamashipuram IInd & 10th avenue, Ashok nagar 58 to 64th st, Naikamman st, Muveender colony, Part of Ashok nagar,  Pillayar koil st, Sekar nagar, West Jones road, Ashok nagar 12th avenue, Ramapuram Ramaswamy st, Rajagopal st, Anjaneyar koil st, Ramanujam st, Barathiyar st, Mosque Pallam, Dhanasekaran st, VGP salai. 

    SIDCO NAGAR AREA: Sidco nagar  part of 6th, 9th, 10th  Blocks, Sidco nagar Industrial area, Balaramapuram, Nehru nagar, South Jaganatha nagar.

    AMBATTUR SIDCO AREA: Koramandal Town, Mangalapuram, Pattaravakkam, Kannan koil st, Sidco North phase, Bajanai koil st, Bramin st, Yadava st, Kulakkarai st, Katchanag kuppam, Tass estate one part, VSNL Telephone Exchange.

    KODUNGAIYUR AREA: Part of Meenambal salai, Abirami avenue 1 to 16 streets, KKD nagar 1st Block, 2nd Block and 3rd Block and part of TH road. 

    KOLATHUR SAI NAGAR AREA: Sai nagar, Kumaran nagar, Avai nagar, GKM colony 33rd to 37rd st, Kolathur main road, East Elavel cross road. 

    KOLATHUR AREA: Kumaran nagar main road, Kumaran nagar 1st, 2nd, 3rd st, Vasu nagar 6 & 7th st, Ramani bai colony, Dr. Ambedkar nagar 1,2,3rd st, Nermai nagar 1, 2nd st, Thirupathi nagar one side, Thirupathi nagar 4th main road, Sundaram nagar 1,2 st, Bala kumaran nagar A part, Sathya sai nagar, Dhanammal nagar, Jayaram st, Valaramathi nagar main road, Bharathi st, Poongavanam st, Sri nagar colony.

    FLOWER BAZAAR AREA: Ayyapillai st, one part of Devaraj Mudali st, Venkatachala Mudali lane, one part of Venkatachala mudali st, one part of Nainniappa naicken st and one part of Raghu naickulu st.

    RADHA NAGAR AREA: Bharathipuram, Subash nagar, Chithambaram st, Valluvar High road, Purushothaman nagar, NGO colony, Bajanai koil st, GST road, Nanvamanai st, New colony 1st main road, RBI colony, Nemilichery high road, Bharatha matha st, Nellaiyappar st, Ashokan st, Balaji nagar, Jain nagar, Maruthi nagar, Chambers colony, Cholavaram, Sasthri colony.

    THORAIPAKKAM AREA: Kannaki Nagar, PTC Qts., Karapakkam part, VGP avenue. Okkiyum pettai, Nehru nagar, Mettu kuppam, MK Chavadi, Part of OMR, Chandrasekaran Avenue, Sowdeswari nagar, Sakthi garden.
    தினமலர்' செய்தி எதிரொலி: மாணவிக்கு குவியும் உதவி
    பதிவு செய்த நாள்
    செப் 16,2017 00:25



    சேலம்: கல்லுாரி கட்டணம் கட்ட முடியாமல் தவித்த ஏழை மாணவி தவப்பிரியாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும், உதவிகள் குவிந்து வருகின்றன.

    சேலம் மாவட்டம், ஆறகளூரைச் சேர்ந்தவர் தவப்பிரியா, 19; சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், அக்ரி இரண்டாம் ஆண்டு படிக்கிறார். குடும்ப வறுமை காரணமாக, கல்லுாரி கட்டணம் கட்ட முடியாமல் தவிப்பதாக, 'தினமலர்' நாளிதழில், 13ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, பல்வேறு தரப்பினர், மாணவியின் தந்தை, ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு, அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர்.

    நேற்று வரை, 1.65 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கத்தார், துபாய் ஆகிய நாடுகளில் வசிப்போர், ஆன் - லைன் மூலம், பணம் செலுத்தி உதவியுள்ளனர். அண்ணாமலை பல்கலை நிர்வாகமும், தவப்பிரியாவின் படிப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, ஆறுமுகம் மொபைலுக்கு தொடர்பு கொண்டு, 'மகளின் படிப்புக்கு உதவி செய்து, உயர்கல்வி படிக்க வைக்கிறேன். அவரை, நேரில் வந்து சந்திக்க சொல்லுங்கள்' என, தெரிவித்துள்ளார்.
    வங்கியில் ரூ.150 கோடி மோசடி செய்த ஜேப்பியார் மகள், மருமகன்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

    2017-09-16@ 00:17:01




    சென்னை: போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் ரூ.150 கோடி மோசடி செய்ததாக ஜேப்பியார் மகள், மருமகன்கள் உட்பட 5 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை கழிப்பட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜேப்பியார் ஷீலா (49). இவர், சென்ைன மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘நான் ஜேப்பியாரின் இரண்டாவது மகள். ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர். இந்த அறக்கட்டளையின் பெயரை தவறாக பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் ஆயிரம் விளக்கில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.150 கோடி கடனாக பணம் பெறப்பட்டுள்ளது.
    இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜேப்பியார், மரிய ஜூலி மற்றும் அவரது கணவர் மரிய ஜான்சன், ஜேப்பியாரின் மூன்றாவது மகள் ரெஜினாவின் இரண்டாவது கணவர் முரளி, புனித ஜோசப் கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் பாபு மனோகர், மகள் ஜெசி பிரியா ஆகிய 5 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

    இந்த புகாரின் பேரில் கமிஷனர் உத்தரவுபடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 5 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து 5 பேர் மீதும் கூட்டு சதி மற்றும் போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் பண மோசடி செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜேப்பியாரின் இரண்டாவது மகள் ஷீலா கடந்த ஜூன் 29ம் தேதி சொத்துக்காக தன்னை வீட்டிலேயே சிறை வைத்ததாக தாய் மற்றும் சகோதரிகள் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கோவையில் கூத்து: ஆட்டோ டிரைவருக்கு 'ஹெல்மெட்' அபராதம்
    பதிவு செய்த நாள்16செப்
    2017
    01:29




    கோவை: கோவையில் ஆட்டோ டிரைவர் 'ஹெல்மெட்' அணியவில்லை என்று, எஸ்.ஐ., அபராதம் விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாகன சோதனை:

    கோவை, ஆலாந்துறையை சேர்ந்தவர் கருணாகரன், 40. இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். கடந்த, 13ம் தேதி மாலை சிறுவாணி மெயின் ரோடு, காருண்யா நகர் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காருண்யா நகர் போலீஸ் எஸ்.ஐ., சங்கரநாராயணன், ஆட்டோவை நிறுத்தினார். பின், கருணாகரனிடம் லைசன்ஸ், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார்.

    அபராதம்:

    அதன்பின், 'ஹெல்மெட்' அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ஆட்டோ டிரைவர் கருணாகரனுக்கு, 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அபராதம் விதிக்கப்பட்ட சார்ஜ் ஷீட், 'வாட்ஸ்அப்' உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆட்டோ டிரைவருக்கு 'வித்-அவுட் ஹெல்மெட்' என கூறி, அபராதம் விதித்தது வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தவறுதலாக...

    கோவை எஸ்.பி., மூர்த்தியிடம் கேட்டபோது, ''சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட எஸ்.ஐ.,யிடம் விசாரிக்கப்பட்டது. ஆட்டோ டிரைவர், சீருடை இல்லாமல் வாகன ஓட்டி வந்துள்ளார். அதற்காகத் தான், 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அதில், 'யூனிபார்ம்' என்பதற்கு பதிலாக, 'ஹெல்மெட்' என்று தவறுதலாக எழுதிவிட்டார். அந்த 'சார்ஜ் ஷீட்' தான் வைரலாகி வருகிறது. 'ஹெல்மெட்' அணியாததற்கு, 100 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும்'' என்றார்.
    ரயில் நிலையங்களில் ஏ.டி.எம்.,

    பதிவு செய்த நாள்16செப்
    2017
    00:13

    சென்னை : சென்னை ரயில்வே கோட்டத்தில், முக்கிய நிலையங்களில், பயணியரின் வசதிக்காக, வங்கி ஏ.டி.எம்., வைக்க ரயில்வேயால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னை சென்ட்ரலில், ஐந்து இடங்களிலும், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், வில்லிவாக்கம், திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சிபுரம், பெரம்பூர், செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் நிலையங்களிலும், வங்கி, ஏ.டி.எம்.,கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இது குறித்து, ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரி கூறியதாவது: முக்கிய ரயில் நிலையங்களில், வங்கி, ஏ.டி.எம்.,கள் அமைக்க, ஒப்பந்த அடிப்படையில், இடம் ஒதுக்கி கொடுக்கப்படுகிறது. இடவசதி மற்றும் வாடகை விபரங்களும் தெரிவிக்கப்பட்டு, வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பருக்குள், இந்த நிலையங்களில், ஏ.டி.எம்.,கள், அமைக்க, ஏற்பாடு நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


    ராமச்சந்திரா கல்லூரிக்கு, 'ஸ்வச்சதா' விருது
    பதிவு செய்த நாள்16செப்
    2017
    00:13

    சென்னை : போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரிக்கு, தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் பிரிவில், மத்திய அரசின், 'ஸ்வச்சதா' விருது வழங்கப்பட்டு உள்ளது.சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி உள்ள பசுமை சூழல், துாய்மை, தண்ணீர் வசதி, கழிப்பறை, நவீன சமயலறை போன்ற காரணங்களால், மத்திய அரசின் ஸ்வச்சதா விருது வழங்கப்பட்டுள்ளது.தொழில் நுட்ப பிரிவில், மூன்றாவது இடத்துக்கான பரிசை, டில்லியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வழங்கி கவுரவித்தார்.இந்த விருதை, பல்கலை ஆய்வுத்துறை தலைவர், தியாகராஜன், பாதுகாப்பு மற்றும் வசதிகள் குழு துணை தலைவர், ஸ்ரீதர் ஆகியோர் பெற்றனர்.
    கிரிக்கெட் சிறப்பு ரயில்கள்
    பதிவு செய்த நாள்16செப்
    2017
    00:13

    சென்னை : சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில், நாளை, இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடப்பதால், சென்னை கடற்கரை - திருமயிலை - வேளச்சேரி இடையே, மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இச்சிறப்பு ரயில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, 17ம் தேதி, பகல், 12:30 மணிக்கு புறப்பட்டு, சேப்பாக்கத்திற்கு, 12:40 மணிக்கும்; திருமயிலைக்கு, 12:49 மணிக்கும் சென்றடையும்.திருமயிலையில் இருந்து, மதியம், 1:00 மணிக்கு புறப்பட்டு, சேப்பாக்கத்திற்கு 1:10 மணிக்கும், கடற்கரை நிலையத்திற்கு, 1:20 மணிக்கும் சென்றடையும்.சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, இரவு, 10:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், 10:40 மணிக்கு சேப்பாக்கத்திற்கும், 11:15 மணிக்கு வேளச்சேரிக்கும் சென்றடையும்.வேளச்சேரியில் இருந்து, இரவு, 11:20 மணிக்கு இயக்கப்படும் ரயில், சேப்பாக்கத்திற்கு, 11:50 மணிக்கும், கடற்கரை நிலையத்திற்கு, இரவு, 12:05 மணிக்கும் சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
    'குரூப் - 4' பதவியில் 4,682 பேர்

    பதிவு செய்த நாள்16செப்
    2017
    00:08


    சென்னை: அரசு துறையில் காலியாக உள்ள, 'குரூப் - 4' இடங்களுக்கு, 4,682 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 4'ல் அடங்கிய, இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டெனோ ஆகிய பதவிகளுக்கு, 2016, நவ., 6ல் தேர்வு நடந்தது.

    இதன் முடிவு, 2017, பிப்ரவரியில் வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஜூலை, 17 முதல், செப்., 6 வரை கவுன்சிலிங் நடந்தது. இதில், 2,708 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. தட்டச்சர் பதவிக்கான கவுன்சிலிங்கில், 1,582 பேருக்கும், 'ஸ்டெனோ நிலை - ௩' பதவிக்கான கவுன்சிலிங்கில், 392 பேர் என, மொத்தம், 4,682 பேருக்கு, ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வானவர்களுக்கு, அந்தந்த அரசுத்துறைஅலுவலகங்கள் மூலம், பணி நியமன உத்தரவு வழங்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கு, விரைவில் கவுன்சிலிங் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்
    பதிவு செய்த நாள்16செப்
    2017
    00:06


    ஒன்பது நாட்கள் நடந்த தொடர் போராட்டம் முடிந்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நேற்று உடனடியாக பணியில் சேர்ந்தனர். அதனால், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின.

    பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செப்., 7 முதல், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால், வகுப்புகள் முடங்கின; காலாண்டு தேர்வு பாதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நேற்று ஏற்பட்ட சுமூக நிலையை தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ போராட்டம், வாபஸ் பெறப்பட்டது.

    இதையடுத்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை, நேற்று மதியமே கைவிட்டு விட்டு, பிற்பகலில் பணிக்கு சென்றனர். அதனால், பள்ளிகளில் மீண்டும் வழக்கம் போல் வகுப்புகள் துவங்கின.

    - நமது நிருபர் -
    பொங்கல் ரயில்கள் 'ஹவுஸ்புல்'

    பதிவு செய்த நாள்16செப்
    2017
    00:04


    சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு துவங்கிய, 30 நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டுகள், 'ஹவுஸ்புல்' ஆகின.

    பொங்கல் பண்டிகைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்ல, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம்.

    அடுத்த ஆண்டு, ஜன., 14ல், பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 120 நாட்கள் வரை முன் பதிவு செய்யலாம் என்பதால், ஜன., 13ல், சொந்த ஊர் செல்வதற்காக, நேற்று ஏராளமானோர் முன்பதிவு மையங்களில் குவிந்தனர்.
    சென்னையில், சென்ட்ரல், எழும்பூர் உட்பட, ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில், காலையில், கூட்டம் நிரம்பி வழிந்தது. 

    சென்னை, எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில், முன்பதிவு துவங்கிய, 30 நிமிடங்களில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கான டிக்கெட்கள் நிரம்பின. உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மாலை, 5:00 மணிக்கு முடிந்தன.

    ஜனவரி, 13ல், பகலில் இயக்கப்படும் சில ரயில்களில், கணிசமான இடங்கள் மீதம் உள்ளன
    கோவை - ஜபால்பூர்: சிறப்பு ரயில் இயக்கம்

    பதிவு செய்த நாள்15செப்
    2017
    22:42

    கோவை:பயணிகளின் தேவை கருதி கோவை - ஜபால்பூர் இடையே, வாராந்திர சிறப்பு ரயில், வரும், 30ம் தேதி முதல் அக்., 30ம் தேதி வரையும், ஹவுரா - திருவனந்தபுரம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயிலும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சிறப்பு ரயில்கள் அவ்வப்போது இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கோவை - ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) இடையே வரும், 30ம் தேதி முதல் அக்., 30ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது.

    ஜபால்பூரில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு புறப்படும் ரயில், உடுப்பி, மங்களூர், கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட ஸ்டேஷன்களின் நின்று ஒரு நாள் கழித்து திங்கள் காலை, 5:00 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த ரயில் வரும், 30 முதல் அக்., 28ம் தேதி வரை இயக்கப்படுகிறது.அதேபோல், கோவையில் இருந்து அக்., 2ம் தேதி முதல், 30ம் தேதி வரை ஜபால்பூருக்கு ரயில் இயக்கப்படுகிறது. வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு, 7:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், போத்தனுார், பாலக்காடு, மடகான், ஹர்டா உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று ஒரு நாள் கழித்து, புதன் மதியம், 12:45 மணிக்கு ஜபால்பூர் சென்றடைகிறது.
    அதேபோல், ஹவுரா(கொல்கத்தா) - திருவனந்தபுரம் இடையே வரும், 17 மற்றும், 21ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து, 17ம் தேதி மதியம், 12:40க்கு புறப்படும் ரயில், பாலக்காடு, கோவை, திருப்பூர், சேலம், சென்னை வழியாக, 19ம் தேதி காலை, 10:55 மணிக்கு ஹவுரா சென்றடைகிறது.

    மறுமார்கமாக, 21ம் தேதி மதியம், 1:05 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் இரவு, 10:35 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
    தொப்பை போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம் கிடையாது!
    பதிவு செய்த நாள்16செப்
    2017
    00:18

    புதுடில்லி: தொப்பை இல்லாமல், நல்ல உடல் தகுதியுள்ள போலீசாரை மட்டுமே, பதக்கங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும், என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    ஆண்டுதோறும், மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்பாக பணிபுரிந்த, போலீசாருக்கு, ஜனாதிபதி பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில், மாநில அரசுகள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சிறந்த சேவைக்காக பதக்கம் பெறுவதற்கு பரிந்துரைக்கப்படும் போலீசார், அவர்களின் பணி மூப்பு மற்றும் சேவை மட்டுமல்லாமல், நல்ல உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். தொப்பை இல்லாமல், பதவிக்கு சரியான நபராக இருக்க வேண்டும். தொப்பை உள்ள போலீசாரின் பெயர்கள் பரிசீலனைக்கு அனுப்பக்கூடாது.

    போலீசாரின் உடல் தகுதி, ஷேப் - 1, ஷேப் - 2 என இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், ஷேப் - 1ல் உள்ள போலீசார் மட்டுமே, ஜனாதிபதி பதக்கம் பெறுவதற்கு பரிசீலிக்கப்படுவர்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வெளியூர் செல்லும் முன் ரேஷன் பொருட்களை விட்டு கொடுக்க வாரீகளா! 'கார்டு' ரத்து ஆகாமல் தடுக்கும் செயலி அறிமுகம்!
    பதிவு செய்த நாள்
    செப் 15,2017 22:52




    நீண்ட விடுமுறையில் வெளியூர் செல்ல விரும்புவோர், வழங்கல் துறை இணையதளத்துக்கு சென்று, 'தற்காலிகமாக ரேஷன் பொருட்கள் வேண்டாம்' என்று பதிவு செய்யும், புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், நீண்ட நாட்களாக ரேஷன் பொருள் வாங்காததால், கார்டு ரத்தாவதை தவிர்க்கலாம்.
    ரேஷன் பொருட்கள் வெளி மார்க்கெட்டில் முறைகேடாக, அதிக விலைக்கு விற்கப்படுவதையும், வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதையும் தடுக்க, 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, அனைவரும் தங்கள் ஆதார் மற்றும் மொபைல் போன் எண்களை, ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டியது, மிகவும் அவசியமாகும்.

    ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினால், அதன் விலை, பொருட்களின் அளவு உள்ளிட்ட விபரங்களை, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிந்து கொள்ளலாம். தற்போது நடைமுறையில் வந்துள்ள இந்த திட்டத்தின் உதவியால், ஒருவரின் கார்டை முறைகேடாக கடை ஊழியரோ, வேறு எவரோ பயன்படுத்தி, பொருள் வாங்குவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. மானியம் விரயமாவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும், 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் குறித்த, போதுமான விழிப்புணர்வு இல்லாததால், இன்னும் பலர் தங்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் எண்களை, ரேஷன் கடைகளில் இணைக்காமல் உள்ளனர்.

    இது குறித்து, மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 83 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதை தவிர, முகவரி சான்றுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் ரேஷன்கார்டுகள், 4500 உள்ளன. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி, 95 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் இது குறித்து அறியாதவர்களே, மீதமுள்ள ஐந்து சதவீதம் பேர். ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாகவும், கடைகளில் அறிவிப்புகள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.விரைவில், அனைவரும் இத்திட்டத்தில் இணைக்கப்படுவர். மாவட்டத்தில் இதுவரை, 6 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு, 'ஸ்மார்ட் கார்டு'கள் வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ளவர்களுக்கான கார்டு, சென்னையில் அச்சிடப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் அச்சிட்டு வந்து விடும். அதன்பின் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில், எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. ரேஷன் பொருள் தேவைப்படும் ஏழைகளுக்கு, பொருட்கள் கிடைப்பதில் தடை எதுவும் இருக்காது.

    இணையமே துணை!
    இந்த இணைய பயன் பாட்டின் மற்றொரு பயனாக, நீண்ட நாட்களாக ரேஷன் பொருள் வாங்க முடியாதவர்கள், அது குறித்து, வழங்கல் துறைக்கு தெரிவிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.tnepds.gov.in எனும் வழங்கல் துறையின் இணையதளத்தில், இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் வெளியூர் செல்வோர், இதற்கான பல்வேறு தலைப்புகளில், 'உரிமை விட்டுக்கொடுத்தல்' (Give it up) என்ற தலைப்பை தேர்வு செய்து விட்டால் போதும்.

    இதன் வாயிலாக, மீண்டும் திரும்பி வரும் வரை, ரேஷன் பொருட்களை முடக்கி வைக்கலாம். விடுமுறை முடிந்து திரும்பியவுடன், மீண்டும் அந்த தலைப்பை நீக்கி விட்டு, பொருட்கள் வாங்கலாம். விடுமுறை காலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காததால், ரேஷன் கார்டு ரத்து மற்றும் 'ஸ்டாப் சப்ளை' நடவடிக்கைகளை, இதன் வாயிலாக தடுக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

    ஆனால், இந்த வழிமுறை குறித்து, யாருக்கும் தெரியாததாலோ என்னவோ, இதுவரை எவரும் விண்ணப்பித்ததாகத் தெரியவில்லை. இதற்கு, ஒரு முறை 'கிவ் இட் அப்' கொடுத்து விட்டால், மீண்டும் திரும்பப் பெற முடியுமா என்ற அச்சம், மக்களிடம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பயத்தைப் போக்கி, இது ஒரு நல்ல திட்டம் என்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், உணவு வழங்கல் துறைக்கு உள்ளது.

    யார் மீது தவறு?

    கோவை மாவட்டத்தில், 'ஸ்மார்ட் கார்டு' வினியோகிக்கும் பணி தாமதமாகி வருவது, இது கிடைக்காத மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எல்லா தகவல்களையும் சரியாகக் கொடுத்தும், தவறான புகைப்படம், பிழைகளுடன் பெயர் என 'ஸ்மார்ட் கார்டு'கள் தவறுதலாக வருகின்றன. இந்த தவறுகளை திருத்தம் செய்யவும், 'ஸ்மார்ட் கார்டு' வினியோகப் பணியை வேகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் கடமை.-நமது நிருபர்-
     அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்,போராட்டம்,வாபஸ்

    மதுரை:உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையால், வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் உத்தரவாதம் அளித்தன. நேற்று மதியம், 2:00 மணி முதல் வேலைக்குத் திரும்பவும், தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும், 21ம் தேதி ஆஜராகவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.





    மதுரை வழக்கறிஞர் சேகரன் தாக்கல் செய்த மனு:

    தமிழகத்தில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின், காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு, இடைக்காலத் தடை கோரி மனு தாக்கல் செய்தேன். செப்., 7ல் நீதிபதிகள், 'வேலை நிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது' என்றனர்.

    ஆனாலும், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்களுக்கு, உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு பற்றி, தலைமைச் செயலர் அறிவிப்பு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    அவமதிப்பு வழக்கு

    மனுவை, நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, நேற்று காலை, 10:45 மணிக்கு விசாரித்தது.அவமதிப்பு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் தாஸ், தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தலைவர் மோசஸ் ஆகியோர் ஆஜராகி, தாக்கல் செய்த மனு:

    நீதிமன்ற உத்தரவை மீறுவதோ, அவமதிப்பதோ எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள், ஏழு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரதிநிதிகள். எங்களுக்கு, 2006ல், திருத்தப்பட்ட சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. 2016 ஜன., 1 முதல் சம்பளத்தை உயர்த்தியிருக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் உயர்த்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    கடந்த, 2016 பிப்ரவரி, 19ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 'மத்திய அரசு

    ஊழியர்களுக்கான ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், உடனடியாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்த படும். 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களை, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் கொண்டுவர குழு அமைக்கப்படும். குழு பரிந்துரைத்த, நான்கு மாதங்களில் முடிவு செய்யப்படும். தற்காலிக ஊழியர்கள் வரன்முறைப்படுத்தப்படுவர்' என,அறிவித்தார். இவ்விவகாரத்தில், இதுவரை நடவடிக்கை இல்லை. 2016 மத்தியில், ஏழாவது சம்பளக் கமிஷனின் சம்பள உயர்வு அமல்படுத்தபட்டது.

    பேச்சுக்கு அழைப்பு

    தமிழக அரசு சம்பளத்தை உயர்த்தவில்லை. அரசுடன் பேச்சு நடந்தது; அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். கோரிக்கைகளை வலியுறுத்தி,போராட்டம் நடத்தினோம். 9ம் தேதி, ஈரோட்டில் முதல்வர் முன்னிலையில், பேச்சு நடத்த அழைப்பு வந்தது.அங்கு வெளியில் வந்த ஒரு அமைச்சர், 'இவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளனர்' என, பேட்டியளித்தார்.

    நாங்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இடையூறின்றி போராட்டம் நடத்துகிறோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.

    நீதிபதிகள்: சட்டரீதியாக தீர்வு காண, இதர வழிகள் உள்ளன. ஏன் போராட்டத்தை கையில் எடுத்துள்ளீர்கள். உடனடியாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும். வேலை நிறுத்தத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர்வது தவறு. அரசு அலுவலகங்களுக்குள் சமைத்துச் சாப்பிட்டு, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன. உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு கூறி, சற்று நேரம் விசாரணையை ஒத்திவைத்தனர்.மீண்டும் பகல், 11:15 மணிக்கு நீதிபதிகள் விசாரித்தனர்.

    சங்கங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்: பொதுக்குழுவை கூட்டி, முடிவெடுக்க அவகாசம் அளிக்க வேண்டும்.

    சங்க நிர்வாகிகள்: எங்கள் பிரச்னையையும் கருத்தில் கொள்ளுங்கள்.

    நீதிபதிகள்: இது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. முதலில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுங்கள். உங்கள் பிரச்னைக்கு தீர்வு காண நாங்களும் விரும்புகிறோம். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றால், தமிழக அரசின் தலைமைச் செயலரை இங்கு வரவழைத்து, உங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உதவுகிறோம்.

    வாபஸ் பெறாவிடில், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். கலெக்டர் அலுவலகங்களில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, ஒரு மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டிய நிலைஏற்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

    பின், சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

    போராட்டத்திற்கான அறிவிப்பு, ஜாக்டோ- ஜியோ மூலம் வெளியானது. காலவரையற்ற வேலை நிறுத்தம் மூலம் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், போராட்டத்தை தொடர்கின்றனர்.

    அரசு அலுவலகங்களை தனி நபர் சொத்து போல் பாவித்துள்ளனர். அரசு அலுவலகங்களில் காலை, இரவு தங்கி, போராட்டத்தை தொடர எவ்வித உரிமையும் இல்லை. அரசு அலுவலகங்கள் ஒன்றும் ஓய்வறை அல்ல; அது மக்களுக்கான இடம்.

    அரசு ஊழியர்கள், மக்களுக்கான அதிபதி போல செயல்படக் கூடாது. கலெக்டர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மக்களின் குறைகளை தீர்ப்பதற்கான இடம். தற்போது, மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் நிவாரணம் கோரி, அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில், அரசு அலுவலகங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் ஊழியர்கள் கொண்டு வந்துள்ளதால், மக்கள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    ஊழியர் சங்கங்கங்கள், 'கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்தில், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும்' என்கின்றன. வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவது குறித்து, பொதுக்குழு கூடி முடிவெடுப்பதாக சங்கங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    நாங்கள் ஏற்கனவே வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ளோம். இந்நிலையில், பொதுக்குழுவை கூட்டி, வாபஸ் பெற வேண்டும் என்ற கேள்வியே கிடையாது. முதலில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.சங்கங்கள் சார்பில், 'வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்.

    இதில், நிரந்தரத் தீர்வு தேவை. அதற்காக நீதிமன்றத்தை முழுமையாக நம்புகிறோம்' என்கின்றனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'நிரந்தரத் தீர்வு காண, அரசு தேவையான முயற்சிகளைச் செய்தது. ஊழியர்களின் போராட்டத்தால் தீர்வு எட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்.

    இவ்விவகாரத்தில், அரசின் முடிவை தெளிவுபடுத்தும் வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும், 21ல், இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். 

    இக்கால கட்டத்தில், ஏழாவது சம்பளக் குழுவின் பரிந்துரை மற்றும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு முயற்சி எடுத்திருக்க வேண்டும். வேலை நிறுத்தத்தை கைவிட்டு, இன்று மதியம், 2:00 மணிக்கு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Friday, September 15, 2017

    விவாதம்: மாதவிடாயை ஏன் மறைக்க வேண்டும்?

    Published : 03 Sep 2017 11:40 IST





    சில துளி ரத்தம் தன் மகளின் உயிரையே பறித்துவிடும் என்று அந்தப் பெற்றோருக்குத் தெரியாது. தனது சுடுசொல், ஒரு பிஞ்சு மாணவியின் உயிரைக் குடித்துவிடும் என்று அந்த ஆசிரியர் நினைத்திருக்க மாட்டார். இப்படிச் சிலரின் அறியாமையும் அலட்சியமும் பல குழந்தைகளைப் பலிவாங்கியபடி இருக்கின்றன. அதற்குச் சமீபத்திய சான்று, பாளையங்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி.

    ஏழாம் வகுப்பு படித்த அந்த மாணவிக்கு அன்று மாதவிடாய். எத்தனை கவனமாக இருந்தும் ஆடை நனைந்து அது நாற்காலியையும் நனைத்துவிட்டது. அதைப் பார்த்த ஆசிரியர் கோபத்தில் சத்தம்போட, மனம் உடைந்துபோனார் அந்த மாணவி. வீட்டுக்கு வந்தவர் மறுநாள் அதிகாலை யாருக்கும் தெரியாமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்டார். ‘நான் செத்தே ஆக வேண்டும்’ என்று அந்த மாணவி தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதிவைத்திருக்கிறார். ஏன் சாக வேண்டும் அந்தச் சிறுமி? மாதவிடாயும் உதிரப் போக்கும் உயிரைப் பறிக்கும் காரணிகளா?

    அம்மாவின் வலி தெரியுமா?

    இதெல்லாம் பொருட்படுத்தக்கூடிய சம்பவமே இல்லை என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால், இந்தச் சிறுமியைப் போல் பல பெண் குழந்தைகளும் பெண்களும் ஒவ்வொரு மாதமும் செத்துச் செத்துப் பிழைக்கிறார்கள்.

    “அந்தக் காலத்தில் என் அம்மாவும் பாட்டியும் எப்படிக் கட்டுக்கோப்புடன் வாழ்ந்தார்கள் தெரியுமா?” என்ற ஒப்பீட்டுடன் எழுப்பப்படும் கேள்வியைவிடக் கேவலம் வேறில்லை. அவர்களை அன்போடு அணுகிக் கேட்டிருந்தால், அவர்களும் இப்படிப் பல்லாயிரம் வேதனைக் கதைகளை பகிர்ந்திருப்பார்கள். மாதவிடாய் காலத்துத் துணியை மறைத்துவைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் கூரையில் செருகிவைத்த கிராமத்துப் பெண்கள் ஏராளம். காலையில் வயலுக்குக் கிளம்புகிற அவசரத்தில் அவற்றை உதறிப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பிலாமல் கூரையில் இருந்து அப்படியே எடுத்துப் பயன்படுத்தி, அவற்றில் பதுங்கியிருந்த விஷப் பூச்சிகள் கடித்து மாண்டுபோன பெண்களும் உண்டு.

    கழனிக் காட்டில் நாள் முழுக்க வேலை செய்யும்போது, மாதவிடாய்த் துணியை மாற்ற வழியிருக்காது. காலையில் பயன்படுத்திய அந்தத் துணியையே அலசிப் பிழிந்து பயன்படுத்தும் பெண்களைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. மாதவிடாய்த் துணி உரசுவதால் இரண்டு தொடைகளிலும் ரத்தம் கசிய, ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாமல் கால்களை அகட்டி நடக்கிற பெண்களின் வேதனை உணர்ந்த யாரும், ‘பெண்கள் மாதவிடாய் குறித்துப் பேசலாமா?’ என்று கேட்க மாட்டார்கள்.

    மாதவிடாய் நாட்களில் ‘தீட்டு’, ‘வீட்டு விலக்கு’, ‘தூரம்’ என்று சொல்லப்பட்டு வீட்டுக்கு ஒதுக்குப்புறத்திலோ ஊருக்கு ஒதுக்குப்புறத்திலோ பாதுகாப்பற்ற பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு, பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளான பெண்களும் நம் நாட்டில் நிறைய உண்டு. இப்படி ஒதுக்கிவைப்பது இன்று நவீனத்துவம் அடைந்திருக்கிறதே தவிர, முற்றிலும் ஒழிந்துவிடவில்லை.

    மாறிவிட்ட வாழ்க்கை முறை

    அன்றைய வாழ்க்கை முறை பல பெண்களுக்கு உடல் வலுவைக் கொடுத்திருந்தது. அதனால் மாதவிடாய் நேரத்து வலியை, அவர்களால் ஓரளவுக்குச் சமாளித்திருக்க முடியும். ஆனால், ஒப்பிடவே முடியாத அளவுக்கு இன்றைய நிலை மோசமாக இருக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், ரசாயன வீரிய உரங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு, நெருக்கடியான வாழ்க்கை முறை போன்றவற்றால் இன்றைக்கு பத்து அல்லது அதற்குக் குறைவான வயதில் பல சிறுமிகள் பருவமடைகின்றனர். பல பெண்களுக்குச் சீரற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு, கருப்பையில் நீர்க்கட்டிகள் உள்ளிட்ட சிக்கல்கள் இளம் வயதிலேயே ஏற்படுகின்றன. முப்பது வயதைக் கடந்த பெரும்பாலான பெண்கள் ஒவ்வொரு மாதமும் கருப்பையோடு போராடியபடியேதான் வாழ்கிறார்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டும் சமாளித்தபடியும்தான் பெண்கள் வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது மனிதத்தன்மையற்ற செயல்.

    மாணவிகளின் துயரம்

    மாதவிடாய் நாட்களில் பள்ளி மாணவிகள் படும்பாட்டை வார்த்தைகளில் எளிதாக அடக்கிவிட முடியாது. பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை இருந்தாலும் அவற்றில் பெயரளவுக்குக்கூடத் தண்ணீர் வருவதில்லை. பயன்படுத்திய நாப்கின்களை அகற்ற மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டிகள் இருப்பதில்லை. இப்படிப் பல இல்லைகளுக்கு நடுவேதான் லட்சக்கணக்கான மாணவிகள் மாதவிடாயைக் கடந்துவர வேண்டியிருக்கிறது.

    எனக்குத் தெரிந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தினமும் வீட்டில் இருந்து நான்கு பெரிய பாட்டில்களில் தண்ணீர் எடுத்துச் செல்வார். காரணம் கேட்டபோது பள்ளியில் தண்ணீர் வசதி இல்லை என்றார். அப்போது அங்கே படிக்கும் மாணவிகளின் நிலை? “என்ன செய்யறது? கிராமமா இருக்கறதால பக்கத்துல இருக்கற பசங்களோட வீட்டுக்குப் போயிட்டு வருவாங்க” என்றார். இந்த நிலையில்தான் இன்று பெரும்பாலான பள்ளிகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பின்னணியில்தான் மாதவிடாயை நாம் அணுக வேண்டியுள்ளது.

    எது அந்தரங்கம்?

    ஏற்றுமதி நிறுவனங்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இப்படிப் பெண்கள் பணிபுரியும் பல இடங்களில் பெண்களுக்கான கழிப்பறைகள் குறைந்தபட்ச சுகாதாரத்துடன்கூட இருப்பதில்லை. அலுவலகங்களில் பணியாற்றுகிற பெண்களின் நிலையே இப்படியென்றால் கட்டிட வேலை செய்யும் பெண்கள், காய்கறி விற்பவர், வீடு வீடாகச் சென்று பொருட்கள் விற்பவர் போன்றோரின் நிலைமை நம் கற்பனைக்கு எட்டாதது.

    பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்துக்கு உதவும் எந்த அடிப்படை ஏற்பாடுகளும் இல்லாத சமூகத்தில், “பெண்கள் மாதவிடாய் குறித்துப் பேசக் கூடாது. மாதவிடாய் மிகவும் அந்தரங்கமானது” என்பது போன்ற பிற்போக்கு கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். வளர்ச்சியின் ஒரு அங்கம்தான் மாதவிடாய். ஒருவர் வளர வளர உயரம் அதிகரிப்பது, மீசை வளர்வது போன்றவை எல்லாம் எத்தனை இயல்பானவையோ அத்தனை இயல்பான நிகழ்வுதான் மாதவிடாயும். அவற்றையெல்லாம் பெருமையாக நினைக்கிற நம்மில் பலரும், மாதவிடாய், உதிரப்போக்கு என்ற வார்த்தைகளைக் கேட்டாலே அருவருக்கிறோம்.

    ஆண்களின் பங்கு அவசியம்

    மாதவிடாய், மாதவிடாய் சுகாதாரம் குறித்துப் பெரும்பாலான பெற்றோருக்கே விழிப்புணர்வு இல்லாதபோது அவர்கள் எப்படித் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வார்கள்? இருபாலரும் படிக்கும் பல பள்ளிகளிலும் மாதவிடாய் சுழற்சி, இனப்பெருக்க அமைப்பு போன்ற பாடங்களும் நடத்தப்படுவதில்லை.

    “மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் மாதவிடாய் குறித்த சரியான வழிகாட்டுதல் அவசியம். பாலின சமத்துவம், உடற்கூறு, பாலியல் கல்வி போன்றவை பள்ளியிலேயே கற்றுத்தரப்பட வேண்டும். குழந்தைகளுக்கு உணர்வுகளைக் கையாளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். பள்ளியில் பருவமடைகிற அல்லது மாதவிடாய் ஏற்படுகிற குழந்தைகள் மீது அந்தக் காலத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் இருந்த கரிசனம் தற்போது இருப்பதில்லை.

    அதிக உதிரப்போக்கு இருந்தால் ஆடை நனையத்தான் செய்யும். அதற்கு அந்தக் குழந்தைகள் என்ன செய்வார்கள்?” என்று கேட்கிறார் சென்னையைச் சேர்ந்த மேம்பாட்டு ஆலோசகரும் ஆய்வாளருமான கீதா நாராயணன்.

    மாதவிடாயும் உதிரப் போக்கும் பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் நிகழ்வுதான். அதைப் பொத்திப் பொத்தி மறைத்துவைக்கத் தேவையில்லை, அருவருக்கவும் தேவையில்லை. அடுத்தவருக்குத் தெரிந்தால் அவமானமாகிவிடுமே என்ற நினைப்பு தேவையற்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மாதவிடாய் குறித்தும் அந்த நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஏற்பாடுகள் குறித்தும் கட்டாயம் சொல்லித்தர வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்கிற மனப்பக்குவத்துடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

    அப்பா, அண்ணன், கணவன், பள்ளியில் உடன் பயிலும் நண்பன், அலுவலக நண்பன் என்று அனைவரிடமும் பெண்கள் தயக்கமின்றி மாதவிடாய் குறித்துப் பேச ஆரம்பிக்க வேண்டும். அப்படிப் பேசுவது தவறு என்ற மூடநம்பிக்கையை தொடர்வதன் மூலம், பெண்ணாகப் பிறப்பதே தவறு என்று சொல்வதாகத்தான் அர்த்தம் கொள்ள முடிகிறது. மாதவிடாய் குறித்தும் அந்த நாட்களில் பெண்கள் படும் வேதனை குறித்தும் உணர்ந்த ஆண்கள் அதைக் கேலிக்குரியதாகவோ கிளர்ச்சிக்குரியதாகவோ அணுக மாட்டார்கள். ஏனென்றால், மாதவிடாய் வலிகளை சமாளிக்கவும் கடந்துவரவும் ஆண்களின் துணையும் புரிதலும் பெண்களுக்கு அவசியம்.

    நீங்க என்ன சொல்றீங்க?

    தோழிகளே, மாதவிடாய் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் கற்பிதங்களை எப்படிக் களைவது? குடும்பத்திலும் சமூகத்திலும் எத்தகைய மாற்றம் தேவை? இதில் உங்கள் அனுபவம் என்ன? கருத்து என்ன? எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.
    விவாதக் களம்: மறைக்கத் தேவையில்லை மாதவிடாயை!

    Published : 10 Sep 2017 09:45 IST





    பாளையங்கோட்டை பள்ளி மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, ‘மாதவிடாயை ஏன் மறைக்க வேண்டும்?’ என்று கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். வீடுகளில் இருந்துதான் மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்று பலரும் எழுதியிருந்தார்கள். ஆண்கள், பெண்களைப் போகப் பொருளாக மட்டும் நினைக்காமல் அவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்றும் சிலர் எழுதியிருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...

    சமீபத்தில் ஒரு மருந்துகடைக்குச் சென்றபோது நீண்ட நேரமாக ஒரு பெண்பிள்ளை தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தாள். அங்கிருந்த ஆண்கள் சென்றதும் நாப்கினை ஒரு வித கூச்சத்தோடு கேட்டு வாங்கினாள். “இதற்கு ஏன் இவ்வளவு தயங்கி நிற்கிறாய்” எனக் கேட்டேன். “அப்படிக் கேட்டால் வெட்கமே இல்லாமல் கேட்கிறது என சொல்லிவிடுவார்களோ என்ற பயம்” என்று சொன்னாள். அந்தப் பெண்னை நினைத்து வருத்தப்படுவதா அல்லது இந்தச் சமுதாயத்தைப் பார்த்து வேதனைப்படுவதா எனத் தெரியவில்லை.

    இந்தச் சமூகத்தில் புகைப்பிடிக்க எந்த ஆணும் வெட்கப்படுவதில்லை. அடித்துப் பிடித்து மதுவை வாங்கிக் குடித்துவிட்டு விழுந்து கிடக்க வெட்கப்படுவதில்லை. பொது இடம் என நினைத்துச் சிறுநீர் கழிக்க வெட்கப்படுவதில்லை. பெண்களை கேலி செய்யவும், பெண்களை இழிப்படுத்தும் பாடல்களைப் பாடவும், படமாக எடுக்கவும், காசு பண்ணவும் எந்த ஆணும் வெட்கப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் மற்றவர்கள் முன்னிலையில் நாப்கினை வாங்கினால் வெட்கம் கெட்டவள் அப்படித்தானே? இன்னும் எத்தனை காலம் போராட வேண்டும் நாங்கள்?

    கழிவறையே இல்லாத பள்ளியில் சிறுநீர் கழிக்காமல், மாதவிலக்கு நேரங்களில் துணிமாற்றக்கூட முடியாத நிலையில் தொடர்ந்து பத்து மணி நேரம் பளிளியில் என்னைப்போல லட்சகணக்கான பெண்கள் இன்னமும் அவதிப்பட்டுக்கொண்டும், வேதனை அனுபவித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இதை நினைத்து நம் சமுதாயத்தில் இதற்குக் காரணமான துறை அதிகாரிகளும், பள்ளி, கல்லூரி ஆகியவற்றை நடத்தும் நிர்வாகிகளும்தான் வெட்கப்பட வேண்டும். வாழ்வில் தானும் முன்னேற வேண்டும் என நினைக்கும் பெண்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் மனிதர்கள் வெட்கப்பட வேண்டும்.

    - எஸ். ஆனந்தி, உறையூர்.

    பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டும். பெண்ணை மதித்துப் பழக ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 60 வயதிலும் பெண்களுக்குப் புத்திமதி சொல்வதில் ஆர்வம் காட்டும் ஆண் சமூகம் திருந்த வேண்டும். வீட்டுக்கு ஒதுக்குப் புறத்தில் பெண்களை ஒதுக்கி வைப்பவரும் ஒரு பெண் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமே.

    - வசந்தி, மதுரை.

    மாதவிடாய் குறித்து வளரிளம் பருவப் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. இது ஒரு சாதாரணமான இயற்கை நிகழ்வு என்பதை இருபாலருக்குமே புரியவைத்து விட்டால் ஆண் குழந்தைகள் இவற்றைத் தவறான வழியில் சென்று அறிந்துகொள்வது தடுக்கப்படும். அதோடு பெண்களின் பிரச்சினைகளையும் அவர்கள் கொஞ்சம் அனுசரனையோடு அணுகுவார்கள்.

    - ஜே .லூர்து,மதுரை.

    பள்ளிகளில் கழிப்பறைகளும் தண்ணீர் வசதியும் உண்டா என்பதைக்கூடப் பார்க்காமல் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் ஆரம்பிக்கிறது நமது அலட்சியம்.

    மாதவிடாய் காலத்தை எப்படிக் கடக்க வேண்டும் என்பதுகூடத் தெரியாத ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள் படும் வேதனைதான் மிகவும் கொடுமையானது. அதுவும் அரசுப்பள்ளிகள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய முறையான கழிப்பிடங்கள் உள்ளனவா என்பதனை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும்.

    - ஆர்.ஏ. தீபனா, களியனூர்.

    இன்றைய நவீன காலகட்டத்திலும் பெண்கள் தங்களது மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள் என்பதே உண்மை. அது மாதாமாதம் இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு நிகழ்வு என்பதைப் படித்தவர்கள்கூட ஏற்க மறுக்கிறார்கள் என்பதும் உண்மைதான். பதின்ம வயதுப் பிள்ளைகளிடம் இது குறித்த முறையான புரிதல் இல்லை. அத்தகைய புரிதலை அவர்களிடம் ஏற்படுத்தும் தெளிவு நம்மிடம் இன்னும் ஏற்படவில்லை.

    பல பெண்களால் இன்றும் கடைகளில் கூச்சப்படாமல் வெளிப்படையாக நாப்கின் வாங்க முடிவதில்லை. ஏதேனும் விசேஷங்களுக்கு ‘இந்தக் காரணத்தால்’ வரக் கூடாது என்று சொல்லும்போது அந்தப் பெண்ணின் உணர்வைப் பெண்களே புரிந்துகொள்வதில்லை. முதலில் பெண்கள் இந்த விஷயத்தை இயல்பாகக் கடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களது ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே மாதவிடாய் நேர சிரமங்களை எடுத்துச் சொல்லி வளர்க்க வேண்டும். அந்த நாட்களில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அவர்களை எப்படிப் புரிந்து கொண்டு உதவ வேண்டும் என்பதையும் அம்மாதான் சொல்லித் தரவேண்டும்.

    பள்ளிகளில் வளரிளம் பருவ பெண்களுக்கு மாதவிடாய், நாப்கின் உபயோகிப்பது, அந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டும். உபயோகித்த நாப்கின்களை எவ்வாறு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் அகற்றுவது என்பதையும் அவசியம் கற்றுத்தர வேண்டும்.

    ஆடைகளில் கறைபடுவது பெரிய குற்றம் இல்லை. இதை இனியாவது அனைவரும் உணர வேண்டும். ஆனால் இந்தப் பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள ஒரு இளந்தளிர் அநியாயமாக உதிர்ந்து விட்டதுதான் வேதனை.

    - தேஜஸ்,கோவை.
    உனக்கு மட்டும்: ஒருநாள் கூத்து!

    Published : 10 Sep 2017 09:42 IST




    மூன்று முறை பஜ்ஜி, சொஜ்ஜி பரிமாறியது எதிர்பார்த்த முடிவைத் தரவில்லை. ஆனால், நான்காவதாக வந்தவர்களைப் பிடித்துப்போகவே ஒருவழியாக என் திருமணம் உறுதியானது. அதுவரை சும்மா சும்மா திட்டிக்கொண்டிருந்த அம்மா, ஒளித்துவைத்திருந்த அன்பையெல்லாம் என் மீது காட்டினார். டாமும் ஜெர்ரியுமாக இருந்த நானும் தங்கையும் உற்ற தோழிகள் ஆனோம். அப்பாவோ பட்ஜெட் பார்க்காமல் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார். தோழிகளுடன் ஷாப்பிங், வருங்காலக் கணவருடன் போனில் அரட்டை என்று நாட்கள் இனிமையாகக் கடந்தன.

    ஊர்ப் பெருமைக்காகத் தன் சக்திக்கு மீறிச் செலவு செய்வதால், அப்பாவுக்குப் பணக் கஷ்டம் இருந்திருக்கும்போல. அடிக்கடி அம்மாவும் அப்பாவும் என்னைத் தவிர்த்துத் தனியாகப் பேச ஆரம்பித்தது கொஞ்சம் புதிதாக இருந்தது. தங்கள் கஷ்டங்களை என்னிடம் மறைக்க முயல்வது புரிந்தது. திடீரென்று என் வீட்டிலேயே நான் அந்நியப்பட்டதுபோல் தோன்றியது.பினேன்.

    தங்கை என்னை இறுக அணைத்தவாறு தூங்கினாள். திருமண நாள் நெருங்க நெருங்க அவளது இறுக்கத்தின் அளவு கூடியது. அம்மா எப்போதும் இல்லாத வகையில் தன் இல்லற வாழ்வைப் பற்றி என்னிடம் அதிகம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். அந்தரங்க விஷயங்களும் அதில் உண்டு.

    திருமணத்துக்கு முந்தைய நாளே உறவினர்கள் வர ஆரம்பித்தனர். வீடு களைகட்ட ஆரம்பித்தது. ஆனால், அப்பா முகம் மட்டும் கொஞ்சம் வாடியே இருந்தது. ஏதோவொன்று என் மனதை அழுத்தியது. முந்தைய நாள் இரவு முழுவதும் அறிவுரைகள் அள்ளி வீசப்பட்டன. தூக்கம் கண்ணை அழுத்தும் நேரத்தில், ‘மணப்பெண்ணைச் சீக்கிரம் ரெடியாகச் சொல்லுங்க’ என்ற குரல் கேட்டது.

    அதிகாலை நான்கு மணிக்குக் குளிக்கச் சொன்னார்கள். குளித்துவிட்டு வந்த பிறகு, பியூட்டி பார்லரிலிருந்து வந்த பெண்கள், ஒப்பனை என்ற பெயரில் இரண்டு மணிநேரம் பாடாய்ப்படுத்தினார்கள். ஒரு வழியாக ஒப்பனை முடிந்ததும் கண்ணாடியைப் பார்த்து அதிர்ந்துபோனேன். அடையாளம் தெரியாத அளவு உருமாறி இருந்தேன்!

    அழுகை அழுகையாக வந்தது. கண்ணில் நீர்கோத்ததைப் பார்த்த அம்மா, “அழக் கூடாது கண்ணு. நாங்கள் அடிக்கடி வந்து உன்னைப் பார்ப்போம், தைரியமா இருக்கணும்” என்று அடுக்கிக்கொண்டே போனார். அம்மாவைப் பார்த்துக் கோபத்தில் கத்த வாய் திறக்கும் நேரத்தில், “மேடம் ஸ்மைல் ப்ளீஸ்” என்று போட்டோகிராபர் சொன்னார்.

    அவருக்கு மனதில் பி.சி.ஸ்ரீராம் கனவு இருக்கும்போல. தலைகீழான நிலையைத் தவிர அனைத்து நிலைகளிலும் என்னைப் படம் எடுத்துத் தள்ளினார். சாம்பார் மணம் மூக்கைத் துளைத்தது. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. தாலி கட்டி முடிக்கும்வரை எதுவும் சாப்பிடக் கூடாது என்று பசியில் மண்ணள்ளிப் போட்டாள் பாட்டி. மணமேடைக்குச் செல்லும்போது தெரியாமல் மிதிப்பதுபோல், பாட்டியின் காலை மிதித்துவிட்டுச் சென்றேன்.

    மேடைக்கு அருகில் செல்லச் செல்ல கூச்சம் அதிகரித்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், விஜய் சேதுபதியைப்போல், மாப்பிள்ளை என்னைப் பார்த்து “ப்ப்பா… யாருடா இந்தப் பொண்ணு” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொள்வாரோ என்ற பயம் வேறு இருந்தது. ஆனால் நான் ‘ப்ப்ப்பா’ என்று சொல்லும் அளவுக்கு (லிப்ஸ்டிக் மட்டும்தான் பாக்கி) அவர் மணமேடையில் இருந்ததைப் பார்த்ததும், சரி நாமே பரவாயில்லை என்கிற நிலைக்குத் திரும்பினேன்.


    மேடையில் நான் அருகில் அமர்ந்ததும், மாப்பிள்ளை வெட்கத்தில் சற்று நெளிந்தார். அதைக் கவனித்த என் தங்கை, என்னைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். மேடையில் பெரிய புகை மண்டலம் உருவாகியிருந்தது. கண் மை முகத்தில் பரவிவிடும் என்பதால் கண்ணைக் கசக்கவும் முடியவில்லை. கழுத்தில் தொங்கிய மாலை வேறு மிகவும் பாரமாக இருந்தது. தலை நிமிரக்கூட முடியாமல் குனிந்தே இருந்தேன். ஒருவழியாக என் கணவர், எனக்குத் தாலிகட்டி முடித்துவிட்டார். அப்பாடா இனி சாப்பிடப் போகலாம் என்று நினைத்தால், வாழ்த்துச் சொல்வதற்காக நின்ற நீண்ட வரிசையைப் பார்த்ததும் தலைசுற்றியது.

    பசியும் தூக்கமும் வாட்ட, அப்போது பார்த்து முதுகு அரித்தது. இங்கிதம் கருதி சொரிந்துகொள்ள முடியாமல் தவித்தேன். இந்தக் கடுப்பில் பி.சி.ஸ்ரீராம் கனவுக்காரர் வேறு, வாழ்த்த வந்தவர்களைப் போகவிடாமல், “இப்படிப் பாருங்க, கொஞ்சம் திரும்பி நில்லுங்க, முகத்தைத் திருப்புங்க” என்று என் டென்ஷனைக் கூட்டினார். சிறிது நேரத்தில் நான் ரோபோட் மாதிரி, அவர் சொல்லாமலேயே வாழ்த்த வந்தவர் கையைப் பிடித்து, அவரைப் பார்த்துத் திரும்பி, முகத்தைச் சற்றுத் தாழ்த்தி, கேமரா பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தேன்.

    வாழ்த்துப் படலம் முடிந்தபின், சாப்பிட அழைத்துச் சென்றார்கள். சாப்பிடும்போது அப்பா, அம்மாவைத் தேடினேன். அவர்கள் அங்கு இல்லை. தங்கையிடம் அவள் சாப்பிட்டுவிட்டாளா என்று கேட்டேன். அந்தப் பொழுதில்தான் நான் முதன்முறையாகப் பெரிய மனுஷி (ஆன்ட்டி!) போல உணர்ந்தேன். “நீ சாப்பிடுக்கா, நான் அம்மாவுடன் சாப்பிடுகிறேன்” என்றவளை, அதட்டி என்னுடன் அமர்ந்து சாப்பிடவைத்தேன். தங்கையைத் தவிர என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம், எனக்குப் புதியவர்களாக இருந்தனர்.

    இனிமையாகப் பேசினாலும், நன்றாகவே கவனித்தாலும், இன்று காலைவரை எனக்கென்று இருந்த அந்த பந்தம், கண்முன்னே விலகிச் செல்வது தெரிந்தது. தங்கை கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டேன். கண்ணில் நீர் மல்க, என்னைப் பார்த்தவண்ணம், அவளும் என் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

    கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் வகையில், ஏதோ முக்கிய வேலை இருப்பதுபோல் அப்பா அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அம்மா அழுகையை அடக்கியவாறு ‘பொறுமை’ பற்றிய கடைசி நிமிட அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். ‘நேரமாச்சு போலாமா’ என்று அத்தை வந்து அழைக்க, விடைபெறும் முன் அம்மாவைக் கட்டிப்பிடித்தேன். அம்மாவின் விசும்பல் கேட்டதும், நானும் அழ ஆரம்பித்தேன். என் தங்கை ஓடிவந்து எங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். என் காதில், “அழாதே, கண் மை கலைந்துவிடும்” என்று அழுதபடியே சொன்னாள். அப்பா கண்ணைத் துடைத்தவாறு தள்ளி நின்றுகொண்டிருந்தார். அவரை இப்படிப் பார்ப்பது எனக்கு இதுதான் முதல் முறை.

    எல்லோரிடமும் விடைபெற்று, காரில் ஏறும்பொழுது, வேரோடு பிடுங்கப்பட்ட மரத்தின் மனநிலைதான் இருந்தது. “காரின் ஏசியை அணைத்து ஜன்னலைத் திறக்கலாமா? எனக்கு மூச்சுமுட்டுகிறது” என்று கேட்டேன். சரி என்று சொல்லி ஜன்னலைத் திறந்துவிட்டார். முகத்தை வருடிய குளிர்ந்த காற்று, சற்று இதமாக இருந்தது. என் கணவர் ஆறுதலாக என் கையை மென்மையாகப் பற்றினார். அப்பாவுடனான என் முதல் பயணம் நினைவுக்குவர, கண்ணை மூடியவண்ணம் கணவரின் தோளில் சாய்ந்தேன்.

    - திவ்யா, சென்னை.


    நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்

    தோழிகளே, நெருங்கிய நண்பர்களிடம்கூடப் பகிர்ந்துகொள்ள முடியாமல் இப்படி எத்தனையோ விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்து இருக்கலாம். அவற்றையெல்லாம் இறக்கிவைக்கத் தோள் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். அவற்றை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உற்ற தோழியிடம் மனச் சுமையை இறக்கிவைத்த நிம்மதி உங்களுக்கும், உங்கள் அனுபவத்தில் இருந்து பாடம் கற்கும் வாய்ப்பு அடுத்தவர்களுக்கும் வாய்க்கலாம் அல்லவா? தயங்காமல் எழுதுங்கள், அனைத்தையும் பேசுவோம்.

    முகவரி

    பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002.

    மின்னஞ்சல்: penindru@thehindutamil.co.in

    ரகசியம் காப்போம்!

    ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...