Saturday, September 16, 2017

தினமலர்' செய்தி எதிரொலி: மாணவிக்கு குவியும் உதவி
பதிவு செய்த நாள்
செப் 16,2017 00:25



சேலம்: கல்லுாரி கட்டணம் கட்ட முடியாமல் தவித்த ஏழை மாணவி தவப்பிரியாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும், உதவிகள் குவிந்து வருகின்றன.

சேலம் மாவட்டம், ஆறகளூரைச் சேர்ந்தவர் தவப்பிரியா, 19; சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், அக்ரி இரண்டாம் ஆண்டு படிக்கிறார். குடும்ப வறுமை காரணமாக, கல்லுாரி கட்டணம் கட்ட முடியாமல் தவிப்பதாக, 'தினமலர்' நாளிதழில், 13ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, பல்வேறு தரப்பினர், மாணவியின் தந்தை, ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு, அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனர்.

நேற்று வரை, 1.65 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கத்தார், துபாய் ஆகிய நாடுகளில் வசிப்போர், ஆன் - லைன் மூலம், பணம் செலுத்தி உதவியுள்ளனர். அண்ணாமலை பல்கலை நிர்வாகமும், தவப்பிரியாவின் படிப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, ஆறுமுகம் மொபைலுக்கு தொடர்பு கொண்டு, 'மகளின் படிப்புக்கு உதவி செய்து, உயர்கல்வி படிக்க வைக்கிறேன். அவரை, நேரில் வந்து சந்திக்க சொல்லுங்கள்' என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...